தேசிய நெடுஞ்சாலையில் உருண்டோடிய ஆட்டோ: சிதறி விழுந்த பயணிகள் – அதிர்ச்சி சிசிடிவி காட்சி

உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த ஆட்டோ திடீரென சாலையில்  கவிழ்ந்து உருண்டோடியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாதூர் கிராமத்திற்கு துக்க நிகழ்ச்சிக்காக ஆட்டோவில் சென்றுவிட்டு வீடு திரும்பினர். இந்த ஆட்டோவை அப்பு என்பவர் ஓட்டிக்கொண்டு வந்தார். அப்போது தனியார் திருமண மண்டபம் அருகே வந்த ஆட்டோ திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் தலைகீழாக கவிழ்ந்து உருண்டோடியது. அப்போது அதே திசையில் வந்த இருசக்கர வாகனம் அந்த … Read more

’ஜோய்லன் ஷோவான்’ புரியலையா? அதாங்க திருமண வாழ்த்து! வாணியம்பாடி வந்த தென் கொரியா மணமகள்!

Tamilnadu oi-Rajkumar R திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் முனைவர் பட்டம் பெற்ற மணமகனுக்கும், தென் கொரியா நாட்டை சேர்ந்த மணமகளுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்ற நிலையில், இரு விட்டு உறவினர்களும் மணமக்களை வாழ்த்தினர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார், இவர் கோயம்புத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். பின்னர் மேற்படிப்புக்காக தென் கொரியா நாட்டுக்கு சென்றார். அங்கே அவர் முனைவர் பட்டம் … Read more

தகவல் பாதுகாப்பு மசோதா விரைவில் தயார்: நிர்மலா சீதாராமன்| Dinamalar

புதுடில்லி: தகவல் பாதுகாப்பு மசோதா விரைவில் தயாராகிவிடும் எனவும், அது குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பணியாற்றி வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.லோக்சபாவில் மத்திய அரசு தாக்கல் செய்த ‘தகவல் பாதுகாப்பு சட்டம் 2019 ‘ சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற்று கொண்டது. இந்த சட்டத்தில் பார்லிமென்ட் நிலைக்குழு திருத்தங்கள் அளித்துள்ளதால் சட்டத்தை திரும்ப பெற்று கொள்வதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி அஸ்வினி கூறியிருந்தார்.இந்நிலையில், இந்திய அமெரிக்க வர்த்தக கவுன்சில் ஏற்பாடு … Read more

பொன்னியின் செல்வன் பற்றிய நெகட்டிவ் கமெண்டுகளை வரவேற்கிறேன் : ஜெயம் ரவி

பொன்னியின் செல்வனில் அருள்மொழி வர்மனாக நடித்துள்ளார் ஜெயம் ரவி. படம் வருகிற 30ம் தேதி வெளிவருகிறது. இந்த நிலையில் நேற்று அவர் தனது ரசிகர்களை சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இப்படி ஒரு கேரக்டரில் அதுவும் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பேன் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர் ஏன் என்னை தேர்வு செய்தார் என்று இதுவரை தெரியவில்லை. அருள்மொழி வர்மன் கேரக்டரை படித்திருந்தாலும் படத்தை பொறுத்தவரையில் மணிரத்னம் என்ன சொன்னாரோ அதைத்தான் செய்திருக்கிறேன். நிறைய முடி வளர்த்தது, … Read more

“கமல் சார் நடிக்கவிருந்த கேரக்டரில் நான் நடிச்சது பயமாக இருக்கு”: கார்த்தி ஓப்பன் ஸ்டேட்மெண்ட்

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் வரும் 30ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் வந்தியத்தேவன் பாத்திரத்தில் நடித்தது குறித்து நடிகர் கார்த்தி அச்சம் தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வனில் கார்த்தி மணிரத்னம் இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன் தயாரித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், முதல் பாகம் வரும் 30ம் தேதி … Read more

எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை.. எல்லாம் சாதகம் தான்.. ரஷ்யா அதிபர் பரபர கருத்து!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், உலக நாடுகள் பலவும் பல பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளன. இதற்கிடையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்த மோதல் பிரச்சனைகளுக்கு மத்தியில் ரஷ்யாவுக்கு எந்த இழப்பும் இல்லை என கூறியுள்ளார். எனினும் உண்மையில் அதன் உலகளாவிய செல்வாக்கை மீட்டெடுக்கும் ஒரு புதிய இறையாண்மை போக்கை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று கூறப்படும் இந்த தாக்குதலில், ரஷ்யா வெற்றி பெற்றுள்ளதாகவும் எதையும் இழக்கவில்லை என்றும் புதின் கூறியுள்ளார். … Read more

பாடல்களுடான ஞாபகங்கள்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் அந்தப் பாடல் வெளிவந்த போது எத்தனை தடவை தொடர்ந்து கேட்டு இருக்கேன் தெரியுமா? என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அந்த பாடல் மட்டும் மனதிற்குள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும். அந்த சமயத்தில் அந்த பாடல் மேல் அவ்வளவு பைத்தியமாக இருந்தேன் ‌‌ … Read more

அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணை காலம் தாழ்ந்த நடவடிக்கை: இபிஎஸ் விமர்சனம்

திருவள்ளூர்: “அதிமுக அலுவலக பிரச்சினைக்கு நீதிமன்றம் சென்ற பிறகுதான் இன்று சிபிசிஐடி வந்து விசாரிக்கின்றனர். பலமுறை புகார் அளித்தும், காவல்துறை மெத்தனப்போக்குடன் இருந்தது. நாங்கள் நீதிமன்றம் சென்றோம், நீதிமன்ற உத்தரவின்பேரில்தான் சிபிசிஐடி இன்று விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்து வருகின்றனர்” என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். … Read more

கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழையால் வெள்ளத்தில் மிதக்கிறது பெங்களூரு நகரம்

பெங்களூரு: பெங்களூருவில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த இரு வாரங்களாக இரவில் க‌னமழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நேற்று இரவு வரை விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்த‌து. திங்கள்கிழமை இரவு 131.6 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவானது. 1947-ம் ஆண்டுக்கு பின் தற்போது 130 மில்லிமீட்டருக்கு மேல் மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரலாறு காணாத … Read more

இனிமேல் அங்கு தான் முதல் ஆய்வு.. ஆசிரியர்களுக்கு 'செக்' வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

தருமபுரி அரசு மருத்துக் கல்லூரி கலையரங்கில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள கல்வி அதிகாரிகளுடனான மண்டல அளவிலான 2-ம் கட்ட ஆலோனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தருமபுரி எம்.பி செந்தில்குமார் ஆகியோர் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: “நான்கு மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் பள்ளிகளுக்கு … Read more