மற்ற மாநிலங்களைப் போல் இல்லை… தமிழ்நாட்டில் பேரணி தள்ளிவைத்த ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்மண்டல தலைவர் ரா. வன்னியராஜன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ஆர்எஸ்எஸ் சார்பில் கடந்த 97 ஆண்டுகளாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அணிவகுப்பு ஊர்வலங்கள் அமைதியான முறையில் நடத்தி வருகிறோம். தமிழகத்திலும் பல ஆண்டுகளாக அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி வருகிறோம்.  நாட்டின் 75ஆவது சுதத்திர ஆண்டை முன்னிட்டும், அண்ணல் அம்பேத்கர் பிறந்த 125 ஆண்டை முன்னிட்டும், இந்த ஆண்டு தமிழகத்தில் 50 இடங்களில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த தமிழக அரசின் காவல் துறையிடம் … Read more

இறுதியில் விளாடிமிர் புடினை கைவிட்ட சீன ஜனாதிபதி: உக்ரைன் குறித்து கடும் எச்சரிக்கை

அணு ஆயுதங்களின் பயன்பாடு அல்லது அச்சுறுத்தலை எதிர்க்க வேண்டும் என ஜி ஜின்பிங் அமைதி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஜேர்மன் சேன்ஸலர் Olaf Scholz-ஐ கட்டாயப்படுத்தியுள்ளார். உக்ரைன் மீது அணு ஆயுதம் பயன்படுத்தும் திட்டத்தை ரஷ்யா மொத்தமாக கைவிட வேண்டும் என நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங். அத்துடன், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான அமைதி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஜேர்மன் சேன்ஸலர் Olaf Scholz-ஐ கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும், உக்ரைன் – ரஷ்யா இடையே அமைதி … Read more

தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில்  வருகிற 9ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தற்போது வளிமண்டல சுழற்றி காரணமாகவே மழை பெய்து வருவதாகவும், உண்மையான பருவமழை 9ந்தேதிக்கு பிறகே தெரியும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு … Read more

வத்தலக்குண்டு அருகே போதிய மழை பெய்துள்ளதால் விவசாய பணிகள் தீவிரம்: வயல்களை தேடி வரும் கொக்குகள்

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு பகுதியில் போதிய மழை பெய்துள்ளதால் நெல் விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அங்கு உணவு தேடி கொக்குகள் படையெடுத்து வருகின்றன. வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி ஊராட்சி பண்ணைப்பட்டி பகுதியில் தற்போது நல்ல மழை பெய்துள்ளது. இதனால் அதிக அளவில் நெல் விவசாய நடந்து வருகிறது. இப்பகுதியில் வருடந்தோறும் வாழை, தக்காளி, மிளகாய், பருத்தி போன்றவற்றை அதிக அளவில் விவசாயம் செய்வார்கள். தற்போது இப்பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதால் கண்மாய் மற்றும் கிணறுகளில் தண்ணீர் … Read more

2011-க்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு மீண்டும் திட்ட அனுமதி கோரி புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 2011-க்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு மீண்டும் திட்ட அனுமதி கோரி புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. 2011-க்கு பின் கூடுதல் கட்டிடம் கட்டியிருந்தாள் திட்ட அனுமதி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். பள்ளியின் அங்கிகாரத்தை புதுப்பிக்க கோரிய மனுவுடன் கட்டிட அனுமதி சான்று அல்லது விண்ணப்பித்ததற்கான ஆதாரத்தை இணைக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது

குஜராத் தேர்தலில் ஆம்ஆத்மி போட்டியிடாமல் இருக்க பாஜக பேரம் பேசியதாக கெஜ்ரிவால் பரபரப்பு குற்றசாட்டு

டெல்லி: குஜராத் தேர்தலில் ஆம்ஆத்மி போட்டியிடாமல் இருக்க பாஜக பேரம் பேசியதாக கெஜ்ரிவால் பரபரப்பு குற்றசாட்டு தெரிவித்துள்ளனர். ஆம்ஆத்மி போட்டியிடாமல் ஒதுங்கினால் டெல்லி அமைச்சர்கள் மீதான வழக்குகளை கைவிடுவதாக பாஜக பேரம் பேசியுள்ளனர் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளனர். டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்திர ஜெயினை வழக்கில் இருந்து விடுவிப்பதாகவும் பாஜக பேரம் பேசியுள்ளது.

ஆன்மிக சுற்றுலா: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் ஜப்பானியர் சாமி தரிசனம்

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற மாயூரநாதர் கோயிலில் ஜப்பானியர்கள் சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற மாயூரநாதர் கோயிலில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 16 பேர் இன்று பஞ்சாட்சர ஹோமம், நவசக்தி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களை நடத்தி சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். தமிழ் மொழி, கலாச்சாரம் குறித்தும், சித்தர்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்வதற்காக ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோ உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் இருந்து தமிழகம் வந்துள்ள இவர்கள், கடந்த ஒருவாரமாக பல்வேறு கோயில்களில் ஆன்மிக … Read more

கொசுக்களை பாட்டிலில் அடைத்து நீதிமன்றத்துக்கு வந்த கேங்க்ஸ்டர்; என்ன காரணம்?

முப்பை நீதிமன்றத்தில், சிறை கைதி கொசு வலை கேட்ட கோரிக்கை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மும்பையின் பிரபல கேங்ஸ்டரான தாவூத் இப்ராகிம் கூட்டாளியான இஜாஸ் லக்டவாலா கைது செய்யப்பட்டு கடந்து இரண்டு வருடமாக தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல குற்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதால் பல முயற்சிகள் எடுத்தும், இவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில் தலோஜா சிறையில் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் கொசு வலை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என மாவட்ட செஷ்ன்ஸ் … Read more

விஜய் டிவியில் கமல் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி

தமிழ் திரையுலகில் கடந்த 63 ஆண்டுகளாக தனது கலைப்பயணத்தை மேற்கொண்டு வருபவர் நடிகர் கமல்ஹாசன். கடந்த சில ஆண்டுகளாக இவரது படங்கள் வெளியாகாத நிலையில் இந்தாண்டு ‛விக்ரம்' என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்து மீண்டும் தனது பழைய பார்முக்கு அதிரடியாக திரும்பியுள்ளார் கமல். அந்தவகையில் வரும் நவம்பர் 7ம் தேதி அவரது பிறந்தநாளை முன்னிட்டு அதை விஜய் டிவி மிகப்பெரிய அளவில் சிறப்பு நிகழ்ச்சியாக கொண்டாடும் விதமாக உருவாக்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கமல் நேரடியாக பங்குகொண்டு சிறப்பித்துள்ளார். … Read more

ரூ. 300 டிக்கெட் வாங்கிவிட்டு நிகழ்ச்சி நடத்தவில்லை; பெண் நடன கலைஞர் மீது மோசடி வழக்குப்பதிவு

லக்னோ, உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரபல பெண் நடன கலைஞர் ஸ்வப்னா சவுதிரி. இவர் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம். இதனிடையே, 2018ம் ஆண்டு ஸ்வப்னா நடன நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நுழைவு கட்டணமாக தலா 300 ரூபாய் வசூலிக்கப்பட்டது. பார்வையாளர்கள் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இடத்திற்கு சென்றுபார்த்தபோது நடன நிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை. நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நிகழ்ச்சிக்கான அனுமதி கட்டணமாக வசூலிக்கப்பட்ட தலா ரூ. 300 பணத்தை … Read more