புதைத்தாலும் முளைப்பேன்.. என்னை கொல்ல முயல்வது வீண்.. இம்ரான் கான்

Imran Khan assassination attempt : பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரும், மூத்த கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் மீது நேற்று முன்தினம் மாலையில், ஒருவர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினார். இம்ரான் மட்டுமில்லாமல் அவரது இரண்டு உதவியாளர்களின் கைகளிலும், முகத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது.  தாக்குதலில் இம்ரான் கானின் ஆதரவாளர் உயிரிழந்தார். மேலும், மொத்தம் 13 பேர் கூட்ட நெரிசலில் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் உடனடியாக கைதுசெய்தனர். மேலும் ஆட்டோமேடிக் ரைஃபிள் துப்பாக்கி … Read more

ஹட்டி சமூகத்திற்கு பழங்குடியின அந்தஸ்து மூலம் முன்னிலையில் பா.ஜ.க; ஹிமாச்சலில் போட்டி எப்படி?

ஹட்டி சமூகத்திற்கு பழங்குடியின அந்தஸ்து மூலம் முன்னிலையில் பா.ஜ.க; ஹிமாச்சலில் போட்டி எப்படி? Source link

கோவை பாரதியார் பல்கலை : மாணவர்களின் விடா முயற்சியால் பாடத்திட்டம் மாற்றும் முடிவு கைவிடல்.!

கோயம்புத்தூரில் பாரதியார் பல்கலைக்கழகம் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகளில் பி.காம்., முதலாமாண்டு மாணவர்களுக்கு எம்.எஸ்., ஆபிஸ் பாடம் இருந்தது.  இந்தப்பாடம் மாற்றப்பட்டு அதற்கு மாறாக ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜென்ஸ் மற்றும் மெஷின் லாங்குவேஜ், பிக் டேட்டா உள்ளிட்ட பாடங்கள் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்வுக்கு 20 நாட்களே இருந்த நிலையில், பாடத்திட்டத்தை மாற்றுவது மாணவர்களின் தேர்ச்சியைப் பாதிக்கும் என்பதால் பல்கலைக்கழகத்தின் முடிவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது.  இதையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகம் பாடத்திட்டத்தை மாற்றும் முடிவை கைவிட்டுள்ளது. மேலும், முதல் … Read more

மக்களே உஷார்..!! தமிழகத்தில் அடுத்த 5 தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் இலங்கையை ஒட்டி வரும் 9ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும் தொடர்ந்து இது வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு புதுச்சேரி நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு தஞ்சை, திருவாரூர், நாகை, தூத்துக்குடி, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக … Read more

ஆர்.எஸ்.எஸ் பேரணி ஒத்திவைப்பு: `எல்லா இடங்களிலும் நடக்கிறது’ – மேல்முறையீடு செய்யபோவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில், கடந்த அக்டோபர் 2-ம் தேதி பேரணி நடத்தத் திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் கோரிக்கை வைத்த விவகாரத்தில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது எனக் கூறி அனுமதி தர மறுத்த தமிழக அரசு, பின்னர் நவம்பர் 6-ம் தேதி பேரணி நடத்தலாம் என கூறியது. அதிலும் நீதிமன்றத்தில், ஆர்.எஸ்.எஸ் கோரிக்கை வைத்த 50 இடங்களில், 3 இடங்களில் மட்டுமே பேரணி நடத்தலாம் என அரசு தரப்பு வாதிட்டது. சென்னை உயர் நீதிமன்றம் பின்னர் இதனை ஆர்.எஸ்.எஸ் மறுத்ததையடுத்து, … Read more

தமிழறிஞர் க.நெடுஞ்செழியன் சென்னையில் காலமானார்: முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: தமிழறிஞர் க.நெடுஞ்செழியன் நேற்று சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டம் அன்பில் படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழறிஞர் மற்றும் பேராசிரியர் க.நெடுஞ்செழியன்(79). தமிழில் முதுகலைப் பட்டம் பெற்று, அரசு கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறை தலைவராகவும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள பெரியார் உயராய்வு மையத்தின் தலைவராகவும் பணியாற்றிய அவர், 20-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். சாதி … Read more

அடுத்த கல்வியாண்டு முதல் இந்தியில் மருத்துவப்படிப்பு: உத்தரகண்ட் மருத்துவக் கல்வி அமைச்சர்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டில் இருந்து இந்தி மொழியிலும் (ஆங்கில மொழியிலும் பயிற்றுவிக்கப்படும் ) மருத்துக் கல்வி பயிற்றுவிக்கப்படும் என்று அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் தன் சிங் ராவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் தன் சிங் ராவத் கூறுகையில், “மத்திய அரசு இந்தி மொழிக்கு சிறப்பு கவனம் செலுத்தி வருவதை கருத்தில் கொண்டு மாநிலத்தில் மருத்துவக் கல்வியை இந்தி மொழியில் பயிற்றுவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, பவுரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகர் அரசு மருத்துவக்கல்லூரி … Read more

ஆர்.எஸ்.எஸ். பேரணி ஒத்திவைப்பு: அடுத்த கட்ட திட்டம் என்ன?

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்புக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. *கோவை, பொள்ளாச்சி, மேட்டுபாளையம், பல்லடம், நாகர்கோவில், அருமனை ஆகிய ஆறு இடங்கள் தவிர, தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு மற்றும் கூட்டத்தை சுற்றுச்சுவருடன் கூடிய … Read more

Twitter பயனாளிகளுக்கு அடுத்த அதிர்ச்சி! Elon Musk கின் அடுத்த திட்டங்கள்!

உலகம் முழுவதும் கடந்த இரு வாரங்களாக பேசுபொருளாக இருப்பது ட்விட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் 1 பணக்காரருக்கு டெஸ்லா நிறுவனத்தின் CEO எலன் மஸ்க் வாங்கியது பற்றித்தான். அந்த அளவிற்கு இந்த விஷயம் பேசுபொருளாக மாற முக்கிய காரணம் எலன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியவுடன் அவர் செய்த முதல் வேலை அந்த நிறுவனத்தின் தலைவராக பணிபுரிந்த பாவிஷ் அகர்வாலை வேலையே விட்டு நீக்கினார், பின்னர் அதிரடியாக போர்டு மெம்பெர் குழுவை கலைத்து தானே முழு பொறுப்பாளியாக … Read more

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் ரணில் விக்ரமசிங்க!

ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராகி வருவதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி முன்னணி தமிழ் ஊடகம்  செய்தி வெளியிட்டுள்ளது. பலவீனமாக உள்ள எதிர்கட்சி எதிர்கட்சி பலவீனமாக உள்ளதால், தற்போதைய அந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு செல்வதற்கும், அதனூடாக ஸ்திரமான ஆட்சியை நடத்துவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தேசித்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ரணில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுடன் கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தைகளை … Read more