கர்ப்பத்தை அறிவித்த பூர்ணா

தமிழில் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை பூர்ணா. மலையாளத்தில் ஷாம்னா காசிம் என்கிற பெயரில் நடித்து வருகிறார். தமிழில் பல படங்களில் துணிச்சலான நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இவர் தமிழ் திரையுலகில் நுழைந்த சமயத்திலேயே நடிகர் விஜய்யால் குட்டி அசின் என பாராட்டப்பட்டவர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமண மோசடி கும்பலிடம் சிக்கிய பூர்ணா, கடைசி நேரத்தில் அவர்களிடம் இருந்த தப்பித்த … Read more

Diabetes: தினமும் ஒரு நெல்லி; அப்புறம் ஒரு கிளாஸ் தண்ணீர்… நிறைய நன்மை இருக்கு!

Diabetes: தினமும் ஒரு நெல்லி; அப்புறம் ஒரு கிளாஸ் தண்ணீர்… நிறைய நன்மை இருக்கு! Source link

திருநெல்வேலி : முன் விரோதத்தால் வாலிபர் வெட்டிக் கொலை – மூன்று பேர் கைது.!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி அருகே ஆட்டுதட்டை தெருவை சேர்ந்தவர் முருகன் – முத்துலெட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில், தற்போது முத்துலெட்சுமி மீண்டு கர்ப்பமாக உள்ளார்.  இதற்கிடையே முருகன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே வெள்ளமடத்தில் தங்கியிருந்து கையுறை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இதனால் முத்துலெட்சுமி தனது சொந்த ஊரில் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.  இந்த நிலையில் இன்றைய தினம் புத்தாண்டு … Read more

நாகர்களின் தெய்வமான நாகராஜா கோயில்! வியக்க வைக்கும் புராணமும் வரலாற்றுத் தகவல்களும்!

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை எண்ணிலடங்காத புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. அவற்றில் இம்மாவட்டத்தின் தலைநகருக்கு ‘நாகர்கோவில்’ என்று பெயர் வரக் காரணமாக இருந்த நாகராஜா கோயில் மிகவும் சிறப்பானது. தமிழ்நாட்டிலேயே நாகத்தை மூலக்கடவுளாக வைத்து வழிபடுவது இக்கோயிலின் மிக முக்கிய அம்சமாகும். நாகராஜா கோயில் வெகு காலத்துக்கு முன்பு கோவில் அமைந்துள்ள பகுதியானது புதர்மண்டி கிடந்துள்ளது. அப்போது தன் ஆடு மாடுகளின் உணவு தேவைக்காக ஒரு கிராமத்து பெண் புல்லறுத்துக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் புற்கள் அதிகம் இருந்த பகுதியில் … Read more

ஆபத்தை உணராமல் ஓடும் வேனில் பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்த சிறுவர்கள்..!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் ஓடும் வேனில் பட்டாசு வெடித்து புத்தாண்டை கொண்டாடிய வீடியோ வெளியான நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் வேனின் மேலே ஏறி அமர்ந்து கொண்டு சிறுவர்கள் பட்டாசு வெடித்து, கூச்சலிட்டு ஆரவாரம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. Source link

புதுச்சேரி | பாண்லே பால் விற்பனை நிறுத்தம்; புத்தாண்டில் மக்கள் அவதி: மாலை முதல் சீராக வாய்ப்பு 

புதுச்சேரி: புதுச்சேரியில் பாண்லே பால் பாக்கெட் விற்பதை முகவர்கள் நிறுத்தியதால் புத்தாண்டில் மக்கள் கடும் அவதியடைந்தனர். பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால் மாலை முதல் நிலை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரி அரசு நிறுவனமான பாண்லேயில் மக்களுக்கு பாக்கெட் பால் வழங்கப்பட்டு வருகிறது. பால் தட்டுப்பாடு காரணமாக பால் சீராக விநியோகிக்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கம் போல் தட்டுப்பாடு இல்லாமலும், காலதாமதமின்றி பால் தரக்கோரினர். ஏஐடியுசி பாண்லே முகவர்கள் சங்கம் சார்பில் நேற்றைய தினம் … Read more

பெண்களுக்கு ரூ.22,000 – செல்லூர் ராஜு சொன்ன தகவல்!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தனது குடும்பத்துடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டி அம்மனை வேண்டியுள்ளேன். அதிமுகவுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும். அதிமுகவிற்கு இந்த ஆண்டு மகிழ்ச்சியானதாக சந்தோஷமாக இருக்கும்.அதிமுக ஆட்சி விரைவில் வரவேண்டும் என பொதுமக்கள் எதிர்நோக்குகின்றனர். வரும் ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்க வேண்டும், புதிய வைரஸ் … Read more

டாடாவை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்

அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் நிறுவனம் ரெட் ஜெயண்ட் மூவிஸ். குருவி படத்தை தயாரித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்த ரெட் ஜெயண்ட் தொடர்ந்து பல வருடங்களாக படங்களை தயாரித்தும், வெளியிட்டும்வருகின்றது. எவ்வளவுக்கு எவ்வளவு படங்களை தயாரித்து வெளியிட்டாலும் பல படங்களை வலுக்கட்டாயமாக கைப்பற்றுவதாக விமர்சனங்களும் எழுந்தும்வருகின்றன. அதேசமயம் அப்படிப்பட்ட குற்றச்சாட்டை ரெட் ஜெயண்ட் நிறுவனம் மறுத்துவருகிறது. சமீபத்தில் தமிழ் சினிமாவில் விக்ரம், கட்டா குஸ்தி உள்ளிட்ட பல படங்களை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது. அந்தவகையில் … Read more

சமூக நீதியை மத்திய அரசு சீர்குலைக்கிறது – வைகோ காட்டம்

உலகம் முழுவதும் 2023ஆம் ஆண்டு பிறந்திருக்கிறது. புதிய வருடத்தை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். தங்களுக்கு இனிப்புகள் பரிமாறியும், பட்டாசு வெடித்தும் வரவேற்று இந்த வருடத்தில் அனைத்தும் நல்லதாக நடக்க வேண்டுமென இறவனையும் பிரார்த்தித்துவருகின்றனர். மக்களுக்கு அரசியல் தலைவர்களும் தங்களது புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் புத்தாண்டையொட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ மத்தியில் ஆளும் மோடி அரசு பாரதிய ஜனதாவின் ஒவ்வொரு அஜன்டாவையும் நிறைவேற்றி வருகிறது. காஷ்மீரில் 370-வது … Read more

இலங்கை- இந்தியா இடையே பயணிகள் கப்பல் சேவை மார்ச்சில் தொடக்கம்

இலங்கை-இந்தியா இடையே பயணிகள் கப்பல் சேவை மார்ச்சில் தொடங்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தின் துறைமுக நகரமான காங்கேசன்துறைக்கும் இந்தியாவில் தமிழகத்திற்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை மார்ச் மாதம் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு வழங்கிய பணிப்புரையை அடுத்து ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசுடன் தூதரக அளவிலான பேச்சுவார்த்தைகள் சில காலமாக நடத்தப்பட்டு, சாதகமான பதிலைத் தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து படகு சேவை தொடங்கப்பட உள்ளது. … Read more