லும்பி – ப்ரோவாக் தடுப்பூசி – புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

ஆட்டு அம்மைக்கான தடுப்பூசியான லும்பி ப்ரோவாக்-ஐ வணிக ரீதியில் தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாக்பூரில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, மகாராஷ்டிர மாநில முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. எல்.எஸ்.டி.க்கு உள்நாட்டு தடுப்பூசியான லும்பி ப்ரோவாக்கை உருவாக்குவதில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் ஐ.சி.ஏ.ஆர் மேற்கொண்ட பாராட்டுக்குரிய முயற்சியை மத்திய அமைச்சர் ரூபாலா பாராட்டினார். மேலும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவின் கால்நடைத் துறையின் எதிர்காலத் தேவைகளுக்காக … Read more

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – தமிழக அரசு

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 34%ல் இருந்து 38% ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, தற்போது 34 % உள்ள அகவிலைப்படி 1.1.2023 முதல் 38 % உயர்த்தப்படும். அகவிலைப்படி உயர்வு இன்று முதல் செயல்படுத்தி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டை ஒட்டி போலீசார் நடத்திய சோதனையில் சென்னை மாநகர் முழுவதும் 276 வாகனங்கள் பறிமுதல்

சென்னை: புத்தாண்டை ஒட்டி போலீசார் நடத்திய சோதனையில் சென்னை மாநகர் முழுவதும் 276 வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளனர். மதுபோதையில் வாகனம் ஓட்டிய 252 பேர் மீது வழக்குப்பதிவு, அதிவேகத்தில் வாகனம் ஓட்டியதாக 24 பேர் மீதும், ஆபத்தான முறையில் ஓட்டியதாக 22 பேர் மீதும் வழக்குபதிவு செய்துள்ளனர். 

வாட்ஸ்அப்பில் தவறான இந்திய வரைபடம்

புதுடெல்லி: தவறாக காட்டப்பட்டுள்ள இந்திய வரைபடத்தை உடனே சரி செய்யும்படி வாட்ஸ்அப் நிறுவனத்தை ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், “இந்தியாவில் வணிகம் செய்து வரும், தொடர்ந்து வணிகம் செய்ய விரும்பும் அனைத்து நிறுவனங்களும் இந்தியாவின் சரியான புகைப்படத்தை பயன்படுத்த வேண்டும். வாட்ஸ்அப் நிர்வாகிகளே தவறாக இடம்பெற்றுள்ள இந்திய வரைபடத்தை விரைந்து சரி செய்யுங்கள்” என ரீட்விட் செய்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட … Read more

எந்த நாட்டில் இருந்தாலும் சொந்த கிராமத்தில் புத்தாண்டு கொண்டாடி மகிழும் தொழிலதிபர்

பத்திற்கும் மேற்பட்ட நாடுகளில் தொழில்செய்து வரும் பெரம்பலூரைச் சேர்ந்த தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் என்பவர் வருடந்தோறும் சொந்த கிராமத்தில் புத்தாண்டை கொண்டாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூரைச் சேர்ந்தவர் டத்தோ பிரகதீஸ்குமார். இவர், மலேசியா சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, துபாய், ஹாங்காங், தென்ஆப்ரிக்கா, ஸ்ரீலங்கா உட்பட பத்திற்கும் மேற்பட்ட நாடுகளில் ப்ளஸ்மேக்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், தொழில் நிமித்தமாக அவர் வருடம் முழுவதும் வெளிநாட்டில் இருந்தாலும் புத்தாண்டு மற்றம் பொங்கல் பண்டிகையை அவரது … Read more

வைகுண்ட ஏகாதசி: திருப்பதியில் முன்கூட்டியே துவங்கிய இலவச தரிசன டிக்கெட் விநியோகம்

வைகுண்ட ஏகாதசிசையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் பிரவேச டிக்கெட் விநியோகம் துவங்கியது. நாளை வைகுண்ட ஏகாதசிசையை முன்னிட்டு முதல் 10 நாட்கள் ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக நாள் ஒன்றுக்கு 45 ஆயிரம் பேர் என்ற கணக்கில் நான்கு லட்சத்து 50 ஆயிரம் இலவச வைகுண்ட வாசல் பிரவேச தரிசன டிக்கெட் என்ற பெயரில் தேவஸ்தான நிர்வாகம் இலவச விநியோகம் செய்ய முடிவு செய்தது. இதற்காக திருப்பதியில் உள்ள … Read more

 மயக்க மருந்து கொடுத்து பெண் பலாத்காரம்; குற்றவாளி கைது| Rape of woman under anesthesia; Criminal arrested

மயக்க மருந்து கொடுத்து பெண் பலாத்காரம்; குற்றவாளி கைது அம்பத்துார்: செங்குன்றம் அடுத்த சோழவரத்தைச் சேர்ந்தவர் டெய்சி, 42; தனியார் ஓட்டல் ஊழியர். இவருக்கு, அதே ஓட்டலில் பணியாற்றிய நபரின் வாயிலாக, மதுராந்தகத்தைச் சேர்ந்த சுரேஷ், 51, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. டெய்சி அவருக்கு, மகளிர் குழு வாயிலாக லோன் வாங்கி கொடுத்துள்ளார். அவர் பணத்தை சரியாக செலுத்தாததால், டெய்சி கண்டித்துள்ளார். இந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு முன் சுரேஷ், மொத்த பணத்தையும் கட்டுவதாக கூறி, சோழவரம் … Read more

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து கடையை நம்பி போன கூலி தொழிலாளிக்கு ஏற்பட்ட நிலையை பாருங்க..!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே விளாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன் (52). கூலித் தொழிலாளியான இவர், வெள்ளாளபட்டியில் உள்ள தனது மகள் பிருந்தா வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்றுள்ளார். சின்னப்பனுக்கு உடலில் அடிக்கடி அரிப்பு ஏற்பட்டு வந்ததாகவும் அதற்காக மருத்துவரிடம் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சின்னப்பனுக்கு உடலில் மீண்டும் அரிப்பு ஏற்பட்டதால் வெள்ளாளப்பட்டி அருகே சேகடிப்பட்டி சேர்ந்த பூபதி என்பவருடைய மருந்தகத்திற்கு சென்று மாத்திரை கேட்டுள்ளார். அப்போது மருந்தகம் நடத்தி வருபவர் … Read more

“புதுக்கோட்டையை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும்!” – தொல்.திருமாவளவன்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முத்துக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர்த் தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவத்தைக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தில் பேசிய அவர், “கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு லால்குடி அருகே திண்ணியத்தில் நடந்த வன்கொடுமையை போல 20 ஆண்டு கழித்து புதுக்கோட்டையில் நடந்திருக்கிறது. இறையூர் … Read more