ஒருங்கிணைப்பாளர்கள் பெயரில் தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தை திருப்பி அனுப்பிய அதிமுக

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பெயரில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அனுப்பிய கடிதத்தை, அதிமுக தலைமை அலுவலகம் திருப்பி அனுப்பியுள்ளது. அதிமுகவில் தேர்தல் நடத்தப்பட்டு, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது தொடர்பான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. … Read more

புத்தாண்டை கொண்டாட உ.பி. மாநிலம் அயோத்தியில் குவிந்த 50 லட்சம் பேர்

அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் போது அயோத்தியில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதேபோல புத்தாண்டை ஒட்டியும் அயோத்தியில் லட்சக் கணக்கான மக்கள் கூடுகின்றனர். கடந்த புத்தாண்டின்போது 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அயோத்தியில் குவிந்தனர். இந்த ஆண்டு புத்தாண்டையொட்டி நேற்று சுமார் 50 லட்சம் பேர் அயோத்தியில் முகாமிட்டனர். இதுகுறித்து அயோத்தி மாவட்ட ஆட்சியர் நிதிஷ்குமார் கூறும்போது, ‘‘அயோத்தியில் ஏராளமான கோயில்கள் … Read more

இன்று முதல் அமுலாகும் வருமான வரி – வெளியான முழுமையான விபரம்

வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரித் திருத்தங்கள் உட்பட பல தீர்மானங்கள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன. அதற்கமைய இன்று முதல் அமுலுக்கு வரும் மாதாந்த சம்பளத்திற்கும் தனிநபர் வருமான வரி விதிக்கப்படும். மாதாந்த சம்பளம் 150,000 ரூபாவாக இருந்தால் மாதாந்த வரியாக 3500 ரூபா அறவிடப்படும். மாதச் சம்பளம் 02 லட்சம் ரூபாய் என்றால், மாத வரித் தொகை 10,500ரூபாவாகும். 250,000 ரூபா மாதாந்த சம்பளம் பெறும் நபர் 21,000 ரூபாவையும், 300,000 ரூபா சம்பளம் … Read more

'நான் வரவா… வரவா… உன்ன துரத்தி வரவா' – காண்டாமிருகத்தின் சேஸிங் ; தலைதெறிக்க ஓடிய பயணிகள்

Assam Rhino Viral Video : அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட  தேசிய பூங்காவில் ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் காணப்படுகின்றன. தற்போது, அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியிலிருக்கும் அவை அடிக்கடி விபத்தில் சிக்குவது, சுற்றுலா பயணிகளின் வீடியோக்கள் ஆகியவற்றின் மூலம் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், அஸ்ஸாமின் இரு வேறு இடங்களில் காண்டாமிருகங்கள் சுற்றுலா பயணிகளை துரத்தும் வீடியோக்கள்  அடுத்தடுத்து வெளியாக வைரலாகி வருகின்றன.  அந்த வகையில், அஸ்ஸாமில் உள்ள மனாஸ் தேசிய பூங்காவில், ஒற்றை கொம்பு காண்டாமிருகம் … Read more

நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக போதையில் மிரட்டல் விடுத்த நபர் கைது..!

மும்பையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்புகளில் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தை ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாகவும் மும்பையில் குண்டு வெடிப்பு நடத்தப்போவதாகவும் அடுத்தடுத்து மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் குவிக்கப்பட்டனர். காவல்துறையினர் குடிபோதையில் மிரட்டல் விடுத்த நபர் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். … Read more

வர்த்தக சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு

சென்னை: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் 19 கிலோ எடையுள்ள வர்த்தக சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் ரூ.1,917க்கும், டெல்லியில் ரூ.1,768க்கும், மும்பையில் ரூ.1,721க்கும், கொல்கத்தாவில் ரூ.1,880க்கும் விற்பனையாகிறது. வணிக சிலிண்டர் விலைகள்- >> டெல்லி – ரூ.1769 >> மும்பை – ரூ.1721 >> கொல்கத்தா – ரூ.1870 >> சென்னை – ரூ.1917 வீட்டு சிலிண்டர் விலைகள்- >> டெல்லி – ரூ.1053 >> மும்பை – ரூ.1052.5 >> கொல்கத்தா – … Read more

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.79 அடியாக சரிவு

சேலம்: கடந்த 29-ம் தேதி 120 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 118.79 அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணைக்கு இன்று வினாடிக்கு 4,081 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

காஷ்மீரில் 186 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: காஷ்மீரில் 56 பாகிஸ்தான் தீவிரவாதிகள் உட்பட 186 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் தில்பாக் சிங் கூறினார். 2022-ம் ஆண்டின் கடைசி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ஜம்மு காஷ்மீரில் 2022-ம் ஆண்டில் மட்டும் 56 பாகிஸ்தானியர்கள் உட்பட 186 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு 100 இளைஞர்கள் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளனர். இதற்கு முந்தைய ஆண்டுகளை விட இது … Read more

ஆண்டின் முதல் சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய உதயத்தை காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்தனர். உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் களைகட்டியுள்ள நிலையில், சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள விடுதிகளில்; கலை நிகழ்ச்சிகளுடன் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. இதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சுற்றுலா பயணிகள் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். அப்போது ஆடிப்பாடி ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் சூரிய உதயத்தை காண்பதற்காக முக்கடல் சங்கமிக்கும் … Read more