பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதி மும்பைக்குள் நுழைந்துள்ளதாக என்ஐஏ எச்சரிக்கை..!

பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி பெற்றவர் மும்பைக்குள் நுழைந்துள்ளதாகவும், அவரால் மிகப்பெரிய சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் என்ஐஏ எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநில போலீஸாருக்கு உச்சப்பட்ச எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தீவிரவாதி சர்பராஸ் மேமன் மத்தியப்பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதும், சீனா, ஹாங்காங் நாடுகளிலும் பயிற்சி பெற்றிருப்பதாகவும் தேசிய புலனாய்வு முகமை (NIA) எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து மத்திய தீவிரவாத எதிர்ப்பு படையினரும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாதியின் ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்ட விபரங்கள் அனைத்து காவல்நிலையங்களுக்கும் அனுப்பி … Read more

குவிக்கப்பட்ட பொலிசார்… பச்சிளம் குழந்தையை தேடும் நடவடிக்கை தீவிரம்: கைதான பிரித்தானிய தம்பதி

பிரித்தானியாவில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பச்சிளம் குழந்தையுடன் மாயமான தம்பதி, இறுதியில் பொலிசாரிடம் சிக்கியுள்ள நிலையில், அவர்களின் பச்சிளம் குழந்தை தொடர்பில் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பச்சிளம் குழந்தையுடன் மாயம் பிரித்தானியாவை சேர்ந்த பணக்கார பிரபுத்துவ குடும்பத்து உறுப்பினரான Constance Marten தமது காதலர் Mark Gordon என்பவருடன் மாயமானார். 2016 முதல் முறையாக சந்தித்துக்கொண்ட இந்த தம்பதி அதன் பின்னர், தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்ந்து வந்தனர். @PA இந்த நிலையில் Constance Marten கருவுற்ற … Read more

மயங்கி விழுந்த எதிரணி வீரருக்கு உதவியதற்காக கால்பந்து வீரர் லூகா லோச்சோஷ்விலி-க்கு FIFA Fair Play விருது வழங்கப்பட்டது

ஆஸ்திரியா நாட்டின் உள்ளூர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது அடிபட்டு ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்த எதிரணி வீரருக்கு உதவிய ஜார்ஜிய கால்பந்து வீரர் லூகா லோச்சோஷ்விலி-க்கு நேர்மையாக விளையாடியதற்காக FIFA Fair Play விருது வழங்கப்பட்டது. 2022 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ம் தேதி ஆஸ்திரியாவின் ஒல்ப்ஸ்பெர்கர் அணிக்கும் வெய்ன் அணிக்கும் இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது வெய்ன் அணியின் வீரர் ஜார்க் தேகி தலையில் ஒல்ப்ஸ்பெர்கர் அணியைச் … Read more

வலம்புரிவிளை குப்பைகிடங்கில் இன்று காலை பயங்கர தீ: புகை மூட்டத்தால் பொது மக்கள் பாதிப்பு, 5 வண்டிகளில் தீயை அணைக்கும் பணி

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி வலம்புரிவிளை குப்பை கிடங்கில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 5 வண்டிகளில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் பீச்ரோடு ஜங்சன் பகுதியில் உள்ள வலம்புரிவிளை குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இடம் கிடைக்காததால், தற்போது பயோமைனிங் முறையில் குப்பைகளை அகற்றும் பணி முழுவீச்சில் நடந்து … Read more

விழுப்புரம் அருகே ’டாடா ஏஸ்’ வாகனம் கவிழ்ந்து விபத்து

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கடகனூர் சாலையில், ’டாடா ஏஸ்’ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வாகனத்தில் வந்த 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் படுகாயம்; ஒருவர் உயிரிழந்தார்.

மூன்றரை வயது குழந்தை விபத்தில் பலி: விமான படை அதிகாரி மகன் கைது

புதுடெல்லி: டெல்லியில் மூன்றரை வயது குழந்தை விபத்தில் பலியான சம்பவத்தில், விமானப் படை அதிகாரியின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர். தலைநகர் டெல்லியின் அர்ஜன் விஹாரில் வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மூன்றரை வயது பெண் குழந்தை சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த போது, அந்த குழந்தையின் மீது அவ்வழியாக சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தை படுகாயமடைந்ததால், அவர் ஆர்எம்எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை நேற்று முன்தினம் இறந்தது. … Read more

2023ன் இரண்டு மாதங்கள்; 2, 3 வெற்றி மட்டும் போதுமா?

தமிழ் சினிமா எப்போது 1000 கோடி வசூலைத் தாண்டப் போகிறது என்ற ஒரு ஏக்கம் இங்குள்ள ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. இதுவரை கண்டுகொள்ளப்படாமல் இருந்த கன்னட சினிமா கூட 1000 கோடி வசூலைத் தாண்டிவிட்டது. ஆனால், தென்னிந்திய சினிமாவுக்கெல்லாம் தலைமையமாக ஒரு காலத்தில் இருந்த சென்னையை மையமாக வைத்து உருவாகி வரும் தமிழ் சினிமா 500 கோடி வசூலைத் தாண்டி போகாமல் நிற்கிறது. இந்த 2023ம் வருடம் அந்த 1000 கோடி வசூல் சாதனையை நிகழ்த்திவிடலாம் என … Read more

இந்திய – அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை (28) இந்தியாவின் இந்தூரில் ஆரம்பமாகவுள்ளது. அதற்காக இந்திய கிரிக்கெட் அணியினர் தீவிர பயிற்சியில் நேற்று ஈடுபட்டனர். இந்த டெஸ்டில் இந்திய அணி வெற்ற பெற்றால் தொடரை கைப்பற்றி விடும் என்பதால் இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூரில் … Read more

பள்ளிக்கு செல்வதை தடுக்க பெண் குழந்தைகளுக்கு விஷம்; இரானில் அடுத்தடுத்து தொடரும் அவலங்கள்!

இரானில், பள்ளி செல்லும் பெண் குழந்தைகளின் கல்வியை தடுக்கும் நோக்கில் அவர்களுக்கு விஷம் கொடுக்கப்படுவதாக, அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. இரானில் உள்ள புகழ்பெற்ற கோம் நகரில், கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லையென்றாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களுக்கு சுவாசத்தை முடக்கும் விஷம் கொடுக்கப்பட்டிருந்தது. இரான் போராட்டம் கோம் நகரில் மட்டுமல்லாமல் இரானின் மற்ற நகரங்களிலும் … Read more

தமிழர் வரலாற்று அடையாளங்களை மீட்க முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்திய 5 திட்டங்கள் – ஒரு பார்வை 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழின் தொன்மையையும், தமிழரின் பண்பாட்டையும் அறிவியல்பூர்வமாக நிறுவ அனைத்து வகையான பணிகளையும் செய்து வருகிறது. இதில் முக்கியமானது, கீழடி அகழ் வைப்பக அருங்காட்சியகம். கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்களைக் காட்சியகப்படுத்திட உலகத் தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய அருங்காட்சியகம் (Museum) ரூ.11.03 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கவுள்ளார். கீழடியைத் தொடர்ந்து தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மற்றும் சங்ககாலக் கொற்கைத் … Read more