“பக்தியை வைத்து தமிழக மக்களை ஏமாற்றி விட முடியாது” – அமைச்சர் எஸ்.ரகுபதி கருத்து

புதுக்கோட்டை: “பக்தியை வைத்து தமிழக மக்களை ஏமாற்றிவிட முடியாது” என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் திமுக தெற்கு மாவட்டத்தின் சார்பில் மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து இன்று (பிப்.8) இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: “தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்குமான திட்டங்களை, பாரபட்சமின்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். ஆனால், மத்திய அரசு தனது பட்ஜெட்டில் வரி குறைவாக செலுத்தும் மாநிலங்களுக்கு நிதி அதிகமாகவும், அதிகம் வரி செலுத்தும் … Read more

“காங்கிரஸ் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்” – டெல்லி முடிவுகள் குறித்து பிரியங்கா கருத்து

வயநாடு: டெல்லியில் ஆட்சி அமைப்பதற்கு பாஜக தயாராகி வரும் நிலையில், “டெல்லி மக்கள் மாற்றம் வேண்டி வாக்களித்துள்ளனர். அவர்கள் சலிப்படைந்து விட்டனர்” என்று கூறியுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ”காங்கிரஸ் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார். மூன்று நாள் பயணமாக கேரளாவுக்குச் சென்றுள்ள வயநாடு எம்.பி.பிரியங்கா காந்தி அங்கு செய்தியாளர்களிடம் கூறும்போது, “டெல்லி தேர்தலுக்கு முன்பாக நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் மக்கள் மாற்றத்தை விரும்புவதை உணர முடிந்தது. டெல்லியில் நடந்தவற்றை பார்த்து … Read more

Delhi Election 2025: இதுவரை டெல்லியில் ஆதிக்கம் செலுத்தியது யார்? இந்த தேர்தலில் வெற்றி பெற போவது எந்த கட்சி? ஓர் பார்வை!

2025 டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று மாலை வெளியாகும் நிலையில், இதுவரை டெல்லியில் ஆட்சியில் இருந்தது யார் யார் என்பதை பார்க்கலாம். 

காலை 11.30 மணி நிலவரம்: டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை….

டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலையில் தொடர்ந்து வருகிறது. அதை தொடர்ந்து, ஆம்ஆத்மி கட்சியும் வருகிறது. காங்கிரஸ் கட்சியின் நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில்   வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 11.30 மணி நிலவரப்படி,  பாஜக 42 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.  ஆம்ஆத்மி 28 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.  காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை பெறவில்லை. ஆத்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை விட அவரை எதிர்த்து போட்டியிட்ட … Read more

“இண்டியா கூட்டணியின் பலவீனத்தால் டெல்லியில் பாஜக வெற்றி” – அமைச்சர் பொன்முடி கருத்து

விழுப்புரம்: “ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி 2026 தேர்தலுகான முன்னோட்டமாகும். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டுமல்ல, நிரந்தரமாக திமுகவே வெற்றி பெறும். இண்டியா கூட்டணியின் பலவீனத்தால் டெல்லியில் பாஜக வெற்றி பெற்றது” என்று தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். திண்டிவனத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை முழுமையாக புறக்கணித்துள்ள பாஜக அரசை கண்டித்து இன்று (பிப்.8) மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த வனத்துறை அமைச்சர் பொன்முடி முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் … Read more

காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கும் டெல்லி மக்கள் தீர்ப்பு ஒரு பாடமே… எப்படி?

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே ஆம் ஆத்மி கட்சிக்கு இந்தத் தேர்தல் மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்றே பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் கணித்தனர். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பலவும் வெற்றி பாஜகவுக்கு என கைகாட்டின. ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியடையும் வகையிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் போகும் என்று யாரும் கணிக்கவில்லை. இதுதான் ஜனநாயகத்தின் வலிமை. … Read more

டெல்லி தேர்தல் முடிவுகள் 2025: காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன? வாக்கு சதவீதம் உயருமா?

Congress Latest News: டெல்லியில் தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன? 2025 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒருசில இடங்களையும் வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

கடலூர் அருகே தனியார் பள்ளி விடுதி கழிவறையில் மாணவி தூக்கிட்டு சாவு! கொலையா? தற்கொலையா?

கடலூர்: கடலூரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார்  பள்ளி  விடுதியில் தங்கியிருந்து படித்த மாணவி ஒருவர்,  அங்குள்ள விடுதியின் கழிவறையில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி‌ உள்ளது. இது தற்கொலை என கூறப்படும் நிலையில், மாணவியின் தாயார் கொலை என குற்றம் சாட்டி உள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு கடலூர் அருகே கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் விடுதியில் தங்கியிருந்து … Read more

Delhi: `வெற்றி பெற்றால்தான் எதிர்காலம்' – கட்டளையிட்ட தலைமை… டெல்லி பாஜக செய்து முடித்தது எப்படி?

தணிந்த ஏக்கம்..! டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. பாஜக-வின் 28 ஆண்டுக்கால காத்திருப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. மூன்றாவது முறையாகவும் நாட்டை ஆளும் வாய்ப்பு கிடைத்தாலும், அதன் அத்தனை நகர்வுகளையும் முடிவு செய்யும் தலைநகர் டெல்லி எட்டாக் கனியாகவே இருக்கிறதே என்ற அவர்களது ஏக்கம் தணிந்திருக்கிறது இமாலய வெற்றியுடன் அக்கட்சி டெல்லி சட்டமன்றத்திற்குள் நுழைகிறது. அதற்குச் சமமான மகிழ்ச்சி அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா என ஆம் ஆத்மி கட்சியின் அத்தனை முக்கிய … Read more