உனக்கு தைரியம் இருக்கா?… எடப்பாடியை ஒருமையில் விமர்சித்த ஓபிஎஸ்

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான மற்றோரு அணியும் செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக செயல்படும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட செயலாளர்களையும், மாநில நிர்வாகிகளையும் ஓ.பன்னீர்செல்வம் நியமித்துள்ளார். தன்னால் 88 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 100-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகளும் ஓ.பன்னீர் செல்வம் அணியில் செயலாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர்செல்வம் … Read more

கொரோனா ஒழியவில்லை… மாஸ்க் பயன்படுத்துங்கள்.. எச்சரிக்கும் மத்திய அரசு!

புதுடெல்லி: உலகம் முழுவதும் ஒரு புதிய கோவிட்-19 அலையின் அச்சுறுத்தல் இருப்பதால், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதன்கிழமை (டிசம்பர் 21) அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து மூத்த சுகாதார அதிகாரிகளுடனான ஒரு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். கூட்டம் முடிவடைந்த உடனேயே, மாண்டவியா ட்விட்டரில் அது குறித்த தகவல்களை பொதுமக்களுடன் பகிர்ந்து கொண்டார். விழிப்புடன் இருக்கவும், “கண்காணிப்பை வலுப்படுத்தவும்” சம்பந்தப்பட்ட அனைத்து சுகாதார அதிகாரிகளையும் கேட்டுக் கொண்டதாக அவர் ட்விட்டரில் தெரிவித்தார். எந்தவொரு சூழ்நிலையையும் … Read more

கொரோனா ஒரு பக்கம்! பறவைக் காய்ச்சல் இன்னொரு பக்கம்? உலகத்திற்கே சுகாதார அச்சுறுத்தல்

உலக அளவில் கொரோனா பரவல் வேகமெடுத்துவரும் நிலையில், கொரோனாவுக்கு போட்டியாக பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே, கொரோனா தொற்றால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், ஐரோப்பாவில் திடீரென பரவத்தொடங்கியுள்ள  உயிர்க்கொல்லி நோய் பறவைக் காய்ச்சல். ஐரோப்பாவில் இந்த ஆண்டு மிக மோசமான பறவைக் காய்ச்சல் (Bird flu) வெடித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. 600க்கும் மேற்பட்ட காட்டுப் பறவைகள், குறிப்பாக வாத்துகள் மற்றும் கொக்குகள் என இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது, இது பண்ணைகளுக்கு இடையில் வைரஸ் பரவுவதற்கு … Read more

வாரிசு ஆடியோ ரிலீஸ்; அஜித் செய்யப்போகும் சம்பவம் என்ன தெரியுமா?

ஹெச்.வினோத்துடன் அஜித் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் துணிவு. இருவரும் இணைந்த நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்கள் வசூல் ரீதியாக கொண்டாடப்பட்டாலும் விமர்சன ரீதியாக முழு வரவேற்பை பெறவில்லைஇதன் காரணமாக இந்தப் படம் மூலம் அஜித்தும், வினோத்தும் தங்களை நிரூபிக்க காத்திருக்கின்றனர். க்ரைம் சம்பந்தப்பட்ட கதை எனவும், முழுக்க முழுக்க அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார் எனவும் பரவலாக பேச்சு எழுந்திருக்கிறது. இதற்கிடையே வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. இதன் காரணமாக இந்த பொங்கல் ரேஸில் … Read more

கர்நாடக கேரட் வருகையால் நீலகிரி கேரட் விலையில் கடும் வீழ்ச்சி!

நீலகிரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ஆண்டுதோறும் கேரட் சாகுபடி செய்யபட்டு வருகிறது. இங்கு விளையும் கேரட்டு சுவை அதிமாக இருப்பதாலும் ஒரு வாரத்திற்கு மேல் வைத்து விற்பனை செய்ய முடியும் என்பதாலும்  நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களுக்கும் டன் கணக்கில் ஏற்றுமதி செய்யபடுகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட் மேட்டுபாளையம் கொண்டு சென்று விற்பனை செய்யபட்டு வரும் நிலையில் கடந்த மூன்று மாதங்களாக கிலோவிற்கு 50 ரூபாய்  முதல் 100 ரூபாய் வரை என … Read more

வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “ நேற்று தெற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (21-12-2022) தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி … Read more

கொரோனா புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில்! பாரத் ஜோடோ யாத்திரைக்கு தடையா?

நியூடெல்லி: உலகின் பல நாடுகளில் கொரோனா மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் மற்றும் கொரியாவில் அதிகரித்து வரும் மரபணு மாறிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் மீண்டும் ஒருமுறை கோவிட் பரவலாம் என்ற அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.நேற்று ஒரு நாளில் ஜப்பானில் 1.85 லட்சம், கொரியாவில் 87,559, பிரான்சில் 71,212, ஜெர்மனியில் 52,528 உட்பட உலகம் முழுவதும் 5,59,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா புதிய அலை கவலையளிக்கிறது. இந்த நிலையில், ராகுல் காந்தி தொடங்கிய … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர்: காவல்துறையை கண்டித்து ஓட்டுநர் சாலையின் நடுவே படுத்து போராட்டம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அடிக்கடி அபராதம் விதிக்கும் காவல்துறையை கண்டித்து ஓட்டுநர் சாலையின் நடுவே படுத்து போராட்டம் செய்ததில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார். டாட்டா ஏசி (லோடு வாகனம் )வைத்து டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள அச்சங்குளம் பகுதிக்கு லோடுகள் ஏற்றி சென்ற போது நீதிமன்ற வளாகம் அருகே வாகன சோதனையில் … Read more

மேகேதாட்டில் அணை கட்ட சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளதா? வைகோ கேள்வி

நியூடெல்லி: காவிரியின் குறுக்கே மேகேதாட்டில் அணை கட்டுவதற்கு மத்தியசுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியதா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் பிஸ்வேஸ்வர் டூடு அவர்கள் விளக்கமான பதில் அளித்தார். இது தொடர்பாக 12.12.2022 அன்று, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அமைச்சர் பதிலளித்தார். கர்நாடகாவின் நிலம் மற்றும் நீர் உரிமையை பாதுகாக்கும் வகையில், மேகேதாட்டு அணைத் திட்டம் நிறைவேற்றப்படுவது உறுதி என்றும், அந்தத் திட்டத்திற்கு மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் வழங்க … Read more

HDFC Bank Credit Card: 20000-க்கும் மேற்பட்ட இந்தியன் ஆயில் பம்புகளில் இலவச பெட்ரோல்

இலவச பெட்ரோலைப் பெறுவது எப்படி: எந்த ஒரு பொருளும் இலவசமாகக் கிடைக்காது. அதற்கான ஒரு விலை கட்டாயம் இருக்கும். அதுவும் விண்ணை முட்டும் அளவிற்கு விலை உயர்ந்துள்ள பெட்ரோல் இலவசமாக கிடைக்கும் என்றால், நம்பும்படி இல்லை என்று தானே நினைக்கிறீர்கள். ஆம். அது உண்மை தான். ஒவ்வொரு ஆண்டும் 50 லிட்டர் பெட்ரோலை இலவசமாகப் பெற ஒரு வழி உள்ளது. ஆனால் அதற்கு நீங்கள் உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். இந்தியன் ஆயில் நிறுவனம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட … Read more