பயணியை காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்த ரயில்வே காவலர்

வாபி ஒரு ரயில்வே காவலர் தனது உயிரை பணயம் வைத்து பயணியைக் காப்பாற்றி உள்ளார்.. குஜராத் மாநிலத்தில் உள்ள வாபி ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் பயணி ஒருவர், ஒரு நடைமேடையில் இருந்து அடுத்த நடைமேடைக்குச் செல்வதற்காகத் தண்டவாளத்தில் இறங்கியுள்ளார். அவர் அப்போது தடுமாறி தண்டவாளத்தின் இடையே விழுந்துள்ளார். அதே நேரத்தில் அந்த தண்டவாளத்தில் சூரத்-பாந்த்ரா டெர்மினஸ் இன்டர்சிட்டி ரயில் விரைந்து வந்துகொண்டிருந்தது. வீராபாய் மேரு என்ற ரயில்வே காவலர் இதைக் கவனித்துள்ளார். அவர் நடைமேடையில் இருந்து குதித்து அந்த நபரை நோக்கி … Read more

வாக்கு எண்ணிக்கை தேதியை மாத்துங்க! மிசோரமில் எழுந்த வாய்ஸ்! டெல்லிக்கு புறப்பட்ட டீம்! என்ன மேட்டர்

ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அங்கே வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இப்போது தேர்தல் நடைபெறுகிறது. அதில் மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. Source Link

Forcibly applying sindoor does not mean marriage: High Court | மணமக்கள் யாக குண்டத்தை சுற்றினால் தான் திருமணமாக கருதப்படும்: பாட்னா உயர்நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாட்னா: பெண்ணின் நெற்றியில் நிர்பந்தமாக குங்குமம் வைப்பது இந்து திருமண சட்டப்படி திருமணம் ஆகாது என்றும், மணமகன் மற்றும் மணமகள் யாக குண்டத்தை சுற்றினால் மட்டுமே திருமணமாக கருதப்படும் எனவும் பாட்னா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள லக்கிசராய் பகுதியில் உள்ள கோவிலுக்கு கடந்த 2013ம் ஆண்டு ரவிகாந்த் என்பவர் வழிபாடு நடத்த சென்றுள்ளார். அப்போது அவரை கடத்தி சென்ற சிலர், ஒரு பெண்ணுடன் கட்டாயமாக திருமணம் … Read more

TN EV charging Stations – 2025 ஆண்டுக்குள் 2000 சார்ஜிங் நிலையங்களை திறக்க தமிழ்நாடு அரசு திட்டம்

முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ் தமிழ்நாடு எலக்ட்ரிக் வாகனங்ளுக்கான மையமாக செயல்பட மிக சிறப்பான திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், தற்பொழுது 400க்கு மிக குறைவாக உள்ள மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையை 2000 ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார். செப்டம்பர் 2023 மாத இறுதி கணக்கின்படி தமிழ்நாட்டில் 4.14 லட்சம் பேட்டரி மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது. TN EV charging stations … Read more

Philippines: `வெறுங்கால்களில் ஓடி இரண்டு தங்கம்; ஒரு வெண்கலம்' சாதித்த 71 வயது பெண்!

இலங்கையைச் சேர்ந்த  அகிலா திருநாயகி என்பவர் தனது 71 வயதில்  இரண்டு தங்கப்பதக்கங்களையும்,  ஒரு வெண்கலமும் வென்று சாதனைப்  படைத்திருக்கிறார்.    பிலிப்பைன்ஸ் நாட்டில் மாஸ்டர்ஸ் தடகள சம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. அந்தத் தொடரில் இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த  அகிலா திருநாயகி பங்கேற்றிருக்கிறார்.  71 வயதான இவர் 1500 மீட்டர் மற்றும் 5000 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார். அதுமட்டுமின்றி 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும்  வெண்கலம் வென்று  சாதனைப் படைத்து இலங்கை மண்ணிற்கு பெருமைச் சேர்த்திருக்கிறார். … Read more

அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்குத் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது. தற்போது தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த … Read more

மனிதரை அடித்துக்கொன்ற புலி! ஒரே மாதத்தில் இரண்டாவது பலி.. புலிகள் சரணாலயத்தில் அடுத்தடுத்து ஷாக்

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் புலிகள் சரணாலயத்தில் ஊழியர் ஒருவரை புலி ஒன்று தாக்கி கொன்றிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிம் கார்பெட் புலிகள் சரணாலயம்தான் நாட்டின் முதல் தேசிய பூங்காவாகும். புலி, சிறுத்தை உள்ளிட்ட பூனை இனங்களை பாதுகாக்க இமயமலை அடிவாரத்தில் சுமார் 920.9 ச.கி.மீ பரப்பளவில் இந்த பூங்கா கடந்த Source Link

Collector lock for famous hospital | பிரபல மருத்துவமனைக்கு கலெக்டர் பூட்டு

மைசூரு : மைசூரின் பிரபலமான,’ஆதித்யா அதிகாரி’ மருத்துவமனைக்கு, பூட்டு போட்டு மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா உத்தரவிட்டார். மைசூரை சேர்ந்த ரவிகவுடா தொட்டப்பா சிவண்ணா என்பவர், 2016ல் விபத்தில் சிக்கி காயமடைந்தார். இவரை சிகிச்சைக்காக மருத்துமனை ஒன்றில் சேர்த்தனர். கூடுதல் சிகிச்சைக்காக 2017ல் மைசூரின், பிரபல தனியார் மருத்துவமனையான ஆதித்ய அதிகாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நான்கு மாதம் சிகிச்சையளித்த பின், அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் சிவண்ணா குணமடையாமல் உயிரிழந்தார். தவறான சிகிச்சை அளித்ததாக, மருத்துவமனை … Read more

Maruti Suzuki Ev – மாருதி சுசூகி eVX எலக்ட்ரிக் எஸ்யூவி ஏற்றுமதி மையமாக மாறும் இந்தியா

மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக வரவிருக்கும் eVX கான்செப்ட் அடிப்படையிலான மாடல் இந்தியா மட்டுமல்லாமல் சுசூகி நிறுவனம் ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. குஜராத்தில் உள்ள சுசூகி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ள eVX எஸ்யூவி மாடலுக்கான பேட்டரி மற்றும் மோட்டார் உள்ளிட்ட முக்கிய பாகங்கள் உள்நாட்டிலே தயாரிக்கப்பட உள்ளது. Maruti Suzuki eVX இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டு வரும் புதிய இவிஎக்ஸ் கான்செப்ட் நிலை எலக்ட்ரிக் … Read more

மறைந்தார் ஃபாத்திமா பீவி: உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி, ஆளுநர்… தடம் பதித்த சாதனை பெண்!

தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணியாற்றிய இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி ஃபாத்திமா பீவி, தன்னுடைய 96 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி மட்டுமல்லாது, ஆசியாவிலேயே உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதியும் ஆவார். மேலும், உயர் நீதிமன்ற அளவிலும் முதன்முதலாக நியமிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண் நீதிபதியும் இவரே. நீதித்துறை மட்டுமல்லாமல், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர், ஆளுநர் என பல்வேறு பதவிகளில் பொறுப்பு … Read more