அமெரிக்காவில் அம்மா உணவகம்.! பட்ஜெட் விலையில் தமிழ்நாட்டு உணவு., அசத்தும் இந்தியர்

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் இந்தியர் ஒருவர் அம்மாஸ் கிச்சன் என்ற பெயரில் பட்ஜெட் விலையில் உணவகம் நடத்தி அசத்தி வருகிறார். அம்மா உணவகம் தமிழ்நாட்டில் அம்மா உணவகம் பற்றி தெரியாதவர் இருக்கமுடியாது. மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, அவரது ஆட்சிக் காலத்தின்போது ‘அம்மா உணவகம்’ தொடங்கப்பட்டது. மிக குறைந்த விலையில் ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இன்றும் உணவுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அம்மா உணவகம் அமெரிக்காவில் இருக்கிறது என கூறினால் உங்களால் … Read more

மதுரை, நெல்லையில் அகில இந்திய பார் கவுன்சில் தேர்வு மையங்கள் அமைக்ககோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: மதுரை,நெல்லையில் அகில இந்திய பார் கவுன்சில் தேர்வு மையங்கள் அமைக்ககோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளது. புஷ்பவனம் என்பவரது வழக்கில் அகில இந்திய பார் கவுன்சில் செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

"கனவுகள் நனவாகும் என்பதற்கு இதுவே சான்று!"- ஆஸ்கர் வென்ற முதல் ஆசியப்பெண் மிச்செல் இயோவின் மெசேஜ்

95வது ஆஸ்கர் விருது விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டர் அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைப் பிரபல டிவி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். தீபிகா படுகோன், எமிலி பிளன்ட், சாமுவேல் எல். ஜாக்சன், டுவைன் ஜான்சன், மைக்கேல் பி. ஜோர்டன், ஜானெல்லே மோனே, ஸோ சல்டானா, ஜெனிஃபர் கான்னெல்லி, ரிஸ் அஹமட், மெலிசா மெக்கார்த்தி  உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக இதில் கலந்துகொண்டனர். ‘RRR’, ‘The Elephant Whisperers’ ஆகிய இரண்டு இந்தியப் … Read more

சுவிற்சர்லாந்து இந்து சைவத் திருக்கோவிலில் இரண்டாவது உறுப்பினர் கூட்டம்

சுவிற்சர்லாந்து இந்து சைவத் திருக்கோவில் ஒன்றியத்தின் இந்த வருடத்திற்கான இரண்டாவது உறுப்பினர் கூட்டம் நேற்றைய தினம் நடந்தது.  இந்து சைவத் திருக்கோவில்  சுவிஸில் நேற்று (12.03.2023) பிற்பகல் 2.30 மணியளவில் சூரிச் அருள்மிகு சிவன் கோவில் வழிபாட்டின் பின்னதாக கலந்துரையாடல் மண்டபத்தில், 10 திருக்கோவில்களின் உறுப்பினர்களுடன், இந்து சைவத் திருக்கோவில் ஒன்றியத்தின் இந்த வருடத்திற்கான இரண்டாவது உறுப்பினர் கூட்டம் சிறப்புற நடந்தது.  அதில் இறைவணக்கம், அக வணக்கம் , ஆகியவற்றைத் தொடர்ந்து திரு. இராதாகிருஷ்ணன் அவர்களது தலைமையுரையுடன் ஆரம்பமாகிய கூட்டத்தில், … Read more

மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

மும்பை: மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக ஆலிஸ் கேப்ஸி 38 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32 ரன்களும், மரிசான் 32 கேப் ரன்களும் எடுத்தனர். பெங்களூரு அணி ஆடிய 5 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது பெங்களூரு அணி ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. 

டிரைவர் ஹோட்டலுக்குச் சென்று வருவதற்குள் கன்டெய்னர் லாரி திருட்டு; `பலே' இளைஞரைக் கைதுசெய்த போலீஸ்

நாகப்பட்டினம், பிடாரங்கொண்டான், பொன் செய் தரங்கம்பாடியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (32). இவர் கன்டெய்னர் லாரி டிரைவராக இருக்கிறார். இவர் கடந்த 12.3.2023-ம் தேதி கன்டெய்னர் லாரியை ஓட்டிக்கொண்டு சென்னை துறைமுகத்துக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு வேலூருக்குப் புறப்பட்டார். மாதவரம் 200 அடி சாலை, சின்ன ரவுண்டானா அருகிலுள்ள ஹோட்டலில் சாப்பிடுவதற்காக விக்னேஷ் சென்றார். பின்னர் அவர் வெளியில் வந்து பார்த்தபோது கன்டெய்னர் லாரியைக் காணவில்லை. ராபர்ட் இது குறித்து அவர் மாதவரம் காவல் நிலையத்தில் … Read more

Rolex எனும் ஆடம்பர பிராண்டை உருவாக்கிய வறுமையில் வாடிய ஜேர்மானியர்!

தனது குழந்தை பருவத்தில் பெற்றோரை இழந்து அனாதையான ஒருவர், வறுமையின் வாடிய ஒருவர், இன்று உலகின் மிகப்பெரிய கைக்கடிகார பிராண்டு Rolex-ஐ உருவாக்கியவர் என்பது தெரியுமா? அவரைப்பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள். Rolex-ஆடம்பரத்தின் அடையாளமாக ரோலக்ஸ் (Rolex) சந்தையில் கிடைக்கும் மிகவும் ஆடம்பரமான மற்றும் விலையுயர்ந்த கடிகாரங்களில் ஒன்றாகும் என்பதை ஆடம்பரக் கடிகாரங்களின் எந்தவொரு அறிவாளியும் ஒப்புக்கொள்வார். இந்த பிராண்ட் ஒரு கல்ட்-கிளாசிக் மற்றும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படுகிறது. Rolex உலகின் முதன்மையான … Read more

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் உள்ளிட்ட மொழித்தேர்வுகளில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை: பள்ளிக்கல்வித்துறை தகவல்

சென்னை: இன்று நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் உள்ளிட்ட மொழித்தேர்வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 8 லட்சத்து 51 ஆயிரம் பேரில் முதல் நாளில் 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

"நலத்திட்டங்களைக் கொண்டு சேர்ப்பது எங்கள் பணி; கூட்டணி குறித்து முதல்வர் முடிவுசெய்வார்" ஐ.பெரியசாமி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திட்ட இயக்குநர் தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “2021-2022 – 2022-2023 நிதியாண்டுகளில் அண்ணா கிராம மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி ஊராட்சி வளர்ச்சி திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம், முதல்வரின் கிராமப்புறச்சாலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் … Read more