நகைக்கடை வியாபாரியிடம் போலீஸ் போல் நடித்து ரூ.2.5 கோடி பணம், ஒன்றரை கிலோ தங்கம் வழிப்பறி

சிவகங்கை: நகைக்கடை வியாபாரியிடம் போலீஸ் போல் நடித்து ரூ.2.5 கோடி பணம், ஒன்றரை கிலோ தங்கத்தை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்து சென்றனர். காரைக்குடியில் இறங்கிய நகை வியாபாரி ரவிச்சந்திரனை போலீஸ் என கூறி காரில் அழைத்து சென்ற மர்மநபர்கள் புதுக்கோட்டை மாவட்டம் லேனா வனப்பகுதியில் நகை, பணத்தை பறித்து கொண்டு கீழே இறக்கிவிட்டு தப்பியோடினர்.

விண்ணில் சாதிக்கும் இந்திய விண்வெளி துறைமுகம்: சதீஷ்தவான் விண்வெளி மையம்| Indian Spaceport to achieve in space: Satishthawan Space Centre

இன்று உலகத்தையே கைக்குள் அடக்குமளவு அறிவியல், தகவல் தொழில் நுட்பம் அதிவேக வளர்ச்சி கண்டுள்ளது. விண்ணில் நிலைநிறுத்தும் செயற்கைகோள் மூலம் பூமியின் செயல்பாடுகளை கண்காணித்து பூகம்பம், புயல், சுனாமி போன்ற பேரழிவுகளை முன்கூட்டி அறிந்து அவற்றை முற்றிலும் தடுக்க முடியா விட்டாலும் கூட அதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. விண்வெளியில் சாதனை படைத்து வரும் நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா பட்டியலில் ஐந்தாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி … Read more

“செந்தில் பாலாஜி `டார்கெட்' அமைச்சர்!" – கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் நேற்று (11-03-2023) நடைபெற்ற கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் சங்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார் . அப்போது பேசிய அவர், “கைத்தறி ஆடைகளை அனைவரும் வாங்க வேண்டும்; அவற்றை அணிய வேண்டும் என்பதை இயக்கமாக உருவாக்கிய கழகம் தி.மு.க-தான். கைத்தறி மக்களின் துயர்நீக்க,1950-களில் கைத்தறி ஆடைகளை அண்ணாவும், கலைஞரும் விற்றனர். 1953-ம் ஆண்டு ஜனவரி 4-ம் நாள் தி.மு.க-வானது முதன் முதலாக கைத்தறி ஆதரவு நாள் கொண்டாடியது. முதல்வர் ஸ்டாலின் … Read more

பண்டிகையை கொண்டாட சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! சிக்கிய 17 வயது சிறுவன் கூறிய அதிர்ச்சி காரணம்

இந்திய மாநிலம் ஜார்க்கண்டில் வேறொரு மாணவருடன் பேசியதால் மாணவியை, 17 வயது சிறுவன் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹோலி பண்டிகையை கொண்டாட சென்ற மாணவி ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், உர்ஜா நகரில் உள்ள பாடசாலையில் பயின்று வந்தார். கடந்த புதன்கிழமை மாலை தனது தோழி ஒருவரின் வீட்டில் ஹோலி பண்டிகையை கொண்டாட சென்றுள்ளார். [Representational Photo : ஆனால் அவர் மறுநாள் வயல்வெளியில் உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்தார். அவரது … Read more

விமான நிலைய சம்பவம்: எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு

சென்னை: மதுரை விமான நிலையம் சம்பவம் தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன் விமானத்தில் பயணித்த ஒருவர், அவரை அவதூறாக பேசியுள்ளார். விமானத்தில் இருந்து இறங்கி பேருந்தில் வந்த போது, துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியுடன் பயணிக்கிறேன். துரோகத்தின் அடையாளம் எடப்பாடி பழனிசாமி, சின்னம்மாவுக்கு துரோகம் செய்தவர். 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி தென் மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்தவர் என்று பேசியுள்ளார். அவர் … Read more

தர்மபுரியில் தாய் யானை இறந்த இடத்தில் சுற்றி திரிந்த 2 குட்டி யானைகளும் வேறு வனப்பகுதிக்குள் நகர்ந்தன

தர்மபுரி: தாய் யானை இறந்த இடத்தில் சுற்றி திரிந்த 2 குட்டி யானைகளும் வேறு வனப்பகுதிக்குள் நகர்ந்துள்ளன. மாரண்டஹள்ளி அருகே மின்வேலியில் சிக்கி தாய் யானை இறந்த நிலையில் குட்டிகள் அந்த இடத்திலேயே சுற்றித்திரிந்தன. தற்போது அந்த குட்டி யானைகள்

ஊழல் செய்வது எங்க உரிமை; அதை வெளியிடுவது அண்ணாமலையின் கடமை என்பது மாதிரி சொல்றாரே!| Speech, interview, report

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை, ஏப்., 14ல் வெளியிடுவதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். வெளியிடட்டும்; அது அவருடைய இஷ்டம். அதற்கு நாம் என்ன செய்ய முடியும். ‘நாங்க எந்த ஊழலும் செய்யலை… அதனால, பட்டியல் எல்லாம் வெளியிட முடியாது’ன்னு தானே இவர் சொல்லியிருக்கணும்… ஆனா, ‘ஊழல் செய்வது எங்க உரிமை; அதை வெளியிடுவது அண்ணாமலையின் கடமை’ என்பது மாதிரி சொல்றாரே! அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம்: தி.மு.க., … Read more

`மூன்றாவது முறை சீன அதிபராகப் பதவியேற்ற ஜி ஜின்பின்!' – இனி வாழ்நாள் வரை அவர்தான் சீன அதிபரா?

சீன அரசியல் வரலாற்றில் மாவோவுக்குப் பிறகு மூன்றாவது முறையாக அதிபராகப் பதவியேற்றிருக்கிறார் ஜி ஜின்பிங். கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், ஜி ஜின்பிங் கட்சியின் பொதுச்செயலாளராகவும் நாட்டின் அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவை அப்படியே அங்கீகரிக்கும் அந்நாட்டின் நாடாளுமன்றமான தேசிய மக்கள் காங்கிரஸ், ஜி ஜின்பிங் தேர்வுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. இதையடுத்து 10-03-2023-ம் தேதி நாடாளுமன்றத்தில் சீன அதிபராகத் தொடர்ந்து மூன்றாவது முறையாக முறைப்படி … Read more

காய்ச்சல் என மருத்துவரை நாடிய லண்டன் நபர்… 6 வாரம் கோமாவில்: கண் விழித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கிழக்கு லண்டனை சேர்ந்த தந்தை ஒருவர் காய்ச்சல் காரணமாக மருத்துவரை நாடியுள்ள நிலையில், ஒரு கால் மற்றும் ஒரு கையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுயநினைவின்றி சரிந்து விழுந்தார் கிழக்கு லண்டனின் Ilford பகுதியை சேர்ந்தவர் 35 வயதான ஜுனைத் அகமது. சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர், ஒரு கட்டத்தில் மருத்துவரை நாட முடிவு செய்து மருத்துவமனை சென்றுள்ளார். Image: SWNS காத்திருக்கும் அறையில் சக நோயாளிகளுடன் காத்திருந்த … Read more

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் கைது

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த16 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், அவர்டகளிடம் இருந்து 2 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.