டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை

டெல்லி: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை  நடத்தி வருகின்றனர். சிபிஐ சோதனையை வரவேற்பதாகவும், அங்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்றும் மணீஷ் சிசோடியா டிவிட் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மதுபான கொளகை விவகாரம் தொடர்பாக மணீஷ் சிசோடியாவின் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

வயநாட்டில் மக்களை அச்சுறுத்தி வந்த புலி பிடிக்கப்பட்டது|

பந்தலூர்:கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் மானந்தவாடி அருகே புதுச்சேரி என்ற இடத்தில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தாமஸ் என்பவரின் வீட்டு வாசலுக்கு வந்த புலி ஒன்று, தாமஸ் 50 என்பவரை தாக்கியது. காயமடைந்த அவர் கோழிக்கோடு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து புலியை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி, அரசியல் கட்சியினர் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் புலியை பிடிக்கும் வரை இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய மாட்டோம் என்றும் … Read more

“சிஏஏ மூலம் சிறுபான்மையினரை முக்கியத்துவமற்றவர்களாக மாற்றுவதே பாஜக-வின் நோக்கம்" – அமர்த்தியா சென்

2019-ல் மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடித்ததையடுத்து பா.ஜ.க கொண்டுவந்த மிக முக்கிய அரசியல் நகர்வு குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ). பல்வேறு அரசியல் எதிர்ப்புகளையும் கடந்து தன்னுடைய பெரும்பான்மையால் பா.ஜ.க இந்த சட்டத்தைக் கொண்டுவந்தது. அப்போது சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். CAA-NRC-NPR இந்த நிலையில் நோபல் பரிசுபெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென், சிஏஏ மூலம் சிறுபான்மையினரை முக்கியத்துவமற்றவர்களாக மாற்றுவதுதான் பா.ஜ.க-வின் நோக்கம் எனக் கூறியிருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமர்த்தியா … Read more

சார்லஸ் – வில்லியம் இருவரின் பின்னணி அலசினால்… குடும்பம் என்னை மன்னிக்காது: ஹரி வெளிப்படை

மன்னர் சார்லஸ் மற்றும் சகோதரர் வில்லியம் தொடர்பில் வெளிப்படையாக பேச நேரிடும் என இளவரசர் ஹரி மிரட்டல் விடுத்துள்ளார். குடும்பம் தம்மை மன்னிக்காது இளவரசர் ஹரி வெளியிட்டுள்ள தமது நினைவுக்குறிப்புகள் நூலானது விற்பனையில் சாதனை படைத்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. தமது நூலை பிரபலப்படுத்தும் நோக்கில் ஹரி பத்திரிகை மற்றும் ஊடகங்கலுக்கு நேர்முக உரையாடலும் அளித்து வருகிறார். @PA இந்த நிலையில், அவ்வாறான ஒரு நேர் காணலில், மன்னர் சார்லஸ் மற்றும் வில்லியம் ஆகியோர் தொடர்பில் … Read more

தை முதல் நாளை வரவேற்போம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

சென்னை:  ’தமிழ்நாடு வாழ்க எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம்’  முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அறுவடைத்திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில், ஒவ்வொருவர் இல்லத்தின் வாயிலிலும் ‘தமிழ்நாடு வாழ்க‘ எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து மடலில்,” பொதுவாக, ஒரு விழாவைக் கொண்டாடுவது மனதுக்கு குதூகலத்தைத் தரும். ஒரு போராட்டத்தை எதிர்கொண்டு, … Read more

40 years of ‘பாயும் புலி’… வெள்ளி விழா நாயகன் ரஜினியின் பொங்கல் ரிலீஸ்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பாயும் புலி’ படத்தின் 40 இயர்ஸ் இன்று. 1983 ம் ஆண்டு ஜனவரி 14 ம் தேதி வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் தொடர்ந்து 133 நாட்கள் ஓடியது. எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் 40 years of ‘பாயும் புலி’ குறித்த பதிவை தனது ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் ஏ.வி.எம். தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் அருணா குகன். Celebrating 40 years of #PaayumPuli … Read more

ஜனவரி 25-ல் பொழிப்பெயர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்: திமுக மாணவரணி செயலாளர்

சென்னை: ஜனவரி 25-ல் பொழிப்பெயர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக மாணவரணி செயலாளர் தெரிவித்துள்ளனர். திருவள்ளூரில் நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். ராயபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். தாம்பரத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பட்டுக்கோட்டையில் பொருளாளர் டி.ஆர்.பாலு உரையாற்றுள்ளனர். திருச்சியில் கே.என்.நேரு, அம்பத்தூரில் பொன்முடி, சேகர்பாபு ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

கர்ப்பத்தை அறிவித்தார் டென்னிஸ் வீரர் நவோமி ஒசாகா; 2024-ல் திரும்பிவருவதாக உறுதி!

சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகிய ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, தான் கர்ப்பமாக இருப்பதாக தன்னுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டை சேர்ந்த டென்னிஸ் நட்சத்திரமான நவோமி ஒசாகா, 2019-ம் ஆண்டு முதல், 25 வயதான ராப்பருடன் டேட்டிங் செய்து வருகிறார். நவோமி புதன்கிழமை ட்விட்டரில் வெளியிட்ட பதில், “கடந்த சில ஆண்டுகளாக கொஞ்சம் சுவாரஸ்யமாக சென்றது, மிகவும் சவாலான நேரங்கள் மிகவும் வேடிக்கையாகவே இருந்தன. விளையாட்டில் இருந்து விலகிய இந்த … Read more

இளவரசர் ஹரியின் புத்தகத்தால் என் உயிருக்கு ஆபத்து: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நபர்

இளவரசர் ஹரி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு விடயத்தால், அவருக்கும் தனது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ஒருவர். இவர் யார் தெரியுமா? புகைப்படத்தில் பார்த்தால் அச்சு அசலாக காணப்படும் இந்த நபருடைய பெயர் Rhys Whittock. Rhys எங்குபோனாலும், அவரை ஹரி என்றே நினைத்து அவருடன் பேச முற்படுவோர் பலர். ஹரியைப்பொலவே தோற்றமளிப்பவர் யார் என்னும் ஒரு போட்டியில் பங்கேற்றபோது, 3,000 பேரில் அச்சு அசலாக ஹரியைப்போலவே இருப்பவர் என நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்த Rhys. … Read more

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு! எடப்பாடி பழனிச்சாமி கடிதம்..

சென்னை: மத்தியஅரசு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறை குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கோரியுள்ள நிலையில்,   ஆதரவு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி இந்திய சட்ட ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். பார்லிமென்ட், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், ‘ ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் பச்சைக்கொடி காட்டி உள்ளது. இதையடுத்து, இதுதொடர்பாக ஆய்வு செய்யும்படி, தேசிய … Read more