திருமண நிகழ்ச்சிக்கு சென்ற படகு: நடுக்கடலில் கவிழ்ந்ததில் 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

ஏமனில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற படகு ஒன்று நீரில் கவிழ்ந்ததில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கர விபத்து ஏமனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுக நகரான ஹொடைடாவின் குடிமக்கள், செங்கடலில் அமைந்துள்ள கமரன் தீவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக படகில் சென்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்ததில், பெண்கள், சிறுவர்கள் என படகில் பயணித்த 27 பேரும் தண்ணீரில் மூழ்கினர். AFP இறுதியில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு … Read more

பைரவர் திருக்கோயில், தகட்டூர்

பைரவர் திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், தகட்டூரில் அமைந்துள்ளது. இலங்கையில் இராவணவதம் முடிந்ததும் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக இராமேஸ்வரத்தில் இராமபிரான் சிவபூஜை செய்ய முடிவெடுத்தார். அதற்காக இலிங்கம் எடுத்து வர ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பினார். அனுமான் லிங்கத்துடன் வரும்போது, அவருடன் மகாபைரவரும் வந்தார். கோயில்களில் பைரவரே காவல் தெய்வம். அக்காலத்தில், கோயிலைப் பூட்டிபைரவர் சன்னதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவார்கள். அதை தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்திவாய்ந்தவராக பைரவர் கருதப் பட்டார். அதுபோல் காசி … Read more

மார்ச்-09: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: சென்னையில் 292-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பீரங்கி பயிற்சியில் விபரீதம் இலக்கு தவறியதில் மூவர் பலி| Three killed in mishap in artillery practice

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கயா : பீஹாரில், ராணுவத்தின் பீரங்கியை இயக்கி பயிற்சியில் ஈடுபட்டபோது, குண்டு இலக்கைத் தாண்டி அருகில் இருந்த கிராமத்தில் விழுந்ததில் மூன்று பேர் பலியாகினர். பீஹாரின் கயா மாவட்டத்தில் நேற்று ராணுவப் பயிற்சி நடந்தது. இப்பயிற்சியில் சிறிய ரக பீரங்கிகள் வாயிலாக குண்டுகள் வீசி பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த குண்டுகள் இலக்கு தவறி, அருகில் இருந்த கிராமத்தில் விழுந்ததில், அங்கு வசித்த சூராஜ் குமார், அவரது மனைவி கன்சன் குமாரி … Read more

தவறாக புரிந்து கொண்டேன்….ட்விட்டர் ஊழியரிடம் மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்

ட்விட்டர் நிறுவனத்தின் மாற்றுத்திறனாளி ஊழியர் ஒருவரை எலான் மஸ்க் கேலி செய்து சர்ச்சையாகி இருந்த நிலையில், அவரிடம் மஸ்க் மன்னிப்பு கோரியுள்ளார். ஊழியர்கள் பணி நீக்கம் உலக அளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கள் ஊழியர்களில் ஒரு பகுதியை பணியில் இருந்து வெளியேற்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் ட்விட்டர் நிறுவனமும் தங்களின் 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இதற்கு உலக அளவில் அதிகரித்துள்ள பொருளாதார நெருக்கடியே முதல் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,807,218 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.00 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,807,218 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 680,968,448 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 653,930,770 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,501 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஐ.ஓ.பி.,யில் மகளிர் தினவிழா | Womens Day at IOP

புதுச்சேரி: புதுச்சேரி, நுாறடி சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல அலுவலகத்தில் மகளிர் தின விழா நடந்தது. விழாவில், உதவி பொது மேலாளர் சோபியா, 17 மகளிர்களுக்கு ரூ. 1.41 கோடி மதிப்பீட்டில் அரசு நிதி உதவி மற்றும் இதர கடன் திட்டங்களின் கீழ் நிதியுதவியை வழங்கினார். இதே போல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்ட கிளைகளிலும் மகளிர் சுய உதவி குழு மற்றும் தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கப்பட்டது. புதுச்சேரி: புதுச்சேரி, நுாறடி … Read more

விடாமல் துரத்திய பெங்களூரு…11 ஓட்டங்களில் வெற்றியை பறித்த குஜராத் ஜெயண்டஸ் அணி

ராயல் சேலஞ்சரஸ் /பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் ஜெயண்டஸ் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. அதிரடி காட்டிய குஜராத் ஜெயன்ட்ஸ் மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயண்டஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆட்டத்தில் களமிறங்கியது, இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்கள் குவித்து அசத்தியது. அணியில் அதிகபட்சமாக … Read more

எங்களை சீண்டினால் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு…கிம்மின் சகோதரி கடும் எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிற்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை முன்னெடுக்க வட கொரியா தயாராக இருப்பதாக கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்துள்ளார். கூட்டு ராணுவ பயிற்சி  கொரிய தீபகற்பத்தில் சில நாட்களாக அமெரிக்கா- தென் கொரியா படைகள் இராணுவ போர் பயிற்சியை செய்து வருகின்றனர். அத்துடன் இந்த மாத இறுதியில் இரு நாடுகளும் பிரம்மாண்டமான மற்றொரு இராணுவ பயிற்சியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. Getty இந்நிலையில் வட கொரியாவை அச்சுறுத்தும் … Read more