`அவர்களுக்கு ஒரு `பெண்’ தேவைப்பட்டார்’ – புடவை விளம்பரத்திலிருந்து நிராகரிக்கப்பட்ட நடிகை டாப்ஸி

தமிழில் `ஆடுகளம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி `கேம் ஓவர்’, `ஆரம்பம்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை டாப்ஸி. இந்தியில் `பிங்க்’, `தப்பட்’ போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தாலும் , நடிப்புத்துறையில் கரியரை தொடங்குவதற்கு கடினமான பல சூழல்நிலைகளைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் நடிகை டாப்ஸி. நடிகை டாப்ஸி சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர் தன் இளமையான தோற்றத்தால் புடவை பிராண்ட் ஒன்றில் இருந்து நிராகரிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். அவர் பேசும்போது, “ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்க என் … Read more

பஞ்சத்தால் சோமாலியாவில் 43,000 பேர் உயிரிழப்பு

சோமாலியா: பஞ்சத்தால் சோமாலியாவில் 43,000 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சோமாலியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட பஞ்சத்தால் கடந்தாண்டு 43 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதி பேர் குழந்தைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு உலக அளவில் 6,820,145 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.20 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,820,145 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 682,579,701 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 655,515,999 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,164  பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒன்பது உலக சாதனைகள்; குறளுக்காகக் குரல் கொடுக்கும் தமிழாசிரியை!

“நான் இரண்டாம் வகுப்புப் படித்தபோது ஏற்பட்டது திருக்குறள் மீதான பிரியம். வயது கூடக் கூட அதன் மீதான வியப்பும் வளர்ந்து கொண்டேதான் வருகிறது. திருக்குறள் கொண்டு நான் சாதனைகள் செய்வது, அதன் புகழை என்னால் முடிந்த அளவுக்கு நானும் கொண்டு சேர்க்கவே’’ என்கிறார் செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியையாகப் பணியாற்றும் சீதளா தேவி. திருக்குறளை வெற்றிலை, சாக்பீஸ் உள்ளிட்ட ஒன்பது பொருள்களில் எழுதி, ஒன்பது உலக சாதனைகள் புரிந்துள்ளார். அவரை சந்தித்தோம். சாக்பீஸில் … Read more

மார்ச் 21: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 304-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 304-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மார்ச்-21: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை:  சென்னையில் 304-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

இந்த வார ராசிபலன் – மார்ச் 21 முதல் 26 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

அடுத்த போட்டியில் சூர்யகுமாரின் நிலைமை என்ன? சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தரலாம்! முன்னாள் வீரர் கருத்து

வரும் போட்டிகளில் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் தரலாம், அது தவறான வாய்ப்பாக அமையாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சொதப்பும் சூர்ய குமார் இந்திய அணி தற்போது அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. cricbuzz … Read more

கனடாவில் இந்திய சீக்கிய மாணவர் மீது தாக்குதல்: தலைப்பாகையை கிழித்து எறிந்த மர்ம கும்பல்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இந்தியாவை சேர்ந்த 21 வயது சீக்கிய மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு அவரது தலைப்பாகை கிழித்து வீசப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாணவர் மீது தாக்குதல் கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை இரவு இந்தியாவை சேர்ந்த ககன்தீப் சிங் என்ற 21 வயது சீக்கிய மாணவர் மீது வெளிப்படையான வெறுப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ககன்தீப் சிங் வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்குச் செல்லும் போது தாக்கப்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. … Read more