மீனவர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மீனவர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நேற்று அதிகாலை கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள் 12 பேரையும், வெற்றிலைகேணி கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரையும் கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். அவர்களிடமிருந்து பல லட்சம் மதிப்புள்ள விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், மீனவர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

போர் தொடங்கிய பின் முதல் முறையாக ஜெலென்ஸ்கியுடன் பேசவுள்ள ஜி ஜின்பிங்!

சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் போர் தொடங்கிய பின்னர் முதல் முறையாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி ஜின்பிங் பயணம் மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாக தெரிவான ஜி ஜின்பிங், ரஷ்யா பயணத்தின் ஒரு பகுதியாக மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல பரிசீலித்து வருகிறார். எனினும், அவரது முழுப்பயணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடம் ஆன நிலையில், ஜெலென்ஸ்கியுடன் முதல் முறையாக ஜி ஜின்பிங் … Read more

சீன அதிபர் ஷி ஜின்பிங் ரஷ்ய அதிபர் புதினை அடுத்த வாரம் நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல்!

பெய்ஜிங் : சீன அதிபர் ஷி ஜின்பிங் ரஷ்ய அதிபர் புதினை அடுத்த வாரம் நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. சமீபத்தில் 3வது முறையாக சீன அதிபராக ஜின்பிங் பதவி ஏற்றார்; இந்நிலையில் புதினுடனான இந்த சந்திப்பு ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்துள்ள போரை நிறுத்துவதற்கான, அமைதி நடவடிக்கைக்கு உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சமையல் காஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம்: புதுச்சேரி பட்ஜெட்டில் ரங்கசாமி அறிவிப்பு| Rs.300 subsidy on cooking gas cylinder: Rangasamy announced in Puducherry budget

புதுச்சேரி: ரூ.11 ஆயிரத்து 600 கோடிக்கான வரியில்லா பட்ஜெட்டை, முதல்வர் ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார். காஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் கடந்த 9ம் தேதி துவங்கியது. இதை தொடர்ந்து, சட்டசபையில், 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு: ரூ.50 ஆயிரம் … Read more

'அடுத்த வாரம் ரஷ்யா செல்லும் ஜி ஜின்பிங்?' – உலக நாடுகள் உற்று நோக்கும் பயணம், ஏன்?!

“கடுமையான பின்விளைவுகளை…” ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் நேட்டோ படையில் இணைவதாக அறிவித்தது. இதற்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர், “உக்ரைன் நேட்டோ படையில் இணைய தொடர்ந்து முயன்றால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்றார். உக்ரைன் பாக்முட் நகரம் இருப்பினும் அந்த நாடு தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இதையடுத்து ரஷ்ய படைகளுக்கு, உக்ரைனுக்கு எதிராக சிறப்பு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார் புதின். அதன்படி இருநாடுகளுக்கும் இடையேயான போர் … Read more

ஆஸ்கரில் 7 விருதுகளை தட்டிச் சென்ற திரைப்படம்!

95வது ஆஸ்கர் விருது விழாவில் Everything Everywhere All at Once என்ற திரைப்படம் ஏழு விருதுகளை வென்றது. ஏழு விருதுகளை வென்ற திரைப்படம் அமெரிக்காவில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது விழாவில், உலகின் பல்வேறு மொழிகளின் சிறந்த திரைப்படங்கள் அந்தந்த நாடுகளால் பரிந்துரை செய்யப்பட்டன. அவற்றில் Everywhere All at Once என்ற திரைப்படம் ஏழு விருதுகளை வென்றது. இந்தத் திரைப்படம் 11 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அவற்றில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த … Read more

பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று துவக்கம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. இந்த தேர்வை 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுதேர்வுகள் நேற்று துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

நாய்க்கடி சம்பவங்கள்: `இதை செய்தால் ஆறு மாதங்களில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தலாம்!’

தெருநாய்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், தெருநாய்க்கடிகளும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும், இறப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதற்கு, விலங்குகளுக்குக் கருத்தடை செய்வதே தீர்வு என்று விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். நம் நாட்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, தொடர் பிரச்னையாக மாறியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் 1.2 கோடியாக இருந்த தெருநாய்களின் எண்ணிக்கையானது, தற்போது 6.2 கோடியாக அதிகரித்துள்ளது. தெருநாய்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியாவும், சீனாவும் முன்னிலை வகிப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. … Read more

12 ஆம் வகுப்பு தமிழ் முதல் தாள்; 50,674 பேர் ஆப்சென்ட்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கிய தமிழ் மொழித் தேர்வை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதவில்லை எனப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அதேபோல் இன்று பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2022 – 2023 கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்புத் தேர்வினை 8.5 லட்சம் மாணவர்களும், அதே போல 11 … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,812,238 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.98 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,812,238 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 681,605,045 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 654,580,089 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,311 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.