உரிய உரிமம் இல்லாமல் அரசு நிலத்தை தொடர்ந்து யாரும் பயன்படுத்த முடியாது: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: உரிய உரிமம் இல்லாமல் அரசு நிலத்தை தொடர்ந்து யாரும் பயன்படுத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பள்ளி அமைப்பதற்காக 1995-ல் நிலம் வழங்கிய ஒப்பந்தம் முடிந்த நிலையில் மீண்டும் நிலம் கோரி தனியார் அறக்கட்டளை மனு அளித்துள்ளது. ஒப்பந்தம் காலாவதியாகி 8 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் அதே நிலத்தை ஒதுக்க உரிமை கோர முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இந்தியாவை பிரிக்க மக்களை தூண்டி விடுகிறார் ராகுல் காந்தி: கிரண் ரிஜிஜூ குற்றச்சாட்டு

புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் கன்னியாகுமரியில் தொடங்கி ஜம்மு மற்றும் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தினார். கடந்த ஜனவரி இறுதியில் இந்த பாதயாத்திரை நிறைவடைந்தது. இந்நிலையில், ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் பேசி வருகிறார். அவர், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் பேசும்போது இந்திய ஜனநாயகம் மற்றும் நீதிமன்ற அமைப்பு தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றன என குற்றச்சாட்டாக கூறினார். இதன்பின்னர், … Read more

நாடாளுமன்றத்துக்கு பாடகி போல உடை, விக், அலங்காரத்துடன் வந்த எம்.பி, குவியும் பாராட்டு; காரணம் என்ன?

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல அமைப்புகளும் நிதி திரட்டுவதுண்டு. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வித்தியாசமான முறையில் அதற்காக நிதி திரட்டி இருக்கிறார். புற்றுநோய் சூசன் லே, ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், லிபரல் கட்சியின் துணைத் தலைவராகவும் இருக்கிறார். இவர் நாடாளுமன்றத்திற்கு, பாடகி டினா டர்னர் (Tina Turner) போல உடையணிந்து வந்தார். அமெரிக்காவில் பிறந்த சுவிஸ் பாடகியான டினா டர்னர், நடனம், நடிப்பு எனப் பன்முக திறமை கொண்டவர். இவரைப் போல உடையணிந்து, விக் வைத்து சூசன் … Read more

ஒன்றரை ஆண்டுகள்… காப்பாற்றுங்கள்: வெளிநாட்டில் சிக்கிய மகள் தொடர்பில் கனேடிய தந்தை கண்ணீர்

ஈரானில் மாயமாகியுள்ள தமது மகளை கண்டுபிடிக்க உதவுமாறு பிரிட்டிஷ் கொலம்பியாவில் வசிக்கும் தந்தை கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் ஈரானுக்கு சென்ற அவரது மகள் ஒன்றரை ஆண்டுகளாக நாடு திரும்பாத நிலையில், அவர் கைது செய்யப்பட்டு, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் என அவர் அச்சம் தெரிவித்துள்ளார். @Global News 35 வயதான Behnoush மற்றும் அவரது துணை Mathew Safari ஆகியோர் தெஹ்ரான் சென்ற நிலையில் மாயமாகியுள்ளனர். 2021 நவம்பர் மாதம் அந்த தம்பதி கனடாவில் … Read more

’கூகிள் பே’ மூலம் புதிய மோசடி! காவல்துறை எச்சரிக்கை…

சென்னை: மக்கள் அதிகம் உபயோகப்படுத்தும், ’கூகிள் பே’ மூலம் புதிய மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது. நவின டிஜிட்டல் உலகம் எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறதோ, அந்த அளவுக்கு டிஜிட்டல் மோசடிகளும் அரங்கேறி வருகின்றன.  அதுபோல டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளிலும் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக, பூக்கும் வியாபாரி உள்பட அனைத்து தரப்பினரும் இணையதள பண பரிவர்த்தனையேயே விரும்புகின்றனர். … Read more

'பயணிகள் துறை', 'புகார் தீர்வு உதவி எண்', 'பொது இணையதள வசதி' ஆகிய திட்டங்களை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்

சென்னை: ‘பயணிகள் துறை’, ‘புகார் தீர்வு உதவி எண்’, ‘பொது இணையதள வசதி’ ஆகிய திட்டங்களை சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். பள்ளன் இல்லத்தில் உள்ள மையத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் 1800 599 1500 என்ற இலவச எண் மூலம் பயணிகள் புகார்களை தெரிவிக்கலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒடிசா: சந்தை வளாகத்தில் பயங்கர தீ விபத்து – 12 மணி நேரமாக தொடரும் தீயணைப்பு பணி

புவனேஸ்வர், ஒடிசா மாநிலம் பூரி நகரில் அமைந்துள்ள சந்தை வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விற்பனையகங்கள் செயல்பட்டு வருகின்றன. மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியாக விளங்கும் இந்த சந்தை வளாகத்தில், நேற்று இரவு எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது மளமளவென பரவியதால், அருகில் இருந்த கட்டடங்களும் தீப்பற்றி எரியத்தொடங்கின. இதையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். 12 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் 160 தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை … Read more

எனர்ஜியோடு எக்ஸாம் எழுதலாமா! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் மாணவர்கள் தேர்வு எழுதும் நேரம் எந்நேரமும் புத்தகம் கையுமாக இருப்பார்கள் அவர்கள் சோர்வடையாமல் எப்பொழுதும் உற்சாகமாக இருக்க செய்ய வேண்டியது பெற்றோர்களின் கடமை. அவர்கள் கேட்பதை அரவணைப்போடு தட்டிக் கொடுத்து சாப்பிடச் சொல்லி படிக்க வைக்க வேண்டும் பெற்றோரின் அரவணைப்பு இருக்கும்போது அவர்கள் … Read more

தனக்கு தானே கல்லறை கட்டிய பிரபல தமிழ்ப்பட நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ்ப்பட நடிகை ரேகா தனக்கு தானே கல்லறை கட்டிய விடயம் மீண்டும் வைரலாகியுள்ளது. நடிகை ரேகா புன்னகை மன்னன், கடலோரக் கவிதைகள் படங்கள் மூலம் தமிழில் பிரபலமடைந்த நடிகை ரேகா. கதாநாயகியாக தமிழ், மலையாளப் படங்களிலும், குணச்சித்திர வேடத்தில் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். பிக் பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற ரேகா, சின்னத்திரை தொடரிலும் நடித்து வருகிறார். தனக்கு தானே கல்லறை தன் மீது அதீத அன்பு கொண்ட ரேகா, … Read more

திருவண்ணாமலை அருகே 10 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் காயம்

திருவண்ணாமலை: மலைப்பாம்பாடி கிராமம் அருகே 10 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர். சாலையில் குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க வலதுபக்கம் பேருந்தை இயக்கியபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.