உங்களுக்கு பி-12 குறைபாடா? இதனால் உடலில் ஏற்படும் பிரச்சினைகள் என்ன தெரியுமா

சிறியோர் முதல் பெரியோர் வரை உடலிலுள்ள அன்றாட செயற்பாடுகளுக்கு அவசியமான சில விட்டமின்கள் உள்ளன.அவை குறையுமிடத்து உடலின் அன்றாட செயற்பாடுகள் பாதிப்படைவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒரு சில உணவுகளின் மூலமே உடல் அவ்வாறான சத்துகளை உள்ளெடுத்துக்கொள்கிறது.    8 வகைப்படும் விட்டமின்கள் உள்ளன. அதில் பி-12 எனப்படுவதும் ஒன்றாகும். இது ‘சயனோகோபாலமின்’ என அழைக்கப்படும். இது இலகுவில் நீரில் கரையக்கூடியது.   வைட்டமின் பி 12 இன் போதுமான அளவை பராமரிப்பது மிகவும் முக்கியம். இல்லையென்றால், நீங்கள் வைட்டமின் … Read more

ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்திற்கு சிபிசிஐடி நோட்டீஸ்! தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு…

சென்னை: ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சிபிசிஐடி அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அதற்கு தடைகேட்டு நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏராளமானோர் பணத்தை இழந்து தற்கொலை முடிவை நாடுகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை 44 பேர் ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆன்லைன் ரம்மியால், பணத்தை இழந்ததால் தனியார் வங்கி ஊழியர் உயிரை மாய்த்துக்கொண்டார். அதுபோல, ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழப்பு ஏற்பட்டதால், சென்னை … Read more

முதலமைச்சர் பதவிக்காக இன்று கட்சியை தொடங்கிய பல கட்சிகள் காணாமல் போயின : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

கோவை : கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, தேமுதிக, அமமுக,  மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த 10,000 நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,’ தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அண்ணா கொண்டுவந்தார்; தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை சட்டமாக்கி அண்ணா நிறைவேற்றி தந்தார். ஆட்சிக்காக திமுகவை அண்ணா தொடங்கவில்லை; தமிழினத்துக்காகத் தொடங்கியதுதான் திமுக இயக்கம்; முதலமைச்சர் பதவிக்காக இன்று கட்சியைத் தொடங்கிய பல கட்சிகள் காணாமல் போயின’, என்றார்.

தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன்| Tejashwi Yadav Called For Questioning By CBI In Land-For-Jobs Case

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ரயில்வேத்துறையில் வேலைவாய்ப்பு வழங்க நிலங்களை லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, தேஜஸ்வியின் தந்தை லாலு பிரசாத் யாதவ், தாயார் ராப்ரி தேவியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தியிருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக மார்ச் 4 ல் நேரில் ஆஜராகும்படி தேஜஸ்விக்கு சி.பி.ஐ., அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். அன்றைய தினம் அவர் … Read more

சென்னை: சிறுமிக்கு பாலியல் தொல்லை – போக்சோவில் கைதான ஆட்டோ டிரைவர்

சென்னை அடையாறு காவல் மாவட்டத்தில் வசிக்கும் 12 வயது சிறுமி கடந்த 8-ம் தேதி நீலாங்கரைக்குச் சென்றிருந்தார். அங்கு CLRI நகர் பிரதான சாலையில் சிறுமி, தனியாக நடந்துச் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ டிரைவர், ஆட்டோவை நிறுத்தி சிறுமியிடம் பேசினார். சிறுமியை ஆட்டோவில் ஏறும்படி டிரைவர் கட்டாயப்படுத்தினார். அதற்கு சிறுமி மறுத்து தெரிவித்திருக்கிறார். உடனே ஆட்டோ டிரைவர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி சிறுமியை ஆட்டோவுக்கு வலுகட்டாயமாக ஏற்றினார், ஆனால் சிறுமி மறுப்பு … Read more

குழந்தைக்கு தாய்ப்பாலூட்டிய பெண்ணை நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றிய நீதிபதி! விமர்சனத்திற்கு கொடுத்த பதில்

அவுஸ்திரேலியாவில் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்த பெண்ணை நீதிபதி நீதிமன்ற அறையிலிருந்து வெளியேற்றிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. தாய்ப்பாலூட்டிய பெண் வெளியேற்றம் பாலூட்டும் தாயையும் அவரது குழந்தையையும் நீதிமன்ற அறையிலிருந்து வெளியேற்றியதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்ட அவுஸ்திரேலிய நீதிபதி தனது செயல்கள் ‘விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியமற்றவை’ விளக்கியுள்ளார். தகவல்களின்படி, மார்ச் 9, வியாழன் அன்று மெல்போர்ன் கவுண்டி நீதிமன்றத்தில் ஒரு பெண் தனது விசாரணையை கவனித்துக் கொண்டிருந்தபோது, தனது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிக்கொண்டிருந்தார், நீதிபதி அவரை நீதிமன்ற அறையை விட்டு … Read more

கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவரும் முனாள் எம்.பி.யுமான துருவநாராயணன் காலமானார்! ராகுல் உள்பட தலைவர்கள் இரங்கல்

மைசூரு: கர்நாடக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான, முன்னாள் எம்.பி.யும், காங்கிரஸ் செயல் தலைவருமான ஆர். துருவநாராயணன் மாரடைப்பால்  காலமானார். அவரது மறைவுக்கு  ராகுல்காந்தி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் உள்பட தேசிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் ஆர். துருவநாராயணனுக்கு, அவரது மைசூரு இல்லத்தில்  இன்று காலை 6.40 மணி அளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை   மைசூருவில் டிஆர்எம்எஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை … Read more

என்எல்சியால் கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்கு கீழ் சென்றுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி சாடல்!!

சென்னை : என்எல்சியால் கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்கு கீழ் சென்றுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 2025ம் ஆண்டுக்குள் என்எல்சி நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது என்றும் என்எல்சியை தனியாருக்கு விற்கும் நிலையில் எதற்காக 10,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்றும் அன்புமணி வினவியுள்ளார்.

டில்லியில் ஜப்பானிய பெண் மானபங்கம்: 3 பேர் கைது| Japanese Tourist, Who Was Harassed During Holi Celebrations, Leaves India

புதுடில்லி: தலைநகர் டில்லியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பானில் இருந்து சுற்றுலா வந்த பெண் ஒருவரை மானபங்கபடுத்திய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய டில்லியில் உள்ள பஹர்கன்ஜ் பகுதியில் தங்கியிருந்த அந்த பெண்ணை, ஹோலி கொண்டாட்டத்தின் போது, சிலர் வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்ததுடன், கலர்பொடிகளை தூவியும், தலையில் முட்டையை உடைத்தும் தாக்கினர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை … Read more

விபரீதமான விளையாட்டு; 10-ம் வகுப்பு மாணவன் மரணம் – சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்ட 3 மாணவர்கள்!

திருச்சி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இருக்கிறது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் தோளூர்பட்டியைச் சேர்ந்த மகேஷ் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்ற மாணவர் 10-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். தேர்வு நெருங்குவதையொட்டி நேற்று மதியம் பள்ளி வளாகத்தில் மாணவ மாணவியர்கள் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். அப்போது மாணவர்கள் சிலர் ஒருவர் மேல் ஒருவர் சிறு, சிறு கற்களை தூக்கிப்போட்டு விளையாடிக்கொண்டு இருந்திருக்கின்றனர். இதில் மகேஷுக்கும் … Read more