மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக முதியவர் அடித்துக்கொலை – அதிர்ச்சி சம்பவம்

பாட்னா, பீகார் மாநிலம் சிவான் மாவட்டம் ஹசன்புர் கிராமத்தை சேர்ந்த 55 வயது முதியவர் நசீம் குரேஷி. இவர் கடந்த செவ்வாய்கிழமை தனது உறவுக்கார இளைஞர் பேரோஷ் குரேஷி என்பவருடன் அருகில் உள்ள ஜோகியா கிராமத்திற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, ஜோகியா கிராமத்தில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் அருகே நசீம், போரோஷ் ஆகியோரை ஒரு கும்பல் இடைமறித்தது. மேலும், மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக சந்தேகமடைந்து இருவரிடமும் அந்த கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தாங்கள் … Read more

ஆப்பிரிக்காவில் மனித உடல்களைப் புதைப்பது இல்லை; காட்டில் போட்டுவிடுகிறார்கள்; ஏன் தெரியுமா?

சென்ற பகுதியில் மசாய் மாராவில் சிறுத்தையையும், நெருப்புக்கோழி கோழியையும் பார்த்துவிட்டு மாடுகளுடன் பயணித்த நாம் இப்போது மீண்டும் அக்டோபர் மாத இறுதியில் தன்சானியாவுக்குள் வருகிறோம். செரங்கெட்டி தேசிய பூங்காவின் தெற்குப்பகுதி, சற்று வறண்டு காணப்படும். இந்தப் பகுதியில் நவம்பர், டிசம்பரில் ஒரு குறுகிய மழைக்காலம் உண்டு. இந்த மழைக் காலத்தில் பெய்யும் மழை இந்தப் பகுதியை பசுமை ஆக்குகிறது. எங்கு பார்த்தாலும் உயரம் குறைவான புற்கள் கொண்ட பரந்த புல்வெளியை உருவாக்குகிறது இந்த மழை. விலங்குகளின் ஊர்வலத்தில் … Read more

திருமணமான மறுநாளே மனைவியை போக்குவரத்து நெரிசலில் விட்டுவிட்டு ஓடிய கணவன்! அம்பலமான அதிர்ச்சி உண்மை

இந்திய மாநிலம் கர்நாடகாவில் திருமணமான அடுத்த நாளே, தனது மனைவியை போக்குரவத்து நெரிசலின்போது காரிலேயே விட்டுவிட்டு கணவன் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரிலேயே மனைவியை விட்டு சென்ற கணவன் கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூரைச் சேர்ந்தவர் விஜய் ஜார்ஜ். இவருக்கும் பெண்ணொருவருக்கும் கடந்த மாதம் 15ஆம் திகதி திருமணம் நடந்துள்ளது.    அதற்கு மறுநாள் விஜய் ஜார்ஜ் தனது மனைவியை அழைத்துக்கொண்டு தேவாலயத்திற்கு காரில் சென்றுள்ளார். அவர்கள் சென்ற கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. அப்போது மணமகன் … Read more

ரம்ஜானை ஒட்டி, பள்ளி வாசல்களுக்கு 6,500 மெட்ரிக் டன் அரிசி! தமிழகஅரசு

சென்னை: ரம்ஜான் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சி காய்க்க,6,500 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. 2023ம் ஆண்டு ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு 6,500 மெட்ரிக் டன் அரிசி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், , “நோன்பு நோற்கும் … Read more

ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து இருவர் தற்கொலை: சிபிசிஐடி அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து 2 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சிபிசிஐடி அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. கேம்ஸ் 24*7 என்ற நிறுவனத்துக்கு சிபிசிஐடி அனுப்பிய நோட்டீஸை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை பெருங்குடியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த மணிகண்டன் என்பவர் மனைவி, மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அண்ணாநகரைச் சேர்ந்த ரகுவரன் என்பவரும் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை … Read more

இந்தியர்கள் பாதுகாப்புக்கு ஆஸி., பிரதமர் உறுதி: மோடி தகவல்| PM Modi raises temple attacks issue with Anthony Albanese, says Aussie PM assures safety of Indian community

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பேன்ஸ் உறுதியளித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்போன்ஸ் நேற்று ஆமதாபாத்தில் துவங்கிய இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியை , பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பார்வையிட்டார். இன்று டில்லி வந்த அவருக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பிறகு … Read more

கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

சிக்கமகளூரு- கல்லூரி மாணவி தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா தாலுகா மாயகொண்டா அருகே பாசபுரா கிராமத்தை சேர்ந்தவர் ஹர்ஷிதா (வயது 18). இவர் ஹரிஹராவில் உள்ள அரசு கல்லூரியில், விடுதியில் தங்கி பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருடன் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள், ஹர்ஷிதாவை வெளியே செல்லலாம் என அழைத்துள்ளனர். ஆனால் அவர்களுடன் செல்ல மறுத்த ஹர்ஷிதா, தனக்கு வரும்போது பானிபூரி வாங்கி வரும்படி கூறி உள்ளார். இதையடுத்து … Read more

அந்த இருவர் யாரென்று சொல்லுங்க பார்ப்போம்! – 60ஸ் பக்கங்கள் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் புற நகர்ப் பகுதியின் அந்த வீட்டின் முன்னால், அந்த வி.வி.ஐ.பி.,யின் கார் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கிய அவரை, பாதுகாப்புப் பணி அதிகாரி ஓடி வந்து வணங்கி விட்டு, ’இங்கு வருவதாக ஷெட்யூலில் இல்லையே!’ என்று திகைப்புடன் முணங்க, ’பரவாயில்லை.. அதனாலென்ன? நான் … Read more

சென்னை மாவட்டத்தில் நாளை 6 முதல் 10ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும்

சென்னை:  சென்னையில், நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  ஆண்டு இறுதி பொதுத்தேர்வை முன்னிட்டு  6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு திங்கட்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து,  சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை (11ந்தேதி)  சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 10 ஆம் … Read more

சென்னை அடுத்த வானகரத்தில் கல்லூரி முடிந்து திரும்பியபோது நிகழ்ந்த சாலை விபத்தில் மாணவன், மாணவி கால் துண்டிப்பு..!!

சென்னை: சென்னை அடுத்த வானகரத்தில் கல்லூரி முடிந்து திரும்பியபோது நிகழ்ந்த சாலை விபத்தில் மாணவன், மாணவி கால் துண்டிக்கப்பட்டது. ஜாகீர் கான், அவரது தோழி ஆஸ்லின் சென்ற இருசக்கர வாகனம் மீது பேருந்து உரசியதில் கீழே விழுந்துள்ளனர். பின்னால் வந்த கனரக வாகனம் ஏறியதில் மாணவர்களின் கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.