நூதன முறையில் தங்கத்தை கடத்த முயன்ற விமானப் பணியாளர் கைது!

 கொச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானப் பணியாளர் ஒருவர் தங்கம் கடத்தியதாகக் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டதாகச் சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்க கடத்தல் கேரள மாநிலத்தின் வயநாட்டைச் சேர்ந்த ஷாபி என்பவர் ஏர் இந்தியா விமான நிலையத்தில் பணி புரிந்து வருகிறார். இவர் 1487 கிராம் தங்கத்தைக் கடத்தியதற்காகக் கொச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பஹ்ரைன்-கோழிக்கோடு-கொச்சி சர்வீஸ் கேபின் க்ரூ உறுப்பினர் ஷாஃபி என்பவர் தங்கம் கொண்டு வருவதாகச் சுங்கத் தடுப்பு … Read more

தமிழ்நாட்டில் இயக்கப்பட உள்ள கோடைகால சிறப்பு ரயில்கள் விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் கோடை காலத்தின் பயணிகளின் தேவையைக்கருதி,  சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதனால் கூடுதலாக பயணிகள் பயணிக்க முடியும் என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ரயில் எண் 06004 திருநெல்வேலி- தாம்பரம் , இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து  இரவு 7.30-க்கு புறப்படும். அடுத்த நாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.  இந்த ரயில் 2,9,16,23,30 ஏப்ரல் மாதத்தில், 7, 14, 21, … Read more

100 நாள் வேலைத் திட்ட மோசடி தொடர்பான புகாரில் சிவகங்கை ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு!

சிவகங்கை: 100 நாள் வேலைத் திட்ட மோசடி தொடர்பான புகாரில் சிவகங்கை ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். கண்டதேவி ஊராட்சித் தலைவர், உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுருந்தது. கூட்டுறவு வங்கி ஊழியர்கள், வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் பெயரில் பதிவு செய்து ஊராட்சி நிதியில் மோசடி என புகார் தெரிவிக்கப்பட்டது.

என் வீட்டில் வைத்து அமலாக்க துறை விசாரிக்க எனக்கு அடிப்படை உரிமை உள்ளது: எம்.எல்.சி. கவிதா பேட்டி

ஐதராபாத், டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவின் பெயர் அடிபட்ட நிலையில், கடந்த பிப்ரவரி 26-ந்தேதி சி.பி.ஐ. அலுவலகத்தில் 8 மணி நேரம் அவரிடம் நேரடி விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில், சிசோடியாவை இரவில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டு முதலில் 4-ந்தேதி வரை அனுமதி அளித்தும், பின்னர் 2-வது முறையாக 6-ந்தேதி … Read more

How to: சருமப் பராமரிப்புக்கு க்ரீன் டீ பயன்படுத்துவது எப்படி? | How To Use Green Tea For Skin Care?

உடல் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருப்பவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவுப் பொருள்களில் பெரும்பாலும் க்ரீன் டீ இடம் பிடித்திருக்கும். அதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், சுறுசுறுப்பாக இயங்க வைக்கவும் என, பலவிதங்களில் உதவும். உடலுக்கு உள்ளே செய்யும் நன்மைகளுடன், வெளிப்புற சருமத்திற்கும் க்ரீன் டீ இலைகள் நல்ல பலனை தர கூடியது. இதனை சரியான முறையில் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குதல், சருமத்தில் பளபளப்பை கொண்டு வருதல், … Read more

அவசரப்படவேண்டாம்… எரிவாயுக் குழாய் சேதம் தொடர்பில் எச்சரிக்கும் ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர்

ஜேர்மனியையும் ரஷ்யாவையும் இணைக்கும் எரிவாயுக்குழாய் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரவேண்டாம் என எச்சரித்துள்ளார் ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர். அமெரிக்க தரப்பிலிருந்து வெளியான தகவலால் பரபரப்பு New York Times பத்திரிகை, ஜேர்மனிக்கு ரஷ்யா எரிவாயு வழங்கிவந்த Nord Stream எரிவாயுக் குழாய் சேதப்படுத்தப்பட்டதன் பின்னணியில் புடினுடைய எதிரிகள் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது. அது வேண்டுமென்றே செய்யபட்ட ஒரு சதிச்செயல் என்று கூறப்பட்ட நிலையில், உக்ரைன் ஆதரவு அமைப்பு ஒன்று Nord … Read more

மார்ச் 11-ந் தேதி கடலூர் மாவட்டத்தில் முழுஅடைப்பு! அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு…

நெய்வேலி: என்எல்சிக்கு எதிராக, கடலூர் மாவட்டத்தில் வரும் 11-ந் தேதி முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்து உள்ளார். கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது இரண்டாவது பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக நிலத்தை கையகப்படுத்த முயன்று வரும் சூழ்நிலையில், சேத்தியாதோப்பு அடுத்த மேல் வலைமாதேவி, கீழ் வளையமாதேவி, கரிவேட்டி, கத்தாழை உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்த முயன்று வருகிறது. இந்த நிலையில் … Read more

உரிய உரிமம் இல்லாமல் அரசு நிலத்தை தொடர்ந்து யாரும் பயன்படுத்த முடியாது: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: உரிய உரிமம் இல்லாமல் அரசு நிலத்தை தொடர்ந்து யாரும் பயன்படுத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பள்ளி அமைப்பதற்காக 1995-ல் நிலம் வழங்கிய ஒப்பந்தம் முடிந்த நிலையில் மீண்டும் நிலம் கோரி தனியார் அறக்கட்டளை மனு அளித்துள்ளது. ஒப்பந்தம் காலாவதியாகி 8 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் அதே நிலத்தை ஒதுக்க உரிமை கோர முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இந்தியாவை பிரிக்க மக்களை தூண்டி விடுகிறார் ராகுல் காந்தி: கிரண் ரிஜிஜூ குற்றச்சாட்டு

புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் கன்னியாகுமரியில் தொடங்கி ஜம்மு மற்றும் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தினார். கடந்த ஜனவரி இறுதியில் இந்த பாதயாத்திரை நிறைவடைந்தது. இந்நிலையில், ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் பேசி வருகிறார். அவர், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் பேசும்போது இந்திய ஜனநாயகம் மற்றும் நீதிமன்ற அமைப்பு தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றன என குற்றச்சாட்டாக கூறினார். இதன்பின்னர், … Read more

நாடாளுமன்றத்துக்கு பாடகி போல உடை, விக், அலங்காரத்துடன் வந்த எம்.பி, குவியும் பாராட்டு; காரணம் என்ன?

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல அமைப்புகளும் நிதி திரட்டுவதுண்டு. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வித்தியாசமான முறையில் அதற்காக நிதி திரட்டி இருக்கிறார். புற்றுநோய் சூசன் லே, ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், லிபரல் கட்சியின் துணைத் தலைவராகவும் இருக்கிறார். இவர் நாடாளுமன்றத்திற்கு, பாடகி டினா டர்னர் (Tina Turner) போல உடையணிந்து வந்தார். அமெரிக்காவில் பிறந்த சுவிஸ் பாடகியான டினா டர்னர், நடனம், நடிப்பு எனப் பன்முக திறமை கொண்டவர். இவரைப் போல உடையணிந்து, விக் வைத்து சூசன் … Read more