புறா எச்சத்தால் நிமோனியா அதிகரிப்பு… பறவைகளுக்கு உணவளித்தால் அபராதம் என எச்சரிக்கை!

நுரையீரலை பாதிக்கும் ஹைப்பர்சென்சிட்டிவ் நிமோனியா தொற்று அதிகரித்து வருவதால், மகாராஷ்டிராவின் தானேயில் உள்ள மாநகராட்சி அதிகாரிகள், புறாக்களுக்கு உணவளிக்க வேண்டாமென பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மகாராஷ்டிராவில் மும்பை மற்றும் புனே நகரங்களில், ஹைப்பர்சென்சிட்டிவ் நிமோனியா என்ற நுரையீரல் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. இது, புறாக்களுடன் தொடர்பில் இருப்பதால் ஏற்படுகிறது. முன்பே இருக்கும் நாள்பட்ட நோய், உடல் உபாதைகள் உள்ளவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 60- 65 சதவிகிதம் அதிகம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நுரையீரல் இந்த … Read more

உலகளவில் 68.09 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.09 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.09 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.07 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.39 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகரில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் மார்ச் 31-ம் தேதி முதல் உயர்கிறது

சென்னை: சென்னை புறநகரில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் மார்ச் 31-ம் தேதி முதல் உயர்கிறது. சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கோவை, மதுரை செல்லும் வழிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. சென்னை புறநகரில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவக்க உள்ளது. இது பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் கூட்டம் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் மார்ச் மாதம் முழுவதும் நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது தொடர்பாக கூட்டத்தொடர் தொடங்கியதும் அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும். இந்த கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்து, மின்துறை தனியார் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

பாஜக சந்தர்ப்பவாத அரசியல் நடத்தினால் மக்களவை தேர்தலில் பதில் கிடைக்கும்: புதுச்சேரி அதிமுக எச்சரிக்கை

புதுச்சேரி: பாஜக சந்தர்ப்பவாத அரசியல் நடத்தினால் மக்களவை தேர்தலில் பதில் கிடைக்கும் என புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்ணாமலையின் சர்வாதிகார போக்கை சகிக்க முடியாமல் பாஜகவினர் விலகுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“திமுக ஆட்சிக்கு எதிராக சதி; முதல்வர் சொன்னது உண்மைதான்” – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காட்டம்

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், மகளிர் தினம் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இதில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு பெரிய அளவில் வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய வெற்றிக்காக பாடுபட்ட அமைச்சர்கள், நிர்வாகிகள், காங்கிரஸ் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றியை … Read more

நீலகிரி அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை

நீலகிரி: நீலகிரி அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு கண்ணதாசன் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அடுத்த சில நாட்களில் வெப்பம் அதிகரிக்கும்| Temperatures will increase over the next few days

புதுடில்லி:புதுடில்லி மற்றும் வட மாநிலங்களில் கடந்த நவம்பர் மாதம் துவங்கிய பனிப்பொழிவு, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் அதிகமாக இருந்தது. கடந்த மாதம் முதல் புதுடில்லி, பஞ்சாப், ஹரியானா, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் கோடை காலம் துவங்கியுள்ளது. இருப்பினும், ராஜஸ்தான் மற்றும் ம.பி., மாநிலங்களின் ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், புதுடில்லியில் குளிர்ந்த சூழல் நிலவுகிறது. இதனால், இங்கு வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இருப்பினும், அடுத்த மூன்று வாரங்களில், … Read more