இங்கிலாந்தில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

லண்டன்; இங்கிலாந்தில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அவ்வாறு வருபவர்கள், சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருவதாக இங்கிலாந்து பிரதமர் தெரிவித்தார். இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாக சட்ட விரோத குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இருந்தும் ஏராளமானோர் அதிகரித்து வருகின்றனர். மேலும், சிறிய படகுகளில் சட்டவிரோதமாக கடக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை இங்கிலாந்தில் கணிசமான அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உளளது. சிறிய படகுக;ள மூலம் ஆங்கில கால்வாயைக் கடந்து இங்கிலாந்து கரைகளில் இறங்கும் இந்தியர்களின் … Read more

சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் 6 வாரத்தில் ரூ.5,09,16,000 அபராதம் வசூல்: போக்குவரத்து காவல்துறை தகவல்

சென்னை: சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் 6 வாரத்தில் ரூ.5,09,16,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 6 வாரங்களில் 4,922 வழக்குகள் தீர்க்கப்பட்டு 5 கோடி ரூபாய்க்கு மேல் போக்குவரத்து காவல்துறை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல் வழக்குகளை முடிக்க சென்னை பெருநகரில் 10 இடங்களில் அழைப்பு மையங்கள் உள்ளது.

நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் எழுப்பினாலே மைக் அணைக்கப்படுகிறது; கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு, கடந்த ஜனவரி 29-ந்தேதி தொடங்கி நடந்தது. பிப்ரவரி 1-ந்தேதி, மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசினார். இதன்பின்னர், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. இதனையடுத்து, பிப்ரவரி 11-ந்தேதியுடன் முதல் அமர்வு கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. இதன்படி, இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கின. ஏப்ரல் 6-ந்தேதி வரை … Read more

பிரிட்டன் அரசை விமர்சித்த தொகுப்பாளர் பணியிடை நீக்கம்| மொசாம்பிக்கில் சூறாவளி – உலகச் செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசு நிறுவனங்களுக்கு எதிராகப் பரப்புரை செய்த வழக்கில் முன்னால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பெயில் இல்லாத கைது வாரண்ட்டை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இன்ரான்கானின் கட்சி தெஹ்ரீக்-இ-இன்சாப் அவரின் கைது நடவடிக்கைக்கு எதிராக மனுத்தாக்கல் செய்ததில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. சிலிகான் வேலி வங்கி திவாலானதையடுத்து, கலிபோர்னியா ஆளுநரான கேவின் நியூசாம் (Gavin Newsom) -யிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடர்பு கொண்டு பேசினார். … Read more

வீட்டுச் சுவர்களில் வழிந்த திரவம்… பிரித்தானிய தம்பதியருக்கு காத்திருந்த ஆச்சரியம்

இங்கிலாந்திலுள்ள கென்டில் வாழும் ஒரு தம்பதி, தங்கள் வீட்டின் படுக்கையறையில் கருப்பாக ஒரு திரவம் வழிவதைக் கவனித்துள்ளார்கள். காத்திருந்த ஆச்சரியம் Kate மற்றும் Andrew Dempseyஎன்னும் அந்த தம்பதியர், வாசனை வீசும் அந்த திரவம் என்ன என கண்டுபிடிப்பதற்காக அவர்கள் வீட்டுக்குள் தளத்தில் பதிக்கப்பட்டிருந்த பலகைகளை அகற்றினால், அங்கே இராட்சத தேன் கூடுகள் இருப்பதைக் கண்டு வியப்பிலாழ்ந்துள்ளார்கள். அவற்றை அகற்ற, பணியாளர்களைத் தேடினால், அவர்கள் 10,000 பவுண்டுகள் கேட்டிருக்கிறார்கள். ஆகவே, நண்பர்கள் உதவியுடன் தாங்களே தேன்கூட்டை அகற்றும் … Read more

சென்னை தி.நகர் பத்மாவதி தாயார் கோயிலுக்கு 17ம் தேதி குடமுழுக்கு விழா! சேகர்ரெட்டி தகவல்

சென்னை: சென்னை, தி.நகரில்  புதியதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோயிலின், குடமுழுக்கு விழா வரும் 17ம் தேதி நடைபெறும் என சேசகர் ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோயிலின் குடமுழுக்கு விழா வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த திருப்பதி திருமலை தேவஸ்தான தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கான ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி , பத்மாவதி கோவில் கட்டுமான … Read more

தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார். பிரதான சாலைகளில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

"ரேஷன் அட்டைதாரர்களுக்கு கேஸ் மானியம் ரூ.300" – புதுச்சேரி முதல்-மந்திரி அதிரடி அறிவிப்பு

புதுவை, புதுவை சட்டசபையில் முதல்-மந்திரி ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:- * அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாட திட்டம். * பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய சிற்றுண்டியும், சென்டாக் மூலம் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. * பெருந்தலைவர் காமராஜர் நிதியுதவி திட்டத்தின்கீழ் மருத்துவம், என்ஜினீயரிங், செவிலியர் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்க ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. … Read more