பள்ளிப்புரம் மலையாள மகாலட்சுமி திருக்கோவில்

மலையாள மகாலட்சுமி கோயில் கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் இருக்கும் பள்ளிபுரம் என்கிற ஊரில் அமைந்துள்ளது. பணம் மகாலட்சுமியின் அம்சம் என்று கூறுவார்கள். அதே போன்று பெண்ணும் மகாலட்சுமி தன்மை நிறைந்தவள். எனவே பெண்கள் எங்கு சிறப்பாக வாழ்கிறார்களோ அங்கே லட்சுமி தேவி வாசம் செய்கிறாள். தன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க அவர்களின் இருக்கும் இடத்திற்கே செல்கிறாள். அப்படி தன்னை வழிடும் மக்களுக்காக வந்திறங்கிய பள்ளிபுரம் அருள்மிகு மலையாள மகாலட்சுமி கோயில் சிறப்புகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். … Read more

மார்ச்-14: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

கனடாவில் அதிவேகமாக லொறி மோதிய கோர விபத்து! உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதசாரிகள்..ட்ரூடோவின் பதிவு

கனடாவின் ஆம்கியூவில் லொறி ஒன்று ஏற்படுத்திய விபத்தில் பாதசாரிகள் பலர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாலை விபத்து கியூபெக் மாகாணத்தில் உள்ள ஆம்கியூ நகரில், பிற்பகல் மூன்று மணியளவில் அதிவேகமாக வந்த லொறி ஒன்று பாதசாரிகள் மீது பலமாக மோதியது. இதில் பலர் படுகாயமடைந்ததாகவும், அவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் ஆறு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. @CBC லொறியை இயக்கிய சாரதியை கைது செய்த … Read more

ஒரே பாலின திருமண வழக்கு 5 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்| Same-sex marriage case shifted to 5-judge bench

புதுடில்லிஒரே பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீ காரம் கோரும் வழக்குகளை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு, உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. ஒரே பாலினத்தினர் உறவு கொள்வதை குற்றமாக பார்க்கும் சட்டப் பிரிவை நீக்கி, உச்ச நீதிமன்றம் ௨௦௧௮ல் உத்தரவு பிறப்பித்தது. பிரச்னை இந்நிலையில், ஒரே பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கேட்டு, பல வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. பல உயர் நீதிமன்றங்களில் இருந்த இந்த வழக்கு களை தனக்கு மாற்றச் செய்து, உச்ச … Read more

நாயை காப்பாற்ற கடலில் குதித்து ஹீரோவான காவலர்! வைரலாகும் வீடியோ

அமெரிக்காவில் உயிர்காப்பாளர் கடலில் விழுந்த ஒரு சிறிய நாயைக் காப்பாற்றிய பின்னர் ஹீரோவாக கொண்டாடப்படுகிறார். வைரலான வீடியோ தெற்கு கலிபோர்னியாவில் Long Beach தீயணைப்புத் துறையால் வீடியோ வெளியிடப்பட்டது. அதில் கடல் தண்ணீரில் மூழ்க இருந்த நாய் ஒன்றை காவலர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். Long Beach Lifeguards குழுவைச் சேர்ந்த காவலர் ஒருவர், விரைந்து செயல்பட்டு குறித்த நாயை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். இதுதொடர்பான வீடியோவை Long Beach Lifeguards குழு வெளியிட்டது. இந்த … Read more

59 பேருக்கு எச்3என்2 காய்ச்சல் ஒடிசாவில் வேகமாக பரவுகிறது| 59 people H3N2 fever is spreading rapidly in Odisha

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புவனேஸ்வர் : ஒடிசாவில், 59 பேருக்கு ‘எச்3என்2 இன்ப்ளூயன்ஸா’ தொற்று கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, மாநில அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. ‘இன்ப்ளூயன்ஸா ஏ’ வைரசின் உட்பிரிவுகளான எச்1என்1 மற்றும் எச்3என்2 வகை வைரஸ் காய்ச்சல் நாடு முழுதும் பரவி வருகிறது. பிரச்னை இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், சளி, உடல்வலி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும் என கூறப்படுகிறது. டிசம்பரில் துவங்கி மார்ச் மாதம் வரை இந்த … Read more

28 ஆண்டுகளாக தேங்காயை மட்டுமே உண்டு வாழும் மனிதன்!

கேரளாவில் 28 ஆண்டுகளாக ஒருவர் தேங்காயை மட்டுமே உணவாக உட்கொண்டுவருகிறார் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? 28 வருடங்கள் ஒரே உணவு ஒரு சில நாட்களுக்கு ஒரே உணவை மீண்டும் மீண்டும் சாப்பிடுவது சலிப்பை ஏற்படுத்தும். ஆனால் 28 வருடங்கள் ஒரே உணவை சாப்பிடுவதை கற்பனை செய்து பாருங்கள். இது கிட்டத்தட்ட சாத்தியமற்றது போல் தெரிகிறது. ஆனால், இந்தியர் ஒருவர் தனது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய்க்கு (GERD) சிகிச்சை அளிக்க கடந்த 28 ஆண்டுகளாக தேங்காயைத் தவிர … Read more

செஞ்சிலுவை சங்க ஊழல் முறைகேடு: தமிழகத்தில் சி.பி.ஐ., விசாரணை தீவிரம்| Red Cross corruption scandal in Tamil Nadu CBI, investigation intensified

புதுடில்லி, :தமிழகம், கேரளா உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தில் உள்ள செஞ்சிலுவை சங்க கிளைகளில் நடந்த முறைகேடு புகார்கள் மீதான சி.பி.ஐ., விசாரணை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள செஞ்சிலுவை சங்க கிளையின் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் மீது ஊழல் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், கடந்த 2020ல் ஊழல் தடுப்புச் சட்டத்தின் படி, சி.பி.ஐ., விசாரணை நடத்த மத்திய அரசு … Read more