சுப்மன் கில் சதம்: இந்திய அணி ரன்கள் குவிப்பு| India calm game: Subman century

ஆமதாபாத்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் சுப்மன் கில் சதமடித்து அசத்தினார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மூன்று போட்டிகள் முடிவில், இந்தியா 2-1 என தொடரில் முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடக்கிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 480 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா முதல் இன்னிங்சில் … Read more

இன்போசிஸ் தலைவர் மோகித் ஜோஷி ராஜினாமா

புதுடெல்லி, இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் மோகித் ஜோஷி, டெக் மஹிந்திரா நிறுவனத்தில் இணைய உள்ளதாகவும் இதற்காக அவர் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாகவும் இரண்டு நிறுவனங்களும் பங்குச்சந்தையில் தெரிரவித்துள்ளன. கடந்த 2000-ம் ஆண்டு முதல் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் மோகித் ஜோஷி, டெக் மஹிந்திராவின் நிர்வாக இயக்குனராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை பங்குச் சந்தைக்கு இன்போசிஸ் அளித்துள்ள அறிக்கையில், மோகித் ஜோஷி மார்ச் 11 முதல் விடுப்பில் இருப்பார் என்றும், நிறுவனத்தில் … Read more

60 வயதில் நடிகையுடன் நான்காவது திருமணம் செய்த பிரபல நடிகர்! ஆசீர்வாதங்கள் வேண்டி வெளியிட்ட வீடியோ

தெலுங்கு நடிகர் நரேஷ் காதலித்து வந்த நடிகை பவித்ராவை பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டார். மூன்று முறை விவாகரத்து பிரபல தெலுங்கு நடிகரான நரேஷ் மூன்று முறை திருமணம் செய்து விவகாரத்தானவர். 60 வயதாகும் இவரும், நடிகை பவித்ராவும் (44) காதலித்து வந்தனர். பவித்ராவும் திருமணமாகி விவாகரத்தானவர். சமீபத்தில் ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது நரேஷின் முன்னாள் மனைவி, காலணியால் பவித்ராவை அடிக்க பாய்ந்த சம்பவம் பரபரப்பானது. Seeking your blessings for a life time of … Read more

6 பூச்சிக்கொல்லிகளுக்கு நிரந்தர தடை

சென்னை: அபாயகரமான 6 பூச்சிக்கொல்லிகளுக்கு மருந்துகளுக்கு நிரந்தர தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளயிட்டுள்ளது. தற்கொலைக்கான வாய்ப்பை குறைக்கும் வகையில் அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. மோனோகுரோட்டோபாஸ் , அசிபெட் உள்ளிட்ட 6 பூச்சி கொல்லிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 30ம் தேதி வரை நீட்டிப்பு!!

டெல்லி : ஒன்றிய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 30ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான கியூட் நுழைவுத் தேர்வு மே மாதம் 21 முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஆஸி.,யில் ஹிந்து கோவில்கள் மீதான தாக்குதலுக்கு இடம் இல்லை: பிரதமர் அல்பானிஸ் உறுதி| Attacks on Hindu temples have ‘no place in Australia’: PM Albanese

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஆஸ்திரேலியாவில் எந்தவித பிரிவினைவாத செயல்கள் மற்றும் நடவடிக்கைகளை பொறுத்து கொள்ள முடியாது எனக்கூறியுள்ள அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸ், ஹிந்து கோவில்கள் மீதான தாக்குதலை அனுமதிக்க முடியாது எனக்கூறியுள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, அல்பானிஸ் கூறுகையில், மக்களின் நம்பிக்கையை மதிக்கும் நாடாக ஆஸ்திரேலியா இருக்கும் என மோடியிடம் உறுதி அளித்துள்ளேன். பிரிவினைவாத நடவடிக்கைகளை நாங்கள் பொறுத்து … Read more

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனத்துறை பெண் அதிகாரி கைது

குடகு- ரூ.50 ஆயிரம் லஞ்சம் குடகு மாவட்டம் மடிகேரியில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் பூர்ணிமா. இந்த நிலையில் பூர்ணிமா, வோடேகாடு பகுதியில் வனக்காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டதாக ஆவணத்தை உருவாக்கி, அந்த வனக்காவலருக்கு வழங்கப்படும் மாதச்சம்பளம் ரூ.15 ஆயிரத்தை தனக்கு கொடுக்கும்படி தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரியிடம் கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த அதிகாரியை பூர்ணிமா அவதூறாக திட்டியும், பொய் வழக்கு போட்டு பணி இடைநீக்கம் செய்வதாகவும் மிரட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் சமீபத்தில் மடிகேரி … Read more

300 -க்கும் மேற்பட்ட இயற்கை உணவுகள்… களைகட்டிய உணவுத்திருவிழா..!

பாரம்பரிய உணவு வகைகளை பரவலாக்கும் நோக்கத்தோடும், இயற்கை உணவு பற்றிய விழிப்புணர்வை மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாகவும் திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில் இயற்கை உணவு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு உழவர் நலத்துறை சார்பாக இயற்கை உணவுத் திருவிழாவானது அண்மையில் நடைபெற்றது. உணவுத்திருவிழா இந்தியாவின் சிறந்த பசுமை அலுவலக விருதை பெற்ற V-Guard நிறுவனம்; என்ன சிறப்பு தெரியுமா? இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிருந்தும்  இயற்கை விவசாயிகள், … Read more

சுவிஸ் வரலாற்றில் முதன்முறையாக சிறைக்கைதி ஒருவர் கருணைக்கொலை…

சுவிஸ் வரலாற்றில் முதன்முறையாக கைதி ஒருவர் கருணைக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. கைதிக்கு கருணக்கொலைக்கு அனுமதி சுவிட்சர்லாந்தின் Zug மாகாணத்தில், மருத்துவர்கள் உதவியுடன் சிறைக்கைதி ஒருவர் தன் வாழ்வை முடித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில், பெல்ஜியம் நாட்டிலுள்ள Nivelles என்னுமிடத்தில் தன் ஐந்து பிள்ளைகளையும் கொலை செய்த Genevieve Lhermitte (56) என்னும் பெண், மருத்துவர்கள் உதவியுடன் கருணைக்கொலை செய்யப்பட அனுமதி வழங்கப்பட்ட விடயம் நினைவிருக்கலாம். தற்போது, சுவிட்சர்லாந்தில் முதன்முறையாக Bostadel சிறையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், … Read more