அகோரி பூஜைக்காக மாதவிடாய் வெளியேற்றத்தை சேகரித்த கணவர், மாமியார் மீது பெண் புகார்!

புனேவில் அகோரி பூஜைக்காக மாதவிடாய் ரத்தம் எடுத்ததாக கணவர் மற்றும் மாமனார்-மாமியார் மீது பெண் புகார் அளித்துள்ளார். கணவர் மற்றும் மாமியார் மீது செவ்வாய்க்கிழமை புகார் ‘அகோரி பூஜை’ செய்வதற்காக மாதவிடாய் இரத்தத்தை சேகரித்து துன்புறுத்தியதாக 27 வயதான பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மாமியார் மீது செவ்வாய்க்கிழமை புகார் அளித்ததை அடுத்து, புனேவில் ஒரு கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் மகாராஷ்டிராவின் பீட் (Beed) மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று விஷ்ராந்த்வாடி காவல் … Read more

நேபாளத்தின் புதிய அதிபராக நேபாள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராம் சந்திரா பவுடல் தேர்வு!

காத்மாண்டு: நேபாள நாட்டின்  புதிய அதிபராக நேபாள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராம் சந்திர பவுடல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நேபாள நாட்டில் தேர்வு முறையானது, இந்தியாவைப் போது, சட்டமன்ற (மாகாண சபை) உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பனிர்களும் வாக்களித்து தேர்வு செயப்படுகின்றனர். தற்போதைய  அதிபர் பித்யாதேவி பண்டாரியின் பதவிக்காலம் வரும் 12-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தேர்தலில் நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த … Read more

மகளிர் பிரிமியர் லீக்: யு.பி.வாரியர்ஸ் அணிக்கு 139 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு அணி

மும்பை: மும்பையில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், யு.பி.வாரியர்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி 19.3 ஓவர்களில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யு.பி வாரியர்ஸ் அணி விளையாடி வருகிறது.

"பி.எஸ்.எஃப்-ல் முன்னாள் அக்னி வீரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு!" – மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

இந்தியாவில் கடந்த ஆண்டு பெரும் போராட்டத்துக்கும், எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்துக்கும் வழிவகுத்த ஒன்றுதான், மத்திய அரசு கொண்டுவந்த `அக்னிபத்’ திட்டம். இந்திய ராணுவத்தின் முப்படைகளின் புதிய ஆட்சேர்ப்பு திட்டமான அக்னிபத் திட்டத்தில் தேர்வு பெறும் வீரர்கள், நான்காண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவர். அதன்பிறகு அதிலிருந்து 25 சதவிகிதம் பேர் மட்டுமே நிரந்தரமாக பணியமர்த்தப்படுவர். மற்ற 75 சதவிகிதம் பேர் ஓய்வுபெற்றவர்களாவர். அக்னிபத் திட்டம் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, மத்திய துணை ராணுவப் படை மற்றும் அஸ்ஸாம் … Read more

மகாராணியார் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய மன்னர் சார்லஸ்: அது என்ன வாக்குறுதி தெரியுமா?

மன்னர் சார்லஸ், தன் தாயும் மறைந்த மகாராணியுமான இரண்டாம் எலிசபெத் அளித்த வாக்குறுதி ஒன்றை நிறைவேற்றியுள்ளார். அது என்ன வாக்குறுதி? மறைந்த பிரித்தானிய மகாராணியார், தனது இளைய மகனான இளவரசர் எட்வர்டுக்கும் அவரது மனைவிக்கும் பட்டங்களை வழங்குவதாக உறுதியளித்திருந்தார். அதன்படி, மன்னர் சார்லஸ், இளவரசர் எட்வர்டின் 59ஆவது பிறந்தநாளில் அவருக்கு எடின்பர்க் கோமகன் என்ற பட்டத்தையும், அவரது மனைவியான சோபிக்கு எடின்பர்க் கோமகள் என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளார். Image: Getty Images மிக உயர்ந்த பட்டம் உண்மையில் … Read more

கடந்த 6 மாதங்களில் 25 லட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்! ராதாகிருஷ்ணன் தகவல்!

சென்னை: கடந்த 6 மாதங்களில் 25 லட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக, கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்து உள்ளார். அதாவது 2022ம் அண்டு   செப்டம்பர் முதல் தற்போது வரை இவ்வளவு டன் நெல்முதல் செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். சென்னை அண்ணாநகர் நுகர்ப்பொருள் வாணிபக் கழக கிடங்கில் உள்ள பொருட்களின் கையிருப்பு குறித்து, கூட்டுறவுத் துறை செயலாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர்  செய்தியாளர்களை சந்தித்தபோது, விவசாயிகளுக்கு … Read more

தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக வதந்தி பரப்பியதாக பீகாரில் மேலும் ஒருவர் கைது

பாட்னா: தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக வதந்தி பரப்பியதாக பீகாரில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வதந்தி பரப்பியதாக பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் இளைஞர் உமேஷ் மஹதோவை போலீஸ் கைது செய்தது. ஊழல் தடுப்புச்சட்டத்தில் விசாரித்து அறிக்கை அளிக்க விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு ஆணையிட்டுள்ளது.

மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியா காவல் மார்ச் 17 வரை நீட்டிப்பு| Liquor policy case: Manish Sisodias custody extended till March 17

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைதான மணீஷ் சிசோடியாவை மார்ச் 17-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கோர்ட் உத்தரவுப்படி சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்து, மணீஷ் … Read more

கடுமையான சுவாசத்தொற்று, இருவர் உயிரிழப்பு; இன்ஃபுளூயன்ஸா வைரஸின் முதல் மரணங்கள் பதிவு!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான நோய்த்தொற்றுகள் H3N2 வைரஸால் ஏற்படுகின்றன. `ஹாங்காங் காய்ச்சல்’ என்று அழைக்கப்படும் இந்தக் காய்ச்சலால் இதுவரை 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மார்ச் இறுதிக்குள் வைரஸ் பரவல் குறையும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அரசு கூறியுள்ளது. உயிரிழப்பு இந்நிலையில் இந்தியாவில் முதன்முறையாக H3N2 என்ற இன்ஃபுளூயன்ஸா வைரஸால் இருவர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவின் அச்சன் மாவட்டத்தைச் சேர்ந்த … Read more

தம்பிக்கு எடின்பர்க் டியூக் பட்டம்! தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிய மன்னர் சார்லஸ்

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் இளைய சகோதரர் இளவரசர் எட்வர்டு எடின்பர்க் டியூக் பட்டத்தைப் பெறுகிறார். இளவரசர் பிலிப்பின் விருப்பம் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரது கணவர் இளவரசர் பிலிப் ஆகியோரின் விருப்பத்திற்கு இணங்க, பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் (King Charles III) வெள்ளிக்கிழமை தனது இளைய சகோதரர் இளவரசர் எட்வர்டுக்கு (Prince Edward) எடின்பர்க் டியூக் (Duke of Edinburgh) என்ற பட்டத்தை வழங்கினார். பட்டத்தின் கடைசி உரிமையாளரான இளவரசர் பிலிப், … Read more