பஞ்சாப் மாநில இந்திய எல்லையில் ஊடுருவ முயற்சித்த 3 பாகிஸ்தானியர்கள் கைது!

டெல்லி:  இந்திய – பாகிஸ்தான் எல்லையில் கடந்த 2 நாள்களில் ஊடுருவ முயற்சி செய்த 3 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என  எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் பகுதியில் உள்ள பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் பாகிஸ்தானின் கைபர் மாவட்டத்தை சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது. அதுபோல, அமிர்தசரஸ் அருகே ஒருவரும், நேற்று பிற்பகலில் … Read more

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மார்ச் 24 முதல் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதி தற்காலிகமாக செயல்படாது என அறிவிப்பு..!!

சென்னை: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதி, சீரமைப்பு பணிகளுக்காக மார்ச் 24 முதல் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாகச் செயல்படாது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மாற்றாக பயணிகள் தங்களது நான்கு சக்கர வாகனங்களை பரங்கிமலை மெட்ரோ நிலைய வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்த தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் பயங்கரவாத தாக்குதல் வழக்கில்கர்நாடகம், கேரளாவில் 5 பேர் கைது

மங்களூரு- பாட்னாவில் பயங்கரவாத தாக்குதல் பீகார் மாநிலம் பாட்னா அருகே புல்வாரி ஷெரீப் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், புல்வாரி ஷெரீப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு கர்நாடகம், கேரளாவில் இருந்து ரூ.25 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது. 5 … Read more

Harley-Davidson X 350 : குறைந்த விலை ஹார்லி-டேவிட்சன் X 350 பைக் அறிமுகம்

சீனாவின் QJ மோட்டார்ஸ் உடன் இணைந்து ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ள X 350 மற்றும் X 500 என இரு பைக்குகளில் முதல்முறையாக ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 350 பைக்கின் முழு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே ஹார்லியின் குறைந்த விலை X பைக் தொடர்பான முக்கிய விபரங்கள் வெளியாகி வந்த நிலையில் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக சீன சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ஹார்லி X 350 பைக் அறிமுகம் செய்யப்படுமா ? … Read more

திருமாவுக்கு ADMK அழைப்பு.. மாறுகிறதா கூட்டணி? -பாஜக-வை சம்பவம் செய்யும் பின்னணி – விமர்சனம்: அகிலன்

திருமாவுக்கு அதிமுக அழைப்பு… மாறுகிறதா கூட்டணி கணக்கு?! எடப்பாடி பழனிசாமியுடன் திருமாவளவன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாமக, பாஜக இடம்பெறும் கூட்டணியில் ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக கிடைத்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக அவருக்கு திருமா வாழ்த்து சொன்னது, ‘தமிழக காவல்துறை, ஸ்டாலினின் காவல்துறையாக இருக்க வேண்டும். அமித் ஷாவின் காவல்துறையாக இருக்கக் … Read more

இலவச கோழிகள் வழங்கும் பிரெஞ்சு நகரம்: எதற்காக தெரியுமா?

பிரெஞ்சு நகரம் ஒன்று தன் குடிமக்களுக்கு இலவச கோழிகளை வழங்கிவருகிறது. எதற்காக இந்த இலவச கோழிகள் வழங்கும் திட்டம்?  உணவுப்பொருட்கள் வீணாவதைத் தடுப்பதற்காகவும், குப்பை அள்ளுவோரின் சுமையைக் குறைப்பதற்காகவும்தான் இந்த நடவடிக்கையாம். அதாவது கோழிகள் நாளொன்றிற்கு 300 கிராம் உணவுப்பொருட்களை சாப்பிடமுடியுமாம். ஆகவே, வீடுகளில் வீணாக கொட்டப்படும் உணவுகளை இந்த கோழிகள் உண்ணலாம், உணவும் வீணாகாது, கோழிகளுக்கும் உணவு கிடைத்தது போலிருக்கும் என்பதால்தான் இந்த திட்டம். Photo by PHILIPPE HUGUEN / AFP யாருக்கெல்லாம் கோழிகள் … Read more

என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய அதிமுக எம்எல்ஏ கைது!

நெய்வேலி: பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, என்எல்சி நிர்வாகம், தமிழ்நாடு காவல்துறை உதவியுடன்  நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு அரசியல்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அங்கு போராட்டம் நடத்திய புனவகிரி தொகுதி அதிமுக எம்எல்ஏ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. அவ்வாறு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சமன் செய்யும் பணி நேற்று காலை துவங்கியது. இதற்கு அப்பகுதி மக்கள் … Read more

அறங்காவலர் தேர்வில் அனைத்து கோயில்களுக்கும் ஒரே மாதியான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அறங்காவலர் தேர்வில் அனைத்து கோயில்களுக்கும் ஒரே மாதியான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரே மாதியான விண்ணப்பங்களை இணையதளத்தில் நாளைக்குள் பதிவேற்றம் செய்ய அறநிலையத்துறைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக முதியவர் அடித்துக்கொலை – அதிர்ச்சி சம்பவம்

பாட்னா, பீகார் மாநிலம் சிவான் மாவட்டம் ஹசன்புர் கிராமத்தை சேர்ந்த 55 வயது முதியவர் நசீம் குரேஷி. இவர் கடந்த செவ்வாய்கிழமை தனது உறவுக்கார இளைஞர் பேரோஷ் குரேஷி என்பவருடன் அருகில் உள்ள ஜோகியா கிராமத்திற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, ஜோகியா கிராமத்தில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் அருகே நசீம், போரோஷ் ஆகியோரை ஒரு கும்பல் இடைமறித்தது. மேலும், மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக சந்தேகமடைந்து இருவரிடமும் அந்த கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தாங்கள் … Read more

ஆப்பிரிக்காவில் மனித உடல்களைப் புதைப்பது இல்லை; காட்டில் போட்டுவிடுகிறார்கள்; ஏன் தெரியுமா?

சென்ற பகுதியில் மசாய் மாராவில் சிறுத்தையையும், நெருப்புக்கோழி கோழியையும் பார்த்துவிட்டு மாடுகளுடன் பயணித்த நாம் இப்போது மீண்டும் அக்டோபர் மாத இறுதியில் தன்சானியாவுக்குள் வருகிறோம். செரங்கெட்டி தேசிய பூங்காவின் தெற்குப்பகுதி, சற்று வறண்டு காணப்படும். இந்தப் பகுதியில் நவம்பர், டிசம்பரில் ஒரு குறுகிய மழைக்காலம் உண்டு. இந்த மழைக் காலத்தில் பெய்யும் மழை இந்தப் பகுதியை பசுமை ஆக்குகிறது. எங்கு பார்த்தாலும் உயரம் குறைவான புற்கள் கொண்ட பரந்த புல்வெளியை உருவாக்குகிறது இந்த மழை. விலங்குகளின் ஊர்வலத்தில் … Read more