முறையான அனுமதியுடனே திறப்பு: ஐகோர்ட் கிளையில் சரவணா ஸ்டோர்ஸ் பதில்

மதுரை: கட்டிடம் முழுவதுமாக கட்டப்பட்டு, முறையான அனுமதி பெற்ற பின்னரே திறக்கப்பட்டது என ஐகோர்ட் கிளையில் மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் பதில் அளித்துள்ளது. மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர் கட்டுமான பணி, பாதுகாப்பு வசதி நிறைவடையும் வரை இடைக்கால தடை விதிக்கக் கோரிய வழக்கில் பதில் மனு அளித்துள்ளது. அவசர காலத்தில் பயன்படுத்தக் கூடிய அனைத்து விதமான ஏற்பாடுகளும் கட்டிடத்தில் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி … Read more

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் பாதி பிப்ரவரி 13ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில். கூட்டத்தொடரின் இரண்டாவது பாதி திட்டமிட்டபடி இன்று தொடங்கியது. தொடங்கிய உடனே, ஆளும் கட்சி உறுப்பினர்கள், லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசிய விவகாரம் குறித்து எழுப்பினர். அதனைதொடர்ந்து அதானி விவகாரம் … Read more

கர்நாடகா: Vote From Home திட்டம்; மாற்றுத்திறனாளிகள், முதியோருக்காக அறிவிப்பு – கட்சிகள் எதிர்ப்பு

கர்நாடகா மாநிலத்தில், விரைவில் தேர்தல் நடக்கவுள்ளதால், பா.ஜ.க காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர், பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாத இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படுமென அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படியான நிலையில், கடந்த மூன்று நாட்களாக, மத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கர்நாடகத்தில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள், கள நிலவரத்தை ஆய்வு செய்ய, சுற்றுப்பயணம் வந்துள்ளனர். தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தலைமையிலான அதிகாரிகள், … Read more

ஒரு டொலரின் ஒன்றின் தற்போதைய விற்பனை விலையில் எவ்வளவு தெரியுமா? இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று (13-03-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, கொள்முதல் பெறுமதி  விற்பனை பெறுமதி அமெரிக்க டொலர் 311 ரூபா 82 சதம் 328 ரூபா 86 சதம் ஸ்ரேலிங் பவுண் 376 ரூபா 59 சதம் 399 ரூபா  08சதம் யூரோ 333 ரூபா 36 சதம்  353 ரூபா 03 சதம் சுவிஸ் பிராங் 338 ரூபா 42 சதம் 361 ரூபா 33 சதம் கனடா டொலர் 225 ரூபா 60 சதம் … Read more

தமிழக கேந்திரிய வித்யாலயாவில் 15 பள்ளிகளில் மட்டும் தமிழ் பாடம் கற்பிப்பு! மத்தியஅரசு பதில்

டெல்லி:  தமிழ்நாட்டில் உள்ள 45 கேந்திரிய வித்யாலயாவில் 15 பள்ளிகளில் மட்டும் தமிழ் பாடம் கற்பிக்கப்பட்டு வருவதாக உறுப்பினரின் கேள்விக்கு மத்தியஅரசு பதில் கூறியுள்ளது. அதுபோல ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்தும் பதில் கூறினார். தமிழ்நாட்டில் உள்ள மத்தியஅரசின் கேந்திரிய வித்யிலயா பள்ளிகளில் தமிழ்பாடம் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்துள்ள பதிலில், கேந்திர வித்யாலயா … Read more

நன்னடத்தை உறுதியை மீறும் குற்றவாளிகளுக்கு சிறைதண்டனை விதிக்க துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கியது செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நன்னடத்தை உறுதியை மீறும் குற்றவாளிகளுக்கு சிறைதண்டனை விதிக்க துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கியது செல்லாது. காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோரை சிறையிலடைத்து துணை ஆணையர்கள் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற்ற இந்திய அணி| Indian team qualified for World Test Championship final

புதுடில்லி: வரும் ஜூன் 7ல் லண்டனில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்திய அணி தகுதி பெற்றது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி தோல்வி அடைந்ததை அடுத்து, இந்திய அணி பைனலுக்கு முன்னேறியது. பைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-1 அல்லது 4-0 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றால் உலக டெஸ்ட் … Read more

போலி நகைகளை அடகு வைத்து நூதன மோசடி; முன்னாள் எஸ்.ஐ உட்பட நால்வர் கைது – இளம்பெண்ணுக்கு போலீஸ் வலை!

காரைக்கால் ராஜாத்தி நகரைச் சேர்ந்தவர் கைலாஷ் (36). இவர், காரைக்கால் பெரமசாமி பிள்ளை வீதியில் சொந்தமாக நகைக்கடை நடத்தி வருகிறார். இந்தக் கடைக்கு 10-ம் தேதி மர்ம நபர் ஒருவர் வந்து, தன்னிடம் 12 பவுன் செயின் இருப்பதாகவும், அதை அடகு பிடித்துக் கொண்டு, பணம் தரும்படியும் கேட்டிருக்கிறார். அந்த நபரிடம் நகையை கைலாஷ் வாங்கி சோதனை இயந்திரத்தில் பரிசோதித்ததில், 916 தங்க நகை என்றும், 12 பவுன் இருப்பதாகவும் காட்டியிருக்கிறது. இருந்தும் நகையில் சற்று சந்தேகம் … Read more

மூட்டு வலியா? இதோ ஒரு அறிய தீர்வு!!

மூட்டு வலி என்று கூறும்போதே அதில் வலி தெரியும் என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு அது வலி தரும். மூட்டு வலி உடனடியாக தீவிரம் அடையாது. ஆனால் அது வந்துவிட்டால் வலி அதிகரிக்கும். உடலின் மிக முக்கியமான இணைப்புகளில் ஒன்று மூட்டு. உடலின் அனைத்து எடையையும் தாங்கக்கூடிய சுமைதாங்கியாக காணப்படுகிறது. உடல் இயக்கங்கள் அனைத்திலும் அதன் பங்கு முக்கியமானதாகின்றது.  மூட்டு வலி வருவதற்கான அறிகுறிகள் மூட்டு வீக்கம் மூட்டுப்பகுதியில் சூடான உணர்வு மூட்டு சிவந்து காணப்படும் நெஞ்சுவலி … Read more

சினிமா தொடர்பாக யாரும் என்னைத் தொடர்பு கொள்ளக்கூடாது! அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

சென்னை: ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பாளராகவும், விநியோக நிறுவனத்தையும் நடத்தி வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சினிமா தொடர்பாக இனிமேல்  யாரும் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என அறிவித்துள்ளார். திமுகவில் இளைஞர் அணி செயலாளராக இருந்த உதயநிதி, சினிமா தயாரிப்பு , விநியோகம்  மட்டுமின்றி சில படங்களில் நாயகனாக நடித்து வந்தார். சிறிது சிறிதாக திரையுலக்குள் புகுந்த உதயநிதி தற்போது தமிழ்நாட்டின் திரையுலகை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார். இதனால்  சர்ச்சைகள் எழுந்த … Read more