ஆன்லைன் சூதாட்ட மசோதாவை ஆளுநர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட மசோதாவை ஆளுநர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் தமிழ்நாடு சட்டப்பேரவையை சிறுமைப்படுத்தும் செயல் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க பேரவைக்கு அதிகாரம் இல்லை என இந்திய அரசியலைப்பு சட்டம் கூறவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

வெங்காய விலை வீழ்ச்சி தடுக்க அரசு நடவடிக்கை| Government action to prevent fall in onion prices

புதுடில்லி : குஜராத்தில் வெங்காய விலை வீழ்ச்சியடைந்து வருவதையடுத்து விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தைக் கூட்டமைப்பு நிறுவனம் நேரடியாக இன்று முதல் கொள்முதல் செய்ய உள்ளதாக அறிவித்துஉள்ளது. குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் வெங்காயம் அதிகளவு உற்பத்தி செய்யப்படுவதுடன் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கு வெங்காயம் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக இவற்றின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 20 ரூபாய் வரை கொள்முதல் செய்த நிலையில் … Read more

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வீடியோ – `Scripted’ என தமிழக காவல்துறை எச்சரிக்கை

சமீபத்தில் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள், அரசியல் வட்டாரங்களில் சலசலப்புகள் தொடர்ந்து வந்தது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும், பிகார் முதல்வர் நிதிஷ் குமாரும் பேசி, வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என உறுதிபடுத்தினர். மேலும், வதந்திகள் பரப்பிய சிலரையும் காவல்துறை கைது செய்ய முனைப்பு காட்டியது. तेजस्वी यादव जी चश्मा हटा के इस फोटो को देखिए मजदूरों के चेहरे पर घाव … Read more

இளவரசர் ஹரி- மேகன் தம்பதிக்கு வீட்டை விற்ற ரஷ்ய கோடீஸ்வரர் மர்ம மரணம்: வெளிவரும் அவரது பின்னணி

அமெரிக்காவில் ஹரி- மேகன் தம்பதிக்கு வீட்டை விற்ற ரஷ்ய கோடீஸ்வரர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விளாடிமிர் புடினை விமர்சித்தவர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் வைத்து அவர் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. 56 வயதான Sergey Grishin ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்தவர் மட்டுமின்றி, @thesun அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை தொடர்பு கொண்டு, தமக்கு பாதுகாப்பு வேண்டும், அமெரிக்க கடவுச்சீட்டு ஒன்றை அனுமதியுங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். தற்போது மூளைக்கு … Read more

வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்திகளை கண்காணிக்க குழு! டிஜிபி தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்திகளை கண்காணிக்க குழு அமைக்கப்படுவதாகவும், வெளிமாநில மக்கள் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் ரோந்து அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும்  டிஜிபி தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டி, வடமாநில தொழிலாளர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல் வதந்தியாக பரவி வட மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர். இதனால், தமிழ்நாட்டின் தொழிற்நிறுவனங்களில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வதந்திகள் குறித்து தமிழ்நாடு அரசு பல்வேறு விளக்கங்களை அளித்ததுடன், … Read more

தருமபுரி அருகே அரசு மேல்நிலைபள்ளியில் வகுப்பறை பொருட்கள் சேதப்படுத்திய விவகாரம்; 5 மாணவ, மாணவிகள் 5 நாள் இடைநீக்கம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அமனி மல்லபுரம் அரசு மேல்நிலைபள்ளியில் வகுப்பறை பொருட்கள் சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக 5 மாணவ மாணவிகளை 5 நாள் இடைநீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியானதால் பெற்றோர், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்ட கல்வித்துறை 5 மாணவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

பார்லிமென்ட் குழுவில் இடம்பெற்ற அதிகாரிகள்| Officers in the Parliamentary Committee

புதுடில்லி : துணை ஜனாதிபதியின் அலுவலகத்தில் பணியாற்றும் எட்டு அதிகாரிகள்,20 பார்லிமென்ட் குழுக்களில் இடம்பெற்றுள்ளனர். துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், ராஜ்யசபாவின் தலைவராகவும் உள்ளார்.அவரது அலுவலகத்தில் பணியாற்றும் எட்டு அதிகாரிகளை, 20 பார்லிமென்ட் குழுக்களின் உறுப்பினர்களாக நியமித்து, ராஜ்யசபா செயலகம் நேற்று உத்தரவு பிறப்பித்து உள்ளது.இதில் நான்கு பேர் துணை ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள். ராஜ்யசபாவின் தலைவருக்கான அதிகாரத்தின்படி, இந்த நியமனங்களை ஜக்தீப் தன்கர் செய்துள்ளதாக, ராஜ்யசபா செயலகம் தெரிவித்து உள்ளது. புதுடில்லி : துணை … Read more

புறா எச்சத்தால் நிமோனியா அதிகரிப்பு… பறவைகளுக்கு உணவளித்தால் அபராதம் என எச்சரிக்கை!

நுரையீரலை பாதிக்கும் ஹைப்பர்சென்சிட்டிவ் நிமோனியா தொற்று அதிகரித்து வருவதால், மகாராஷ்டிராவின் தானேயில் உள்ள மாநகராட்சி அதிகாரிகள், புறாக்களுக்கு உணவளிக்க வேண்டாமென பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மகாராஷ்டிராவில் மும்பை மற்றும் புனே நகரங்களில், ஹைப்பர்சென்சிட்டிவ் நிமோனியா என்ற நுரையீரல் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. இது, புறாக்களுடன் தொடர்பில் இருப்பதால் ஏற்படுகிறது. முன்பே இருக்கும் நாள்பட்ட நோய், உடல் உபாதைகள் உள்ளவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 60- 65 சதவிகிதம் அதிகம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நுரையீரல் இந்த … Read more

உலகளவில் 68.09 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.09 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.09 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.07 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.39 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகரில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் மார்ச் 31-ம் தேதி முதல் உயர்கிறது

சென்னை: சென்னை புறநகரில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் மார்ச் 31-ம் தேதி முதல் உயர்கிறது. சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கோவை, மதுரை செல்லும் வழிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. சென்னை புறநகரில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.