இன்னும் எத்தனை நாளைக்கு இந்த அவஸ்தை? :கொச்சி குப்பை கிடங்கு தீயால் உயர் நீதிமன்றம் காட்டம்!| How many more days of this misery?

கொச்சி,’கேரளாவின் கொச்சி அருகே குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க, இன்னும் எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்வீர்கள்’ என கேரள உயர்நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு,கொச்சி அருகே பிரம்மபுரம் என்ற இடத்தில் குப்பை கிடங்கு உள்ளது; இது நாட்டில் உள்ள இரண்டாவது மிகப் பெரிய குப்பை கிடங்கு. இங்கு கடந்த 2ம் தேதி தீப்பற்றியது. 10 … Read more

வட கொரியா மீது அமெரிக்கா வீசிய குண்டுகள்…குடியிருப்பிற்காக தோண்டிய குழியிலிருந்து வெளிவந்த 110 வெடிகுண்டுகள்

வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில் அடுக்குமாடி குடியிருப்பிற்காக குழி தோண்டியபோது 100க்கும் மேற்பட்ட வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 110 வெடிகுண்டுகள் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சமீபத்தில் தலைநகர் பியோங்யாங்கில் 50 ஆயிரம் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான திட்டத்தை தொடங்கி வைத்தார்.  அதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பியோங்யாங்கில் குடியிருப்பு கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து 110 வெடிகுண்டுகள், பீரங்கி குண்டுகள், கையெறி குண்டுகள், … Read more

மகளிர் ப்ரிமீயர் லீக் தொடரில், டெல்லி அணி வெற்றி

மும்பை: மகளிர் ப்ரிமீயர் லீக் தொடரில், குஜராத் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில், குஜராத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் … Read more

கைவினை கலைஞர்களை தொழில்முனைவோராக்குவோம்| Lets turn artisans into entrepreneurs

புதுடில்லி:”நம் நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் கைவினை கலைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை ஒரு இயக்கமாக செயல்படுத்துவோம். கைவினை கலைஞர்களை, தொழில்முனைவோராக்குவதே அரசின் நோக்கம்,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். கருத்தரங்கம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் பெறும், இணையக் கருத்தரங்குகளை மத்திய அரசு நடத்தி வருகிறது. இதன் கடைசி இணையக் கருத்தரங்கம் நேற்று நடந்தது. ‘பிரதமர் விஸ்வகர்மா குஷால் சம்மான்’ எனப்படும் கைவினை கலைஞர்கள் மேம்பாட்டு திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

284 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! ஒயிட்வாஷ் செய்த தென் ஆப்பிரிக்கா

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா வென்றது. கடைசி டெஸ்ட் ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 320 ஓட்டங்களும், மேற்கிந்திய தீவுகள் 251 ஓட்டங்களும் எடுத்தன. அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 321 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. @windiescricket  பவுமா 172 கேப்டன் பவுமா 172 ஓட்டங்களும், முல்டர் 42 ஓட்டங்களும் விளாசினர். மேற்கிந்திய தீவுகள் … Read more

திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்

திருமயானம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், ஆதிகடவூர், திருக்கடையூரில் அமைந்துள்ளது. ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் சிவன், பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உலகத்தை அழித்து விடுவார். இச்சமயத்தில், படைப்புக் கடவுளான பிரம்மாவும் அழிந்து போவார். புது யுகம் துவங்கும்போது, மீண்டும் பிரம்மாவை உண்டாக்கி, அவர் மூலமாக ஜீவராசிகள் பிறக்கும்படி செய்வார். அவ்வாறு பிரம்மாவை அழித்து, மீண்டும் உயிர்ப்பித்த தலம் இது. அதோடு, பிரம்மாவுக்கு உயிர்களை படைக்கும் இரகசியம் பற்றி இங்கு ஞான உபதேசம் செய்தருளினார். “பிரம்மபுரீஸ்வரர்” என்ற பெயரில் … Read more

மார்ச்-12: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: சென்னையில் 295-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகள்! அதிர்ச்சியடைந்த மணமகன்

தெலுங்கானாவில் கூடுதல் வரதட்சணை கேட்டு மணமகள் ஒருவர் நடக்க இருந்த திருமணத்தை கடைசி நிமிடத்தில் தடுத்து நிறுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் வரதட்சணை வேண்டும் தெலுங்கானா மாநிலத்தில் மணப்பெண்ணுக்கு வழங்கப்படும் “தலைகீழ் வரதட்சணை” என்ற நடைமுறையை பின்பற்றும் குறிப்பிட்ட பழங்குடி வழக்கத்திற்கு ஏற்ப, மணமகனின் குடும்பத்தினரிடம் ரூ.2 லட்சத்திற்கு அதிகமான தொகையை கேட்டு மணமகள் நடக்க இருந்த திருமணத்தை கடைசி நிமிடத்தில் நிறுத்தியுள்ளார். கூடுதல் வரதட்சணை கேட்டு பத்ராத்ரி கொத்தகுடெமில்(Bhadradri Kothagudem)உள்ள அஸ்வராவ்பேட்(Aswaraopet) கிராமத்தில் இருந்து திருமண மண்டபத்திற்கு செல்ல … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,811,657 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.11 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,811,657 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 681,473,529 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 654,357,397 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,318 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.