13.03.23 | Daily Horoscope | Today Rasi Palan | March – 13 | திங்கட்கிழமை | இன்றைய ராசி பலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

'இந்தியாவுக்கு ஒத்து வராது' தன்பாலின திருமணத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு

‘இந்திய குடும்ப கட்டமைப்புக்கு ஒத்து வராது’ என கூறி உச்ச நீதிமன்றத்தில் தன்பாலின திருமணத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தன்பாலின திருமணத்திற்கு (Same-Sex Marriage) மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ஓரினச்சேர்க்கை மற்றும் ஒரே பாலின உறவை இந்திய குடும்பம் என்ற கருத்துடன் ஒப்பிட முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரிய மனுவை எதிர்த்து மத்திய அரசு … Read more

பக்முட்டில் தீவிரமடையும் போர்: கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை

கிழக்கு உக்ரைனிய நகரான பக்முட்டில் நடைபெற்று வரும் போரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னேறும் ரஷ்ய படைகள் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தொடங்கி ஓராண்டை நிறைவு செய்து இருக்கும் நிலையில், ரஷ்யா தனது தாக்குதல் திறனை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கிழக்கு உக்ரைனிய நகரான பக்முட் மீது ரஷ்ய படைகள் தங்கள் கவனத்தை குவித்து வருகின்றனர். Reuters நகரின் … Read more

பிஞ்சு மகளை துன்புறுத்திய நபர்: மான் கொம்பால் பழி தீர்த்த தந்தை

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் காவல் நிலையம் சென்ற நபர், தம்மை கைது செய்ய வேண்டும் எனவும், தமது பிஞ்சு மகளை துன்புறுத்திய நபரை இறுதியில் பழி வாங்கியதாகவும் கூறியுள்ளார். உடல் முழுவதும், கைகளிலும் ரத்தம் பொலிஸ் தரப்பு வெளியிட்ட தகவலில், லெவி ஆக்ஸ்டெல் என்ற நபரே காவல் நிலையம் சென்று தம்மை கைது செய்ய வலியுறுத்தியவர். உடல் முழுவதும், கைகளிலும் ரத்தம் காணப்பட்ட நிலையில் பொலிசார் உடனடியாக அவரை கைது செய்துள்ளனர். @getty பின்னர் முன்னெடுத்த விசாரணையில், … Read more

மோடிக்கும், பாஜகவுக்கும் குழி தோண்டுவதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது..! பிரதமர் மோடி கடும் விமர்சனம்!

பெங்களூரு: மோடிக்கும், பாஜகவுக்கும் குழி தோண்டுவதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. ஆனால், பெங்களூரு -மைசூரு நெடுஞ்சாலை அமைப்பதில் நான் தீவிரமாக இருந்தேன் என பெங்களூரு – மைசூரு விரைவுச் சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் பிரதமர் மோடி கூறினார். நான் எளிய மக்களின் வாழ்க்கையை உயர்த்திக் கொண்டிருக்கிறேன், எளிய மக்களுக்கான பணத்தை காங்., கொள்ளையடித்துக் கொண்டிருந்தது என பிரதமர் மோடி பேசினார்.

மகளிர் பிரீமியர் லீக்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது உ.பி. வாரியார்ஸ் அணி

மும்பை: மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் உ.பி. வாரியார்ஸ் அணி 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. உ.பி. வாரியார்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக அலிசா ஹீலி 58 ரன்களும், தஹ்லியா மெக்ராத் 50 ரன்களும் விளாசினார்.

`பணப் பிரச்னையில் பாலிவுட் நடிகர் சதீஷ் கெளசிக் படுகொலையா?' – பெண்ணின் புகாரை விசாரிக்கும் போலீஸ்

பாலிவுட் நடிகர் சதீஷ் கெளசிக் கடந்த 9-ம் தேதி டெல்லியில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதையடுத்து அவருடைய உடல் மும்பை கொண்டுவரப்பட்டு, இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. இறுதிச்சடங்கில் நடிகர் சல்மான் கான் உட்பட பாலிவுட் பிரபலங்கள் திரளாகக் கலந்துகொண்டு கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர். சதீஷ் கெளசிக் இறந்து சில நாள்களே ஆகியிருக்கும் நிலையில், அவர் கொலைசெய்யப்பட்டதாக டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்திருக்கிறார். டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் விகாஷ் என்பவரின் மனைவி, இது தொடர்பாக டெல்லி … Read more

காதலனை சந்திக்க துபாயிலிருந்து வந்த விமான பணிப்பெண்; நள்ளிரவில் நான்காவது மாடியிலிருந்து..,

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியிலிருந்து குதித்து விமான பணிப்பெண் உயிரிழந்தார். விமானப் பணிப்பெண் உயிரிழந்தவர் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான விமானப் பணிப்பெண் அர்ச்சனா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியிலிருந்து குதித்துள்ளார். தனது காதலனைச் சந்திப்பதற்காக துபாயிலிருந்து பெங்களூரு வந்த அர்ச்சனா, வெள்ளி மற்றும் சனிக்கிழமை இடைப்பட்ட இரவில் குதித்து இறந்ததாகக் கூறப்படுகிறது. Twitter @ians_india கோரமங்களா வட்டாரத்தில் உள்ள ரேணுகா ரெசிடென்சி அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக … Read more

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான புதுக்கோட்டை மீனவர் 4 பேருக்கு வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவல்

யாழ்ப்பாணம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான புதுக்கோட்டை மீனவர் 4பேருக்கு வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை கைது செய்த 4பேரும் ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி உத்தரவின் பேரில் புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரும்யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குஜராத்தில் பாடகர் மீது பணமழை பொழிந்த மக்கள்: வீடியோ வைரல்| Gujarati Folk Singer Showered With Wads Of Cash During ‘Bhajan’ Performance

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஆமதாபாத்: குஜராத்தில், நாட்டுப்புற பாடகர் மீது மக்கள் ரூபாய் நோட்டுகளை வீசிய காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில், வல்சாத் அக்னீவர் கவு சேவாதள என்ற அமைப்பு சார்பில் சிறப்பு பஜனை நிகழ்ச்சி இடம்பெற்றது. அதில், கிர்திதன் காத்வி என்ற நாட்டுப்புற பாடகர் கலந்து கொண்டு பாடல்களை பாடினார். அவரது பாடல்களை கேட்டு மகிழ்ச்சியடைந்த மக்கள், தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை பாடகர் … Read more