இன்று தமிழ்நாடு வருகிறார் ஜே.பி.நட்டா

கிருஷ்ணகிரி: பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழ்நாடு வருகிறார். தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா, கிருஷ்ணகிரியில் உள்ள புதிய மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். மேலும் சமீபத்தில் தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில தலைவர் நிர்மல்குமார், கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார், இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் காரணம் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். அண்ணாமலையும் அவருக்கு எங்கு … Read more

சென்னை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் ஆய்வு

சென்னை : சென்னை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து நிலைய பணிகள் 95% நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. ரூ.400 கோடி மதிப்பில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

“பினராயி விஜயனுக்கு எதிரான ஆதாரங்களை ஒப்படைக்க ரூ.30 கோடி பேரம்” – ஸ்வப்னா சுரேஷ் தகவல்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கில் சிக்கியவர் ஸ்வப்னா சுரேஷ். இவருடன் கேரளா முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர், ஸ்வப்னாவின் நண்பர் ஸரித் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். ஸ்வப்னாவும், சிவசங்கரும் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் லைஃப் மிஷன் என்ற அரசின் வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரை அமலாக்கத்துறை கைது செய்து … Read more

இலங்கை காட்டுக்குள் 4 ஆண்டுகள் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு: தவறான தகவல் பரப்புவதாக குற்றச்சாட்டு

Courtesy: BBC Tamil இலங்கையில் நான்கு ஆண்டுகளாக காட்டு பகுதிக்குள் குளிக்காமல் வாழ்ந்து வந்த நபர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காட்டுப்பகுதியில் வாழ்ந்த நபர் இலங்கையில் காட்டுப் பகுதிக்குள் நான்கு வருடங்களாக குளிக்காமல் தனிமையில் வாழ்ந்து வந்த நபர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். குடும்பத்தினரால் கைவிடப்பட்டு மனநலம் குன்றிய நிலையோடு, மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிராந்தியத்திற்கு உட்பட்ட தாந்தாமலை காட்டுப் பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக இவர் வாழ்ந்து வந்துள்ளார். BBC Tamil/ N.NAGULESH தொடக்க … Read more

ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானிசுடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை

புதுடெல்லி: ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானிசுடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானிஸ், நான்குநாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இவர், அகமதாபாத்திலும், மும்பையிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நேற்று மாலை மும்பையில் டப்பாவாலாக்களை சந்தித்து உரையாடிய அவர், விக்ராந்த் போர்க்கப்பலைப் பார்வையிட்டார். இன்று அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், ஆஸ்திரேலியப் பிரதமரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் … Read more

இன்ஃப்ளூயன்சா தொற்றைத் தடுக்கும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம்

சென்னை : தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளது. 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெறுகின்றன. இதற்கான ஆயத்தப் பணிகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்றைத் தடுக்கும் நோக்கில் இன்று காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 200 இடங்களில் முகாம் நடப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை: சடலமாக கிடந்த சரித்திர பதிவேடு குற்றவாளி; மதுபோதையில் நடந்த கொலை – போலீஸ் விசாரணை

சென்னை துரைப்பாக்கம் அருகில் மேட்டுக்குப்பம் வெங்கடேஸ்வரா அவின்யூவின் ஒரு பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமானப்பணி நடைபெறும் இடத்தில் மர்மநபர்கள் சிலர் இளைஞர் ஒருவரைக் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார்கள். இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள், இதுகுறித்து துரைப்பாக்கம் காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அரசு ராயப்பேட்டை மருத்துவமனை சம்பவமறிந்து வந்த போலீஸார், அந்த இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாகக் கொலை … Read more

இன்று 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள்

சென்னை: சென்னையில், இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெற உள்ளது தமிழகம் முழுவதும், எச்3என்2(H3N2) வைரஸின் தாக்கம் காணப்படுகிறது. H3N2 வைரசுக்கு கிட்டத்தட்ட தொண்டை புண், காய்ச்சல், மூக்கு ஒழுகுதல் போன்றவை அறிகுறிகள் என கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில், இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெற உள்ளது என அமைச்சர் … Read more

அமெரிக்கா-தென் கொரியா கூட்டு இராணுவ பயிற்சி: பதிலடியாக விண்ணில் பாய்ந்த வட கொரிய பாலிஸ்டிக் ஏவுகணை

அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொள்வதற்கு முன்னதாக, மீண்டும் வட கொரியா தனது ஏவுகணையை விண்ணில் செலுத்தியுள்ளது. வட கொரியா ஏவுகணை சோதனை ஒருபுறம் வட கொரியாவின் அடுத்தடுத்த ஏவுகணை மற்றும் அணுசக்தி பரிசோதனைகள், மறுபுறம் அமெரிக்கா- தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சிகள் என கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலையே பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இதற்கிடையில் வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை பரிசோதனைகளின் விளைவாக, அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மிகப்பெரிய … Read more