பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டவர் கைது

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டவர் கைது செய்யப்பட்டார். இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டவரை எல்லை பாதுகாப்பு படை கைது செய்தது.

சரணாலயத்தில் தீ அதிகாரிகள் ஆய்வு| Fire officials inspect the sanctuary

பணஜி : கோவாவில் உள்ள மாதேஸ் வனவிலங்கு சரணாலயத்தில் சமீபத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான இந்த வனப்பகுதியில் பற்றிய தீ சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பரவியது. கடந்த ஐந்து நாட்களாக தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. தீயணைப்பு வீரர்கள் பேரிடர் மீட்புக்குழுவினர் வனத் துறையினர் கூட்டாகச் சேர்ந்து தீயை அணைத்து வரும் நிலையில் இந்திய விமானப் படையின் உதவியும் கோரப்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து … Read more

பாஜக: `6 மாதத்தில் கட்சியின் பெரிய தலைகளும் போவார்கள்' – சஸ்பென்ஸ் வைக்கும் அண்ணாமலை

மகளிர் தினத்தை முன்னிட்டு கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், “என்னுடைய பேருக்கு பிறகு எம்.பி, எம்.எல்.ஏ என போட்டுக் கொள்வதற்காக நான் இங்கு வரவில்லை. பாஜக வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு. இன்னொரு கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி பாஜக வளரக் கூடாது. அண்ணாமலை Mr. கழுகு: பாஜக வார் ரூமில் என்ன பிரச்னை? -திருமா – வைகோ உரசல்! -மின் இணைப்பு: விளக்கம் – … Read more

பறக்கும் விமானத்தில் இளம்பெண் செய்த விடயம்..தரையிறங்கியதும் கைது செய்த பொலிஸ்

இந்தியாவில் விமானத்தின் கழிவறையில் புகைபிடித்த பெண் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டார். புகைபிடித்த பெண் பயணி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரியங்கா சக்ரவர்த்தி(24) என்ற இளம்பெண், கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணித்தார். கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட விமானம் சில மணிநேரங்களில் பெங்களூருவில் தரையிறங்கியது. இதற்கிடையில் பயணி ஒருவர் கழிவறைக்குள் சிகரெட் புகைப்பதாக கேபின் குழுவினர் சந்தேகம் தெரிவித்தனர். @PTI அதனைத் தொடர்ந்து கழிவறையில் இருந்து பிரியங்கா வெளியே வந்த பின்னர், குப்பைத் … Read more

சென்னை ஆவடியில் அடுத்தடுத்து 6 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை!

சென்னை: ஆவடியில் அடுத்தடுத்து 6கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து கூறிய வணிகர்கள், காவல்துறை யினரின் இரவு ரோந்து இல்லை என்றும், காவல்துறை செயலிழந்து விட்டதாகவும்  குற்றம் சாட்டி உள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதாக டிஜிபி கூறி வருவதுடன், கஞ்சா 2.0 என பல்வேறு தகவல்களை மட்டுமே கூறி வருகிறார். ஆனால், செயல்பாட்டிதும் ஏதும் … Read more

எம் சாண்ட் மணல் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: எம் சாண்ட் மணல் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை தலைமை செயலகத்தில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத்துறை சார்பில் கொள்கை வெளியிடப்பட்டது. சிறந்த பட்டு விவசாயிகளுக்கு பரிசுத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் துவக்கம்| Budget Session of Puducherry Assembly begins

புதுச்சேரி: புதுச்சேரி 2023 – 24ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் தமிழிசை உரையுடன் இன்று (மார்ச்09) துவங்கியது. கூட்டத்தொடரில் உரையாற்ற வருகை புரிந்த கவர்னர் தமிழிசை போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று சபாநாயகர் செல்வம் சட்டசபை மைய மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார். இதனை தொடர்ந்து சட்டசபையில் கவர்னர் தமிழிசை உரையை வாசித்தார். அப்போது சட்டசபையில் இருந்த சுயேட்சை எம்.எல்.ஏ நேரு திடீரென எழுந்து, ‛மத்திய அரசே, மத்திய அரசே, … Read more

99 ஆபரேஷன்… சல்யூட் அடித்த வனத்துறை அதிகாரிகள்; ஓய்வு பெற்றது கும்கி கலீம் யானை!

1972 -ம் ஆண்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் 6 வயதான குட்டி யானை பிடிக்கப்பட்டது. அங்கிருந்து கொண்டுவரப்பட்டு டாப்ஸ்லிப் கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டது. அதுதான் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக வனத்துறையின் நம்பிக்கைக்குரிய கும்கி கலீம் யானை. தொடக்கத்தில் பழனிசாமி என்பவர் தான் கலீம் யானைக்கு பாகனாக இருந்தார். மணி என்பவர் அவருக்கு உதவியாளராக இருந்தார். கலீம் யானை கலீம் வெறும் யானை மட்டுமல்ல… பழனிசாமி மறைவுக்குப் பிறகு, மணி அதன் பாகன் ஆனார். எவ்வளவு பெரிய … Read more

அரசு பள்ளியில் நுழைவு தேர்வு கிடையாது, மாணவர்கள் குறும்படம் எடுக்க பயிற்சி, ஹாலிவுட் அழைத்து செல்ல திட்டம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்…

சென்னை; அரசு பள்ளியில் நுழைவு தேர்வு கிடையாது, மாணவர்கள் குறும்படம் எடுக்க பயிற்சி அக்கப்படும், மாணவர்களை ஹாலிவுட் அழைத்து செல்ல திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். சென்னையில், மாணவர்கள் குறும்படங்களை எடுக்கும் விழா நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “சிறார் திரைப்படங்கள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு மாணவர்களுக்கு … Read more

ஆன்லைன் சூதாட்ட மசோதாவை ஆளுநர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட மசோதாவை ஆளுநர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் தமிழ்நாடு சட்டப்பேரவையை சிறுமைப்படுத்தும் செயல் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க பேரவைக்கு அதிகாரம் இல்லை என இந்திய அரசியலைப்பு சட்டம் கூறவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.