போதைப்பொருள் கொடுத்து மதமாற்றம்: விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்துக்கு ‘சீல்’…

விழுப்புரம்:  விழுப்புரத்தில் அரசு அனுமதி பெறாமல் பல ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக நடத்தப்பட்டு வந்த தனியார் காப்பகத்தில், போதைப்பொருள் கொடுத்து, வயதானவர்களை மனநலம் பாதிக்கச் செய்து மதமாற்றம் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து,  அன்பு ஜோதி ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே குண்டலபுலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் பல்வேறு புகார்கள் எழுந்ததால் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி போலீஸாரும், அரசு அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையின் … Read more

மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் செயல்பட இடைக்கால தடை கோரிய வழக்கில் தேதி குறிப்பிடாமல் ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. சமூக ஆர்வலர், மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி திபேன் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கட்டுமானப் பணிகள் இன்னுமும் முடியாத நிலையில் கட்டிடம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

''நாட்டு நாட்டு'' பாடலுக்கு நடனமாடி அசத்திய தூதரக அதிகாரிகள் வைரல் வீடியோ!!

புதுடெல்லி 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதை பெற்றது. மேலும் ஆஸ்கர் மேடையில் இந்த பாடல் பாடப்பட்டதோடு இதற்கு நடன கலைஞர்கள் நடனமாடினர். அப்போது அந்த அரங்கமே எழுந்து நின்று கரவொலி எழுப்பியது. இந்நிலையில் அமெரிக்காவில் போலீஸ் அதிகாரிகள் நாட்டு நாட்டு பாடலுக்கு அதேமாதிரி … Read more

துருக்கி நிலநடுக்கம்; 48,000-ஐ கடந்த பலி எண்ணிக்கை |கைதாகிறாரா இம்ரான் கான்? – உலகச் செய்திகள்

அமெரிக்காவில் பேராசிரியர்கள் உட்பட ஒன்பது பேரை மிரட்டியதற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அர்வின் ராஜ் மாதுர் என்பவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ரஷ்ய இறக்குமதிகளுக்குப் பணம் செலுத்தச் சீன யுவானைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு வங்கிகள் மற்றும் வர்த்தகர்களை இந்தியா கேட்டுக் கொண்டிருக்கிறது. சிலிக்கான் வேலி வங்கி திவாலான நிலையில் அதில் பணம் வைத்திருந்தவர்களுக்கு தங்களின் தொகை மீண்டும் வழங்கப்படும் என உறுதியளித்திருக்கிறார் அதிபர் ஜோ பைடன். மேலும், இந்த இழப்பை அமெரிக்கர்கள் பொறுப்பேற்கத் தேவையில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். துருக்கியில் கடந்த … Read more

எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை… அரண்மனையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஹரி மேகன் தம்பதி செய்துள்ள செயல்

எங்களை ராஜ அரண்மனையிலிருந்து வெளியேற்றிய விடயம் எங்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும். டோண்ட் கேர் ஹரி மேகன் தம்பதியர் தொடர்ந்து ராஜ குடும்பத்தை அவமதித்து வந்த நிலையில், அவர்களுக்கு ராஜ அரண்மனையில் கொடுக்கப்பட்டுள்ள வீட்டை காலி செய்ய உத்தரவிட்டுள்ளார் மன்னர். Image: Getty Images மன்னரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஹரி மேகன் தரப்பிலிருந்து எப்படி பதில் வருமோ என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், ’டோண்ட் … Read more

‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ : சென்னை உயர்நீதிமன்ற படியேறிய குட்டி யானை ‘அம்மு’வின் கதை

தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் சரணாலயத்தில் எடுக்கப்பட்ட ‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படத்திற்கு சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. 40 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம் முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் யானைகளை பரமாரித்து வரும் பொம்மன் – பெள்ளி தம்பதியுடன் அவர்கள் வளர்த்த ரகு மற்றும் அம்மு என்ற இரண்டு யானைக் குட்டிகளும் இடம் பெற்றுள்ளது. கன்றை ஈன்ற தாய் யானைகள் சில நேரங்களில் தான் … Read more

ஈரோடு, நாமக்கல், சேலத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது

சென்னை: ஈரோடு, நாமக்கல், சேலத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாமக்கல், சேலத்தில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட், ஈரோட்டில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

உள்துறை அமைச்சகத்தில் நீட் மசோதா உள்ளது: ஜனாதிபதி தகவல்| Ministry of Home Affairs has NEET bill: President Dravupati Murmu informs

புதுடில்லி: நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது என ஜனாதிபதி திரவுபதி முர்மு தகவல் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கக்கோரி வெங்கடேசன் எம்.பி. ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதிலளித்து கூறியிருப்பதாவது: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரிய சட்டமசோதா, மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைகாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதுடில்லி: நீட் விலக்கு மசோதா … Read more

நீட் விலக்கு மசோதா – ஜனாதிபதி திரவுபதி முர்மு விளக்கம்

புதுடெல்லி, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டசபையில் செப்டம்பர் மாதம் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு நீட் விலக்கு மசோதாவை கவர்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். அதனை தொடர்ந்து நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கக்கோரி … Read more

பொதுவெளியில் சரியாக ஆடை அணியவில்லையென ஆத்திரம்; மனைவியைக் கொன்ற கணவன் – உ.பி அதிர்ச்சி!

உத்தரப்பிரதேசத்தில், பொதுவெளியில் சரியாக உடை அணியவில்லை என மனைவியைக் கணவன் கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, கொலைசெய்யப்பட்ட நபர் சப்னா என்றும், கொலைசெய்த நபர் மோஹித் குமார் என்றும் தெரியவந்திருக்கிறது. மனைவியைக் கொலைசெய்த கணவன் காஜிபூர் கிராமத்தில் வசித்த இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகனும் இருக்கிறார். மேலும் சப்னாவுக்கும், மோஹித் குமாருக்கும் அடிக்கடி சண்டை வரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம், சப்னாவுக்கும், மோஹித் குமாருக்கும் … Read more