மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோடை வசந்த உற்சவ விழா மார்ச் 27-ல் தொடக்கம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோடை வசந்த உற்சவ விழா வரும் 27-ல் தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்வாக பங்குனி உத்திரம் சாமி புறப்பாடு ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உற்சவம் நடக்கும் நாட்களில் அம்மன், சுவாமிக்கு தங்கரத உலா, உபய திருக்கல்யாணம் பதிவு செய்யப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை மிரட்டலுக்கு திமுக பயப்படாது: ஆர்.எஸ்.பாரதி பேச்சு| DMK not afraid of Annamalai threat: RS Bharati speech

தூத்துக்குடி: ‛திமுக.,வினர் மிசாவை சந்தித்தவர்கள், சர்காரியா கமிஷனையே தவிடுப்பொடியாக்கியவர்கள்; அண்ணாமலையின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்’ என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசியதாவது: ஆணாய் பிறந்து வீணாய் போனவர் அண்ணாமலை. அவர் என்ன பேசுகிறார், எதற்கு பேசுகிறார் என்றே தெரியவில்லை. இருவக்கு எப்படி ஐ.பி.எஸ் … Read more

வெங்காய விலை குறைவு: மத்திய அரசே வெங்காய கொள்முதல் தொடங்கியது!

அதிக உற்பத்தி காரணமாக பல நேரங்களில் வெங்காய விலை குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். உற்பத்தி செய்த வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு சென்றால் போக்குவரத்து செலவுகூட கிடைக்காது என்ற நிலையில் சமீபத்தில் வயலிலேயே தீ வைத்து எரித்த சம்பவமும் நடைபெற்றது. வெங்காய கொள்முதல் வெங்காய விலை தொடர்ந்து சரிவு: மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியல்! விவசாயிகள் இவ்வாறு பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கேற்ப, குஜராத்தில் வெங்காயக் கொள்முதலைத் … Read more

தலைமறைவாவதைத் தவிர வழியில்லை: புதிய சட்டத்தால் உருவாகியுள்ள அச்சம் குறித்து கண்ணீர் விடும் இலங்கைத் தமிழர்கள் முதலானோர்…

சட்ட விரோத புலம்பெயர்வோருக்கு எதிராக பிரித்தானிய அரசு கொண்டுவர இருக்கும் சட்டம் புலம்பெயர்ந்தோரை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது. தலைமறைவாகும் புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவில் புகலிடம் கோரும் நோக்கில் வந்த சிலரை ஊடகவியலாளர்கள் சிலர் சந்தித்தனர். அப்போது, தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர் அவர்கள். இலங்கையிலிருந்து துன்புறுத்தலுக்கும் சித்திரவதைக்கும் தப்பி பிரித்தானியாவுக்கு வந்த Abinthan (21) என்பவர், பல முறை தான் புகலிடக்கோரிக்கை விண்ணப்பம் அளித்தும் தனது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாததால், தான் தான் உயிரைப் பணயம் வைத்து சிறு படகொன்றில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து … Read more

சேலத்தில் சோகம்: கடன் பிரச்சினையால் தம்பதிகள் தற்கொலை!

சேலம்: கடன் பிரச்னையால் கணவன், மனைவி தற்கொலை அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  சேலம் மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி பெயர் விஜயா. தங்கராஜ் ஐந்து ரோடு தொழில்பேட்டை பகுதியில் லேத் பட்டறை நடத்தி வருகிறார். கொரோனா தொற்று காலத்துக்கு பிறகு சரியான முறையில் தொழில் கிடைக்காத நிலையில், தனியாரிடம் கடன் வாங்கி, லேத் பட்டறையை விரிவாக்கம் செய்துள்ளார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு தொழில் நடைபெறாததால், வாங்கி கடனை … Read more

தென்தமிழக மாவட்டங்களில் மார்ச் 12,13,14-ல் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை:  மார்ச் 12, 13, 14-ல் தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

காஷ்மீர் குறித்து அமெரிக்க நாளிதழ் தலையங்கம்: இந்தியா கடும் கண்டனம்| “Indians Will Not Allow…”: Minister On The New York Times Op-Ed On Kashmir

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: காஷ்மீர் பற்றிய தகவல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அமெரிக்காவை சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்திக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பொய் மற்றும் கற்பனையான தகவல்களையும், இந்தியா குறித்து பொய் செய்திகளையும் பரப்பி வருவதாக குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவை சேர்ந்த நாளிதழ், இந்தியா குறித்து செய்தி வெளியிடும் போது நடுநிலையை கடைபிடிப்பதை நீண்ட நாட்களுக்கு … Read more

சென்னையை கட்டமைத்த மக்களை வெளியேற்றுவது தான் நீர்நிலை பாதுகாப்பா?

நீர், நிலம், காற்று ஆகியவை உலக உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானவை. ஆனால் இன்று சில பணக்காரர்களின் சுயநலத்துக்காக இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இயற்கை காக்கா குருவிக்கு கூட சொந்தமானது என்று பேசுபவர்கள் சக மனிதனுக்கும் சொந்தமானது என்பதை உணர்வதில்லை. நீர்நிலை ஆக்கிரமிப்புகளால் வெள்ளம், வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. வெள்ளம் வராமல் தடுப்பதற்கும், நீராதாரத்தை பாதுகாப்பதற்கும் அரசு முயற்சிகள் மேற்கொள்கிறது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர் விசாரணையில் உள்ளது. ஆனால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளாக கருதப்படுவது பெரும்பாலும் … Read more

ஏமாற்றமான முடிவு, ஆனால்..விரக்தியில் ரொனால்டோ வெளியிட்ட பதிவு

அல் நஸர் அணியின் தோல்விக்கு பின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, முடிவு ஏமாற்றம் தந்ததாக பதிவிட்டுள்ளார். முதலிடத்தை இழந்த அல் நஸர் நேற்று நடந்த அல் இட்டிஹாத் அணிக்கு எதிரான போட்டியில் அல் நஸர் அணி 0-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இதனால் அல் நஸர் அணியை விட ஒரு புள்ளி அதிகம் பெற்ற அல் இட்டிஹாத், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. தோல்வியால் விரக்தியடைந்த ரொனால்டோ, ஆடுகளத்தை விட்டு வெளியேறும்போது அங்கு கீழே கிடந்த தண்ணீர் … Read more

நாட்டை விட்டு வெளியேற ரூ.30 கோடி தருவதாக கேரள முதல்வர் சார்பில் மிரட்டல்! ஸ்வப்னா சுரேஷ் வைரல் வீடியோ…

திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில், சிக்கிய ஸ்வப்னா சுரேஷ், தனக்கு ரூ..30 கோடி கொடுத்து நாட்டை விட்டு வெளியேற கேரள முதல்வர் பினராயி விஜயன் தரப்பில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது என  தனது முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உள்ளார். இது பரபரபபை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலத்துக்கு ஐக்கியஅரபு அமிரகம் பெயரில் வந்த பார்சல்கள் மூலம்  30 கிலோ தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் கடந்த 2020ம் ஆண்டு … Read more