இனி தேவையில்லை.. இளவரசர் சார்லஸ்-க்கு சேவை செய்து வந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம்.. !

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகனான 73 வயதான சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராகியுள்ளார். இதற்கிடையில் இளவரசர் சார்லஸுக்கு காலம் காலமாக சேவை செய்து வந்த நூற்றுக்கணக்கான ஊழியர்களின் எதிர்காலம் இருளில் உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தி கார்டியன் அறிக்கையின் படி, செப்டம்பர் 8 அன்று ராணி எலிசபெத் மறைந்த பிறகு, டஜன் கணக்கான கிளாரன்ஸ் ஹவுஸ் ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முக்கிய மைல்கல்லை எட்டிய எஸ்பிஐ.. 3வது மிகப்பெரிய வங்கியாக … Read more

வேலூர்: நிழற்குடை கட்டி முடித்தும் பயனில்லை… சுட்டிக்காட்டிய விகடன்; நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்

வேலூர் மாவட்டத்தில் கணியம்பாடி வட்டாரத்திற்கு உட்பட்ட நெல்வாய், சாத்து மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பயணிகளின் வசதிக்காக புதிதாக பேருந்து நிறுத்த நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சாத்து மதுரை பகுதியில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைப்பதற்கு முன்பு, வேறு இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு வந்தன. ஆனால் அந்த இடங்களில் பேருந்து நிறுத்த நிழற்குடைகள் இல்லை. நிழற்குடைகள் அமைத்த பின்பு பேருந்துகள் அங்கு நிற்கும் என எதிர்பார்த்த பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம், புதிதாக அமைத்த நிழற்குடைகளுக்கு அருகில் பேருந்து … Read more

தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கு அனைத்து வசதிகளுடன் மறுவாழ்வு முகாம்!

இலங்கை தமிழர்களுக்காக அனைத்து வசதிகளுடன் திண்டுக்கல்லில் கட்டப்பட்ட மறுவாழ்வு முகாம் காணொளி மூலம் திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மாவட்டம் திண்டுக்கல்லில் இலங்கை தமிழர்களுக்காக அனைத்து வசதிகளுடன் மறுவாழ்வு முகாம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள முகாம்களை ஒருங்கிணைத்து, இலங்கை தமிழர்களுக்காக வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 17.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்புகளில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. தலா 300 சதுர அடியில் … Read more

மோகனன் பள்ளி மதமாற்றம் விவகாரம்: ஆளுநரிடம் அறிக்கை சமர்ப்பித்தது குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்!

சென்னை: ராயப்பேட்டை சிஎஸ்ஐ மோகனன் பள்ளி மதமாற்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை என தமிழகஅரசு தெரிவித்துள்ள நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்திய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.  85பக்கம் கொண்ட அறிக்கையியில் மதமாற்றம் தொடர் பான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் சி.எஸ்.ஐ. மோகனன் மகளிர் பள்ளி விடுதியில், தங்கி படித்துவரும் ஏழை மாணாக்கர்களிடம் மதமாற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டு வருவதாக புகார் … Read more

அக்.2 முதல் காஷ்மீரில் முதல் முறையாக மின்சார ரயில் சேவை

ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீரில் முதல் முறையாக மின்சார ரயில் சேவை வரும் காந்தி ஜெயந்தி (அக்.2) அன்று முதல் இயக்கப்படும் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. 137 கி.மீ நீளமுள்ள பனிஹால்-பாரமுலடலா வரை இயக்கப்படுகிறது.

கோவா காங்கிரஸ் கூண்டோடு காலி! சக்சஸானது ஆபரேஷன் தாமரை- 11 எம்.எல்.ஏக்களில் 8 பேர் பாஜகவுக்கு தாவல்!

India oi-Mathivanan Maran பனாஜி: கோவா மாநில காங்கிரஸ் கட்சி கூண்டோடு காலியாகிவிட்டது. அம்மாநிலத்தில் 11 எம்.எல்.ஏக்களில் 8 பேர் பாஜகவுக்கு தாவிவிட்டனர். காங்கிரஸ் கட்சி செல்வாக்கு பெற்றுள்ள மாநிலங்களில் கோவாவும் ஒன்று. ஆனால் உட்கட்சி மோதல்களால் கோவாவில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. காங்கிரஸ் கோஷ்டி பூசல்களால் ஒவ்வொரு தேர்தலின் போதும் பாஜகதான் ஆதாயம் அடைந்து வருகிறது. அண்மையில் கோவா மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றது. கோவா சட்டசபை நிலவரம் 40 இடங்களைக் கொண்ட … Read more

பெண்ணுக்கு கத்தி குத்து வாலிபர் தற்கொலை முயற்சி| Dinamalar

ராம்நகர் : காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர், தானும் கழுத்தை அறுத்து, தற்கொலைக்கு முயற்சித்தார்.ராம்நகர், சென்னபட்டணாவின், கோட்டை லே — அவுட்டின், வரதராஜ சுவாமி கோவில் அருகில் வசிக்கும் மேகனா, 20 என்ற பெண், மொபைல் போன் ஷோ ரூம் ஒன்றில் பணியாற்றுகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன், இதே ஷோரூமில் வெங்கடேஷ், 27, பணியாற்றினார். மேகனாவை ஒரு தலையாக காதலித்த வெங்கடேஷ், பல முறை தன் காதலை வெளிப்படுத்தினார். அவர் மறுத்தும் விடாமல் தொந்தரவு … Read more

முக்கிய மைல்கல்லை எட்டிய எஸ்பிஐ.. 3வது மிகப்பெரிய வங்கியாக ஏற்றம்.. எப்படி தெரியுமா?

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நாட்டின் மூன்றாவது பெரிய கடன் வழங்குனராக உள்ளது. இதன் சந்தை மதிப்பானது முதன் முறையாக 5 டிரில்லியன் டாலரை கடந்துள்ளது. இது நடப்பு ஆண்டில் இதுவரையில் 22% ஏற்றம் கண்ட பிறகு இந்த அளவுக்கு சந்தை மதிப்பானது ஏற்றம் கண்டுள்ளது. இந்த பங்கு விலையானது கடந்த அமர்வில் 1.3% ஏற்றம் கண்டு, 564.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது. தொடர்ச்சியாக கடந்த 5 அமர்வுகளாகவே ஏற்றம் கண்டு வருகின்றது. இந்த கால கட்டத்தில் மட்டும் … Read more

நொடியில் நொறுங்கிய 20 வருட அனுபவம்… ராஜநாகம் தீண்டி `பாம்பு மனிதர்' பலி!

ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் திவாரி (45). இவர் கடந்த 20 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் தொழிலைச் செய்து வருகிறார். பாம்பு மனிதர் என்று அனைவராலும் பிரபலமாக அறியப்படும் வினோத் திவாரி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிடிபடும் பாம்புகளை காடுகளுக்குள் விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த நிலையில், கொஹமெடி பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் ராஜநாகம் ஒன்று புகுந்துவிட்டதாக வினோத் திவாரிக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, அவர் அந்தப் பகுதிக்கு விரைந்தார். கடைக்குள் புகுந்து ராஜநாகத்தைப் … Read more

தென் கொரியாவைச் சேர்ந்தவரை இந்திய நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற அனுமதிக்கலாமா ? கருத்து கேட்டு இந்திய பார் கவுன்சில் கடிதம்

தென்கொரியாவைச் சேர்ந்த டேயோங் ஜங் இந்திய பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்ய டேயோங் ஜங் மனு செய்துள்ளார். டேயோங் ஜங் மற்றும் டெல்லி பார் கவுன்சில் இடையே டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் சட்டப்போராட்டத்தை அடுத்து மாநில பார் கவுன்சில்களின் கருத்தை அறிய இந்திய பார் கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது. தென்கொரிய பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞர் பட்டம்பெறும் இந்திய குடிமகன் அந்நாட்டு நீதிமன்றத்தில் பணியாற்ற அனுமதி வழங்கப்படுகிறது, அதனால் … Read more