மில்லர், திவாட்டியா அதிரடி – பெங்களூருவை வீழ்த்தியது குஜராத்

மும்பை: 15-வது ஐ.பி.எல் தொடரில் இன்று மதியம் மும்பையில் நடைபெற்ற 43-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.  அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 170 ரன்கள் எடுத்தது. விராட் கோலி, ரஜத் படிதார் ஆகியோர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். கடைசி கட்டத்தில் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 33 … Read more

கோவிட் கால பொருளாதார இழப்பை இந்தியா ஈடு செய்ய 13 ஆண்டுகள் ஆகலாம்: ரிசர்வ் வங்கி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கோவிட் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடு செய்ய இந்தியாவுக்கு 13 ஆண்டுகள் ஆகலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி மேலும் கூறியதாவது: இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் கோவிட் பரவல் காரணமாக ரூ 52.5 லட்சம் கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2020-21ம் ஆண்டில் ரூ19.1 லட்சம் கோடியும், 2021-22ம் ஆண்டில் ரூ17.1 லட்சம் கோடியும், 2022-23ம் ஆண்டில் ரூ16.4 லட்சம் … Read more

நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும்..!! – பிரதமர் மோடி உரை

புதுடெல்லி,  முதல்-மந்திரிகள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது வழக்கம். கடைசியாக, 2016-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந் தேதி இம்மாநாடு நடந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதல்-மந்திரிகளின் ஒருங்கிணைந்த மாநாட்டை டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப்போன இந்த மாநாடு 6 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது.   … Read more

ரூ.52 லட்சம் கோடி இழப்பு.. 2035 வரையில் மீண்டு வர முடியாது.. ரிசர்வ் வங்கி ரிப்போர்ட்..!

கொரோனா தொற்று மற்றும் அதன் மூலம் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் போதாது என்று தான் சொல்ல வேண்டும். வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள், ஏழை நாடுகள் என எவ்விதமான வித்தியாசமின்றி அனைத்து நாடுகளையும் வாட்டி வதைத்துள்ளது. கொரோனா தொற்று மூலம் இந்தியாவின் வர்த்தகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வருமானம், மக்களின் உடல்நலம் என அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது. இந்தப் பாதிப்பில் இருந்து இந்தியா எப்போது முழுமையாக வெளியேறும் என்பது குறித்து … Read more

சென்னை: சாப்பிடச் சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை – மதுபோதையில் சிக்கிய இளைஞர்கள்

சென்னைன தி.நகர் காவல் மாவட்டத்தில் குடும்பத்தினருடன் 14 வயது சிறுமி வசித்து வருகிறாள். இவளின் அம்மா வனஜா (44). இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். வழக்கம் போல 29.4.2022-ம் தேதி வனஜா தன்னுடைய மகளை அழைத்துக் கொண்டு வேலைக்குச் சென்றார். மதியம் சாப்பிடுவதற்காக மகளை மட்டும் தனியாக வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். வீட்டுக்குச் சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வரவில்லை. அதனால் மகளைத் தேடி வனஜா வீட்டுக்குச் சென்றார். பாலியல் தொல்லை அப்போது வீட்டில் மகள் … Read more

கனடாவை விட்டு அமைதியாக வெளியேறி வரும் புலம்பெயர்ந்தோர்: அதிகம் பேசப்படாத அதிரவைக்கும் ஒரு செய்தி

கனவுகளுடன் கனடாவுக்கு புலம்பெயரும் பலர், கனடாவிலிருந்து அமைதியாக வெளியேறிக்கொண்டிருப்பதாக அதிரவைக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்தியர்களான மன்பிரீத் சிங் (Manpreet Singh) மற்றும் அவரது மனைவியான ஹர்மீத் சிங் (Harmeet Kaur) ஆகியோர், இந்தியாவிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த புதிதில், புதிதாக கனடாவுக்கு வந்தவர்கள் என்ற வகையில் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, தங்களைப் போலவே புதிதாக வருபவர்களுக்கு உதவும் வகையில், ஒரு யூடியூப் சேனலைத் துவக்கி, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கியுள்ளார்கள் அவர்கள். அரை மில்லியன் சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட … Read more

குறைந்த பட்ச ஜிஎஸ்டி 8சதவிகிதமாக உயர்வு? மே முதல் வாரத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

டெல்லி: 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மே மாதம் முதல் வாரத்தில் நடக்கலாம் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில், ஜிஎஸ்டி சதவிகிதத்தை குறைந்த பட்சம் 8 சதவிகிதமாக அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மத்திய நியமைச்சர் தலைமையில், மே மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்னும் ஓரிரு நாளில் … Read more

திண்டுக்கல் அரசு விழா- ரூ.40.45 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, ரூ.40.45 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகளை திறந்து வைத்தார். மேலும், ரூ.206.54 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் வளர்ச்சியில் உலக அளவில் தமிழகம் முன்னிலை பெறுவதற்காக தொடர்ந்து பாடுபடுவதாக தெரிவித்தார்.  தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வளர்ச்சித் … Read more

நடிகர் ரஜினிகாந்துக்கு உத்தரவிடக்கோரி சினிமா பைனான்சியர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு உத்தரவிடக்கோரி சினிமா பைனான்சியர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பெயரை தவறாக பயன்படுத்திய கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ரஜினிக்கு உத்தரவிடக்கோரி போத்ரா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் குறைக்க கோர்ட் பரிந்துரை| Dinamalar

புது டில்லி: பல் மருத்துவக் கல்லுாரிகளில், 9,000க்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருப்பதால், மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வின் ‘கட் ஆப்’ மதிப்பெண்ணை குறைப்பது குறித்து பரிசீலிக்குமாறு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நாட்டின் பல் மருத்துவக் கல்லுாரிகளில், ‘நீட்’ தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில், ‘கட் ஆப்’ மதிப்பெண் அதிகமாக இருப்பதால், 9,000க்கும் மேற்பட்ட காலி இடங்கள் உள்ளன.எனவே, கட் ஆப் மதிப்பெண்ணை குறைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, நீட் … Read more