மைதானத்தில் எல்லா பக்கமும் சிக்சர்களை பறக்கவிட்ட 2 வீரர்கள்! மிரண்டு நின்ற நடராஜன் உள்ளிட்ட பவுலர்கள் வீடியோ

ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி வெற்றிக்கு காரணமாக இருந்த ரஷித்கான் மற்றும் ராகுல் திவேட்டியா ஆகியோர் சிக்சர்களாக விளாசி எதிரணி பவுலர்களை நிலைகுலைய வைத்த வீடியோ வெளியாகியுள்ளது. நேற்று நடைபெற்ற 40வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிய நிலையில் குஜராத் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Fitting Finish🔥What A Thriller⚡Exhilarating Knock From GT’s Soldiers @rashidkhan_19 & @rahultewatia02 💪#RashidKhan #Rahultewatia #GTvSRH … Read more

28/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,303 பேருக்கு கொரோனா பாதிப்பு 2,563 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன் 2,563 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு 4ஆயிரத்தை கடந்துள்ளது.  தினசரி பாதிப்பு விகிதம் 0.66% ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணி வரையிலான நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து தகவல்  வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில்  புதிதாக மேலும்  3,303 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை … Read more

11 ஆண்டுகளுக்கு பிறகு மாவட்ட செயலாளர் பதவியை விட்டுக்கொடுத்த எடப்பாடி பழனிசாமி

சேலம்: சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக கடந்த 11 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி இருந்தார். அப்போது 2011 முதல் 2016 வரை நடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்தார். பின்னர் 2016ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை பிடித்தது. அப்போது அதே அமைச்சர் பதவிகளில் நீடித்தார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அப்போதும் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இருந்த அவர் … Read more

நெல்லை – தென்காசி 2 வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது: பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பதில்

சென்னை: நெல்லை – தென்காசி 2 வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், நெல்லை – தென்காசி 4 வழிச்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென்காசியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.

பெட்ரோல் விலையை தமிழகம் குறைக்கவில்லை: மோடி வருத்தம்| Dinamalar

புதுடில்லி-”பெட்ரோல், டீசல் மீதான, ‘வாட்’ எனப்படும் மதிப்புக்கூட்டு வரியை குறைக்குமாறு மத்திய அரசு ஆறு மாதங்களுக்கு முன் கோரிக்கை விடுத்தும், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வரியை குறைக்காமல் சாமானிய மக்களுக்கு அநீதி இழைக்கின்றன. இது மக்கள் மீது மிகப் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தி உள்ளதோடு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கும் காரணமாக உள்ளது,” என, முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்தார்.நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் … Read more

தேவையிருந்தும் சப்ளை செய்ய முடியவில்லை.. 20% உற்பத்தி பாதிக்கலாம்.. பஜாஜ் ஆட்டோ வேதனை!

பொருளாதார மந்தம், பணமதிப்பிழப்பு, கொரோனா இப்படி அடுத்தடுத்த காரணிகள் ஆட்டோமொபைல் துறையை பதம் பார்த்த நிலையில், தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் சிப் பற்றாக்குறையானது இன்னும் மோசமாக்கியுள்ளது. முந்தைய காலகட்டங்களில் தேவையிலும் சரிவு இருந்த நிலையில் அது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் மேற்கண்ட காரணிகளில் இருந்து மீண்டு வந்த ஆட்டோமொபைல் துறையானது, தேவையிருந்தும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றது. உற்பத்தி பாதிக்கும் சீனாவில் பரவி வரும் கொரோனா, உக்ரைன் ரஷ்யா பிரச்சனையால் சப்ளை சங்கிலியில் ஏற்பட்டுள்ள … Read more

Doctor Vikatan: நடக்கும்போது மூச்சுவிடுவதில் சிரமம்; என்னவாக இருக்கும்?

என் வயது 63. காலையில் எழுந்ததும் கொஞ்ச நேரம் நடந்தாலும் மூச்சுவிட முடியாமல் போவது ஏன்? எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உண்டு. – மஸ்தான் முகமது ஹுசேன் (விகடன் இணையத்திலிருந்து) மருத்துவர் சஃபி சுலைமான் பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி. “காலையில் எழுந்ததும் சிறிது நேரம் நடந்தாலே மூச்சுவிட முடியவில்லை என்ற உங்கள் பிரச்னைக்கு உங்கள் உடல்நலம் குறித்த மற்ற விவரங்கள் தெரியாமல் எதையும் விளக்கமாகச் சொல்ல முடியாது. சிகரெட் பழக்கம் உண்டு … Read more

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 2014 ஆம் ஆண்டில் இருந்ததுபோல குறையுங்கள்! பிடிஆர் பதிலடி

சென்னை: பெட்ரோல், டீசல் மீது உயர்த்தப்பட்ட கலால் வரியை 2014 ஆம் ஆண்டில் இருந்ததுபோல குறையுங்கள் என பிரதமர் மோடிக்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில்  பெட்ரோல் டீசல் விலை ரூ.100ஐ தாண்டி போய்க்கொண்டிருக்கிறது. இதனால், சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மாநில முதல்வர்களுடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக  பிரதமர் மோடி காணொளி வாயிலாக நடத்திய ஆலோசனையின்போது, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்குமாறு தமிழகம் … Read more

1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

புதுச்சேரி: நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா வின் 2-வது அலை பரவத்தொடங்கியது. இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கவும், அவசியம் ஏற்பட்டால் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை தாக்கம் குறைந்த பின்னர் கடந்த செப்டம்பர் 1-ந் தேதி 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் … Read more

எதிர்க்கட்சிகள் உருப்படியாக ஏதாவது சொல்ல வேண்டும்… ஆக்கப்பூர்வமாக சொல்வது நல்லது! : சசிகலா

தஞ்சை : தஞ்சாவூர் களிமேட்டில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினரை நள்ளிரவில் நேரில் சென்று சந்தித்து வி.கே.சசிகலா ஆறுதல் கூறினார். பிறகு பேட்டி அளித்த அவர், இந்த விபத்திற்கு ஆளுங்கட்சியை குறைக்கூறகூடாது என்றார். எதிர்க்கட்சிகள் என்பதால் எதையாவது அவர்கள் கூறிக் கொண்டு தான் இருப்பார்கள் என்று குறிப்பிட்டார்.