தலைப்பு செய்திகள்
கைவிடப்படும் அமைதிப் பேச்சுவார்த்தைகள்: உக்ரைன் தொடர்பில் ரஷ்யாவின் பகீர் திட்டம் அம்பலம்
உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை கைவிட்டு, போர் முடிவதற்குள் தங்களால் இயன்ற நிலப்பரப்பைக் கைப்பற்ற ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திட்டமிட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரேனிய துருப்புகளால் ரஷ்யாவின் மாஸ்க்வா போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது விளாடிமிர் புடினை அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, உக்ரைன் உடனான பேச்சு`வார்த்தைகள் இனி தொடர்வதில் பொருளில்லை என அவர் முடிவுக்கு வந்துள்ளதாக ரஷ்ய தரப்பு நம்புகிறது. மேலும், உக்ரைன் போரில் வெற்றியாளராக திரும்பவே புடின் விரும்புவதாகவும், உக்ரேன் தொடர்பில் உலக நாடுகளுக்கு முன்பு … Read more
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் – டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு! சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு…
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 50000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் – டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவையில் இன்று மின்சாரம்,மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை,திறன் மேம்பாட்டு துறை,தொழிலாளர் நலன் ஆகிய துறைகளின் மானிய கோரிக்கை களின் மீதான விவாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழகத்தில் மேலும் 50,000 விவசாயி களுக்கு இலவச மின்சாரம் உள்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை … Read more
ரியான் பராக், குல்தீப் சென் அசத்தல் – பெங்களூருவை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி
புனே: ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய ரியான் பராக் அரை சதமடித்து 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 27 ரன்கள் எடுத்தார். பெங்களூர் சார்பில் சிராஜ், ஹசில்வுட், ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 145 … Read more
பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதாவை காங்கிரஸ் வரவேற்கிறது : கே.எஸ் அழகிரி
சென்னை: பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதை காங்கிரஸ் வரவேற்கிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கூறினார். ஆளுநரின் ஜனநாயக விரோதப் போக்கை முற்றிலும் உணர்ந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த துணிவு மிக்க நடவடிக்கையை பாராட்டுகிறது என குறிப்பிட்டார்.
தீயில் கருகி கணவன், மனைவி பலி; மகள் மருத்துவமனையில் அனுமதி| Dinamalar
மூணாறு : கேரளா இடுக்கி மாவட்டம் வண்டன்மேடு அருகே புற்றடியில் வீட்டினுள் தீயில் கருகி ரவீந்திரன் 54, மனைவி உஷா 45, இறந்தனர். மகள் பிளஸ்-2 மாணவி ஸ்ரீதன்யா 17, பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அனக்கரையில் வியாபாரம் செய்து வந்த ரவீந்திரன் அரசு வழங்கிய நிதியில் புற்றடியில் வீடு கட்டுவதால் அருகில் சிறிய அறையில் மனைவி, மகளுடன் வசித்தார். நேற்று முன் தினம் நள்ளிரவு 1:00 மணிக்கு பலத்த தீக்காயங்களுடன் ஸ்ரீதன்யா வீட்டின் முற்றத்தில் அலறினார். அருகில் … Read more
"டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெறத் தயாராக இருக்கிறார்!" – நடராஜனைப் பற்றி சுனில் கவாஸ்கர்
2022-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் உற்சாகத்துடன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் பலரும் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி வரும் நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரின் கவனத்தை ஈர்த்துள்ளார். யார்க்கர் பந்து வீச்சில் கைதேர்ந்த நடராஜன் தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் சார்பாக விளையாடி வருகிறார். அவரின் சிறப்பான ஆட்டத்தைக் கண்ட சுனில் கவாஸ்கர் அவரைப் புகழ்ந்து டி20 உலகக்கோப்பை அணியில் நடராஜன் இடம் பிடிப்பார் என்றும் … Read more
அனைவருக்கும் பயனுள்ள பாட்டி வைத்தியம்..! இதோ உங்களுக்காக
பொதுவாக அந்தகாலத்தில் நமது முன்னோர்கள் சிறுவியதி வந்தால் கூட கைத்தியங்களை கொண்டு தான் சரி செய்தனர். அந்தவகையில் நம் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம். துளசி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் தொண்டை பிரச்சனைகள் குணமாகும். இவ்வாறு குடிக்க பிடிக்காதவர்களுக்கு துளசி இலையை மட்டும் வெறும் வாயில் மென்று சாப்பிடலாம். தினமும் சாப்பிட்ட பின் தண்ணீருடன் … Read more
கொரோனா அதிகரிப்பு குறித்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை..!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாளை மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 2,483 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 1,399பேர் பலியாகி உள்ளனர். இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,62,569 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல இதுவரை 1,87,95,76,423 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி உள்பட பல மாநிலங்களில் தொற்று … Read more
மைலேஜ் சரிவர கொடுக்காததால் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எரித்த உரிமையாளர்
ஆம்பூர்: ஆம்பூர் அருகே மைலேஜ் சரிவர கொடுக்காததால் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அதன் உரிமையாளர் பெட்ரோல் ஏற்றி எரித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சாமியார்மடத்தைச் சேர்ந்தவர் பிருத்விராஜ். பிசியோதெரபி மருத்துவரான இவர், கடந்த செப்டம்பர் மாதம் 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கி உள்ளார். வாகனத்தை வாங்கிய நாள் முதல் 4 முறைக்குமேல் பழுதாகி நின்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆம்பூர் நோக்கி சென்றபோது, சார்ஜ் இல்லாமல் ஸ்கூட்டர் நின்றதாகவும் கூறப்படுகிறது. ஸ்கூட்டரை வாங்கும்போது … Read more