லடாக்| எல்லை கிராமத்தில் மக்களுடன் தங்கிய மத்திய அமைச்சர்

புதுடெல்லி: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், லடாக்கில் உள்ள எல்லையோர கிராமத்தில் மக்களோடு ஒரு இரவு தங்கி அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார். நாட்டின் எல்லையோர கிராமங்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தம் நோக்கில் துடிப்பான கிராமங்களுக்கான திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஆயிரத்து 400 எல்லையோர கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வலிமையான எல்லையோர கிராமங்கள்; வலிமையான நாடு எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த கிராமங்களை … Read more

இந்திய மாணவருக்கு தங்கள் விமானங்களில் பயணம் செய்ய தடை விதித்தது அமெரிக்கன் ஏர்லைன்ஸ்

நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் சக பயணி மீது மதுபோதையில்  சிறுநீர் கழித்த விவகாரத்தில் இந்திய மாணவருக்கு தங்கள் விமானங்களில் பயணம் செய்ய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தடை விதித்தது. இதுகுறித்து அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஆர்யா வோஹ்ரா என்ற இந்திய மாணவர் அதிக போதையில் இருந்ததாகவும், விமானப் பணியாளர்களின் அறிவுரைகளை கேட்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து விமானப் பணியாளர்கள் மற்றும் விமானத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தை … Read more

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளதால் பரபரப்பு

பாட்னா: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாட்னாவில் உள்ள லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளனர்.

மார்ச் 6, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 6) சவரனுக்கு ரூ.8 குறைந்து, ரூ.42,000-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. கடந்த இரண்டு வாரங்களாக தங்கம் விலை தொடர்ந்து இறங்கி வந்தது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.5,250-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.42,000-க்கு விற்பனையாகிறது. 24 … Read more

இந்திய நீதித்துறை, ஜனநாயகம் பிரச்னையில் இருப்பதாக ராகுல் காந்தி பொய் குற்றச்சாட்டு: கிரண் ரிஜ்ஜூ

இந்திய நீதித்துறையும், ஜனநாயகமும் பிரச்சினையில் இருப்பதாக வெளியுலகுக்கு ராகுல் காந்தி பொய்யான குற்றச்சாட்டு தெரிவித்து வருவதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ புகார் தெரிவித்துள்ளார். ஓடிசா மாநிலம் புவனேசுவரத்தில் பேசிய அவர், இந்திய நீதித்துறையை யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதும், நீதிபதிகளின் அறிவுத்திறனை பொது ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்பதுமே உண்மைநிலை என்றும் கூறினார்.  இந்தியாவின் புகழைக் கெடுக்கும் நோக்கில்,  நாட்டின் ஜனநாயகம் குறித்து வதந்திகளைப் பரப்பும் நோக்கில் எடுக்கப்படும் எந்த முயற்சியும் வெற்றி … Read more

ஐதராபாத்தில் சண்டைக்காட்சி படப்பிடிப்பின்போது நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம்

மும்பை: ஐதராபாத்தில் நடைபெற்ற சண்டைக்காட்சி படப்பிடிப்பின்போது நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பில் காயமடைந்ததால் மருத்துவர்கள் அறிவுரைப்படி வீடு திரும்பி விட்டதாக நடிகர் அமிதாப் பச்சன் டிவீட் செய்துள்ளார்.

கடலில் கூடுகிறது இந்திய கடற்படைத் தளபதிகள் மாநாடு

புதுடெல்லி: இந்திய கடற்படைத் தளபதிகளின் மாநாடு, நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் இன்று தொடங்குகிறது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ”2023-ம் ஆண்டுக்கான கடற்படைத் தளபதிகள் மாநாட்டின் முதல் கட்டம் இன்று தொடங்குகிறது. கடற்படைத் தளபதிகள் மட்டத்தில் ராணுவ-பாதுகாப்பு உத்தி போன்ற விவகாரங்கள் குறித்து கலந்துரையாடவும், அரசின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவும் இந்த மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் புதுமையாக, கமாண்டர்கள் மாநாட்டின் முதல் கட்டம் கடலில், … Read more

கப்பலில் இருந்து ஏவி பிரமோஸ் ஏவுகணை சோதனை.. இலக்கை மிகத் துல்லியமாக தாக்கி அழித்ததாக இந்திய கடற்படை தகவல்

கப்பலில் இருந்து ஏவி பிரமோஸ் ஏவுகணையை இந்திய கடற்படை சோதித்துள்ளது.  இந்தியா, ரஸ்யா கூட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்ட அந்த ஏவுகணை, உலகில் உள்ள மிகவும் அதிவேக ஏவுகணைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அந்த ஏவுகணையை, அரபிக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த போர் கப்பலில் இருந்து ஏவி கடற்படை சோதித்தது. அந்த ஏவுகணை திட்டமிட்டபடி தனது இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.   Source link

விவசாயிகளின் வாழ்வை நானோ யூரியா எளிதாக்கும்: பிரதமர் மோடி டிவிட்

புதுடெல்லி: இந்தியாவின் முதன்மை உர கூட்டுறவு நிறுவனமான இப்கோ நானோ யூரியாவை கடந்த 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதனை சந்தையில் விற்பதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதாக ஒன்றிய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவரது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில், “நாட்டிலுள்ள விவசாயிகளின் வாழ்வில்   மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் நானோ யூரியா ஒரு பகுதியாகும். இந்த நானோ யூரியா விவசாயிகளின் வாழ்வை எளிதாக்கும்,’’ எனக் … Read more

டிஜே செய்த செயலால் திருமண வீடு துக்க வீடாக மாறிய சோகம்..!!

பீகார் மாநிலம் சீதாமர்ஹியில் உள்ள மணிந்தர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திர குமார் (22). இவருக்குப் புதன்கிழமை அன்று இந்தர்வா கிராமத்தில் திருமணம் நடந்துள்ளது. அங்கு அப்போது அனைவரும் மகிழ்ச்சியாகவே இருந்தனர். மணமகனின்முகம் மட்டும் இருக்கமாகவே இருந்தது. அங்குத் திருமணத்திற்காக டிஜே இசை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் உரத்த சத்தத்தில் பாடல்களை இசைக்கத் தொடங்கியதால் மணமகனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இதனால் பாடல்களை நிறுத்துமாறு அவர் பல முறை சொல்லியுள்ளார். குறைந்தது சத்தத்தைக் குறைக்குமாறு கேட்டுக் கொண்டார். … Read more