பாலக்காடு பகவதி அம்மன் கோயில் தாலப்பொலி திருவிழா: 15 யானைகளுடன் பஞ்சவாத்தியம்

பாலக்காடு: பாலக்காடு அருகே எளவாதுக்கல் பகவதி அம்மன் கோயில் தாலப்பொலி திருவிழா வெகுவிமர்சையாக நேற்று நடந்தது. கேரள மாநிலம் பாலக்காடு திருத்தாலா அருகே எளவாதுக்கல் பகவதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் தாலப்பொலி திருவிழா வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்றது. கோயில் வளாக மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் 15 யானைகளுடன் பஞ்சவாத்தியம் முழங்க உலா வந்த அம்மனை தரிசனம் செய்தனர். அம்மன் ஊர்வலத்தில் கேரளாவின் பாரம்பரியமான கலைஞர்களின் நாட்டியங்கள், பூக்காவடி, தையம், குதிரை, காளை உருவப்பொம்மைகள் ஆகியவை … Read more

இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு ஜாக்பாட், முக்கிய தகவல் வெளியீடு

Free Ration Update: ஹோலிக்கு முன்னதாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் மீண்டும் ஒருமுறை ரேஷன் வழங்கப்படும். மேலும் இந்த ரேஷன் விநியோகம் பிப்ரவரி 20 முதல் தொடங்கி பிப்ரவரி 28 வரை நடைபெறும். இதனுடன், NFSA இன் கீழ் இந்த ஆண்டு முழுவதும் அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் விநியோகமும் மீண்டும் வழங்கப்படும். ஏழை மக்களின் நிதிச் சுமையைக் குறைக்க, NFSA-ன் கீழ் ஆண்டு முழுவதும் … Read more

சென்னை விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: ஐதராபாத்தில் பரபரப்பு

ஐதராபாத்: ஐதராபாத்தில் இருந்து ெசன்னை புறப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து, அந்த விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று சென்னை புறப்பட தயாரான விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக, ஐதராபாத் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. வெடிகுண்டு மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து, அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் விமான நிலைய பாதுகாப்புப் படையினர் வெளியேற்றினர். தொடர்ந்து அந்த விமானத்தை சோதனை … Read more

“இந்தியா குறித்த உலகின் பார்வையை கரோனா தடுப்பூசி விநியோகம் மாற்றிவிட்டது” – ஜெய்சங்கர்

புதுடெல்லி: உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கிய செயல், இந்தியா குறித்த உலகின் பார்வையை மாற்றிவிட்டது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள ஜெய்சங்கர், அதில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதன் விவரம்: ”சர்வதேச அளவில் இன்று இந்தியாவின் நிலை மிக உயர்ந்ததாக, மிக வலிமையானதாக உள்ளது. முன்பைக் காட்டிலும் தற்போது நமது சிந்தனையிலும் செயலிலும் தெளிவு கூடி இருக்கிறது. சர்வதேச அளவிலான மிகப் பெரிய பிரச்சினைகளில் இந்தியாவின் கருத்து … Read more

CCTV Video: 5 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்கள்! கண்ணீர் வரவழைக்கும் வீடியோ!

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 5 வயது சிறுவன் தெருநாய்களால் கடித்து குதறப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிறுவனின் தந்தையான செக்யூரிட்டியாக பணியாற்றி வரும் கங்காதர், தனது மகனை தனது பணியிடத்திற்கு அழைத்துச் சென்றபோது, தனியாக சுற்றித் திரிந்த சிறுவனை நாய்கள் தாக்கின. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், சம்பவம் தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுவன் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு … Read more

வினாத்தாள் வெளியானதை அடுத்து இமாச்சல பிரதேச அரசு பணியாளர் தேர்வாணையத்தை கலைத்து அம்மாநில அரசு

சிம்லா: இமாச்சல பிரதேச அரசு பணியாளர் தேர்வாணையத்தை அம்மாநில அரசு கலைத்தது. அரசு பணியாளர்கள் தேர்வு வினாத்தாள் வெளியானதை அடுத்து தேர்வாணையத்தை கலைத்து இமாச்சல அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  புகாருக்குள்ளான தேர்வாணைய ஊழியர்கள் மீது விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் சுக்விந்தர் அறிவித்துள்ளார். JOA (IT) தாள் ரூ. 2.5 லட்சத்திற்கு விற்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் விஜிலென்ஸ் பீரோ நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட HPSSC பெண் ஊழியரின் மகன், … Read more

“நிர்வாண படங்களை அழித்தது ஏன்?” ரூபா ஐபிஎஸ் Vs ரோஹினி ஐஏஎஸ்..டிரான்ஸ்ஃபரில் முடிந்த மோதல்!

இரு உயர்மட்ட பெண் அதிகாரிகளுக்கு இடையேயான மோதல் விவகாரம் கர்நாடகாவில் பூதாகரமான நிலையில் இருவரும் பொறுப்புகள் இல்லாத பணி இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தொடங்கியது எங்கே? கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரிக்கும், ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கும் ஏற்பட்டுள்ள பரஸ்பர மோதல் முற்றியுள்ளது. ரூபா தனது சமூக வலைத்தள பதிவில், அறநிலையத்துறை கமிஷனராக இருக்கும் ரோகிணி சிந்தூரி மீது 19 குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதில், ஐஏஎஸ் அதிகாரி ரவி தற்கொலை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியதுடன், 3 ஐஏஎஸ் … Read more

Old Pension Scheme: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த அதிர்ச்சி

பழைய ஓய்வூதியத் திட்டம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு (என்பிஎஸ்) ஒதுக்கிய பணத்தை பழைய ஓய்வூதியத் திட்டத்திற்காக (ஓபிஎஸ்) மாநில அரசுகளுக்கு வழங்க மறுத்துவிட்டார். ‘ஏதாவது காரணத்திற்காக மத்திய அரசிடம் இருந்து என்பிஎஸ் நிதியை பெறலாம் என மாநிலங்கள் முடிவு செய்தாலும், அது நடக்காது’ என்று நிதி அமைச்சர் கூறினார். இது பல மாநில அரசுகளுக்கு பெரும் அதிர்ச்சியாக வந்துள்ளது.  நிதியமைச்சரின் அறிவிப்பு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் ராஜஸ்தான் … Read more

உலகில் எங்கு பேரிடர் நிகழ்ந்தாலும் மனிதநேய நலனுக்கே இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கும்: பிரதமர் மோடி!

உலகில் எங்கு பேரிடர் நிகழ்ந்தாலும் மனிதநேய நலனுக்கே இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்து உதவும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியா நாடுகளில் ஆபரேஷன் தோஸ்த் என்ற பெயரில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு தாயகம் திரும்பிய குழுவினருடன் கலந்துரையாடிய வீடியோவை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.  2 நாட்கள் மருத்துவ முகாம் நடத்தி 7 ஆயிரத்து 500 பேருக்கு சிகிச்சை அளித்ததாகவும், கட்டிட இடிபாடுகளில் சிக்கிய ஏராளமானவர்களை பாராசூட் … Read more

அரசு பணியாளர் தேர்வாணையத்தை கலைத்தது இமாச்சல அரசு

இமாச்சல பிரதேசம்: இமாச்சல பிரதேச அரசு பணியாளர் தேர்வாணையத்தை இமாச்சல அரசு கலைத்துள்ளது. அரசு பணியாளர் தேர்வு வினாத்தாள் வெளியானதை அடுத்து தேர்வாணையத்தை கலைத்து இமாச்சல முதல்வர் சுங்விந்தர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். பணியாளர் தேர்வு வினாத்தாள் வெளியானது குறித்து துறை வாரியாகவும், காவல்துறை மூலமும் விசாரணை நடத்தப்பட்டது.