மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் 5 அம்ச தடுப்பு நடவடிக்கையை பின்பற்றுங்கள் – மத்திய சுகாதார துறை அறிவுரை

புதுடெல்லி: இந்தியாவில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மாநில அரசுகள் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுஎண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று 1,300 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. கடந்த 140 நாட்களில் இது அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும், கரோனா … Read more

2 வருடம் தண்டனை பெற்றதால் நாடாளுமன்றத்தில் நுழைய ராகுலுக்குத் தடை?

ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது எம்.பி. பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சரான கபில் சிபல் தெரிவித்துள்ளார். இதனால் அவர் நாடாளுமன்றத்தில் நுழைய முடியாதபடியும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பிரதமர் மோடி பற்றிய அவதூறு பேச்சுக்காக குஜராத் மாநிலம், சூரத் நீதிமன்றத்தில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கிரிமினல் வழக்கில் 2 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு தண்டிக்கப்பட்ட ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் … Read more

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்துவேன்: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்துவேன் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மாநில அரசு ஊழியர் தேர்வுக்கு மாநில தேர்வாணையம் அமைக்க ஒன்றிய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.

பகத் சிங், சுகதேவ், ராஜகுரு தியாகத்தை இந்தியா நினைவில் கொள்ளும் – தியாகிகள் தினத்தில் பிரதமர் மோடி புகழஞ்சலி

புதுடெல்லி: தியாகிகள் தினமான நேற்று புரட்சியாளர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். விடுதலைப் போராட்ட வீரர்களான பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய மூவரும் லாகூர் சதி வழக்கில் கடந்த 1931-ம் ஆண்டு மார்ச் 23-ம்தேதி ஆங்கியலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர். அவர்களின் தியாகம் மற்றும் வீரம் பற்றிய வரலாறு இந்திய விடுதலைப் போராட்டத்தில் மிகவும் உத்வேகம் தரும் அத்தியாயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அவர்களின் நினைவு நாள், தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பிரதமர் … Read more

ராகுல் காந்தியின் தண்டனை எதிர்த்து காங்கிரஸ் பேரணி; ஜனாதிபதியை சந்திக்கவும் திட்டம்!

புதுடெல்லி, காங்கிரஸ் போராட்டம்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக தெருவில் இறங்கி போராடப் போவதாகவும், அதேநேரத்தில் மற்ற கட்சிகளுடன் சேர்ந்து இந்திய ஜனாதிபதியை சந்திக்க காங்கிரஸ் தரப்பில் நேற்று (வியாழக்கிழமை) முடிவு செய்யப்பட்டது. அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை அடுத்து, இந்த வழக்கை சட்டரீதியாக மட்டுமின்றி, அரசியல் ரீதியாகவும் போராடப் போவதாக அறிவித்துள்ள பிரதான எதிர்க்கட்சி (Congress), வெகுஜனப் போராட்டத்தை உடனடியாக அறிவித்தது. இந்த … Read more

இன்ஸ்டா மூலம் வீட்டில் இருந்தே வேலை என்று நம்பி ரூ.9.32 லட்சம் பணத்தை இழந்த நபர்..!

இன்ஸ்டாகிராம் மூலம் வேலைக்கு விண்ணப்பித்த டெல்லியைச் சேர்ந்த ஹரன் பன்சால் ‘தினமும் வீட்டிலிருந்து வேலை செய்து பெரும் பணம் சம்பாதிப்பது எப்படி என்று ஒரு லிங்க்கை க்ளிக் செய்ததால் 9 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்தார். இந்த வழக்கில் 2 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். முதலீடு செய்த தொகையில் 30 சதவீதம் வருமானம் தருவதாக ஆன்லைன் மூலம் மோசடி நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பன்சால் சுமார் 9 லட்சத்து 32 ஆயிரம் … Read more

தருமபுரியில் 4 வழிச் சாலைக்கு ரூ.170 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் கட்கரிக்கு திமுக எம்.பி. செந்தில்குமார் நன்றி

புதுடெல்லி: தருமபுரி மாவட்டம் A பள்ளிப்பட்டி முதல் மாவட்ட எல்லை மஞ்சவாடி வரை நான்குவழிச் சாலை அமைக்க மத்திய அரசு ரூ.170 கோடி ஒதுக்கியுள்ளது. இதற்காக, அத்தொகுதியின் திமுக எம்.பி. டாக்டர்.டிஎன்விஎஸ்.செந்தில்குமார், மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு நன்றி தெரிவித்துள்ளார். தருமபுரி நாடாளுமன்ற எம்,பி.,யான டாக்டர்.செந்தில்குமார், தன் தொகுதியின் மஞ்சவாடி கணவாய் முதல் மாவட்ட எல்லை முடியும் வரை உள்ள 2 வழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக உயர்த்த வேண்டும் எனக் … Read more

ஊழியர்களுக்கு அதிர்ச்சி!! மாநில அரசின் முக்கிய முடிவு: இந்த பலன்கள் கிடைக்கும்

Employees Benefit News : ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு தற்போது ஒரு நல்ல செய்தி வெளியிடப்பட்டுள்ளது. உண்மையில், மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது இப்போது ஊழியர்களுக்கு ஆசிரியராக வாய்ப்பு வழங்கப்படும். அந்தவகையில் இதற்கான கொள்கை வகுக்க கல்வித்துறைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நான்காம் வகுப்பு பணியாளர்களுக்கு ஆசிரியர்களாகும் வாய்ப்பு கிடைக்கும் இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தின் அடிப்படைக் கல்விக் கவுன்சில், மேல்நிலைப் பள்ளிகளில் இறந்த சார்பு ஒதுக்கீட்டின் கீழ் உயர் தகுதி வாய்ந்த நான்காம் … Read more

மோடி குறித்து சர்ச்சை கருத்து ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை: சூரத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சூரத்: பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து கூறியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது கர்நாடக மாநிலம், கோலாரில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார். அந்த கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, அனைத்து திருடர்களும் எப்படி மோடி என்ற குடும்ப பெயரை வைத்துள்ளனர்? என்று பேசியதாக … Read more

ஐஐஎம் மாணவருக்கு ரூ.1.14 கோடி சம்பளம்

இந்தூர்: மத்தியப் பிரதேசம் இந்தூரில் உள்ள ஐஐஎம் மையத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தூர் ஐஐஎம்- மையத்தில் படித்த மாணவருக்கு, ஒரு நிறுவனம் உள்நாட்டில் ஆண்டுக்கு ரூ.1.14 கோடி சம்பளத்தில் வேலை வழங்கியுள்ளது. எங்கள் மையத்தில் இந்தாண்டு நடந்த வேலைவாய்ப்பு முகாமில் வழங்கப்பட்ட அதிகபட்ச சம்பளம் இதுதான். கடந்தாண்டு ஒரு மாணவனுக்கு அதிகபட்சமாக வழங்கப்பட்ட சம்பளம் ரூ.49 லட்சம். இந்தாண்டில் ரூ.65 லட்சம் கூடுதலாக கிடைத்துள்ளது. இந்தாண்டு நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 160-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் … Read more