டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் – முழு விவரம்

புதுடெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு (ஜேஎன்யு) பல்கலைக்கழக மாணவர் பேரவைக்காக ‘டெப்ளாஸ்’ என்ற பெயரில் ஓர் அலுவலகம் அதன் வளாகத்தில் உள்ளது. இதில், மாணவர்கள் தங்களுக்காக அவ்வப்போது திரைப்படங்கள், முக்கிய ஆவணப்படங்களை திரையிடுவது உண்டு. ‘ஜானே பி தோ யாரோ’ எனும் இந்தி படத்தை ‘110 பிளவர்ஸ்’ எனும் மாணவர் அமைப்பினர் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு திரையிட்டனர். இதற்காக அங்கு சுவரில் இருந்த மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட சுமார் 30 … Read more

8th Pay Commisson: 44% ஊதிய உயர்வு, மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. 7வது ஊதியக் கமிஷனுக்குப் பிறகு, 8வது ஊதியக் குழுவை அரசு விரைவில் அமைக்க உள்ளது. இது ஒரு முக்கிய காரணியாக இருக்க, இன்னும் பல காரணங்களால் அடுத்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 44 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் என நம்பப்படுகிறது. இதனுடன், ஃபிட்மென்ட் ஃபாக்டரைத் தவிர வேறு ஒரு சூத்திரம் மூலம் ஊதியம் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். பழைய ஊதியக் … Read more

போதைப்பொருள், கள்ளநோட்டு வழக்குகள் தொடர்பாக நாடு முழுவதும் 72 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

டெல்லி: நாடு முழுவதும் 72 இடங்களில் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேசம், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள், கள்ளநோட்டு கடத்தல்காரர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக என்.ஐ.ஏ சோதனை நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ள ரவுடிகளையும், அவர்களுடன் தொடர்பில் உள்ள பயங்கரவாத கும்பலை பிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம், பிலிபிட்டில் … Read more

கணவரையும், மாமியாரையும் வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த பெண்!!

கணவரையும், மாமியாரையும் கொலை செய்து அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டி ஃபிரிட்ஜில் ஒளித்து வைத்த பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் நரேங்கி பகுதியைச் சேர்ந்த சங்கரி டே என்பவரின் மகன் அமர்ஜோதி டே-வுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கலீடா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஏழு மாதங்களுக்கு முன்பு தனது கணவர் மற்றும் மாமியார் காணவில்லை என கலீடா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் இருவரையும் காவல்துறையினர் … Read more

கேபிள் துருப்பிடித்திருந்ததால் மோர்பி பாலம் அறுந்தது – விசாரணை குழு அறிக்கையில் தகவல்

காந்திநகர்: குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கு பாலம் புனரமைக்கப்பட்டு கடந்த ஆண்டு தீபாவளியன்று மீண்டும் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் இந்த பாலத்தில் கூடினர். இதனால் பாலம் அறுந்து விழுந்ததில், 141 பேர் உயிரிழந்தனர். அதன்பின் பாலத்தை பராமரிக்கும் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக விசாரிக்க 5 பேர் … Read more

2001ல் குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது, மீட்புக் குழுவில் நானும் சேர்ந்து பணியாற்றினேன் : பிரதமர் மோடி

டெல்லி : உலக அளவில் சிறந்த மீட்புக் குழுவாக இந்திய மீட்புக் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். துருக்கியில் நிலநடுக்கத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டு பின்னர் நாடு திரும்பிய தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மத்தியில் பேசிய அவர், :இந்தியா மனிதநேயத்தை முதன்மையாக கொண்ட நாடு. உலகம் முழுவதையும் ஒரேகுடும்பமாக கருதுகிறோம் .குடும்பத்தில் ஒருவருக்கு கஷ்டம் இருந்தால் அதற்கு உதவுவது இந்தியாவின் கடமை,’ என்றார். நேபாளத்தில் பூகம்பப் பாதிப்பு, மாலத்தீவுகள், இலங்கை … Read more

ஒடிசாவில் தொலைதூர கிராமத்தில் உள்ள மாற்றுத் திறனாளிக்கு ‘ட்ரோன்’ மூலம் ஓய்வூதியம்

புவனேஸ்வரம்: ஒடிசாவின் நுவாபாடா மாவட்டம், பலேஸ்வர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பூட்கபாடா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஹெட்டா ராம் சத்னாமி. உடல் ஊனமுற்ற இவர், மாநில அரசு ஓய்வூதியம் பெற்று வருகிறார். ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெற பலேஸ்வர் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு அடர்ந்த காடு வழியாக சென்று வந்தார். இநிலையில் இம்மாதம் ஒரு ட்ரோன் உதவியுடன் அவரது வீட்டிலேயே அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இதுகுறித்து சத்னாமி கூறும் போது, “இம்மாதம் ட்ரோன் மூலம் எனக்கு ஊராட்சி மன்ற … Read more

இந்தியாவின் முதல் செமி கண்டக்டர் சிப் தொழிற்சாலை குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே அமைகிறது!!

அகமதாபாத் : இந்தியாவின் முதல் செமி கண்டக்டர் சிப் தொழிற்சாலை குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே அமைகிறது. காா் உள்ளிட்ட வாகனங்கள், கைப்பேசிகள், பிற மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படும் செமிகண்டக்டா் சிப்-கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை. மாறாக, இந்த சிப்களுக்காக இறக்குமதியை இந்தியா சாா்ந்துள்ளது. உலகில் 8 சதவீத செமிகண்டக்டா் சிப்களை தைவான், சீனா, ஜப்பான் ஆகிய 3 நாடுகள் உற்பத்தி செய்கின்றன. இந்த நிலையில், இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலையை அமைக்க பல பன்னாட்டு நிறுவனங்கள் மத்திய, … Read more

யாத்திரைக்கு செல்லும் பக்தர்கள் கவலை…!! பத்ரிநாத் நெடுஞ்சாலையில் புதிய விரிசல்..!!

பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட 4 புனித தளங்களுக்கான சார்தாம் யாத்திரைக்கான தேதிகளை உத்தரகண்ட் அரசு அறிவித்துள்ளது. அதன்படி கேதார்நாத் கோவில் ஏப்ரல் 5-ம் தேதியும் பத்ரிநாத் கோவில் ஏப்ரல் 27-ம் தேதியும் திறக்கப்பட உள்ளன. சார்தாம் யாத்திரையில் சுமார் 17 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்ள இருப்பதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் பத்ரிநாத் நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டும். இந்த நிலையில் ஜோஷிமத் தொடங்கி மார்வாரி வரையிலான 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு பத்ரிநாத் நெடுஞ்சாலையில் 10 விரிசல்கள் … Read more

உத்தராகண்டில் இளைஞர்களுக்காக அதிக முதலீடு – பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

டேராடூன்: உத்தராகண்டில் இளைஞர்கள் அதிக வேலைவாய்ப்பு பெறும் வகையில் அதிக முதலீடு செய்யப்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். பிரதமர் மோடி உத்தரவின்படி மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 10 லட்சம் இடங்களை ஒன்றரை ஆண்டுக்குள் நிரப்ப முடிவெடுக்கப்பட்டது. அதன்படி வேலை வாய்ப்பு வழங்க வகைசெய்யும் ரோஜ்கார் மேளா என்றதிட்டத்தை கடந்த ஆண்டு அக்டோபரில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில், உத்தராகண்டில் ரோஜ்கார் மேளா வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சியை பிரதமர் மோடி … Read more