Video: வீட்டின் மொட்டை மாடியில் விமானம் மோதல்… விபத்தின் நேரடி காட்சிகள் – இருவர் படுகாயம்!

Jharkhand Plane Accident Video: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில், உள்ளூர் சுற்றுலாவுக்கு பயன்படுத்துப்படும் சிறிய ரக விமானம், புறப்பட்டு வானில் பறந்த சிறிது நேரத்தில் குடியிருப்பு கட்டடத்தில் மோதியதில் விமானி மற்றும் 14 வயது பயணி ஆகியோர் காயமடைந்தனர்.  இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஜார்க்கண்ட் தன்பாத்தில் உள்ள பர்வாடா விமான தளத்தில் இருந்து புறப்பட்ட அந்த கிளைடர் வகை விமானம், 500 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டின் மீது மோதியது. தொழில்நுட்பக் … Read more

வாரணாசியில் ரூ.1,780 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

வாரணாசியில் ஆயிரத்து 780 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். முன்னதாக உலக காச நோய் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெறும் மாநாட்டில் பங்கேற்று அவர் உரை நிகழ்த்துகிறார். காச நோயை ஒழித்துக் கட்டிய மாநில அரசுகளுக்கு பாராட்டும் விருதுகளையும் மோடி அப்போது வழங்க உள்ளார். பகல் 12 மணியளவில் பல்வேறு நலத்திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டியும் புதிய திட்டங்களைத் தொடங்கியும் வைக்கிறார். கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் … Read more

சிவசேனாவுக்கு புதிய நாடாளுமன்ற தலைவர் தேர்வு

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் மாநிலங்களவை எம்பி.யாக இருக்கும் சிவசேனாவை (உத்தவ்) சேர்ந்த சஞ்சய் ராவத் அக்கட்சியின் நாடாளுமன்ற கட்சி தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில், அம்மாநில முதல்வரும் சிவசேனா தலைவருமான ஏக்நாத், சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற தலைவராக இருந்த சஞ்சய் ராவத்தை நீக்கி விட்டு, மக்களவை எம்பி. கஜானன் கிர்திகரை தலைவராக நியமித்துள்ளார்.  இது குறித்து ஷிண்டே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும், மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கருக்கும் கடிதம் எழுதி உள்ளார்.

“பட்ஜெட் தொடர்பான விவாதங்களுக்கு மாநிலங்களவையில் எப்படி அனுமதியளிப்பது?”- திருச்சி சிவா

அதானி குழும விவகாரத்தில் நாடாளுமன்ற குழு அமைத்து விசாரணை நடத்த மத்திய அரசு ஒப்புக் கொள்ளாத நிலையில், ‘பட்ஜெட் ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதங்களை மாநிலங்களவையில் நடத்தக்கூடாது’ என எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகம் தொடர்ந்து முடங்கி வரும் நிலையில், ‘பட்ஜெட் ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதங்களை நடத்த அவகாசம் இல்லை. அந்த ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல்களை விரைவாக அளிக்க வேண்டும்’ என அரசு தரப்பு வலியுறுத்தியுள்ளது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள … Read more

கர்நாடக தேர்தலில் பாஜகவை சமாளிக்க காங்கிரஸ் புதிய வியூகம் – சிறுபான்மையின வேட்பாளர் எண்ணிக்கை குறைப்பு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் போட்டியை சமாளித்து பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளை கவர காங்கிரஸ் புதிய வியூகத்தை வகுத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய பிரதான கட்சிகள் தனித் தனியாக களமிறங்குகின்றன. 3 கட்சிகளும் தேர்தல் பிரச் சாரத்தை தொடங்கியுள்ள நிலை யில், வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளன. மஜத, … Read more

ராகுல்காந்திக்கு சிறைத்தண்டனை- மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஆலோசனை

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் பிரதமர் மோடி மீதான அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியதையடுத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது. அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் 50க்கும் மேற்பட்ட எம்பிக்கள். மூத்த தலைவர்கள் இதில் கலந்துக் கொண்டனர். இன்று டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. டெல்லி விஜய் சதுக்கம் பகுதியில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி … Read more

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண தேர்தல் மீண்டும் தள்ளிவைப்பு

லாகூர்: பாகிஸ்தானில் பஞ்சாப் மற்றும் கைபர், பக்துங்க்வா மாகாணங்களில் ஆட்சி நடத்தி வந்த இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தேர்தலை முன்கூட்டியே நடத்தும் நோக்கத்தில் கடந்த ஜனவரியில் ஆட்சியை கலைத்தது. இதனால், அங்கு வரும் ஏப்ரல் 30ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போதைய சட்டம்-ஒழுங்கு, அரசியல் சூழல், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தேர்தலை 5 மாதம் ஒத்திவைத்து, வரும் அக்டோபர் … Read more

மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.6,500 ஆக உயர்வு

புதுச்சேரியில் ஏற்கெனவே மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,500 ஆக இருந்தது. இந்நிலையில், இந்த நிவாரணத்தை ரூ.1,000 உயர்த்தி ரூ.6,500 ஆக வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இதற்காக அமைச்சரவையில் அனுமதி பெற்று அந்த கோப்பு துணை நிலை ஆளுநர் மாளிகைக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், மீன்பிடி தடைக்கால நிவாரணம் 6,500 ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியிட ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் … Read more

பள்ளிகளுக்கான பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு 29 மாநிலங்கள் ஒப்புதல் – தமிழகம் உட்பட 7 மாநிலங்கள் ஏற்காததால் மாணவர்கள் பாதிப்பு

புதுடெல்லி: கடந்த வருடம் செப்டம்பர் 5-ல் பிரதமர் மோடியால் பிஎம் ஸ்ரீ (வளரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்) என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் பள்ளிகள் மேம்பாட்டுக்கு ரூ.27,360 கோடி செலவிடப்பட உள்ளது. இதில் மத்திய அரசின் பங்காக ரூ.18,128 கோடி உள்ளது. இதன்மூலம் 14,500 பள்ளிகளில் சுமார் 1.87 கோடி குழந்தைகள் பலன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் வரும் இந்த திட்டத்தின் பலனை … Read more

மம்தா பான்ர்ஜி – நவீன் பட் நாயக் சந்திப்பு: மூன்றாவது அணி வேலைகள் தொடங்கிவிட்டதா?

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில் எந்த கட்சி எந்த கூட்டணியில் இடம்பெறும், பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் வலுவான அணியை அமைக்குமா, மூன்றாவது அணி உருவாகுமா என்ற விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 2014, 2019 ஆகிய இரு தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வருகிறது பாஜக. இந்த காலகட்டத்தில் பாஜக பல்வேறு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளது, சில மாநிலங்களில் ஆளும் கட்சிகளோடு கூட்டணியில் இருக்கிறது. இந்த ஒன்பது ஆண்டுகளில் கட்சியையும் … Read more