இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குருகிராமில் 50 பிளாட்கள் கொண்ட குடியிருப்பு வளாகத்தை இடிக்க உத்தரவு..!

டெல்லியை அடுத்த நொய்டாவில் இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குருகிராமில் குடியிருப்பு வளாக கட்டடம் இடிக்கப்பட உள்ளது. ஒன்பது மாதங்களுக்கு முன்பு இக்குடியிருப்பில் ஒரு வீட்டில் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.இதில் 2 பேர் உயிரிழந்தனர். பத்து பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து கட்டடத்தை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. அந்த ஆய்வின் படி கட்டடம் குடியிருப்பதற்கான தகுதி இல்லாதது என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் 50 பிளாட்டுகள் கொண்ட இந்தக் கட்டடத்தை இடிக்க உத்தரவு … Read more

உபி.யில் எம்எல்ஏ மகன் திடீர் கைது: அமலாக்கத் துறை நடவடிக்கை

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் பணமோசடி வழக்கில் எம்எல்ஏ முக்தர் அன்சாரியின் மகன் அப்பாசை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். உத்தரப்பிரதேசத்தில் உள்ள மாவ் சட்டமன்ற தொகுதியின் சுகுல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் எம்எல்ஏ முக்தர் அன்சாரி. இவர் பெரிய  தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். 5 முறை எம்எல்ஏவான இவர்  தற்போது பாண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 49 கிரிமினல் வழக்குகளில் முக்தர் அன்சாரிக்கு தொடர்பு உள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்து இவரை கண்காணித்து வருகிறது. இவருக்கு … Read more

ஹைதராபாத், டெல்லி, பெங்களூருவில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் வீடு வாங்க முன்னுரிமை

புதுடெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே (என்ஆர்ஐ) இந்தியாவில் வீடு வாங்குவது குறித்து சிஐஐ-அனாராக் கருத்துக்கேட்பு நடத்தியது. மொத்தம் 5,500 வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், அவர்களில் 60 சதவீதம் பேர் ஹைதராபாத், டெல்லி, பெங்களூரு ஆகிய மூன்று நகரங்களில் வீடு வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இவர்களில் 22 சதவீதத்தினர் ஹைதராபாத்தை தங்கள் முதன்மைத் தேர்வாக குறிப்பிட்டுள்ளனர். 20 சதவீதத்தினர் டெல்லியையும், 18 சதவீதத்தினர் பெங்களூருவையும் தங்கள் தேர்வாக குறிப்பிட்டுள்ளனர். இது 2022-ம் ஆண்டு முதல் 6 … Read more

கர்நாடகா நடைபயணத்தில் சினிமா பாடல் ராகுல் மீது வழக்குப்பதிவு

பெங்களூரு: காங்கிரசின் பாரத் ஜோடோ நடைபயணத்தின் போது, கன்னட திரைப்படமான கேஜிஎப் இசையை உரிய அனுமதி பெறாமல் பயன்படுத்தியதாக ராகுல் காந்தி உட்பட மூன்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்ட போது, அனுமதியின்றி கேஜிஎப்-2 இந்தி   திரைப்படத்தின் இரண்டு பாடல்களைப் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த பாடல்களை ஜெய்ராம் ரமேஷ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் … Read more

மாணவர் மார்பில் அயர்ன் பாக்ஸ் சூடு…தொடரும் ராகிங் கொடுமை..!!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரி விடுதியில் மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த கல்லூரி மாணவர்கள் 4 பேர், விடுதி அறைக்குள் மற்றொரு மாணவனை இரக்கமின்றி தாக்கும் வீடியோ வைரலானதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வீடியோவில், பாதிக்கப்பட்டவர் தன்னை அடிக்க வேண்டாம் என்று அவர்களிடம் கெஞ்சுவதும், சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்பதும் உள்ளது. தொடர்ந்து அவரைத் தாக்குவதைக் காட்டுகிறது. அவரது … Read more

குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும்: கருத்துக் கணிப்புகளில் தகவல்

புதுடெல்லி: குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வரும் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. அங்கு மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன. கடந்த 1995-ம் ஆண்டு முதல் அங்கு பாஜக ஆட்சி நடைபெறுகிறது. தற்போது 7-வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த … Read more

திருப்பதியில் கைசிக துவாதசி உக்கிர சீனிவாச மூர்த்தி வீதியுலா

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகாலை கைசிக துவாதசியையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத உக்கிர சீனிவாச மூர்த்தி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியையொட்டி, நேற்று அதிகாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத உக்கிர சீனிவாச மூர்த்தி 4 மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி சுப்ரபாத சேவை, தோமாலை சேவைக்கு பிறகு சூரிய உதயத்துக்கு முன்பாக அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணி … Read more

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் உ.பி. எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி கைது

லக்னோ: உத்தர பிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதியை சேர்ந்தவர் முக்தர் அன்சாரி (59). நிழல் உலக தாதாவாக அறியப்படும் அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து மாவ் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 5 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணானந்த் கொலை வழக்கு உட்பட சுமார் 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. கடந்த உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முக்தர் அன்சாரியின் மகன் அப்பாஸ் அன்சாரி (30), சுகல்தேவ் பாரதிய … Read more

ஒன்டைம் செட்டில்மென்ட்டில் கால நீட்டிப்பு கேட்க உரிமை கோர முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘ஒன்டைம் சென்ட்டில்மென்ட்டில் (ஒருமுறை தீர்வு திட்டம்) கடன் வாங்கியவர் கால நீட்டிப்பு கேட்பதற்கு உரிமை கோர முடியாது’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்று வாங்கிய கடனை திருப்பி செலுத்த எஸ்பிஐ வங்கியுடன் ஒன்டைம் செட்டில்மென்ட் செய்துள்ளது. இதன்படி, கடன் பாக்கியில் 25 சதவீதத்தை 2017ம் ஆண்டு டிசம்பர் 21ல் டெபாசிட் செய்வதாகவும், மீதமுள்ள தொகையை வட்டியுடன் சேர்த்து 6 மாதத்தில் செலுத்தி விடுவதாகவும் ஒப்பந்தம் செய்தது. ஆனால், அதன்பிறகு மீதமுள்ள தொகை … Read more

உயர்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழக்கில் நாளை தீர்ப்பு

புதுடெல்லி: உயர் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு ஒன்றிய அரசு கல்வி நிலையங்கள், வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி வழங்கினார். இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதில், திமுகவும் ஒரு மனுதாரராக உள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. … Read more