உலக பசி குறியீட்டு தரவரிசை: 'நாட்டின் மதிப்பை கெடுக்க முயற்சி' – இந்தியா கண்டனம்

உலக பசி குறியீட்டு தரவரிசையை இந்தியா ஏற்க மறுத்துள்ளதோடு, நாட்டின் மதிப்பை கெடுக்கும் தொடர்ச்சியான முயற்சி என குற்றம் சாட்டி உள்ளது. சர்வதேச அளவில் உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலக பசி குறியீடு (Global Hunger Index – GHI)  வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான உலக பசி குறியீட்டு பட்டியலில் 6 இடங்கள் சரிந்து,  இந்தியா 107வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. அண்டை நாடுகளான  பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், … Read more

கேதார்நாத் கோயிலுக்கு ரோப் கார் திட்டம்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் கேதார்நாத் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலுக்கு வருவதற்கு ரம்பாடா பகுதியிலிருந்து கருட்சட்டி பகுதிக்கு 5 கி.மீ. தூரம் மலையேறி வரவேண்டும். உயரமான செங்குத்தான பனிமலை என்பதால் இதற்கு 8 மணி நேரமாகும். இதைத் தொடர்ந்து சோன்பிரயாக் பகுதியிலிருந்து கேதார்நாத்துக்கு ரோப் கார் சேவையைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தேசிய … Read more

டக் அவுட் ஆன பாஜக… பக்காவாக கொடி நாட்டிய காங்கிரஸ்- நாக்பூரில் செம ட்விஸ்ட்!

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. முன்னதாக சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. சிவசேனா இரண்டாக உடைய ஷிண்டே தலைமையிலான அணியினர் பாஜக உடன் கைகோர்த்து ஆட்சியை பிடித்தனர். இதன் பின்னணியில் பாஜகவின் அரசியல் கணக்குகள் இருப்பதை மறுக்க முடியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அடுத்தகட்டமாக உள்ளாட்சிகளில் தங்கள் பலத்தை வலுப்படுத்த … Read more

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு

டெல்லி: சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான, ஓராண்டு கட்டணம் ரூ.4.3 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான, ஓராண்டு கட்டணம் ரூ.12.5 லட்சத்தில் இருந்து ரூ.13.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. வெளிநாடு வாழ் இந்தியர் இடங்களுக்கான, ஆண்டு கட்டணம் ரூ.23.5 லட்சத்தில் இருந்து ரூ.24.5 லட்சமாக உயர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன எல்லை அருகே அருணாச்சலை சேர்ந்த இளைஞர்கள் 2 பேர் மாயம் – தேடுதல் பணி தீவிரம்

இடாநகர்: சீன எல்லை அருகே அருணாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மாயமாயினர். அவர்களைத் தேடும் பணியை பாதுகாப்புப் படை வீரர்கள் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து அருணாச்சல் பிரதேச மாநிலம் அஞ்சாவ் மாவட்டபோலீஸ் எஸ்.பி. ரிகே கம்சி கூறியதாவது: இங்குள்ள அஞ்சாவ் மாவட்டத்தில் அமைந்துள்ளது கொலியான் பகுதி. இந்த ஊரை சேர்ந்த படெய்லம் டிக்ரோ, பயிங்சோ மன்யூ ஆகிய 2 இளைஞர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். சீன எல்லையோர பகுதியான … Read more

வாண்டடா வண்டியேறிய தமிழிசை சவுந்தரராஜன் – பாஜக செம அப்செட்!

தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஆளுநர் பதவியில் இருந்து விலக வேண்டும் என, எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பாஜக ஆலோசனைக் குழுவில் கலந்து கொண்டு, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்துக்களை தெரிவித்தார். ஆளுநராக இருந்து கொண்டு, … Read more

இனி ரேஷன் கடைகளில் 5 கிலோ எல்பிஜி சிலிண்டர் கிடைக்கும்

இனி உத்தரபிரதேசத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து 5 கிலோ எடையுள்ள சிறிய FTL (Free Trade LPG) சிலிண்டர்கள் கிடைக்கும். ‘சோட்டு’ என்ற பிராண்டில் கிடைக்கும் இந்த சிலிண்டர்கள், நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யப்படும். மேலும் ரேஷன் கடைகளிலும் நுகர்வோர் இந்த சிலிண்டர்களை நிரப்பிக்கொள்ளலாம். இதற்காக, எல்பிஜி விநியோகஸ்தர்கள், ரேஷன் விற்பனையாளர்களுடன் ஒப்பந்தம் செய்து, அவர்களை விற்பனை மையமாக நியமிப்பார்கள். ரேஷன் கடைக்காரர்கள் பாயின்ட் ஆஃப் சேல் மூலம் நுகர்வோருக்கு அனுமதிக்கப்பட்ட சில்லறை விலையில் சிலிண்டர்களை … Read more

காஷ்மீரில் தீவிரவாதிகள் வெறி இந்து பண்டிட் சுட்டுக்கொலை: கட்சிகள் கடும் கண்டனம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இந்து பண்டிட்டை தீவிரவாதிகள் நேற்று சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை பாதுகாப்பு படைகள் தீவிரப்படுத்தி இருப்பதால், அவர்களால் நாச செயல்களில் முன்பு போல் ஈடுபட முடியவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள விரக்தியின் காரணமாக, அப்பாவி மக்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். குறிப்பாக, இந்து பண்டிட்களையும், வெளிமாநில தொழிலாளர்களையும் குறிைவத்து தாக்குதல் நடத்துகின்றனர். இந்த மக்களிடையே பீதியை ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இந்நிலையில், காஷ்மீரில் நேற்றும் ஒரு பண்டிட்டை தீவிரவாதிகள் … Read more

காவலாளியை தாக்கிய குடியிருப்புவாசி – சிசிடிவி காட்சி வைரல்

அடுக்குமாடிக் குடியிருப்புவாசி ஒருவர் அங்குள்ள காவலாளியை கடுமையாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் வின்ட்சர் பாரடைஸ் சொசைட்டி அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இந்நிலையில் இந்த குடியிருப்பில் வசித்துவரும் ஒருவர் அங்குள்ள காவலாளியை கடுமையாக தாக்கும் சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் குடியிருப்புவாசி ஒருவர் காவலாளியை அடிப்பதும், அதை பெண் ஒருவர் தடுப்பதும் பதிவாகியுள்ளது. அக்டோபர் 10ஆம் தேதி நடந்துள்ள இந்த சம்பவம் குறித்து காவலாளி அளித்த புகாரின் பேரில் தாக்கிய … Read more

வணிகச் சேவையில் கால் பதிக்கும் இஸ்ரோவின் ‘எல்விஎம் 3’ ராக்கெட் – 36 செயற்கைக்கோள்களுடன் 23-ல் விண்ணில் பாய்கிறது

பெங்களூரு: இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) மிகப் பெரிய ராக்கெட்டான ‘எல்விஎம் 3’ முதன்முறையாக வணிகச் சேவையில் கால் பதிக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த ‘ஒன்வெப்’நிறுவனம் இணையப் பயன்பாட்டுக்கான செயற்கைக்கோள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் தற்போது அரசு, கல்வி,வர்த்தகம் தொடர்பான பயன்பாட்டுக்காக 36 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புகிறது. அந்த செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் பணிஇஸ்ரோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த 36 செயற்கைக்கோள்கள் வரும் 23-ம் தேதி ஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ஏவுதளத்திலிருந்து ‘எல்விஎம் … Read more