மத்திய பிரதேசத்தில் கொலையாளியை கண்டுபிடிக்க குறி கேட்ட போலீஸார் – வீடியோ வைரலானதால் எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தில் கொலையாளியை கண்டுபிடிக்க துறவியிடம் போலீஸார் குறி கேட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலானதால், எஸ்.ஐ. பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாஜக ஆளும் ம.பி.யின் சத்ரபூரில் உள்ளது பமிதா காவல் நிலையம். கடந்த ஜுலை 28-ம் தேதி ஒண்டா பூர்வா கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் 12 வயது சிறுமியின் உடல் கிடந்தது. புகாரின் அடிப்படையில் ஐபிசி 302 பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், வழக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுமி கொலையில் எந்த … Read more

இரட்டை கட்டிடம் தகர்ப்பு 5 ஆயிரம் மக்கள் வெளியேற உத்தரவு

நொய்டா: உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 40 மாடிகள் கொண்ட இரட்டை கட்டிடத்தை இடிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வரும் 28ம் தேதி இதை வெடி வைத்து தகர்ப்பதற்கான ஏற்படுகள் மும்முரமாக நடக்கிறது. இதற்காக 3,500 கிலோ வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், கட்டிடம் இடிக்கப்படும் நாளன்று காலை 7.30க்குள், அதை சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் 5 ஆயிரம் பேரை வெளியேறும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், அந்த பகுதியில் உள்ள 2500 … Read more

ரூ.5,085 கோடி பாக்கி வைத்திருப்பதால் தமிழகம், ஆந்திரா உட்பட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க, விற்க மத்திய அரசு தடை

புதுடெல்லி: தமிழகம், ஆந்திரா உள்பட 13 மாநிலங்கள் ரூ.5,085 கோடி பாக்கி வைத்திருப்பதால் அந்த மாநிலங்கள் மின் சந்தையில் மின்சாரம் வாங்கவும் விற்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை வெளிச் சந்தையில் விற்பனை செய்யவும், தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை வெளிச் சந்தையில் கொள்முதல் செய்வற்கும், மத்திய மின் சந்தையை நிறுவியுள்ளன. இந்த சந்தையை கண்காணித்து நிர்வகிப்பதற்காக, மத்திய மின்துறை அமைச்சகம் ‘பவர் சிஸ்டம் … Read more

போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு 24 ஆண்டுக்கு பின் மாஜி எம்எல்ஏ கைது

மோதிஹரி: பீகார் மாநிலம், கோவிந்த்கஞ்ச் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ரஞ்சன் திவாரி. இவர், 1998ம் ஆண்டு உபி மாநிலம்  கோரக்பூரில் போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினார். கடந்த 24 ஆண்டுகளாக நாடு முழுவதும் போலீசார் அவரை தேடி வந்தனர். அவரை பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசும் அறிவித்தனர். இந்நிலையில், பீகார் – நேபாள எல்லையில் ரக்சோல் என்ற இடத்தில் திவாரியை  உபி., பீகார் போலீசார் நேற்று கைது செய்தனர். இது … Read more

காங். புதிய தலைவர் பதவி ஓரிரு நாளில் தேர்தல் தேதி அறிவிப்பு: ராகுல் மனம் மாறாததால் குழப்பம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தல் தேதி, ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என கடந்தாண்டு நடந்த காரிய கமிட்டி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, தேர்தல் பணிகளை தொடங்குவதற்கான தேதி இன்று முதல் தொடங்குவதால், காங்கிரசின் புதிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோற்றதால், … Read more

மதுபானக் கடை உரிமம் வழங்குவதில் முறைகேடு ; டெல்லி துணை முதலமைச்சர் வீடு உள்பட 21 இடங்களில் சோதனை

மதுபானக் கடை உரிமம் வழங்குவதில் முறைகேடு புகாரில் டெல்லி துணை முதலமைச்சரும், கலால் துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள சிபிஐ, சிசோடியா வீடு உள்பட 21 இடங்களில் சோதனை நடத்தியது. சில கலால்துறை அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் அரசு மட்டுமே மதுபானக் கடைகள் நடத்தும் என்று புதிய மதுபானக் கொள்கையை அறிவித்த சிசோடியா, பின்னர் அதனை திரும்ப பெறுவதாக தெரிவித்தார். சிசோடியாவிற்கு நெருக்கமான நபர் நடத்தும் … Read more

கேரள முதல்வரின் செயலாளர் மனைவிக்கு பேராசிரியர் பணி: நியமனத்தை நிறுத்தி ஆளுநர் அதிரடி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கண்ணூர் பல்கலைக் கழகத்தில் மலையாளம் இணை பேராசிரியர் பணிக்கு சமீபத்தில் நேர்முகத் தேர்வு நடந்தது. இதில், கேரள முதல்வர் பினராய் விஜயனின் தனி செயலாளரான ராகேஷின் மனைவி பிரியா வர்கீசும் பங்கேற்றார். பல்கலைக் கழக விதிகளின்படி, தகுதிப் பட்டியலில் இவர் கடைசி இடத்தில் இருந்தார். ஆனால், நேர்முகத் தேர்வுக்குப் பிறகு வெளியான ரேங்க் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். அவருக்கு இணை பேராசிரியர் பணி நியமனம் வழங்க பல்கலை.யின் சிண்டிகேட் தீர்மானித்தது. இதை நேர்முகத் … Read more

வங்கதேச எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல்: பிஎஸ்எப் வீரர் வீரமரணம்

அகர்தலா: இந்திய – வங்கதேச எல்லையில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். திரிபுரா மாநிலத்தில் காஞ்சன்பூர் உட்கோட்ட பகுதியில் வங்கதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) முகாம் உள்ளது.  திரிபுரா தேசிய விடுதலை முன்னணியை  சேர்ந்த தீவிரவாதிகள் பலர் வங்கதேச எல்லை ஒரமாக பதுங்கி உள்ளனர். தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க பிஎஸ்எப் வீரர்கள் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வங்கதேசத்தின் ஜூபுய் என்ற இடத்தில் … Read more

“3 ஆண்டுகளில் 7 கோடி ஊரக குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு” – ஜல் ஜீவன் விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்

பனாஜி: கோவாவின் பனாஜியில் நடைபெற்ற ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் வீட்டுக்கு வீடு குடிநீர் விழாவில் காணொலி மூலம் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், “நாட்டில் 10 கோடி ஊரக வீடுகள் குழாய் மூலம் தூய்மையான குடிநீர் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்கும் அரசின் இயக்கம் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அனைவரின் முயற்சி என்பதற்கான மாபெரும் உதாரணமாக, இது உள்ளது. ஒவ்வொரு வீடும் குடிநீர் குழாய் மூலம் இணைக்கப்பட்ட முதலாவது வீட்டுக்கு வீடு … Read more

தண்டனையை அதிகரிக்கும்போது குற்றவாளிகளுக்கு வாய்ப்பு தரணும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘குற்றம் சாட்டப்பட்டவர்களின் தண்டனையை அதிகரிக்கும் முன்பாக, அவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து வைக்க வாய்ப்பளிக்கும் வகையில் நோட்டீஸ் வழங்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளிக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, வாழ்நாள் ஆயுள் தண்டனையாக மாற்றி ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்ட 2 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கவாய், நரசிம்மா ஆகியோர் அடங்கிய … Read more