மோகன் பகவத் பேச்சு: மக்களிடம் தேசபக்தியை வளர்த்தது ஆர்எஸ்எஸ்

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நேற்று கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், ‘‘அமைதி என்ற செய்தியை இந்தியா உலகுக்கு வழங்கும். இந்த நாடோ அல்லது சமூகமோ எனக்கு என்ன செய்தது என்று கேட்பதற்கு மாறாக நாட்டுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சிந்தித்து பாருங்கள். சுதந்திரமாக இருக்க விரும்புவோர் எல்லாவற்றிலும் தன்னிறைவு பெறவேண்டும். தேசப்பக்தி குறித்த … Read more

சுதந்திர தின விழா | டெலிபிராம்டர் இல்லாமல் 83 நிமிடம் உரையாற்றிய பிரதமர்

புதுடெல்லி: சுதந்திர தின அமுதப் பெருவிழா, தலைநகர் டெல்லியில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க, 5 உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். மேலும், கடந்த 2014-ம் ஆண்டு நாட்டை வழிநடத்தும் பொறுப்பை மக்கள் என்னிடம் வழங்கினர். விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு அதிகாரமும் அவர்கள் வாழ்வில் முன்னேற்றமும் கிடைக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் … Read more

இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தற்காலிக தடை விதித்துள்ள FIFA..!

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு சர்வதேச கால்பந்து அமைப்பான FIFA தற்காலிக தடை விதித்துள்ளது. இத்தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.மூன்றாம் நபர் தலையீடுகளால் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாக FIFA தனது அறிக்கையில் இடைக்காலத் தடைக்கான காரணத்தைத் தெரிவித்துள்ளது. இதனால் அக்டோபரில் இந்தியாவில் நடைபெற இருந்த 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்தாட்டத்துக்கான இடம் மாற்றப்பட உள்ளது. தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால் மீண்டும் உரிமம் வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

திப்பு, சாவர்க்கர் படம் வைப்பதில் தகராறு; கர்நாடகாவில் கலவரம்: ஷிவமொக்காவில் 144 தடை உத்தரவு

ஷிவமொக்கா: கர்நாடகாவின் ஷிவமொக்காவில், இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் வாலிபருக்கு கத்தி குத்து, மற்றொருவருக்கு சரமாரி வெட்டு விழுந்தது. இதையொட்டி அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கர்நாடகா மாநிலம் ஷிவமொக்காவில் சுதந்திர தின விழா கொண்டாடுவதில் இரு தரப்பினர் இடையே மோதல் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்றைய சுதந்திர தின விழாவின் போது, திப்பு சுல்தான் மற்றும் வீர் சாவர்க்கர் புகைப்படம் வைப்பதில் ஏற்பட்ட சர்ச்சையில் காந்தி பஜாரில் பிரேம் சிங் (29) என்ற வாலிபர் … Read more

புதுச்சேரி: சின்னத்திரை நட்சத்திரங்கள் சாதனை முயற்சி – என்ன செய்தார்கள் அப்படி?

புதுச்சேரியில் 76-வது சுதந்திர தினத்தையொட்டி, சின்னத்திரை நட்சத்திரங்கள் சார்பில் 75 படகுகளில் கடலில் குப்பைகள் சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரியில் 76-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நெகிழி இல்லா புதுச்சேரியை உருவாக்கும் நோக்கத்தோடு சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், நெகிழி கழிவுகளை அகற்றுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து 75 படகுகளில் கடலுக்குள் சென்ற 75 சின்னத்திரை நட்சத்திரங்கள், 75 தேசியக் கொடிகளை கையில் ஏந்தியபடி … Read more

75-வது சுதந்திர தினமா, 76-வது சுதந்திர தினமா? – மக்களிடையே எழுந்த குழப்பம்

புதுடெல்லி: நேற்று கொண்டாடப்பட்டது நாடு சுதந்திரம் அடைந்த 75-வது சுதந்திர தினமா அல்லது 76-வது சுதந்திர தினமா என்ற குழப்பம் பொது மக்களிடையே ஏற்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்த விழா, ஆசாதி கா அம்ரித் மகோத் சவ் என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. இதற்காக ஹர் கர் திரங்கா (வீடுதோறும் மூவர்ணக் கொடி) என்ற பெயரில் கொண்டாட்டங்களை மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், நேற்று கொண்டாடப்பட்ட விழா 75-வது ஆண்டு சுதந்திர … Read more

புஷ்பா 2வில் விஜய் சேதுபதி இல்லை

ஐதராபாத்: புஷ்பா 2 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை என அவரது தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடித்த புஷ்பா படம், இந்த ஆண்டு வெளியானது. பான் இந்தியா படமாக பல மொழிகளிலும் வௌியாகி, ஹிட்டானது. இந்த படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருந்தார் சமந்தா. இந்த பாடல் காட்சி வைரலானது. படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களுமே ஹிட்டாகின. இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. முதல் பாகத்தில் … Read more

ராஜஸ்தானில் 4.24லட்சம் கால்நடைகள் தோல் கட்டி நோயால் பாதிப்பு…. முதலமைச்சர் அசோக் கெலாட் தகவல்

ராஜஸ்தானில் இதுவரை 4லட்சத்து 24ஆயிரம் கால்நடைகள் தோல் கட்டி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அசோக் கெலாட், மாநிலத்தின் 15 மாவட்டங்களில் கால்நடைகளுக்கு இந்த நோய் பரவி இருக்கிறது என்றார். இந்த நோயைத் தடுக்க தேவைப்பட்டால் டெண்டர் இல்லாமல் மருந்துகளை வாங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்த நோயால் இதுவரை 18ஆயிரத்து 462 கால்நடைகள் உயிரிழந்து விட்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.  … Read more

சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை அற்பமாக கருதும் ஒன்றிய அரசு: சோனியா காந்தி கடும் கண்டனம்

புதுடெல்லி: ‘சுதந்திரபோராட்ட வீரர்கள் செய்த தியாகத்தை சுயநலம் கொண்ட ஒன்றிய அரசு அற்பமாக கருதுகின்றது’ என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 75 ஆண்டுகளில் நாம் மிகப்பெரிய அளவில் சாதித்துள்ளோம். ஆனால் இன்றைய சுயநல அரசு நமது சுதந்திர போராட்ட வீரர்களின் மகத்தான தியாகங்களையும், நாட்டின் புகழ்பெற்ற சாதனைகளையும் அற்பமாக கருதுகிறது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. வரலாற்று உண்மைகளை தவறாக சித்தரிப்பது, மகாத்மா … Read more

மக்கள் ஒற்றுமையாக பாடுபட வேண்டும் – பிரியங்கா காந்தி வதேரா வேண்டுகோள்

புதுடெல்லி: நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் ‘ஆசாதி கவுரவ் யாத்ரா’ டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தப் பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா, மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா, குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பிரியங்கா காந்தி கூறும்போது, “இந்தியாவின் சுதந்திர நாளில் மக்களுக்கு எனது வாழ்த்துகள்! நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்த நமது தியாகிகள், … Read more