கோவிட் தடுப்பூசி முன்னெச்சரிக்கை டோஸ் வழங்குவதை உறுதி செய்க: மத்திய அரசு

புதுடெல்லி: 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் கோவிட் தடுப்பூசி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார். தேசிய சுகாதார இயக்கம், ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம், 15-வது நிதி ஆணைய மானியங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து மாநில, யூனியன் பிரதேச சுகாதார அமைச்சர்களுடன் காணொலி வழியாக மத்திய சுகாதாரத் துறை … Read more

அமுல் நிறுவன பால், பால் பொருட்களின் விலை உயர்வு

குஜராத்: குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமுல் நிறுவன பால், பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியதுடன் பால் பொருட்களின் விலையும் அமுல் நிறுவனம் உயர்த்தியது. 

சுதந்திர இந்தியாவில் மற்றொரு அவமான சம்பவம்! ராஜஸ்தானை உலுக்கிய பட்டிலியன சிறுவனின் மரணம்!

ராஜஸ்தானில் பட்டியலின மாணவர் ஆசிரியரின் பானையில் குடிநீர் பருகியதால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநில காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடக்காலம் ஆகிவிட்ட நிலையில் நாட்டில் இன்னும் தீண்டாமை கொடுமை இருந்து கொண்டுதான் இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் சுரனா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இந்திரகுமார் மேக்வாழ் என்ற பட்டியலின சிறுவன் படித்து வந்தான். 9 வயதான அந்த சிறுவன் பள்ளியில் உள்ள தண்ணீர் பானையில் இருந்து தண்ணீர் எடுத்ததால் … Read more

டெல்லியில் அதிகரிக்கும் கரோனா பரவல்: நாள் ஒன்றுக்கு 8-10 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையும் கூடியுள்ளது. மக்கள் முகக்கவசம் அணிவது அவசியம் என அரசு நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. “கரோனா தொற்று பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே தொற்று பாதிப்புக்கு ஆளானவர்கள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்று பரவலின் முடிவு என்பது தொலைதூரத்தில் உள்ளதாக தெரிகிறது. நாம் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம்” என டெல்லியின் துணைநிலை ஆளுநர் வினய் குமார் … Read more

அடுத்த 7 நாட்களுக்கு இந்தியாவிற்கு திக்… திக்… வந்துருச்சு சீன உளவு கப்பல் “யுவான் வாங் 5”!

இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுகத்திற்கு சீன உளவு கப்பல் ”யுவான் வாங் 5” வந்து சேர்ந்துள்ளது. இந்த கப்பல் மூலம் இந்தியாவை உளவு பார்க்கலாம் என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இலங்கையில் நுழைய அனுமதி அளிக்கக் கூடாது என்று இந்திய அரசு வலியுறுத்தி இருந்தது. மேலும் அமெரிக்க அரசும் எதிர்ப்பை காட்டியது. இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து அந்நாட்டிற்கான அமெரிக்க தூதர் ஜூலி ஜுங் பேசினார். சீன கப்பல் ஹம்பன்தோட்டா துறைமுகம் … Read more

பொதுமக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவின் நம்பகமான அமைப்பு எது? தேர்தல் ஆணையத்திற்கு 9வது இடம்

புதுடெல்லி: பொதுமக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவின் நம்பகமான அமைப்பு அல்லது நிறுவனங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் தேர்தல் ஆணையத்திற்கு 9வது இடம் கிடைத்துள்ளது. ‘இப்சோஸ் இந்தியா’ என்ற நிறுவனம் நாடு முழுவதும் நான்கு பெருநகரங்கள், அதற்கு அடுத்த நிலையில் உள்ள நகரங்கள், சிறு நகரங்கள், கிராமங்களில் இந்தியாவில் மிகவும் நம்பகமான நிறுவனங்கள் குறித்த ஆய்வுகளை பொதுமக்களிடம் நடத்தியது. அதன் விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி, இந்தியாவின் பாதுகாப்புப் படைகள், இந்திய ரிசர்வ் வங்கி, பிரதமர் … Read more

தனித்துவமான பிரச்சினைகளை தீர்க்க பேரவை, நீதி, நிர்வாகம் இணைந்து நடவடிக்கை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தல்

புதுடெல்லி: தனித்துவமான சவால்களை தீர்க்க சட்டப் பேரவை, நீதி, நிர்வாகத்துறை ஆகியவை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லி உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷனில் நேற்று நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்துகொண்டு பேசியதாவது: இந்தியா எதிர்கொண்ட சவால்களை இதுவரை எந்த நாடும் எதிர்கொள்ளவில்லை. சட்டப்பேரவை, நீதி, நிர்வாகத் துறை … Read more

பொது இடங்களில் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுமா..? – மத்திய அரசு சொல்வது என்ன..?

இந்தியாவில் 17% க்கு உட்பட்டோர் மட்டுமே கொரோன டோஸ் செலுத்தியுள்ளதாக மதிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுங் மாண்டவியா தெரிவித்துள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூட்டம் இணைய வழியில் நடைபெற்றது. இதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுங் மாண்டவியா கலந்துகொண்டு பேசினார். மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து பேசிய அவர் “ நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா டோஸ் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்” 18 … Read more

தேர்தல் இலவசங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையில் தங்களையும் இணைக்கக்கோரி திமுக மனு.!

டெல்லி: தேர்தலில் இலவசங்கள் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையில் தங்களையும் இணைக்கக்கோரி திமுக மனு அளித்துள்ளது. இலவசங்கள் தொடர்பான வழக்கில் திமுக தங்களையும் சேர்க்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடையிட்டு மனு அளித்துள்ளது. அரசியல் காட்சிகள் இலவச திட்டங்களை எதிர்த்து வழக்கறிஞரும் பாஜக நிர்வாகியுமான அஸ்வினி குமார் உபாத்தியாய மனு அளித்தனர்.பாஜகவின் அஸ்வினி என்பவர் தொடர்ந்த தேர்தலில் இலவச திட்டங்களை எதிர்ப்பும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்தலில் இலவசத் … Read more

மருத்துவம், பொறியியல் அனைத்திற்கும் ஒற்றை நுழைவு தேர்வு! விரைவில் நிபுணர்குழு – யுசிஜி

மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்விகளுக்கு ஒற்றை நுழைவுத்தேர்வு முறையை ஏற்படுத்து குறித்து ஆராய்வதற்கான நிபுணர் குழு இம்மாத இறுதியில் அமைக்கப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார் மருத்துவம், பொறியியல் போன்ற அனைத்து வகை உயர் கல்விகளுக்கும் ஒரே நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டம் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு யுஜிசி தலைவர் பேட்டி அளித்துள்ளார். அதில் மாணவர்கள் உயர் படிப்புகளில் சேர பல்வேறு நுழைவுத்தேர்வுகள் எழுதுவது அவர்களுக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். … Read more