தேர்தலில் இலவசங்கள் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

டெல்லி: தேர்தலில் இலவசங்கள் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையில் தங்களையும் இணைக்கக்கோரி திமுக மனு அளித்துள்ளது. இலவசங்கள் தொடர்பான வழக்கில் திமுக தங்களையும் சேர்க்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடையிட்டு மனு அளித்துள்ளது. அரசியல் காட்சிகள் இலவச திட்டங்களை எதிர்த்து வழக்கறிஞரும் பாஜக நிர்வாகியுமான அஸ்வினி குமார் உபாத்தியாய மனு அளித்தனர்.

குஜராத் கூட்டு பலாத்கார வழக்கில் விடுதலையான குற்றவாளிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு!

குஜராத் கலவரத்தின் போது கர்ப்பிணிப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான ஆயுள் தண்டனை குற்றவாளிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு மிகப்பெரிய கலவரம் மூண்டது. அப்போது ரன்திக்பூர் கிராமத்தைச் சேர்ந்த 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு (21) கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று … Read more

பலருக்கு முன்னோடியாக விளங்குகிறார் பிரதமர் மோடி – சந்திரபாபு நாயுடு புகழாரம்

குண்டூர்: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி குண்டூரில் உள்ள தெலுங்கு தேசம் தலைமை அலுவலகத்தில் நேற்று தேசியக் கொடி எற்றி மரியாதை செலுத்தினார் சந்திரபாபு நாயுடு. அப்போது அவர் பேசியதாவது: ஆங்கிலேயர்களின் ஆட்சியில் நம் நாட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. நம் மக்கள் ஏழ்மை, கொடுமைகளுக்கு இடையே பெரும் போராட்டம் செய்து சுதந்திரம் வாங்கிக்கொடுத்துள்ளனர். இதனை என்றும் நாம் மறக்க கூடாது. நேரு, நரசிம்ம ராவ், வாஜ்பாய் போன்றோர் நம் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டார்கள். … Read more

மாணவிகளுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட சப் கலெக்டர் – வைரலாகும் வீடியோ!

கேரள மாநில கண்ணூர் அருகே உள்ள தலச்சேரி பகுதியில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் சார் அனுகுமாரி பள்ளி மாணவிகளுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி வணிக வளாகங்கள், வீடுகளில் கூட இந்தாண்டு தேசிக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டன. அந்த வகையில் கேரள மாநிலம் கண்ணூர் அருகே தலச்சேரி நகராட்சி … Read more

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம்: தலைவர்கள் மரியாதை

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் அவரது நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய், கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி தனது 93 வயதில் காலமானார். அவரது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அதையடுத்து டெல்லியில் அமைந்துள்ள சதைவ் அடல் நினைவிடத்தில், நாட்டின் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உள்ளிட்ட … Read more

காஷ்மீர் ஆப்பிள் தோட்டத்தில் பண்டிட் சகோதரர்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஆப்பிள் தோட்டத்தில் புகுந்து பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்களை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒருவர் படுகாயமடைந்தார். காஷ்மீரில் பண்டிட் சிறுபான்மையினர் சமூகத்தினர், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது சமீப காலமாகவே அதிகமாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் புட்காம் மாவட்டத்தில் அரசு அலுவலகத்தில் காஷ்மீர் பண்டிட் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அந்தச் சம்பவத்திற்குப் பின்னர் பண்டிட் சமூகத்தினர் பெரும் போராட்டங்கள் நடத்தினர். தங்களின் உயிருக்கும், … Read more

திருப்பதியில் ரூல்ஸ் பிரேக்… உள்ள புகுந்த பெரும்புள்ளிகள்- டென்ஷனில் பக்தர்கள்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் கடந்த மூன்று நாட்களாக தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையொட்டி விஐபிக்கள் மட்டும் தரிசனம் செய்யும் சிறப்பு நடைமுறையை வரும் 21ஆம் தேதி வரை ரத்து செய்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனவே விஐபி பரிந்துரை கடிதங்கள் கொண்டு வந்தால் அவை ஏற்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆந்திராவில் ஆளுங்கட்சியாக இருக்கும் … Read more

குஜராத்தில் ரூ.1,026 கோடி மதிப்புள்ள 513 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

குஜராத்: பரூச் மாவட்டம் அங்கலேஷ்வரில் ரூ.1,026 கோடி மதிப்புள்ள 513 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மருந்து உற்பத்தி ஆலையில் சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரித்த 1 பெண் உட்பட 7 பேர் கைது செய்துள்ளனர்.

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் முதன்முறை தேசிய கொடிகளுடன் பிரம்மாண்ட பேரணி

புதுடெல்லி: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் தல் ஏரிக்கரை சாலையில் முதன்முறையாக தேசியக் கொடிகளுடன் நேற்று முன்தினம் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இதையேற்று கடந்த 13-ம் தேதி நாடு முழுவதும் வீடுகளில் தேசிய கொடியேற்றப்பட்டது. பல்வேறு நகரங்களில்தேசிய கொடிகளுடன் பிரம்மாண்ட பேரணிகள் நடைபெற்றன. ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் மாலை பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. அந்த யூனியன் … Read more

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: காஷ்மீரி பண்டிட் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், காஷ்மீரி பண்டிட் ஒருவர் உயிரிழந்தார். மேலும் அவரது சகோதரர் படுகாயம் அடைந்தார். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள, சோட்டிபோரா என்ற பகுதியில் உள்ள ஆப்பிள் தோட்டத்தில், பொது மக்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்; மேலும் ஒருவர் காயம் அடைந்தார். தாக்குதலுக்கு உள்ளான இருவரும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காயம் அடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து தகவல் … Read more