வீறுநடை போட்டு மீசையை முறுக்கி பாகிஸ்தான் வீரர்களை பார்த்து கர்ஜித்த இந்திய வீரர்கள்.. எல்லையில் மாஸ்..!

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இருநாட்டு எல்லைப்பகுதியான அட்டாரி-வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சி கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. எல்லையில் வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பை கூடியிருந்த பொதுமக்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். நிகழ்ச்சிகளின் நிறைவில் இரு நாட்டு வீரர்களும் தங்கள் நாட்டு தேசிய கொடியை பாரம்பரிய முறைப்படி இறக்கினர். மழை தூரலுக்கு மத்தியிலும் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் நேரில் கண்டுகளித்தனர். Source link

பெண்கள் சக்தி குறித்து பிரதமர் மோடி பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம்

புதுடெல்லி: பிரதமர் மோடி சுதந்திர தின உரையில், பெண்கள் சக்தி குறித்து பேசியதை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. ‘நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் முக்கிய தூண்களாவர். பெண்களின் முன்னேற்றம் மிக அவசியமானது. அவர்களுக்கு நாம் உரிய மதிப்பளிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு பாலின சமத்துவம் முக்கியம்’ என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். அவரது இந்த பேச்சு எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரீக் ஓ பிரையன் கூறுகையில், ‘இதை முழுவதும் ஏற்று கொள்கிறேன். … Read more

ஜப்பானில் உள்ள நேதாஜி அஸ்தியை கொண்டு வர வேண்டும்: மகள் கோரிக்கை

புதுடெல்லி: நாட்டின் 76வது சுதந்திர தினத்தையொட்டி, சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் ஒரே ஒரு வாரிசான, ஜெர்மனியில் வசித்து வரும் அவரது மகள் அனிதா போஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுதந்திரத்தின் மகிழ்ச்சியை அனுப்பவிப்பதற்கு எனது தந்தை வாழவில்லை. குறைந்தபட்சம் அவரது அஸ்தியாவது இந்திய மண்ணுக்கு கொண்டு வரவேண்டிய தருணம் இதுவாகும். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி அவர் இறந்தது குறித்து இன்னும் சந்தேகம் இருப்பவர்களுக்கு டிஎன்ஏ சோதனை மூலம் பதில் அளிக்க முடியும். … Read more

சுதந்திர தின விழாவில் இரு தரப்பினர் இடையே மோதல்.. ஒருவருக்கு கத்திக்குத்து – சிவமொகா நகரில் 144 தடை உத்தரவு

கர்நாடக மாநிலம் சிவமொகா நகரில் சுதந்திர தின விழா பேனரில் சவார்க்கர் படம் இருந்ததால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் வைத்திருந்த சவார்க்கர் போஸ்டரை அகற்றிவிட்டு மற்றொரு தரப்பினர் திப்பு சுல்தான் போஸ்டரை வைத்ததால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். சர்ச்சைக்குரிய போஸ்டர்களை அகற்றிவிட்டு அங்கு தேசிய கொடியை ஊன்றிய போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினர்.   Source link

வெடிகுண்டு குறுந்தகவலால் விமான நிலையத்தில் பரபரப்பு

மங்களூரு: மங்களூரு விமான நிலையத்தில்  இருந்து நேற்று முன்தினம் இண்டிகோ விமானம் மும்பைக்கு புறப்பட தயாராக இருந்தது.  பயணிகள் விமானத்தில் ஏறி கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஆண் பயணி  செல்போனில் யாருக்கோ குறுந்தகவலை அனுப்பி கொண்டிருந்தார்.  மற்றவருடனான அந்த சாட்டிங்கில் சக பயணி தன்னை ஒரு  வெடிகுண்டு வைத்திருக்கும் நபர் என குறிப்பிட்டுள்ளார்.  இதை பார்த்த அருகில்  இருந்த பெண் பயணி அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து  விமான பணிப்பெண்களுக்கு அவர் தகவல் அளித்தார். கட்டுப்பாட்டு பிரிவு … Read more

வலைதளத்தில் 5 கோடிக்கும் மேற்பட்ட மூவர்ணக் கொடி செல்ஃபி படங்கள் பதிவேற்றம்: மத்திய அரசு

புதுடெல்லி: மகத்தான சாதனையாக இல்லந்தோறும் மூவர்ணக்கொடி வலைதளத்தில் (www.harghartiranga.com) 5 கோடிக்கும் மேற்பட்ட மூவர்ணக் கொடி செல்ஃபி படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய நாடு சுதந்திரத்தின் 76-வது ஆண்டைத் தொடங்கும் இந்த வேளையில், விடுதலையின் அமிர்தப் பெருவிழா என்னும் 75 வார கவுன்ட்-டவுன் மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட இல்லந்தோறும் மூவர்ணக் கொடி இயக்கத்துடன் 2022, ஆகஸ்ட் 15-ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இந்த இயக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி வரை சுமார் … Read more

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை நிதி ரீதியாக பலவீனமாக்குகிறது: ஒன்றிய அரசு மீது கேசிஆர் குற்றச்சாட்டு

ஐதராபாத்: ‘ஒன்றிய பாஜ அரசானது, மாநிலங்களை நிதி ரீதியாக பலவீனப்படுத்துகின்றது’ என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஐதராபாத்தில் உள்ள கோல்கொண்டா கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களிடையே பேசிய அவர், ‘‘ஒன்றிய அரசு, மாநில அரசுகள் ஒன்றிணைந்து முன்னேற்ற பாதையை நோக்கி செல்ல வேண்டும் என்பதற்காக நாட்டின் அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் கூட்டாட்சி அமைப்பை உருவாக்கினார்கள். ஆனால் ஒன்றிய அரசானது கூட்டாட்சியின் மதிப்பிற்கு தீங்கிழைக்கின்றது. உட்கார்ந்திருக்கும் மரக்கிளையையே … Read more

கூட்டாட்சி, சமத்துவம், இலவசங்கள்… – மத்திய அரசை தாக்கிய மாநில முதல்வர்களின் சுதந்திர தின உரைகள்

புதுடெல்லி: நாட்டின் 76வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி ஆற்றிய உரையில், “நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் பெரும் பங்காற்றி, தலைமை தாங்கி, பல துறைகளில் முன்னுதாரணமாக உழைத்த பல மாநிலங்கள் நம் நாட்டில் உள்ளன. இது நமது கூட்டாட்சித் தத்துவத்திற்கு வலு சேர்க்கிறது. ஆனால் இன்றைய காலத்தின் தேவை, நமக்கு கூட்டுறவு கூட்டாட்சி மற்றும் போட்டியுடனான கூட்டுறவு கூட்டாட்சி தேவைப்படுகிறது. வளர்ச்சிக்கு போட்டி தேவை” என்று பேசினார். … Read more

அசாம் முதல்வர் அறிவிப்பு: 1 லட்சம் வழக்குகள் வாபஸ் பெறப்படும்

கவுகாத்தி: நீதித்துறையின் சுமையை குறைக்கும் வகையில், சர்ச்சைக்குரிய சமூக வலைதள பதிவுகள் உட்பட 1 லட்சம் சிறு வழக்குகள் வாபஸ் பெறப்படும் என அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது சுதந்திர தின உரையில் அறிவித்தார். அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்ற 76வது சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசிய அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ‘‘அசாம் நீதித்துறையில் சுமார் 4 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், … Read more

‘போட்டி உடன் கூட்டாட்சி’, ‘வாரிசு அரசியல்’… – பிரதமர் மோடி ஆற்றிய சுதந்திர தின உரையின் 75 அம்சங்கள்

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பின்னர் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவரது உரையின் 75 சிறப்பு அம்சங்கள்: > சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்த முக்கியமான தருணத்தில் எனது அன்பான நாட்டு மக்களுக்கு பாராட்டுக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள் பல! இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் மட்டுமல்ல, தங்கள் நாட்டை பெரிதும் நேசிக்கும் இந்தியர்களால் உலகெங்கும் நமது மூவர்ணக் கொடி பெருமை, மரியாதை மற்றும் புகழுடன் பறக்கவிடப்படுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி … Read more