ரூ.215 கோடி மிரட்டி பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் குற்றவாளி: குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை தகவல்

புதுடெல்லி: டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவிந்தர் மோகன் சிங் என்பவரை சிறையிலிருந்து விடுவிக்க அவரின் மனைவியிடம் ரூ.215 கோடி மிரட்டிப் பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நூரா பத்தேகி ஆகியோருக்கு விலை மதிப்புமிக்க பொருட்களை கொடுத்தாக சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இரண்டு நடிகைகளிடமும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மிரட்டி பணம் பறித்தல் வழக்கு தொடர்பாக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு … Read more

குழந்தைகளுக்கான பயணச்சீட்டு விதிமுறைகளில் மாற்றம் இல்லை: ரயில்வே அமைச்சகம் தகவல் 

புதுடெல்லி: ரயிலில் குழந்தைகளுக்கான பயணச்சீட்டு விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரயிலில் குழந்தைகளுக்கான பயணச்சீட்டு விதிமுறைகளை இந்திய ரயில்வே மாற்றியமைத்துள்ளதாக அண்மையில் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதன்படி 1 முதல் 4 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்று அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை. ரயிலில் குழந்தைகளுக்கான பயணச்சீட்டு விதிமுறைகளில் இந்திய ரயில்வே எந்த … Read more

“நிம்மதியாக வாழ்வதற்கான உரிமையை கொடுங்கள்” – பில்கிஸ் பானு உருக்கம்

குஜராத்: “இந்த அநீதியான முடிவை எடுப்பதற்கு முன், எனது பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு பற்றி யாரும் யோசிக்கவில்லை” என்று பில்கிஸ் பானு தெரிவித்துள்ளார். 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபணமாகி ஆயுள் தண்டனை பெற்றவர்களை குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது. இந்த விடுதலை விமர்சனங்களை எழுப்பியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு விடுதலை … Read more

விவசாயிகளுக்கு குட் நியூஸ்..! – மத்திய அரசின் புதிய திட்டம்..!!

தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்து விட்ட போதிலும் விவசாயிகளின் கண்ணீர் கதையை கேட்க ஆள் இல்லாத நிலையே நீடித்து வருகிறது. இது காலம் காலமாக தொடரும் அவல நிலையாகும். அரசு எவ்வளவோ திட்டங்களை அறிவித்தாலும் அது விவசாயிகளின் குறையை தீர்த்த பாடில்லை. இந்நிலையில் மத்திய அரசு விவசாயிகளை மகிழ்விக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விவசாய கடன்களுக்கு ஒன்றரை சதவீதம் வட்டி மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது 3 லட்சம் வரையிலான விவசாய கடன்களுக்கு … Read more

உள்ளூர் வியாபாரிகளுக்கு நற்செய்தி பழையபடி ரயில் பயணத்தில் பொருட்களை விற்க அனுமதி: ரயில்வே புதிய திட்டம்

புதுடெல்லி: ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், உள்ளூர் தயாரிப்புகள் விற்பனையை ஊக்கப்படுத்த ‘ஒரே நிலையம், ஒரே தயாரிப்பு’ திட்டத்தை இந்த ஆண்டு பட்ஜெட்டில், ஒன்றிய அரசு அறிவித்தது. இதன்படி, ​​உணவுப் பொருட்கள் முதல் கைவினைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் வரை பல்வேறு வகையான பொருட்களை ரயில் நிலையங்களில் விற்க அனுமதிக்கப்பட உள்ளனர். தற்போது, ஐஆர்சிடிசி அனுமதி பெற்ற வணிகர்கள் மட்டுமே ரயில் நிலையங்களில் கடை வைத்து வியாபாரம் செய்ய முடியும். இதே போல, சிறு, … Read more

பீகாரில் புதிதாக பதவியேற்ற சட்ட அமைச்சருக்கு பிடிவாரண்ட் – நெருடலில் நிதிஷ் குமாா்!

பீகாரில் புதிதாக பதவியேற்ற சட்ட அமைச்சருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது குறித்து கேள்விக்கு பதிலளித்த முதல்வர் நிதிஷ் குமார், அது பற்றி எதுவும் தனக்குத் தெரியாது என்றார். பீகார் மாநிலத்தில் பாஜக உடனான கூட்டணியை அண்மையில் முறித்த நிதிஷ் குமாா், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கைகோர்த்து கூட்டணி ஆட்சியை அமைத்தாா். இதையடுத்து,  முதல்வா் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை செவ்வாய்க்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டு, 31 அமைச்சா்கள் பதவியேற்றனா். இவா்களில் 16 போ் ராஷ்ட்ரீய … Read more

அந்த விஷயம் குறித்த ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

உடலுறவு, உடலுறவின்போது ஆணுறை பயன்பாடு உள்ளிட்டவை குறித்து தேசிய துடும்ப நல அமைப்பு அண்மையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சுமார் ஒரு லட்சம் ஆண்கள், ஒரு லட்சம் பெண்களிடம் மேற்கொள்ளபட்ட அந்த ஆய்வு முடிவில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள்: * இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களுடன் திருமணம் ஆகாத, விவாகரத்து ஆன மற்றும் விதவை பெண்கள் அதிக அளவு உடலுறவு கொண்டுல்ளனர். இவர்களில் நகர்ப்புற பெண்களைவிட கிராமப்புற பெண்களே அதிகம் … Read more

பாஜ நாடாளுமன்ற குழுவில் அதிரடி மாற்றம் நிதின் கட்கரி, சவுகான் திடீர் நீக்கம்: எடியூரப்பா உட்பட 6 பேர் சேர்ப்பு

புதுடெல்லி: பாஜ நாடாளுமன்ற குழுவில் இருந்து ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, மபி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் திடீரென நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட 6 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பாஜ கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்டது நாடாளுமன்ற குழு. இக்குழுவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், இக்குழுவில் … Read more

பாஜக ஆட்சி மன்ற குழுவில் அதிரடி மாற்றம்..வானதி சீனிவாசன் உள்ளே! ஆதித்யநாத் புறக்கணிப்பா?

பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு மற்றும் ஆட்சி மன்ற குழு மாற்றியமைக்கப்பட்ட நிலையில், வானதி சீனிவாசன் பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியில் மிகப்பெரிய அளவிலான அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டு அதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதன்படி மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் நாடாளுமன்ற (ஆட்சி மன்ற) குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.  … Read more

ஜம்மு காஷ்மீர் தலைவராக நியமிக்கப்பட்ட காங். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ராஜினாமா; மாநில அரசியலுக்கு தள்ளியதால் அதிருப்தி

காஷ்மீர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். நேற்று ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களில், இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.ஜம்மு – காஷ்மீரின் பிரசாரக் குழுத் தலைவராக உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், நேற்று ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், தான் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே அந்தப் பதவியில் இருந்து விலகினார். பிரசாரக் குழு தலைவர் பதவி … Read more