பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அமைச்சரவை விரிவாக்கம்; 31 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பு..!!

பாட்னா: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அமைச்சரவையில் 31 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் பகு சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்ற நிலையில் அமைச்சரவை இன்று பதவியேற்றது. ஆட்சி கவிழ்ப்பில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டதோடு பாரதிய ஜனதாவையும் ஓரம்கட்டிய நிதிஷ் குமார், தற்போது ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் இடதுசாரிகள் மற்றும் சுயேச்சைகளின் உதவியோடு மீண்டும் முதலமைச்சராகியுள்ளார். முதலமைச்சராக நிதிஷ் குமாரும், துணை … Read more

ஹரியானா | அனைத்து மதத்தினருக்கான ‘இன்குலாப்’ கோயில்: புரட்சி வீரர்களுக்கு பூஜை

புதுடெல்லி: அனைத்து மதத்தினருக்கான ‘இன்குலாப்’ கோயில், ஹரியானாவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 22 வருடங்களாக நாட்டின் சுதந்திரம் பெறப் பாடுபட்ட புரட்சியாளர்கள் பூசிக்கப்படுகின்றனர். சுதந்திரப் போராட்டத்தில் மிகவும் பிரபலமாக எழுப்பப்பட்ட கோஷம், ’இந்துஸ்தான் ஜிந்தாபாத் (இந்தியநாடு வாழ்க)’. இதை முதன்முறையாக 1921 இல் முஸ்லீம் அறிஞரான மவுலானா ஹசரத் மொய்னி எழுப்பியிருந்தார். சுதந்திரப்போராட்ட வீரரான மொய்னி, ஒரு சிறந்த கவிஞராகவும் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவராகவும் இருந்தார். இவரது கோஷத்தை சுதந்திரப் போராட்டத்தில் தூக்கிலிடப்பட்ட பகத்சிங், தொடர்ந்து எழுப்பியதால் … Read more

இந்தியாவின் வளர்ச்சியில் வாழும் அணுகுண்டு நாயகன் வாஜ்பாய்!

“இந்தியா இப்போது அணு ஆயுதங்களை கொண்ட நாடு. நம்மிடம் அணு ஆயுதங்களை வைத்துக் கொள்வதற்கான தகுதி உள்ளது. நாம் அதை ஒருபோதும் ஆத்திரத்துக்காக பயன்படுத்த மாட்டோம்.” போக்ரான் அணுகுண்டு சோதனைக்கு பின்னர் வாஜ்பாய் கூறிய வார்த்தைகள் இவை. மேற்கத்திய நாடுகளின் கண்களில் மண்ணைத்தூவி அணுகுண்டு சோதனை நடத்தியவர் வாஜ்பாய். இதற்காக கடும் கண்டனங்கள் எழுந்து, பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டபோதிலும், இந்தியாவை அணு ஆயுதங்கள் கொண்ட நாடாக்கியவர் அவர். இந்தியாவின் தன்னிகரற்ற தலைவராக விளங்கிய அடல் பிஹாரி வாஜ்பாய், … Read more

முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் மாநில அமைச்சரவையில் 31 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

பீகார்: முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் மாநில அமைச்சரவையில் 31 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். ஏற்கனவே துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்ற நிலையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி டெல்லியில் அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் நரேந்திர் மோடி, அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் சதைவ் அடல் என்ற வாஜ்பாயின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர். வாஜ்பாய் 10 அரிய தகவல்கள்: அடல் பிஹாரி வாஜ்பாய், மத்தியப் பிரதேச மாநிலம் … Read more

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு 2-வது நாளாக குறைப்பு

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு 2-வது நாளாக 6,159 கன அடியாக குறைந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் 2,159 கன அடி, கபினி அணையில் 4,000 கன அடிநீர் காவிரியாற்றில் வெளியேற்றப்படுகிறது.

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை இடைநீக்கம் செய்த FIFA – காரணம் என்ன?

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை இடைநீக்கம் செய்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது. இந்திய கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடைபெறாமல் இருப்பதாகவும், பதவிக் காலம் முடிந்த பின்னரும் தலைமை பொறுப்பில் PRAFUL PATEL தொடர்கிறார் என இந்திய கால்பந்து கூட்டமைப்பு நிர்வாகிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை நிர்வகிக்க குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. இதனால் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் எனவும், இந்தநிலை தொடர்ந்தால் மூன்றாம் நபர்கள் தலையீடு … Read more

தேசிய கீதத்தை பாடிய அகதிகள்

புதுடெல்லி: பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த 12 அகதிகள், கிராமி விருது வென்ற இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் உடன் இணைந்து தேசிய கீதத்தை பாடியுள்ளனர். சுதந்திர தினத்தையொட்டி இந்தியர்கள் பல்வேறு வகைகளில் தங்களது தேச பக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த 12 அகதிகள் தங்களது இந்திய நேசத்தை தேசிய கீதத்தை பாடி வெளிப்படுத்தி உள்ளனர். மியான்மரை சேர்ந்த ஆரா ரெம் மாவி, லென் நுயாம், விக்டர், மரியா, … Read more

பாரத் ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினம்; பிரதமர், குடியரசுத் தலைவர் அஞ்சலி

  பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் நான்காவது நினைவு தினம் இன்று. முன்னாள் பிரதமரான வாஜ்பாய் கடந்த 2018 ஆகஸ்ட் 16-ம் தேதி தனது 93-வது வயதில் மரணமடைந்தார்.   நாட்டின் பிரதமராக 3 முறை பதவி வகித்தவர் அடல் பிஹாரி வாய்பாய். அடல் பிஹாரி வாஜ்பாய் 1996-ம் ஆண்டு 13 நாட்கள் பிரதமராகவும், 1998-99 ஆம் ஆண்டில் 13 மாதங்கள் பிரதமராகவும் பதவி வகித்தார். அதன் பின் 1999 முதல் 2004 வரை முழுமையாக 5 … Read more

பில்கீஸ் பானோ பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 குற்றவாளிகள் விடுவிப்பு: குஜராத் அரசின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்…

காந்திநகர் : நாட்டையே உலுக்கிய பில்கீஸ் பானோ வழக்கில் குற்றவாளிகள் 11 பேரையும் குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது. இதற்கு ராஜ்ய ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குஜராத்தில் 2002ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இதில், தாகோடு மாவட்டம் ராந்திப்பூர் கிராமத்தை சேர்ந்த இஸ்லாமிய பெண்ணான பில்கீஸ் பானோ என்ற 5 மாத கர்பிணி கூட்டு பாலியல் … Read more