இம்மாத இறுதியில் அமைக்கப்படும் கியூட் தேர்வுடன் நீட், ஜேஇஇ இணைப்பதை திட்டமிட குழு: யுஜிசி தலைவர் தகவல்

புதுடெல்லி: ‘ஜேஇஇ, நீட் தேர்வுகளை கியூட் தேர்வுடன் இணைப்பதை திட்டமிட, இம்மாத இறுதியில் தனி குழு அமைக்கப்படும்,’ என யுசிஜி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்தார். ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, ‘கியூட்’ என்ற பெயரில் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இதனுடன் நீட் தேர்வு, ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளையும் இணைத்து நாடு முழுவதும் ஒரே தகுதித் தேர்வாக நடத்த இருப்பதாக பல்கலை மானியக் குழு (யுசிஜி) தலைவர் ஜெகதீஷ் குமார் சமீபத்தில் … Read more

மத்திய அரசின் மின்னணு சந்தையில் 2.36 கோடி தேசியக் கொடி ரூ.60 கோடிக்கு விற்பனை

புதுடெல்லி: மத்திய அரசின் மின்னணு சந்தையில் ஆன்லைன் மூலம் ரூ.60 கோடிக்கு 2.36 கோடி தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவையொட்டி ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை வீடுகள்தோறும் தேசியக் கொடி யேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இதற்காக பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்கள், தனியார் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு அளவுகளில் தேசிய கொடிகள் விநியோகம் செய்யப் பட்டன. மத்திய அரசின் https://gem.gov.in/ … Read more

இன்று முதல் அமல் அமுல் பால் விலை லிட்டர் ரூ.2 உயர்வு

அகமதாபாத்: அமுல் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. இது, இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்தியாவில் பால் சார்ந்த உணவுப் பொருட்கள் உற்பத்தியில் அமுல் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனத்தின் பால் பொருட்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், அமுல் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களைச் சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு, அமுல் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், ‘பால் விலையில் 4 … Read more

மீனவர்கள் போராட்டம் பணிந்தது அதானி குழுமம்: விழிஞ்ஞம் துறைமுக பணி நிறுத்தம்

திருவனந்தபுரம்: மீனவர்கள் போராட்டம் தீவிரமானதால், விழிஞ்ஞம்  துறைமுகப் பணிகளை நிறுத்துவதாக அதானி குழுமம்  தெரிவித்துள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்தில் வர்த்தக துறைமுகம் கட்டுமான பணிகளை சில வருடங்களுக்கு முன் அதானி குழுமம் தொடங்கியது. தற்போது, அது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இத்திட்டம் தொடங்கிய போதே தங்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாக விழிஞ்ஞம் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், எதிர்ப்பையும் மீறி பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், திருவனந்தபுரம் மாவட்ட மீனவர்கள் துறைமுகத்திற்கு எதிரான போராட்டத்தை மீண்டும் … Read more

ராஜஸ்தான் | பட்டியலின மாணவர் மரண விவகாரம் – அரசியல் நெருக்கடியில் முதல்வர் அசோக் கெலாட்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தனியார் பள்ளியில் பட்டியலின மாணவர் ஒருவர் தன் ஆசிரியரின் பானையில் குடிநீர் பருகியதால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் நெருக்கடியாக மாறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ளது சுரானா கிராமம். இதன் செய்லா காவல்நிலையப் பகுதியில் சரஸ்வதி வித்யா மந்திர் எனும் பெயரில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இதில் இந்திர குமார் ( 9 வயது ) மெக்வால் என்ற மாணவர் மூன்றாம் … Read more

தெலங்கானாவில் வாகனம், ரயில்கள் நிறுத்தம் இருந்த இடத்தில் 1 நிமிடம் தேசிய கீதம் பாடிய மக்கள்: சமூக வலைத்தளத்தில் குவியும் பாராட்டு

திருமலை: தெலங்கானாவில் அரசு அழைப்பு விடுத்த வேண்டுகோளை ஏற்று விவசாயிகள், பொதுமக்கள், அதிகாரிகள் ஒரு நிமிடம் தேசிய கீதம் பாடினர். இதற்காக வாகனங்கள் நிறுத்தப்பட்டன. நாட்டின் 76வது சுதந்திர தினவிழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக, நேற்று  காலை 11.30 மணிக்கு அனைவரும் தாங்கள் இருக்கும் இடத்தில் ஒரு நிமிடம் நின்று தேசிய கீதம் பாடும்படி தெலங்கானா அரசு வேண்டுகோள் விடுத்தது.ஐதராபாத் அபிட்ஸ் ஜிபிஓ. நேரு சிலை அருகே … Read more

காங்கிரஸில் தொடரும் அதிருப்தி | நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களில் பதவியை ராஜினாமா செய்த குலாம் நபி ஆசாத்

காஷ்மீர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். நேற்று ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களில், இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸின் பிரசாரக் குழுத் தலைவராக உள்ள ஆசாத், பதவியேற்ற சிறிது நேரத்திலேயே அந்தப் பதவியில் இருந்து விலகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தலைவர் பதவி மட்டுமல்ல, மாநில அரசியல் விவகாரக் குழுவில் இருந்தும் அவர் ராஜினாமா செய்துள்ளார். முதல்கட்ட தகவலின்படி, இந்த நியமனம் தனது மதிப்பிற்கு குறைவானதாக … Read more

எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே பதற்றமான சூழல்.. எல்லையில் நவீனமாகும் இந்திய ராணுவம்..!

எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே சீன ராணுவத்துடன் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அப்பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் ஒத்திகையை இன்று நடத்தியது. மேலும், எல்லைகளை கண்காணிக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் போன்றவை இன்று ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன… எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள பாங்கோங் ஏரியில் இந்திய ராணுவம் சார்பில் இன்று தாக்குதல் ஒத்திகை நடைபெற்றது. நவீன படகில் பயணித்து ஏரியின் மையத்தை அடைந்து திரும்புவது போன்ற ஒத்திகையை, ராணுவ வீரர்கள் நிகழ்த்தி காண்பித்தனர். ஒரே நேரத்தில் … Read more

கூட்டு பலாத்காரம், 7 பேர் படுகொலை பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் விடுதலை: பொதுமன்னிப்பு என்ற பெயரில் குஜராத் அரசு சர்ச்சை உத்தரவு

அகமதாபாத்: குஜராத்தில் கர்ப்பிணி பெண்ணாக இருந்த பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம், 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகளை அம்மாநில அரசு பொது மன்னிப்பு என்ற பெயரில் விடுதலை செய்திருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகள் பிரதமரை கடுமையாக விமர்சித்துள்ளன. குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகு, ரன்திக்பூர் கிராமத்தில் 5 மாத கர்ப்பிணி பில்கிஸ் பானு  கூட்டு … Read more

மகாநதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் மக்கள் பரிதவிப்பு.. தனித்தீவாக மாறிய 100க்கும் மேற்பட்ட கிராமங்கள்..!

ஒடிசாவில், மகாநதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் கட்டாக்,  ஜகத்சிங்பூர், கேந்திரபாடா உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் தனித்தீவாக காட்சியளிக்கின்றன. தொடர் மழையால் ஹிராகுட் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதே போன்று, பைதரணி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், கனி ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டு பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் சூழ்ந்த கிராமங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிடுமாறு அதிகாரிகளுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் … Read more