அற்பமான வழக்குகளை தாக்கல் செய்வோர் மீது அபராதம் – தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள யுயு லலித் வலியுறுத்தல்

புதுடெல்லி: அற்பமான வழக்குகளை தாக்கல் செய்வோர் மீது அபராதம் விதிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள யுயு லலித் நேற்று வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: நீதிமன்றங்களில் கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அற்பமான வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, அற்ப வழக்குகளை தாக்கல் செய்வோர் மீது அபராதம் விதிப்பதை கட்டாயமாக்க வேண்டும். அதற்கான வழிமுறையை உருவாக்க வேண்டும். நீதிமன்றத்தின் … Read more

புதுச்சேரியில் ஆக.22ல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி…

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆகஸ்ட் 22ல் பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார். 10,696 கோடி புதுச்சேரி பட்ஜெட்டுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கையில் முடிவுக்கு வருகிறது அவசரநிலை பிரகடனம் – அதிபர் ரணில் விக்கிரமசிங்க தகவல்

இலங்கையில் தற்போது அமலில் உள்ள அவசரநிலை பிரகடனம் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும் என அந்நாட்டின் அதிபர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார். வரலாறு காணாத அளவுக்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்நாட்டில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனைத்தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச விலகிய நிலையில், அதிபர் பதவியிலிருந்து கோட்டபய ராஜபக்ச அண்மையில் பதவி விலகினார். இதையடுத்து ரணில் விக்ரமசிங்க புதிய அதிபராக கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் போராட்டங்கள் தொடர்ந்ததால், வன்முறையை … Read more

ஜம்முவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்பு: போலீஸார் தீவிர விசாரணை

ஜம்மு காஷ்மீரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஜம்முவி சித்ரா பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. இறந்தவர்களின் அடையாளம் தெரியவந்துள்ளது. சகினா பேகம். அவரின் இரண்டு மகள்கள் நசீமா அக்தர், ரூபீனா பானு, மகன் ஜாஃபர் சலீம், உறவினர்கள் நூர் உல் ஹபீப், சாஜத் அகமது ஆகியோர் உயிரிழந்தவர்கள். இவர்களில் இருவரின் சடலம் ஒரு வீட்டிலும், எஞ்சிய 4 … Read more

மகாராஷ்டிராவில் பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயில் மோதி கோர விபத்து: படுகாயமடைந்த 50 பயணிகளுக்கு தீவிர சிகிச்சை

மும்பை: மகாராஷ்டிராவில் பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயில் மோதிய விபத்தில் 50 பேர் காயம் அடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் விலாஸ்பூரில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட பயணிகள் ரயில் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. மராட்டிய மாநிலம் கோண்டியா அருகே நள்ளிரவில் ரயில் வந்த போது சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது நேருக்கு நேர் பயங்கரமாக  மோதியது.இதில் பயணிகள் ரயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே … Read more

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் மரணம்…போலீஸ் விசாரணை தீவிரம்

(கோப்பு புகைப்படம்) ஜம்முவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இன்று காலை இவர்களின் உடலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இறந்தவர்கள் சகினா பேகம், அவரது மகள் நசீமா அக்தர், ருபீனா பானோ, மகன் சாஃபர் சலிம், இவர்களின் உறவினர்கள் நூர் உல் ஹபீப் மற்றும் சஜாத் அகமத் ஆகியோர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்களின் உடல், சித்ரா என்ற பகுதியிலுள்ள வீட்டிலிருந்த மீட்கப்பட்டு அப்பகுதியிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. மேற்கொண்டு … Read more

ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ஜாமியா மாணவருக்கு 30 நாள் நீதிமன்ற காவல்

புதுடெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர் மொஹ்சின் அகமதுவை 30 நாள் நீதிமன்ற காவலில் வைக்க என்ஐஏ நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு எலக்ட்ரிகல் இன்ஜினீயரிங் படித்து வந்தவர் மொஹ்சின் அகமது (22). பிஹார் தலைநகர் பாட்னாவை சேர்ந்த இவர், டெல்லி பட்லா ஹவுஸ் பகுதியில் தங்கியிருந்தார். பட்லா ஹவுசில் கடந்த 6-ம் தேதி என்ஐஏ நடத்திய சோதனையை தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டார். … Read more

ஜம்மு-காஷ்மீரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்பு: போலீசார் விசாரணை…

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் சிட்ரா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக கிடந்த 6 பேரின் மரணம் குறித்து ஜம்மு-காஷ்மீர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் தலைமை பொறுப்பு: மவுனம் காக்கும் ராகுல் காந்தி; தேர்தல் ஏற்பாட்டாளர்கள் குழப்பம்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்துவதற்கான காலம் நெருங்கிவரும் சூழலில் தலைவர் பதவிக்காக போட்டியிடுவது குறித்து ராகுல் காந்தி மவுனம் காப்பது தேர்தல் ஏற்பாட்டாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 21ல் இருந்து செப்டம்பர் 30க்குள் நடத்தி முடிக்கப்படும் என்று அக்கட்சி அறிவித்திருந்தது. ஆனால் தலைவர் பதவி போட்டி குறித்த தனது முடிவை ராகுல் காந்தி இன்னும் தெளிவுபடுத்தவில்லை. காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியை ஊக்குவித்து தலைவர் பதவிக்கு போட்டியிட வைப்பதற்கு பல்வேறு … Read more

காஷ்மீர் காங்கிரஸ் பிரச்சார குழு தலைவர் பதவியை ஏற்க குலாம் நபி ஆசாத் மறுப்பு: நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களில் ராஜினாமா செய்ததால் பரபரப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரசின் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களில், குலாம் நபி ஆசாத்  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். அகில இந்திய அரசியல் விவகாரக் குழு உறுப்பினர், காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர், முன்னாள் மத்திய மந்திரி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். காங்கிரசின் தலைமை மாற்றம் தொடர்பாக நீண்ட காலமாகவே அதிருப்தியில் இருந்து வருகிறார் குலாம் நபி ஆசாத். இதை வெளிப்படையாகவும் … Read more