பார் நடத்துகிறாரா ஸ்மிருதி இரானி மகள்..? – குற்றச்சாட்டும் விளக்கமும்!

சமூக வலைதளங்களில் சில காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மகள் மீது குற்றம் சுமத்தினர். அதில் அவர்கள் கூறியிருப்பது ” ஸ்மிருதி இராணி மகள் கோவாவில் சொந்தமாக பார் நடத்தி வருகிறார் என்றும் அது பற்றி விளக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்” இந்நிலையில் அதற்கு விளக்கம் அளித்த வழக்கறிஞர் ஐரஸ் ரோட்ரிகஸ், ” அந்த பார் அந்தோணி டி சோசா என்பவர் பெயரில் நடத்தப்பட்டு வருகிறது , ஆனால் அந்தோணி டிசோசா 2021ஆம் ஆண்டு … Read more

“மகாராஷ்டிர ஆளுநரின் கருத்து துரதிர்ஷ்டவசமானது; எதிர்பாராதது அல்ல” – மார்கரெட் ஆல்வா

புதுடெல்லி: “மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரியின் துரதிர்ஷ்டவசமானது, ஆனால் எதிர்பார்க்காதது இல்லை” என்று எதிர்க்கட்சிகளின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் மார்கரெட் ஆல்வா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மார்கரெட் ஆல்வா, தனது போட்டி வேட்பாளரான மேற்கு வங்க கவர்னர் ஜெக்தீப் தன்வரையும் தாக்கியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மகாராஷ்டிர ஆளுநரின் கருத்து துரதிர்ஷ்டவசமானதுதான்; ஆனால் எதிர்பாராதது இல்லை. குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளரான, முன்னாள் மேற்கு வங்க ஆளுநரிடமிருந்து அவர் பெற்ற செய்தியான சர்ச்சை, … Read more

சுலபமாக வர்த்தகம் செய்வதை போல் சுலபமாக மக்களுக்கு நீதி கிடைப்பதும் முக்கியம் : பிரதமர் மோடி பேச்சு

டெல்லி : அனைவருக்கும் எளிய வழியில் நீதி வழங்கும் சட்டத்துறை கட்டமைப்புகளை ஏற்படுத்துவது அவசியமானவை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அனைத்திந்திய மாவட்ட சட்ட பணி சேவைகள் ஆணைய கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். டெல்லி விஞ்ஞான் பவனில் தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பாக நடைபெற்ற தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, 75வது சுதந்திர தினத்தின் அமிர்த பெருவிழா கொண்டாடப்படும் இந்த தருணத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு … Read more

பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சி அடைந்து வரும் நாடு இந்தியா – நிதியமைச்சர் நிர்மலா பெருமிதம்

உலகளவில் பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சி அடைந்து வரும் நாடு இந்தியாதான் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவில் ஜனநாயகம் வலிமையாக உள்ளதாகக் கூறினார். “உலக பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதாக சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எஃப். கூறுகிறது. உலகின் பல நாடுகளின் வளர்ச்சி குறைந்து வருவதாகவும் மந்தமாக இருப்பதாகவும் ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது. முன்பு 5% வளர்ச்சி என்று கூறியிருந்த பல நாடுகளின் வளர்ச்சிக் கணிப்பை 3% க்கும் … Read more

‘ஆபரேஷன் விஜய்’ வீரர்கள் தியாகத்திற்கு அஞ்சலி: கார்கில் மலை உச்சிக்கு ‘துப்பாக்கி மலை’ எனப் பெயர் சூட்டல்

புதுடெல்லி: இந்தியப் படைகளின் வெற்றியை நினைவுகூரும் வகையில் “ஆபரேஷன் விஜய்”யில் பங்கேற்ற வீரர்களின் உச்சபட்ச தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கார்கில் செக்டாரின் டிராஸில் உள்ள 5140-வது மலைக்கு “துப்பாக்கி மலை” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவு, துல்லியமான துப்பாக்கிச் சக்தியுடன், எதிரி துருப்புக்கள் மற்றும் 5140- வது முனை உட்பட அவர்களின் பாதுகாப்பு நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்த முடிந்தது. இது நடவடிக்கைகளை முன்கூட்டியே முடிப்பதற்கான முக்கிய காரணியாக இருந்தது. பீரங்கி படையின் … Read more

அழுக்கு மெத்தையில் மருத்துவரை படுக்க சொன்ன சுகாதார அமைச்சர் – பஞ்சாபில் எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

பஞ்சாப் சுகாதார அமைச்சர் சேத்தன் சிங் ஜூரமஜ்ரா, பாபா ஃபரித் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை மருத்துவமனையில் அழுக்கு மெத்தையில் படுக்க வற்புறுத்தியதைக் கண்டு பல தரப்பிலிருந்தும் கண்டனத்திற்கு உள்ளானார். வி.சி. ராஜ் பகதூர் ராஜினாமா செய்ததாகவும், பஞ்சாப் முதலமைச்சரிடம் தன்னை பணியில் இருந்து விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.பஞ்சாப் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் ஃபரித்கோட்டின் குரு கோபிந்த் சிங் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை ஜூரமஜ்ரா ஆய்வு செய்தபோது இந்த சம்பவம் நடந்தது. சமூக … Read more

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு கடைசி தேதி ஜூலை 31 ஆம் தேதி ஆகும். இந்த நிலையில், நாளையுடன் வருமானவரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நிறைவடைவதால் ஆன்லைனில் தங்களது வருமான வரியை தாக்கல் செய்ய பலரும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், வருமான வரியை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று இணையதளம் … Read more

ஒரு மாதமாக அமையாமல் இருக்கும் அமைச்சரவை! மகாராஷ்டிரா இழுபறிக்கு காரணம் என்ன?

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சியமைத்து இன்றுடன் ஒரு மாதமாகிறது. முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவும் துணை முதலமைச்சராக தேவேந்திர பட்நாவிசும் இருந்து வரும் நிலையில், அமைச்சரவை விரிவாக்கத்திற்கான அறிகுறியே இன்னும் தெரியவில்லை. தற்போது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் அனைத்து துறைகளையும் கையாண்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில், இருவரும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா … Read more

புதுச்சேரியில் அனைத்து சமூக நல அமைப்பினர் கடும் எதிர்ப்பு: தியாக பெருஞ்சுவரில் சாவர்க்கர் பெயர் பலகை அமைப்பதா?

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள தியாக பெருஞ்சுவரில் சாவர்க்கர் பெயர் பலகை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக வந்த சமூக அமைப்பினர் சாவர்க்கர் உருவ படத்தை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் 75 இடங்களில் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் தியாக பெருஞ்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி புதுச்சேரி கடற்கரையில் காந்தி சிலை எதிரே தியாக பெருஞ்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுதந்திர போராட்டத்திற்கு எந்த பங்களிப்பும் … Read more

'ரூ.20 லட்சம் மதிப்புள்ள பண்ணை வீடு'.. பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா மீது குவியும் நெருக்கடி

பார்த்தா சாட்டர்ஜியும் அர்பிதா முகர்ஜியும் சேர்ந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள பண்ணை வீடு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர்கள் நியமன முறைகேடு தொடர்பாக திரிணாமுல் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவரின் உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோரை அமலாக்கத்துறை கைது செய்து விசாரித்து வருகிறது. பார்த்தா சட்டர்ஜிக்கு நெருங்கிய கூட்டாளியும் நடிகையுமான அர்பிதா முகர்ஜி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 50 கோடி ரூபாய் ரொக்கத்தை கைப்பற்றினர். அர்பிதா முகர்ஜியின் … Read more