நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த அனைத்து கட்சிகளுடன் 16,17ம் தேதி ஆலோசனை: வெங்கையா, பிர்லா அழைப்பு

புதுடெல்லி: மழைக்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக விவாதிக்க, வரும் 16, 17ம் தேதிகளில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை ஓம் பிர்லாவும், வெங்கையா நாயுடுவும் கூட்டியுள்ளனர். வரும் 18ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து அதில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ள மசோதாக்கள் குறித்து ஆலோசிக்க  மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் வரும் 16ம் தேதி மாலை 4 மணிக்கு மக்களவை அனைத்துக் … Read more

"பதவியில் இருந்தபோது உளவு பார்க்கவில்லை" – பா.ஜ.க குற்றச்சாட்டுக்கு அன்சாரி பதில்

புதுடெல்லி: பதவியில் இருந்தபோது உளவுபார்க்கவில்லை என முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி கூறியுள்ளார். ஈரான் தூதராக ஹமீத் அன்சாரி பணியாற்றிய காலத்தில் உளவு வேலை பார்த்ததாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் நுஸ்ரத் மிர்சா குற்றம் சாட்டினார். மேலும், ஹமீத் அன்சாரி குடியரசுத் துணைத் தலைவராக இருந்தபோது, அவரது அழைப்பில் பேரில், டெல்லியில் நடந்த தீவிரவாதம் குறித்த மாநாட்டில் பங்கேற்க தான் இந்தியா வந்ததாகவும், அப்போது ரகசிய தகவல்களை ஹமீத் அன்சாரி பகிர்ந்து கொண்டார் எனவும் நுஸ்ரத் … Read more

இந்தியா-சீனா ராணுவத் தளபதிகள் இடையே 16வது சுற்று பேச்சுவார்த்தை..!

இந்தியா-சீனா இடையிலான ராணுவத் தளபதிகள் பேச்சுவார்த்தை வரும் 17ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லடாக் எல்லையில் கடந்த 2020 மே மாதம் தொடங்கிய மோதலையடுத்து இந்தியா-சீனா ராணுவ தளபதிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த இருதரப்பினரும் ஒப்புக் கொண்டனர். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இருதரப்பு அதிகாரிகளும் இதுவரை 15 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். இதன் பலனாக சில பகுதிகளில் இருந்து சீனா தனது படைகளைத் திரும்பப் பெற்றது. எனினும் ஹாட் ஸ்பிரிங்ஸ், டெம்சோக் மற்றும் தெப்சங் … Read more

வியட்நாமில் இருந்து கடத்தல் டெல்லி விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகள் பறிமுதல்

புதுடெல்லி: வியட்நாமில் இருந்து கடத்தி வரப்பட்ட 45 கைதுப்பாக்கிகளை டெல்லி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். வியட்நாமில் இருந்து டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று வந்த விமானத்தில் பயணம் செய்த இந்திய தம்பதியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கொண்டு வந்த இரண்டு பெட்டிகளில் சுமார் 45 கைதுப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். உடனடியாக இதுகுறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கும், என்.எஸ்.ஜி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து முதற்கட்ட … Read more

உ.பி.யில் கட்டிடங்கள் இடிப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்படுவதற்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. உத்தர பிரதேசத்தில் கட்டிட இடிப்பு நடவடிக்கை, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை குறிவைத்து மேற்கொள்ளப்படுவதாக ஜமியத் உலாமா -ஹிந்த் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. இது தொடர்பாக மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு பதில் அளித்த உத்தர பிரதேச அரசு , ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக சட்டவிரோத கட்டிடங்கள் இடிக்கப்படுவது வழக்கம்’’ என தெரிவித்தது. … Read more

பாலின சமத்துவத்தில் பின்தங்கிய இந்தியா: 135வது இடத்தில் உள்ளது

புதுடெல்லி: பாலின சமத்துவம் காட்டுவதில் இந்தியா 135வது இடத்தில் உள்ளது. உலக பொருளாதார மன்றமானது 2022ம்ஆண்டு பாலின சமத்துவ இடைவெளி குறித்த அறிக்கையை ஜெனீவாவில் வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, உலகிலேயே ஆண், பெண் சமத்துவம் வழங்குவதில் ஐஸ்லாந்து தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதில் இந்தியாவிற்கு 135வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவிற்கு பின் சுமார் 11 நாடுகள் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவிற்கும் கீழான … Read more

கலவரத்தில் ஈடுபடுவோரின் வீடு, கடைகள் இடிப்புக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: கலவரத்தில் ஈடுபடுவோரின் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்படுவதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பாஜ ஆளும் மாநிலங்களில் கலவரங்களில் ஈடுபடுவோரின் வீடுகள், கடைகளை புல்டோசர் மூலமாக, இந்த மநில அரசுகள் இடித்து வருகின்றன. இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகளை மட்டுமே குறிவைத்து ஒரு தலைப்பட்சமாக இந்த இடிப்பு நடவடிக்கைககள் எடுக்கப்படுவதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், உத்தர பிரதேச அரசின் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்கும்படி, இஸ்லாமிய அமைப்புகள் … Read more

வெளி மாநிலங்களில் இருந்து கடத்திவரப்பட்ட மது பாட்டில்களை ரோலர் மூலம் அழித்த போலீசார்.! 

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் வெளி மாநிலங்களில் இருந்து கடத்திவரப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை ரோலர் மூலம் போலீசார் அழித்தனர். ஆந்திராவில் மதுபாட்டில்கள் விலை அதிகமாக இருப்பதால் தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டு ஆந்திராவில் முறைகேடாக விற்பனை செய்யப்படுகிறது.         Source link

ஆடி மாத பூஜை; சபரிமலை நடை 16ம் தேதி திறப்பு

திருவனந்தபுரம்: ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை வரும் 16ம் தேதி திறக்கப்படுகிறது. தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. வரும் 17ம் தேதி ஆடி மாதம் பிறக்கிறது. இதை முன்னிட்டு, ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறப்பார். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. … Read more

டார்ஜிலிங்கில் வாக்கிங் பானி பூரி தயாரித்த மம்தா

டார்ஜிலிங்: டார்ஜிலிங் சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சாலையோர கடையில் பானி பூரி தயாரித்து குழந்தைகள் மற்றும் சுற்றுலா பயணிக்கு வழங்கினார். கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் டார்ஜிலிங் சென்றார். நேற்று காலை நேபாளி கவிஞர் பானுபக்தா ஆச்சார்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். டார்ஜிலிங் மலையில் நேற்று அவர் நடை பயணமாக, சண்டே … Read more