வீட்டிலிருந்து வேலை: புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது வர்த்தக அமைச்சகம்

வீட்டிலிருந்து வேலை செய்வோருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை அதிகபட்சமாக ஓராண்டு காலம் வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதிக்கலாம். அதுபோல் 50% ஊழியர்களுக்கு இந்த வசதியை அனுமதிக்கலாம் என்று வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்காக சிறப்பு பொருளாதார மண்டல சட்டத்திட்டங்கள் 2006ல் புதிதாக விதி எண் 43A சேர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இதன் மூலம் நாடு … Read more

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, உணவுப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. ஆகியவற்றுக்கு எதிராக குரல் எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

குப்பை வண்டியில் மோடி, யோகியின் புகைப்படங்கள்: பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளருக்கு மீண்டும் வேலை

பிரதமர் மோடி மற்றும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புகைப்படங்களை குப்பை வண்டியில் ஏற்றிச் சென்றதால் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர் மீண்டும் பணியமர்த்தப்பட்டார். அந்த தொழிலாளியை பணி நீக்கம் செய்தமைக்கு பரவலாக சமூக வலைதளங்களில் கிளம்பிய எதிர்ப்பின் விளைவாக அவர் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார். இது குறித்து மதுரா விருந்தாவன் நகராட்சி ஆணையர் அருணயா ஜா கூறுகையில், “சம்பந்தப்பட்ட தொழிலாளர் மற்றும் அவரது குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று எச்சரிக்கையுடன் அந்த நபர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்” … Read more

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் 27ம் தேதி விசாரணை

டெல்லி: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் 27ம் தேதி விசாரணை நடத்துகிறது. என்சிபிசிஆர் தலைவர் பிரியங்க் கானுன்கோ தலைமையிலான குழு கள்ளக்குறிச்சியில் ஆய்வு நடத்துகிறது.

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி | பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பிதழ் – டி.ஆர்.பாலு, கனிமொழி வழங்கினர்

சென்னை: சென்னையில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்குமாறு பிரதமர் மோடியிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் மெய்யநாதன், எம்பிக்கள், டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் தலைமைச் செயலர் இறையன்பு ஆகியோர் அழைப்பிதழ் வழங்கினர். சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28-ம்தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதிவரை நடைபெறுகிறது. இப்போட்டிக்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் 28-ம்தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்கிடையே, கரோனா … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 2,603 பேர் கொரோனாவுக்கு பலி… புதிய பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 20 ஆயிரத்தை தொட்டது!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 20,557 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 03 ஆயிரத்து 619 ஆக … Read more

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 2 விமானங்கள் தரையிறக்கம்

புதுடெல்லி: நேற்று ஒரே நாளில் கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் இன்ஜின் கோளாறு காரணமாக பாதி வழியில் தரையிறக்கப்பட்டன. நேற்று மும்பையிலிருந்து லேவுக்கு புறப்பட்ட கோ ஃபர்ஸ்ட் விமானத்தின் இரண்டாவது இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் டெல்லியில் தரையிறக்கப்பட்டது. அதேபோல், நேற்று ஸ்ரீநகரிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட மற்றொரு கோ ஃபர்ஸ்ட் விமானத்தின் இரண்டாவது இன்ஜினிலும் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் ஸ்ரீநகருக்கே திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டது. இந்நிகழ்வு தொடர்பாக விசாரணை நடத்திவருவதாக … Read more

ஜம்மு காஷ்மீரில் 7 தீவிரவாதிகள் கைது -ஏராளமான ஆயுதங்கள் ஆவணங்கள் சிக்கின

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் நடைபெற்ற அதிரடிச்சோதனைகளில் 7 தீவிரவாதிகள் சிக்கினர். தீவிரவாதிகளுக்கு நிதித்திரட்ட போதைப் பொருள் கடத்தும் கும்பல், தீவிரவாதிகளுக்கு நிதியளிக்கும் பல பைனான்சியர்களிடமும் அதிரடி சோதனைகள் நடைபெற்றன. அண்மையில் காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி வந்து தாக்குதல்களைத் தொடுக்கின்றனர். அவர்களுக்கு ஆயுதங்கள், நிதி போன்றவை ஐ.எஸ். போன்ற தீவிரவாத இயக்கங்களால் வழங்கப்படுக Source link

பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி குறைப்பு!!

டெல்லி : பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை ஒன்றிய அரசு குறைத்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் லிட்டருக்கு 2 ரூபாய் ஏற்றுமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. 

`உணவு தானியங்களுக்கு வரி விதிப்பது இதுவா முதல்முறை?’- ட்விட்டரில் நிர்மலா சீதாராமன் கேள்வி

உணவு தானியங்கள் மீது வரி விதிப்பு என்பது புதிதல்ல என்றும் அரிசி, கோதுமை மீதான வரி விதிப்பு குறித்து தவறான கருத்து நிலவுதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். பிராண்ட் அல்லாத 25 கிலோ வரை சிப்பங்களில் விற்கப்படும் அரிசி, கோதுமை மாவு உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் சில பதிவுகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் … Read more