ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடியிடம் ஆதரவு கோரிய யஷ்வந்த் சின்கா

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடியிடம் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்கா ஆதரவு கோரினார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பத்றகான தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடக்கிறது. இதில் பாஜ தலைமையிலான தே.ஜ கூட்டணி சார்பில் ஒடிசாவை சேர்ந்த பழங்குடி பிரிவை சேர்ந்த பாஜ பெண் தலைவர் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவர் நேற்று, தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் … Read more

“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” – சஞ்சய் ராவத்

மகாராஷ்ட்ராவில் அரசியல் குழப்பங்கள் உச்சத்தை தொட்டிருக்கின்றன. ஆட்சி கவிழும் சூழலில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்துவருகின்றன. இந்நிலையில், அதிருப்தி அமைச்சர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் தங்களது பதவிகளை இழப்பார்கள் என்று சிவசேவை கட்சி எம்பியும் மூத்த தலைவருமான சஞ்சய் ராவத் கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனாவின் 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ள ஏக்நாத் ஷிண்டே, அசாமில் உள்ள சொகுசு விடுதியில் தனது ஆதரவாளர்களுடன் … Read more

மகாராஷ்டிராவில் மீண்டும் தாமரை? – பட்னவிசுடன் ஏக்நாத் ஷிண்டே சந்திப்பு!

சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னவிஸை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். அவருடன் சுயேச்சை … Read more

ஜிஎஸ்டி இழப்பீட்டு மேல் வரி விதிப்பு மேலும் 4 ஆண்டு நீட்டிப்பு

ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கான மேல்வரி விதிப்பதை மேலும் நான்காண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. 2017 ஜூலை முதல் நாளில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்தபோது, மாநிலங்களுக்கு வரி வருவாய் இழப்பை ஈடுசெய்ய ஐந்தாண்டுகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காகப் புகையிலை, சிகரெட், ஹூக்கா, குளிர்பானங்கள், ஆடம்பர மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டது. ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கான மேல்வரி விதிப்புக் காலம் ஜூன் இறுதியுடன் முடிவடைய இருந்த நிலையில் 2026ஆம் ஆண்டு மார்ச் … Read more

3000 மெட்ரிக் டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது இந்தியா

டெல்லி: இந்தியா 3000 மெட்ரிக் டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது. WFP உடன் இணைந்து இந்தியா இதுவரை 33,500 மெட்ரிக் டன் கோதுமையை வெற்றிகரமாக ஏற்றுமதி செய்துள்ளது. மே மாதம், மனிதாபிமான உதவியாக 2,000 மெட்ரிக் டன் கோதுமை அட்டாரி-வாகா எல்லை வழியாக அனுப்பப்பட்டது.

”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!

பாஜகவின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு குறித்து அவதூறாக ட்விட்டரில் பதிவிட்டதாக, பிரபல திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் சர்ச்சையான திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றவர் ராம்கோபால் வர்மா. திரைப்படங்கள் மட்டுமின்றி பொதுவெளியிலும், சமூகவலைத்தளங்களிலும் இவர் கூறும் கருத்துக்களும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு குறித்து கருத்து கூறி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தக் கருத்து தற்போது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. தனது … Read more

3 மக்களவை, 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 26-ல் முடிவுகள்: இடைத்தேர்தலின் தாக்கம் என்ன?

புதுடெல்லி: ஐந்து மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் மக்களவை 3, சட்டப்பேரவையின் 7 தொகுதிகளுக்கான தேர்தல் முடிந்துள்ளது. நாளை மறுநாள் வெளியாகவிருக்கும் இதன் முடிவுகளின் தாக்கம் என்ன எனும் கேள்வி எழுந்துள்ளது. இதில் டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், திரிபுரா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. திரிபுராவின் நான்கு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலில் முதல்வர் மாணிக் சாஹா ஒரு முக்கிய வேட்பாளராக உள்ளார். பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் … Read more

அரசியல் நெருக்கடி: மும்பையில் 144 தடை உத்தரவு!

மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். ஏக்நாத் ஷிண்டே உடன் சுயேச்சை எம்எல்ஏக்கள் உட்பட சுமார் 50 எம்எல்ஏக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதில், சிவசேனா கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் மட்டும் 40 … Read more

மராட்டிய அரசியல் நெருக்கடி: தானே மாவட்டத்தில் 144 தடை உத்தரவு.!

மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடி முற்றியுள்ள நிலையில், தானே மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினரின் பேரணிக்கும், கூடி முழக்கங்களை எழுப்புவதற்கும் ஜூன் 30 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சுமார் 35 சிவேசனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கவுகாத்தியில் முகாமிட்டுள்ள நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. Source link

மனைவி பிரசவத்திற்கு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ள நிலையில் இளம்பெண் மீதான மோகத்தில் ரூ.6 கோடியை இழந்த வங்கி மேலாளர்

பெங்களூரு: பெங்களூருவில் வாடிக்கையாளர்களின் பணத்தை கையாடல் செய்து, இளம்பெண்ணுடன் ‘டேட்டிங்’ செல்ல ரூ.6 கோடியை வங்கி மேலாளர் இழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு அனுமந்தநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளராக ஹரிசங்கர் என்பவர் இருந்து வருகிறார். இவர் ஜெயநகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அந்த வங்கியில் அனிதா என்பவர் தனது கணக்கில் ரூ.1.32 கோடியை டெபாசிட் செய்தார். … Read more