பிரதமருக்கு எதிராக குற்றம்சாட்டியவர்கள், மனசாட்சி இருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் – உள்துறை அமைச்சர் அமித்ஷா.!

பிரதமருக்கு எதிராக குற்றம்சாட்டியவர்கள், மனசாட்சி இருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத் கலவர வழக்கிலிருந்து பிரதமர் மோடிக்கு தொடர்பில்லை என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்த நிலையில் ஏஎன்ஐ நிறுவனத்துக்கு அமித் ஷா பேட்டி அளித்தார். அப்போது, சில அரசுசாரா நிறுவனங்களும், அரசியல் உள்நோக்கம் கொண்ட சில பத்திரிகையாளர்களும் குஜராத் கலவரம் தொடர்பாக பாஜக மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன என்றார். சிறப்பு புலனாய்வு குழு முன்பு … Read more

திருப்பதியில் அலைமோதும் கூட்டம் ஏழுமலையானை தரிசிக்க 3 கிமீ தூரம் நீண்ட வரிசை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் திருமலையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதனால், இலவச தரிசன வரிசையில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் 71,589 பக்தர்கள் தரிசித்தனர். இதில், 41,240 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ₹4.30 கோடியை காணிக்கையாக செலுத்தினர்.தொடர்ந்து, சனிக்கிழமையான நேற்று காலை வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 32 அறைகள் முழுவதும் நிரம்பி ஆஸ்தான … Read more

முகநூல் காதலனுடன் தனிக்குடித்தனம் நடத்திய மனைவி! ஆத்திரத்தில் கணவர் செய்த கோரச் செயல்!

முகநூல் காதலனுடன் மனைவி தனிக்குடித்தனம் நடத்தியதால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியின் கைகளை கட்டி 4வது மாடியில் இருந்து தூக்கி எறிந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் தாஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ரித்திகா சிங். இன்ஸ்டாகிராமில் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்களைக் கொண்ட பிரபலமாக வலம்வந்தவர். ஃபேஷன், உணவு, பயணம் குறித்த பதிவுகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தவர். இவர் 2014 ஆம் ஆண்டு ஃபிரோசாபாத் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் கவுதம் என்பவரை திருமணம் செய்தார். … Read more

1983… இதே நாளில் முதல் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி!

இந்திய கிரிக்கெட் அணி முதன் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றிய இன்றைய தினம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1983 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற தொடருக்கு சென்ற இந்திய அணி, ஜாலி சுற்றுப்பயணமே மேற்கொள்கிறது என விமர்சிக்கப்பட்டது. அதுவும் இறுதிப் போட்டியில் 183 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆன நிலையில், எதிர் அணியான மேற்கு இந்திய தீவுகள் அணி தொடர்ந்து 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றும் என அனைவரும் எதிர்பார்த்தனர். எனினும், ஹரியானா சிங்கமான இந்திய அணியின் … Read more

ஆந்திராவில் புதியதாக பிரிக்கப்பட்ட கோணசீமா மாவட்டத்திற்கு டாக்டர் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் என பெயர் வைக்க அமைச்சரவை ஒப்புதல்

அமைச்சர் வேணுகோபால கிருஷ்ணா பேட்டிதிருமலை : ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கோணசீமா மாவட்டத்தை அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் என பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.ஆந்திராவில் கோணசீமா மாவட்டத்தை பிரித்து புதிதாக டாக்டர் அம்பேத்கர் பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் அமைச்சரின் வீடு, பேருந்துகள் அடித்து நொறுக்கி தீ வைக்கப்பட்டது. இதன்பிறகு ஒரு மாதம் ஆனாலும் அமலப்புரம் நகரில் 144 தடை உத்தரவு உள்ளது. இந்தநிலையில் ஆந்திர … Read more

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி யானை.. மீட்க போராடிய தாய் யானை.. திக் திக் நிமிடங்கள்

குட்டி யானைகளின் சேட்டைகள், சுற்றுலா பயணிகளை துரத்தும் யானை கூட்டம், குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் யானைகள் என யானைகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக அடிக்கடி காணக்கிடைக்கிறது. அந்த வகையில், தனது குட்டியை காப்பாற்றுவதற்காக தாய் யானை செய்த செயல் தொடர்பான வீடியோ ட்விட்டரில் இந்திய வன அதிகாரி பர்வீன் கஸ்வானால் பகிரப்பட்டிருக்கிறது. அதன்படி, மேற்கு வங்க மாநிலத்தில் வடக்கே இருக்கும் நாகர்கடா பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு இடையே இருக்கும் ஆற்றை 10க்கும் மேற்பட்ட … Read more

கோயில் பெயரில் போலி இணையதளம் தொடங்கி ரூ.20 கோடி வசூலித்து விபூதி அடித்த பூசாரிகள்..!

கர்நாடகாவின் கலாபுராகி மாவட்டத்தில் தேவலகனாபூர் கோயில் பெயரில் போலி இணையதளம் மூலம் 20 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்த பூசாரிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் கோயிலின் பெயரில் 8 இணையதளங்களை உருவாக்கி பக்தர்களிடம் இருந்து வழிபாட்டுக் கட்டணம், நன்கொடை என்ற பெயரில் மோசடி செய்துள்ளனர். பல்வேறு பூஜைகளுக்காக 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலித்த ஐந்து பூசாரிகள், கோயிலின் உண்டியல் பணத்தையும் திருடிய … Read more

மகாராஷ்டிராவில் உச்சக்கட்ட குழப்பம்: சிவசேனாவின் ஆட்சி, சின்னம் பறிபோகும் அபாயம்; இன்று மீண்டும் கூடியது செயற்குழு கூட்டம்; என்ன செய்ய போகிறார் முதல்வர் உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிராவில் உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது. சிவசேனாவின் ஆட்சி, சின்னம் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அடுத்தக்கட்டமாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வரும் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டுள்ளது. சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் மாயமானதில் இருந்து மகாராஷ்டிர அரசியலில் நாளுக்கு நாள் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. சூரத் சென்ற அவருடன் 11 … Read more

8வது மாடியில் இருந்து கீழே விழுந்த நோயாளி.. கொல்கத்தாவில் நடந்தது என்ன?

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் எட்டாவது மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அரங்கேறியிருக்கிறது. மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் உள்ளது நியூரோ சயின்ஸ் மருத்துவமனை. அங்கு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுதிர் அதிகாரி என்ற நோயாளி ஒருவர் எப்படியோ அந்த மருத்துவமனையில் எட்டாவது மாடியின் ஜன்னல் வழியாக வெளியேறி இருக்கிறார். விஷயம் அறிந்த சுதிரின் உறவினர்கள் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் அளிக்க அவர்கள் மூலம் போலீசுக்கும், தீயணைப்புத்துறைக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் … Read more

5 ஆண்டுகளில் ஜவுளி துறை 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்புக்கு வளர்ச்சி அடையும்-அமைச்சர் பியூஷ் கோயல்

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் ஜவுளி துறை 25 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புக்கு வளர்ச்சி அடையும் என்றும், அதில் 40 சதவீதம் ஏற்றுமதியாக இருக்கும் எனவும் மத்திய வர்த்தகதுறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். கோவை கொடிசியா வளாகத்தில் மத்திய இணை அமைச்சர் முருகனுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக பொருளாதார வளர்ச்சியில் ஜவுளி துறை முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார். ஜவுளி துறையின் வளர்ச்சிக்காக, மேலும் ஒரு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை … Read more