காவிரி டெல்டாவில் நிலக்கரி திட்டமா? தமிழக அரசு அனுமதிக்காது – அமைச்சர் உதயநிதி உறுதி!

தஞ்சாவூர் திருவாரூர் மாவட்டங்களில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதியளிக்காது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுப்பதற்கு ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளதாகவும் ஓரத்தநாடு தாலுகாவில் 11 இடங்களில் நிலக்கரி எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடையே பேசியுள்ளார். … Read more

தஞ்சையில் நிலக்கரி சுரங்கம்! கவலை கூடாதா? சட்டப்பேரவையில் முதல்வர் இதை அறிவிக்க வேண்டும் – அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸிடம், தஞ்சாவூர் மாவட்டத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு டெண்டர் வெளியிட்ட நிலையில், விவசாயிகள் கவலை கொள்ள வேண்டாம், பீதியடைய வேண்டாம் என்று தமிழக அரசு விளக்கம் அளித்து இருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அன்புமணி இராமதாஸ், “சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், இந்த புதிய ஆறு நிலக்கரி சுரங்கங்களுக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்காது என்று அறிவிக்க வேண்டும்.  … Read more

ஜிப்மரில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் ரத்து; புதுச்சேரி புறக்கணிப்பு: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: ஜிப்மரில் ரூ.900 கோடி மதிப்பீட்டில் அமையவிருந்த உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: ”அதானிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்றால் விசாரணை வைக்க ஏன் மோடி தயங்குகிறார். இந்திய நாடாளுமன்றம் ஒரு நாள் கூட நடக்கவில்லை. இது ஜனநாயகப் படுகொலை. மோடி இவ்விவகாரத்தில் பதில் தர வேண்டும். விசாரணை வைக்கும் வரை … Read more

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை: முன்னேற்பாடுகள் தீவிரம்- அதிகாரிகள் ஆய்வு!

PM Modi tamil nadu visit பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 8ஆம் தேதி தமிழ்நாடு வர உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுக்ள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து நேற்று (ஏப்ரல் 3) தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, காவல்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகளின் உயர் அலுவலர்களுடனும் காணொலி காட்சி வாயிலாக நீலகிரி மாவட்ட … Read more

டெல்டா மாவட்டங்களை சீரழிக்க முயற்சி! மத்திய அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு!

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டில் அவர் கூறும் போது,  ஆன்லைன் சூதாட்டம் எதிர்ப்பு மசோதாவிற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும், ஆன்லைன் சூதாட்டத்தால் 19 பேர் உயிரிழந்ததற்கு தமிழக ஆளுநர்தான் காரணம்.  ஆன்லைன் சூதாட்டத்தால் 19 பேர் உயிரிழந்தது மட்டுமன்றி தமிழகத்தில் பல லட்சம் குடும்பங்கள் வீதிக்கு வந்து விட்டது என்றார்.  மின்மிகை மாநிலமாக உள்ள தமிழகத்தில் என்எல்சி … Read more

"பேச்சு மட்டும் தான், செயல் எங்கே? கலாஷேத்ரா கல்லூரி விவகாரம்.! நாதக சீமான் அட்டாக்.!

சென்னை அடையாறில் இயங்கி வரும்  பாரம்பரியமிக்க கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் வன்கொடுமை  மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக  மாணவியல் கொடுத்த புகாரை தொடர்ந்து கல்லூரி வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி வரை மூடப்பட்டிருக்கிறது. சென்னை அடையாறில் இயங்கி வரும்  கலாஷேத்ரா நடனம் மற்றும் கலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் அங்கு போகையிலும் மாணவியிடம் பாலியல் ரீதியாக தொடர் தொல்லை கொடுத்து வந்ததையடுத்து இந்தக் கொடுமைக்கு எதிராக தொடர் குரல் எழுப்பிய … Read more

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சுரங்கப் பணிகள் மேற்கொள்ளப்படாது: அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் உறுதி

சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சுரங்கப் பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார். காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 புதிய நிலக்கரி சுரங்கங்களும், காவிரிப் படுகையையொட்டி ஒரு சுரங்கமும் அமைப்பதற்கான தொடக்க கட்ட பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், “இது தொடர்பாக மக்கள் பீதி அடைய வேண்டாம். … Read more

காவிரி டெல்டாவில் புதிய நிலக்கரி திட்டங்கள்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

புதிய நிலக்கரித் திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளிக்க கூடாது என்று பாமக தலைவர் கூறியுள்ளார். பாலைவனமாக மாறும் வேளாண் மண்டலம்! இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் நிலக்கரி சுரங்கங்கள் எனப்படும் பேரழிவு சக்தியின் கொடுங்கரங்கள் காவிரி பாசன மாவட்டங்களையும் இறுக்கிப் பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. காவிரி படுகையில் 5 புதிய நிலக்கரி சுரங்கங்களும், காவிரிப் படுகையையொட்டி ஒரு சுரங்கமும் அமைக்கப்படவுள்ளன. இது தடுக்கப்படாவிட்டால் வளம் மிகுந்த காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் … Read more