ஐபிஎல் போட்டியிலிருந்து கழற்றிவிட்ட வீரர்களின் பட்டியல்..!!எந்த அணியில் இருந்து எந்த வீரர்கள் வெளியேற்றப்பட்டனர் தெரியுமா ?

2023 ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெறவுள்ளதால், தங்கள் அணிகளில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 10 அணிகளில் இருந்து மொத்தம் 90 கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்பட்டனர். எந்த அணியில் இருந்து எந்த வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்: சென்னை சூப்பர் கிங்ஸ் :டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், சாரிஸ் ஜோர்டான், பகத் வர்மா, கேஎம் ஆசிப், நாராயண் ஜெகதீசன். ராயல் சேலஞ்சர்ஸ் … Read more

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை.. உறவினர் உள்பட 3 பேர் கைது.. 2 பேருக்கு வலைவீச்சு!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சிறுமியை 5 இளைஞர்கள் சேர்ந்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த வருடம்  முசிறியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது உறவினர் ரங்கநாதன் மற்றும் 4 நண்பர்கள் குளிர்பானத்தில் மதுவை கலந்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவும் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வீடியோ வாட்ஸ்அப்பில் வெளியானதை அறிந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில்  ரங்கநாதன், மணி மற்றும் தர்மா ஆகியோரை … Read more

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பா? – சென்னையில் 5 இடங்களில் என்ஐஏ, போலீஸார் தீவிர சோதனை

சென்னை: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தினருடன் தொடர்பில் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், சென்னையில் 5 இடங்களில் மாநகர போலீஸாருடன் இணைந்து என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் வெளிநாட்டு பணம், செல்போன்கள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த மாதம் 23-ம் தேதி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், காரை ஓட்டி வந்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (25) உயிரிழந்தார். பின்னர், அவரது … Read more

ஸ்கூல் லீவு விடுவாங்களா? அடுத்த 4 நாட்கள் இப்படித்தான்… வெதர்மேன் அப்டேட்!

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில், வட தமிழகம், மாநிலத்தின் உட்புறப் பகுதிகள், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் பனிமூட்டமான சூழல் தான் காணப்படும். இத்தகைய சூழலில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு இருக்கும். ஆனால் இது தென் தமிழகத்திற்கு பொருந்தாது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ”பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்” என்ற பாடலின் வரிகளை பதிவிட்டு பனி படர்ந்த சூழலை இனி காணலாம் என்று தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் … Read more

கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 18ம் தேதி வலுப்பெறக்கூடும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கையை மீறி ஆபத்தை உணராமல் வெள்ள நீரில் குளித்து கும்மாளமிடும் சிறுவர்கள்

வெள்ள நீர் வடிந்து வேகமாக வாய்க்கால்களில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் எச்சரிக்கையும் மீறி ஆபத்தை உணராமல் குளித்து கும்மாளமிடும் சிறுவர்களால் அச்சம் ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10 மற்றும் 11ஆம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. வடிகால் வாய்க்கால்கள் மற்றும் ஆறுகளில் அதிக அளவில் தண்ணீர் சென்று வருகிறது. இதனால் குழந்தைகளை நீர் நிலைகளுக்கு அருகில் விட வேண்டாம் எனவும், ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை குளிப்பாட்ட மற்றும் … Read more

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஐப்பசி மாத துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக இன்று (நவம்பர் 16ம் தேதி) நடைபெற உள்ள கடைமுக தீர்த்த வாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாவட்ட … Read more

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!!

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அது வருகிற 19ஆம் தேதி தமிழக கடலோர பகுதிகளை நெருங்க உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் வருகிற 18ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும். தெற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று … Read more

தொடர் புகார்கள்… குற்றாலம் காவல் ஆய்வாளரை கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி நெல்லை சரக டிஐஜி உத்தரவு!

தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் ஆய்வாளர் தாமஸ் மீது தொடர்ந்து புகார்கள் சென்றதையடுத்து கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். குற்றாலத்தில் ஏராளமான மசாஜ் சென்டர்கள் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாகவும், புகையிலைப் பொருட்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வியாபாரமும் அதிகளவில் நடைபெறுவதாக காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. குற்றாலம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தாமஸ் மீதும் ஏராளமான புகார்கள் சென்ற நிலையில், அவரை கட்டாய காத்திருப்புக்கு பட்டியலுக்கு … Read more