மாண்டஸ் தீவிர புயல்: என்னென்ன மாற்றங்கள்? என்னென்ன எச்சரிக்கைகள்?

தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது மாண்டஸ். இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முதல் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னையிலிருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள தீவிர புயல் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த தீவிர புயல், புயலாக வலுவிழந்து மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீவிர புயல், கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நிகழ்ச்சிகள், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனென்ன … Read more

நானே சென்று அதிகாரிகளுடன் ஆலோசிப்பேன் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நேரில் ஆய்வு: தென்காசியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

தென்காசி: தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நேரில் ஆய்வு நடத்தி அரசு திட்டப் பணிகளை முடுக்கி விட திட்டமிட்டுள்ளதாக தென்காசியில் நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தென்காசியில் நேற்று நடந்த அரசு விழாவில் ரூ.239 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தொழில் வளர்ச்சியா, சிறுதொழில் மேம்பாடா, கல்வியா, சுகாதாரமா, உள்கட்டமைப்புப் பணிகளா, மகளிர் மேம்பாடா, ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாடா, இளைஞர் நலனா, விளையாட்டா, அனைத்திலும் தமிழகம் முன்னேற்றம் அடைய … Read more

இமாச்சலில் உட்கட்சி கிளர்ச்சியால் ஆட்சியை இழந்த பா.ஜ.க; தேர்தல் வாக்குறுதி, நேரடி மக்கள் தொடர்பு மூலம் வென்ற காங்கிரஸ்

இமாச்சலில் உட்கட்சி கிளர்ச்சியால் ஆட்சியை இழந்த பா.ஜ.க; தேர்தல் வாக்குறுதி, நேரடி மக்கள் தொடர்பு மூலம் வென்ற காங்கிரஸ் Source link

#BREAKING : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மிக கனமழை.. வானிலை ஆய்வு மையம்.!

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் அடுத்த நாளை 34  மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவு ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த மாண்டஸ் புயல் தற்போது மணிக்கு மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து … Read more

ரூ.3,200 கோடியில் விமானங்களை புதுப்பிக்க திட்டம்!

ரூ.3,200 கோடியில் விமானங்களை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமாக இருந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியது. இதைத்தொடர்ந்து இந்த விமானங்களை புதுப்பிக்க குறிப்பாக கேபின்களை மாற்றியமைப்பதற்கு ஏர் இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. அதன்படி அனைத்து வகுப்புகளிலும் நவீன தலைமுறையை சார்ந்த இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளுடன் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் வகையில் கேபின் உள்புற வடிமைப்பு முற்றிலும் மாற்றியமைக்கப்படுகிறது. 4000 மில்லியன் டாலர் அதாவது … Read more

24 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை: புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், தருமபுரி, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 24 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (டிச.9) ஒருநாள் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்குவிடுமுறை அறிவிக்கப்பட்டுள் ளது. மாநகராட்சி … Read more

மாண்டஸ் புயல் எங்கிருக்கிறது? எப்போது கரையை கடக்கும்? இதோ 10 முக்கிய தகவல்கள்!

மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது வங்கக் கடலில் இருந்து படிப்படியாக நகர்ந்து மகாபலிபுரம் அருகே கரையை கடக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி 21 மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, தயார் நிலையில் பேரிடர் குழு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் உள்ளிட்ட விஷயங்கள் அரசு தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன. பலத்த சூறாவளிக் காற்று காற்று பலமாக வீசும் என்பதால் கடற்கரை பகுதிகளுக்கு செல்லக் கூடாது என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் … Read more

Cyclone Mandous Live: மிரட்டும் மாண்டஸ் புயல்: 24 மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று லீவ் – முழு விவரம்

மாண்டஸ் புயலானது காரைக்காலில் இருந்து சுமார் 270 கிமீ தொலைவில் கிழக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருக்கிறது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரை மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே டிசம்பர் 09ஆம் தேதி நள்ளிரவில் கரையை கடக்கும். மணிக்கு 65-75 கிமீ வேகத்தில் காற்று வீசுக்கூடும். இன்று நள்ளிரவு கரையை கடக்கும்போது அதிகனமழை பெய்யக்கூடும் என்பதால் மக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. … Read more

50 வீடுகள் சேதம்: 2 உயிர்களை பலி வாங்கிய அரிசி ராஜா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது

கூடலூர்: கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தியும், இரண்டு பெண்களை மிதித்தும் கொன்ற அரிசி ராஜா என்ற மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி கும்கிகள் உதவியுடன் வனத்துறையினர் நேற்று பிடித்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்ட பகுதிகளான வாழவயல், தேவாலா அட்டி, பொன்னூர், நாடுகாணி, முண்ட குன்னு, புளியம்பாறை, பாடந்துறை, சுண்டவயல், மூச்சுக்கண்டி, வேடன்வயல், கோல்கேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுக்கும் மேலாக … Read more