முதல்வர் ஸ்டாலின் டிச.8-ல் தென்காசி பயணம் – நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

சென்னை: நலத்திட்ட உதவிகள் வழங்கவும், திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், வரும் 8-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி செல் கிறார். டெல்லியில் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டு ஆயத்தப் பணிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அதன்பின், நேற்று இரவே அவர் சென்னை திரும்பினார். தொடர்ந்து, 7-ம் தேதி (நாளை) இரவு ‘பொதிகை எக்ஸ்பிரஸ்’ ரயிலில் தென்காசி புறப்பட்டுச் செல்கிறார். 8-ம் தேதி … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

அதிமுக உட்கட்சி மோதல் இன்னும் ஒரு முடிவை எட்டாமல் சென்று கொண்டிருக்கும் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த நவம்பர் 21ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், நவம்பர் 30ஆம் … Read more

உருவாகப்போகும் புயலுக்கு பெயர் அறிவித்த வானிலை ஆய்வு மையம்

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் டிச.5ஆம் தேதி (நேற்று) காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, 6ஆம் தேதி (இன்று) மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். பின்னர் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து 8ஆம் தேதி காலை வட தமிழகம் மற்றும் அதை ஒட்டிய தெற்கு … Read more

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து 3வது நாளாக நேற்று 9,500 கனஅடியாக நீடிக்கிறது. அதேசமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 10,738 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இரவு 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 10,962 கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில், காவிரி டெல்டா பாசன பகுதியில் மழை பெய்து வருவதால், திறப்பு 1000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நீர்மட்டம் உயரத்தொடங்கியுள்ளது. இதே நிலையில் நீடித்தால் மேட்டூர் அணை 3வது முறையாக … Read more

காதலனை மறக்க மந்திரவாதியிடம் அழைத்துச்சென்ற பெற்றோர் – டிவிஸ்ட் வைத்த மகள்!

காதலனை மறக்க தனது பெற்றோர் கல்வராயன் மலைக்கு அழைத்துச்சென்று மந்திரவாதியிடம் மாந்திரீகம் செய்து கொலை மிரட்டல் விடுவதாக, கல்லூரி மாணவி திருமணம் செய்து கொண்டு கழுத்தில் தாலி மாலையுடன் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள பால்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ஸ்ரீராமகிருஷ்ணன். இவர் பிஎஸ்சி பட்டதாரி. குதிரைசந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. இவர் கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் … Read more

தமிழகத்தில் இன்று (06.12.2022) எந்தெந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.. முழு விபரம்.!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (டிசம்பர் 6ம் தேதி) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருச்சி வையம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. மதுரை மாட்டுத்தாவணி துணைமின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு … Read more

திருச்சியில் இன்று இங்கெல்லாம் மின்தடை!!

வையம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கீழ்க்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இளங்காகுறிச்சி, வையம்பட்டி, கருங்குளம், ஆசாத்ரோடு, பொத்தப்பட்டி, பொன்னம்பலம்பட்டி, மண்பத்தை, பழையகோட்டை, குரும்பப்பட்டி, சரளப்பட்டி, சேசலூர், பாலப்பட்டி, அம்மாபட்டி, ஏ.ரெட்டியபட்டி, முள்ளிப்பாடி, ஆர்.எஸ்.வையம்பட்டி, தொப்பாநாயக்கன்பட்டி, … Read more

‘இந்து தமிழ் திசை’யின் ‘பாபா சாகேப் அம்பேத்கர் – ஒரு பன்முகப் பார்வை’ – சர்வதேச சகோதரத்துவத்தை நிறுவியவர் அம்பேத்கர்

அண்ணல் அம்பேத்கர் குறித்த, தேர்ந்த எழுத்தாளர்களின் கட்டுரைத் தொகுப்பை ‘பாபா சாகேப் அம்பேத்கர் – ஒரு பன்முகப் பார்வை’ என்ற தலைப்பில் நூலாக கொண்டு வந்துள்ளது ‘இந்து தமிழ் திசை’. அரசமைப்புச் சட்டத்தின் தந்தையாகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராகவும் மட்டுமே பொதுத்தளத்தில் அறியப்பட்ட அல்லது சுருக்கப்பட்ட அம்பேத்கரின் பன்முகப் பரிமாணங்களை இந்நூலில் உள்ள கட்டுரைகள் முழுமையாக கருத்துச் செறிவோடு விளக்கி அவரை முழுமைப்படுத்துகின்றன. அம்பேத்கரின் பரந்துபட்ட வாசிப்பும் – வாசிப்பின் வழியே வந்த சிந்தனை பெருவூற்றும் – … Read more

திருவண்ணாமலை மகா தீபம்… எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 6) அதிகாலை பரணி தீபம் மற்றும் பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக 4,500 கிலோ ஆவின் நெய், 1,150 மீட்டர் காடா துணியால் செய்யப்பட்ட திரி, ஐந்தரை அடி உயரமுள்ள கொப்பரை ஆகியவை மலை உச்சிக்கு … Read more