நாட்டுக்கு பிரதமர் என்ன செய்தார்?..சந்திரசேகர் ராவ் காட்டம்!

கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் விமர்சித்துள்ளார். தெலுங்கானாவின் ஜாக்டியால் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலக வளாகத்தை முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் நேற்று திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் பிரதமர் மோடியை கடுமையாக குற்றம் சாட்டினார். பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில் சுமார் 10 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டதாக அவர் கூறினார். இதன்மூலம் சுமார் 50 … Read more

ஆதார் இணைக்க மேலும் ஒரு இணையதளம்: நகலை பதிவேற்ற வேண்டாம் என மின்வாரியம் அறிவிப்பு

சென்னை: பொதுமக்கள் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை எளிதாக இணைக்கும் வகையில், மேலும் ஒரு இணையதளத்தை மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணை இணைத்தால்தான் ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்த முடியும் என்ற நிலையும் உள்ளது. இதற்காக, கடந்த மாதம் 28-ம் தேதி முதல் வரும் டிச.31-ம் தேதி வரை சிறப்பு முகாமை மின்வாரியம் நடத்துகிறது. தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் செயல்பட்டு … Read more

பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடக்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி பயணம்: ரயில் நிலையத்தில் பொதுமக்கள் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு..!!

தென்காசி: பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடக்கி வைக்க பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி ரயில் நிலையம் சென்றுள்ளார். ரயில் நிலையத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக தனது நீண்ட தூர ரயில் பயணத்தை மேற்கொண்டு இன்று தென்காசி வந்துள்ளார். தென்காசியில் இன்று நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கும் அவர், ரூ.182.52 கோடியில் 1,03,057 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். ரூ.22.20 கோடியில் முடிவுற்ற 57 திட்ட பணிகளையும் தொடங்கி … Read more

சென்னை : தொழில்வரி செலுத்தாத 90 கடைகளுக்கு அதிகாரிகள் சீல்.!

சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் தொழில் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் மாநகராட்சிக்கு, நிகழ் நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வரை, தொழில்வரி பாக்கி செலுத்தாமல் இருப்பவர்கள் பட்டியல் மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.  இந்நிலையில், சென்னையில் அண்ணாசாலை அருகே உள்ள ரிச்சி தெருவில் நீண்ட காலமாக தொழில்வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த 90 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.  அதேபோன்று, பாரிமுனையில் நயினியப்பன் தெருவில் உள்ள முப்பது கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். … Read more

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்.. திரைத்துறையினர் இரங்கல்..!

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி மாரடைப்பு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 67. அவருடைய இறுதிச்சடங்கு இன்று மதியம் 2 மணியளவில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைந்த இயக்குநரும், நடிகருமான விசு மூலம் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்ட சிவ நாராயணமூர்த்தி, ‘பூந்தோட்டம்’ என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தார். நடிகர் வடிவேலுடன் இணைந்து நடித்த காட்சிகள் மிகவும் பிரபலமாகின. தன்னுடைய உடல் அமைப்பு மற்றும் முக பாவணைகளால் … Read more

காங்கிரஸில் தலித்துகளுக்கு அரசியல் அதிகாரம்: எஸ்சி அணி தலைவர் ரஞ்சன்குமார் உறுதி

சென்னை: தலித்துகளுக்கு அரசியல் அதிகாரம் பெற்றுத் தரும் கட்சியாகதமிழக காங்கிரஸ் செயல்படும்என்று தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.அணி தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் காங்கிரஸ்தான் தலித்துகளுக்கு முக்கியத்துவம் தரும் கட்சியாக உள்ளது. 1962-ல் டி.சஞ்சீவய்யா, 1969-ல் பாபு ஜெகஜீவன்ராம் ஆகிய தலித்துகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களாக பதவி வகித்து பெருமை சேர்த்தனர். தற்போது மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அப்பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1954-ல் காமராஜர் முதல்வராக பொறுப்பேற்றதும், 8 பேர் கொண்ட … Read more

பொருட்கள் மீது கை வைத்தால் அடிப்பேன் – பெண் அலுவலருக்கு திமுக பிரமுகர் மிரட்டல்!

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற நகராட்சி பெண் அலுவலரை தன்னுடைய பொருட்கள் மீது கைவைத்தால் அடிப்பேன் என திமுக பிரமுகர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சிவகங்கை பேருந்து நிலையத்தில் நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடையில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர் தீப்பற்றி விபத்து ஏற்பட்டது.  இந்நிலையில் இந்த கடைகளில் அனுமதியின்றி கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் பயனிகளுக்கு … Read more

ராமேஸ்வரத்தில் திருடப்பட்ட நடனமாடும் கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ஏகாந்த ராமசுவாமி கோயிலில் திருடப்பட்ட கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1966-ல் திருடப்பட்ட நடனக் கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. நடனமாடும் கிருஷ்ணர் சிலையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

பள்ளியில் குட்கா பொருட்கள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு… மாணவர் எடுத்த விபரீத முடிவு!

சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியொன்றில், குட்கா பொருள் பயன்படுத்தியதாக மாணவர் மீது குற்றஞ்சாட்டியதால் அவர் தற்கொலை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அப்பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாணவனின் பெற்றோர் புகாரளித்துள்ளார். சென்னை சின்ன நீலாங்கரையை சேர்ந்த மகேஷ் என்பவரின் இரண்டாவது மகன் தர்ஷன். இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். கடந்த மாதம் 29 மற்றும் 30-ம் தேதி கவின்குமார் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. கடந்த … Read more