மாண்டஸ் புயல் | பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம்: கடலூர் ஆட்சியர் அறிவுறுத்தல்

கடலூர்: “மாண்டஸ் புயல் பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புயலின் வேகம் 80 கிலோ மீட்டர் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை பணிகளை இன்று (டிச.9) காலை ஆய்வு செய்தார். கடலூரில் இருந்து புறப்பட்டு கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட முடசல் ஓடை மீன்பிடி இறங்கு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். … Read more

மாண்டஸ் புயல்: நள்ளிரவு மூன்று மணி நேரம் செம கச்சேரி இருக்கு!

மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நேற்று (08.12.2022) தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ‘மாண்டஸ்’ புயல், நேற்று மாலை தீவிர புயலாக வலுப்பெற்று மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று (09.12.2022) காலை 08.30 மணி அளவில் புயலாக வலு குறைந்து காரைக்காலுக்கு 180 கி.மீ. கிழக்கு வட … Read more

ஆயுதங்கள் பயன்படுத்தப்படாத நிலையில் ஜல்லிக்கட்டு எப்படி ஆபத்தாகும் ? உச்சநீதிமன்றம் கேள்வி

ஜல்லிக்கட்டு என்பது பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக தமிழகத்தில் நடத்தப்படும் காளைகளை அடக்கும் வீர விளையாட்டு ஆகும். ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா அமைப்பு மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வருகிறது. நீதிபதி கே.எம்.ஜோசஃப்போடு, நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சி.டி ரவிக்குமார் ஆகியோரும் இந்த அமர்வில் இடம் பெற்றுள்ளனர்.  பீட்டா … Read more

மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

காஞ்சிபுரம்: மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை நேரத்திற்குப் பிறகு தொடர் மழையை எதிர்பார்க்கலாம்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

மாலை நேரத்திற்குப் பிறகு தொடர் மழையை எதிர்பார்க்கலாம்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு Source link

மெரினாவில் கடல் சீற்றம்: மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பாதை சேதம்..!

மாண்டஸ் புயல் காரணமாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால், சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பாதை உடைந்து சேதம் அடைந்தது. மாண்டஸ் புயல் தீவிரமடைந்ததையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மாமல்லபுரம் பகுதியில் புயல் கரையைக் கடக்கும் என்பதால், குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவொற்றியூர் போன்ற கடற்கரையில் பொதுமக்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் பூங்காக்கள், … Read more

'பேருந்துகள் இயங்கும்; மக்கள் பயணத்தை தவிர்க்க வேண்டும்' – அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தல்

சென்னை: சென்னை உட்பட 5 மாவட்டங்களில் வழக்கம் போல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும் ஆனால் பொதுமக்கள் பயணத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மாண்டஸ் புயல் இன்று இரவு மற்றும் நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் வழக்கம் போல் பேருந்துகள் … Read more

அண்ணாமலை போட்ட ஸ்கெட்ச் – அதிமுகவை 'கழற்றி' விடும் பாஜக?

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை கைப்பற்றிய பாஜக, மூன்றாவது முறையும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான தேர்தல் … Read more

மாண்டஸ் புயல் எப்போது கரையை கடக்கும்: எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

மாண்டஸ் தீவிர புயல் இன்று காலை வலுவிழுந்து, 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவிலும் காரைக்காலுக்கு கிழக்கு வடகிழக்கில் சுமார் 180 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று இரவுக்கும் நாளை அதிகாலைக்குக்கும் இடைப்பட்ட  நேரத்தில் புதுவைக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்கும். இதன் காரணமாக அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் … Read more

ஸ்ரீரங்கத்தில் பரிதாபம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை-பரபரப்பு கடிதம் சிக்கியது?

திருச்சி : திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன் உள்பட 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருச்சி திருவானைக்கோவில் நடுகொண்டையம் பேட்டை அகிலா நகர் பகுதியில் சேர்ந்தவர் கார்த்திகேயன்(35). அதே பகுதியை சேர்ந்த வேற்று சமூகத்தை சேர்ந்தவர் வசந்த பிரியா (30). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தம்பதியின் மகன் சாமிநாதன்(8). கார்த்திகேயன் வெளிநாட்டில் … Read more