தாய் மொழி தமிழில் தத்தியான தமிழக மாணவர்கள் | உத்திர பிரதேசத்தை விட கீழ் சென்ற அவமானம்!

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில்  நடத்திய அடிப்படை கற்றல் குறித்த  ஆய்வில், தாய் மொழி தமிழில் தமிழக மாணவர்கள், உத்திர பிரதேசத்தை விட கீழ் சென்றுள்ள அவலம் அரங்கேறியுள்ளது.  நாடு முழுவதும் 86 ஆயிரம் மாணவர்களின் கற்றல் திறன் சோதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 336 பள்ளிகளைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு பயிலும் 2,937 மாணவர்களிடம் தமிழ் மற்றும் கணிதப் பாடங்களில் இருந்து வினாக்கள் எழுப்பப்பட்டன.  அதில், 20% மாணவர்களால் தான் தமிழை புரிந்து கொள்ள முடிகிறது; சுமார் … Read more

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்: 2026 முதல் சென்னையில் இயக்கம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட திட்டத்தில், ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான கட்டுப்பாட்டு அமைப்பை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உருவாக்க உள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெறுகின்றன. இவற்றில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த வகை மெட்ரோ ரயில் தயாரிப்பிற்கான 946 கோடியே … Read more

தமிழக பள்ளி மாணவர்கள் கற்றலில் குறைபாடு: ராமதாஸ் முக்கிய கோரிக்கை..!

பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலமே மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும். அதைக் கருத்தில் கொண்டு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மட்டுமின்றி, வகுப்புக்கு ஓர் ஆசிரியர் வீதம் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; தமிழகத்தில் மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 20 விழுக்காட்டினரால் தான் தமிழ் சொற்களை புரிந்து கொள்ள முடிகிறது; 23 விழுக்காட்டினரால் தான் அடிப்படை கணிதத்தை மேற்கொள்ள முடிகிறது … Read more

புதர் மண்டி கிடக்கும் பொது கழிவறை: சீரமைக்க வலியுறுத்தல்

சின்னாளபட்டி: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், சித்தையன்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட சேடபட்டி, நரசிங்கபுரத்தில் மாற்றுத்திறனாளி கழிவறைகள் உள்ளன. உரிய பராமரிப்பில்லாததால், இந்த கழிவறைகள் உள்ளே நுழையமுடியாத அளவு புதர் மண்டி கிடக்கிறது. கழிவறை சிதிலமைந்த நிலையில் உள்ளதுடன், தண்ணீர் வசதியும் இல்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் கழிவறையை பயன்படுத்த முடியாதநிலையில் உள்ளனர். மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் அருகில் உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டி வளாகத்தை கழிவறையாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வருகின்றனர். … Read more

திருவண்ணாமலை தீபத் திருவிழா: 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்கு பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வரின் உத்தரவின்படி, 2022- திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பொதுமக்கள் வந்து செல்வதற்கு வசதியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 5-ம் தேதியிலிருந்து வரும் 7-ம் தேதி வரை 2,700 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது. திருவண்ணாமலை திருக்கோயிலில் இன்று (டிச.6) கார்த்திகை … Read more

இவர்கள் இருக்கும் வரை பாஜக வெற்றி பெறாது.. கொளுத்திப்போட்ட திருச்சி சிவா..

தமிழக பாஜக ஓபிசி பிரிவின் மாநில தலைவராக இருந்தவர் திருச்சி சூர்யா சிவா. இவர் அண்மையில் மாநில சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணிடம் பேசிய ஆடியோ விவகாரத்தால் பதவியை இழந்தார். இருப்பினும், கட்சி உறுப்பினராக நீடிக்கலாம் என்றும் நேரம் வரும்போது பதவி தேடி வரும் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வந்த திருச்சி சூர்யா இன்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் அவர் அண்ணாமலைக்கு போட்ட பதிவொன்றில் … Read more

அம்பேத்கர் மணிமண்டபத்தில் அர்ஜூன் சம்பத் மீது செருப்பு வீச்சு… விசிகவினர் கைது

சட்டமாமேதை புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, இந்து மக்கள் கட்சியினர் சார்பில் பல்வேறு இடங்களில் விபூதி பூசியவாறும், காவிச் சட்டை அணிந்தவாறும் உள்ள அம்பேத்கர் படத்துடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டியிருந்தனர்.  மேலும் அந்த போஸ்டரில், ‘காவித் தலைவனின் புகழை போற்றுவோம்’ என சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு கடும் கண்டனம் வலுத்த  நிலையில், சென்னை அடையாறு அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த, இந்து … Read more

ஆனந்தூர் அருகே சாலை தரைப்பாலம் சேதம் மேம்பாலம் கட்டித் தர வேண்டும்: பொதுமக்கள் வேண்டுகோள்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆனந்தூர் அருகே சாலை தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால், மேம்பாலம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனந்தூர் அருகே பச்சனத்தின்கோட்டை அருகே ஆற்றின் குறுக்கே நீண்ட காலங்களுக்கு முன்பு ஒரு தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக ஆனந்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயணித்து வருகின்றனர். இந்த சாலையை மழை காலங்களில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆனந்தூர், ராதானூர், சருகனி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தால், அதன் … Read more