கடும் சீற்றத்தில் கடல்… `தயவுசெய்து இறங்காதீங்க’ ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கும் போலீஸ்!

தனுஷ்கோடியில் கடல் பகுதியில் சீற்றம் அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க வேண்டாமென போலீசார் தடை விதித்து ஒலி பெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர் கடந்த ஒருவார காலமாக ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் மேகமூட்டத்துடன் கடல் வழக்கத்துக்கு மாறாக அமைதியாக காணப்பட்டு வந்த நிலையில், வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயலின் தாக்கத்தால் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் சூறைக்காற்று வீசி வந்தது. இந்நிலையில் மன்னார் … Read more

அதற்கு மறுத்த இளம்பெண்.. பிணத்துடன் காரில் அலைந்து.. இளைஞர் செய்த பகீர் செயல்.! 

தஞ்சாவூரில் தனியார் பேருந்து ஓட்டுநர் நாகராஜ் ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் தனக்கு திருமணமானதை மறைத்து ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், அவருக்கு திருமணமான விஷயம் இளம் பெண்ணுக்கு தெரிய வந்ததால் அவரிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். நாகராஜ் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண்ணிடம் வற்புறுத்தியுள்ளார். இதற்கு இளம் பெண் அகல்யா ஒப்புக்கொள்ளவில்லை. கடந்த டிசம்பர் 6ஆம் தேதி நூலகத்திற்கு சென்ற அகல்யா மீண்டும் வீடு திரும்பாததால், அக்கம் பக்கம் தேடிய பெற்றோர் காவல் … Read more

தமிழகத்தில் நாளை மொத்தம் 8 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் இன்று இரவு 11:30 மணி முதல் நள்ளிரவு 2.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (10.12.2022) 8 மாவட்டங்களில் பள்ளி, … Read more

கோவை காவல் ஆணையர், மாவட்ட எஸ்பி-க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி

சென்னை: அந்தந்தப் பகுதிகளில் நிலவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஊர்வலங்களுக்கு அனுமதி அளிப்பதும், மறுப்பதும் காவல் துறையின் தனிப்பட்ட அதிகாரத்துக்குட்பட்டது எனக் கூறி, கோவை காவல் துறையினருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், வால்பாறை திராவிட தோட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் எஸ்.கல்யாணி என்பவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், “தொழிலாளர்களின் கூலி உயர்வை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளோம். … Read more

கடலுக்குள் சென்ற வீடுகள்; கெட்ட ஆட்டத்தை துவக்கிய மாண்டஸ்!

வங்க கடலில் நிலவி வரும் மாண்டஸ் புயல் புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் பகுதியில் இன்று நள்ளிரவு கரையை கடக்க வாய்ப்புகள் இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது. அதே சமயம் தீவிர புயலாக இருந்த மாண்டஸ் இன்று காலை வலுவிழந்து தற்போது, சென்னையில் இருந்து தென் கிழக்கு பகுதியில் 260 கிமீ தொலைவில் நிலை … Read more

Cyclone Mandous: மாண்டஸ் பயுலால் மெரீனாவில் ஏற்பட்ட சேதம்; மக்கள் கூட்டமில்லாமல் வெறிச்சோடியது

மாண்டஸ் புயல் வங்கக்கடலில் கடந்த 5 ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியது. சென்னைக்கு அருகே 180 கி.மீ தொலைவில் வலுப்பெற்றுள்ள மாண்டஸ் புயல் 12 கி.மீ வேகத்தில் சென்னை நோக்கி நகர்ந்து வருகிறது. நாளைக் காலை மாமலப்புரம் அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடல் சீற்றம் மாண்டஸ் புயல் நகர்வதையொட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடல் சீற்றமாக … Read more

மாண்டஸ் புயல் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை(10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ராணிப்பேட்டை: மாண்டஸ் புயல் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை(10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

“பிரதமர் மோடி தமிழகத்தை கொஞ்சம் கவனிக்க வேண்டும்” – செல்லூர் ராஜு பேட்டி

“குஜராத் தமிழர்கள் மோடிக்கு வாகளித்த பிரதிபலிப்பு எல்லா இடங்களில் இருக்குமா எனத்தெரியவில்லை” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தமிழகத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுகவினரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர், … Read more