சென்னையை சூறையாடி விட்டு கரையை கடந்த மான்டஸ் புயல்.! மீட்பு பனி தீவிரம்.!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்துவருகிறது.  கடந்த நவம்பர் மாதம் இரண்டு காற்றழுத்த தாழ்வுமண்டலங்கள் உருவான நிலையில் அவை அனைத்தும் வலுவடைந்து பெரிய சேதம் ஏற்படுத்தாமல் இருந்தது. ஆனால், மீண்டும் கடந்த 5-ந் தேதி வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அது தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு … Read more

இப்படி கூட நடக்குமா ? பேசிக்கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகர் தலையில் பாய்ந்த மின்சாரம்… அதிர்ச்சி வீடியோ!

மேற்கு வங்க மாநிலம் பஷிம் மதினிப்பூர் மாவட்டம் ஹாரக்பூரில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக சுஜன் சிங் சர்தார் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், டிக்கெட் பரிசோதகர் சுஜன் சிங் நேற்று ரயில் நிலையத்தில் நின்று சக ஊழியருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ரயில் தண்டவாளத்திற்கு மேலே செல்லும் உயர் அழுத்த மின் கம்பி திடீரென டிக்கெட் பரிசோதகர் சுஜன் சிங் தலை மீது அறுந்து விழுந்தது. உயர் அழுத்த மின்கம்பி தலையில் … Read more

சென்னையில் பள்ளி, அலுவலக நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க தடை கோரி வழக்கு

சென்னை: சென்னையில் பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “சென்னை மாநகரில் குப்பைகளை சேகரித்து, குப்பைக் கிடங்குகளுக்கு கொண்டு செல்ல லாரிகள் இயக்கப்படுகின்றன. இந்த குப்பை லாரிகள், காலை நேரங்களில் இயக்கப்படுவதால், பள்ளி செல்லும் மாணவ – மாணவியரும், வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்படுகின்றனர். … Read more

ஆன்லைன் ரம்மியால் ஊழியர், டிரைவர் தற்கொலை: கோவை, சேலத்தில் சோகம்

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள மேட்டுப்பாளையம் விஜிபி கார்டனை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகன் சல்மான் (22). தனியார் நிறுவன  ஊழியர். சல்மான் பெற்றோருக்கு தெரியாமல் அடிக்கடி தனது செல்போன் மூலமாக ஆன்லைனில் சூதாட்டத்தில் விளையாடி உள்ளார்.  அதில் அவர் பணத்தை இழந்தார். மேலும் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சல்மான் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். இதனிடையே சம்பவத்தன்று சல்மான் வழக்கம்போல வேலைக்கு சென்று வீட்டுக்கு … Read more

மாண்டஸ் புயல் எதிரொலி..!! சென்னையில் அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் ரத்து..!!

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று இரவு மகாபலிபுரம் அருகே கரையை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று இரவு புயல் கரையைக் கடக்கும் என்பதால் பலத்த காற்று மற்றும் மழை அதிக அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் புயலின் தாக்கம் காரணமாக மோசமான வானிலை நிலவக்கூடும். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று 25 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று சென்னையில் மாநகர … Read more

இனி பூரி ஜெகநாதர் கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை..!!

கோவில்களில் செல்போன் பயன்படுத்துவதால் பக்தர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது. மேலும் சிலர் கோவில் கருவறையை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்குகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுத்தபோதிலும் இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வந்தது. இதனால் தமிழகத்தில் கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பிரசித்திபெற்ற ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவிலிலும் செல்போன் கொண்டு வருவதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம்( ஜனவரி) 1-ந் தேதி முதல் செல்போனுக்கு தடை விதிக்கப்படுவதாக … Read more