சாலையில் கொட்டப்படும் காய்கறிகள்; அரசே கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: கொள்முதல் விலை வீழ்ச்சியால் உழவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க காய்கறிகள் – பழங்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்கவும், அவற்றை கூட்டுறவு அமைப்புகள் மூலம் அரசே கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு சந்தைகளில் உரிய விலை கிடைக்காததால் சாலைகளில் கொட்டி அழிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் வியர்வை சிந்தி சாகுபடி செய்த பயிர்கள் யாருக்கும் பயனின்றி … Read more

தமிழகத்தில் இருந்து வரும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை சரிவு – ஏ.எஸ்.ராஜன்

கோவை தனியார் கல்லூரியில் மாணவ மாணவியருடனான கலந்துரையாடல் நிகழ்வில் சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவலர் பயிற்சி அகாடமியின் இயக்குனர் ஏ.எஸ்.ராஜன் கலந்து கொண்டார். சமூக வலைதளங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவது குறித்தும், அதை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் மாணவ மாணவியருடன் கலந்துரையாடல் நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து கூறியது; கல்விதுறை, மருத்துவதுறை போல காவல் துறையும் சேவை மனப்பான்மையுடன் இருக்கும் துறை என தெரிவித்தார். காவல் அதிகாரிகளாக 20 சதவீதம் வரை பெண்கள் … Read more

தலைதூக்குகிறதா பட்டாக்கத்தி கலாசாரம்… அரசு பேருந்து கண்ணாடியை உடைத்து அராஜகம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான T-87 எண் கொண்ட பேருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஓட்டுநர் சுப்பிரமணி மற்றும் நடத்துனர் சாரங்கன் மற்றும் சில பயணிகளுடன் கண்ணன்தாங்கள் கிராமத்திற்கு  சென்றது. அப்போது காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் சந்திப்பு வளைவில் திரும்பியபோது போக்குவரத்து நெரிசலால் பேருந்து நின்றிருக்கிறது.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் பேருந்தினை மடக்கி ஹார்ன் அடித்தால் வழிவிட முடியாதா என கேட்டிருக்கின்றனர். அதற்கு ஓட்டுநர் சரி போங்கப்பா என்று கூறியிருக்கிறார். … Read more

பவானிசாகர் வனப்பகுதியில் சுஜில் குட்டையில் 20 வயது பெண் யானை உயிரிழப்பு

ஈரோடு: பவானிசாகர் வனப்பகுதியில் சுஜில் குட்டையில் 20 வயது பெண் யானை உயிரிழந்துள்ளது. உயிரிழந்த பெண் யானையின் உடலை கூராய்வு செய்ய வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

ஒரு கிலோ இவ்வளவா? – கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அதிகரித்துள்ள பூ விலை

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. மல்லிகைப்பூ கிலோ ஒன்றுக்கு ரூ.1800 முதல் ரூ.2,000 வரை விற்பனையாகிறது.  பூக்களின் வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு மலர் சந்தையில் மல்லி, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் மொத்த விற்பனை விலை கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறார்கள் வியாபாரிகள். அதே நேரத்தில் முகூர்த்த நாள் மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா ஆகியவை காரணமாகவும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. பூக்களின் விலையை பொருத்தமட்டில் மல்லிகை கிலோ ஒன்றுக்கு … Read more

சென்னையில் யாசகம் எடுக்க பயன்படுத்தப்பட்ட 15 குழந்தைகள் மீட்பு

சென்னை: சென்னையில் யாசகம் எடுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட 15 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இவர்கள் 8 குழந்தைகள் பெற்றோரிடமும், 7 குழந்தைகள் காப்பகத்திலும். ஒப்படைக்கப்பட்டனர். சென்னையில் குழந்தைகளை யாசகம் எடுக்க பயன்படுத்தும் நபர்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயம்பேடு பேருந்து நிலையம், தி.நகர் பேருந்து நிலையம், மெரினா கடற்கரை, மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகில், நந்தனம் சிக்னல், வடபழனி, வேளச்சேரி, அடையார் ஆகிய பகுதிகளில் … Read more

சேகர்பாபு என்னையே வேலை வாங்குகிறார்.. முதல்வர் பேச்சால்கிசுகிசுத்த அமைச்சர்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று சென்னை, திருவான்மியூர், அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார். அப்போது பேசிய முதல்வர், ”அமைச்சர் சேகர் பாபு ஒரு செயல்பாபு என்று ஏற்கெனவே நான் பலமுறை குறிப்பிட்டுள்ளேன். அவரும் அதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், இங்கு இருக்கக்கூடிய அமைச்சர்கள் கோபித்துக் கொள்ளமாட்டார்கள். கோபித்துக் கொள்ளக்கூடாது. … Read more

பெருந்துறை சிப்காட் அருகே குளத்தை மாசுபடுத்திய ஆலைக்கழிவுகள்: கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் ஆலைக்கழிவுகளால் குளம் மாசடைந்ததது குறித்து குளத்தை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. பெருந்துறை பகுதியில் கடந்த வாரம் கனமழையின் போது சிப்காட் தொழில்மையத்தில் உள்ள ஆலை ஒன்றிலிருந்து வெளியேறிய கழிவுநீர் மழைநீருடன் கலந்தது. இதனால் சிப்காட்டை ஒட்டிய செங்குளம் கிராமத்தில் உள்ள நான்கரை ஏக்கர் பரப்பளவிலான குளம் மாசடைந்ததோடு சுற்றியுள்ள விளைநிலங்களும் பாதிக்கப்பட்டன. தண்ணீரின் மீது எண்ணெய் படலமும், நிலத்தில் திடக்கழிவுகளும் படிந்து சுகாதார சீர்க்கேட்டை ஏற்படுத்தியது. ஆலையில் இருந்து கழிவுநீர் … Read more

இந்த படத்தில் மறைந்திருக்கும் கரடி… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கிங்!

இந்த படத்தில் மறைந்திருக்கும் கரடி… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கிங்! Source link

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் குவிப்பு!!

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ஆம் தேதி அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்காக பேருந்து, ரயில் நிலையங்கள், வழிப்பாட்டு தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படுவது வழக்கம். சமீபத்தில் கோவையில் கார் வெடிப்பு சம்பவம், மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றதாலும், கார்த்திகை தீப திருவிழாவும் வருவதாலும் இந்த ஆண்டு பாதுகாப்பு … Read more