இன்ஸ்டாகிராம் காதலால் ஏற்பட்ட விபரீதம்.! கல்லூரி மாணவர் தற்கொலை.!

ஈரோடு மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் மேட்டுநாசுவம்பாளையம் மணக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் சுரேஷ் பாபு. இவரது மனைவி சுமித்ரா. இவர்களது மகன் ஸ்ரீராமகிருஷ்ணா(22) திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு திடீரென ராமகிருஷ்ண வாந்தி எடுத்துள்ளார். இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்த நிலையில் … Read more

கரையைக் கடந்த மாண்டஸ் புயல் | 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: மாண்டஸ் புயல் கரையைக் கடந்துவிட்ட நிலையில் 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 3 மணியளவில் முற்றிலுமாக கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்த போது மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதனைத் தொடர்ந்து மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. தொடர்ந்து இன்று (டிச.10) பிற்பகல் … Read more

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரிப்பு: ஒத்துக்கொண்ட வெளியுறவுத் துறை!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொடூரமாக தாக்குவதும், துப்பாக்கிச் சூடு நடத்துவதும், கை செய்வதும், படகுகள், மீன்களை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி வருகிறது. தமிழக அரசு ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதும் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது பற்றி நாடாளுமன்றத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியுறவு இணை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு … Read more

8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு சென்னையை நெருங்கியது. புயலானது இரவு 11.30 மணியில் இருந்து  மாமல்லபுரம் அருகே அதிகாலை  கரையை கடந்தது. கரையை கடக்கும்போது 75 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. நள்ளிரவு நேரத்தில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்று வீசியது. மரங்கள், மரக்கிளைகள், மின் கம்பங்கள், விளம்பர பலகைகள் சூறாவளி காற்றில் விழுந்தன. ஆனாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. புயலாக … Read more

மாண்டஸ் புயலால் தமிழகம் முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழை!: 3,863 பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100% நிரம்பின..!!

சென்னை: தமிழ்நாட்டில் 3,863 பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100 சதவீதம் நிரம்பியுள்ளன. மாண்டஸ் புயல் நேற்று இரவு 9.30 மணி முதல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது. அதிகாலை 2.30 மணியளவில் முழுமையாக புயல் கரையை கடந்தது. புயலின் மையப் பகுதி கரையை கடக்கும்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. சென்னையில் அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ வேகம் வரை காற்று வீசியது. இன்று … Read more

மாண்டஸ் புயலால் அறுந்துகிடந்த மின் கம்பியை மிதித்த இரு வடமாநில இளைஞர்கள் பலி

ஸ்ரீபெரும்புதூரில் மின்சாரம் தாக்கி இரண்டு வட மாநில இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கத்தில் தனியார் மழலை பள்ளி ஒன்று உள்ளது. மாண்டஸ் புயலின் காரணமாக நேற்று இரவு வீசிய பலத்த காற்றில் தனியார் மழலை பள்ளியில் உள்ள மரம் ஒன்று முறிந்து மின்சார வயரில் விழுந்ததை அடுத்து, மின்சார வயர் தரையில் அறுந்து கிடந்துள்ளது. இந்நிலையில், பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் … Read more

திருவள்ளூரில் அடுத்தடுத்து இரு இளம் பெண்கள் மாயம்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த மணவாள நகர் புதுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகரின் மகள் ராஜமதி. இவர் தண்டலம் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5ம் தேதி காலை வேலைக்கு சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இவரது தந்தை தனசேகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  அதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த நுங்கம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன் மகள் ஐஸ்வர்யா. இவர் பிளஸ் 2 படித்து … Read more

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று ஒருநாள் மூடல்..!

புயலால் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற இருப்பதால் வண்டலூர் பூங்கா இன்று ஒருநாள் மட்டும் மூடப்படுவதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 3 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நேரத்தில் 75 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இந்த புயல் காரணமாக சென்னை மற்றும் வட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நிறைய இடங்களில் மரங்கள் … Read more

மெரினா மரப்பாதை விரைவில் சீரமைக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு உறுதி

சென்னை: மாண்டஸ் புயலால் சேதமடைந்த சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை விரைவில் சீரமைக்கப்படும் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். மாண்டஸ் புயல் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு இன்று காலை செய்தியாளர்களை சந்திப்பில் விவரித்தார். அப்போது அவர், “சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்புப் பாதை சேதமடைந்துள்ளது. இயற்கை சீற்றத்தினால் இது நடந்துள்ளது. மெரினா கடற்கரை பகுதியில் கான்க்ரீட் அமைப்புகளுக்கோ, இரும்புப் பொருட்களைப் பயன்படுத்தி கட்டமைப்புகளை உருவாக்க அனுமதி … Read more