இந்தியாவின் நலனை காப்பதற்காக நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? – வைகோ கேள்வி.!

நேற்று முன்தினம் நடைபெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவையில்  ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது, “ஐ. நா சபையில் நடைபெற்ற இலங்கை தொடர்பான வாக்கெடுப்பில், இந்தியா எதற்காக வாக்களிக்கவில்லை? சமீபத்தில் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீன போர்க்கப்பல் வந்தது. அப்போது, இந்தியாவின் நலனை காப்பதற்காக நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.  அதற்கு பதில் அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்ததாவது, ”ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நாம் வாக்களிக்கவில்லை. ஏனென்றால் … Read more

அதிரடி…பெரு அதிபர் கைது… முதல் பெண் அதிபர் பொறுப்பேற்பு!

பெருநாட்டின் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ நீக்கப்பட்டு, அந்நாட்டின் முதல் பெண் அதிபராக டினா பதவி ஏற்றார். தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. 2020-ம் ஆண்டில் அந்த நாடு 5 நாளில் 3 அதிபர்களைக் கண்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கிய இடதுசாரியான பெட்ரோ காஸ்டிலோ, வலதுசாரியான கெய்கோவை வீழ்த்தி அதிபர் ஆனார். அவர் மீது அண்மை காலமாக … Read more

‘மேன்டூஸ்' புயல் | சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப் படையினர் விரைந்தனர்

சென்னை: புயலால் பாதிக்கப்படும் மாவட்டங்கள், அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் பல்துறை மண்டல குழுக்கள் கண்காணிப்பு பணியில் இருந்தாலும், பேரிடர் மீட்புக்கான பயிற்சி பெற்ற மத்திய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் அவசியம் என கருதி அவர்களும் அனுப்பப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 396 வீரர்கள் அடங்கிய 12 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு … Read more

மாண்டஸ் தீவிர புயல்: என்னென்ன மாற்றங்கள்? என்னென்ன எச்சரிக்கைகள்?

தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது மாண்டஸ். இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முதல் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னையிலிருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள தீவிர புயல் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த தீவிர புயல், புயலாக வலுவிழந்து மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீவிர புயல், கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நிகழ்ச்சிகள், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனென்ன … Read more

நானே சென்று அதிகாரிகளுடன் ஆலோசிப்பேன் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நேரில் ஆய்வு: தென்காசியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

தென்காசி: தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நேரில் ஆய்வு நடத்தி அரசு திட்டப் பணிகளை முடுக்கி விட திட்டமிட்டுள்ளதாக தென்காசியில் நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தென்காசியில் நேற்று நடந்த அரசு விழாவில் ரூ.239 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தொழில் வளர்ச்சியா, சிறுதொழில் மேம்பாடா, கல்வியா, சுகாதாரமா, உள்கட்டமைப்புப் பணிகளா, மகளிர் மேம்பாடா, ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாடா, இளைஞர் நலனா, விளையாட்டா, அனைத்திலும் தமிழகம் முன்னேற்றம் அடைய … Read more

இமாச்சலில் உட்கட்சி கிளர்ச்சியால் ஆட்சியை இழந்த பா.ஜ.க; தேர்தல் வாக்குறுதி, நேரடி மக்கள் தொடர்பு மூலம் வென்ற காங்கிரஸ்

இமாச்சலில் உட்கட்சி கிளர்ச்சியால் ஆட்சியை இழந்த பா.ஜ.க; தேர்தல் வாக்குறுதி, நேரடி மக்கள் தொடர்பு மூலம் வென்ற காங்கிரஸ் Source link

#BREAKING : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மிக கனமழை.. வானிலை ஆய்வு மையம்.!

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் அடுத்த நாளை 34  மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவு ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த மாண்டஸ் புயல் தற்போது மணிக்கு மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து … Read more

ரூ.3,200 கோடியில் விமானங்களை புதுப்பிக்க திட்டம்!

ரூ.3,200 கோடியில் விமானங்களை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமாக இருந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியது. இதைத்தொடர்ந்து இந்த விமானங்களை புதுப்பிக்க குறிப்பாக கேபின்களை மாற்றியமைப்பதற்கு ஏர் இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. அதன்படி அனைத்து வகுப்புகளிலும் நவீன தலைமுறையை சார்ந்த இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளுடன் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் வகையில் கேபின் உள்புற வடிமைப்பு முற்றிலும் மாற்றியமைக்கப்படுகிறது. 4000 மில்லியன் டாலர் அதாவது … Read more