அமைச்சர் துரைமுருகன் அண்ணன் மகள் தற்கொலை.. காட்பாடியில் பரபரப்பு..!

காட்பாடியில், அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் பாரதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை ராமலிங்கம். இவர், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு காலமானார். துரை ராமலிங்கத்தின் மகள் பாரதி (55). இவர், தனது கணவர் ராஜ்குமார் மற்றும் குடும்பத்துடன் காட்பாடி காந்திநகர் பகுதியில் வசித்து வருகிறார். பாரதியின் கணவர் ராஜ்குமார் காட்பாடி பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். … Read more

ரெட் அலர்ட்: தமிழகத்தில் டிச.9-ல் பரவலாக அதி கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (டிச.7) மாலை புயலாக வலுவடையக்கூடும் என்பதால், தமிழகத்தில் 9-ம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அன்றைய தினம் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: நேற்று (டிச.5) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு … Read more

பவானிசாகர் அணை: செமயா ஆட்டம் காட்டும் நீர்மட்டம்… லேட்டஸ்ட் நிலவரம் இதுதான்!

ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி காணப்படுகிறது. இங்கு மழை பெய்வதும், பின்னர் மழைப்பொழிவு பொய்ப்பதும் என நிலையற்றத் தன்மை இருந்து வருகிறது. இது பவானிசாகர் அணையிலும் எதிரொலித்து கொண்டிருக்கிறது. ஒருநாள் நீர்வரத்து அதிகரித்தும், மற்றொரு நாள் நீர்வரத்து குறைந்தும் வருகிறது. பவானிசாகர் அணை நீர்மட்டம் இருப்பினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 104 அடியில் நீடித்து வருகிறது. இன்று (டிசம்பர் 6) காலை நிலவரப்படி, பவானிசாகர் … Read more

ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும்: அனுராக் தாக்கூர்

சென்னையை அடுத்த தாழம்பூரில் உள்ள அக்னி தொழில்நுட்ப  கல்லூரியில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் சார்பில் ட்ரோன் திறன் மற்றும் பயிற்சி மாநாடு  மற்றும் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள உள்ள ட்ரோன் உற்பத்தி மையத்தை மத்திய தகவல் ஒளிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தொடங்கி வைத்தும் “கருடா கிசான்” எனும் ட்ரோன்களின் நிகழ்வை கண்டுகளித்தார். அப்பொழுது பரந்து வந்த ட்ரோன் மூலமாக நினைவு பரிசு வழங்கப்பட்டது. அப்போது தொடர்ந்து மேடையில் … Read more

என்.எல்.சி. நிறுவனம் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு: கரிவெட்டி கிராம மக்கள் போராட்டம்..

கடலூர் : நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்காக நில கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கரிவெட்டி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக பணிக்காக பல்வேறு கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சேத்தியார் தோப்பு அருகே கத்தாழை ஊராட்சியில் உள்ள கரிவெட்டியிலும் நிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி. நிறுவனம் முயன்று வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நில அளவீடு செய்வதற்காக அதிகாரிகள் … Read more

`கல்வி, வேலை, அரசியலில் இடஒதுக்கீடு வேண்டும்!’ அம்பேத்கர் நினைவுநாளில் திருநர்கள் கோரிக்கை

அண்ணல் அம்பேத்கரின் 66ஆவது நினைவு நாளில் கல்வி,வேலைவாய்ப்பு, அரசியல் என அனைத்திலும் திருநங்கை, திருநம்பி என அழைக்கப்படும் திருநர்களுக்கும் சமபங்கீட்டு வழங்க வேண்டும் என திருநர் உரிமை கூட்டமைப்பு சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. “இன ஏற்றத் தாழ்வும் பாலின ஏற்றத் தாழ்வும் இந்து சமூகத்தை பிடித்துள்ள பெரும் பிணியாகும். இதை அப்படியே விட்டுவிட்டு பொருளாதார பிரச்சினைகள் சம்மந்தபட்ட சட்டங்களை இயற்றிக் கொண்டே போவது நமது அரசியல் சாசனத்தை கேலிக் கூத்தாக்குவதாகும். சாணிக் குவியலின் மீது அரண்மனையைக் … Read more

தமிழகத்தை மிரட்டும் மாண்டஸ் புயல்..!! வானிலை ஆய்வு மைய இயக்குனருடன் தமிழக அரசு அவசர ஆலோசனை..!!

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரனை அழைத்து அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்! வங்கக் கடலின் தெற்கு அந்தமான் கடற்பகுதி அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில் கன மற்றும் மிக கனமழை இருக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு தென் மண்டல வானிலை ஆய்வு … Read more

இந்து மக்கள் கட்சி போஸ்டரால் பரபரப்பு..!

அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் அவருடைய உருவச் சிலைக்கும், படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளரான டி.குருமூர்த்தி என்பவர், காவி உடை அணிந்து, நெற்றியில் விபூதி பட்டையும் குங்குமமும் வைத்துள்ள அம்பேத்கர் போஸ்டர்களை கும்பகோணம் முழுவதும் ஒட்டியுள்ளார். இதனை அறிந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்த கட்சியினர், உடனடியாக போஸ்டர்களை அகற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போலீசாருக்கு … Read more

செந்தில்பாலாஜி குறித்து அவதூறு கருத்து: பாஜக நிர்வாகிக்கு விதித்த தடையை நீட்டித்தது உயர் நீதிமன்றம்

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல்குமாருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக மின் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை மற்றும் மதுபான கொள்முதல் தொடர்பாக தன்னைப் பற்றி ஆதாரமற்ற கருத்துகளை தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் பரப்பி வருகிறார். … Read more