வேகமெடுக்கும் மாண்டஸ் புயல்.! சென்னை அருகே 170 கி.மீ தொலைவில்…!

சென்னையில் இருந்து தெற்கு-தென்கிழக்கு திசையில் 170 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  புயல் மாமல்லபுரத்தில் இருந்து தென் கிழக்கே 135 கி.மீ தொலைவிலும், தற்பொழுது மாண்டஸ் புயலின் வேகம் 13 லிருந்து 14 கி.மீ அதிகரித்துள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் நாளை தமிழகத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் … Read more

நாளை எந்தெந்த தேர்வுகள் ஒத்திவைப்பு? – முழுவிவரம்!!

வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்க உள்ளது. புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே, மாமல்லபுரம் பகுதியில் புயல் கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நாளை பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை, செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் … Read more

பாஜகவுக்கு இறங்கு முகம் தொடங்கிவிட்டது: கே.எஸ்.அழகிரி கருத்து

கும்பகோணம்: “பாஜக முன்பை விட பலவீனமடைந்துள்ளது. பாஜகவின் குஜராத் வெற்றி கூட நீர்க்குமிழியைப்போலத்தான்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கும்பகோணம் ஜனரஞ்சனி மகாலில், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாக்பில் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா இன்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, சிறப்பழைப்பாளராக கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க விட்டு செய்தியாளர்களிடம் கூறியது: “இந்தியாவிலேயே பதவி வேண்டாம் என்றவர் ஞானி சோனியா காந்தி. காங்கிரஸ் கட்சி … Read more

ஆளுநர் ஆர்.என்.ரவியை மாத்த ஒருவழி செய்யுங்க… கடைசியில் நாடாளுமன்றத்துக்கே போன திமுக!

‘ஆளு அல்லது ஆளுநர்களை வைத்து கெடு’ என்று புதுமொழி சொல்லும் அளவுக்கு, பாஜக ஆட்சிபுரியாத மாநிலங்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளுக்கு இணையாக, ஆளுநர்களை வைத்து கொண்டு மத்திய பாஜக அரசு தனியாக ஆட்சியை நடத்தி வருவதாக பல்வேறு எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதிலும் குறிப்பாக திமுக, ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்களில், ஆளுநர்களின் கெடுபிடி அதிகமாக இருப்பதாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் … Read more

மாண்டஸ் புயல் கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தருமபுரி: மாண்டஸ் புயல் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மாண்டஸ் புயலால் ஏற்பட்ட கடல் அரிப்பு – டேனிஷ் கோட்டைக்கு ஆபத்து!

தரங்கம்பாடியில் கடல் அரிப்பால் டேனிஷ் கோட்டைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் கோட்டையை பாதுகாக்க கருங்கற்களால் ஆன அலைதடுப்பு சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கி.பி.1620 ஆம் ஆண்டு டேனிஷ் நேவி கேப்டன் ரோலண்ட் கிராப் என்பவரால் தரங்கம்பாடி கடற்கரையில் உலகப் புகழ்பெற்ற டேனிஷ் கோட்டை கட்டப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் 1978 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வு துறையின் கட்டுபாட்டுக்கு இது மாறியது. இந்நிலையில் கடந்த 2002-ல் … Read more

#BREAKING : மாண்டஸ் புயல் எதிரொலி.. நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. முழு விபரம்.!

மாண்டஸ் புயல் காரணமாக நாளை தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் தீவிரப் புயலாக உருவான ‘மாண்டஸ்’ தற்போது புயலாக வலுவிழந்து, சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 110 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது மணிக்கு 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் புயல், மாமல்லபுரத்தில் இன்று இரவு 11:30 மணி முதல் அதிகாலை 3 மணி வரை இந்த புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று … Read more

சென்னை மற்றும் புறநகரில் வெளுத்து வாங்கும் மழை!!

மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. புயலானது சென்னை அருகே 130 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில் உள்ளது. இதனால் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும். மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் காற்றுடன் … Read more

மாண்டஸ் புயல் | மின் விநியோகம் பாதிக்காமலிருக்க தயார் நிலையில் கூடுதல் பணியாளர்கள்: செந்தில்பாலாஜி

கோவை: தமிழத்தில் மழை பெய்யும் பகுதிகளில் கூடுதல் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த விழாவில் கலந்துகொண்ட பின்னர், மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறியது: ”தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காலத்தில், மின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதற்காக முதல்வர் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி பல்வேறு ஆலோசனைகளையும், உத்தரவுகளையும் வழங்கினார். ஜூன் முதல் அக்டோபர் வரை ஏறத்தாழ 44 ஆயிரம் பழுதடைந்த … Read more