குஜராத்: பா.ஜ.க-வுக்கு சாதனை வெற்றி; ஆம் ஆத்மிக்கு தொடக்கம்; காங்கிரசுக்கு சரிவு

குஜராத்: பா.ஜ.க-வுக்கு சாதனை வெற்றி; ஆம் ஆத்மிக்கு தொடக்கம்; காங்கிரசுக்கு சரிவு Source link

இன்று பிற்பகல் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! எந்த மாவட்டத்திற்கு தெரியுமா ?

மாண்டஸ் புயல் காரணமாக இன்று முதல் 10-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. அத்துடன் அதீத கனமழை காரணமாக தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது சென்னை-புதுச்சேரி இடைப்பட்ட மாமல்லபுரம் அருகே வரும் 9-ம் தேதி அல்லது 10-ம் அதிகாலைக்குள் கரையை கடக்கும். இது நிகழ்வு கரையை … Read more

காதல் திருமணம் செய்த தம்பதி குடும்பத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்: தொகையை கட்டாததால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த கொடுமை

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியின் குடும்பத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, கட்டத்தவறியதால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த கொடுமையும் நடந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தொகரப்பள்ளி கிராமத்தைசேர்ந்தவர் கூலித் தொழிலாளி நாகராஜ். இவரது மகன் கோபி (24). டிப்ளமோ பட்டதாரியான இவர் மத்தூர் அத்திப்பள்ளத்தைச் சேர்ந்தஒரு பெண்ணை காதலித்து வந்தார். கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இருவரும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், ‘காதல் … Read more

Cyclone alert: ரெட் அலர்ட் விடும் மான்டோஸ் புயல்! தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: மான்டோஸ் புயல் காரணமாக வரும் 10ஆம் தேதிவரை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இங்கு இன்ரு முதல் இரு நாட்களுக்கு, அதாவது 10ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை முன்கணிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாண்டூஸ் புயல் தமிழகத்தை நெருங்கி வருவதால், தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், … Read more

புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை இரவு புயல் கரையை கடக்கும்: வானிலை மையம் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை இரவு புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் காரைக்காலில் இருந்து 460 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் கரையை நெருங்கும்போது மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

மதுரை சிறையில் பலகோடியில் ஊழல் : ஒன்பது பேர் இடமாற்றம்.!

மதுரை மத்திய சிறைசாலையில் உள்ள கைதிகள் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் தயார் செய்தல் உள்ளிட்ட சிறு தொழில்களில் ஈடுபடுத்தபடுகின்றனர். இவர்கள் தயாரிக்கும் பொருட்கள் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து ஆதரவற்றோருக்கும் உதவி செய்து வருகின்றனர். இதில், பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக சில மாதங்களுக்கு முன்பு வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும் அந்த ஊழல் தொடர்பாக எந்தவிதமான … Read more

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தெற்கு ரயில்வே சொன்ன குட் நியூஸ்..!

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக, எர்ணாகுளம் – தாம்பரம் வாராந்திர விரைவு ரயில் ஆரியங்காவு ஹால்ட் என்ற இடத்தில் கூடுதலாக நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. எர்ணாகுளம் – தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் (06068 – 06067) இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் எர்ணாகுளத்தில் திங்கட்கிழமை மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு, நியூ ஆரியங்காவுக்கு மாலை 6.45 மணிக்கும், ஆரியங்காவு ஹால்ட்டுக்கு மாலை 6.51 மணிக்கும் சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 … Read more

முதல்வர் ஸ்டாலின் இன்று தென்காசி வருகை: சென்னையிலிருந்து ரயிலில் பயணம்

தென்காசி/சென்னை: தென்காசியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையிலிருந்து ரயிலில் புறப்பட்டு சென்றார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழா இன்றுகாலை 9.50 மணிக்கு தென்காசியை அடுத்த இலத்தூர் வேல்ஸ்வித்யாலயா பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. விழாவில் 1.03 லட்சம் பயனாளிகளுக்கு ரூ. 182.52கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முதல்வர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார். ரயிலில் பயணம்: தென்காசிக்கு, பொதிகை விரைவு ரயிலில் முதல்வர் … Read more

வேலூரில் இன்று பிற்பகல் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

வேலூர்: வேலூரில் இன்று பிற்பகல் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக வேலூரில் இன்று பிற்பகல் மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.