தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: பலியானோர் குடும்பத்தினருக்கு கூடுதல் நிதியை வழங்கிய கனிமொழி

தூத்துக்குடி துப்பாக்கிச்‌ சூட்டில்‌ உயிரிழந்த 13 பேரின்‌ குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 லட்சம்‌ ரூபாய்‌ வீதம்‌, மொத்தம்‌ 65 லட்சம்‌ ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டிருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் மக்கள் நடத்திய போராட்டத்தின் போது கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற … Read more

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு நிவாரணத் தொகை எப்போது? – முதல்வர் ஸ்டாலின் பதில்

சென்னை: பாதிப்பு தொடர்பான கணக்கெடுப்பை முழுமையாக எடுத்த பிறகு படகுகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மாண்டஸ் புயலைத் தொடர்ந்து சென்னை, காசிமேட்டில் உள்ள மீனவ பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.10) நேரில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, “தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவி கேட்போம். மீனவர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு நிவாரணத் தொகை கேட்டிருக்கிறார்கள். கணக்கெடுப்பு முழுமையாக எடுத்த பிறகு நிவாரணம் வழங்கப்படும். பைபர் படகுகள் … Read more

எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் சம்மட்டி அடி – ர.ர.,க்கள் கப்சிப்!

அதிமுக பொதுக்குழு வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்த நிலையில், பதில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி, சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன், பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தார். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வில் … Read more

வரதட்சணை கொடுமையால் தற்கொலை; புதுப்பெண்ணின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்: சேலம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு

சேலம்: வரதட்சணை கொடுமை யால் தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண் ணின் சடலத்தை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருவதால் சேலம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி.,காலனியை சேர்ந்தவர் அத்தியப்பன் (50). இவரது மூத்த மகள் வசுமதி (23), இன்ஜினியர். இவருக்கும் நாமக்கல் நல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரிக்கல் இன்ஜினியரான வினோத் (31) என்பவருக்கும் கடந்த அக்டோபர் 30ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில், கடந்த 26ம் … Read more

சுழற்றியடித்த சூறைக்காற்று: வேரோடு சாய்ந்த மரம் – இடிந்து விழுந்த சுற்றுச் சுவர்

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை திருவல்லிக்கேணியில் 30 ஆண்டு பழமை வாய்ந்த மரம் விழுந்த விபத்தில் பள்ளியின் சுற்றுச்சுவர், கார்கள், வீடுகள் ஆகியவை சேதமடைந்தன. மாண்டஸ் புயல் நேற்றிரவு கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு சிறப்பாக மேற்கொண்டது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஐஸ் ஹவுஸ் முருகப்பன் தெருவில் சென்னை மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தப் பள்ளியின் சுற்றுச்சவர் … Read more

மாமாக்குட்டி கூப்ட்டாலும் போகாதீங்க.! ஐ.ஏ.எஸ் அதிகாரியின் நூதன எச்சரிக்கை பதிவு.! 

‘மாமாக்குட்டிகள் கூப்பிட்டாலும் லாங் டிரைவ் போகாதீங்க’ என்று ஐ.ஏ.எஸ் வேடிக்கையாக எச்சரித்துள்ள பதிவு வைரலாகி வருகின்றது. வங்க கடலில் கடந்த 5-ந் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நேற்று முன்தினம் புயலாக வலுவடைந்தது.  இதனால், தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாண்டஸ் புயல் நேற்று இரவு 3 … Read more

வானிலை முன்னறிவிப்பு: 12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை நீடிக்க வாய்ப்பு

சென்னை: மாண்டஸ் புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக் குறைந்த நிலையில், இன்றும் நாளையும் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: “நேற்று (டிச.9) தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ‘மாண்டஸ்’ புயல், நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்து, இன்று காலை (டிச.10) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு … Read more

மெரீனா மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை விரைவில் சீரமைக்கப்படும்: அமைச்சர் தகவல்!

மாண்டஸ் புயலால் சேதமடைந்த சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை இரண்டு, மூன்று தினங்களில் சீரமைக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தகவல் தெரிவித்துள்ளார். சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மெரினா கடற்கரை உலகப் புகழ் பெற்றது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் மெரினா கடற்கரையை மேம்படுத்தி அழகுபடுத்தும் பணிகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், சென்னை மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர நடைபாதை திமுக அரசால் அண்மையில் தொடங்கி … Read more

திருச்சி மாநகரை அழகுப்படுத்தும் திட்டப்பணி ‘விறுவிறு’ அனுமதி இல்லாத இடங்களில் போஸ்டர் ஒட்டினால் அபராதம்

*ஜனவரி மாதம் முதல் அமல் *மீறினால் அபராதம் வசூல் திருச்சி : திருச்சி மாநகராட்சி மொத்தம் 167.23 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. இதில் பொதுமக்களின் தேவைகளை அறிந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மன்ற பொறுப்பாளர்கள், அதிகாரிகள் மூலம் அரசின் பல்வேறு திட்டங்களை அரசு நிதி பெற்று நிறைவேற்றி வருகின்றனர்.கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் எந்த ஒரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் மக்களுக்கான எவ்வித அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்படவில்லை. காரணம் உள்ளாட்சி தேர்தல் … Read more