மதுரை விமான நிலைய வளாகத்தில் அம்பேத்கர் சிலை… திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்த்துறை சார்பில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் முதல்கட்டமாக சென்னை மாநகராட்சி மண்டலம் 6, மதுரை மாநகராட்சி மண்டலம் 3, பொள்ளாச்சி நகராட்சி, புதுக்கோட்டை நகராட்சி, சேரன் மகாதேவி பேரூராட்சி செயல்படுத்தப்படுகிறது மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் நடைபெற்ற விழாவில் இத்திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், … Read more

மாண்டஸ் புயல் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கிருஷ்ணகிரி: மாண்டஸ் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பலமாக வீசிய புயல்காற்று… சாலையில் சென்றுகொண்டிருந்த தொழிலாளிக்கு நேர்ந்த பரிதாபம்

காரைக்குடியில் அடுக்குமாடி குடியிருப்பின் கண்ணாடி கீழே விழுந்த விபத்தில் கேஸ் சிலிண்டர் போடும் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறுகூடல்பட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவர், கேஸ் சிலிண்டர் போடும் தொழில் செய்து வந்திருக்கிறார். இன்று வழக்கம் போல் இருசக்கர வாகனத்தில் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு தந்தை பெரியார் நகர் பகுதிக்கு கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்யச் சென்றுள்ளார். அப்போது பலத்த காற்று வீசியதால், அப்பகுதியில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் மேற்புறம் பொருத்தப்பட்டிருந்த ஜன்னல் … Read more

கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு பறவைகள்.. பாதுகாப்பு அளிக்க கோரிக்கை

கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு பறவைகள்.. பாதுகாப்பு அளிக்க கோரிக்கை Source link

காதலை வளர்க்க தண்டவாளத்தில் அமர்ந்த ஜோடிகள்.. காவு வாங்கிய ரயில்.!

கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலம் அருகே சாந்தமங்கலம் எம்ஜிஆர் நகரில் வசித்து வரும் ஆரோக்கியதாஸ் என்பவருக்கு அலெக்ஸ் என்ற 21 வயது மகன் இருந்துள்ளார். ஐடிஐ படித்துள்ள இவர் செங்கல்பட்டு மறைமலை நகரில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அதே நிறுவனத்தில் பணி புரியும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜெர்சலின் (வயது 20) என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இருவரும் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து இரவு நேரத்தில் … Read more

புர்கா அணிந்து நடனமாடிய மாணவர்கள் சஸ்பெண்ட்!!

தனியார் கல்லூரி விழாவில் சினிமா பாடலுக்கு புர்கா அணிந்து நடனமாடிய நான்கு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே வமன்ஜூர் என்ற இடத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சங்க தொடக்க விழா கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் ஆடி, படி கலை நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர். அப்போது, திடீரென புர்கா அணிந்து கொண்டு மேடை ஏறிய நான்கு மாணவர்கள் பாலிவுட் பாடலுக்கு நடனமாடினர். கீழே உள்ள மாணவர்கள் ஆர்ர்பரித்தனர். இந்த வீடியோ … Read more

புதுச்சேரியில் கடல் சீற்றத்தால் வீடுகள் சேதம்: மறியலில் ஈடுபட்ட மக்கள் – நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் நேரில் உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியின் பிள்ளைச்சாவடியில் கடல் சீற்றத்தால் வீடுகள் சேதமடைந்ததால் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். பாதிப்பை நேரில் பார்வையிட்ட முதல்வர் ரங்கசாமி, ஆறுதல் தெரிவித்ததுடன், உரிய நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்தார். மாண்டஸ் புயல் சின்னம் காரணமாக கடல் சீற்றம் அதிகரித்துள்ள நிலையில், புதுச்சேரியின் பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. வீட்டில் மீதமிருந்த பொருட்களை தெருவில் எடுத்து வைத்திருந்தனர். அரசு தரப்பில் தூண்டில் வளைவு அமைக்காததால் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி மக்கள் ஈசிஆர் சாலையில் மறியலில் … Read more

மாண்டஸ் புயல்: இன்றிரவு எங்கெல்லாம் பவட் கட்… மின்சார வாரியம் சொல்வது இதுதான்!

வங்க்க் கடலில் சில தினங்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருவெடுத்துள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி, மாமல்லபுரத்துக்கு தென்கிழக்கே சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு 11:30 மணிக்கு, புதுச்சேரிக்கும், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கும் என்றும், அதிகாலை 2:30 மணி வரை புயல் கரையை கடக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன் … Read more

புயல் மற்றும் கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி: புயல் மற்றும் கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்று கள்ளக்குறிச்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல்: அடுத்து என்ன நடக்கும்? – தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மாண்டஸ் தீவிர புயல் என்ற நிலையிலிருந்து இன்று காலை வலுவிழந்தது. இதனால் தற்போது மாண்டஸ், வெறும் புயலாக சென்னைக்கு தெற்கு தென் கிழக்கே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு வடகிழக்கு திசையில் சுமார் 180 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடகிழக்கு திசையில் … Read more