படை வீரர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்து தருவது நம் கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி நாள் செய்தி
சென்னை: படை வீரர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்து தருவது நம் மகத்தான கடமை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள கொடி நாள் செய்தி: இல்லத்தை மறந்து, எல்லையோரத்தில் பல இன்னல்களை தாங்கி, நாட்டுப்பற்று என்கிற நம்பிக்கையை மட்டும் இதயத்தில் ஏந்தி, இந்திய ஒருமைப்பாட்டுக்காக தவம் இருக்கிற முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, நம் சேமிப்பின் ஒரு பகுதியை ஒப்படைக்கும் உன்னத திருநாள், இந்த கொடிநாள். பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, … Read more