பாமக தலைமையில் கூட்டணி..6 மாதத்தில் அறிவிப்பு..அன்புமணி அதிரடி.!

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அடுத்த பொம்மிடியில் பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் செந்திலின் இல்லத்திருமண விழாவில், பாமக தலைவர் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தா்ர். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, ‘‘தருமபுரி மாவட்ட மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் முதன்மை பிரச்சினையாக உள்ள, ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி, கடந்த ஏழு ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை வைத்து கொண்டு வருகிறோம். இத்திட்டத்தை நிறைவேற்ற கோரி 10 லட்சம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி, … Read more

நாகர்கோவிலில் அண்ணா பஸ் நிலைய சீரமைப்பு பணி தொடக்கம்: பயணிகள் இருக்கைகள் மாற்றி அமைப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் தற்போது  புதுப்பிப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே பயணிகளுக்கான கழிவறை கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் பிளாட்பார சீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளன. இதற்காக தரை தளத்ைத இடிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பயணிகளின் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அண்ணா பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யும் போது,  விரைவு போக்குவரத்து கழகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து குமரி … Read more

“உணவுக்கும் செயலுக்கும் தொடர்புண்டு; எல்லோரும் சைவம் மட்டும் சாப்பிடுங்கள்"- மதுரை ஆதினம்

“உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் மாறும்” என சமஸ்கிருத பாரதி தமிழ்நாடு தொடக்க விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள சின்மயா ஹெரிடேஜ் சென்டரில் இன்று நடைபெற்ற சமஸ்கிருத பாரதி தமிழ்நாடு தொடக்க விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி மற்றும் சட்டை அணிந்தபடி … Read more

புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை: நாராயணசாமி திட்டவட்டம்

புதுச்சேரி: தமிழகத்தில் மதசார்பற்ற கூட்டணிக்கு திமுக தான் தலைமை. ஆனால் புதுச்சேரியில் இந்த கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை. 10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் காங்கிரஸ் தலைமையில்தான் நடைபெற்றது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”குப்பை டெண்டரில் இமாலய ஊழல் நடந்துள்ளது என குற்றச்சாட்டு கூறியிருந்தேன். டெண்டர் எடுத்த பெங்களூரு ஒப்பந்ததாரருக்கு 2 ஆண்டு காலம் உள்ள நிலையில் அவசர அவசரமாக டெண்டர் விடுவதற்கு காரணம் … Read more

ரேஷன் கார்டுதாரர்கள் ஹேப்பி; தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு அவ்வப்போது பொதுமக்களுக்கு புதிய நிபந்தனைகள் விதித்து வரும் நிலையில் தற்போது வங்கி கணக்கு இல்லாத ரேஷன் அட்டைதாரர்கள் மத்திய கூட்டுறவு வங்கியில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில், தமிழகம் முழுவதும் சுமார் 15 லட்சம் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் வங்கி கணக்கு இல்லாமல் இருப்பதாகவும் அவர்கள் உடனடியாக அருகில் இருக்கும் கூட்டுறவு வங்கியில் வங்கி கணக்கு தொடங்க … Read more

தகுதித் தேர்வு முடித்த ஆசிரியர்களை பணி நியமனம் செய்க – ஓபிஎஸ் வலியுறுத்தல்

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண்-177-ல், “2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினைப் பெறாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் தேர்வுக்கான தகுதிச் சான்றிதழை ஆயுட்காலத் தகுதிச் சான்றிதழாக வழங்குவதற்குரிய சட்ட வழிவகைகள் குறித்து ஆராயப்படும்” என இரண்டு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இரண்டாவது வாக்குறுதியைப் பொறுத்தவரை, 2021 … Read more

திருவண்ணாமலை தீபத் திருவிழா: தயார் நிலையில் மகா தீபக் கொப்பரை

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய விழாவான மகாதீபம் நாளை மறுதினம்  மாலை 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் ஏற்றப்படுகிறது. மகாதீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் தீபக் கொப்பரை தயார் நிலையில் கோயில் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு கூடுதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடுப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி திருக்கார்த்திகை கொண்டாடப்படுகிறது. அந்ததினத்தில் பாபர் மசூதி இடிப்பு தினம் இருப்பதால், அதை முன்னிட்டு பழனி முருகன் கோயில் மலை மீதும், மலை … Read more

“திருமண நாளன்றும் உருவ கேலி செய்தனர்” : பிரபல நடிகை ஓபன் டாக்!!

திருமணம் நடைபெற்ற நாள் அன்றும் தன்னை சிலர் உருவ கேலி செய்ததாக நடிகை மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார். நடிகர் கார்த்தியின் மகனான, நடிகர் கௌதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனுக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. அவரது திருமணத்தில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். மஞ்சிமா மோகன் 2016இல் கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். தேவராட்டம் படத்தில் கௌதம் கார்த்தியும், மஞ்சிமா மோகனும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் … Read more

சிவகாசி மாநகராட்சியில் காலிப்பணியிடங்கள் : நிரப்பப்படுவது எப்போது? – மக்கள் எதிர்பார்ப்பு

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால் அலுவலர்கள் மன உளைச்சலுடன் பணியாற்றி வருகின்றனர். சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் இணைக்கப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது மாநகராட்சி ஆணையர் தவிர வேறெந்த புதிய அலுவலரும் நியமிக்கப்படவில்லை. திருத்தங்கல், சிவகாசி நகராட்சி அலுவலர்களே மாநகராட்சி பொறுப்புகளை கூடுதலாக கவனித்து வருகின்றனர். விருதுநகர் நகராட்சி பொறியாளருக்கு மாநகராட்சி நிர்வாக பொறியாளராக பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. … Read more