சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் சிக்கிய ரூ. 40 இலட்சம் ஹவாலா பணம் மற்றும் வைர நகை.!

இன்று போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடை எண் 1ல், சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை வந்தடைந்த ஷிவமொக்கா விரைவு ரெயிலில் இருந்து இறங்கிய பயணி ஒருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்து கொண்டார். இதை பார்த்த ரெயில்வே போலீசார் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது, பையிலிருந்து ரூ. 40 இலட்சம் ஹவாலா பணம் மற்றும் … Read more

புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு பரிமாற்றம் செய்ய அனுமதிப்பதற்கு எதிராக வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் விரிவாக்கத்துக்கு தேவைப்படும் புறம்போக்கு நிலத்துக்குப் பதில், பட்டா நிலங்களை அரசுக்கு பரிமாற்றம் செய்துகொள்ள அனுமதித்த அரசாணையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களது திட்டங்களை விரிவுபடுத்த, அரசு புறம்போக்கு நிலத்தைக் கொடுத்து, அதற்குப் பதிலுக்கு பட்டா நிலங்களை அரசுக்கு பரிமாற்றம் செய்து கொள்ள அனுமதித்து கடந்த மே மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை … Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பதற்கு எதிராக வழக்கு: நாளை ஒத்தி வைப்பு

மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் நாளை ஒத்தி வைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. நுகர்வோர்க்கு முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி, கடந்த அக்டோபர் 6 … Read more

தமிழக- கர்நாடக எல்லையில் ஈரோடு வனத்துறை, வேட்டை கும்பல் இடையே கடும் துப்பாக்கி சண்டை: ஒருவர் கைது

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் பர்கூர் அடுத்த சென்னம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட பாலாறு பீட், வாளாங்குழிப் பள்ளத்தில் துப்பாக்கியுடன் சிலர் நுழைந்துள்ளதாக சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனச்சரகர் ராஜா தலைமையில் வனக்காப்பாளர்கள்  மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் என 9 பேர் நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதிக்கு சென்றனர். அங்கு பதுங்கிய கும்பலை சரணடையும்படி வனத்துறையினர் எச்சரித்தனர். ஆனால், கும்பல் வனத்துறையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு வனத்துறையினர் பதிலடி கொடுத்ததால் பாறையின் பின்புறம் சென்று … Read more

3 ஆண்டுகளுக்கு பிறகும்… அயோத்தி புதிய மசூதிக்கு அனுமதி கிடைக்கவில்லை… பணிகள் தொடங்கவில்லை

3 ஆண்டுகளுக்கு பிறகும்… அயோத்தி புதிய மசூதிக்கு அனுமதி கிடைக்கவில்லை… பணிகள் தொடங்கவில்லை Source link

உயிரை பணயம் வைத்து செல்ஃபி.. கோவை கல்லூரி மாணவிகளின் அட்டூழியம்.! 

கோவையிலிருந்து அன்றாடம் மேட்டுப்பாளையத்திற்கு நிறைய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் மாணவ, மாணவிகள் அனைவரும் கோவையில் இருக்கும் கல்லூரிகளுக்கு வந்து செல்ல இந்த ரயில்களை தான் பயன்படுத்துகின்றனர்  அத்துடன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கல்லூரி மாணவிகள் சிலர் செய்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவையை நோக்கி ரயில் … Read more

ரூ.2 லட்சம் கட்டணம்; நட்சத்திர விடுதிக்கு நிகரான சொகுசு – முதல்வர் ஸ்டாலின் பயணிக்கும் ‘சலூன் கோச்’

சென்னை: தென்காசி சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் பயணம் செய்யும் சொகுசுகள் நிறைந்த ரயில் பெட்டி கவனம் ஈர்த்துள்ளது. தென்காசியில் நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தென்காசி மாவட்டம் உதயமான பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக பங்கேற்கும் அரசு விழா நடைபெறுகிறது. தென்காசியை அடுத்த இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (8-ம் தேதி) … Read more

ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகம் போல் செயல்படுகிறது – முத்தரசன் காட்டம்!

தமிழக ஆளுனரை திரும்பபெற வலியுறித்தி வரும் 29 ம்தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுனர் மாளிகையை முற்றுகையிட உள்ளதால், அது குறித்து தருமபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஜி 20 மாநாடு கொடியில் பாஜகவின் தேர்தல் சின்னம்… அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: ஜி 20 மாநாட்டை தலைமை தாங்கி நடத்த இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது இந்தியாவுக்கு … Read more

அரசு அலுவலகங்கள் மக்கள் எளிதில் செல்லும் வகையில் இருக்கவேண்டும்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் அரசு அலுவலகங்கள் இருக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த குணசீலன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘உடன்குடி பத்திரப் பதிவு அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கியது. இங்கிருந்து 4 கி.மீ தூரத்தில் தானமாக வழங்கப்பட்ட இடத்தில் நிரந்தர அலுவலகம் கட்ட முடிவு செய்துள்ளனர். உடன்குடி பேருந்து நிலையம் அருகே வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் சுமார் 3 ஏக்கருக்கு … Read more