திருமாவளவனுக்கு எதிரான ஆர்எஸ்எஸ் நிர்வாகி புகாரின் நிலை என்ன? – ஐகோர்ட்டில் சைபர் க்ரைம் போலீஸ் விளக்கம்

சென்னை: நாட்டில் ஒற்றுமையின்மையையும், கலவரத்தையும் தூண்டுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது ஆர்எஸ்எஸ் நிர்வாகி அளித்த புகார், மதுரை காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை சைபர் க்ரைம் போலீஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆர்எஸ்எஸ் சட்டப் பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான மதுரையை சேர்ந்த பி.ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த நவம்பர் மாதம் 6-ம் தேதி, மதுரையில், சிதம்பரம் தொகுதி எம்பியும், … Read more

டெல்லி பறக்கும் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்கெட்ச்!

முன்னாள் முதலமைச்சர் விரைவில் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் அதிகார மோதல் ஏற்பட்டு உள்ளது. கட்சியின் அதிகாரமிக்க பதவியான பொதுச் செயலாளர் பதவியை பிடிப்பதில், – எதிர்க்கட்சித் தலைவர் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி, சென்னை வானகரத்தில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை, நடத்தினார். அதில், 90 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம், அதிமுக இடைக்காலப் … Read more

கனமழை எச்சரிக்கை..8 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று இரவு (23:30 மணியளவில்) புயலாக (‘மான்டஸ்’) வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. இதனால் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், … Read more

மாண்டஸ் புயல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பெரம்பலூர்: புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாண்டஸ் புயல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நண்பரின் மகன் கொடுத்துவைத்த ஒரு கோடி ரூபாயை திருடி சென்ற மர்ம நபர்கள்! விவசாயி அதிர்ச்சி!

ஆத்தூர் அருகே விவசாயியின் வீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், கைவரிசைக் காட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சாமியார் கிணறு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி லோகநாதன் (45). இவரது குடும்ப நண்பரான கணேசன் மகன் கோபாலகிருஷ்ணன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றார். கோபாலகிருஷ்ணன் கடந்த மாதம் 19ஆம் தேதி லோகநாதனிடம் இரண்டு பைகளில் தலா ஒரு … Read more

8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!

மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில், அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று தற்போது புயலாக மாறியுள்ளது. மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ள இது, நாளை (டிச. 9-ம் தேதி) காலை வரை தீவிர புயலாக இருக்கும். அதன்பின் படிப்படியாக வலுப்பெறும். இந்தப் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 520 கிலோமீட்டர் தொலைவிலும், … Read more

வேளச்சேரி – மவுன்ட் பறக்கும் ரயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்துக: மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்

புதுடெல்லி: மிக நீண்ட காலமாகக் கிடப்பில் உள்ள வேளச்சேரி – புனித தோமையார் மலை (செயின்ட் தாமஸ் மவுன்ட்) இடையிலான பறக்கும் ரயில் (எம்.ஆர்.டி.எஸ்) பாதை விரிவாக்கத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்களவையில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தினார். இது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் பேசியது: ”சென்னை நகரில் சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து சேப்பாக்கம் வரை கடந்த 1995ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி பறக்கும் … Read more

mandous cyclone latest news:தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட் இதுதான்!

வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாவதும், இதன் விளைவாக தமிழகத்தின் கடலோர மற்றும் அதனையொட்டிய உள்மாவட்டங்களில் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்ப்பதுடன், புயலால் பலத்த சேதம் ஏற்படுவதும் வழக்கம். புயல் சின்னம் உருவாகும் காலத்தில் மாநில அரசும், மாவட்ட நிர்வாகங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக, வானிலை ஆய்வு மையம், அன்றாடம் வழக்கமாக தரும் வானிலை நிலவர அப்டேட்டுடன், அவ்வபோது கூடுதல் அப்டேட் அளிப்பதும் வழக்கம். வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, பள்ளி, … Read more

மாண்டஸ் புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை; தலைமைச் செயலாளரின் ஒருங்கிணைப்புக் கூட்டம்!

  இந்திய வானிலை ஆய்வு மையம்‌ வெளியிட்ட அறிவிக்கையில்‌, தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ தென்‌ கிழக்கு வங்கக்கடல்‌ பகுதியில்‌ நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது “மாண்டஸ்‌” புயலாக வலுவடைந்து தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார்‌ 550 கி.மீ. தொலைவில்‌ நிலைக்கொண்டுள்ளது என்றும்‌, இது மேற்கு வடமேற்கு திசையில்‌ நகர்ந்து புதுச்சேரி மற்றும்‌ ஸ்ரீஹரி கோட்டவிற்கு இடையே 09.12.2022 அன்று நள்ளிரவு கரையை கடக்கக்கூடும்‌ என்றும்‌ ‌தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 11-12-2022 வர தமிழ்நாட்டில்‌ பல்வேறு மாவட்டங்களில்‌ … Read more

பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவு

ஈரோடு: பவானிசாகர் அணையிலிருந்து, 2022-2023 ஆம் ஆண்டின் முதல் போக  நன்செய் பாசனத்திற்கு கீழ்பவானி திட்டப் பிரதானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாய் இரட்டைப்படை  மதகுகள் மூலமாக பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 12.08.2022 முதல் 09.12.2022 வரை 120 நாட்களுக்கு 23846.40 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஏற்கெனவே ஆணையிடப்பட்டு அதன்படி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்பொழுது பவானிசாகர் அணையிலிருந்து, கீழ்பவானி திட்டப் பிரதானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் … Read more