150 கோடி ட்விட்டர் கணக்குகள் விரைவில் நீக்கப்படும் – எலான் மஸ்க் அறிவிப்பு..!!

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இந்த நிலையில், பிரபல சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை கடந்த அக்டோபர் 27-ம் தேதி எலான் மஸ்க் தன் வசப்படுத்தினார். இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு, ட்விட்டர் பயனாளர்களின் புளு டிக்கிற்கு கட்டணம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து ட்விட்டரில் … Read more

கரையைக் கடந்தது மாண்டஸ் புயல் | இன்று மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 3 மணியளவில் முற்றிலுமாக கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தாலும் கடல் சீற்றத்துடனேயே காணப்படுகிறது. கிழக்குக் கடற்கரை சாலையில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் உள் மாவட்டங்களில் இன்னும் இரு தினங்களுக்கு மழை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.30 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு … Read more

மாண்டஸ் புயல்: 4 பேர் மின்சாரம் தாக்கி பலி – 400 மரங்கள் விழுந்தன!

மாண்டஸ் புயல் இன்று (டிசம்பர் 10) அதிகாலை 2.30 மணியளவில் கரையைக் கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இந்த சமயம் சென்னையை புரட்டி எடுத்துள்ளது. இதன் காரணமாக உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் 7ஆவது பிரதான சாலையில் வாகன நிறுத்துமிடத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலியாகினர். அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த லட்சுமி என்ற பெண்ணும் அவரது … Read more

வேலூர் அருகே அரசு பேருந்து மீது மரம் சாய்ந்து விழுந்த விபத்தில் பயணி ஒருவர் காயம்

வேலூர்: வேலூர் அருகே அரசு பேருந்து மீது மரம் சாய்ந்து விழுந்த விபத்தில் பயணி ஒருவர் காயம் அடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த வருவாய் மற்றும் காவல் துறையினர், மரத்தினை அகற்றி, காயமடைந்தவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

13 வகையான பழங்கள்… 750 கிலோ கேக்… கோலாகலமாக நடந்த கேக் மிக்ஸிங் திருவிழா

பொள்ளாச்சி தனியார் உணவகத்தில் 13 வகையான உலர் பழங்களைக் கொண்டு 750 கிலோ கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி நடைபெற்றது. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்காக 15 முதல் 20 நாட்களுக்கு முன்னதாகவே உலர் பழங்கள் மற்றும் பழச்சாறு கொண்டு கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், பொள்ளாச்சி உடுமலை சாலை ஊஞ்சவளம்பட்டியில் அமைந்துள்ள தனியார் உணவகத்தில் அத்திப்பழம், பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை, பேரிச்சை உள்ளிட்ட … Read more

திருவள்ளூரைப் புரட்டி போட்ட கனமழை..!! ஆவடியில் ஒரே இரவில் 170 மி.மீ மழை பதிவு..!!

மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 3:15 மணியளவில் கரையை கடந்ததிலிருந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் மிக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையின் அண்டை மாவட்டமான திருவள்ளூரில் அதி கன மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மட்டும் சராசரியாக 120 மி.மீ மழை பெய்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர் 130 மில்லிமீட்டர், செங்குன்றம் 120 மில்லிமீட்டர், பூந்தமல்லி 115 மில்லிமீட்டர், ஆவடி – 170 மில்லிமீட்டர், திருத்தணி – 162 மில்லிமீட்டர், கும்மிடிப்பூண்டி … Read more

சுயேச்சையாக போட்டியிட்டு இருக்கலாம்…பிரபல கட்சி மீது வேட்பாளர் குற்றச்சாட்டு

குஜராத் தேர்தலில் வெறும் 30 ஓட்டுகளை பெற்ற ஐக்கிய ஜனதா தள வேட்பாளர், கட்சித்தலைமை மீது குற்றம் சாட்டியுள்ளார். குஜராத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஆமதாபாத்தில் உள்ள பாபுநகர் தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் பதான் சித்கன் என்பவர் போட்டியிட்டார். எலக்ட்ரீசியனான இவர் வெறும் 30 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். மாநில சட்டசபை தேர்தலில் 1,621 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், அதில் குறைவான வாக்குகள் பெற்ற வேட்பாளர் இவர் தான். … Read more

ஆமைகள் நலனும், மாற்றுத்திறனாளிகள் கோரிக்கையும்: மெரினா சிறப்புப் பாதை சேதத்திற்கான காரணம் என்ன?

சென்னை: மாண்டஸ் புயல் சின்னம் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பாதை சேதம் அடைந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. சென்னையில் உள்ள கடற்கரைகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் மாற்றும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புப் பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி மெரினா கடற்கரையில் நம்ம சென்னை செல்பி பாயின்ட் பின்புறம் மணல் … Read more