பொங்கல் பரிசு இது தான்; வெளியானது சூப்பர் அறிவிப்பு!

விசைத்தறி வேட்டி சேலை உற்பத்தி மற்றும் கொள்முதல் முன்னேற்றம் குறித்து கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் திருச்செங்கோடு சரக பகுதிகளுக்கான ஆய்வுக் கூட்டம் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில், இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி பேசியதாவது: கைத்தறி மற்றும் … Read more

4 ஆண்டுகளில் 626 தமிழக மீனவர்கள் கைது!: வெளியுறவு இணை அமைச்சரின் பதில் அரசின் செயலின்மையையே காட்டுகிறது.. சு.வெங்கடேசன் எம்பி ட்வீட்..!!

மதுரை: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் எம்பி  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கடந்த 4 ஆண்டுகளில் 626 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 99 படகுகள் கைப்பற்றப்பட்டதில் 93 படகுகள் மீட்கப்படவில்லை, 21 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில். அமைச்சரின் பதில் அரசின் செயலின்மையையே காட்டுகிறது என தெரிவித்துள்ளார். சு. வெங்கடேசன் எம்.பி எழுப்பிய கேள்விக்கு வெளியுறவு இணை அமைச்சர் பதில்: நாடாளுமன்றத்தில் இலங்கை … Read more

"ராகவன கேட்காதவங்க என்னகிட்ட மட்டும் ஏன் பாரபட்சம்?" – திருச்சி சூர்யா சிவா பரபர பேச்சு!

திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா சிவா அண்மையில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்திருந்தார். அதன் பிறகு பாஜகவின் உறுப்பினரான டெய்சியுடனான தொலைபேசி உரையாடலில் அவரை ஆபாசமாக பேசியதாக திருச்சி சூர்யா சிவா மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் பறந்தன. இதன் காரணமாக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து சூர்யா சிவாவை இடைநீக்கம் செய்வதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார் அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை. இதனையடுத்து சூர்யா சிவா தான் பாஜகவில் இருந்து … Read more

அரசின் நடவடிக்கையால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.. முதல்வர் ஸ்டாலின்..!

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக மாண்டஸ் புயலால் பெரிய அளவில் பாதிப்புகள் இன்றி மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மாண்டஸ் புயலைத் தொடர்ந்து சென்னை, காசிமேடு பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.10) நேரில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, “தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக மாண்டஸ் புயலால் பெரிய அளவில் பாதிப்புகள் இன்றி மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியை கேட்போம். மீனவர்களும், … Read more

திமுகவில் சேர்க்க மறுப்பு: மீண்டும் பாஜகவுக்கு திரும்பும் முனைப்பில் சரவணன் – கட்சியினர் எதிர்ப்பு

மதுரை: திமுகவில் சேர்க்க மறுத்துவிட்டதால் மீண்டும் பாஜகவுக்கு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் மதுரை டாக்டர் சரவணன். இதற்கு அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவராக இருந்தவர் டாக்டர் சரவணன். இவர் பாஜகவுக்கு வருவதற்கு முன்பு திமுக, மதிமுக, பாஜகவுக்கு போய்விட்டு மீண்டும் திமுகவில் சேர்ந்து திருப்பரங்குன்றம் எம்எல்ஏவானார். அடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுகவில் சீட் கொடுக்காததால் மீண்டும் பாஜகவில் சேர்ந்து மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளரானார். தேர்தலில் தோற்றாலும் நகர் … Read more

சி.எம்., கான்வாயில் ஃபுட் போர்டு அடித்த மேயர் ப்ரியா!

சென்னை காசிமேட்டில் புயல் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தபோது உடன் சென்ற சென்னை மேயர் பிரியா முதல்வரின் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி பயணம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாண்டஸ் புயல் இன்று (டிசம்பர் 10) அதிகாலை 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. புயல் காரணமாக சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. புயல் கரையை கடந்த நேரத்தில் வீசிய பலத்த காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் … Read more

வேலூரில் உள்ள உத்திர காவிரி மற்றும் நாக நதியில் வெள்ளப்பெருக்கு

வேலூர்: மாண்டஸ் புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் வேலூர் மாவட்டத்தில் உள்ள உத்திர காவிரி மற்றும் நாக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தரைப்பாலம் மூழ்கியதால் தீர்த்தம் கிராமத்திற்கான பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.

பொது திருமண சட்டம் வேண்டும்.. மத்திய அரசுக்கு ஐகோர்ட் ஆலோசனை..!

திருமண பிரச்சினையில் தம்பதியின் நலனை மேம்படுத்த இந்தியாவில் பொதுவான திருமண சட்டத்தை கொண்டு வருவது கருத்தில் கொள்ளும்படி மத்திய அரசுக்கு கேரள ஐகோர்ட் ஆலோசனை வழங்கியுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது ஆணும், 28 வயது பெண்ணும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இருவருக்கும் இடையே திருமணமான சில மாதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, கணவன் – மனைவி இருவரும் விவாரத்து செய்துகொள்ள முடிவெடுத்து, கடந்த மே மாதம் … Read more

சாய்ந்த மரங்கள், மூடப்பட்ட சுற்றுலா தலங்கள்… – புதுச்சேரியில் மாண்டஸ் புயல் பாதிப்புகள்

புதுச்சேரி: புதுச்சேரியில் மாண்டஸ் புயல் காரணமாக பலத்தக் காற்றுடன் பரவலாக மழை பெய்த நிலையில், இரண்டு நாட்களில் பல்வேறு இடங்களில் 22 மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. 2 இடங்களில் மின் கம்பங்களும் சேதமடைந்தன. சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதையொட்டி புதுச்சேரி முழுவதும் வெள்ளிக்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது. கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மிகுந்த குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் … Read more