கனமழை எதிரொலி: குற்றால மெயின் அருவியில் குளிக்க மீண்டும் தடை.. சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்..!!

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளில் ஒன்றான மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவும் அருவியில் உள்ள குற்றாலப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் அபாய வளைவை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து வழிவதால் பொதுமக்கள் குளிக்க … Read more

சென்னை அருகே சோகம்.! மகன் பிறந்த நாளில் தந்தை வெட்டி கொலை.! 5 பேர் கைது.!

சென்னையில் மகன் பிறந்த நாளில் தந்தை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி(37). இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள அல்லிக்குளம் வணிக வளாக பகுதியில் இரும்பு கடை ஒன்று நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் முனுசாமி அதே பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பெரியமேடு போலீசார், … Read more

பிரதமர் தலைமையில் ஆலோசனை.. டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்..!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஜி-20 ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. மத்திய அரசு 32 பிரிவுகளில் நாடு முழுவதும் சுமார் 200 கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. எல்லா மாநிலங்களிலும் இந்த கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. தமிழகத்தில், … Read more

அநீதிகள் அகற்றப்படும் வரை ஐஐடிகளில் சமூக நீதியை வளர்க்க முடியாது: ராமதாஸ் காட்டம்

சென்னை: ஐஐடிகளில் பணி நியமனங்களை கண்காணிக்க பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான ஐஐடியின் பேராசிரியர்கள் பணி நியமனத்தில் ஒட்டுமொத்தமாகவே 14 விழுக்காட்டுக்கும் குறைவாகவே இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்திருக்கிறது. பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் சமூக நீதிக்கான குரல்கள் நாடு … Read more

நாற்பதையும் தட்டி தூக்குவோம்: சூளுரைத்த எடப்பாடி ஆதரவாளர்கள்!

ஜெயலலிதா நினைவிடத்தில் ஆதரவாளர்கள், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் தனித்தனியே அஞ்சலி செலுத்தினர். மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் அதிமுக பொதுச் செயலலாளருமான ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் அதிமுகவினர் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் அஞ்சலி செலுத்திய நிலையில் ஓ.பன்னீர் செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் அஞ்சலி செலுத்தினர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி … Read more

திரு. A.N. இராதாகிருஷ்ணன் இயற்கை எய்தினார்!

மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் (MAHER) வேந்தர் மற்றும் ஸ்ரீ முத்துக்குமரன் கல்வி அறக்கட்டளையின் தலைவருமான திரு. A.N. இராதாகிருஷ்ணன் இன்று சென்னையில் காலை 7 மணி அளவில் இயற்கை எய்தினார்.  தொலைநோக்கு பார்வை கொண்ட நாடு போற்றும் கல்வியாளரும், வாரி வழங்கும் கொடை வள்ளலும், பரிவு உள்ளம் உடைய மனித நேயரும், தலைசிறந்த நிர்வாகியும், மனிதப் புனிதருமாகிய தாங்கள் விட்டுச் சென்ற சீரிய பணிகள் என்றென்றும் தொடரும். அன்னாரது இறுதி … Read more

நெல்லை அருகே நண்பர் தற்கொலை செய்த நிலையில் அவரது நண்பர் மாரடைப்பால் உயிரிழப்பு

நெல்லை: செட்டிகுளத்தில் தினேஷ்குமார் தற்கொலை செய்த நிலையில் அவரது நண்பர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அதையறிந்த நண்பர் வெங்கடேஷ் என்பவர் மாரடைப்பால் இறந்துள்ளார்.

திருவள்ளூர்: போட்டி போட்டு முந்திச் சென்ற வாகனங்கள்: பரிதாபமாக 3 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே லாரியும் ஆம்னி பேருந்தும் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து 30 பயணிகளுடன் ஆம்னி பேருந்து சென்னை நோக்கி சென்றது. அதேபோல, ஆந்திராவில் இருந்து லாரி ஒன்றும் சென்னை நோக்கி சென்றது. அப்போது திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த தச்சூர் பகுதியில் சென்னை – கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் இரு வாகனங்களும் ஒன்றையொன்று போட்டி போட்டுக் கொண்டு முந்திச் சென்ற நிலையில், லாரி மீது ஆம்னி … Read more