செங்கம் அருகே அதிகாலை கோர விபத்து அரசு பஸ் மீது 2 லாரிகள் மோதி 3 பேர் நசுங்கி பலி: 30 பேர் படுகாயம்

செங்கம்: கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 50 பேர் பயணித்தனர். பண்ருட்டியை சேர்ந்த டிரைவர் மணிவாசகம் (50) ஓட்டிச்சென்றார். கடலூரை சேர்ந்த இளவரசன்(40) கண்டக்டராக இருந்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் அருகே நேற்று அதிகாலை 2 மணியளவில் பஸ் சென்ற போது, சென்னையில் இருந்து நாமக்கலுக்கு கோழி தீவனம் ஏற்றிச் சென்ற லாரியை முந்திச் செல்ல டிரைவர் முயன்றார். அப்போது, … Read more

TET தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் கோரிக்கை குறித்து முதல்வர் மவுனம் காக்கிறார்: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: ‘விடியலை நோக்கி’ என்ற திமுகவின் பிரச்சாரத்தை நம்பி ஆசிரியர்கள் திமுகவிற்கு வாக்களித்தனர். திமுக ஆட்சிப் பொறுப்பெற்று 19 மாதங்கள் கடந்தும் விடியலுக்காக காத்துக் கொண்டிருக்கக்கூடிய அவல நிலைக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவின் தேர்தல் அறிக்கை எண்-177-ல், “2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி … Read more

கிராம உதவியாளர் பணிக்கான வினாத்தாள் வலைத்தளத்தில் ‘லீக்’: மாற்று வினாத்தாள் மூலம் தேர்வு

மதுரை: கிராம உதவியாளர் பணியிடத்திற்கான வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியானதால், மாற்று வினாத்தாள் மூலம் தேர்வு நடத்தப்பட்டது.  மதுரை மாவட்டத்தில் உள்ள 11  தாலுகாக்களிலும் காலியாக உள்ள 209 கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு மாவட்டத்தில் 22 மையங்களில் நேற்று நடந்தது. இத்தேர்வு எழுத 13,958 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வை 11,265 பேர் எழுதினர். இவர்கள், கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக இருப்பதால், தமிழ், ஆங்கிலத்தில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். இதற்காக கேள்வியை கொடுத்து, … Read more

குஜராத் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: செல்வாக்கு செலுத்தும் பால் கூட்டுறவு சங்கங்கள்… வளைக்கும் பா.ஜ.க

குஜராத் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: செல்வாக்கு செலுத்தும் பால் கூட்டுறவு சங்கங்கள்… வளைக்கும் பா.ஜ.க Source link

மின்சாரம் முதல் சுகாதாரம் வரை: சென்னையில் வாழ்க்கை வசதிகள் தொடர்பாக பொதுமக்கள் மதிப்பெண் அளிக்கலாம்

சென்னை: சென்னையில் பல்வேறு வாழ்க்கை வசதிகள் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் மதிப்பெண்களை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்திய நகரங்களின் வாழ்க்கை வசதிக் குறியீட்டை (Ease of Living Index) மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. இதில் பொதுமக்களின் கருத்துகளுக்கு 30 சதவீத மதிப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை தொடர்பாக பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது, https://eol2022.org/CitizenFeedback%2c என்ற இணையதளத்தில் சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் கருத்துகளை … Read more

ராணிப்பேட்டையில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் கால்நடைகளை பிடிக்க கோரிக்கை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் சிப்காட் சாலை, எல்எப்சி பெண்கள் பள்ளி சாலை, வாலாஜா, அம்மூர் ரோடு பழைய, புதிய பஸ்நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, பஜார்  நவல்பூர் காரை கூட்ரோடு உள்ளிட்ட பிரதான சாலைகளில் கால்நடைகள் இரவு, பகலாக சுற்றித்திரிகிறது. இதனால் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் தினமும் வாகன ஓட்டிகள் தொழிலாளர்கள், பெண்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். கால்நடைகளால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், காவல்துறை, நகராட்சி … Read more

ஜல்லிக்கட்டு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் என்ன உள்ளது?

அனைத்து விதிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு மற்றும் கம்பாலா உள்ளிட்ட போட்டிகளை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகள் கொண்டு வந்த சட்டங்களை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசனம் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கின் விசாரணையின்போது, ஜல்லிக்கட்டு நடைபெறும் முறை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் கோரியதை அடுத்து … Read more

கள்ளக்காதலை கைவிட்ட தாய்..  மகள் கண்முன்னே அரங்கேரிய கொடூரம்.. காப்பாற்ற சென்று உயிரைவிட்ட சிறுமி.! 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் அருகே வீரானந்தல் என்ற கிராமத்தில் 37 வயதான பரிமளா என்பவருக்கு 20 வயதில் ரோகினி என்ற பெண்ணும், 17 வயதில் ராஜேஸ்வரி என்ற பெண்ணும் இருக்கின்றனர். மேலும், 15 வயதில் லோகேஷ் என்ற மகன் இருந்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன் பரிமளாவுடைய கணவர் இறந்துவிட்டார். அதன் பின் பரிமளாவிற்கு காமராஜ் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. பரிமளாவின் பழக்கம் குறித்து குழந்தைகளுக்கு தெரிய வந்ததும் அவர்கள் கண்டித்துள்ளனர். ஆனால், பரிமளா அதைக் … Read more

டிச.6 – பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழக முழுவதும் 1.20 லட்சம் போலீஸார் பாதுகாப்பு

சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாபர் மசூதி இடிப்பு தினமானடிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளைதீவிரப்படுத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் … Read more

ஓடும் காரில் தீ; 3 பேர் தப்பினர்

போச்சம்பள்ளி: தர்மபுரி கோட்டை தெருவை சேர்ந்தவர் கணேசன். இவர் தனது உறவினர்களான அண்ணப்பூரணி, மலர் ஆகியோருடன் கிருஷ்ணகிரி மாவட்டம் கள்ளிப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் வந்தார். பின்னர் அகரத்தில் உள்ள ஜோசியரிடம் ஜாதகம் பார்த்து விட்டு 3 பேரும் தர்மபுரி நோக்கி நேற்றிரவு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது தட்ரஅள்ளி கூட்ரோடு பகுதியில் கார் சென்றபோது திடீரென முன்பகுதியில் புகை வந்துள்ளது. இதனால் காரை நிறுத்தி விட்டு 3 பேரும் கீழே இறங்கினர். சிறிது நேரத்திலேயே காரில் … Read more