ஆத்தீ ரூ.50 லட்சமாம்… வெள்ளலூர் சம்பவம்… ஒரு மாசம் டைம்… வார்னிங் கொடுத்த கோவை மேயர்!

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. இங்கு குவியும் குப்பைகளால் நீர், காசு மாசுபாடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்த சூழலில் மற்றொரு பெரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுபற்றி தகவலறிந்து நேரில் வந்த கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் கொந்தளித்து விட்டார். அடுத்த ஒன்றாம் தேதிக்குள் எல்லாம் மாறிவிட வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் … Read more

 திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் பக்தர்கள் வெள்ளத்தில் மகா ரதம் பவனி: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் ‘மகாரதம்’ மாட வீதியில் பவனி வந்தது. நள்ளிரவு வரை வலம் வந்த பஞ்ச ரதங்களை, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 7ம் நாளான நேற்று, தேர் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் நேற்று அதிகாலை அலங்கார ரூபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். அப்போது, சங்கொலி, மேளதாளம் முழங்க தீபாராதனை நடைபெற்றது. … Read more

கூகுள் மேப்பை நம்பிய லாரி டிரைவருக்கு ஏற்பட்ட கதி.. கடலூரில் பதற்றம்.! 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முருகன் கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலைக்கு நேற்று பெங்களூரில் இருந்து மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு திருக்கோவிலூர் வழியே கடலூருக்கு வந்துள்ளார்.  அப்போது குறுக்கு வழியில் செல்ல கூகுள் மேப் ஒரு வழிகாட்டியுள்ளது. அதன்படி, லாரி ஓட்டுனரும் வந்து கொண்டிருந்தார். கடலூர் நகரில் இருக்கும் முதுநகர் இம்பீரியல் சாலை வழியே திருப்பாப்புலியூர் ரயில்வே சுரங்கப்பாதை ஒன்று இருப்பதை கண்டு அதை பின்பற்றி சென்றுள்ளார்.  ஆனால், … Read more

உலக மண் தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்..!!

உலக மண் தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகத்தின் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் டிசம்பர் 5-ம் தேதி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (டிச.5) நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் வருகின்ற 5-ம் … Read more

வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த 48 மணி … Read more

கொரோனாவுக்கு பலியான அரசு மருத்துவரின் மனைவிக்கு வேலை: உயர் நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா காலகட்டத்தில் திருவள்ளூர் மாவட்டம் அம்மையார் குப்பத்தை சேர்ந்த மருத்துவர் ஏ.கே.விவேகானந்தன், பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, கொரோனா தொற்று பாதித்து கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் கொரோனாவுக்கு பலியான முன்களப் பணியாளர்களுக்கு 25 லட்ச ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை என்றும், இரு குழந்தைகளுடன் வருமானத்துக்கு வழியின்றி தவித்து வருவதால், பொறியியல் பட்டதாரியான தனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரி … Read more

ராக்கெட் லாஞ்சர் கண்டெடுப்பு – திருவள்ளூரில் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே மாளந்தூர் கிராமத்தில் நேற்று 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது நிலத்தை தோண்டியபோது சுமார் ஒன்றரை அடி நீளம் கொண்ட பழங்கால ராக்கெட் லாஞ்சர் குண்டு ஒன்றை கண்டெடுத்தனர். இதுகுறித்து பெரியபாளையம் காவல் நிலைய காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.  மேலும், திருவள்ளூரில் … Read more

ஐகோர்ட் மதுரை கிளையில் டிச.5 முதல் விசாரணை நீதிபதிகள் மாற்றம்

மதுரை: ஐகோர்ட் மதுரை கிளையில் டிச.5ம் தேதி முதல் விசாரணை நீதிபதிகள் மாற்றம் செய்யப்பட உள்ளனர். ஐகோர்ட் மதுரை கிளையில் 3 மாதத்திற்கு ஒரு முறை விசாரணை நீதிபதிகள் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். இதன்படி, வரும் 5ம் தேதி முதல் விசாரணை நீதிபதிகள் மாற்றப்பட உள்ளனர். நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர் பொது நல வழக்குகள், 2022ம் ஆண்டு முதலாக ரிட் அப்பீல் மனுக்கள், குற்றவியல் அவமதிப்பு மனுக்களை விசாரிப்பர். நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வில், ஆட்கொணர்வு … Read more

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுப் புகார் – ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் தகுதி இல்லாத நபர்களுக்கு வீடு ஒதுக்கிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. முறைகேடு கண்டறியப்பட்டது எங்கு? உயர்நீதிமன்ற உத்தரவின் பின்னணி என்ன? இதுகுறித்து பார்க்கலாம்…. அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் வெண்மான் கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் சேக்ஸ்பியர். 15 வருடங்களாக சிங்கபூரில் டெக்னீசியன் வேலை பார்க்கும் இவர், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தபோது, வீடு கட்டும் திட்டத்தில் தங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படவில்லை என மக்கள் பலர் கூறியுள்ளனர். இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு ஆர்‌.டி.ஐ மூலம் அனுமதி பெற்று பஞ்சாயத்து கணக்குகளை ஆய்வு செய்தார் சேக்ஸ்பியர். இதில் … Read more

‘பாபா’ திரைப்படத்தின் புதிய டிரைலர் பார்த்திருக்கீங்களா..!!

கடந்த 2002-ல், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி தயாரித்து நடித்த படம் பாபா. இந்த படத்தில் நாயகியாக மனிஷா கொய்ரலா நடித்திருப்பார். சுரேஷ் கிருஷ்ணா டைரக்டு செய்து இருந்தார். இந்த படத்தில் ரஜினி காட்டும் பாபா முத்திரை அவரின் தனி அடையாளமாகவே மாறியது. தற்போது பாபா படத்தை நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புதுப்பித்து மீண்டும் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன. புதிதாக எடிட்டிங் மற்றும் கலர் கிரேடிங் செய்துள்ளனர். அதோடு பாபா படத்துக்கு … Read more