தென்காசி : குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.!

குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.      குற்றாலம் மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் கொட்டியது. மேலும் ஐந்தருவியில் அனைத்து கிளைகளும் ஒன்றாக தோன்றியபடி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் நீர் வரத்து … Read more

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: அந்தமான் அருகே இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால், தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும்அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (டிச. 5) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் … Read more

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்கு நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை மக்கள் முற்றுகை: ஏமாற்றத்துடன் திரும்பினர்

சேத்தியாத்தோப்பு: என்எல்சிக்காக நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள்  போராட்டம் நடத்தினர். இதனால் அளவீடு செய்ய முடியாமல் அவர்கள் திரும்பி சென்றனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிர்வாகம், அனல் மின் நிலையம் சுரங்கம் 2 விரிவாக்க பணிக்காக கத்தாழை, கரிவெட்டி மும்முடிசோழகன், மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி நேற்று என்எல்சி அதிகாரிகள் … Read more

கோவைக்கு துரோகம் செய்யும் அரசு: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

கோவை: சாலைகள் அமைக்கும் விவகாரத்தில் கோவை மாநகராட்சிக்கு மிகப்பெரிய துரோகத்தை தமிழக அரசு செய்து கொண்டிருப்பதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்தார். கோவை ராமநாதபுரம் 80 அடி சாலையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை தொடங்கி வைத்த பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை மாநகரில் பிரதான சாலைகள் உட்பட அனைத்து சாலைகளும் மோசமான நிலையில் உள்ளன. இதை கண்டித்து மாவட்ட பாஜக சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சாலைகள் அமைக்கும் … Read more

விபத்தில் மூளைச்சாவு வாலிபர் உறுப்புகள் தானம்

சேலம்: சேலம் மாவட்டம், மல்லூரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணிகண்டன் (26). பி.காம்., பட்டதாரி. சேலம் சேகோ சர்வில் வேலை செய்து வந்தார். கடந்த 30ம் தேதி இரவு பணி முடிந்து, வீட்டுக்கு டூவீலரில் சென்றபோது, பின்னால் வந்த டேங்கர் லாரி மோதி தலையில் பலத்த காயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உறுப்புகளை தானம் செய்ய தந்தை முருகன் மற்றும் உறவினர்கள் … Read more

கார்த்திகை தீபத் திருவிழா| திருவண்ணாமலையில் பக்தர்களின் வெள்ளத்தில் மகா தேரோட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பக்தர்களின் வெள்ளத்தில் மகா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நவ.24-ம் தேதி இரவு தொடங்கியது. பின்னர், அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக்கொடிமரத்தில் நவ.27-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர், பஞ்ச மூர்த்திகளின் 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. வெள்ளி வாகனம் உட்பட பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகளின் மாட வீதியுலா … Read more

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் நாளை ஏற்றப்படுகிறது: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நாளை மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலைாயார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வெகு விமரிசையாக நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான மகா தீப பெருவிழா நாளை நடைபெறுகிறது. அதையொட்டி, நாளை அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர … Read more

2 மாத போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி; அறநெறி போலீஸ் குழுவை அகற்றிய ஈரான்

2 மாத போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி; அறநெறி போலீஸ் குழுவை அகற்றிய ஈரான் Source link

மதரஸா பள்ளியில் சிறுவர்கள் மீது தாக்குதல்: தமிழகம், பிஹார் அரசு அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

சென்னை: மதரஸா பள்ளியில் சிறுவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழகம், பிஹார் தலைமைச் செயலர்கள் விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் செயல்படும் மதரஸா பள்ளியில் படித்து வரும் சிறுவர்களை, பள்ளி நிர்வாகிகள் சிலர் அடித்து துன்புறுத்துவதாக, சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழுமத்துக்கு சமீபத்தில் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, பள்ளி நிர்வாகிகள் அப்துல், அக்தர், அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் … Read more

வங்கக் கடலில் 8ம் தேதி உருவாகிறது மாண்டஸ் புயல்: தமிழகத்தில் மழை கொட்டும்

சென்னை: வடகிழக்கு பருவமழை தற்போது குறைந்துள்ள நிலையில் 8ம் தேதி வங்கக் கடலில் புயல் (மாண்டஸ்) உருவாகும், அதன் காரணமாக  தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என்றும், அந்த புயல் வலுவிழந்த நிலையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தரைப்பகுதியில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மன்னார்  வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதியில் நீடிக்கும் மெல்லிய காற்று … Read more