திருச்செந்தூரில் தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான நிலங்களை மீட்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை: திருச்செந்தூரில் ஆக்கிரமிப்பில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலத்தை 12 வாரத்தில் மீட்க வேண்டும் என அறநிலையத் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த மார்கண்டன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஆதீன நிலத்தை மீட்கவும், அந்த சொத்தை பாதுகாக்கவும் … Read more

கவர்னர் மாளிகை முன் 29ம் தேதி முற்றுகை: முத்தரசன் பேட்டி

தர்மபுரி: தர்மபுரியில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு வந்த, மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், முன்னாள் ஜனாதிபதி வெங்கையா நாயுடு, எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. இதனை நான் ஏற்கமாட்டேன் என தெரிவித்துள்ளார். ஆனால், அமித்ஷா போன்றோர் இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். காசியில் நடக்கும் தமிழ் சங்க விழாவில், தமிழுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தமிழை புகழ்ந்து பேசிய மோடியை வரவேற்கிறேன். ஆனால் கடந்த பாஜ … Read more

18 வயதிற்குள்.. பாலுறவு.? டிஜிபி முக்கிய அறிவுறுத்தல்.! 

18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு எதிரான சட்டம் தான் போக்ஸோ. இந்த சட்டமானது 18 வயதிற்கு கீழ் இருப்பவர்களை திருமணம் செய்பவர்களை கைது செய்யவும் பயன்படுத்தப்பட்டது.  அத்துடன் டீன் வயதில் காதலித்து விருப்பத்துடன் பாலியல் உறவில் ஈடுபட்டிருந்தாலும் கூட ஆணுக்கு எதிராக இந்த போக்சோ சட்டம் பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில், 18 வயதிற்கு கீழ் இருப்பவர்கள் சம்மதத்துடன் உறவில் ஈடுபட்டால் அவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு கூடாது என … Read more

“மதுரையின் ஓர் அடையாளமாகவே மாறியவர் ஓவியர் மனோகர் தேவதாஸ்” – முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை: பிரபல ஓவியரும், எழுத்தாளருமான ‘பத்மஸ்ரீ’ மனோகர் தேவதாஸ் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பிரபல ஓவியரும் எழுத்தாளருமான ‘பத்மஸ்ரீ’ மனோகர் தேவதாஸ் (86) விழித்திரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இயற்கை எய்தினார் என்று அறிந்து மிகவும் துயருற்றேன். மரபுக் கட்டடங்களை ஓவியமாக வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர் மனோகர் தேவதாஸ். தமது முப்பது வயதிலேயே ரெட்டினிஸ் பிக்மென்டோசா நோயால் பாதிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வைத் … Read more

மெகா வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 11 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை: அமைச்சர் சி.வெ.கணேசன் தகவல்

மதுரை: தமிழ்நாட்டில் 68 இடங்களில் மெகா வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தியதன் மூலம், ஒரு லட்சத்து 11 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக தொழிலாளர் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்தார். மதுரையில் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை மற்றும் மருந்தகம் (இஎஸ்ஐ) பழங்காநத்தம், மணி நகரத்தில் உள்ளது. இவற்றில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கை கழுவும் இடம் மோசமாக இருந்தது. அதை அவரே சுத்தப்படுத்தினார். பின்னர் அவர் … Read more

ரெப்போ வட்டி உயர்வு.. வீடு, தனிநபர், கார் கடன் இ.எம்.ஐ எவ்வளவு அதிகரிக்கும்?

ரெப்போ வட்டி உயர்வு.. வீடு, தனிநபர், கார் கடன் இ.எம்.ஐ எவ்வளவு அதிகரிக்கும்? Source link

மக்கள் எளிதாக வந்து செல்லும் இடங்களில் அரசு அலுவலகங்கள் கட்டப்பட வேண்டும்: உயர் நீதிமன்றம் கருத்து

மதுரை: பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் இடங்களில் அரசு அலுவலக கட்டிடங்கள் கட்ட வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த குணசீலன், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: உடன்குடியிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் அனல் மின் நிலையம் அருகே புகழேந்தி என்பவர் வீட்டடி மனைகளை விற்பனை செய்து வருகிறார். அங்கு எதிர்பார்த்த அளவுக்கு வீட்டடி மனை விற்கவில்லை. இதனால் புகழேந்தி அந்த இடத்தில் தனது மனைவியின் … Read more

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது: அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்

நாமக்கல்: தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படாது என நாமக்கல்லில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், நேற்று நாமக்கல்லில் கூறுகையில், தமிழகத்தில் புதிதாக 1000 பஸ்கள் வாங்க, ₹420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, டெண்டர் நடைமுறையில் உள்ளது. பிற மாநிலங்களில் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டாலும் கூட, தமிழகத்தில் உயர்த்தக் கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதே சமயம், நஷ்டத்தில் இருந்து போக்குவரத்துக் கழகங்களை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக … Read more