திருவள்ளூர் : பேக்கரியில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்.!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, பெரியபாளையத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார். இவர் பெரியபாளையம் பேருந்து நிலையத்திற்கு எதிரே பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார்.  தற்போது, புயல் காரணமாக இந்தப் பகுதியில் அதிக மழை பெய்து வருவதால் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இந்நிலையில், இன்று விடியற்காலை இந்தப் பேக்கரியில் இருந்து கரும்புகை வெளிஏறுவதைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.  இந்த தகவலின் பேரில் போலீசார் … Read more

பிளாட்ஃபாரத்தில் சிக்கிய மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..!

விசாகப்பட்டினத்தில், ரயில் பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்திற்கும் நடுவே சிக்கி, மீட்கப்பட்ட கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், அன்னவரம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா (20). இவர், விசாகப்பட்டினம் அருகே உள்ள துவ்வாடா எனும் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக, தினமும் தனது ஊரில் இருந்து ரயில் மூலம் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த 7-ம் தேதி இவர் வழக்கம்போல் குண்டூர் … Read more

திமுக அரசுக்கு எதிராக பேரூராட்சிகளில் இன்று நடக்கவிருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் டிச.16-க்கு தள்ளிவைப்பு

சென்னை: திமுக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக 17 மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகள் அளவிலான ஆர்ப்பாட்டங்கள் வரும் 16-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக அரசின் 18 மாத ஆட்சியில், சொத்து வரி, மின் கட்டண உயர்வை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் 9-ம் தேதி பேரூராட்சிகளில் … Read more

வலுவிழக்கும் மாண்டஸ் புயல்: எதிர்பார்த்தது தான் – தமிழ்நாடு வெதர்மென் புதிய அப்டேட்!

மாண்டஸ் தீவிர புயல் கடந்த ஆறு மணி நேரமாக வலுவிழந்து வருகிறது. சென்னையில் மட்டும் இரவு முழுவதும் கனமழை பெய்துள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில், “மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் சென்னையில் மட்டும் பரவலாக கனமழை பதிவாகியுள்ளது. புயல் கரையை நெருங்கும் சமயம் மாலை முதல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பலத்த காற்றுடன் பெய்யத் தொடங்கும். அதுவரை சில இடங்களில் மழை … Read more

மதுரையில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினார்..!!

மதுரை: மதுரையில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்து பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். மதுரையில் 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு மதுரை வந்திருந்தார். தற்போது தூய்மை பணியாளர்களுக்கான மேம்பாட்டு திட்டத்தை மதுரை மாநகராட்சியில் உள்ள வளாகத்தில் தொடங்கி வைத்துள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் சார்பாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் இருக்கின்ற மண்டலம் 6, மதுரை மாநகராட்சியில் இருக்கின்ற மண்டலம் 3, பொள்ளாச்சி, … Read more

சில வார்த்தைகள், பல வாக்குகள் – மீண்டும் சாதனை வெற்றி பெற்ற குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்

சில வார்த்தைகள், பல வாக்குகள் – மீண்டும் சாதனை வெற்றி பெற்ற குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் Source link

கடலில் சிக்கி தவித்த 3 நபர்களை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்ட கடலோர காவல்படை.!!

வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலின் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடலுக்கு சென்ற தமிழக மீனவர்கள் உடனடியாக கரைத்திரும்புமாறு நேற்று தமிழக கடலோர காவல்துறை மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வங்க கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கரை திரும்பினார்.  இந்த நிலையில் கடலூரில் இருந்து 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் மாண்டஸ் புயலின் பாதையில் உள்ள கச்சா எண்ணெய் எடுக்கும் கிணற்றில் கடலில் சிக்கித் தவித்த 3 நபர்களை … Read more

மாமல்லபுரத்தை நோக்கி நகரும் புயல் – தயார் நிலையில் மீட்பு படை..

‘மாண்டஸ்’ புயல் தாக்கும் அச்சம் உள்ள மாமல்லபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். மாண்டஸ் புயல் காரணமாக இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ்’ புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது … Read more

மாண்டஸ் புயலால் கனமழை | செம்பரம்பாக்கம், புழல், பூண்டி நீர்த்தேக்கங்களில் உபரி நீர் திறக்கப்படுகிறது

திருவள்ளூர்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி நீர்த்தேக்கங்களில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது தென்மேற்கு மற்றும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 7-ம் தேதி இரவு ‘மேன்டூஸ்’ புயலாக வலுப்பெற்றது. இது தற்போது தீவிரப் புயலாக முன்னேறி வருகிறது. இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் இது புயலாக வலுவிழந்து கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் … Read more