ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் என உறுதியெடுப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அம்பேத்கரின் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர்; சமத்துவத்தை நோக்கிய போராட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார்; புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம்!” இவ்வாறு … Read more

மாண்டஸ் புயல்: ரெட் அலர்ட், லீவு, புஸ்ஸாகும் வாய்ப்பு… வெதர்மேன் போட்ட கலகல அப்டேட்!

எப்படா மழை வரும்? என்று தமிழக மக்கள் கண்கொத்தி பாம்பாக கவனிக்க வேண்டிய சூழல் வந்திருக்கிறது. ஏனெனில் இது வடகிழக்கு பருவமழை காலம். ஆனால் கடந்த 3 வாரங்களுக்கு மேல் மழையில்லை. என்ன இதெல்லாம்? என்று நடிகர் வடிவேலு காமெடி போல கேட்க தோன்றுகிறது. இந்நிலையில் இதோ வந்துட்டான்யா… வந்துட்டான்யா… என்று சொல்வது போல சூப்பர் அப்டேட் வந்திருக்கிறது. புதிய புயல் உருவாகிறது கடந்த இரண்டு முறையை போல் வெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி மட்டுமல்ல. இந்த … Read more

பண்ருட்டி அருகே பரபரப்பு உரிய நேரத்தில் தகவல் கொடுத்ததால் ரயில் விபத்து தவிர்ப்பு-பெண்ணுக்கு போலீசார் பாராட்டு

பண்ருட்டி : பண்ருட்டி அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்து உரிய நேரத்தில் தகவல் கொடுத்த பெண்ணால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   கடலூர்- விழுப்புரம் வழியாக நாள்தோறும் ஏராளமான ரயில்கள் சென்று வருகின்றன. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள், கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருத்துறையூர் கிராமம் ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை அவ்வழியாக … Read more

கலைகட்டும் கார்த்திகை தீப திருநாள்: திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்

நாடு முழுவதும் இன்று கார்த்திகை தீப பெருவிழா வெகு விமரிசையாக உற்சாகத்துடன் கொண்டாட உள்ளது. இந்த தீபத்திருநாளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அகல் விளக்கேற்றி வழிபட தயாராகி வருகின்றனர். கிருஷ்ணகிரி அகல்விளக்கு விற்பனை:கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியை உள்ள நீலகண்ட தெருவில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆண்டுதோறும் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு அகல்விளக்கு தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில்; கிருஷ்ணகிரி நகரில் ரவுண்டானா, பழைய பேட்டை, சேலம் சாலை, சப் ஜெயில் ரோடு, போன்ற … Read more

பாபர் மசூதி இடிப்பு தினம்: கோவை முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினம்: கோவை முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு Source link

தமிழக ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு..!!

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகளில் இலவசமாக கோதுமை வழங்கப்படுகிறது. அதன்படி சென்னையில் வசிப்பவருக்கு வழங்கப்படும் அரிசிக்கு பதிலாக 10 கிலோ கோதுமையும், மற்ற நகரங்களில் வசிப்போர் 5 கிலோ கோதுமையையும் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால் நியாய விலை கடைகளில் விநியோகம் செய்ய மாதந்தோறும் மூன்று கோடி கிலோ கோதுமை தேவைப்படுகிறது. தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளுக்கான கோதுமை மத்திய தொகுப்பில் இருந்து வழங்கப்படுகிறது. சமீப காலமாக மத்திய தொகுப்பில் ஒதுக்கப்படும் … Read more

மக்களே கவனம்.. இன்று முதல் ஆட்டத்தை தொடங்குகிறது 'மாண்டஸ்'..!

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய புயலுக்கு ‘மாண்டஸ்’ என பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த புயல் காரணமாக, 8 மற்றும் 9-ம் தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நேற்று (டிச.5-ம் தேதி) காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, மேற்கு – … Read more

தமிழக மாணவர்களிடம் கற்றல் குறைபாடு – ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழக மாணவர்களிடம் கற்றல் குறைபாடு எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்த புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இதற்கு தீர்வு காண வகுப்புக்கு ஓர் ஆசிரியர் வீதம் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழகத்தில் மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 20 விழுக்காட்டினரால் தான் தமிழ் சொற்களை புரிந்து கொள்ள முடிகிறது; 23 விழுக்காட்டினரால் தான் அடிப்படை கணிதத்தை மேற்கொள்ள … Read more

திருவாரூர் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

திருவாரூர்: திருவாரூர் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கார்த்திகை திருநாளையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் 4 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

குஜராத் தேர்தல் கருத்துக்கணிப்பு: மீண்டும் களமிறங்கும் பாஜக? ஆம் ஆத்மி நிலை என்ன?

குஜராத் தேர்தல் கருத்துக்கணிப்பு: மீண்டும் களமிறங்கும் பாஜக? ஆம் ஆத்மி நிலை என்ன? Source link