தருமபுர ஆதீன மட ஆக்கிரமிப்பு நிலங்கள்: உயர் நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!

திருச்செந்தூர் கோவில் அருகே சுமார் 100 கோடி மதிப்புள்ள தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கில், திருச்செந்தூர் தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து உடனடியாக அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த மார்க்கண்டன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே தருமபுரம் ஆதின மடத்திற்கு சொந்தமான சொத்தை பலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். ஆக்கிரமிப்பாளர்கள் … Read more

சித்தாமூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுகாதார தேவை பயிற்சி முகாம்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்ட மறுவாழ்வு மையம்,  ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மேம்பாட்டு நிறுவனம் இணைந்து, தூய்மை இந்தியா திட்டத்தின் சிறப்பு பிரசாரம் 2.0 மாற்றுத்திறனாளிகளுக்கான சுகாதார தேவைகள் குறித்த பயிற்சி முகாம் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், தங்கராஜ்  ஆகியோர் தலைமை வகித்தனர். முகாமில்,  ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மேம்பாட்டு நிறுவனத்தின் அலுவலர் குணசேகரன், செங்கல்பட்டு மாவட்ட மறுவாழ்வு மைய அலுவலர் பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு, திட்டம் குறித்த … Read more

பாபர் மசூதி வழக்கு: 32 பேர் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்ய ஏ.ஐ.எம்.பி.எல்.பி முடிவு

பாபர் மசூதி வழக்கு: 32 பேர் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்ய ஏ.ஐ.எம்.பி.எல்.பி முடிவு Source link

நாமக்கல் : அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு பணம் கேட்டு தாமதப்படுத்தியதால் பிறந்த குழந்தை இறப்பு – தாய் அதிர்ச்சி புகார்!

நாமக்கல் : பிலிக்கல்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு பணம் கேட்டு தாமதப்படுத்தியதால், தனக்கு பிறந்த குழந்தை இறந்து விட்டதாக இராமாயி என்று பெண் புகார் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இராமாயி என்ற பெண் நாமக்கல் மாவட்டம், பிலிக்கல்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் பிரசவத்திற்கு பணம் கேட்டு உள்ளனர். அவர்கள் கேட்ட பணத்தை தர தாமதப்படுத்தியதால், நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பிரசவம் … Read more

38 அல்ல, 15 தான்.. குரூப்-3ஏ தேர்வு மையங்களை குறைத்தது டிஎன்பிஎஸ்சி..!

தமிழகத்தில், 38 மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடத்தப்பட இருந்த குரூப்-3ஏ தேர்வுகளை, 15 மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களாக குறைத்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-3 (குரூப்-3ஏ) பணிக்கான தேர்வு வரும் ஆண்டு ஜனவரி மாதம் 28-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான தேர்வு மையங்களை தேர்வாணையம் ஏற்கெனவே அறிவித்து இருந்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களின் தேர்வு … Read more

வானிலை முன்னறிவிப்பு: டிச.10 வரை தமிழகம், புதுவையில் கனமழை, அதி கனமழை வாய்ப்பு

சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (டிச.7) மாலை புயலாக வலுவடையவுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் இம்மாதம் 10-ம் தேதி வரை கனமழை மற்றும் அதி கனமழைகு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நேற்று தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த … Read more

Madurai Prison Scam: மதுரை மத்திய சிறை ஊழல் புகார் எதிரொலி? 12 பேர் டிரான்ஸ்ஃபர்

மதுரை: மதுரை மத்திய சிறையில் 12 அலுவலர்களை வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்து, துறை டி.ஜி.பி., அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டுள்ளார். வெளிச்சந்தையில் பொருட்களை விற்றதில், 100 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் கிளம்பியது. இந்த புகார் தொடர்பாக தணிக்கை ஆய்வும் நடந்தது. ஊழல் நடந்ததாக இதுவரை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாத நிலையில், இந்த நடவடிக்கை அதிரடியாக அமைந்துள்லது. ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அலுவலர்கள், தொடர்ந்து மதுரையிலேயே பணிபுரிவதாக எழுந்த சர்ச்சைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.   சில நாட்களுக்கு … Read more

மரித்து போகவில்லை மனிதநேயம் மின்கம்பத்தில் இருந்து கீழே விழுந்து எலும்பு முறிந்த குரங்குக்கு சிகிச்சை-கார் மூலம் நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

தா.பேட்டை : தா.பேட்டையில் மின் கம்பத்தில் இருந்து கீழே விழுந்து இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்ட குரங்கிற்கு முதலுதவி சிகிச்சை அளித்து நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த திமுக பிரமுகர்களின் செயலை பொதுமக்கள் பாராட்டினர்.திருச்சி மாவட்டம் தா.பேட்டையில் குரங்கு ஒன்று மின்சாரம் தாக்கியதில் மின் கம்பத்தில் இருந்து கீழே விழுந்தது. இதில் குரங்கு கருங்கல் மீது விழுந்ததில் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டு இடுப்பு எலும்பு முறிந்தது. இதனால் எழுந்து நடக்க முடியாமல் குரங்கு மிகுந்த … Read more

அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் வருகிறதா கேரள எல்லையில் இருக்கும் கண்ணகி கோயில்?

தமிழக கேரள வன எல்லையில் அமைந்துள்ள `மங்கலதேவி கண்ணகி கோயில்’, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. தமிழகத்தின் மேகமலை புலிகள் காப்பகத்தின் வண்ணாத்திப்பாறை மலை மற்றும் கேரளாவின் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தின் மங்கலதேவி ஆகிய இரு மாநில மலைகள் இணைக்கும் பகுதியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். தனது கணவன் கோவலனை கள்வன் எனக் கூறி பாண்டிய மன்னன் கொலை செய்ததால் கோபமுற்ற கண்ணகி மதுரையை எரித்த கையோடு கால்நடையாக இந்த மங்கலதேவிக்கு வந்து … Read more