மாண்டஸ் புயல் | பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம்: கடலூர் ஆட்சியர் அறிவுறுத்தல்
கடலூர்: “மாண்டஸ் புயல் பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புயலின் வேகம் 80 கிலோ மீட்டர் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை பணிகளை இன்று (டிச.9) காலை ஆய்வு செய்தார். கடலூரில் இருந்து புறப்பட்டு கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட முடசல் ஓடை மீன்பிடி இறங்கு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். … Read more