அரியலூரில் போலீஸ் தாக்கியதில் காயமடைந்த விவசாயி உயிரிழப்பு: உண்மை அறியும் குழுவை அமைத்தது பாமக

சென்னை: அரியலூர் மாவட்டத்தில் போலீஸ் தாக்குதலில் காயமடைந்த விவசாயி உயிரிழந்தது குறித்து வழக்கறிஞர் பாலு தலைமையில் உண்மை அறியும் குழு அமைத்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து இன்று அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டையில் காவல்துறையினர் வீடு புகுந்து நடத்திய தாக்குதலில் காயமடைந்த அப்பாவி விவசாயி செம்புலிங்கம் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டார். அதன்பின் 13 நாட்களாக பல மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்றும் பயனின்றி நேற்று காலை … Read more

கரையை கடந்தது மாண்டஸ்… பேருந்து, ரயில் சேவைகள் தொடக்கம்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக மாறியது. அந்தப் புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டிருந்தது. புயலின் தீவிரம் அதிகம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்ததால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்த வகையில் சென்னையில் பேருந்துகள், ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் தீவிர புயலாக இருந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்து மாமல்லபுரத்தில் நேற்று நள்ளிரவு கரையை கடந்தது. புயலின் கண் பகுதி கரையை கடக்கும்போது பலத்த சூறாவளி காற்று வீசி … Read more

மாண்டஸ் புயல் எதிரொலி: சென்னையில் ஏற்பட்ட சேதாரங்களும் சீரமைப்பும்.. முழு விவரம்!

சென்னையின் ஹாட் டாப்பிக்காக இருந்த மாண்டஸ் புயல் இதோ அதோ என போக்குக் காட்டி ஒருவழியாக மாமல்லபுரம் அருகே கரையை கடந்திருக்கிறது. கடந்த டிசம்பர் 5ம் தேதி வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், மாண்டஸ் என்ற தீவிர புயலாக வலுப்பெற்றது. இந்த மாண்டஸ் புயல் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது. அதன்படி மாமல்லப்புரம் அருகே மாண்டஸ் டிச.,10ம் தேதியான இன்று அதிகாலை 3 மணியளவில் … Read more

சென்னை மக்களே உஷார்..!! புழல், பூண்டி ஏரிகளுக்கான நீர் வரத்து அதிகரிப்பு..!!

மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 3:15 மணி அளவில் மகாபலிபுரம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகளான மாதவரம், ஆவடி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், செங்குன்றம், புழல் ஆகிய பகுதிகளில் அதிக கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பெரும்பாலான ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பெரும்பாலான ஏரிகளுக்கு … Read more

தாய் மற்றும் மகனை கொன்று விட்டு தந்தை தற்கொலை… சிக்கிய உருக்கமான தற்கொலை கடிதம்..!!

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் நடுகொண்டையம் பேட்டை அகிலா நகரில் வசித்து வருபவர் லட்சுமணன். இவரது மனைவி வசந்தா (68). இவரகளுது ஒரே மகன் கார்த்திகேயன் (34). கார் ஓட்டுநரான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வசந்த பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சாமிநாதன் (8) என்ற மகன் இருந்தார். இந்த நிலையில் கார்த்திகேயன் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் கார் கம்பெனியில் பி.ஆர்.ஓ.வாக வேலை பார்த்தார். இங்கு போதிய … Read more

இன்று மதியத்துக்குள் மின் விநியோகம் சீரமைக்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்பட்ட பகுதிகளில் இன்று மதியத்திற்குள் மின் விநியோகம் சீரமைக்கப்படும் என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை 3 மணியளவில் மாமல்லபுரம் அருகே முழுமையாகக் கரையைக் கடந்தது. இதனால் வடகடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் பரவலாக கனமழை பெய்தது. புயல் கரையைக் கடந்த பின்னரும் கூட கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட … Read more

திரையரங்கத்தை திணறடித்த அஜித் ரசிகர்கள்! கட்டுக்கடங்காத கூட்டம்!

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள துணிவு திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இதனை வரவேற்கும் விதமாக நெல்லை சந்திப்பு ராம் சினிமாஸ் திரையரங்கில் அஜித் ரசிகர்கள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். ஜெண்டை மேளம் வானவேடிக்கை என கலை கட்டிய சிங்கிள் வெளியீட்டு விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நெல்லை சந்திப்பு ராம் … Read more

பட்டா பெயர் மாறுதலுக்கு லஞ்சம்: கையும் களவுமாக பிடிபட்ட பெண் கிராம வருவாய் ஆய்வாளர்

பெரம்பலூர் அருகே பட்டா பெயர் மாற்றுதலுக்கு ரூ.20,000 லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கிராம பெண் வருவாய் ஆய்வாளர் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் டி.களத்தூர் அருகேயுள்ள தேனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி இந்திராணி (35). இவர், கொளக்காநத்தம் பகுதி வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அய்யலூர் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மனைவி முத்தரசி (30) என்பவர், பட்டா பெயர் மாறுதலுக்காக மனு செய்திருந்தார். அப்போது, … Read more