ஜல்லிக்கட்டு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் என்ன உள்ளது?

அனைத்து விதிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு மற்றும் கம்பாலா உள்ளிட்ட போட்டிகளை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகள் கொண்டு வந்த சட்டங்களை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசனம் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கின் விசாரணையின்போது, ஜல்லிக்கட்டு நடைபெறும் முறை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் கோரியதை அடுத்து … Read more

கள்ளக்காதலை கைவிட்ட தாய்..  மகள் கண்முன்னே அரங்கேரிய கொடூரம்.. காப்பாற்ற சென்று உயிரைவிட்ட சிறுமி.! 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் அருகே வீரானந்தல் என்ற கிராமத்தில் 37 வயதான பரிமளா என்பவருக்கு 20 வயதில் ரோகினி என்ற பெண்ணும், 17 வயதில் ராஜேஸ்வரி என்ற பெண்ணும் இருக்கின்றனர். மேலும், 15 வயதில் லோகேஷ் என்ற மகன் இருந்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன் பரிமளாவுடைய கணவர் இறந்துவிட்டார். அதன் பின் பரிமளாவிற்கு காமராஜ் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. பரிமளாவின் பழக்கம் குறித்து குழந்தைகளுக்கு தெரிய வந்ததும் அவர்கள் கண்டித்துள்ளனர். ஆனால், பரிமளா அதைக் … Read more

டிச.6 – பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழக முழுவதும் 1.20 லட்சம் போலீஸார் பாதுகாப்பு

சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாபர் மசூதி இடிப்பு தினமானடிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளைதீவிரப்படுத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் … Read more

ஓடும் காரில் தீ; 3 பேர் தப்பினர்

போச்சம்பள்ளி: தர்மபுரி கோட்டை தெருவை சேர்ந்தவர் கணேசன். இவர் தனது உறவினர்களான அண்ணப்பூரணி, மலர் ஆகியோருடன் கிருஷ்ணகிரி மாவட்டம் கள்ளிப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் வந்தார். பின்னர் அகரத்தில் உள்ள ஜோசியரிடம் ஜாதகம் பார்த்து விட்டு 3 பேரும் தர்மபுரி நோக்கி நேற்றிரவு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது தட்ரஅள்ளி கூட்ரோடு பகுதியில் கார் சென்றபோது திடீரென முன்பகுதியில் புகை வந்துள்ளது. இதனால் காரை நிறுத்தி விட்டு 3 பேரும் கீழே இறங்கினர். சிறிது நேரத்திலேயே காரில் … Read more

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!

முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனையில் வரும் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் பழனி முருகன் கோயிலின் அடிவாரத்தில் இருந்து மலையில் உள்ள முருகன் கோயில் வரை துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் போலீசாரின் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறார்கள். பழனி நகரில் மக்கள் அதிகம் … Read more

வணங்கான் படத்திலிருந்து விலகினார் நடிகர் சூர்யா!!

வணங்கான் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகியிருப்பதாக இயக்குநர் பாலா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும், இந்த கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு … Read more

மதுரையில் போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுத்த 15க்கும் மேற்பட்டோர் கைது

மதுரை: மதுரையில் போக்குவரத்து சிக்னல்களில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிச்சையெடுத்தவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்திலுள்ள முக்கிய நகரங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் வழிப்பாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பிச்சையெடுக்கும் நபர்களை மீட்டு, அவர்களுக்கு உரிய உதவி செய்து அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற காப்பகங்களில் தங்க வைக்கவேண்டும் என, தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உத்தரவின்பேரில், ஆதரவின்றி … Read more

பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கல்வராயன்மலை: கல்வராயன்மலையில் தொடர் மழை பெய்து வருவதால் பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரியார் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் நேற்று மதியம் 12 மணியில் இருந்து சுமார் 3.30 மணி வரை கனமழை பெய்தது. இதன் காரணமாக பெரியார் நீர்வீழ்ச்சியில் தற்போது கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நீர்வீழ்ச்சியில் குளித்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்து வெளியேறினர். அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை, … Read more

திருவள்ளூர்: பூமிக்குள் இருந்து அடுத்தடுத்து கண்டெடுக்கப்படும் ராக்கெட் லாஞ்சர்கள்!

திருவள்ளூர் அருகே பூமியில் புதைந்து கிடந்த மேலும் ஒரு பழங்கால ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை அடுத்த மாளந்தூர் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது, சுமார் ஒன்றரை அடி நீளம் கொண்ட பழங்கால ராக்கெட் லாஞ்சர் ஒன்று பூமிக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இதனை வெடிகுண்டு நிபுணர்கள் முழு சோதனை செய்து திருவள்ளூர் அடுத்த மணவாள … Read more

இயக்குனர் பாலா படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகல்: காரணம் பற்றி பாலா பரபரப்பு அறிக்கை

இயக்குனர் பாலா படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகல்: காரணம் பற்றி பாலா பரபரப்பு அறிக்கை Source link