ஜெயலலிதா நினைவு நாள் – இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா அஞ்சலி… என்ன நடக்கப்போகிறது?

திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து எம்ஜிஆரை குருவாக ஏற்றுக்கொண்டு அரசியலுக்குள் நுழைந்தவர் ஜெயலலிதா. ஆரம்பத்தில் அதிமுகவின் சீனியர்களால் ஓரங்கட்டப்பட்டவர், எம்ஜிஆர் இறப்பின் போது கீழே தள்ளவிடப்பட்டவர் காலப்போக்கில் தனக்கு கீழே அந்த சீனியர்களை அமரவைத்தது வரலாறு. எம்ஜிஆர் இறப்புக்கு பிறகு லாவகமாக ஜெயலலிதா கட்சியை கைப்பற்றியதை கண்டு பலரும் வாயடைத்தே போனார்கள். அதன் பிறகு 1991ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி உயிரிழக்க திமுக ஆட்சி கலைக்கப்பட தமிழ்நாட்டின் முதலமைச்சரானார செல்வி ஜெ.ஜெயலலிதா. முதல்முறையாக 1991-1996ஆம் ஆண்டு தமிழ்நாட்டை ஆட்சி … Read more

தென்காசி குற்றால அருவியில் குளிக்கத் தடை

தென்காசி : தென்காசி குற்றால அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவியில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாரம்பரியம் மாறாத சத்து நிறைந்த கம்பு கருப்பட்டி பணியாரம்.. ரெசிபி இதோ!

பாரம்பரியம் மாறாத சத்து நிறைந்த கம்பு கருப்பட்டி பணியாரம்.. ரெசிபி இதோ! Source link

இன்று அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

இன்று (டிசம்பர் 5ம் தேதி) திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவாரூர் முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு இன்று (டிசம்பர் 5ஆம் தேதி) அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட … Read more

போதையில் சேற்றில் புரண்டு போராட்டம் நடத்திய இளைஞர்!!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கொல்லாபுரத்தில் இருந்து சங்கமங்கலம் செல்லும் சாலையில் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. அந்த சாலையின் குறுக்கே வாய்க்கால் செல்வதால் அதற்கான பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை விட்டு விட்டு பெய்ததால் அந்த இடம் சேரும் சகதியுமாக மாறியது. இதனால் விபத்து ஏற்படுவதகாவும் அப்பகுதி மக்கள் கூறினர். இந்நிலையில், அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மதுபோதையில் சேரும், சகதியுமான அந்த சாலையில் படுத்து … Read more

இறை உணர்வோடு ஒன்றவைக்கும் சிறப்பு பெற்றது கர்னாடக இசை: ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்

சென்னை: மறைந்த வயலின் மேதை டி.என்.கிருஷ்ணன் நினைவு விருதுகளை இசைக் கலைஞர்களுக்கு வழங்கிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நமது பாரம்பரிய கர்னாடக இசை பொழுதுபோக்குவதற்கானது அல்ல. இறை உணர்வோடு நம்மை ஒன்றவைப்பது. பக்திப்பூர்வமானது என்று தெரிவித்தார். பிரபல வயலின் கலைஞர் அமரர் டி.என்.கிருஷ்ணன் 94-வது பிறந்தநாள் விழா மற்றும் அவரது பெயரில் நினைவு விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவை, டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், ‘சங்கீத கலாநிதி’டி.என்.கிருஷ்ணன் படத்தை … Read more

ஜி-20 ஆலோசனை கூட்டம்: டெல்லி செல்லும் ஸ்டாலின், இபிஎஸ்!

இந்தியா தலைமை ஏற்றுள்ள ஜி-20 மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கு பெறும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் , எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மத்திய … Read more

இன்று டெல்லி செல்கிறார் முதலமைச்சர்

ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. மத்திய அரசு 32 பிரிவுகளில் நாடு முழுவதும் சுமார் 200 கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. எல்லா மாநிலங்களிலும் இந்த கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. தமிழகத்தில் சென்னையில் ஜி-20 கூட்டம் நடைபெறும் என்று தெரிய … Read more

மேட்டுப்பாளையம்-கோவை இடையே தினசரி ரயில் சேவை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் துவக்கி வைத்தார்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்-கோவை இடையே பயணிகள் ரயில் இனி வாரத்தின் ஏழு நாட்களும் இயக்கப்பட உள்ளது. இந்த தினசரி ரயில் சேவையை நேற்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். கோவை முதல் மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் மெமு மின்சார பயணிகள் ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு ஐந்து முறையும், கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஐந்து முறையும் இயக்கப்பட்டு வந்தது. இதனை மேட்டுப்பாளையம், சுற்று வட்டார பகுதிகளில் இருந்து … Read more