“திருமண நாளன்றும் உருவ கேலி செய்தனர்” : பிரபல நடிகை ஓபன் டாக்!!

திருமணம் நடைபெற்ற நாள் அன்றும் தன்னை சிலர் உருவ கேலி செய்ததாக நடிகை மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார். நடிகர் கார்த்தியின் மகனான, நடிகர் கௌதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனுக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. அவரது திருமணத்தில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். மஞ்சிமா மோகன் 2016இல் கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். தேவராட்டம் படத்தில் கௌதம் கார்த்தியும், மஞ்சிமா மோகனும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் … Read more

சிவகாசி மாநகராட்சியில் காலிப்பணியிடங்கள் : நிரப்பப்படுவது எப்போது? – மக்கள் எதிர்பார்ப்பு

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால் அலுவலர்கள் மன உளைச்சலுடன் பணியாற்றி வருகின்றனர். சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் இணைக்கப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது மாநகராட்சி ஆணையர் தவிர வேறெந்த புதிய அலுவலரும் நியமிக்கப்படவில்லை. திருத்தங்கல், சிவகாசி நகராட்சி அலுவலர்களே மாநகராட்சி பொறுப்புகளை கூடுதலாக கவனித்து வருகின்றனர். விருதுநகர் நகராட்சி பொறியாளருக்கு மாநகராட்சி நிர்வாக பொறியாளராக பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. … Read more

Vijay: சன்டேவும் அதுவுமா ஆண் வர்க்கத்தையே ஆனந்தத்தில் ஆழ்த்திய விஜய் ரசிகர்கள்!

நடிகர் விஜய் தமது திரையுலக பயணத்தை தொடங்கி 30 ஆண்டுகள் ஆகின்றன. இதனை கொண்டாடும் விதமாக தமிழகமெங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவரது ரசிகர்கள் செய்து வருகின்றனர் இந்த வகையில் மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆண்களும் பெண்களுக்கு இணையாக, அரசு மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய இன்று ஏற்பாடு செய்யப்பட்டது, மதுரை மாட்டுத்தாவணி முதல் ஆரப்பாளையம் வரை செல்லும் வழித்தடத்தில் பயணித்த இரண்டு பேருந்துகளில் பயணம் மேற்கொண்ட அனைதது பயணிகளுக்கும் இன்று … Read more

’நாளைய முதல்வர் தளபதி’ தேனியில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

தேனி விஜய் ரசிகர்கள் ஒட்டியிருக்கும் அந்த போஸ்டரில், 30  ஆண்டுகாலமாக சினிமா துறையில் வெற்றி, அடுத்த 30 ஆண்டுகள் அரசியலில் வெற்றி, நாளைய முதல்வர் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. விஜய் கடந்த 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு என்ற படத்தில் அறிமுகமாகி தற்போது வரை 30 ஆண்டுகள் திரைத்துறையில் நிறைவு செய்திருக்கிறார். இதனை தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்றத்தினர் கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தில் தேனியில்  தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் … Read more

தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்த மாணவிக்கு கலெக்டர் பாராட்டு

நாகப்பட்டினம்: தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவியை தனது இருக்கை அருகே அமர வைத்து நாகப்பட்டினம் கலெக்டர் அருண்தம்புராஜ் வாழ்த்துகள் தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்கள் மத்தியில் இலக்கிய ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியைச் சேர்ந்த 1 லட்சத்து 18 ஆயிரம் மாணவர்களும், தனியார் பள்ளியைச் … Read more

திருட வந்தவரை மரத்தில் கட்டிவைத்து அடித்தே கொலை செய்த வடமாநில தொழிலாளர்கள்

திருச்சி அருகே மர அறுவை மில்லில் திருட வந்த மர்மநபரை மரத்தில் கட்டி வைத்து அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் அம்பேத்கர் நகர் பகுதியில் இயங்கி வரும் ஆஷா புரா மர அறுவை மற்றும் விற்பனை கடையில் நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் நுழைந்து, அங்கிருந்த மேலாளர் தரேந்தரின் செல்போனை பறிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவர் சத்தமிடவே மர்ம நபர் தப்பித்து சென்றுவிட்டார் எனக் … Read more

எடப்பாடி பழனிச்சாமியை அழைக்கும் டெல்லி..!! ஓபிஎஸ் அணியினர் அதிர்ச்சி..!!

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20 அமைப்பின் தலைவர் பொறுப்பு இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்தியா ஏற்றுக்கொண்டது. இந்தோனேசியாவின் பாலி தீவில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் இந்தோனேசிய அதிபர் கையால் பிரதமர் மோடி தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.  இதன்படி இந்தியா இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முறைப்படி தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. இந்த தலைமை பொறுப்பில் இந்தியா அடுத்த ஓராண்டுக்கு இருக்கும். ஜி 20 உச்சி மாநாட்டின் அடுத்த … Read more

தலைமைக் காவலரை தாக்கிய பாஜக முன்னாள் எம்.பி!!

ராஜஸ்தானில் தலைமைக் காவலரை தாக்கிய பாஜக முன்னாள் எம்.பி. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணேந்திர கௌர், பாஜகவின் முன்னாள் எம்.பி. ஆவர். இவர் அகாத் திராஹாவில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தனது காரை நடுரோட்டில் நிறுத்தியிருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் கஜ்ராஜ் சிங், காரை எடுத்து செல்லும்படி கிருஷ்ணேந்திர கௌரிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாஜக … Read more

பவானிசாகர் அணை நீர்மட்டம்: ஈரோடு மக்களுக்கு வந்தது முக்கியத் தகவல்…!

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை. இதன் மொத்த கொள்ளளவு 105 அடி. பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. இங்கு பெய்யும் மழையின் அளவை பொறுத்து அணைக்கு செல்லும் நீரின் அளவு மாறுபடும். கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்து வந்தது. நீர்மட்டம் திடீரென சரிவு இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையொட்டி படிப்படியாக நீர்மட்டமும் … Read more