தமிழக ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்: முத்தரசன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: “தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்தி கொண்டிருக்கிறார்” என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பில் கட்சி நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். “ஆன்லைன் சூதாட்டம் மூலம் 25 பேர் உயிரிழந்த நிலையில் தமிழக அரசு சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வந்திருக்கிறது. அது குறித்து விளக்கம் கேட்பது என்கிற பெயரால் காலம் … Read more

இதுக்கும் என்னை கலாய்ப்பாங்க.. இருந்தாலும் சொல்றேன்.. ஆளுநர் ஆர்.என். ரவி வந்து…

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் திமுக அரசுக்கும் இடையே அதிகார மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சட்டசபையில் கொண்டு வரப்படும் மசோதாக்களுக்கு காலம் தாழ்த்தி அனுமதி வழங்கியும், சில மசோதாக்களை கிடப்பில் போட்டு விடுவதாகவும் ஆளுநர் மீது குற்றசாட்டுகள் வைக்கப்படுகின்றன. குறிப்பாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்துக்கு ஆளுநர் கையொப்பம் வழங்கவில்லை என்றும் அதனால் அச்சட்டம் காலாவதியாகிவிட்டதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பது. இதுகுறித்து தெலுங்கனா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து … Read more

சுவர் இல்லாத வீட்டுக்கு 28,000 அபராதம் – உசிலம்பட்டியில் மின்வாரியம் அராஜகம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொங்கபட்டியைச் சேர்ந்தவர் நெருஞ்சியம்மாள். தொழிலாளியான இவரது கூரை வீட்டில் இலவச மின் இணைப்பு வழங்பபட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கொங்கபட்டி பகுதியில் ஆய்வு செய்த மின் மதிப்பீட்டு அலுவலர்கள் நெருஞ்சியம்மாளின் வீட்டையும் ஆய்வு செய்து வீட்டில் பயன்படுத்தாமல் இருந்த பிரிட்ஜ், வாஷிங் மெஷின்களை பயன்படுத்தி வருவதாக கூறி சுமார் 28 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது., இதனைக் கண்டு அதிர்சியடைந்த நெருஞ்சியம்மாள் வீட்டில் இருந்த பொருட்கள் தனது … Read more

எக்ஸ்பிரஸ் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 32 பவுன் நகை: சென்னை இளம்பெண்ணிடம் ஒப்படைப்பு

விழுப்புரம்: சென்னையில் இருந்து புறப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றுமுன் தினம் இரவு விழுப்புரத்திற்கு வந்தது. அப்போது ரயிலின் முன்பதிவு பெட்டியான எஸ்-9 கோச்சில் ஒரு டிராவல்ஸ் பை கேட்பாரற்ற நிலையில் கிடந்தது. அந்த பையை அதே பெட்டியில் பயணம் செய்த பயணிகள் யாரும் உரிமை கொண்டாட முன்வரவில்லை. அந்த சமயத்தில் விழுப்புரத்தில் இருந்து ரயில்வே பெண் போலீஸ் சுதா என்பவர், அந்த ரயிலில் வழிக்காவல் பாதுகாப்பு பணிக்கு சென்றார். அந்த பை கேட்பாரற்ற நிலையில் இருந்ததை … Read more

ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் மோடியுடன் எடப்பாடி பழனிச்சாமி? வெளியான பரபரப்பு தகவல்!

ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று உள்ளது. அடுத்த ஆண்டு  ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து உள்ளது. அதற்காக … Read more

காமாட்சிபுரி ஆதீனம் கொடுத்த பரிசு… ஓபிஎஸ் செம ஹேப்பி… இனிமே தான் ஆட்டமே இருக்கு!

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள காமாட்சிபுரி ஆதீனத்தில் உலக சமாதான பெருவிழா நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு உலக சமாதான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. கோவை ஒண்டிப்புதூர் அருகே காமாட்சிபுரியில் 51 சக்தி பீடக் கோவில் அமைந்துள்ளது. காமாட்சிபுரி ஆதின பெருவிழா இதன் ஆதீனமாக காமாட்சிபுரி சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இருக்கிறார். இந்த கோயிலில் உலக சமாதான தெய்வீக பேரவை சார்பில் 20ஆம் ஆண்டு உலக … Read more

ஜெயலலிதா நினைவு நாள் இன்றுதான்… கொளுத்தி போடும் அதிமுக முக்கிய பிரமுகர்

முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினரோடு சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று (டிச. 4) மரியாதை செலுத்த வருகை தந்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய கே.சி.பழனிசாமி,”முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான நினைவு தினம் இன்றுதான். எனவே இன்றைக்கு நாங்கள் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறோம். இபிஎஸ் ஓபிஎஸ் ஏற்க வேண்டும்  ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அதை அமைக்க வலியுறுத்தியவர் ஓ.பன்னீர்செல்வம். எனவே … Read more

பயிர்களில் பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த அளவுக்கு அதிகமாக உரமிடுவதை தவிர்க்க வேண்டும்; விவசாயிகளுக்கு அதிகாரி வேண்டுகோள்

வலங்கைமான்: பயிர்கள் எளிதில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு உள்ளாகாமல் இருக்க விவசாயிகள் அளவுக்கு அதிகமான உரங்களை பயிருக்கு விடுவதை தவிர்க்கவேண்டும் என வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் விவசாயிகளை கேட்டு கொண்டுள்ளார். நெல் பயிரில் உரம் மேலாண்மை பற்றி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. வலங்கைமான் வட்டாரத்தில் தற்போது சம்பா மற்றும் தாளடி பருவத்தில் சுமார் 14635 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் பயிர்களுக்கு விவசாயிகள் அனைவரும் அளவுக்கு அதிகமான … Read more

மதுரை: ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி –அலாரம் அடித்ததால் தப்பிய பணம்

மதுரையில் நள்ளிரவில் ஏடிஎம் மிஷினை உடைத்து திருட முயன்று அலராம் அடித்ததால் தப்பியோடிய இளைஞர். சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பரவை பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது இந்நிலையில், நேற்று நள்ளிரவு ஹெல்மெட் அணிந்தபடி ஏடிஎம்-ல் புகுந்த இளைஞர் ஒருவர் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளார். அப்போது ஏடிஎம் மையத்தில் உள்ள அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து இளைஞர் தப்பியோடியுள்ளார். இதனால் ஏடிஎம் மெஷினில் இருந்த பல … Read more

'அதிமுகவின் கடைசி 4 ஆண்டு கால ஆட்சி தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய பேரிடர்' – முதல்வர் ஸ்டாலின் 

சென்னை: 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கடைசி நான்கு ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சியை தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய பேரிடர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ” உழைப்பவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு உண்டு என்பதற்கு சுந்தரைப் போன்றவர்கள் இந்தக் கழகத்தில் ஏராளமாக இருக்கிறார்கள். பதவி வரும், போகும். கழகம்தான் நம்முடைய அடையாளம். நம்முடைய இயக்கம். நம்முடைய உயிர் மூச்சு. அப்படிப்பட்ட இயக்கத்தை … Read more