கள்ளக்குறிச்சி கலவரத்தில் பாதிக்கப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி திறப்பு: முகப்பில் தோரணம், வாழைமரம் கட்டி மாணவர்களுக்கு வரவேற்பு..!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவரத்தில் பாதிக்கப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தை கண்டித்து கடந்த ஜூலை 17ம் தேதி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பள்ளியில் உள்ள பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து, பள்ளி மூடப்பட்டது. தற்போது பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதால், இ.சி.ஆர்., மற்றும் சக்தி பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிக்கும்படி உத்தரவிடக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு … Read more

கன்னியாகுமரி கடல்பகுதியில் கனமழை: கடலுக்குச் செல்லாமல் கரையில் காத்திருக்கும் கலன்கள்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார கடல் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாத நிலையில் படகுகளை கரையிலேயே நிறுத்தி வைத்துள்ளனர். தமிழகத்தில் குமரிக்கடல் மற்றும் கேரளா கடல் பகுதிகளில் நிலவும் வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விடிய விடிய … Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை.. வானிலை ஆய்வு மையம்.!

தென்கிழக்கு வங்க கடல் அதனை ஒட்டியதற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், டிசம்பர் 8ம் தேதி தமிழகத்தின் … Read more

டிக்டாக் பிரபலம் திடீர் மரணம்… கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!!

கனடா நாட்டைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் மேகா தாக்குர் (21), ஒரு வயதில் அவரது பெற்றோருடன் கனடாவில் குடிபெயர்ந்தார். கல்லூரி காலங்களில் டிக்டாக்கில் அறிமுகமான இவர் 9,30,000க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் வைத்திருந்தார். அதன்பிறகு இன்ஸ்டாகிராமிலும் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்தார். பலரும் அவரது வீடியோவை பகிர்ந்து வரும் நிலையில், அவரது பெற்றோர் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், எங்கள் ஒளிமையான வாழ்க்கையில் எங்களை அன்பாக அக்கறையாக கவனித்து வந்தார் எங்கள் … Read more

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் லிஃப்ட் பழுதுக்கு பணியாளர், நிதி பற்றாக்குறையே காரணம்: பொறியாளர்கள் ஆதங்கம்

சென்னை: சென்னையில் அரசு மருத்துவமனை லிஃப்ட் பழுதுக்கு பொறியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், பணியாளர் பற்றாக்குறை, குறைவான நிதி ஒதுக்கீடு ஆகியவையே இதற்கு காரணம் என்று பொதுப்பணித் துறை மின் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், லிஃப்ட் பழுதானதால் உள்ளே சிக்கினார். இதைத் தொடர்ந்து, அந்த லிஃப்டை கண்காணிக்க வேண்டிய பொதுப்பணித் துறை உதவி மின் பொறியாளர்கள் 2 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். … Read more

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி – புயலாக மாற வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் டிசம்பர் 5ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுமென்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதலே மழை பெய்ய தொடங்கியது. இந்தச் சூழலில் வங்கக்கடலில் இன்று காலை 5.30 மணிக்கு காற்ற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவானது. இது நாளைக்குள் மேற்கில் இருந்து வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று பின்னர் புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரும் 8ஆம் தேதி தமிழகம் … Read more

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கியது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கியது. மாணவி மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தால் 145 நாட்களாக பள்ளி மூடப்பட்டிருந்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முதற்கட்டமாக 9 – 12ம் வகுப்புக்கு நேரடி வகுப்புகள் நடைபெறவுள்ளன. பள்ளியில் உள்ள ‘ஏ’ மற்றும் ‘பி’ பிளாக்குகளை மட்டும் பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – தமிழகத்தில் மழை வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் அடுத்து வரக்கூடிய ஐந்து தினங்களுக்கு மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வரும் 8ஆம் தேதி … Read more