வேதாரண்யத்தில் கனமழை அகல்விளக்கு தயார் செய்யும் பணி பாதிப்பு; அழிவில் இருந்து காக்க அரசு கருணை காட்டுமா?

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் தொடந்து மழை பெய்து வருவதால் அகல்விளக்கு தயார் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. அழிவை நோக்கி செல்லும் இந்த தொழிலை காப்பாற்ற அரசு கணை காட்ட வேண்டும் என தொழிலாளர்கள் வேண்டுகோவ் விடுத்துள்ளனர். வேதாரண்யம் தாலுகா செட்டிபுலம், செம்போடை, தாணிக்கோட்டகம் ஆகிய பகுதிகளில் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் காலம் காலமாக மின் எந்திரங்கள் உதவியில்லாமல் திருவை வைத்து கையால் மண்பாண்ட தொழில் செய்து வருகின்றனர். தற்போது, கார்த்திகை மாதத்தில் … Read more

கள்ளக்குறிச்சி :: மாணவர்களே வராத பள்ளிக்கு தினமும் வந்து செல்லும் தலைமை ஆசிரியர்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கீழைப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட பள்ளிக்கு வராத நிலையில் அந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஒருவர் மட்டும் பணியாற்றி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பள்ளியில் படித்து வந்தனர். கடைசியாக 2015 முதல் 2018ம் ஆண்டு கால கட்டங்களில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துள்ளனர். அவர்களுக்கென இரண்டு ஆசிரியர்களும் இருந்துள்ளனர். இந்த பள்ளியில் சமையலறை இல்லாததால் 2019 ஆம் … Read more

தமிழ்நாட்டில் காத்திருக்கும் மிக கனமழை.. டிச.8 குளிரப் போகும் மாவட்டங்கள்!

தமிழ்நாட்டில் காத்திருக்கும் மிக கனமழை.. டிச.8 குளிரப் போகும் மாவட்டங்கள்! Source link

ஜி-20 மாநாடு குறித்து ஆலோசனை: முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்

சென்னை: ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். இந்தோனேசியா நாட்டின் பாலி தீவில் ஜி-20 உச்சி மாநாடு கடந்த மாதம் 15, 16-ம் தேதிகளில் நடந்தது. மாநாட்டு நிறைவு விழாவில், ஜி-20 அமைப்புக்கு தலைமை வகிக்கும் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா கடந்த 1-ம் தேதி ஏற்றது. இந்நிலையில், … Read more

ச்சீ… ராணவ உடையணிந்து செய்ற செயலா இது? வேலூர் போலீசிடம் வசமாய் சிக்கிய கேரள வாலிபர்!

வேலூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் காவல் துறையினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்துக்குட்பட்ட அப்துல்லாபுரம் தெள்ளூர் சாலையில் உதவி ஆய்வாளர் ரவி தலைமையிலான காவலர்கள் ரோந்து மேற்ககொண்டிருந்தனர். அப்போது தெள்ளூர் கூட்டுச்சாலையில் ராயல் என்பீல்டு இருசக்கர வாகனத்தில் இராணுவ உடை அணிந்து சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டிருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் … Read more

நிர்வாணமாக நின்றால் கேசவ விநாயகம் என்ன செய்வார் தெரியுமா?… பாஜக பெண் நிர்வாகி பகீர்

தமிழக பாஜகவில் பல்வேறு காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் சமீபத்தில் திருச்சி சிவாவின் மகனும், தமிழக பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளருமான சூர்யா சிவா தமிழக பாஜக சிறுபான்மையினர் அணியின் பெண் நிர்வாகியான டெய்சி தங்கையாவை ஆபாசமாக பேசிய ஆடியோ வைரலானது. அந்த ஆடியோவில் சூர்யா டெய்சியை மிகவும் தரக்குறைவாக பேசி நீ அமித்ஷாட்ட போ, மோடிட்ட வேணாலும் போ என்னை உன்னால ஒன்னும் செய்ய முடியாது. உன்னை கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டலும் விடுத்தார்.  அதனையடுத்து … Read more

'ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது சாபக்கேடு' – துரை வைகோ

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது சாபக்கேடு என துரை வைகோ குற்றஞ்சாட்டினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் நினைவாக சமீபத்தில் திறக்கப்பட்ட நினைவரங்கத்தை மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ இன்று பார்வையிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்… கி.ரா.விற்கு மணிமண்டபம் அமைத்தற்கு தமிழக முதல்வருக்கும், அதற்கு பாடுபட்ட கனிமொழி எம்.பி.க்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். … Read more

சாலையில் கொட்டப்படும் காய்கறிகள்; அரசே கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: கொள்முதல் விலை வீழ்ச்சியால் உழவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க காய்கறிகள் – பழங்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்கவும், அவற்றை கூட்டுறவு அமைப்புகள் மூலம் அரசே கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு சந்தைகளில் உரிய விலை கிடைக்காததால் சாலைகளில் கொட்டி அழிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் வியர்வை சிந்தி சாகுபடி செய்த பயிர்கள் யாருக்கும் பயனின்றி … Read more

தமிழகத்தில் இருந்து வரும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை சரிவு – ஏ.எஸ்.ராஜன்

கோவை தனியார் கல்லூரியில் மாணவ மாணவியருடனான கலந்துரையாடல் நிகழ்வில் சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவலர் பயிற்சி அகாடமியின் இயக்குனர் ஏ.எஸ்.ராஜன் கலந்து கொண்டார். சமூக வலைதளங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவது குறித்தும், அதை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் மாணவ மாணவியருடன் கலந்துரையாடல் நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து கூறியது; கல்விதுறை, மருத்துவதுறை போல காவல் துறையும் சேவை மனப்பான்மையுடன் இருக்கும் துறை என தெரிவித்தார். காவல் அதிகாரிகளாக 20 சதவீதம் வரை பெண்கள் … Read more

தலைதூக்குகிறதா பட்டாக்கத்தி கலாசாரம்… அரசு பேருந்து கண்ணாடியை உடைத்து அராஜகம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான T-87 எண் கொண்ட பேருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஓட்டுநர் சுப்பிரமணி மற்றும் நடத்துனர் சாரங்கன் மற்றும் சில பயணிகளுடன் கண்ணன்தாங்கள் கிராமத்திற்கு  சென்றது. அப்போது காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் சந்திப்பு வளைவில் திரும்பியபோது போக்குவரத்து நெரிசலால் பேருந்து நின்றிருக்கிறது.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் பேருந்தினை மடக்கி ஹார்ன் அடித்தால் வழிவிட முடியாதா என கேட்டிருக்கின்றனர். அதற்கு ஓட்டுநர் சரி போங்கப்பா என்று கூறியிருக்கிறார். … Read more