மேன்டூஸ் புயல் பாதிப்பு: சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பாதை சேதம்

சென்னை: மேன்டூஸ் புயல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளது. சென்னையில் உள்ள கடற்கரைகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் மாற்றும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புப் பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி கடற்கரையின் மணல் பரப்பில் வீல் சேருடன் சென்று கடல் அலையில் விளையாடும் வகையில் மெரினா கடற்கரையில் சிறப்பு பாதையை அமைக்கும் பணி நடைபெற்றது. … Read more

புயலை சந்திக்கப் போகும் மகாபலிபுரம்: பொங்கும் கடல்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையைக் கடக்க உள்ள நிலையில் மாமல்லபுரம் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவாகி தீவிர புயலாகவும் மாறி சென்னையில் இருந்து சுமார் 270 கிலோமீட்டர் தெற்கு-தென்கிழக்கு மையம் கொண்டுள்ளது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுகுறைந்து இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே புயலாக கரையை கடக்க உள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று … Read more

Mandous Cyclone: மாண்டஸ் புயலால் வீட்டை இழந்து தவிக்கும் புதுச்சேரி மக்கள்!

புதுச்சேரி: மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் 10 க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் அலையில் அடித்து செல்லப்பட்டன. புதுச்சேரி அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட மக்கள் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரமடைந்து கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு புதுச்சேரிக்கும் – ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் … Read more

சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் சுமார் 500 வீடுகளை கடல்நீர் சூழ்ந்தது

மயிலாடுதுறை: சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் சுமார் 500 வீடுகளை கடல்நீர் சூழ்ந்துள்ளது. கடல் சீற்றத்தால் தாழ்வானபகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

மாண்டஸ் புயல் எதிரொலி: கோயம்பேடு மார்க்கெட்டில் தேக்கமடைந்த காய்கறிகள்

மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்ததால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வரும் வியாபாரிகள் வருவது சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 2000 டன் காய்கறிகள் தேக்கமடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் எதிரொலியாக சென்னை உட்பட வட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்தமழை பெய்துவருகிறது. நேற்று நள்ளிரவு முதல் சென்னை மாநகரில் விடிய விடிய மழை கொட்டிதீர்த்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த … Read more

மாண்டஸ் புயல்: எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் திறப்பு

மாண்டஸ் புயல்: எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் திறப்பு Source link

#BREAKING | மாண்டஸ் தீவிர புயல் வலுவிழந்தது – சற்றுமுன் வெளியான அதிகாரபூர்வ செய்தி!

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் ‘தீவிர’ புயலாக மாறி, சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 260 கி.மீ தொலைவில் மையம் கொண்டு இருஙக நிலையில், தற்போது வலுவிழந்து ‘புயலாக’ வலுவிழந்துள்ளது. வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது.  கடந்த 7ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் அது புயலாக வலுப்பெற்ற நிலையில், தற்போது அது சென்னையில் இருந்து தெற்கு, தென்கிழக்கே 260 கி.மீ. தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு, … Read more

கனமழை எதிரொலி – புழல், செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு

தொடர் மழை காரணமாக புழல் , செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது. மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து அரும் புயல் மாமல்லபுரம் அருகே இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் லேசான முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று … Read more

'அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுங்கள்' – சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தல் 

சென்னை: பொதுமக்கள் அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுமாறு சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. வங்கக் கடலில் நிலவிவரும் ‘மேன்டூஸ்’ புயல் தற்போது சென்னைக்கு தென் கிழக்கே 270 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது தீவிரப் புயலில் இருந்து புயலாக வலுவிழந்துள்ளது. புயலாக வலுவிழந்த நிலையிலேயே புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே இன்று (டிச. 9) நள்ளிரவு அல்லது அதிகாலை கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் … Read more

ரெட் அலர்ட் டூ மஞ்சள் அலர்ட்… தமிழகத்தில் அதீத கனமழை… புரட்டி எடுக்கும் மாண்டஸ் புயல்!

சென்னைக்கு 270 கிலோமீட்டர் தெற்கு – தென்கிழக்கில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்த 3 மணி நேரத்தில் புயலின் தீவிரம் குறையும். இதையடுத்து வடமேற்கு மற்றும் வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டி புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையில் இன்று நள்ளிரவு புயல் கரையை கடக்கவுள்ளது. அப்போது 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். அதிகபட்சமாக 85 கிலோமீட்டர் வேகம் வரை … Read more