முதல் முறையாக பேருந்து இயக்கம்.. மாலை அணிவித்து, ஆரத்தி எடுக்கும் கிராம மக்கள்.!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கோட்டையேந்தல் கிராமத்திற்கு சுதந்திரம் பெற்ற நாள் முதல் இதுவரை எந்தவித போக்குவரத்து வசதியும் இல்லாமல் பொதுமக்கள் தவித்துள்ளனர். இவர்கள் சாயல்குடி அல்லது இராமநாதபுரம் செல்ல வேண்டுமெனில் ஊரிலிருந்து 4 கிலோமீட்டர் சென்று அங்கிருந்து ராமநாதபுரம் சாயல்குடி சாலைக்கு சென்று பேருந்தில் செல்லும் நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் போக்குவரத்து வசதி வேண்டி நீண்ட நாள் கோரிக்கையை முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான … Read more

நாளை இந்த 2 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..!!

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த தாழ்வு நிலை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இது புயலாக மாறி நாளை வியாழக்கிழமை மாலையில் சென்னை- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழக கடலோர … Read more

முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் நிலையில் மேட்டூர் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து, அணை நீர் மட்டம் 119.72 அடியாக உள்ள நிலையில், இந்த ஆண்டில் இன்று மூன்றாவது முறையாக 120 அடியை எட்டவுள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 8,440 கன அடியாக இருந்தது. இன்று மாலை … Read more

தமிழகத்தை அச்சுறுத்தும் மாண்டஸ் புயல்; மீட்பு பணிகள் தீவிரம்.!

மாண்டஸ் புயல் தீவிரமடைந்து வரும் நிலையில் தென்மண்டல ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இயக்குனர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறும்போது, ‘‘தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னைக்கு கிழக்கே தென் கிழக்கு திசையில் 770 கி.மீ தொலைவில் உள்ளது. காரைக்கால் தென் கிழக்கே 690கி.மீ தொலைவில் நிலைகொண்டு உள்ளது. மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேலும் மாண்டஸ் … Read more

பிளேபாய் உதயநிதி – விமர்சிக்கும் அண்ணமாலை

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் உள்ள பள்ளிபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் டிட்கோ தொழில் பூங்கா அமைக்க 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசாணை வெளியிட்டது.  தொழில் பூங்கா அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, ‘நமது நிலம் நமதே’ என்ற பெயரில் குழு  அமைத்து  அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அன்னூர் – ஓதிமலை சாலையில் பாஜக … Read more

ஆம்பூர் அருகே அதிகாலை மணல் மாட்டுவண்டி மீது லாரி மோதி மாடு பலி: போலீசுக்கு பயந்து உடனடி அகற்றம்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே அதிகாலை மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டி மீது லாரி மோதியதில் மாடு இறந்தது. போலீசாருக்கு பயந்து உடனடியாக மாட்டை அப்புறப்படுத்திக்கொண்டு காயமடைந்தவர்கள் தப்பியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் இரவு, பகல் பாராமல் மணல் கடத்தல் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இதனை தடுக்க எஸ்பி பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் அருகே பாலாற்றில் இருந்து இன்று அதிகாலை மாட்டுவண்டியில் ஒரு … Read more

பாலியல் ஆரோக்கியத்தை பாழாக்குமா செக்ஸ் படங்கள்? உளவியலாளர்கள் கூறுவது என்ன?

பாலியல் ஆரோக்கியத்தை பாழாக்குமா செக்ஸ் படங்கள்? உளவியலாளர்கள் கூறுவது என்ன? Source link

4 மாதங்களுக்கு பின் கள்ளகுறிச்சி தனியார் பள்ளி வாழைமரம், தோரணம் கட்டி திறப்பு.! 

கள்ளக்குறிச்சி மாவட்டம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ மாணவி ஒருவர் கடந்த ஜூலை 12ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். விடுதியில் இருந்த அவர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.  இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியை சோதனை அடிப்படையில் வரும் டிசம்பர் 5 ஐந்தாம் தேதி முதல் ஒரு … Read more

பிரபல காமெடி நடிகர் சிவ நாராயணமூர்த்தி காலமானார்..!!

நடிகர் விசுவால் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டவர் சிவநாராயண மூர்த்தி. இவருடைய முதல் படம் பூந்தோட்டம். தமிழில் தொடங்கி கன்னடம், மலையாளம், தெலுங்கு எல்லாம் சேர்த்து 259 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலேயே நடித்துள்ள இவர், சிவாஜி, ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களுடன்நடித்திருக்கிறார். ரஜினியுடன் படையப்பா சந்திரமுகி படத்தில் நடித்திருப்பார். வடிவேலோட 20 படங்கள், விவேக்கோட 20 படங்கள் நடிச்சிருக்கார் விவேக், வடிவேலு காமெடிகளில் பிரபலமாக அறியப்பட்ட சிவநாராயண மூர்த்தி திடீர் … Read more