படை வீரர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்து தருவது நம் கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி நாள் செய்தி

சென்னை: படை வீரர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்து தருவது நம் மகத்தான கடமை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள கொடி நாள் செய்தி: இல்லத்தை மறந்து, எல்லையோரத்தில் பல இன்னல்களை தாங்கி, நாட்டுப்பற்று என்கிற நம்பிக்கையை மட்டும் இதயத்தில் ஏந்தி, இந்திய ஒருமைப்பாட்டுக்காக தவம் இருக்கிற முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, நம் சேமிப்பின் ஒரு பகுதியை ஒப்படைக்கும் உன்னத திருநாள், இந்த கொடிநாள். பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, … Read more

அம்பேத்கர் மணி மண்டபத்தில் இந்து மக்கள் கட்சி – வி.சி.க இடையே தள்ளுமுள்ளு

அம்பேத்கர் மணி மண்டபத்தில் இந்து மக்கள் கட்சி – வி.சி.க இடையே தள்ளுமுள்ளு Source link

பொள்ளாச்சியில் சுற்றி திரியும் ஒற்றை யானையால் குடியிருப்பு வாசிகள் அச்சம்..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக வனசரகமான ஆழியார், பட்டர்பிளை பார்க், நவமலை, கவி அருவி ஆகிய பகுதிகளில் மலைவாழ் மக்கள் வசியக்கூடிய பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்து வந்த ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருந்து வந்தது. ஒற்றை யானையை வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டுப்பகுதிக்கு விரட்டி அடித்தனர். அவ்வாறு விரட்டியடிக்கப்பட்ட யானை கடந்த சில நாட்களாக காட்டுப்பகுதியில் இருந்தது. இந்த நிலையில் காட்டூர் … Read more

அடாப்டிவ் டிராஃபிக் சிக்னல்: சென்னை நெரிசலைக் குறைக்க வருகிறது நுண்ணறிவு போக்குவரத்து திட்டம்

சென்னை: சென்னையில் இன்டெலிஜென்ட் டிரான்ஸ்போர்ட் சிஸ்டத்தை மாநகராட்சி செயல்படுத்த உள்ளது. இதில் 165 போக்குவரத்து சந்திப்புகள் மேம்படுத்தப்படவுள்ளன. சென்னை மாநகர் பகுதியில் 500-க்கு மேற்பட்ட போக்குவரத்து சிக்னல்களும், 200-க்கு மேற்பட்ட பெரிய அளவிலான போக்குவரத்து சந்திப்புகளும் உள்ளன. காலை மற்றும் மாலை நேரங்களில் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளன. இதன் காரணமாக வாகனங்கள் நீண்ட நேரம் சிக்னல்களில் காத்திருக்க வேண்டி உள்ளது. இந்த நேரங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் அவரச கால வாகனங்கள் குறித்த நேரத்திற்கு செல்ல … Read more

பற்ற வைத்த திருச்சி சூர்யா; பாஜகவில் பரபரப்பு; பாகம்-1

திமுக எம்.பி திருச்சி சிவா மகன் சூர்யா சிவா. தமிழக பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக இருந்து வந்தார். பாஜவுக்கு சென்ற பிறகு திமுக தலைமை மற்றும் முக்கிய நிர்வாகிகள் குறித்து வேற லெவலுக்கு விமர்சித்து பேசி வந்தார். இந்நிலையில், தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி தலைவராக இருக்கும் டெய்சி சரண் என்பவரை ஆபாசமாக பேசி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஒரு ஆடியோ வெளியாகி பாஜகவின் ஒட்டுமொத்த மானத்தையும் கப்பலில் ஏற்றியது. இந்த ஆடியோவில் … Read more

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது: ‘ஏகன் அநேகனாய்’ அருட்காட்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. தீபத்திருவிழா உற்சவத்தின் 10ம் நாளான நேற்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீப விழா நடந்தது. ஆதியும், அந்தமும் இல்லாத பரம்பொருளான இறைவன் ஒருவனே. நிலம், நீர், காற்று, ஆகாயம், பூமி எனும் பஞ்ச பூதங்களையும் அரசாளுகிற இறைவன், ஏகனாகவும் அதே நேரத்தில் அனேகனாகவும் அருள்புரிந்து, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து காரியங்களையும் … Read more

தாய் மொழி தமிழில் தத்தியான தமிழக மாணவர்கள் | உத்திர பிரதேசத்தை விட கீழ் சென்ற அவமானம்!

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில்  நடத்திய அடிப்படை கற்றல் குறித்த  ஆய்வில், தாய் மொழி தமிழில் தமிழக மாணவர்கள், உத்திர பிரதேசத்தை விட கீழ் சென்றுள்ள அவலம் அரங்கேறியுள்ளது.  நாடு முழுவதும் 86 ஆயிரம் மாணவர்களின் கற்றல் திறன் சோதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 336 பள்ளிகளைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு பயிலும் 2,937 மாணவர்களிடம் தமிழ் மற்றும் கணிதப் பாடங்களில் இருந்து வினாக்கள் எழுப்பப்பட்டன.  அதில், 20% மாணவர்களால் தான் தமிழை புரிந்து கொள்ள முடிகிறது; சுமார் … Read more

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்: 2026 முதல் சென்னையில் இயக்கம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட திட்டத்தில், ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான கட்டுப்பாட்டு அமைப்பை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உருவாக்க உள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெறுகின்றன. இவற்றில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த வகை மெட்ரோ ரயில் தயாரிப்பிற்கான 946 கோடியே … Read more

தமிழக பள்ளி மாணவர்கள் கற்றலில் குறைபாடு: ராமதாஸ் முக்கிய கோரிக்கை..!

பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலமே மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும். அதைக் கருத்தில் கொண்டு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மட்டுமின்றி, வகுப்புக்கு ஓர் ஆசிரியர் வீதம் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; தமிழகத்தில் மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 20 விழுக்காட்டினரால் தான் தமிழ் சொற்களை புரிந்து கொள்ள முடிகிறது; 23 விழுக்காட்டினரால் தான் அடிப்படை கணிதத்தை மேற்கொள்ள முடிகிறது … Read more