ரூ.2 லட்சம் கட்டணம்; நட்சத்திர விடுதிக்கு நிகரான சொகுசு – முதல்வர் ஸ்டாலின் பயணிக்கும் ‘சலூன் கோச்’

சென்னை: தென்காசி சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் பயணம் செய்யும் சொகுசுகள் நிறைந்த ரயில் பெட்டி கவனம் ஈர்த்துள்ளது. தென்காசியில் நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தென்காசி மாவட்டம் உதயமான பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக பங்கேற்கும் அரசு விழா நடைபெறுகிறது. தென்காசியை அடுத்த இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (8-ம் தேதி) … Read more

ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகம் போல் செயல்படுகிறது – முத்தரசன் காட்டம்!

தமிழக ஆளுனரை திரும்பபெற வலியுறித்தி வரும் 29 ம்தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுனர் மாளிகையை முற்றுகையிட உள்ளதால், அது குறித்து தருமபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஜி 20 மாநாடு கொடியில் பாஜகவின் தேர்தல் சின்னம்… அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: ஜி 20 மாநாட்டை தலைமை தாங்கி நடத்த இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது இந்தியாவுக்கு … Read more

அரசு அலுவலகங்கள் மக்கள் எளிதில் செல்லும் வகையில் இருக்கவேண்டும்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் அரசு அலுவலகங்கள் இருக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த குணசீலன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘உடன்குடி பத்திரப் பதிவு அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கியது. இங்கிருந்து 4 கி.மீ தூரத்தில் தானமாக வழங்கப்பட்ட இடத்தில் நிரந்தர அலுவலகம் கட்ட முடிவு செய்துள்ளனர். உடன்குடி பேருந்து நிலையம் அருகே வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் சுமார் 3 ஏக்கருக்கு … Read more

ஆம்பூர் அருகே பரபரப்பு.! மாமியாரை அடித்து கொன்ற மருமகன் கைது.!

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாமியாரை அடித்து மருமகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சின்ன வெங்கடாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி ஹேமாவதி (57). இவர்களது மகள் உஷாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி பிரேம்குமார் (29) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் உஷாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு … Read more

புயல் எச்சரிக்கை: தமிழகத்தில் மீனவர் குடியிருப்பு பகுதிகளில் மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகும் புயல் சின்னம் மற்றும் கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம், தனது 07-12-2022 நாளிட்ட அறிவிக்கையில், நேற்று (டிச.6) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவியிருந்த நன்கமைந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு … Read more

'நெய்வேலியை நந்திகிராமம், சிங்கூராக மாற்றிவிடக் கூடாது' – அன்புமணி ராமதாஸ்

நெய்வேலியை நந்திகிராமம், சிங்கூராக மாற்றி விட வேண்டாம் எனவும், மக்களின் பக்கம் நின்று, கடலூர் மாவட்டத்தில் இருந்து வெளியேறும்படி என்.எல்.சி நிர்வாகத்தை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: என்.எல்.சி சுரங்கத்திற்கு நிலம் தர முடியாது என்று நெய்வேலி பகுதி மக்கள் திட்டவட்டமாக கூறி விட்ட நிலையில், … Read more

 நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையில் சிக்கிய மாணவி

திருமலை: ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், அன்னவர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகலா(20). இவர் துவ்வாடாவில் உள்ள கல்லூரியில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சசிகலா வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக குண்டூர்- ராயகடா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி துவ்வாடாவிற்கு நேற்று காலை வந்துள்ளார். துவ்வாடா ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தபோது ​​ரயில் நிற்பதற்குள் சகிகலா இறங்க முயன்றுள்ளார். அப்போது, கால் தவறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் நடுவில் விழுந்து சிக்கிக் கொண்டார். உடனே, ரயில் நிறுத்தப்பட்டது. அவரது கால் … Read more

முதல் முறையாக பேருந்து இயக்கம்.. மாலை அணிவித்து, ஆரத்தி எடுக்கும் கிராம மக்கள்.!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கோட்டையேந்தல் கிராமத்திற்கு சுதந்திரம் பெற்ற நாள் முதல் இதுவரை எந்தவித போக்குவரத்து வசதியும் இல்லாமல் பொதுமக்கள் தவித்துள்ளனர். இவர்கள் சாயல்குடி அல்லது இராமநாதபுரம் செல்ல வேண்டுமெனில் ஊரிலிருந்து 4 கிலோமீட்டர் சென்று அங்கிருந்து ராமநாதபுரம் சாயல்குடி சாலைக்கு சென்று பேருந்தில் செல்லும் நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் போக்குவரத்து வசதி வேண்டி நீண்ட நாள் கோரிக்கையை முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான … Read more

நாளை இந்த 2 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..!!

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த தாழ்வு நிலை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இது புயலாக மாறி நாளை வியாழக்கிழமை மாலையில் சென்னை- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழக கடலோர … Read more