என்எல்சி முன் 26ம் தேதி போராட்டம் வேல்முருகன் பேட்டி

கடலூர்: என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் மற்றும் வீடு கொடுத்த விவசாயிகளின் போராட்ட கூட்டமைப்பு சார்பில், அனைத்து கட்சி கூட்டம் கடலூரில் நடந்தது. தவாக, விசிக, கம்யூனிஸ்ட்டுகள், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் ஏராளமான விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பின்னர் தவாக தலைவர் வேல்முருகன் கூறுகையில், என்எல்சி நிறுவனம், 53 கிராமங்களில் விவசாயிகளிடமிருந்து ஏராளமான நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. நிரந்தர வேலை, வேலை பெற விரும்பாதவர்களுக்கு வயது, கல்வி தகுதி அடிப்படையில் ரூ.50 லட்சம் இழப்பீடு … Read more

மாண்டஸ் புயல் முன் எச்சரிக்கை: தமிழக அரசுக்கு ராமதாஸ்- நெட்டிசன்கள் பாராட்டு

மாண்டஸ் புயல் முன் எச்சரிக்கை: தமிழக அரசுக்கு ராமதாஸ்- நெட்டிசன்கள் பாராட்டு Source link

இவர்களுக்கு மானியத்துடன் கடனுதவி – கலெக்டர் தகவல்..!!

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மானியத்துடன் கூடிய சுயதொழில் கடனுதவி திட்டங்களுள் ஒன்று, மத்திய, அரசின் 60 சதவீத நிதிப்பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்துதல் வகைப்பாட்டின் கீழ் அடங்கும் பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், ஊறுகாய், வற்றல், அரிசி ஆலை, உலர் மாவு மற்றும் ஈர மாவு தயாரித்தல், உணவு எண்ணெய் … Read more

உள் தமிழகத்தில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி – 12 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் உள் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடலில் வெள்ளிக்கிழமை நிலை கொண்டிருந்த ‘மேன்டூஸ்’ புயல், சனிக்கிழமை அதிகாலை மாமல்லபுரத்துக்கு அருகே கரையைக் கடந்தது. அது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்து, வட தமிழக பகுதிகளில் நிலவுகிறது. … Read more

கொடைக்கானலில் 2வது நாளாக சுற்றுலா செல்ல தடை

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மாண்டஸ் புயல் காரணமாக கடந்த டிச.8ம் தேதி இரவு பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ய துவங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் முழுவதும் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக கொடைக்கானல் நகர்ப்பகுதி, வனப்பகுதி மற்றும் சாலைகளில் ஆங்காங்கு ராட்சத மரங்கள் வேருடன் சாய்ந்தன. மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், தூண் பாறை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு … Read more

மக்கள் அவதி..!! செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த மழையால் 2 தரை பாலங்கள் மூழ்கின..!!

செங்கல்பட்டு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பாலூர் அருகே குருவன்மேடு, வேண்பாக்கம், வடக்குப்பட்டு, ரெட்டிபாளையம் உள்ளிட்ட10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்களின் பணிக்காக நாள்தோறும் செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு, ரெட்டிப்பாளையத்தில் உள்ள 2 தரைப்பாலங்கள் வழியாக சென்று வருவது வழக்கம். மாவட்டத்தில் பெய்த பலத்த மழையினால் ரெட்டிப்பாளையத்தில் உள்ள 2 தரைப்பாலங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று காலை … Read more

மாண்டஸ் புயல் பாதிப்பு | இதுவரை 4 பேர் உயிரிழப்பு, 98 கால்நடைகள் பலி, 198 வீடுகள் சேதம் – முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: “முன்கூட்டியே திட்டமிட்டால் எந்த வகையான பேரிடரையும் எதிர்கொள்ள முடியும் என்று இந்த அரசு செய்து காட்டியுள்ளது” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மாண்டஸ் புயலைத் தொடர்ந்து சென்னை, காசிமேட்டில் உள்ள மீனவ பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.10) நேரில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, “தென்காசி, மதுரையில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நேற்று சென்னை திரும்பினேன். நேற்று இரவோடு இரவாக சென்னை அவரச கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்தேன். இதனைத் … Read more

சேலம் அரசு மருத்துவமனையில் சென்னை கைதிக்கு கஞ்சா, செல்போன் கொடுத்த ஏட்டு; ஆயுதப்படைக்கு இடமாற்றம்

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் கைதிகள் சிகிச்சை பெறும் ஸ்ட்ராங்க் ரூம் பிரிவுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு, சேலம் மத்திய சிறையில் இருந்து சென்னையை சேர்ந்த கொலை வழக்கு கைதி மணிகண்டன் என்பவர் சிறுநீரக பாதிப்பு சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் நேற்று முன்தினம், மாநகர ஆயுதப்படையை சேர்ந்த ஏட்டு மணி உள்ளிட்ட 4 போலீசார் இருந்துள்ளனர். கைதிக்கு செல்போன் மற்றும் கஞ்சா பொட்டலத்தை ஏட்டு மணி கொடுத்துள்ளார். அந்த கைதி, செல்போனில் … Read more

மாண்டஸ் புயல் பாதிப்பு | சென்னையில் விழுந்த 127 மரங்களில் இதுவரை 100 மரங்கள் அகற்றம்

சென்னை: சென்னையில் போக்குவரத்து சீராக இயங்கி வருவதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்துள்ள நிலையில், சென்னையில் மீட்பு பணியில் சென்னை மாநகராட்சி, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் போக்குவரத்து நிலைமை குறித்து சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னையில் மழைநீர் பெருக்கு காரணமாக எந்த சுரங்க பாதையும் மூடப்படவில்லை. சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்படவில்லை. போக்குவரத்து வழக்கம் போல் அனுமதிக்கப்பட்டு வருகிறது. … Read more

ஏற்காட்டில் கடும் பனிமூட்டம் ஏரியில் படகு சவாரிக்கு தடை  

ஏற்காடு: சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக மழை நீடிக்கிறது. இதன் காரணமாக ஏற்காட்டில் கடும் குளிரும், கடும் பனிமூட்டமும் காணப்படுகிறது. மழையால் ஏற்காட்டில் நேற்றுமுன்தினம் இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அங்குள்ள 50க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் மட்டுமன்றி, நகரியத்திலும் மின்தடை தொடர்ந்து நீடித்தது. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அவதி அடைந்தனர். மேலும் சாலை தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் அங்குள்ள வாகனஓட்டிகள், சுற்றுலா … Read more