மாண்டஸ் புயல் பாதிப்பு | ஈஞ்சம்பாக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை ஈஞ்சம்பாக்கம், பாலவாக்கம், ஒட்டிவாக்கம் ஆகிய பகுதிகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு புயல் நிவாரணப் பொருட்களை வழங்கினார். அப்போது அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, மாநகராட்சி, காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இருந்தனர். முன்னதாக, வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 3 மணியளவில் முற்றிலுமாக கரையைக் கடந்தது. புயல் … Read more

மீனவர்களுக்கு உடனடி நிவாரணம்: முதல்வர் போட்ட உத்தரவு!

புயல் காற்றால் மீனவர்களின் படகுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் மீனவர்கள் அரசு தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். மாண்டஸ் புயல் இன்று (டிசம்பர் 10) அதிகாலை 2.30 மணியளவில் கரையைக் கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளதாகவும் சில … Read more

புயல் காற்றில் சரிந்த ராட்சத பேனர்; ஆபத்தான முறையில் பணியில் ஈடுபட்ட JCB ஊழியர்!

மாண்டஸ் புயல் காரணமாக கன மழையுடன் பலத்த காற்று வீசக்கூடும் என்பதினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள வணிக வளாகங்களில் உள்ள ராட்சத பேனர்களை அகற்றும் பணியினை கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாநகராட்சி நிர்வாகமானது மேற்கொண்டது. இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரத்தில் நேற்று நள்ளிரவில் பெய்த கன மழையின் போது பலத்த காற்று வீசியதில்  காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் சாலையில் இயங்கி வரும் பிரபல தனியார் கடைக் கடையின் ராட்சத பேனரின் … Read more

குறைந்த காலத்தில் கூடுதல் லாபம் கிடைப்பதால் சூரியகாந்தி சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

*4 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் கரூர் : கரூர் மாவட்டத்தில் குறைந்த காலத்தில் கூடுதல் லாபம் கிடைப்பதால், விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் 4 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இந்தியா முழுவதும் பணப் பயிராக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை குறிப்பாக நிலக்கடலை ரப்பர், பருத்தி, புகையிலை , பருத்தி, நிலக்கடலை மற்றும் எண்ணெய் வித்துக்கள் மற்றும் எள் உள்ளடக்கிய பயிர்கள் முக்கியத்துவம் பெற்று வந்தன. ஆனால் கடந்த … Read more

தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்பி-யின் கேள்வியும் அமைச்சரின் பதிலும்

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது பற்றி நாடாளுமன்றத்தில் நான் எழுப்பியிருந்த கேள்விக்கு (எண் 632ஃ 09.12. 2022) ஒன்றிய வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் பதில் அளித்துள்ளார் என மதுரை எம்பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அமைச்சர் அளித்துள்ள பதிலில் தமிழக மீனவர்கள் 2019-இல் 190 பேர், 2020-இல் 74 பேர், 2021-இல் 143 பேர், 2022-இல் 219 பேரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 21 பேர் இன்னும் சிறைகளில் இருக்கிறார்கள். கைப்பற்றப்பட்ட … Read more

திருவள்ளூரில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் ஆறு பசு மாடுகள் பலி..!!

திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த பெருமாள்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கோவில்குப்பம் பகுதியில் சம்பத் என்வரது நிலத்தில் அதே பகுதியைச் சேர்ந்தவர்களின் ஆறு பசு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. நேற்று பெய்த மழையில் அப்பகுதி வழியே சென்ற மின் கம்பங்களுக்கு இடையே சென்ற குறைந்த அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் ஆறு பசு மாடுகளும் பலியாகின. இது குறித்து தகவலறிந்த செவ்வாப்பேட்டை காவல்துறையினர், மின்வாரிய ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து ஆய்வுப் … Read more

நடிகரா இல்லன்னா, இந்நேரம் கம்பி எண்ணிட்டு இருந்திருப்பார்: ஐகோர்ட் அதிரடி..!

சட்டம் அனைவருக்கும் சமமாக பொருந்தும். மோகன்லால் சாதாரண மனிதராக இருந்திருந்தால் இந்நேரம் சிறையில் இருந்திருப்பார் என்று கேரள நீதிமன்றம் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது. பிரபல நடிகர் மோகன்லால் வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் நான்கு ஜோடி யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து மோகன்லால் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை திரும்பப் பெறுவதாக பெரும்பாவூர் நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட … Read more

மாண்டஸ் புயல் | அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 25 செ.மீ மழை பதிவு: சென்னையில் சராசரியாக 10 செ.மீ மழை 

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 25 செ.மீ மழை பதிவாகி உள்ளது. சென்னையில் சராசரியாக 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் இன்று (டிச.10) அதிகாலை 3 மணியளவில் முற்றிலுமாக கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்த போது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கத்தில் 25 செ.மீ. … Read more

வீடியோ காலில் கலெக்டர்களை கூப்பிட்ட ஸ்டாலின்!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் “மாண்டஸ்” புயல் சின்னம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை (Red Alert) விடப்பட்டுள்ள மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களிடம் கள நிலவரம் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து உரையாடினார். அதன் விவரம் பின்வருமாறு; “முதல்வர் ஸ்டாலின்: உங்கள் மாவட்டத்தின் நிலவரம் எப்படி இருக்கிறது? செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் : நானும், கண்காணிப்பு அலுவலரும் (Monitoring Officers) மாமல்லபுரத்தில் இருக்கிறோம். முதல்வர் ஸ்டாலின்: மாமல்லபுரத்தையொட்டிள்ள … Read more

மாண்டஸ் புயல் பாதிப்பிலிருந்து தமிழ்நாடு தப்பித்துவிட்டது – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்தில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது 70 முதல் 80 கிமீவரை காற்று பலமாக வீசியது. மேலும் மழையும் கொட்டி தீர்த்தது. இதனால் சென்னையில் பல இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன. புயல் பாதிப்புக்குள்ளான இடங்களில் இருந்து மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் கரையை கடந்ததை அடுத்து சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்தச் சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,கொட்டிவாக்கம், … Read more