திருவண்ணாமலை தீபத் திருவிழா: 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்கு பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வரின் உத்தரவின்படி, 2022- திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பொதுமக்கள் வந்து செல்வதற்கு வசதியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 5-ம் தேதியிலிருந்து வரும் 7-ம் தேதி வரை 2,700 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது. திருவண்ணாமலை திருக்கோயிலில் இன்று (டிச.6) கார்த்திகை … Read more

இவர்கள் இருக்கும் வரை பாஜக வெற்றி பெறாது.. கொளுத்திப்போட்ட திருச்சி சிவா..

தமிழக பாஜக ஓபிசி பிரிவின் மாநில தலைவராக இருந்தவர் திருச்சி சூர்யா சிவா. இவர் அண்மையில் மாநில சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணிடம் பேசிய ஆடியோ விவகாரத்தால் பதவியை இழந்தார். இருப்பினும், கட்சி உறுப்பினராக நீடிக்கலாம் என்றும் நேரம் வரும்போது பதவி தேடி வரும் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வந்த திருச்சி சூர்யா இன்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் அவர் அண்ணாமலைக்கு போட்ட பதிவொன்றில் … Read more

அம்பேத்கர் மணிமண்டபத்தில் அர்ஜூன் சம்பத் மீது செருப்பு வீச்சு… விசிகவினர் கைது

சட்டமாமேதை புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, இந்து மக்கள் கட்சியினர் சார்பில் பல்வேறு இடங்களில் விபூதி பூசியவாறும், காவிச் சட்டை அணிந்தவாறும் உள்ள அம்பேத்கர் படத்துடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டியிருந்தனர்.  மேலும் அந்த போஸ்டரில், ‘காவித் தலைவனின் புகழை போற்றுவோம்’ என சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு கடும் கண்டனம் வலுத்த  நிலையில், சென்னை அடையாறு அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த, இந்து … Read more

ஆனந்தூர் அருகே சாலை தரைப்பாலம் சேதம் மேம்பாலம் கட்டித் தர வேண்டும்: பொதுமக்கள் வேண்டுகோள்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆனந்தூர் அருகே சாலை தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால், மேம்பாலம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனந்தூர் அருகே பச்சனத்தின்கோட்டை அருகே ஆற்றின் குறுக்கே நீண்ட காலங்களுக்கு முன்பு ஒரு தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக ஆனந்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயணித்து வருகின்றனர். இந்த சாலையை மழை காலங்களில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆனந்தூர், ராதானூர், சருகனி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தால், அதன் … Read more

மதுரை: மாணவனை பிரம்பால் அடித்த தலைமையாசிரியர்… இறுதியில் மாணவனுக்கு நேர்ந்த துயரம்!

மதுரையில் 9ஆம் வகுப்பு பள்ளி மாணவனை தலைமை ஆசிரியர் அடித்ததில், அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீட்டிலயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மாணவனின் பெற்றோர் புகார் மனு அளித்துள்ளனர். மதுரை மாவட்டம் தாடையம்பட்டி மாணிக்கம் (43) சசிகலா தம்பதியினரின் மூத்த மகனான நாகராஜ் அதே ஊரில் உள்ள அரசு கள்ளர் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதியன்று பள்ளிக்கு … Read more

கல்வி உதவித் தொகை.. அன்று பாஜக.. இன்று காங்கிரஸ்.. போராட்டத்துக்கு தயாராகும் எம்.எல்.ஏ.க்கள்!

கல்வி உதவித் தொகை.. அன்று பாஜக.. இன்று காங்கிரஸ்.. போராட்டத்துக்கு தயாராகும் எம்.எல்.ஏ.க்கள்! Source link

கூடுதல் விலைக்கு மது விற்பனை : ரூ 4.61 கோடி அபராதாமாக வசூலித்த டாஸ்மாக் நிர்வாகம்!

கூடுதல் விலைக்கு மது விற்பனை விவகாரம் : தமிழகத்தில் 852 டாஸ்மாக் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற புகாரில் டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர்களிடம் இருந்து ரூ 4.61 கோடி அபராதாமாக டாஸ்மாக் நிர்வாகம் வசூலித்துள்ளது. இது குறித்து தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவிக்கையில், “தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற 852 மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக நிர்வாகம் … Read more

அம்பேத்கரை ஒரு சாதிக்குள் அடைத்து சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் திருமாவளவன்: தமிழக பாஜக குற்றச்சாட்டு 

சென்னை: “அடக்குமுறையை கொண்டோ, ரவுடித்தனத்தைக் கொண்டோ பாஜகவை அடக்கிவிடலாம் என்று யாரேனும் நினைத்தால் பாஜக அடங்க மறுத்து அடக்கி ஆளும் அத்துமீறலை முறியடிக்கும்” என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அண்ணல் அம்பேத்கர் சிலைகளை, அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தை சொந்தம் கொண்டாடி கொண்டிருக்கின்றனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பன்முகம் கொண்ட ஒரு தேசிய தலைவர். அவரை ஒரு … Read more

சிம்புவுக்கு கல்யாணம் ஆகணும்.. வழக்கறுத்தீஸ்வரரிடம் கோரிக்கை வைத்த டி. ராஜேந்தர்

எல்லா வழக்குகளையும் தீர்க்கும் இக்கடவுளிடமே சிலம்பரசனின் திருமண சிக்கலை தீர்க்க வேண்டியுள்ளதாக வழக்குகளை தீர்க்கும் தளமாக விளங்குகின்ற காஞ்சிபுரம் ஸ்ரீ வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயிலில் சாமி தரிசனத்திற்கு பின் திரைப்பட இயக்குனரும்,நடிகருமான டி.ராஜேந்தர் பேட்டி. திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவரும், லட்சிய திமுகவின் நிறுவன தலைருமான டி.ராஜேந்தர் இன்று கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில் மற்றும் காமாட்சி அம்மன் திருக்கோயில் சாமி தரிசனம் செய்தார். அப்போது, டி.ராஜேந்தர் தனது மகன் … Read more