மாண்டஸ் புயல் | தமிழகத்தில் எங்கெங்கு கனமழை, அதி கனமழை வாய்ப்பு? – முழு விவரம்

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக டிசம்பர் 10-ம் தேதி வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும். நாளை (டிச.9) காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார். சென்னையில் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் வியாழக்கிழமை (டிச.8) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் … Read more

அண்ணாமலையை தூக்க இவர்தான் சரி.. காயத்ரி ரகுராம் வியூகம் எடுபடுமா..?

பாஜகவில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்பட்டுள்ள காயத்ரி ரகுராம் தினம் தினம் அண்ணாமலையை மறைமுகமாக சாடி வருகிறார். கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது மட்டுமல்லாமல் அவர் வகித்து வந்த பதவியை இசை அமைப்பாளர் தீணாவுக்கு கொடுத்தது காயத்ரி ரகுராமால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில், தனிப்பட்ட முறையில் அண்ணாமையை எதிர்த்து எதுவும் பேச முடியாமல் உள்ள காயத்ரி ரகுராம், பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் பக்கம் சாய்ந்துள்ளார். கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த திருச்சி சூர்யா … Read more

கூடலூர் அருகே மூதாட்டியைக் கொன்ற மக்னா யானை 18 நாட்களுக்கு பின் பிடிபட்டது

நீலகிரி: கூடலூர் அருகே தேவாலாஉள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை இடித்து குடியிருப்பில் உள்ள அரிசியை விரும்பி உண்ணும் பழக்கத்தை கொண்ட தந்தம் இல்லாத PM2 மக்னா ஆண் காட்டு யானை வாளவயல் குடியிருப்பு பகுதியில் நுழைந்து குடியிருப்புகளை இடித்து மூதாட்டி ஒருவரை தாக்கிக் கொன்றது. இந்நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை பிடிக்க வேண்டும் வனஅப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து வனத்துறையினர் அதிநவீன ட்ரோன் கேமராக்களை கொண்டு யானையை கண்காணிக்கும் … Read more

TNTET Answer Key; ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி ஆன்சர் கீ வெளியீடு; டவுன்லோட் செய்வது எப்படி?

TNTET Answer Key; ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி ஆன்சர் கீ வெளியீடு; டவுன்லோட் செய்வது எப்படி? Source link

வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றிய மகன்.! ஆத்திரத்தில் கத்தியால் குத்திய தந்தை.! சென்னையில் பரபரப்பு

சென்னையில் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றிய மகனை தந்தை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கொடுங்கையூர் எழில்நகர் ஏ.பிளாக்கில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி உதயகுமார். இவரது மகன் விக்னேஷ் (23) கோயம்பேட்டில் உள்ள டிராவல்ஸ் அலுவலகத்தில் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் மது குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் ஊரை சுற்றி வந்ததால், இதனை அவரது தந்தை கண்டித்துள்ளார். மேலும் இது தொடர்பாக இருவர் … Read more

புயல், மழை நேரத்தில் பாதிப்பை தவிர்க்க ஆலோசனை..!

புயல் போன்ற பேரிடரை நம்மால் தடுக்க முடியாது. ஆனால், முன்னெச்சரிக்கையாக இருந்தால் சேதம், உயிர் பலியை பெருமளவு தவிர்க்கலாம். அதற்கான வழிமுறைகளை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. புயல், மழை நேரத்தில் செய்ய வேண்டியவை:1070 மற்றும் 1077 ஆகிய அவசர கால தொடர்பு எண்களை நினைவில் வைத்துக் கொள்ளவும். முதலுதவி பெட்டியை தயாராக வைத்திருப்பது நல்லது. வீட்டின் அருகில் இருக்கும் கழிவு நீர் வடிகால்களை சுத்தமாக வைத்திருக்கவும். பிரட், பிஸ்கட் போன்றவைகளை கையிருப்பில் வைத்திருக்கவும். கழிவு நீர் … Read more

மணிக்கு 11 கி.மீ வேகத்தில் நகரும் மாண்டஸ் புயல்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயலின் நகரும் வேகம் மணிக்கு 6 கி.மீட்டர் என்பதில் இருந்து 11 கி.மீட்டராக அதிகரித்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயலின் வேகம் வியாழக்கிழமை காலை நிலவரப்படி மணிக்கு 6 கி.மீட்டர் என்று இருந்தது. இந்நிலையில், புயலின் வேகம் மணிக்கு 11 கி.மீட்டராக அதிகரித்து நகர்ந்து வருகிறது. சென்னையிலிருந்து … Read more

நரிக்குறவர் என குறிப்பிட வேண்டும்: நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி., திருத்த நோட்டீஸ்!

நரிக்குறவர் சாதியைப் பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கான சட்ட மசோதாவில் ‘ர் ’ விகுதியோடு குறிப்பிட வேண்டும் என நாடாளுமன்றத்தில் விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் திருத்த நோட்டீஸ் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். வல்லுநர் குழுக்களான லோகூர் குழு 1965 ஆம் ஆண்டிலும், நாடாளுமன்றக் கூட்டுக் குழு 1967 ஆம் ஆண்டிலும், இந்த சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்துரைத்தன. … Read more

கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி காத்திருந்து தரிசனம்: பர்வத மலையில் பக்தர்கள் திரண்டனர்; மகா தீபத்தை இன்றுவரை தரிசிக்கலாம்

கலசபாக்கம்: கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு பர்வதமலையில் திரளான பக்தர்கள் காத்திருந்து பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பர்வத ராஜ மன்னனுக்கு மகளாக அவதரித்த பார்வதி தேவி ஈசனின் உடலில் இடப்பக்கம் வேண்டி காஞ்சிபுரத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த போது இம்மலையின் அடிவாரத்தில் பச்சையம்மன் ஆக தவமிருந்து இறைவனை வணங்கினார். எனவே இது பர்வத மலை என அழைக்கப்படுகிறது. வட இந்தியாவில் இறைவனுக்கு பக்தர்களே அபிஷேகம் செய்வது போல இங்கு நாமே அபிஷேக ஆராதனைகள் செய்யலாம். … Read more

#BigBreaking | மாண்டஸ் புயல் எதிரொலி | முக்கிய தேர்வு தள்ளிவைப்பு – 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு!

தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவு ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்று, காரைக்காலுக்கு தென்கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 550 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் கொடுத்த தகவல்படி, மாண்டஸ் புயல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே நாளை நள்ளிரவில் கரையை கடக்கும். இதன்காரணமாக வடதமிழகம், புதுச்சேரி, தென் ஆந்திர மாவட்டங்களில்  மிக கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. மேலும், புயல் கரையை … Read more