திருப்பூர் காங்கேயம் அருகே கார் மீது லாரி மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் காங்கேயம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த விஸ்வநாதன், மணி, ரமணன் ஆகியோர் உயிரிழந்துள்ளார். 

விபத்தில் சிக்கிய அரசு ஊழியரை வேடிக்கை பார்த்த மற்றொரு அரசு ஊழியரும் பலி

போரூர் அருகே நின்றிருந்த வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் அரசு ஊழியர்கள் உயிரிழப்பு விபத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்ற மற்றொரு அரசு ஊழியரும் உயிரிழந்தார் சென்னை அம்பத்தூர் அடுத்த ஒரகடம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் யோவான் (52), தாம்பரம் மாநகராட்சியில் உதவியாளராக பணிபுரிந்து வந்த இவர், வேலை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார், அப்போது தாம்பரம் – மதுரவாயல் பைபாசில் போரூர் ஏரி அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத … Read more

தளபதி 67 பூஜை… விஜய்க்கு போட்டியாக பாலகிருஷ்ணா… டாப் 5 சினிமா செய்திகள்

தளபதி 67 பூஜை… விஜய்க்கு போட்டியாக பாலகிருஷ்ணா… டாப் 5 சினிமா செய்திகள் Source link

திருவண்ணாமலை : கார்த்திகை தீபத் திருவிழா.. இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்.!

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. தமிழத்தில் சிறப்பு வாய்ந்த கோவிலாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் பௌர்ணமி கிரிவலம் என பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத் திருவிழா மிகவும் பிரபலமானதாகும்.  கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவண்ணாமலை மாவட்ட அருணாச்சலேஸ்வரர் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து … Read more

போலீஸார் போக்சோ வழக்குகளில் அவசரப்படக்கூடாது : டிஜிபி

18 வயதுக்கு குறைந்தோரின் காதல், திருமணம் போன்ற விவகாரங்களில் அவசரப்பட்டு போக்சோ பிரிவில் கைது நடவடிக்கை எடுக்க கூடாது என அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். உயர்நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு மற்றும் போக்சோ குழுவினர் வழங்கிய அறிவுரைகள் தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், டிஜிபி இதனை குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதிலாக சம்மன் அனுப்பி மனுதாரரை விசாரணை செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரம் வழக்கு கோப்பில் பதிவு செய்து அதற்கான காரணத்தையும் … Read more

செங்கம் அருகே சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: செங்கம் அருகே அரசுப் பேருந்தும், 2 லாரிகளும் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் இரவு அரசுப் பேருந்து புறப்பட்டது. பண்ருட்டியைச் சேர்ந்த மணிவாசகம் என்பவர் பேருந்தை ஓட்டிச் சென்றார். கடலூரைச் சேர்ந்த இளவரசன் என்பவர் நடத்துநராக இருந்தார். பேருந்தில் 50-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை சென்றபோது, சென்னையில் இருந்து … Read more

கார்த்திகை தீப திருவிழா – திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் டிசம்பர் 6ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. கடந்த நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவின், முக்கிய நிகழ்வாக டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். இதைத் தொடர்ந்து மாலையில் பஞ்சமூர்த்திகள் தரிசனம்,அர்த்தநாரீஸ்வரர் தரிசனத்தை தொடர்ந்து, கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயர மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். மகா தீபத்தன்று மலையில் ஏற 2500 பேருக்கு … Read more

கள்ளக்குறிச்சி கலவரத்தில் பாதிக்கப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி திறப்பு: முகப்பில் தோரணம், வாழைமரம் கட்டி மாணவர்களுக்கு வரவேற்பு..!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவரத்தில் பாதிக்கப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தை கண்டித்து கடந்த ஜூலை 17ம் தேதி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பள்ளியில் உள்ள பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து, பள்ளி மூடப்பட்டது. தற்போது பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதால், இ.சி.ஆர்., மற்றும் சக்தி பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிக்கும்படி உத்தரவிடக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு … Read more

கன்னியாகுமரி கடல்பகுதியில் கனமழை: கடலுக்குச் செல்லாமல் கரையில் காத்திருக்கும் கலன்கள்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார கடல் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாத நிலையில் படகுகளை கரையிலேயே நிறுத்தி வைத்துள்ளனர். தமிழகத்தில் குமரிக்கடல் மற்றும் கேரளா கடல் பகுதிகளில் நிலவும் வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விடிய விடிய … Read more