மதுரை: ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி –அலாரம் அடித்ததால் தப்பிய பணம்

மதுரையில் நள்ளிரவில் ஏடிஎம் மிஷினை உடைத்து திருட முயன்று அலராம் அடித்ததால் தப்பியோடிய இளைஞர். சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பரவை பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது இந்நிலையில், நேற்று நள்ளிரவு ஹெல்மெட் அணிந்தபடி ஏடிஎம்-ல் புகுந்த இளைஞர் ஒருவர் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளார். அப்போது ஏடிஎம் மையத்தில் உள்ள அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து இளைஞர் தப்பியோடியுள்ளார். இதனால் ஏடிஎம் மெஷினில் இருந்த பல … Read more

'அதிமுகவின் கடைசி 4 ஆண்டு கால ஆட்சி தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய பேரிடர்' – முதல்வர் ஸ்டாலின் 

சென்னை: 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கடைசி நான்கு ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சியை தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய பேரிடர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ” உழைப்பவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு உண்டு என்பதற்கு சுந்தரைப் போன்றவர்கள் இந்தக் கழகத்தில் ஏராளமாக இருக்கிறார்கள். பதவி வரும், போகும். கழகம்தான் நம்முடைய அடையாளம். நம்முடைய இயக்கம். நம்முடைய உயிர் மூச்சு. அப்படிப்பட்ட இயக்கத்தை … Read more

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை… இடி, மின்னல், காற்று எச்சரிக்கை..!

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள மழை முன்னறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8-ம் தேதி வடதமிழகம்- புதுவை, மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் … Read more

கிருஷ்ணகிரி வனப்பகுதிகளில் அபாயங்களை தவிர்க்க 300 கி.மீ., தூரத்திற்கு யானை தாண்டா அகழிகள் சீரமைப்பு; விரைவாக நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி காப்புகாடுகளில் 270 யானைகள் முகாமிட்டுள்ளது. இவை கிராமங்களுக்குள் புகுந்து ஏற்படுத்தும் அபாயங்களை தவிர்க்க 300 கிலோமீட்டர் தூரத்திற்கு யானை தண்டா அகழிகளை சீரமைக்கும் பணி, துரித கதியில் நடந்து வருகிறது. மேலும் வனத்துறை சார்பில் தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறது.  தமிழக-கர்நாடக எல்லை மாவட்டமான கிருஷ்ணகிரி, அதிக வனப்பரப்பை கொண்ட பகுதியாகவும் விளங்கி வருகிறது. இந்த மாவட்டத்தில் மனித-வனஉயிரின மோதல்கள் தொடர்ந்து வருகிறது. இதனால் ஆண்டு தோறும் உயிர்சேதமும், பயிர்சேதமும் அதிகரிப்பது … Read more

சசிகலா மௌனம் குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் – டிடிவி தினகரன்

2023-ல் அமமுகவின் தேர்தல் வியூகம் வெளிப்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட அமமுக தகவல் தொழில்நுட்ப மகளிரணி செயலாளர் இ.ரஞ்சிதமின் இல்லத் திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்… பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்திகளில் வருகிறது, போடாத ரோடுகளுக்கு கூட பணம் … Read more

சென்னை சென்ட்ரலுக்கு அடுத்து… இத்தனை சிறப்பு அம்சங்களுடன் உருவாகும் பரங்கிமலை ரயில் நிலையம்

சென்னை சென்ட்ரலுக்கு அடுத்து… இத்தனை சிறப்பு அம்சங்களுடன் உருவாகும் பரங்கிமலை ரயில் நிலையம் Source link

வானிலை முன்னறிவிப்பு | டிச.7, 8 தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 7 மற்றும் 8 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் … Read more

வீணாகும் காய்கறிகள்.. விவசாயிகளின் மனங்கள் ரணமாகிக் கொண்டிருக்கின்றன.. – ராமதாஸ்

விலை வீழ்ச்சியால் உழவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க காய்கறிகள் – பழங்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்கவும், அவற்றை கூட்டுறவு அமைப்புகள் மூலம் அரசே கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு சந்தைகளில் உரிய விலை கிடைக்காததால் சாலைகளில் கொட்டி அழிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் வியர்வை சிந்தி சாகுபடி செய்த பயிர்கள் யாருக்கும் … Read more

வேதாரண்யத்தில் கனமழை அகல்விளக்கு தயார் செய்யும் பணி பாதிப்பு; அழிவில் இருந்து காக்க அரசு கருணை காட்டுமா?

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் தொடந்து மழை பெய்து வருவதால் அகல்விளக்கு தயார் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. அழிவை நோக்கி செல்லும் இந்த தொழிலை காப்பாற்ற அரசு கணை காட்ட வேண்டும் என தொழிலாளர்கள் வேண்டுகோவ் விடுத்துள்ளனர். வேதாரண்யம் தாலுகா செட்டிபுலம், செம்போடை, தாணிக்கோட்டகம் ஆகிய பகுதிகளில் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் காலம் காலமாக மின் எந்திரங்கள் உதவியில்லாமல் திருவை வைத்து கையால் மண்பாண்ட தொழில் செய்து வருகின்றனர். தற்போது, கார்த்திகை மாதத்தில் … Read more

கள்ளக்குறிச்சி :: மாணவர்களே வராத பள்ளிக்கு தினமும் வந்து செல்லும் தலைமை ஆசிரியர்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கீழைப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட பள்ளிக்கு வராத நிலையில் அந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஒருவர் மட்டும் பணியாற்றி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பள்ளியில் படித்து வந்தனர். கடைசியாக 2015 முதல் 2018ம் ஆண்டு கால கட்டங்களில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துள்ளனர். அவர்களுக்கென இரண்டு ஆசிரியர்களும் இருந்துள்ளனர். இந்த பள்ளியில் சமையலறை இல்லாததால் 2019 ஆம் … Read more