மது போதையில் ரசாயன கலவையை கலந்து குடித்த 2 பேர் பலி.!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே வீரசோழபுரம் என்ற கிராமத்தில் கடல் பாசியில் இருந்து ரசாயன கலவை பொருட்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இதில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த ரவி என்ற தொழிலாளி வேலை செய்து வந்துள்ளார். இவருடன் மனைவி ஜோதி மற்றும் மகன் பாலமுருகன் ஆகியோருடன் கம்பெனியில் வளாக குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்துள்ளார். அதேபோல் அவருக்கு அருகில் … Read more

சரக்கு ஆட்டோவுக்குள் சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போனை கைக்குழந்தையுடன் வந்து திருடி சென்ற இளைஞர்..!

சேலம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே கைக்குழந்தையுடன் வந்த இளைஞர், சரக்கு ஆட்டோவுக்குள் இருந்த செல்போனை திருடிச் சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. நேற்று மாலை, சரக்கு ஆட்டோவின் டேஸ்போர்டில் சார்ஜ் போட்டிருந்த செல்போன் காணாமல் போனதை அறிந்த ஓட்டுநர் பாலமுருகன், அங்கிருந்த சிசிடிவியை ஆய்வு செய்தார். அப்போது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் வந்த ஒரு வாலிபர், ஆட்டோவில் செல்போன் இருப்பதை நோட்டமிட்டு, மனைவியை தனியாக போகச் சொல்லிவிட்டு கைவரிசைக் காட்டியது தெரியவந்தது. Source link

கோயில்கள் பெயர்களில் தனிநபர்கள் நடத்தும் இணையதளங்களை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 

மதுரை: கோயில்களில் பெயர்களில் தனிநபர்கள் நடத்தி வரும் இணையதளங்களை முடக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த மார்கண்டன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ”தருமபுரம் ஆதீனத்தின் கீழ் உள்ள கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் வைத்து அறுபதாம் கல்யாணம் நடத்த கோயில் நிர்வாகம் ரூ.2 ஆயிரம் மட்டும கட்டணம் வசூலிக்கிறது. இந்தக் கோயில் பெயரில் தனி நபர்கள் பலர் இணையதளம் தொடங்கி, அறுபதாம் … Read more

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள்: வழக்கை தள்ளிவைத்த நீதிமன்றம்!

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரம் தள்ளிவைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் என கூறி எஸ். சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக கட்சியில் நிறுவனர் எம்.ஜி.ஆர்., பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய விதிகளுக்கு முரணாக கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இரட்டை … Read more

'வந்த வழியே திரும்பி செல்லுங்கள்' – ஆர்எஸ்எஸ்-க்கு எச்சரிக்கை விடுத்த திருமா!

தமிழ்நாடு முழுவதும் இன்று (அக். 11) மாலை நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போரில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை இங்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளும் வகையிலும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னெடுப்பால் தமிழ்நாடு முழுவதும் இன்று இந்த பேரணி நடைபெற்றது. இதில் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட 26 கட்சிகள் மற்றும் 44 அமைப்புகள் … Read more

தமிழகத்தில் கொலை வழக்குகளை விசாரிக்க தனிப்பிரிவை உருவாக்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பரிந்துரை

மதுரை : தமிழகத்தில் கொலை வழக்குகளை விசாரிக்க தனிப்பிரிவை உருவாக்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பரிந்துரைத்துள்ளது. சட்டம் ஒழுங்கு காவல்துறையினரே கொலை வழக்குகளை விசாரிப்பதால் அதிக பளு எனவும், தனி விசாரணைப் பிரிவை உருவாக்குவது சட்டம் ஒழுங்கு காவல்துறையினருக்கு சுமையை குறைக்கும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

ரூ.6 லட்சம் செலவில் போடப்பட்ட தரமற்ற சாலை: கைகளால் பெயர்த்து இருமுடி கட்டி நூதன போராட்டம்

மயிலாடுதுறை அருகே தரமற்ற முறையில் போடப்பட்ட சாலையை பெயர்த்து எடுத்து, இருமுடி கட்டி தலையில் சுமந்து பெருமாளிடம் முறையிட்டு மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சோழம்பேட்டை ஊராட்சி கோழிகுத்தி கிராமத்தில் பழமை வாய்ந்த ஒரே அத்தி மரத்தில் 14 அடி உயரத்தில் வானமுட்டி பெருமாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. கும்பாபிஷேத்தை முன்னிட்டு ஊராட்சி சார்பில் 210 … Read more

போராட்டம் நடத்தும் கவுரவ விரிவுரையாளர்கள் பணிநீக்கமா? – தமிழகம் அரசு மறுப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணிநீக்கம் செய்ய உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதாக வெளிவந்த தகவல்களை தமிழக அரசு மறுத்துள்ளது. இது குறித்து உயர் கல்வித் துறை அரசு முதன்மைச் செயலர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டால், அவர்களைப் பணிநீக்கம் செய்யுமாறு கல்லூரிக் கல்வி இயக்குநரால் ஆணையிடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்படுகிறது. தமிழக அரசின் நோக்கம் தற்போது பணிபுரிந்துவரும் … Read more