உடல் நலக்குறைவு: வால்பாறை தொகுதி முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் மறைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். கோவை மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளில் ஒருவராக இருந்தவர் கோவை தங்கம். 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல்களில் கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இவர். இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் மீது கொண்டிருந்த அதிருப்தி காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திமுகவில் … Read more

நேர்காணலில் 30 மதிப்பெண்களுக்கு 15 மதிப்பெண்கள் சலுகை! தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தை கைவிடுவார்களா?

போராட்டத்தை கைவிட்டு அரசின் முடிவுக்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை! சென்னையில் போராட்டம் நடத்தி வரும் கௌரவ விரிவுரையாளர்களை நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும் என அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு உயர்கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. பணி நீக்கம் செய்யப்படும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணி அனுபவச் சான்று தரக்கூடாது நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கூடாது கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தை கைவிட கல்லூரி முதல்வர்கள் தெரிவிக்க வேண்டும். பணி நீக்கம் செய்யப்படும் இடங்களுக்கு … Read more

விரைவில் லைட் அவுஸ்-யில் இருந்து கிண்டி வரை பிரமாண்ட உயர்மட்ட மேம்பாலம் ..!!

சென்னை அடையாறு, கிரீன் வேஸ் சாலை, சாந்தோம் பிரதான சாலை, காந்தி மண்டபம் ஆகிய பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கம் (லைட் அவுஸ்) சந்திப்பில் இருந்து கிண்டி வரை பிரமாண்ட உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது. லைட் அவுசில் இருந்து கச்சேரி ரோடு, சாந்தோம் சந்திப்பு, பட்டினப்பாக்கம், கிரீன்வேஸ் சாலை, டாக்டர் முத்துலட்சுமி பூங்கா, அடையாறு, மத்திய கைலாஸ், கோட்டூர்புரம், செல்லம்மாள் கல்லூரி, சின்னமலை, கிண்டி … Read more

காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..

இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக இன்று அதிகாலை மூன்றரை மணி அளவில் மேட்டூர் அணை 120 அடியினை எட்டியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு கூடுதலாக தண்ணீர் வருவதை அடுத்து அணையில் இருந்து உபரிநீர் போக்கி கால்வாய் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளது. எனவே இந்த கால்வாய் அமைந்துள்ள தங்கமாபுரி பட்டினம் மற்றும் அண்ணா நகர், பெரியார் நகர் பகுதிகளில் … Read more

காவலர்களின் மனநல பிரச்சினைகளுக்கு தீர்வு காண காவல் நிலையங்களில் ‘மகிழ்ச்சி அலுவலர்கள்’ நியமனம்

காவலர்களின் மனநல பிரச்சினை களுக்கு தீர்வு காணும் வகையில், கோவை மாநகர காவல்நிலையங்களில் மகிழ்ச்சி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகர காவல் நிலையங்களில் தலா இரண்டு எஸ்ஹெச்ஓ (ஸ்டேஷன் ஹேப்பினஸ் ஆபிஸர்) என்ற ‘மகிழ்ச்சி அலுவலர்கள்’ தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர். காவல் ஆணையரின் பிரதிநிதிகளாக செயல்படும் இவர்கள், காவலர்களுக்கு இடையே நிலவும் மனநலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்கி, அவர்களுக்கு உதவியாக இருப்பர். இதற்கென பிரத்யேகப் … Read more

ஆர். இளங்கோவன் அறக்கட்டளை: லஞ்ச ஒழிப்புத் துறை சம்மனை ரத்து செய்ய உத்தரவு!

எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான ஆர். இளங்கோவன் நிர்வாகியாக உள்ள அறக்கட்டளையின் கல்வி நிறுவன கட்டடங்களை ஆய்வு செய்வதற்கு லஞ்ச ஒழிப்புத் துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான ஆர்.இளங்கோவன் என்பவர் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், தமிழ்நாடு மாநில வங்கியின் தலைவராகவும் பதவி வகித்த இளங்கோவன் வருமானத்திற்கு அதிகமாக 3 கோடியே 78 லட்சத்து 31 ஆயிரத்து 755 ரூபாய்க்கு சொத்துகளை சேர்த்துள்ளதாக … Read more

போதைக்காக பயன்படுத்தப்படும் வலி நிவாரணிகள்? 3000 மாத்திரைகள், 30 ஊசிகள் பறிமதல்! ஐவர் கைது

போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் தனியார் கல்லூரி அருகே, பள்ளிகரணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேரை மடக்கி சோதனையிட்டனர். அதில் அவர்களது வாகனத்தில் 3000 வலி நிவாரணி மாத்திரைகள், 30 ஊசிகள், 4 சாலின் வாட்டர் பாட்டில் இருந்தது தெரியவந்தது. இது … Read more

சொகுசு பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து – 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சொகுசு பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சொகுசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்பொழுது இராமேஸ்வரத்திலிருந்து பயணிகளுடன் மண்டபம் நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று இன்று காலை பாம்பன் பாலத்தில், சொகுசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் … Read more