#கோவை: 516 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்.. மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை.!

முதன் முறையாக ஹிமாலச்சப் பிரதேசத்தில் இந்தியாவில் 2009 ஆம் ஆண்டு நெகிழிப் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், உத்தரபிரதேசம், மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கோவா, குஜராத், கேரளா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு பகுதியளவு தடை விதிக்கப்பட்டன. கடந்த 2020 ஆம் ஆண்டு அண்டைய மாநிலமான கேரளா பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையாக தடை விதித்தது. குறைந்த பயன்பாடு மற்றும் அதிக … Read more

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு.. அமைச்சர் சொன்ன நற்செய்தி..!

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. தற்போது, இங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 40 ஏக்கர் பரப்பளவில், 400 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய பேருந்து முனையம் கட்டும் பணி கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திருச்சி, போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் … Read more

அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு சூடு வைத்ததாக புகார்.. சத்துணவு அமைப்பாளர் உள்பட இருவர் மீது குழந்தையின் பெற்றோர் புகார்..!

தருமபுரி அருகே அங்கன்வாடி மையத்தில் நான்கு வயது குழந்தைக்கு காலில் சூடு வைத்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராமியம்பட்டியை சேர்ந்த சங்கர்-கீர்த்திகா தம்பதியின் 4 வயது மகன், அதே பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் பயின்று வந்தார். கடந்த 3ந்தேதி , அங்கன்வாடி மையத்திலிருந்து வீட்டிற்கு வந்த குழந்தையின் காலில் சூடு வைத்த காயம் இருந்ததாக கூறப்படுகின்றது. அங்கன்வாடி அமைப்பாளர் மற்றும் சமையலர் உரிய பதிலளிக்காமல் பெற்றோரை மிரட்டியதால், சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சிதலைவரிடம் … Read more

‘கோடம்பாக்கம் மேம்பாலத்தில் மெகா சைஸ் பள்ளம்’ – ஆட்டோவில் எழுதி கவன ஈர்ப்பு கோரிக்கை

சென்னை: கோடம்பாக்கம் மேம்பாலத்தில் உள்ள மெகா சைஸ் பள்ளங்களை விரைவில் சரிசெய்ய வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவின் பின்புறம் எழுதி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து கவனம் ஈர்த்துள்ளார். சென்னையில் கடந்த ஒரு மாதமாக பெரும்பாலான இடங்களில் மாநகராட்சி, மெட்ரோ ரயில், மின் துறை சார்பில் சாலைகள் தோண்டப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இந்த சாலைகளில் அகலம் குறுகி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி … Read more

ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு; மழைக்கு முன் வந்த முக்கியத் தகவல்!

தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், மழை மற்றும் புயல் காரணமாக பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகள் மற்றும் கிடங்குகளை உயர்வான பகுதிகளுக்கு உடனடியாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கூடுதல் ஒதுக்கீடு பெற்று தேவையான பொருட்களை நகர்வு செய்து, பாதுகாப்பாக … Read more

"இந்தி" நிலைநிறுத்த முற்பட்டால், தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் -சீமான் எச்சரிக்கை

Seeman Warns -Mozhipor: ஒன்றிய உயர்கல்வி நிலையங்களிலும், ஒன்றிய அரசின் பள்ளிகளிலும் இந்தியை கட்டாயப் பயிற்று மொழியாக்க வேண்டும் எனவும், ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியை கட்டாய மொழியாக்கி, தேர்வுகள் இந்தியில்தான் நடத்தப்பட வேண்டும் என அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் சீமானும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பல தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் இந்தி … Read more

அதிமுக விஐபிக்கள் சொத்து வாங்க உதவி; சேலத்தில் பத்திரப்பதிவு சர்ச்சையில் சிக்கிய உதவியாளர் வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு.! முக்கிய ஆவணங்கள் சிக்கியது

சேலம்: சேலத்தில் அதிமுக ஆட்சியின்போது விஐபிக்கள் சொத்து வாங்கினால் பத்திரப்பதிவு செய்து கொடுத்து சர்ச்சையில் சிக்கிய உதவியாளர் வீட்டில் விஜிலென்ஸ் ேசாதனை நடந்து வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின்பேரில் நடக்கும் இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் சூரமங்கலம் மேற்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில், உதவியாளராக காவேரி (58) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து இன்று காலை … Read more

உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு தமிழ் தேர்வு கட்டாயம் – தேர்வு வாரியம் அறிவிப்பு

உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு தமிழ் தேர்வு கட்டாயம் – தேர்வு வாரியம் அறிவிப்பு Source link

2 லட்சம் அரசு ஊழியர்கள் பணி நீக்கம்.. பிரதமர் அதிரடி திட்டம்..?

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இங்கிலாந்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள லிஸ்டிரஸ், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இதனிடையே, பிரிட்டன் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான இன்ஸ்டிடியூட் பார் பிஸ்கல் ஸ்டடீஸ் என்ற அமைப்பு, இங்கிலாந்தை கடனில் இருந்து மீட்க வேண்டுமானால் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. விரைவில், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் … Read more

இலங்கை தமிழர் முகாமில் இரு தரப்பினரிடையே மோதல் – மதுபோதையில் தகராறு செய்த 4 பேர் கைது..!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள இலங்கை தமிழர் முகாமில் ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெற்ற கபடி போட்டியின்போது மதுபோதையில் இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது மோதலுக்கு காரணமான குடிகார இளைஞர் குகன் மீது புகாரளிக்க சென்ற பெண்ணை போலீசார், வெகுநேரம் காவல் நிலையத்துக்குள் பிடித்து வைத்துக் கொண்டதால் அவரது மகள்கள் கண்ணீர் விட்டு கதறு நிலைக்கு தள்ளப்பட்டனர் சாலை மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து அந்த பெண் விடுவிக்கப்பட்டார். 16 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், … Read more