தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக வளிமண்டல சுழற்சி காரணமாக சில இடங்களில் கனமழையும், பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும் பெய்துவருகிறது. வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் … Read more

ஜாமீனில் வெளிவந்த இளைஞர் வெட்டிக் கொலை – பழிக்குப் பழி நடந்த கொலையில் 8பேர் கைது..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஜாமீனில் வெளி வந்த இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். அந்திவாடியைச் சேர்ந்த முரளி என்பவர் பெத்தகொள்ளு என்னும் இடத்தில் நேற்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஏற்கனவே உதயகுமார் என்பவரை கொலை செய்த வழக்கில் முரளி கைதாகி ஜாமீனில் வெளிவந்து இருப்பது தெரிய வந்தது.மேலும் உதயகுமார் கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்காக அவரது தம்பி சரவணன் … Read more

தனுஷ்கோடி | 30 ஜிகாவாட் மின் உற்பத்திக்கான காற்று வளம்: கடலில் காற்றாலை அமைக்க இடம் தேர்வு

ராமேசுவரம்: தனுஷ்கோடியில் 30 ஜிகாவாட் மின் உற்பத்திக்கான காற்று வளம் உள்ளதால், நாட்டில் முதல் முறையாக கடலில் காற்றாலை அமைக்க தனுஷ்கோடி கடற்பகுதியை மத்திய எரிசக்தித்துறை தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் கடலில் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை, மத்திய அரசு கடந்த 09.09.2015 அன்று வெளியிட்டது. இதன்படி மத்திய எரிசக்தி துறையின் சார்பில் இந்த திட்டத்தை விரிவு படுத்தும் நோக்கத்தில், நாட்டில் உள்ள 7600 கி.மீ. நீள கடற்பரப்பில் காற்றின் வேகத்தை அளவிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. … Read more

கிறிஸ்தவ வன்னியர்களை எம்பிசி பட்டியலில் சேர்க்க கோரிய மனு! தமிழக அரசுக்கு உத்தரவு!

கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சியைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் விஜயன் தாக்கல் செய்த பொது நல மனுவில், கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்து 1993ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது எனவும், முறையான கணக்கெடுப்பு நடத்தாமல், நடைமுறைகளை பின்பற்றாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், இந்த விவகாரத்தை பிற்படுத்தப்பட்டோர் … Read more

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி தமிழகத்தில் இன்று மனித சங்கிலி: அமைதியாக நடத்த தலைவர்கள் வேண்டுகோள்

சென்னை: சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி தமிழகத்தில் இன்று மாலை 4 மணிக்கு மனித சங்கிலி நடைபெறுகிறது. 500 இடங்களில் மனிதசங்கிலி நடைபெறுவதாக திருக்கழுக்குன்றத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று தெரிவித்தார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, … Read more

கோயம்பேடு மார்க்கெட்.! (11.10.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 11/10/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 28/25/20 நவீன் தக்காளி 38 நாட்டு தக்காளி 35/32 உருளை 33/26/24 சின்ன வெங்காயம் 60/50/45 ஊட்டி கேரட் 70/65/60 பெங்களூர் கேரட் 40/30 பீன்ஸ் 40/35 பீட்ரூட். ஊட்டி 60/55 கர்நாடக பீட்ரூட் 40 சவ் சவ் 20/18 முள்ளங்கி 25/20 முட்டை கோஸ் 25/20 வெண்டைக்காய் 18/15 உஜாலா கத்திரிக்காய் 17/15 வரி … Read more

மனைவிக்கு ஃபோன் ஆர்டர் செய்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

நீலகிரியில் ஆன்லைன் மூலம் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு அதற்குப் பதில் பார்சலில் கல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியை சேர்ந்த மோதிலால் லட்சுமன் என்பவர் தனது மனைவிக்காக ஆன்லைன் மூலம் ஒரு செல்போன் ஆர்டர் செய்தார். இதையடுத்து அவர் ஆர்டர் செய்திருந்த செல்போன் பார்சலில் வந்தது. கணவனும், மனைவியும் பார்சலை ஆசை ஆசையாக திறந்து பார்த்தபோது அதில் தாங்கள் ஆர்டர் செய்திருந்த செல்போனுக்கு பதில் கல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். … Read more

மத்திய அரசு நிருபர் என்று கூறி பல இடங்களில் கைவரிசை காட்டிய போலி நிருபர் கைது..!

கள்ளக்குறிச்சியில் போலி நிருபர் ஒருவரை சின்ன சேலம் போலீசார் கைது செய்தனர். சின்ன சேலம் அருகே உள்ள பங்காரம் காட்டுக்கொட்டகையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அரசு அதிகாரிகளிடம் தன்னை மத்திய அரசு செய்தியாளர் எனவும், தனக்கு மத்திய அரசு முத்திரையுடன் இரண்டு கார்கள் கொடுத்துள்ளதாகவும் கூறி ஏமாற்றியுள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் தனது நிலத்திற்கு அருகில் உள்ள நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் அதன் உரிமையாளர் வேல்முருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு … Read more