தூத்துக்குடிக்கு மாற்றியதை எதிர்த்து ரைட்டர் வழக்கு கர்மாவின் கொள்கைப்படி நிவாரணம் வழங்குவதாக ஐகோர்ட் நீதிபதி கருத்து: மதுரையில் போக்குவரத்து காவலராக மாற்றம் செய்ய உத்தரவு

மதுரை: தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்ததை எதிர்த்து ரைட்டர் தொடர்ந்த வழக்கில், கர்மாவின் கொள்கைப்படி நிவாரணம் வழங்குவதாக கூறியுள்ள நீதிபதி, மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து காவலராக மாற்ற உத்தரவிட்டுள்ளார். மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் ரைட்டராக பணியாற்றிய ஸ்ரீமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘இரண்டாம் நிலை காவலராக 2003ல் சேர்ந்தேன். 2011ல் ஏற்பட்ட விபத்தில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றேன். தொடர்ந்து தலைசுற்றல் மற்றும் ஒற்றைத் தலைவலி அதிகமாக இருந்ததால், … Read more

நாட்டிலேயே இது முதன்முறை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் பெருமிதம்!

இந்தியாவில் முதன்முறையாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரத்த சோகையை போக்க இரும்பு பெண்மணி திட்டத்தை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு, இரும்பு பெண்மணி திட்டம் மற்றும் பிரதமர் ஆவாஸ் பிளஸ் திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியை மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை … Read more

பூண்டி மாதா கோயிலுக்கு சுற்றுலா சென்றவர்கள் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி: இறந்தவர்களில் 3 பேர் அண்ணன், தம்பிகள்

திருக்காட்டுப்பள்ளி: தஞ்சாவூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி தூத்துக்குடியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அண்ணன், தம்பிகள் மூவர் உட்பட 6 பேர் பலியாகினர். இதில் 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டது. 2 பேர் உடலை தேடும் பணி தொடர்கிறது. தூத்துக்குடியில் இருந்து ஒரு பஸ்சில் பெண்கள் 24 பேர், ஆண்கள் 18 பேர், குழந்தைகள் 15 பேர் என மொத்தம் 57 பேர் நேற்றுமுன்தினம் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் அங்கிருந்து … Read more

தமிழ்நாட்டு பெண்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் விடுத்த வேண்டுகோள்… திமுக அரசு ஷாக்!

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் ”ஓசியில தான போறீங்க” என்று பெண் பயணிகளை குறிப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன் இன்றளவும் இந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமைச்சரின் இந்த பேச்சுக்கு இபிஎஸ், அண்ணாமலை, டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த சர்ச்சையின் உச்சமாக கோவை, மதுக்கரையைச் சேர்ந்த துளசி அம்மாள் என்ற மூதாட்டி. சில தினங்களுக்கு முன் அரசு மாநகரப் … Read more

வடலூரில் பரபரப்பு; பாஜக நிர்வாகியின் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ரூ.5.5 லட்சம் பொருட்கள் சாம்பல்: மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? போலீசார் விசாரணை

வடலூர்: வடலூரில் உள்ள பாஜக நிர்வாகிக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. மர்ம நபர்கள் யாராவது தீவைத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. கடலூர் மாவட்டம் வடலூர் நெய்சர் பட்டுசாமி தெரு தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் ராஜா (29). இவர் பாரதிய ஜனதா கட்சியின் வடலூர் நகர செயலாளராக பதவி வகித்து வருகிறார். வடலூர் சிட்கோ தொழிற்பேட்டையில்  பிளாஸ்டிக் மறுசுழற்சி … Read more

பேராசை.. புதையலை எடுக்க நரபலி.. சம்பவ இடத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி.! 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் லட்சுமணன் என்பவர் அந்த ஊரிலுள்ள வெற்றிலை தோட்டத்தில் ஒன்றரை அடி, ஆழக் குழியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவர் இறந்த குழிக்கு முன்பாக பாக்கு, வெற்றிலை, மஞ்சள், எலுமிச்சம் பழம் குங்குமம் உள்ளிட்ட பொருட்களும் மண்வெட்டி மற்றும் அறுத்த கோழி போன்றவையும் சிதரிக்கிடந்தன.  இதனைத் தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவரை கொன்றது அவரது நண்பர் மணி என்பது தெரியவந்துள்ளது. முன்னதாக லட்சுமணன் மற்றும் மணி இருவரும் சேர்ந்து புதையல் … Read more

வானொலி மூலம் இந்தியை திணிப்பு: போராட்டத்துக்கு தயாராகும் ராமதாஸ்

வானொலியில் இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதை நிறுத்திவிட்டு தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என நிறுவனர் எச்சரிக்கை விடுத்துள்ளார் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காரைக்கால் வானொலி நிலையத்தின் பண்பலை வரிசையில் ஒலிபரப்பப்பட்டு வந்த தமிழ் நிகழ்ச்சிகளின் நேரத்தை குறைத்து விட்டு, தினமும் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. பிரசார் பாரதி நிறுவனத்தின் இந்த அப்பட்டமான இந்தித் திணிப்பு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். காரைக்கால் வானொலியில் தினமும் காலை 5.52 முதல் இரவு 11.20 … Read more

திருச்சி மலைக்கோட்டையில் ஹீலியம் சிலிண்டர் வெடிப்பு – ஒருவர் பலி; பதறவைக்கும் சிசிடிவி காட்சி

தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் என பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. பண்டிகை காலங்களில் திருச்சியை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்தவர்கள் துணிகள், நகைகள் வாங்குவதற்கு அதிகளவு கூடுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருட தீபாவளியை முன்னிட்டும் மக்கள் அப்பகுதியில் அதிகளவு நேற்று கூடி தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டிருந்தனர். இந்தச் சூழலில் தனியார் ஜவுளிக்கடைக்கு முன் இருசக்கர வாகனத்தில் ஹீலியம் சிலிண்டரை ஏற்றிவந்த இருவர் பலூன் வியாபாரம் செய்யத்தொடங்கினார்கள். பலூனை ஊதுவதற்காக ஹீலியம் சிலிண்டரை … Read more

கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம் சுற்றுலா பயணிகளுக்கு தடை: வனத்துறை அறிவிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் இன்று முதல் அப்பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் அழகான பகுதி பேரிஜம் பகுதியாகும். இந்த பகுதிக்கு செல்வதற்கு வனத்துறையின் சிறப்பு அனுமதி பெற வேண்டும். மேலும் கொடைக்கானல் மோயர் பாயிண்டுக்கு அடுத்துள்ள இடங்களுக்கு செல்லவும் வனத்துறையின் சிறப்பு அனுமதி பெற்று செல்ல வேண்டும். இந்த பகுதியில் தொப்பி தூக்கும் பாறை, … Read more