வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு: ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

துணைப் பொதுச்செயலாளராகவும், நீலகிரி தொகுதி திமுக எம்.பி.யாகவும் இருப்பவர் ஆ.ராசா. கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இவர் மத்திய அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.27.92 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 17 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக கடந்த 2015ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து, சென்னை, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட … Read more

வீட்டில் மகாராணியை போல உலா வரும் அணில்; நெல்லை வீட்டில் நடக்கும் அதிசயம்!

நெல்லை மாவட்டம் வேப்பங்குளம் பகுதியை சேர்ந்தவர் தாவித்ராஜா கட்டிட ஒப்பந்ததாரரான இவருக்கு இரண்டு மகள் உள்ளனர். அதில் மூத்த மகள் பியூலா சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை உளவியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இரண்டாவது மகள் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலத்தில் வீட்டின் அருகே உள்ள மரத்திலிருந்து அணில் குஞ்சு ஒன்று, தாவித் ராஜா வீட்டிற்குள் விழுந்துள்ளது இதனை கண்ட மூத்த மகள் பியூலா அணிலை … Read more

சிதம்பரம் பஸ் ஸ்டாப்பில் மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம்: மாணவன் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் கைது..!

கடலூர்: சிதம்பரம் பேருந்து நிலையத்தில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்லும் மினி பஸ் பேருந்து நிறுத்தம் உள்ளது. அங்குள்ள நிழல் குடையில் பள்ளியில் படிக்கும் சீருடை அணிந்த மாணவிக்கு, ஒரு மாணவன் மஞ்சள் கயிறு தாலி கட்டிய வீடியோ வைரல் ஆனது. மாணவியின் கழுத்தில் மாணவன் தாலி கட்டும் போது எதிரே நிற்கும் … Read more

`ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில்…'- ஓபிஎஸ் கொடுத்த 2 வது கடிதம்! சபாநாயகர் முடிவு என்ன?

அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகருக்கு இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதம், பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடைவிதித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி எழுதப்பட்டுள்ளது. அதிமுவின் ஒருங்கிணைப்பாளர் தான் என்பதால், சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்து ஆலோசிக்கவேண்டும் என்று கடிதத்தில் ஓபிஎஸ் தெரிவித்திருக்கிறார். ஒற்றை தலைமை சர்ச்சை தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தல் நிலுவையில் உள்ளதால் அதிமுக சார்பாக சட்டமன்ற குழுக்களை … Read more

சென்னை கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை மேம்பாலம்: திட்டப் பணிகள் தொடக்கம்

சென்னை கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை மேம்பாலம்: திட்டப் பணிகள் தொடக்கம் Source link

கோவையில் அரை நிர்வாண போராட்டம் நடத்திய ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்களால் பரபரப்பு

திமுக அரசு ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்களை வஞ்சித்து விட்டதாக போராட்டம்! கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள நிதி துறை ஆணையர் அலுவலகம் முன்பு அனைத்து அரசு ஊழியர்கள் ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல் உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை முன் வைத்தனர். நிதிச்சுமையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல் ஓய்வூதியர்களை வஞ்சிக்கும் செயலில் திமுக அரசு ஈடுபடக் கூடாது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் 70 வயதைக் கடந்த … Read more

இடியும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை மழைக்காலத்துக்கு முன் அப்புறப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில், 61 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பதவி உயர்வு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பதவி உயர்வு உத்தரவுகளை வழங்கிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இடியும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை மழைக்காலத்துக்கு முன்னதாகவே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, பள்ளிகள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும், மின்சாதனங்களின் … Read more

இந்தியை திணிக்க மீண்டும் முயற்சியா? பொங்கி எழுந்த வைகோ

அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சம வாய்ப்பு, சம உரிமை வழங்கி, நாட்டின் ஆட்சி மொழி மற்றும் அலுவல் மொழிகள் ஆக்கிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, மொத்தம் 112 பரிந்துரைகள் கொண்ட 11-வது அறிக்கையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறது. ஆட்சி … Read more

வாடகை தாய் சர்ச்சை : நயன்தாரா விவகாரத்தில் தீவிரம் காட்டும் அரசு – விரைவில் அறிக்கை?

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஜூன் 9ஆம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த  இவர்களின் திருமண வரவேற்பில், அழைப்பிதழ் வைத்திருந்த பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டனர்.  திருமண நிகழ்வின் ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் வாங்கிவைத்திருந்ததன் காரணமாக திருமண அரங்குக்குள் செல்போனில் படம் பிடிக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. … Read more

புரட்டாசி மாத திருவிழாவையொட்டி மலைவாழ் இளைஞர்கள் பங்கேற்ற கபடி போட்டி

ஏலகிரி : ஏலகிரிமலை நிலாவூர் பகுதியில் புரட்டாசி மாதம் 3ம் சனிக்கிழமை திருவிழாவையொட்டி கபடி போட்டி நடைபெற்றது. இதில் ஏலகிரிமலை, ஜவ்வாது மலை, ஆகிய பகுதிகளில் இருந்து கபடி வீரர்கள் கலந்து கொண்டனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை 14 கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழும் மக்கள் அனைவரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் முக்கிய தொழிலாக விவசாயம் … Read more