சாலையோரம் கைவிடப்பட்ட வாகனங்களை திருச்சி மாநகராட்சி அகற்றுகிறது!

சாலையோர கடைகளையும் அகற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முயற்சி!  திருச்சி மாநகராட்சி சாலையோரங்களில் கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றும் முயற்சியில் மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாநகராட்சி நகர் முழுவதும் கைவிடப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. சனிக்கிழமை தொடங்கிய இந்த நடவடிக்கையில் 170க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கண்டோன்மென்ட், பாலக்கரை, மரக்கடை, வில்லியம்ஸ் சாலை, வொரையூர், ரெனால்ட்ஸ் சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கைவிடப்பட்ட தள்ளு வண்டிகள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோரிக்‌ஷாக்கள், … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. 10ம் வகுப்பு சான்றிதழ் பெறும் தேதி வெளியானது..!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 14-ம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ – மாணவியருக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மட்டும் ஏற்கனவே வழங்கப்பட்டது. இந்நிலையில், துணைத் தேர்வு முடிவு மற்றும் மறுகூட்டல் முடிவு வெளியான நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மாணவ – மாணவியர் … Read more

ஆன்லைன் ஆப் மூலம் பெண்களை மிரட்டி பணம் பறித்தவர் கைது..!

கோவையில் இணையதள மூலம் பெண்களிடம் பழகி அதன் மூலம் அவர்களை மிரட்டி பணம் பறித்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கோவையில் ஆன் லைன் ஆப் மூலம் பெண்களுடன் பழகி அவர்களின் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்களைப் பெற்று அதை வைத்தே அவர்களுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறித்துள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கூமாபட்டியைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரியான பரமசிவம் … Read more

20 நாளில் 2,085 வழக்குகளை முடித்து உயர் நீதிமன்ற கிளை சாதனை: மத்திய அரசு ட்விட்டரில் பதிவிட்டு பெருமிதம்

மதுரை: உயர் நீதிமன்ற மதுரை கிளை முதல் அமர்வு 20 வேலை நாட்களில் 2,085 வழக்குகளை விசாரித்து முடித்து சாதனை புரிந்திருக்கும் தகவலை மத்திய அரசு ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமையில் 15 நீதிபதிகள் பணிபுரிகின்றனர். நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு செப்.5 முதல் பொதுநல வழக்குகள், ரிட் வழக்குகள், ரிட் மேல்முறையீடு மனுக்களை விசாரித்து வருகிறது. இந்த முதல் அமர்வு செப்.5 … Read more

CBI: திமுகவின் ஏ ராஜாவுக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக 5.53 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு எதிராக சிபிஐ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான  ராஜா, கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், … Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக வளிமண்டல சுழற்சி காரணமாக சில இடங்களில் கனமழையும், பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும் பெய்துவருகிறது. வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் … Read more

ஜாமீனில் வெளிவந்த இளைஞர் வெட்டிக் கொலை – பழிக்குப் பழி நடந்த கொலையில் 8பேர் கைது..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஜாமீனில் வெளி வந்த இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். அந்திவாடியைச் சேர்ந்த முரளி என்பவர் பெத்தகொள்ளு என்னும் இடத்தில் நேற்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஏற்கனவே உதயகுமார் என்பவரை கொலை செய்த வழக்கில் முரளி கைதாகி ஜாமீனில் வெளிவந்து இருப்பது தெரிய வந்தது.மேலும் உதயகுமார் கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்காக அவரது தம்பி சரவணன் … Read more

தனுஷ்கோடி | 30 ஜிகாவாட் மின் உற்பத்திக்கான காற்று வளம்: கடலில் காற்றாலை அமைக்க இடம் தேர்வு

ராமேசுவரம்: தனுஷ்கோடியில் 30 ஜிகாவாட் மின் உற்பத்திக்கான காற்று வளம் உள்ளதால், நாட்டில் முதல் முறையாக கடலில் காற்றாலை அமைக்க தனுஷ்கோடி கடற்பகுதியை மத்திய எரிசக்தித்துறை தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் கடலில் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை, மத்திய அரசு கடந்த 09.09.2015 அன்று வெளியிட்டது. இதன்படி மத்திய எரிசக்தி துறையின் சார்பில் இந்த திட்டத்தை விரிவு படுத்தும் நோக்கத்தில், நாட்டில் உள்ள 7600 கி.மீ. நீள கடற்பரப்பில் காற்றின் வேகத்தை அளவிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. … Read more