தயாரிப்பில் இறங்குகிறார் 'தல'.. முதல் படத்தில் நடிக்கிறார் 'தளபதி'..?

பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தமிழ் படங்களைத் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும், அதில் விஜய் நடிக்க அதிக வாய்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுள்ள எம்.எஸ்.தோனி, ‘தோனி எண்டர்டெயின்மென்ட்’ என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப் படங்களை  தயாரிக்க திட்டமிட்டுள்ளார். தமிழில் அவர் தயாரிக்கும் முதல் படத்தில் நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி … Read more

தமிழக அரசியலில் மூச்சு திணறிக்கொண்டிருப்பது திமுகதான்: தமிழக பாஜக

சென்னை: “இந்து நம்பிக்கைகளுக்கு எதிராக, இந்து வழிபாட்டு முறைகளுக்கு எதிராக பேசியதால் இந்துக்கள் கொதித்தெழுந்து விமர்சிப்பதால், தமிழக அரசியலில் மூச்சு திணறிக்கொண்டிருப்பது திமுகதான் என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ” ‘நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற எதையும் செய்யும் பாஜக. எந்த கீழ்த்தரமான அரசியலுக்கும் போவார்கள் பாஜகவினர். தங்களது சாதனைகளை சொல்வதற்கு ஏதுமில்லாத காரணத்தினாலே நம்மை … Read more

தீவிரவாத தடுப்பு படை அவசியமில்லை: தமிழக அரசு தகவல்!

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாகவும், ஆஃப்கானிஸ்தானில் தலிபான்களின் எழுச்சி காரணமாக இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியா மீதும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக மனுவில் கூறியுள்ள அவர், இலங்கையுடன் கடல் எல்லையை பகிர்ந்துள்ள தமிழகத்திற்கும் இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தாலும் கூட தீவிரவாத தாக்குதல் போன்ற … Read more

தரமற்ற இனிப்புகளை தயாரித்தால் கடும் நடவடிக்கை: உணவு பாதுகாப்பு துறை

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி புத்தாடைகள், இனிப்பு வகைகள், பட்டாசு விற்பனைகள், களைகட்ட துவங்கி உள்ளது. இந்த நிலையில் சேலத்தில் பாதுகாப்பான இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் இனிப்பு, காரம் தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் சேலம் 3 ரோடு பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் … Read more

பள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டும் வீடியோ வைரல்: போலீஸ் விசாரணை

சிதம்பரம்: சிதம்பரத்தில் பேருந்து நிழற்குடையில் பள்ளி மாணவிக்கு, மாணவன் தாலி கட்டுவதாக வெளியான வீடியோ தொடர்பாக மாணவன், மாணவியை சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமூக நலத்துறை, குழந்தை நல அலுவலரும் போலீசார் உடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சி: காப்பர்-டி அகற்றிய பெண்ணிற்கு அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்?

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் இரண்டு வாரத்திற்கு முன்பு காப்பர்-டி யை அகற்றிய பெண்ணுக்கு மருத்துவரின் அலட்சியத்தால் விபரீதம் நடந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கட்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சசிதரன் – கன்னிகா தம்பதியர். இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் கன்னிகா கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் கருத்தடைச் சாதனம் காப்பர்-டி பொருத்தியுள்ளார். இந்நிலையில், கடந்த 26 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் மஞ்சுளா என்பவரால் காப்பர்-டி … Read more

கோவை: ஈஷா- காருண்யா கட்டிடங்களை இடிக்கக் கோரி அனைத்துக் கட்சி போராட்டம் அறிவிப்பு

கோவை: ஈஷா- காருண்யா கட்டிடங்களை இடிக்கக் கோரி அனைத்துக் கட்சி போராட்டம் அறிவிப்பு Source link

#தமிழகம் | ஒருநாள் மழைக்கே உடைந்து விழுந்த கழிவுநீர் வடிகால் சுவர்! வைரலாகும் வீடியோ!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்டு வந்த கழிவுநீர் வடிகால், நேற்று பெய்த கனமழையால் இடிந்து விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மாதம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 300 மீட்டர் தூரத்திற்கு கழிவுநீர் வடிகால் கூட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணி தரமற்ற முறையில் நடைபெறுவதாக அப்பகுதி வாசிகள் ஏற்கனவே புகார் அளித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று பெய்த கனமழையில் கழிவுநீர் வடிகால் சுவர் இடிந்து விழுந்து சேதம் ஆகியது. இது குறித்த காணொளி … Read more

பிரபல நாட்டில் நிலச்சரிவு.. 22 பேரின் உடல்கள் மீட்பு.. 52 பேர் மாயம்..!

வெனிசூலாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆறுகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வெனிசூலா தலைநகர் காரகாசில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆற்றில் வெள்ளம் அபாய அளவை தாண்டிய நிலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமான வீடுகள் சிதைந்தன. வீடுகளில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இதுவரை 22 பேரின் … Read more

சென்னை கலங்கரை விளக்கம் – கிண்டி இடையே உயர்மட்ட மேம்பாலம்: தயாராகிறது விரிவான திட்ட அறிக்கை

சென்னை: சென்னை மெரினா கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரையில் பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைத்து ஒருங்கிணைந்த உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தயார் செய்யும் பணியை தமிழக நெடுஞ்சாலைத் துறை துவக்கியுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சென்னை மெரினா கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையில் மெட்ரோ ரயில் 2-வது கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இது … Read more