"இந்தி" நிலைநிறுத்த முற்பட்டால், தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் -சீமான் எச்சரிக்கை

Seeman Warns -Mozhipor: ஒன்றிய உயர்கல்வி நிலையங்களிலும், ஒன்றிய அரசின் பள்ளிகளிலும் இந்தியை கட்டாயப் பயிற்று மொழியாக்க வேண்டும் எனவும், ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியை கட்டாய மொழியாக்கி, தேர்வுகள் இந்தியில்தான் நடத்தப்பட வேண்டும் என அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் சீமானும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பல தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் இந்தி … Read more

அதிமுக விஐபிக்கள் சொத்து வாங்க உதவி; சேலத்தில் பத்திரப்பதிவு சர்ச்சையில் சிக்கிய உதவியாளர் வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு.! முக்கிய ஆவணங்கள் சிக்கியது

சேலம்: சேலத்தில் அதிமுக ஆட்சியின்போது விஐபிக்கள் சொத்து வாங்கினால் பத்திரப்பதிவு செய்து கொடுத்து சர்ச்சையில் சிக்கிய உதவியாளர் வீட்டில் விஜிலென்ஸ் ேசாதனை நடந்து வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின்பேரில் நடக்கும் இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் சூரமங்கலம் மேற்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில், உதவியாளராக காவேரி (58) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து இன்று காலை … Read more

உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு தமிழ் தேர்வு கட்டாயம் – தேர்வு வாரியம் அறிவிப்பு

உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு தமிழ் தேர்வு கட்டாயம் – தேர்வு வாரியம் அறிவிப்பு Source link

2 லட்சம் அரசு ஊழியர்கள் பணி நீக்கம்.. பிரதமர் அதிரடி திட்டம்..?

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இங்கிலாந்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள லிஸ்டிரஸ், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இதனிடையே, பிரிட்டன் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான இன்ஸ்டிடியூட் பார் பிஸ்கல் ஸ்டடீஸ் என்ற அமைப்பு, இங்கிலாந்தை கடனில் இருந்து மீட்க வேண்டுமானால் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. விரைவில், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் … Read more

இலங்கை தமிழர் முகாமில் இரு தரப்பினரிடையே மோதல் – மதுபோதையில் தகராறு செய்த 4 பேர் கைது..!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள இலங்கை தமிழர் முகாமில் ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெற்ற கபடி போட்டியின்போது மதுபோதையில் இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது மோதலுக்கு காரணமான குடிகார இளைஞர் குகன் மீது புகாரளிக்க சென்ற பெண்ணை போலீசார், வெகுநேரம் காவல் நிலையத்துக்குள் பிடித்து வைத்துக் கொண்டதால் அவரது மகள்கள் கண்ணீர் விட்டு கதறு நிலைக்கு தள்ளப்பட்டனர் சாலை மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து அந்த பெண் விடுவிக்கப்பட்டார். 16 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், … Read more

அலுவல் மொழி விவகாரம்: முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக அடுக்கும் பதில்கள்

சென்னை: “அலுவல் மொழி ஆய்வுக்குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரைகளில் இந்தியா முழுமைக்கும் இந்தியை பொது மொழியாக்கிட வேண்டும் என்பது போன்ற பரிந்துரை எதுவும் இடம்பெறவில்லை. இல்லாத ஒன்றை இருப்பதாக முதல்வர் சொல்வது ஏன்? மொழி அரசியலுக்காக தவறான செய்திகளை ஒரு முதலமைச்சர் வெளியிடுவது முறையல்ல” என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழி ஆய்வுக்குழு தனது … Read more

திமுகவுக்கு பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மட்டம் வீக்: செல்லூர் ராஜூ கலாய்!

தலைவராக 2ஆவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன்பின்னர் பொதுக்குழுவில் பேசிய ஸ்டாலின், கட்சியின் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் சிலர், ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சினைகளை உருவாக்கி தனக்கு தூக்கமில்லாத இரவுகளை தருவதாக வேதனையுடன் பேசினார். ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு வரவேற்பும், விமர்சனங்களும் கலவையாக வந்து கொண்டுள்ளன. இந்த நிலையில், மு.க.ஸ்டாலினை பார்க்கும் போது பாவமாக உள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுகவின் 50வது … Read more

மக்களின் மத உணர்வுகளை வியாபாரமாக்க வேண்டாம்: கோயிலின் பெயரில் தனிநபர் நடத்தும் இணையதளங்களை முடக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மக்களின் மத உணர்வுகளை வியாபாரமாக்க வேண்டாம். கோயிலின் பெயரில் தனிநபர் நடத்தும் இணையதளங்களை முடக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கோயிலின் பெயரில் தனிநபர் நடத்தும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மார்கண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு என்பது நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் 60-ம் கல்யாணம், … Read more

கடிதம் எழுதிவிட்டு இளம்தாய் எடுத்த விபரீத முடிவு – வெளியான சிசிடிவி காட்சியால் அதிர்ச்சி!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே இரண்டு குழந்தைகளின் தாயான பார்மசிஸ்ட் பெண்ணை, மினி பஸ் டிரைவர்கள் காதலிக்கச் சொல்லி வற்புறுத்தியதாகவும், அதனால் தான் தற்கொலை செய்துகொள்வதாகவும் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இருப்பினும் குற்றவாளிகள் போலீசாரால் கைது செய்யப்படாத நிலையில், மினி பஸ் டிரைவர்கள் அவரை விரட்டி விரட்டி அவரிடம் அத்துமீறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த காரியாவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த குமார். இவரது மனைவி சஜிலா. இரண்டு குழந்தைகளுக்கு … Read more

ஆம்னி பஸ்களில் தீபாவளிக்கு கூடுதல் கட்டணம்: புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு

ஆம்னி பஸ்களில் தீபாவளிக்கு கூடுதல் கட்டணம்: புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு Source link