அன்னிய மரங்கள் அகற்றும் பணி: தனிக்குழுக்களை அமைக்க உத்தரவு!

தமிழக வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அகற்றப்பட்ட இந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு காகித நிறுவனத்துக்கு வழங்குவது குறித்து உத்தரவுகளை பிறப்பிக்க தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அகற்றப்பட்ட அன்னிய மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக, முதன்மை வனப் பாதுகாவலர், குழு ஒன்றை அமைத்துள்ளதாகக் கூறி அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து … Read more

கோவையில் தடையை மீறி பிளாஸ்டிக் பைகள் விற்பனை; அதிரடி காட்டிய அதிகாரிகள்!

Plastic Ban in Tamil Nadu: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் உள்ள வணிக நிறுவனங்களில் வியாபாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பண்டிகையை தேவையான பொருட்களை வாங்கி செல்கிறார்கள். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிலர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்ததை அடுத்து, ஆய்வு மேற்கொண்டனர்.   … Read more

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை; ஒகேனக்கல்லில் நீர்வரத்து 35,000 கனஅடியாக அதிகரிப்பு.! பரிசல் இயக்க குளிக்க தடை

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை 9,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. தொடர் மழையால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 8மணி நிலவரப்படி காவிரியில் வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து 9.30 மணியளவில் 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் தண்ணீர் பெருக் கெடுத்து செல்கிறது. … Read more

'இரண்டு கழிப்பறை கட்ட 3 லட்சமா? ; அதிலும் ஊழல் வேறயா..' – தென்காசி மக்கள் ஆவேசம்!

புதிதாக கட்டப்பட்ட கழிவறை தரம் இல்லை என ஊர் பொதுமக்கள் எடுத்து வெளியிட்ட வீடியோ வைரலானதால், தற்போது அக்கழிவறை மீண்டும் சீரமைக்கப்பட்டு வருகிறது.   தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியத்தில் திமுகவை சேர்ந்த மகேஸ்வரி 16வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர் தனது வார்டுக்குட்ப்பட்ட முத்துகிருஷ்ணபேரியில் கழிவறை கட்டுவதற்கு தன்னுடைய கவுன்சிலர் நிதியில் 3 லட்சம் ஒதுக்கி கழிவறை கட்டும் பணியை மேற்கொண்டார். பின், கழிவறை கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாரான நிலையில், பொதுமக்கள் சென்று பார்த்தபோது தரம் இல்லை என்று தெரியவந்துள்ளது. கழிவறை தரம் இல்லாமல் … Read more

கோவை || பேருந்தில் ஏற முயன்ற கல்லூரி மாணவரை அறிவாளால் வெட்டிய மர்ம கும்பல்.! போலீசார் விசாரணை.!

கோவை மாவட்டத்தில் பேருந்தில் ஏற முயன்ற கல்லூரி மாணவரை அறிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம் கணபதி காமராஜபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் சரவணவேல்(18). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சரவணவேல், தனது கல்லூரி நண்பரான தேவா என்பவருடன் கணபதி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.  அப்பொழுது, அந்த வழியாக வந்த தனியார் பேருந்த்தில் ஒன்றில் இவர்கள் ஏற முயன்ற … Read more

பெரும் சோகம்.. குளிக்கச் சென்ற நடிகர் கோவில் குளத்தில் மூழ்கி பலி..!

கேரளாவில், கோவில் குளத்தில் குளிக்கச் சென்ற திரைப்பட இயக்குநரும், நடிகருமான தீபு பாலகிருஷ்ணன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரிஞ்சலகுடா பகுதியைச் சேர்ந்தவர் தீபு பாலகிருஷ்ணன்(41). மலையாள திரைப்படங்களில் உதவி இயக்குநராக இருந்து வருகிறார். இவர் நேற்று (அக்.10-ம் தேதி) அதிகாலை 5 மணியளவில் அப்பகுதியில் உள்ள கோவில் குளத்தில் குளிக்கச் சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனையடுத்து, தீயணைப்பு துறையினர் … Read more

அதிக மழை பெய்தாலும் மின் விநியோகம் பாதிக்காது: அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி

சென்னை: “வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை, மழை எந்தளவுக்கு பெய்தாலும்கூட மின் விநியோகத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாத வகையில் முன்னெச்சரிக்கை பணிகளாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். சென்னையில் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு பருவமழை பாதிப்புகள் எப்படியிருந்தாலும், மின் விநியோகம் சீராக இருக்க வேண்டும் என்பதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள பணிகள், … Read more

“ஆட்சிக்கு ஆபத்து” -ஸ்டாலினை எச்சரிக்கும் காடேஸ்வரா சுப்ரமணியம்!

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலுக்கு இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வருகை தந்தார்‌. மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த காடேஸ்வரா சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சி ஹிந்து விரோத ஆட்சி. ஹிந்து என்ற வார்த்தையையே உபயோகிக்க கூடாது என்றும் சொல்லும் நபர்களை வளர்த்து வரும் ஆட்சி. மதசார்பற்ற அரசு என்று சொல்லிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் கோவில் வழிபாடுகளில் அரசும், அரசு அதிகாரிகளும் … Read more

வி.சி.க., ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் நடத்திய மனித சங்கிலி போராட்டத்தில் சங்கப்பிரிவார் அமைப்புகளுக்கு தமிழ் மண்ணில் இடமில்லை என முழக்கம்

சென்னை: சென்னை, மதுரை, கோவை உள்பட தமிழ்நாடு முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விடுதலை சிறுத்தைகளும், இடதுசாரி கட்சிகளும் இணைந்து நடத்திய மனித சங்கிலியில் சங்கப்பிரிவார் அமைப்புகளுக்கு தமிழ் மண்ணில் இடமில்லை என்று முழக்கமிட்டனர்.