திருவள்ளூர் || கத்தியை காட்டி மிரட்டி 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.! போக்சோவில் வாலிபர் கைது.!

திருவள்ளூர் மாவட்டத்தில் கத்தியை காட்டி மிரட்டி 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த தாமனேரி ரங்காபுரம் பகுதியை சேர்ந்த 12 வயதுடைய சிறுமி ஆட்டுக்குட்டியை தேடி தாமனேரி மலைப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்பொழுது ஆதிவராதபுரம் காலனி, பஜனை கோவில் தெருவை சேர்ந்த பஞ்சாட்சரம் என்ற வாலிபர் கத்தியை காட்டி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுமி இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டுஅதிர்ச்சியடைந்த பெற்றோர், … Read more

8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..!

வடதமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால்,  சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்திற்கு, மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மைய செய்திக்குறிப்பில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட 22 மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. Source link

“ஆட்சி மொழியாக இந்தியை திணிக்க முயற்சி… கடும் விளைவுகள் நேரிடும்” – தமிழக காங். எச்சரிக்கை

சென்னை: “பாஜக ஆட்சியில் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியை திணிக்கிற முயற்சியின் வெளிப்பாடாகத் தான் அலுவல் மொழி பற்றிய நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை அமைந்துள்ளது. பிரதமர் மோடி இதில் தலையிட்டு இத்தகைய நடவடிக்கைகளை திரும்பப் பெற தவறினால் கடுமையான போராட்டத்தை தமிழகத்தில் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன், இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியை திணிக்கிற … Read more

ஒரு மணி நேரம் பயணிக்க ரூ.600 கட்டணம் குமரி முதல் வட்டக்கோட்டை வரை அதிநவீன சுற்றுலா படகு சேவை: வரும் 1ம்தேதி முதல் தொடக்கம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலில் படகு சவாரிக்காக எம்எல். தாமிரபரணி, எம்எல், திருவள்ளுவர் படகுகள் வரும் 1ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சென்னையில் இருந்து உயரதிகாரிகள் இன்று வர உள்ளனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுகளான எம்.எல்.குகன், எம்.எல். பொதிகை, எம்.எல். விவேகானந்தா ஆகியவற்றின் மூலம் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். காலை 8 மணி முதல் … Read more

”எங்கள ஒன்னும் பண்ண முடியாது” – மதுக்கடை எதிர்ப்பு போராட்டமும், விற்பவர்களின் மிரட்டலும்!

மொரப்பூர் அருகே மதுபாட்டில் விற்பனை செய்யும் சந்துக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த நவலை கிராமத்தில் 900-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக இந்த கிராமத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி பல்வேறு தவறான செயல்களுக்குள் உள்ளாகி வந்தனர். இந்த கிராமத்தில் பல்வேறு இடங்களில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து … Read more

வருகிற 14ம் தேதி முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்..!

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற அக்-17-ந்தேதி நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன்பு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  தமிழகத்தில் அமைச்சரவை கூட்டம் வரும் 14ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. சட்டசபை கூட்டம் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.  இதையடுத்து, வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் … Read more

“திமுகவினரைப் பார்த்தே பயப்படும் நிலையில் முதல்வர் ஸ்டாலின்” – இபிஎஸ்

சேலம்: “இப்போது தமிழகத்தை ஆளுகின்ற முதல்வர் எத்தனையோ அவதாரமெடுத்து அதிமுகவை அழிக்கப் பார்த்தார். அத்தனை அவதாரங்களையும் தவிடுபொடியாக்கிய கட்சி அதிமுக” என்று அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக் கட்சியினர், அதிமுகவில் இணையும் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், “திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கிறார். அதிமுக வீழ்ந்துவிட்டது, அடுத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலே தமிழகத்திலும், … Read more

அங்கீகரிக்கப்படாத 30,000 மனைகள் பதிவு பதிவுத்துறை அலுவலர்கள் பலர் சஸ்பெண்ட்: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல்

மதுரை: அங்கீகரிக்கப்படாத 30 ஆயிரம் மனைப்பிரிவுகளை பதிவு செய்த விவகாரத்தில், பதிவுத்துறை அலுவலர்கள் பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த சரவணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் முறையான அங்கீகாரம் பெறாத வீட்டடி மனைகளை மோசடியாக விற்பனை செய்வதுடன், சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்கின்றனர்.   உள்ளாட்சி பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத நிலம், மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என சட்டம் … Read more

ஓடும் பேருந்தில் இருக்கை உடைந்து சாலையில் விழுந்த பயணி – குமரியில் அரசு பேருந்தின் அவலம்!

கன்னியாகுமரியில் ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தில் சீட் கழன்று விழுந்து பயணி பேருந்தில் இருந்து வெளியே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து தமிழக கேரள எல்லை பகுதியான பளுகல் பகுதிக்குச் செல்லும் அரசு பேருந்து இன்று காலை இடைக்கோடு பகுதியில் வைத்து பேருந்தின் பின்புற வாசல் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் வலதுபக்க சீட் விழுந்து அந்த சீட்டில் இருந்த மேல்புறம் அருகே வட்டவிளை பகுதியில் தங்கி நியாயவிலை கடையில் வேலை … Read more