அவர் அதுக்கு முயற்சிக்கிறார்… திருமா மீது இந்து அமைப்பு பகிரங்க குற்றச்சாட்டு!

மணிரத்னம் இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்த திரைப்படம் வெளியான பிறகு ராஜ ராஜ சோழன் குறித்தும், ஹிந்து மதம் பற்றியும் அரசியல் கட்சித் தலைவர், சினிமா பிரபலங்கள் தெரிவித்துவரும் கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ‘ராஜராஜ சோழன் தமிழ் பேரரசன்; அவர் இந்து அல்ல’ என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார். “ராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் … Read more

கொடநாடு வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு

ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான ஆவணங்களை நீலகிரி தனிப்படை போலீசார், சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உட்பட 326 பேரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, பல்வேறு சாட்சிகளிடம் கோவையில் உள்ள பிஆர்எஸ் அலுவலகத்தில் ஐஜி சுதாகர் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி  வந்தனர். இதற்கிடையே, இவ்வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதனால், … Read more

திருச்சி மத்திய சிறையில் சிக்கிய கஞ்சா, செல்போன், சிம் கார்டு! 4 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்சி மத்திய சிறைச்சாலையில் கஞ்சா, செல்போன், சிம் கார்டுகள் வைத்திருந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மத்திய சிறையில் ஆயுள் கைதிகள், தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள பல்வேறு அறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், கஞ்சா, செல்போன் பயன்படுத்துவதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து திருச்சி மத்திய சிறை அதிகாரி சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் ஜெயிலில் … Read more

போலீஸ் வாகனத்தின் முன் பட்டாக்கத்தியுடன் போஸ் கொடுத்த நபரை தட்டி தூக்கி போலீஸ்!

கெத்து காட்ட நினைத்த வாலிபர்! தற்பொழுது காவல் நிலையத்தில் விசாரணை கைதியாக இருக்கும் சோகம்! சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தங்க அரசு ரியல் எஸ்டேட் செய்து வருகிறார். அவருடைய மகன் மகன் கோபாலகிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருவதாக கூறப்படுகிறது. தன்னை அந்த பகுதியை சேர்ந்த நண்பர்கள் மற்றும் மக்கள் யாரும் ஒல்லியாக இருப்பதால்தான் யாரும் மதிக்கவில்லை என வருத்தப்பட்டுள்ளார். எப்படியாவது பெரிய ரவுடியாக வலம் வரவேண்டும். அப்போதுதான் … Read more

இடத்தகராறில் அண்ணன், தங்கை இடையே பிரச்னை : வாய்த்தகராறு கைகலப்பாக மாறியதால், தாக்கிக்கொண்ட 2 குடும்பத்தினர்..!

கரூர் மாவட்டம் புகழூர் அருகே, இடத்தகராறில், அண்ணன் மற்றும் தங்கை குடும்பத்தினர் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக்கொள்ளும் வீடியோ, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. செம்படாபாளையம் பகுதியை சேர்ந்த பாப்பாத்திக்கும், இவரின் அண்ணன் செல்வத்திற்கும் நீண்ட நாட்களாக இடப்பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை இருவருக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு, கைகலப்பாக மாறிய நிலையில், செல்வம் மற்றும் பாப்பாத்தி குடும்பத்தினர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இருதரப்பினரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். Source … Read more

வடகிழக்கு பருவமழை: பொருட்கள் சேதமாவதை தவிர்க்க ரேஷன் கடைகளுக்கு 17 அறிவுறுத்தல்கள் 

சென்னை: வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருட்களை சேதமடைவதைத் தவிர்க்க கூட்டுறவுத் துறை சார்பில் ரேஷன் கடைகளுக்கு 17 அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களுக்கு சேதம் ஏற்படாமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் 17 அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன் விவரம்: கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், மழை மற்றும் புயல் காரணமாக பாதிப்புக்குள்ளாகக் … Read more

சபாநாயகருக்கு ஓபிஎஸ் மீண்டும் கடிதம்: ஆலோசிக்க மறக்க வேண்டாம்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தால் தன்னிடம் ஆலோசிக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவில் உட்கட்சி பிரச்சினை உச்சம் பெற்று வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கே பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து … Read more

ஊத்தங்கரை அருகே 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகற்கள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா குன்னத்தூர் கிராமத்தில் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் காலத்தை சேர்ந்த இரண்டு நடுகற்களும், ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இப்பகுதியை ஆண்ட நுளம்பர்களின் பழங்கன்னட பொறிப்புள்ள நடுகல் ஒன்றும் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நடுகற்களில் பல்லவர் காலத்தை சேர்ந்த இரண்டை தொல்லியல் துறையைச் சேர்ந்த பூங்குன்றன் நேரில் ஆய்வு செய்து படித்தளித்தார். அதில், முதல் நடுகல்லில், சாத்தனாதி சேத்தன் என்பவர் பொருமந்தைகளை மீட்கும் போது இறந்துள்ளார் என்பதை குறிப்பிட்டுள்ளனர். இரண்டாம் நடுகல் … Read more

அறப்போர் இயக்கத்திற்கு எதிரான மான நஷ்ட ஈடு வழக்கு வாபஸ் – மனுக்கள் தள்ளுபடி

அறப்போர் இயக்கத்திற்கு எதிரான 3 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரிய வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், அந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம், அதன் உரிமையாளர் சந்திரசேகர் ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அறப்போர் இயக்கம் அளித்த புகார் தொடர்பான தகவல்கள் கடந்த … Read more