இடியும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை மழைக்காலத்துக்கு முன் அப்புறப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஸ்
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில், 61 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பதவி உயர்வு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பதவி உயர்வு உத்தரவுகளை வழங்கிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இடியும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை மழைக்காலத்துக்கு முன்னதாகவே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, பள்ளிகள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும், மின்சாதனங்களின் … Read more