நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை எதிரொலி மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 35,000 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் நள்ளிரவில் மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை வலுத்துள்ளதால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 9,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று … Read more