கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா உட்பட 316 பேரிடம் நடத்திய விசாரணை அறிக்கை ஊட்டி கோர்ட்டில் தாக்கல்

ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, சசிகலா உட்பட 316 சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்தார். கொடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என குற்றவாளி சயான் மனுவை … Read more

சுண்டைக்காய் விலையையும், கீரை விலையையும் கேட்டால் விலைவாசி குறையுமா? – ப சிதம்பரம் பேச்சு.!

நேற்று மாலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையிலிருந்து டெல்லி செல்வதற்காக விமான நிலையம் செல்லும் வழியில் மயிலாப்பூரில் உள்ள தெருவோர கடையில் காய்கறி வாங்கினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ நிதி அமைச்சரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டது.  அந்த வீடியோவில், சென்னை மயிலாப்பூர் மார்கெட்டில் நிதியமைச்சர் காய்கறி வாங்கினார். அங்கு அவர் காய்கறி வியாபாரிகளுடனும் உள்ளூர்வாசிகளுடனும் உரையாடினார் என்று அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திற்கு அருகே குட்டப்பாளைத்தில் உள்ள சிவசேனாபதி … Read more

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கம் -அமைச்சர்

தீபாவளியை முன்னிட்டு, மக்கள் சொந்த ஊர் செல்ல, தமிழகம் முழுவதும் வரும் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 16 ஆயிரத்து 888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என, போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம்,பூவிருந்தவல்லி ஆகிய 5 இடங்களில் இருந்து, இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றார். கோயம்பேட்டில் இருந்து, பிற 4 பேருந்து நிலையங்களுக்கு, 24 மணி நேரமும் மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என்றும் … Read more

பயங்கரவாத தடுப்புப் பிரிவு அமைக்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுக்க, காவல் துறையில் ஏற்கெனவே மூன்று பிரிவுகள் உள்ள நிலையில், தீவிரவாத தடுப்புப் படையை உருவாக்க அவசியமில்லை என தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாகவும், ஆஃப்கானிஸ்தானில் தலிபான்களின் எழுச்சி காரணமாகவும் இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியா மீதும் தாக்குதல் … Read more

நிலம் வாங்குவதற்காக கடன் வாங்கி கொடுத்தார் ரூ.2 கோடியை நண்பர் ஏமாற்றியதால் மனைவியுடன் வியாபாரி தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது; மிரட்டியவர் குறித்து விசாரணை

சூளகிரி: சூளகிரி அருகே ரூ.2 கோடி கடனை திருப்பி கொடுக்க முடியாத விரக்தியில், தம்பதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது நெருங்கிய நண்பருக்கு பணத்தை வாங்கி கொடுத்ததாக, தற்கொலை செய்து கொண்டவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றி, போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், செம்மறிகுளத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(47). இவரது மனைவி கிருஷ்ணவேணி(44). கடந்த 15 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில்  வசித்து வந்தனர். இவர்களின் 13, 10 வயது மகள்கள் … Read more

தமிழகத்தில் இந்த தீபாவளிக்கு இதெல்லாம் செய்ய கூடாது – வெளியான அறிவிப்பு!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இன்று விட்டுள்ள அறிவிப்பில், சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.  இதனை கருத்தில் கொண்டு, இந்தாண்டு தீபாவளி தினத்தன்று பொதுமக்கள் கீழ்கண்டவற்றைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது :- பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை 1. பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.2. மாவட்ட நிர்வாகம் / உள்ளாட்சி அமைப்புகளின் … Read more

கடலூரில் ஆட்டோ டிரைவர் கழுத்தறுத்து படுகொலை.. போலீஸ் விசாரணை..!

கடலூர் அருகே, கழுத்தறுத்து ஆட்டோ டிரைவர் படுகொலை செய்யப்பட்டது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குறவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவமணியை காணாததால், உறவினர்கள் தேடி வந்தனர். அங்குள்ள வாழைத்தோப்பில் சருகுகளால் மூடப்பட்ட நிலையில், அவர் சடலமாக கிடந்தார். ஆட்டோ பாலத்தின் அருகேயுள்ள குழியில் கவிழ்க்கப்பட்டு கிடந்தது. மோப்ப நாய் உதவியுன் ஆய்வு செய்த போலீசார், 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர். Source link

தாமதமாக சான்றிதழ் சமர்ப்பித்ததற்காக பணி நியமனத்தை மறுக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு 

சென்னை: தாமதமாக சான்றிதழ் சமர்ப்பித்ததற்காக பணி நியமனத்தை மறுக்க முடியாது என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், திருப்பூரைச் சேர்ந்த கலப்பு மணம் புரிந்தவருக்கு, அந்த முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் 4 வாரங்களில் பணிநியமனம் வழங்க பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை பள்ளிக்கல்வித் துறை 2015-ம் ஆண்டு மேற்கொண்டது. வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடிப்படையிலும், நேரடியாகவும் தேர்வு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தேர்வில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும், நேரடியாகவும் பங்கேற்ற … Read more

சிதம்பரம் பஸ் நிறுத்தத்தில் 12ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்: வீடியோ வைரலால் பரபரப்பு

சிதம்பரம்: சிதம்பரம் பஸ் நிறுத்தத்தில் 12ம் வகுப்பு மாணவிக்கு மாணவன் தாலி கட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. இதனால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையம் அருகே பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்லும் பேருந்து நிறுத்தம் உள்ளது. அங்குள்ள நிழற்குடையில் பள்ளி மாணவி ஒருவருக்கு மாணவன் தாலி கட்டிய வீடியோ நேற்று முன்தினம் முதல் வைரல் ஆகி வருகிறது. சம்பந்தப்பட்ட மாணவி,  பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மாணவிக்கு … Read more