நிலம் வாங்குவதற்காக கடன் வாங்கி கொடுத்தார் ரூ.2 கோடியை நண்பர் ஏமாற்றியதால் மனைவியுடன் வியாபாரி தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது; மிரட்டியவர் குறித்து விசாரணை
சூளகிரி: சூளகிரி அருகே ரூ.2 கோடி கடனை திருப்பி கொடுக்க முடியாத விரக்தியில், தம்பதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது நெருங்கிய நண்பருக்கு பணத்தை வாங்கி கொடுத்ததாக, தற்கொலை செய்து கொண்டவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றி, போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், செம்மறிகுளத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(47). இவரது மனைவி கிருஷ்ணவேணி(44). கடந்த 15 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் வசித்து வந்தனர். இவர்களின் 13, 10 வயது மகள்கள் … Read more