கடலூர் || கையில் ஆப்ரேஷன் செய்த பெண் உயிரிழப்பதற்கு காரணம் என்ன?.

கடலூர் மாவட்டம் பாரதி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில், சாவடி பகுதியை சேர்ந்த மீனா என்பவர் கடந்த சனிக்கிழமையன்று கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்க அதற்கு உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து மீனாவிற்கு  ஞாயிற்றுக்கிழமையன்று கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பிறகு சாதாரன வார்டுக்கு மாற்றப்பட்டார்.  இந்நிலையில் நேற்று பிற்பகல் மீனா உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதை கேட்டு அதிர்ச்சி … Read more

பெண் திடீர் உயிரிழப்பு.. ஆஸ்பத்திரியை அடித்து நொறுக்கிய உறவினர்கள்..!

கடலூர் மாவட்டம் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் மீனா (58). இவர், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக கடந்த சனிக்கிழமை கடலூர் பாரதி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறவே அதற்கு உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை மீனாவின் கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சாதாரன வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) பிற்பகலில் மீனா உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம தெரிவித்துள்ளது. இதைக் கேட்ட உறவினர்கள் … Read more

உள்ளேயும் மழை.. வெளியேயும் மழை.. அரசு பேருந்திற்குள் ஒழுகிய மழை நீர்.. நனைந்தபடி பயணித்த பயணிகள்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் அரசு பேருந்திற்குள் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் நனைந்தபடி பயணம் செய்தனர். சங்கராபுரம் போக்குவரத்து பணிமனையில் இருந்து, எஸ்.வி.பாளையம், பவள கிராமம் வழியாக, மல்லாபுரம் சென்ற பேருந்தின் மேல்கூறை சேதமடைந்து, மழை நீர் ஒழுகியதால், பேருந்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. Source link

கோடநாடு வழக்கு விசாரணை அறிக்கை நீதிபதியிடம் சமர்ப்பிப்பு

உதகை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு, 4 ஆண்டுகளுக்கும் மேலாக உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் ஐஜி சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மீண்டும் போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலீஸார் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி, விசாரணை குறித்து நீதிபதியிடம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு … Read more

குப்பை கொட்டினால் அபராதம்! அபராத பலகை முன்பே குப்பை கொட்டிய மக்கள்!

வேலூர் மாநகராட்சி 60 வார்டுகளில் 10 ஆம் தேதி முதல் குப்பை கொட்டினால் அபராதம் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டது.  ஆனால், காட்பாடி தாராபடவேட்டில் மாநகராட்சி அறிவிப்பு போஸ்டரின் எதிரில் குப்பை கொட்டி கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.  வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களை சேர்ந்த 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை மூலம் குப்பைகள் தரம்பிரிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் குப்பை … Read more

தொடரும் கனமழை காரணமாக ஒகேனக்களுக்கு நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை

தருமபுரி: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழையால் ஒகேனக்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 30ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அதிக நீர்வரத்தின் காரணமாக ஒகேனக்கல் காவேரி ஆற்றில் பரிசில்களை இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் நாற்றாம்பாளையம், அஞ்செட்டி, கேரட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை நேற்று, மற்றும் நேற்று முன்தினம் பெய்து வருவதால் ஒகேனக்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று … Read more

சாலையோரம் கைவிடப்பட்ட வாகனங்களை திருச்சி மாநகராட்சி அகற்றுகிறது!

சாலையோர கடைகளையும் அகற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முயற்சி!  திருச்சி மாநகராட்சி சாலையோரங்களில் கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றும் முயற்சியில் மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாநகராட்சி நகர் முழுவதும் கைவிடப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. சனிக்கிழமை தொடங்கிய இந்த நடவடிக்கையில் 170க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கண்டோன்மென்ட், பாலக்கரை, மரக்கடை, வில்லியம்ஸ் சாலை, வொரையூர், ரெனால்ட்ஸ் சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கைவிடப்பட்ட தள்ளு வண்டிகள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோரிக்‌ஷாக்கள், … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. 10ம் வகுப்பு சான்றிதழ் பெறும் தேதி வெளியானது..!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 14-ம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ – மாணவியருக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மட்டும் ஏற்கனவே வழங்கப்பட்டது. இந்நிலையில், துணைத் தேர்வு முடிவு மற்றும் மறுகூட்டல் முடிவு வெளியான நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மாணவ – மாணவியர் … Read more

ஆன்லைன் ஆப் மூலம் பெண்களை மிரட்டி பணம் பறித்தவர் கைது..!

கோவையில் இணையதள மூலம் பெண்களிடம் பழகி அதன் மூலம் அவர்களை மிரட்டி பணம் பறித்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கோவையில் ஆன் லைன் ஆப் மூலம் பெண்களுடன் பழகி அவர்களின் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்களைப் பெற்று அதை வைத்தே அவர்களுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறித்துள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கூமாபட்டியைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரியான பரமசிவம் … Read more