இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட 4.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.481 கோடி பயிர் காப்பீட்டு தொகை: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை: இயற்கை இடர்பாடுகளால் கடந்த 2021-22-ம் ஆண்டில் பாதிக்கப்பட்ட 4.43 லட்சம் விவசாயிகளுக்கு, ரூ.481 கோடி காப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் அடையாளமாக 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை அவர் வழங்கினார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண் துறைக்கு 2021-22-ம் நிதியாண்டில் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விவசாயிகளின் வருவாயைப் பன்மடங்காக … Read more