தஞ்சாவூர் அருகே சோகம்.! 2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலை.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஆலடிக்குமுளை புதுநகர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஜான்ராஜ். இவருடைய மனைவி மாலதி(22). இவர்களுக்கு ஹர்சன் (2) என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் மாலதி பல்வேறு சுய உதவி குழுவிற்கு பணம் கொடுக்க வேண்டியிருந்தது. இதனால் மாலதி பலரிடம் கடன் கேட்டுள்ளார். ஆனால் பணம் கிடைக்காததால் … Read more

வருமான வரியில் ஒரு தவறு ஏற்பட்டுள்ளதாக கூறி 14.5 லட்சம் அபேஸ்..!!

திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூர் பகுதியில் வசித்து வருபவர் முத்து இருளப்பன் (61). ஓய்வுப் பெற்ற தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு கடந்த சில மாதத்திற்கு முன்பு ஒரு மெயில் வந்துள்ளது. அதில், கடந்தாண்டு கட்டிய வருமான வரியில் ஒரு தவறு ஏற்பட்டுள்ளதாகவும் அதை சரி செய்ய வேண்டுமென்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று ஒரு செயலி முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து முத்து இருளப்பன் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ் … Read more

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் – பணம் வைத்து விளையாடினால் 3 மாதம் சிறை

சென்னை: தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட அவசர தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதன் மூலம், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விளம்பரம் செய்யவும், அந்த நிறுவனங்களுக்கு வங்கிகள் பணப் பரிவர்த்தனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் சூதாட்டத்தால் கடன் சுமைக்கு உள்ளாகி, இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வந்தது. காவல் துறையைச் சேர்ந்தவர்கூட தற்கொலை செய்துகொண்டார். எனவே, தமிழகத்தில் ஆன் லைன் சூதாட்டத்துக்கு கடும் எதிர்ப்புகள் … Read more

நித்தியானந்தா போல தோற்றமளிக்கும் சாமியார்; ஆசிரமத்தை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார்

திருப்பூர்: பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியில் கோவை செல்வபுரத்தை சேர்ந்த பாஸ்கரானந்தா (46) என்பவர் ஆசிரமம் நடத்தி வருகிறார். செல்வகுமார் என்பவரிடம் நிலத்தை குத்தகைக்குப் பெற்று ஆசிரமத்தை அமைத்திருந்தார். இந்நிலையில் செல்வகுமார் வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்தவில்லை என வேறு ஒருவருக்கு ஏலம் விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரவோடு இரவாக பாஸ்கரானந்தாவின் ஆசிரமம் இடித்து தள்ளப்பட்டது. இது தொடர்பாக அவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். முறையான நீதிமன்ற உத்தரவுகள் இன்றி ஆசிரமத்தை இடித்தது … Read more

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இன்னொருவர் உயிரிழந்தால் ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னை: “ஆன்லைன் சூதாட்டத்திற்கு முந்தைய ஆட்சியில் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட பிறகு, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் செய்து கொள்ளப்பட்ட 29-ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடந்த 6 ஆண்டுகளில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருச்சி மாவட்டம் மலையாண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை … Read more

கடவுளை வழிபடுவது அவரவர் நம்பிக்கையின்படியான உரிமை; ஐகோர்ட் கிளை நீதிபதி கருத்து

மதுரை: கடவுளை வழிபடுவது அவரவர் நம்பிக்கையின்படியான உரிமை என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே மேல நேசநேரியில் உள்ள வாலகுருநாதசுவாமி திருக்கோயில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையால் 12 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இக்கோயிலை மீண்டும் திறப்பது தொடர்பான தகுதியான நபரின் (அதிகாரி) அறிவிப்பை ரத்து செய்யக் கோரி சீனி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு பிறப்பித்த உத்தரவில், ‘‘2011ல் கோயிலை நிர்வகிக்க தகுதியான நபர் (அதிகாரி) … Read more

நெருங்கும் தீபாவளி: எரியக்கூடிய பொருட்களை ரயிலில் கொண்டுசெல்லவேண்டாம் – ரயில்வே எச்சரிக்கை

தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில் ரயில்களில் எரியக்கூடிய பொருட்களை பறிமுதல் செய்வதற்கான சோதனையை ரயில்வே தீவிரப்படுத்தியுள்ளது. ரயிலில் பட்டாசு போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தென்னக ரயில்வேயின் சென்னை மண்டல நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோர், பார்சல் மூலம் பட்டாசு போன்ற பொருட்களை ஏற்றிச் செல்வதை தவிர்க்குமாறு தென்னக ரயில்வேயின் சென்னை மண்டல நிர்வாகம் கூறியுள்ளது. இதுகுறித்து … Read more

குழந்தையின் கையில் பட்டா கத்தியை வழங்கி கேக் வெட்ட வைத்த நபர் கைது..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், குழந்தையின் கையில் பட்டா கத்தியை வழங்கி கேக் வெட்ட வைத்த நபரை போலீசார் கைது செய்தனர். சத்யா நகர் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் மீது கொலை, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், தனது அண்ணன் மகன் பிறந்தநாள் விழாவின் போது, குழந்தையை மடியில் வைத்திருந்த அஜித்குமார், பட்டா கத்தியை குழந்தையின் கையில் வழங்கி கேக்கை வெட்டியுள்ளார். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், … Read more

20000 காலியிடங்கள் | இந்தியில் கேள்வித் தாள்; தமிழில் கிடையாதா? – மத்திய அமைச்சருக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம்

சென்னை: தமிழில் எஸ்எஸ்சி தேர்வு வினாத்தாள் அமையை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஸ்டாஃப் செலக்சன் கமிசன் தேர்வுக்கான வினாத்தாள் இந்தியில் மட்டுமே இருக்கும் என்ற அறிவிப்பு தொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மத்திய பணியாளர், பொது மக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ” மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகள், அரசு நிறுவனங்கள், அரசியல் சாசன … Read more

புதூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மதுராந்தகம்: புதூர் ஊராட்சியில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பூதூர், ஈசூர் ஆகிய 2 பெரிய கிராமங்கள் உள்ளன. இங்கு, சுமார் 10 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், பசுமை புரட்சி ஏற்படுத்தும் விதமாக 2 கிராமங்களிலும் சுமார் 2000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஏ.சி.சுரேஷ் தலைமை தாங்கினார். துணை தலைவர் சாமுண்டீஸ்வரி முன்னிலை வகித்தார். முன்னதாக, ஊராட்சி செயலர் சத்யபிரியன் … Read more