”உங்களது 10 எம்எல்ஏக்கள் எங்களுடன் பேசி வருகின்றனர்” – திமுகவுக்கு ஷாக் கொடுக்கும் இபிஎஸ்!

திமுகவின் 10 எம்.எல்.ஏ-க்கள் தங்களுடன் பேசி வருவதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்ல விழாவில் கலந்துகொண்ட பின் இவ்வாறு தெரிவித்தார். அதன்பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு பதிலளித்த அவர், “திமுகவின் 10 எம்எல்ஏக்கள் எங்களோடு பேசி வருகின்றனர். மேயரை பின் வரிசையில் அமர வைத்தது தான் திராவிட மாடல். திமுக என்பது திராவிட மாடல் மட்டுமல்ல… கார்ப்பரேட் கட்சி, குடும்ப … Read more

சூதாட்டத்திற்கு ஸ்டாலின் அரசு துணை போகிறது: திருச்சியில் இ.பி.எஸ் பேட்டி

திண்டுக்கல்லில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார். திருச்சி மாவட்ட எல்லையான வையம்பட்டியில்,500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்து விமான நிலையம் வரை வந்து வழியனுப்பினர். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: “அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர். நாங்களும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளோம் என்றார். திமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் எப்படி … Read more

நீட் தேர்வு முடிவுகள் | மாணவர்களைக் கடிந்து கொள்ள வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

சென்னை: “நீட் தேர்வெழுதிய உங்கள் குழந்தைகள் மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகவில்லை என்றால் அவர்களைக் கடிந்து கொள்வது போன்ற விஷயங்களைப் பெற்றோர் தவிர்க்க வேண்டும்” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சந்தையை ஆய்வு செய்த பின்னர், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ” பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் விரும்பியது போல, உங்கள் குழந்தைகள் மருத்துவப் படிப்பிற்கு … Read more

ஸ்டாலினுக்கு விமானத்தில் சர்ப்ரைஸ் கொடுத்த பெண்… அப்படியே கொட்டிய 90ஸ் வசனங்கள்…!

தமிழக முதல்வர் இன்றைய தினம் விமானத்தில் பயணித்த போது நடந்த நிகழ்வு மிகுந்த சுவாரஸியத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் நடைபயணத்தை தொடங்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்றார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, திமுக எம்.பி டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சென்றனர். விமான பயணத்தின் போது தனது இருக்கையில் அமர்ந்திருந்த போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அருகில் பெண் ஒருவர் வந்தார். அவர் வங்கி … Read more

மாதம் ரூ1,000 வழங்கும் திட்டம்; ஏழை கல்லூரி மாணவிகளின் வாழ்வில் புதிய வெளிச்சம்: தமிழக அரசுக்கு பாராட்டு குவிகிறது

திருச்சி: தமிழகத்தில் செயல்பட்டு வந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றப்பட்டது. அதன்படி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி … Read more

சமூக வலைதளங்களில் முதல்வர் குடும்பம் குறித்து அவதூறு – கோவை அதிமுக நிர்வாகி கைது

சமூக வலைதளங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பம் குறித்து அவதூறு கருத்துகளை பதிவு செய்து வந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த மசக்கவுண்டன் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர், அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர், சமூக வலைதளங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும் அவரது குடும்பம் குறித்தும் அவதூறு கருத்துகளை … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: வட தமிழக பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருப்பூர், தேனி, … Read more

பொன்னியின் செல்வன் சக்சஸ்: ப்ரோமோஷனுக்கு களமிறங்கிய பாஜக!

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் டீசரும், பொன்னி நதி பாக்கணுமே … Read more

பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த ஒற்றை ஆண் காட்டு யானை

கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் நாள்தோறும் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர்  தேடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் வருவது வழக்கம். தற்போது மருதமலை வனப்பகுதியில் 16 யானைகள் முகாமிட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் 14 யானைகள் ஐஓபி காலனி மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்தது.  இதனை அடுத்து வனத்துறையினர் அந்த யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் … Read more

கந்தர்வகோட்டை- பட்டுக்கோட்டை சாலையில் வேகத்தடையில் வெள்ளை வர்ணம் அழிந்ததால் அடிக்கடி விபத்து-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலைகள் விரிவாக்க பணிகள் தற்சமயம் நடைபெற்று, புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் மீது ஒளிரும் வண்ணமோ, அருகில் வேகத்தடை இருப்பதற்கான விளம்பர பலகையோ இல்லாமல் இருக்கின்றது. இதனால் இந்த சாலையில் செல்வோருக்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் வேகத்தடை மீது வாகனங்கள் ஏறி நிலை தடுமாறி கீழே விழும் நிலை இருந்து வருகிறது. இந்த சாலையில் சமீபத்தில் கந்தர்வகோட்டை ஒன்றியம்,வேம்பன்பட்டி கிராமத்தில் உள்ள … Read more