விடுதி தோழிகளின் குளியல் வீடியோ.. டாக்டரை குஷி படுத்திய மாணவி கைது..!

விடுதியில் தங்கிய தோழிகளின் குளியல், உடை மாற்றும் காட்சிகளை செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தன் டாக்டர் நண்பருக்கு அனுப்பி அவரை குஷிபடுத்திய மாணவியை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்தவர் ஆசிக் (31). எம்பிபிஎஸ் படித்துள்ள இவர், கமுதி முஸ்லிம் பஜாரில் கிளினிக் நடத்தி வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்தது. இவருக்கும், கிளினிக் அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரி (24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காளீஸ்வரி தற்போது … Read more

நளினி, ரவிச்சந்திரன் மேல்முறையீட்டு வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் 

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் தங்களை விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை கடந்த மே மாதம் 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.உச்ச நீதிமன்றம் தனது … Read more

'ஓசி பஸ்ஸில் பயணிப்பவர்கள்' – அமைச்சர் பொன்முடிக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தபடி, மகளிர் இலவச பயணத்திற்காக இந்த ஆண்டு 1,600 கோடி ரூபாயை போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. அதன்படி தமிழகத்தில் சாதாரண கட்டண அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வசதி அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அரசு விழா ஒன்றில் பேசிய … Read more

பண்ருட்டி அருகே பழங்கால சுடுமண் பொம்மை கண்டெடுப்பு

பண்ருட்டி : பண்ருட்டி அருகே உள்ள தென்பெண்ணையாற்றில், வேலைபாடுகளுடன் கூடிய சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டது.பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மேற்புறகளஆய்வு மேற்கொண்டார். அப்போது பழங்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண்ணாலான பொம்மையை கண்டெடுத்தார். இதை தொடர்ந்து அவர் கூறுகையில், கடந்த சில மாதங்களாக பண்ருட்டி பகுதி தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் மேற்புற களஆய்வு மேற்கொண்டபோது பழங்கால மக்களின் தொல்லியல் தடயங்கள் கண்டறியப்பட்டன. அதை தொடர்ந்து உளுந்தாம்பட்டு பகுதியில் மேற்புற ஆய்வு செய்தபோது சுடுமண்ணாலான பொம்மை, … Read more

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: தாய் மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு

மேட்டூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தாய் மகன் உட்பட மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மாட்டுக்காரனுரைச் சேர்ந்த மூர்த்தி (52). இவரது மனைவி அன்னபூரணி (40), மகன் மைதீஷ் (12) ஆகிய மூவரும் நேற்று மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது காவிரியில் நீராடி அணைக்கட்டு முனியப்பனை தரிசித்துவிட்டு மாலையில் மூவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மேச்சேரி … Read more

தோட்டத்தில் புகுந்த பாம்பு… எங்கே இருக்கிறது? 10 நொடிகளில் கண்டுபிடிச்சா மாஸ்டர்!

தோட்டத்தில் புகுந்த பாம்பு… எங்கே இருக்கிறது? 10 நொடிகளில் கண்டுபிடிச்சா மாஸ்டர்! Source link

அமைச்சரவை கூட்டத்தில் பல திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவதாக எதிர்பார்ப்பு..! 

இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பமானது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அக்டோபர் மாதம் கூடவுள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.  இந்தக் கூட்டத்தில் முக்கியமாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கை, ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம் குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளது. மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி … Read more

நாளை முதல் இவர்களுக்கு கலந்தாய்வு.. பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..!

மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் மாவட்டத்திற்குள் மாறுதல் பெற நாளை கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘ஜூன் மாதம் 1-ம் தேதி நிலவரப்படி, மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அதன்படி, நிதிக் காப்பாளர், … Read more

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்: உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார்

சென்னை: சென்னையில் இருந்து இன்று டெல்லி செல்லும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசுகிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று மாலை சென்னையில் இருந்து டெல்லி செல்கிறார். இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்லும் அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசவுள்ளார். தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடந்த என்ஐஏ சோதனையைத் தொடர்ந்து, தமிழகத்தில் கோவை, மதுரை, சேலம், மற்றும் ஈரோடு உள்ளிட்ட 15-க்கும் … Read more

பெரியார் இருந்திருந்தால் திமுக இருந்திருக்காது – சுப்பிரமணியன் சுவாமி அதிரடி

மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியான சுப்பிரமணியன் சுவாமியின் 83-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், பல்வேறு கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்துக்கொண்டு சுப்பிரமணியன் சுவாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர். விழா மேடையில் சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது: “இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வர உள்ளது. நாட்டின் கலாச்சாரத்தை வெள்ளைக்காரர்கள் எரித்ததால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி சென்றோம் தற்போது அதிலிருந்து மீண்டு … Read more