தர்மபுரி மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட நாட்டு துப்பாக்கிகள்!

என்ஐஏ சோதனையால் வீசி சென்றனரா?  தர்மபுரி மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நாட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் அதிக அளவு துப்பாக்கிப் புழக்கம் இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்து வருகின்றனர்.  இந்நிலையில் தொப்பூர் வனப்பகுதி அருகே உள்ள கஸ்தூரிகொம்பை கிராமத்தின் அனுமன் கோயில் அருகே வனப்பகுதியின் பாறை இடுக்கில் இருந்து நான்கு நாட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை … Read more

வாகன ஓட்டுநர்களே, ரூ.1000 அபராதம்.. லைசென்ஸ் ரத்து.. அரசு அதிரடி உத்தரவு..!

இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; ஓட்டுநர் உரிமம் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி சுற்றுலா தலமாக இருப்பதால் வெளியூரில் இருந்து ஏராளமானோர் இருசக்கர வாகனங்களிலேயே வருகின்றனர். ஆனால் இவர்களுக்கும் ஹெல்மெட் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. இதற்காகவே ஹெல்மெட் குறித்து மக்களிடம் தொடர் விழிப்புணர்வை புதுச்சேரி காவல் துறை செய்து வருகிறது. அந்த வகையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, “இருசக்கர வாகனங்களில் செல்வோர் … Read more

ஆடுகள் காணாமல் போன தகராறில் நாட்டுத்துப்பாக்கியால் விவசாயி சுட்டுக்கொலை – இளைஞர் கைது..!

கோவை மேட்டுப்பாளையம் அருகே, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், விவசாயியை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த இளைஞரை, போலீசார் கைது செய்தனர். ரங்கராஜபுரத்தை சேர்ந்தவர் விவசாயி சின்னசாமி. இவர் நேற்றிரவு, அதே பகுதியை சேர்ந்த குருந்தாசலம், அய்யாச்சாமி, ரஞ்சித் ஆகியோருடன் மது அருந்தியுள்ளார். சின்னசாமியின் ஆடுகள் காணாமல் போனது தொடர்பாக, அப்போது வாய்த்தகராறு ஏற்பட்டதில், அவர் ரஞ்சித்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், சட்டவிரோதமாக வேட்டைக்கு பயன்படுத்தும் நாட்டுத்துப்பாக்கியை எடுத்து வந்து சுட்டதில், 11 பால்ரஸ் குண்டுகள் … Read more

நிறைவடையாத மழைநீர் வடிகால் பணிகள்: தற்காலிக இணைப்புகளை ஏற்படுத்த ராமதாஸ் கோரிக்கை 

சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையாத இடங்களில் தற்காலிக இணைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சென்னை மாநகரத்தில் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் வட கிழக்கு பருவமழைக்கு முன்பாக நிறைவடைவதற்கான வாய்ப்புகள் தென்படவில்லை. கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டில் பருவமழை தீவிரமாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள … Read more

'ஓட்டுக்கு ரூ.2000 வாங்குங்க' – பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு!

நபிகள் நாயகம் பிறந்த தினமான மிலாடி நபியை முன்னிட்டு ஏழை, எளியோருக்கு பாஜக சிறுபான்மையினர் பிரிவு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிறுபான்மையினர் பிரிவு மாநிலத் தலைவர் டெய்ஸி தங்கையா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நலத்திட்ட உதவிகள் வழங்கிய பிறகு நிகழ்ச்சியில் டெய்ஸி தங்கையா பேசியதாவது: “நமது தலைவராக யார் வர‌ வேண்டும் என்பதை நாம் தான்‌ ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழகத்தில் கஞ்சா போன்ற … Read more

திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு; கனிமொழி துணை பொதுச்செயலாளர்… உடன் பிறப்புகள் உற்சாகம்

சென்னையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக ஒன்றிய, பேரூர், கழக, மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட 4100 பேர் கலந்துகொண்டனர். தமிழகம் முழுவதும் நடந்த 15ஆவது திமுக கழக அமைப்பு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் ஒப்புதல் பெறப்பட்டது . பொதுக்குழு தொடங்கிய சிறிது நேரத்தில் மு.க. ஸ்டாலின் திமுகவின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது முறையாக ஸ்டாலின் திமுகவின் தலைவராகிறார். இதனையடுத்து அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை … Read more

ஓபிஎஸ் மகன் தோட்டப்பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்: விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் விவசாய நிலங்களில் பெண் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கோம்பை வனப்பகுதியில் தேனி தொகுதி எம்பியும், ஓபிஎஸ் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வேலியில் சிக்கிய பெண் சிறுத்தையை மீட்க முயற்சி செய்தபோது சிறுத்தை வனத்துறை அதிகாரியை தாக்கி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே அதே பகுதியில் மறுநாள் ஒரு ஆண் … Read more

"காரணம் சொல்லாதீங்க… வேகமா வேலையை முடிங்க"- அதிகாரிகளை எச்சரித்த தலைமைச் செயலர்

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து தலைமைச் செயலர் இறையன்பு இன்று 14 இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். “காரணம் சொல்ல வேண்டாம் விரைவாக பணியை முடியுங்கள்” என ராஜமன்னார் சாலையில் ஆய்வு மேற்கொள்ளும் போது அதிகாரிகளை எச்சரித்தார் அவர். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலர் இறையன்பு ஆய்வு செய்து வருகிறார். கடந்த வாரம் தென் சென்னை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட தலைமைச் செயலாளர் இந்த வாரம் மத்திய மற்றும் … Read more

மெட்ரோ பணிகள், தி.மு.க பொதுக் குழு… சென்னையில் இந்த ஏரியாக்களில் இன்று போக்குவரத்து மாற்றம்!

மெட்ரோ பணிகள், தி.மு.க பொதுக் குழு… சென்னையில் இந்த ஏரியாக்களில் இன்று போக்குவரத்து மாற்றம்! Source link

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு.! நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து.!

திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் இன்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திமுக-வின் 15வது பொதுக்குழு கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் 2,600 பேர், கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் … Read more