தருமபுரி அருகே லாரி மீது கார் மோதி விபத்து: சிறுவன் உள்பட 3 பேர் பலி

தருமபுரி: தருமபுரி அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராகுல் (22). இவரது நண்பர்களான தருமபுரி குமாரசாமிபேட்டையைச் சேர்ந்த ஜீவபாரதி (20), சந்தோஷ் (15) உட்பட 5 பேர் நேற்று இரவு காரில் தருமபுரி குண்டலபட்டி பகுதியில் இருந்து பென்னாகரம் செல்ல தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துள்ளனர். தருமபுரி அடுத்த சவுளுப்பட்டி மேம்பாலத்தில் சென்றபோது, முன்னால் … Read more

பணி நியமனம்: பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தாமதமாக சான்றிதழ்களை சமர்ப்பித்தார் என்பதற்காக பணி நியமனத்தை மறுக்க முடியாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், திருப்பூரைச் சேர்ந்த கலப்பு மணம் புரிந்தவருக்கு, அந்த முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் நான்கு வாரங்களில் பணிநியமனம் வழங்க பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை பள்ளிக்கல்வித் துறை 2015ம் ஆண்டு மேற்கொண்டது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடிப்படையிலும், நேரடியாகவும் தேர்வு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தேர்வில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும், நேரடியாகவும் … Read more

தஞ்சாவூர் அருகே சாலையை கடக்க முயன்ற 2 விவசாயிகள் லாரி மோதி பலி

திருவிடைமருதூர் : தஞ்சாவூர் அருகே சாலையை கடக்க முயன்ற 2 விவசாயிகள் லாரி மோதி பலியாகினர்.தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருகாவூர் பெருமாள் கோயில் தெருவில் வசித்து வந்தவர்கள் மாமுண்டி (70), மாணிக்கம் (65). விவசாயிகளான இருவரும், நேற்றுமுன்தினம் மாலை திருவிடைமருதூர் அருகே ஆடுதுறைக்கு பஸ்சில் வந்தனர். பின்னர் எஸ்.எஸ் நகரில் உள்ள உறவினர் ரத்தினம் வீட்டிற்கு செல்வதற்காக ஆடுதுறை ஆசிரியர் பயிற்சி பள்ளி முன்பு பஸ்சிலிருந்து இறங்கினர்.அப்போது அங்கிருந்து சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே சென்ற … Read more

பொங்கல் பரிசு வழங்குவதில் கூடுதல் பொருட்களையும் சேர்க்க வலியுறுத்தி திருவண்ணாமலை ஆட்சியரிடம் மனு!

மண்பானை மற்றும் மண் அடுப்பை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வேண்டும்! தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், … Read more

பக்தர்களுக்கு குட் நியூஸ்.. இனி, திருப்பதியிலே முன்பதிவு டோக்கன்..!

திருமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வசதிக்காக இனி திருப்பதியிலேயே பக்தர்களுக்கு தங்கும் அறைகளுக்கான முன் பதிவு டோக்கன் வழங்கப்படும் என்று தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். திருமலையில் உள்ள அன்ன மைய்யா பவனில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, பக்தர்களிடம் நிறை, குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திருமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் … Read more

இந்திக்குத் தாய்ப்பால், மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலா? மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: “இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம். இந்தியைக் கட்டாயமாக்குவதைக் கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைக் காத்திட வேண்டும் என பிரதமர் தலைமையிலான மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ” இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் பன்முகத்தன்மைதான். பலவித மதங்கள், மொழிகள், பண்பாடுகள் கொண்ட … Read more

போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு 25 சதவீத போனஸ்: தமிழக அரசு முடிவு என்ன?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கும் போனஸை 25 சதவிகித அளவில் முன்கூட்டியே வழங்கி போக்குவரத்துத் துறை தொழிலாளர்களின் நலன் காக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜிகே வாசன் கூறியுள்ளார். இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலம் தாழ்த்தாமல் போனஸை வழங்க முன்வர வேண்டும் . தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களிலும் … Read more

Mozhipor vs MK Stalin: இந்தியை திணிக்க வேண்டாம்! மற்றுமொரு மொழிப்போர் எதற்கு?

சென்னை: கட்டாயமாக இந்தியைப் புகுத்தி மற்றுமொரு மொழிப்போரைத் திணிக்காதீர்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில், ஒன்றிய அரசு ஒற்றுமையைக் காத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மொழி என்பது மனிதனை அடையாளப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகும். மொழி தானும் வளர்ந்து, தன்னைப் பயன்படுத்தும் மனிதனையும் வளர்க்கும் தனியாற்றல் பெற்றது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எண்ணத்தின் வடிவமாகவும் நாகரிகத்தின் சின்னமாகவும் திகழும் மொழி, … Read more

பச்சரிசிக்கும், இட்லி அரிசிக்கும் வித்யாசம் தெரியாமல் 20% ஏற்றுமதி வரி விதிப்பதா?: தமிழ்நாட்டின் துறைமுகங்களில் 1000கி டன் அரிசி தேக்கம்

சென்னை: பச்சரிசிக்கும், இட்லி அரிசிக்கும் வித்யாசம் தெரியாமல் 20 சதவிகித ஏற்றுமதி வரி செலுத்த நிர்பந்திப்பதால் தமிழ்நாட்டின் துறைமுகங்களில் 1000கிலோ டன் இட்லி அரிசி தேக்கமடைந்து இருப்பதாக ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகின் மிகபெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா அரிசி ஏற்றுமதியில் 40 சதவிகிதக்கு அதிகமான பங்களிப்பை கொண்டுள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் 30 சதவிகித விளையும் பாரம்பரிய இட்லி வகை அரிசி உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. நடப்பு பருவத்தில் நெல் சாகுபடி குறைந்ததால் பாசுமதி, … Read more