மீண்டும் திமுக தலைவர்… ஸ்டாலினுக்கு காத்திருக்கும் சவால்கள் என்னென்ன?

சென்னையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் போட்டியின்றி மீண்டும் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர கட்சியின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். தலைமை நிலைய செயலாளராக கே.என்.நேரு தேர்வாகியுள்ளார். துணைப் பொதுச் செயலாளர்களாக பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியேறிய நிலையில், அவரது இடத்திற்கு கனிமொழி தேர்வாகியுள்ளார். … Read more

தேனி: கஞ்சா வியாபாரிகளின் ரூ.58 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

தேனியில் கஞ்சா வியாபாரிகளின் ரூ.58 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். தேனி மாவட்டம் அல்லிநகரம் காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக பெரியகுளம் கைலாசபட்டியைச் சேர்ந்த கங்காதேவா (26) பிரபாகரன் (22) ஆகிய இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைலாசபட்டியில் கங்காதேவாவின் பெயரில் உள்ள வீடு, கார், இருசக்கர வாகனம் மற்றும் அவரது சகோதரி பெயரில் இருக்கும் நிலம் என … Read more

‘ரியல் சிவசேனா’.. கட்சியின் ‘வில் அம்பு’ சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் அதிரடி

‘ரியல் சிவசேனா’.. கட்சியின் ‘வில் அம்பு’ சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் அதிரடி Source link

மீண்டும் ரீ-என்ட்ரி தந்த பாகுபலி! அச்சத்தில் கோவை மக்கள்!

மீண்டும் குடியிருப்பு பகுதியில் உலா வரும் பாகுபலி காட்டு யானை! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் பாகுபலி காட்டு யானையின் நடமாட்டம் மீண்டும் துவங்கியுள்ளது. யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஓராண்டுக்கு மேலாக மேட்டுப்பாளையம் சுற்றுலா வட்டார பகுதிகளில் முகாமிட்டு குடியிருப்பு பகுதிகளை உலா வருகிறது பாகுபலி என்ற ஒற்றை யானை. விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும் குடியிருப்பு பகுதியில் உலா வருவதுமாக சுற்றி வருகிறது. வனத்துறையினரின் பல்வேறு முயற்சிகளை முறியடித்து வனத்துறையினருக்கு … Read more

கொதிக்கும் குழம்பில் தவறி விழுந்து கைதி உயிரிழப்பு!!

இலங்கையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அங்குணகொளபெலசவில் சிறைச்சாலை உள்ளது. அங்கு கொலை வழக்கில் கடந்த 2001ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதி தண்டனை அனுபவித்து வந்தார். அவருக்கு தூக்கு தண்டனை 25 ஆண்டு சிறைத்தண்டனையாக மாற்றப்பட்ட நிலையில் வருகிற 2028ஆம் ஆண்டு விடுதலையாக இருந்தார். இந்நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பு, அவர் சிறையின் சமையலறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். அப்போது ஒரு பாத்திரத்தை எடுக்க முயன்ற அவர், கால் தடுமாறி, கோழிக்குழம்பு கொதித்துக் கொண்டிருந்த ஒரு பெரிய பாத்திரத்தில் … Read more

திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வானார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை அமைந்தகரை புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் திமுக பொதுக்குழு கூட்டம் திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வானார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுச்செயலாளர், பொருளாளர், 4 தணிக்கை குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு பொதுக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் திமுக பொதுக்குழுவில் பங்கேற்பு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு திமுக தலைவராக மீண்டும் தேர்வான மு.க.ஸ்டாலின், மேடையில் வைக்கப்பட்டிருந்த தலைவர்கள் படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை திமுக பொதுச்செயலாளராக … Read more

செங்கல்பட்டு மாவட்ட புதிய எஸ்.பி.யாக பிரதீப் பொறுப்பேற்பு

செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக அ.பிரதீப் பொறுப்பேற்றார். செங்கல்பட்டு மாவட்டம், கடந்த 2019 நவம்பர் 29-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரித்து தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கண்ணன் நியமிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து சுந்தரவர்த்தனம், விஜயகுமார், அரவிந்தன், சுகுணாசிங் ஆகியோர் எஸ்.பி.யாக பணியாற்றினர். இந்நிலையில் உயர் படிப்புக்காக சுகுணா சிங் வெளிநாடு சென்றதால் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு … Read more

திமுக துணை பொதுச் செயலாளரானார் கனிமொழி!

திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. கிளைக்கழகம், பேரூர், நகரம், ஒன்றிய, மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்று நிர்வாகிகள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, திமுக அமைப்பு ரீதியான மாவட்டங்களில் மாவட்ட செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர், அவை தலைவர், தலைமைக் கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்று மாவட்ட வாரியாக தேர்வானவர்களின் பட்டியலும் … Read more

கோவில்பட்டியில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவில்பட்டி: கோவில்பட்டியில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வேலாயுதபுரம் சாலையில் வாகன சோதனையின்போது தடை செய்யப்பட்ட 12 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

`பதிலுக்கு பதில் பேசாமல், அன்பால் திமுக அவப்பிரச்சாரத்தை முறியடிப்பதே என் பணி’- அண்ணாமலை!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டர் ஸ்பேசஸில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், `’என்றார். தனது பேட்டியில் அவர் பின்வரும் கருத்துகளையும் கூறியுள்ளார். “உலகில் உள்ள மதங்களுக்கெல்லாம் தாய் மதம், இந்து மதம்! சொல்லப்போனால் இந்து என்பது மதமல்ல; வாழ்வியல் முறை. பஞ்சபூதங்களை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியல் முறைக்கு, ஆங்கிலேயர்கள் தான் இந்து மதம் என்று பெயர் வைத்தனர். ராஜராஜசோழன் இந்துவா என்று சிலர் இன்று பேசுகின்றனர். இந்து வாழ்வியல் முறை, பஞ்சபூத ஆராதனை போன்றவற்றை ராஜராஜசோழன் … Read more