இலங்கையைச் சேர்ந்த 8 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம் – போலீசார் விசாரணை

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வாழ வழியின்றி மூன்று குழந்தைகள் உட்பட 8 பேர் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்தனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு நாளுக்கு நாள் இடம்பெயர்ந்து வருவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கெனவே இலங்கையில் இருந்து 142 நபர்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், அவர்கள் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த மூன்று … Read more

Tamil news today live : பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து இபிஎஸ் வழக்கு : இன்று விசாரணை

Go to Live Updates பெட்ரோல் டீசல் விலை இன்றைய பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும், டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. புதுக்கோட்டை சிறையில் விசாரணைக் கைதி மரணம் புதுக்கோட்டை சிறையில் விசாரணைக் கைதி திடீரென உயிழிந்துள்ளார். இந்நிலையில் அவரை கிராமத்திற்கு காவல்துறை பாதிகப்பு போடப்பட்டுள்ளது. தடைசெய்யபட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்ததாக இதுவரை நேற்று முன்தினம் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். மேலும் … Read more

மறக்க முடியுமா இந்த நாளை? அதிமுக முன்னாள் எம்.பி., பரபரப்பு டிவிட்.!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ பன்னீர்செல்வம் ஆளும் திமுக அரசுக்கு ஆதரவாகவும், டிடிவி, சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் வகையிலும் செயல்படுவதாக கூறி, எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் 2500 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்த விவகாரம் முற்றிய நிலையில், ஓபிஎஸ்-யை கட்சியில் இருந்து நீக்கியும், அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுத்தும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நிறைவேற்றியது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்து … Read more

பகுத்தறிவாளர்கள்தான் அதிக வயது வரை வாழ்கின்றனர்: கி.வீரமணி கருத்து

பகுத்தறிவாளர்கள்தான் அதிக வயது வரை வாழ்கின்றனர் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் 100 வயதைக் கடந்த பெரியார் பெருந்தொண்டர் கொக்கூர் எஸ்.கோவிந்தசாமிக்கு பாராட்டு விழா பொதுக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. திராவிடர் கழக மாவட்டத் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். குத்தாலம் ஒன்றியத் தலைவர் முருகையன், நகரத் தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ் வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளராக … Read more

முன்விரோதம் காரணமாக எருமை மாடுகள் மீது ஆசிட் வீச்சு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில் கால்நடை வளர்ப்போர் அதிக அளவில் எருமை மாடு மற்றும் பசுமாடுகளை வளர்த்து வருகின்றனர். இதில் மேட்டுப்பாளையம் ரயில்வே கேட் பகுதி சேர்ந்தவர்  ராஜ்குமார் இவர் இங்கு  நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.இங்கு 40 எருமை மாடுகளை வளர்த்து, பால் கறந்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் எருமைகள் மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் போது எருமைகள்  மீது, யாரோ சிலர் ஆசிட் ஊற்றியுள்ளனர். இந்த கொடூரமான … Read more

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று 6 பேர் கொண்ட குழு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அறநிலையத்துறையின் கேள்விகளுக்கு தீட்சிதர்கள் பதில் அளித்த நிலையில் இன்று குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.

"பள்ளி நேரத்தில் பஸ் இல்லை": ஆபத்தை உணராமல் பேருந்தின் படியில் பயணம் செய்யும் மாணவர்கள்

திருக்கோயிலூர் அருகே போதிய பேருந்து வசதி இல்லாததால் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியவாறு அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் பயணம் மேற்கொள்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூர் அருகே உள்ள கூவனூர் கிராமத்திலிருந்து திருக்கோயிலூர் நகர பகுதிக்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த அரசுப் பேருந்தில் கூவனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் தினமும் திருக்கோயிலூர் பகுதியில் உள்ள அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். இந்த … Read more

நீங்கள் எங்களை கொல்லாத வரை, நாங்கள் வேலை செய்வதை உங்களால் தடுக்க முடியாது.. மணீஷ் சிசோடியா

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மதுபானக் கொள்கையை வெளியிட்டதில் ஊழல் செய்ததாக அவர் மீதும், பல கலால் துறை அதிகாரிகள் மீதும் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிஐ வெள்ளிக்கிழமையன்று அவரது வீட்டில் சோதனை நடத்தியது. இதுகுறித்து சிசோடியா ஞாயிற்றுக்கிழமை இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், சிபிஐயின் நடவடிக்கையின் நோக்கம் ஊழலை எதிர்த்துப் போராடுவது அல்ல, மாறாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமைச்சர்களை குறிவைப்பது என்று கூறினார். சிபிஐ விசாரணை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து … Read more

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு – இபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், அதிமுக-வில் ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து … Read more