செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: மோடி வருகை முழு நிகழ்ச்சி நிரல்

PM Modi attends Chess Olympiad opening ceremony in Chennai: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துக் கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக சென்னை வருகிறார் பிரதமர் மோடி. சர்வதேச 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. வருகின்ற ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னை மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதில் 188 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட … Read more

மினி வேன் மீது அதிவேகமாக வந்த கார் மோதி 3 பேர் உயிரிழப்பு..!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மினி வேன் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இருக்கன்குடி பகுதியில் சாமி கும்பிட்டுவிட்டு சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கழுவன்பொட்டல் கிராமத்திற்கு 15 பேருடன் சென்று கொண்டிருந்த மினி வேன் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சாலையோர ஓடையில் விழுந்த மினி வேனில் பயணம் செய்த இரண்டு குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த … Read more

வரலாற்று சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பதக்கம் வென்றதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் 19 ஆண்டுகால பதக்க ஏக்கம் தீர்ந்துள்ளது. நீரஜ் சோப்ராவுக்கு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ அமெரிக்காவின் … Read more

பெண்கள் கட்டாயம் ‘ப்ரா’ அணிய வேண்டுமா? மருத்துவம் கூறுவது என்ன?

பொதுவாக பெண்கள் ஆடை, ஆபரணங்கள் மற்றும் அணிகலன்கள் விரும்பியாகவே இருப்பார்கள். தனது உடல்வாகுக்கு ஏற்ற ஆடைகளை அணிய வேண்டும் என அக்கறை காட்டுவார்கள்.அந்த வகையில் தங்களின் ‘ப்ரா’ உள்ளிட்ட உள்ளாடைகளிலும் சிறப்பு கவனம் செலுத்துவார்கள். ஏனெனில் ஆடை மிகச் சரியாக இருந்தாலும், உள்ளாடை தேர்வு சரியாக அமையாவிட்டால் சிக்கல்தான். இன்றைய காலகட்டத்தில் பெண்களின் ப்ராக்கள் சந்தைகளில் நிரம்பி வழிகின்றன. புதுபுது மாடல்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. பேடு வைக்கப்பட்ட ப்ராக்கள், பேடு இல்லாத,, வயர் ப்ராக்கள் என … Read more

நாளை மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார் இசைஞானி இளையராஜா.!

விளையாட்டு, கலை, இலக்கியம் மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களில் 12 பேர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது பதவியேற்றுக் கொண்டனர்.  இந்த வகையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிரபல இசைஞானி இளையராஜா அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்றதால் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க முடியவில்லை.  இந்த நிலையில், மாநிலங்களவை நியமன உறுப்பினராக … Read more

போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி 30ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி வரும் 30ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப் பொருள் கலாச்சாரம் நாளுக்குநாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. போதைக் கலாச்சாரத்தால் மிகப்பெரிய பேரழிவை நோக்கி தமிழ்நாடு பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசும், காவல்துறையும் மேற்கொள்ளாதது ஏமாற்றமளிக்கிறது. தமிழக … Read more

சென்னையில் தீவிர தூய்மைப் பணி; 128  மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் அகற்றம்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 23.07.2022 அன்று நடைபெற்ற தீவிர தூய்மை பணியின் மூலம் நீர்நிலைகளின் அருகே இருந்த 128 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டு, கரையோரங்களில் 602 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநகராட்சி செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக முதல்வர் ஆலோசனையின்படி, சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு … Read more

தாய்மார்கள் குரூப் – 4 தேர்வெழுத சென்ற நிலையில், குழந்தைகளுக்கு தாயாய் மாறிய கணவன்மார்கள்

கோவை அருகே குரூப் – 4 தேர்வு நடைபெற்ற மையத்திற்கு வெளியே, தேர்வெழுத சென்ற பெண்களின் கணவர்கள் தங்களது குழந்தைகளை அரவணைத்து பார்த்துக்கொண்டனர். நீலம்பூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் இன்று தேர்வு நடைபெற்றபோது, திருப்பதி என்பவர் வளாகத்தில் தனது குழந்தையை தொட்டில் கட்டி உறங்க வைத்தார். இதே போல், தந்தைகள் பலர், தங்களது குழந்தைகளை பார்த்துக்கொண்டனர். Source link