நாளை இந்த மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.. அரசு அறிவிப்பு.!

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிவபெருமான் திருவாயால் அம்மையே என்றழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா, ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் எளிமையான முறையில் நடந்த விழா இந்த ஆண்டு … Read more

அரசு ஒப்பந்ததாரர்கள் இருவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை.. கணக்கில் வராத ரூ.500 கோடிக்கு மேல் வருமானம் கண்டுபிடிப்பு!

அரசு ஒப்பந்ததாரர்கள் இருவருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 500 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஒப்பந்ததாரரர்கள் செய்யாத்துரை, சந்திரசேகர் ஆகியோர் தொடர்புடைய 40 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில், பல்வேறு பொருட்களை வாங்கியதற்கு கணக்கு காட்ட போலி ரசீதுகளை பயன்படுத்தி இருப்பது வருமான வரித்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், போலி ரசீதுகள் மூலம் பல்வேறு துணை ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருமானத்தை ஈட்டிருப்பதும், அதன் கோப்புகளை மறைத்து வைக்க ரகசிய … Read more

உபர் ஓட்டூநர் டு அரசு ஓட்டுநர் – சிஎம்டிஏவின் முதல் பெண் ஓட்டுநர் இந்து பிரியா!

சென்னை: சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் முதல் பெண் ஓட்டுநராக இந்து பிரியா நியமிக்கப்பட்டுள்ளார். சிஎம்டிஏ என்று அழைக்கப்படும் என்று சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 10 ஓட்டுநர்களை நியமித்து நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி கடந்த திங்களன்று பணி ஆணைகளை வழங்கினார். இவற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் ஓட்டுநராக நியமிக்கப்பட்டுள்ளார் இந்து பிரியா. 25-இல் ஒருவர் கொடுங்கையூரைச் சேர்ந்த 34 வயதான … Read more

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா உறுதி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தலில் உள்ளார். இதுகுறித்து முதல்வர் தனது அதிகாரபூர்வ சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். தனது பதிவில் அவர், `இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்’ என்று தெரிவித்துள்ளார். இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, … Read more

Vijay Tv Serial: முகத் திரையை கிழிக்கும் கேள்விகள்; நடிப்பில் கோபியை விஞ்சிய பாக்யா!

விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது பாக்கிய  லட்சுமி சீரியல் . இதன் புரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இதில் கோபியை பார்த்து பாக்யா கேள்விகள் கேட்டு வெளுத்து வாங்குகிறார். மலையாளத்தில் தற்போது ஒலிபரப்பாகி கொண்டு இருக்கும் குடும்பவிளக்கு என்ற சீரியலின் தமிழ் ரீமேக் தான் பாக்கிய லட்சுமி. இந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிப்பவரின் நடிப்புதான் சுப்பர் என்று பேச்சு நிலவியது. அவரின் கதாபாத்திரத்தை வைத்து நக்கல் செய்தும், விஜய் டிவில் காமெடி ஷோவில் … Read more

மதுரை || ஆன்லைன் மூலம் கஞ்சா விற்ற இளைஞர்கள் கைது..!

இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த ரகசிய தகவலை அடுத்து காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பதாக காவல்துறையினருக்கு உறுதியான தகவல் அளித்தனர். இதற்கிடையில், மதுரை ஜம்புரோபுரம் மார்கெட் பகுதியில் சிலர் மாணவர்களுக்கு கஞ்சா பொட்டலத்தை விற்பனை செய்து வந்தனர்.  அவர்களை கைது செய்த … Read more

கந்து வட்டி காரணமாக தற்கொலைக்கு முயற்சித்த இளைஞர் வெளியிட்ட வீடியோ அடிப்படையில் போலீசார் விசாரணை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கந்து வட்டி கொடுமை எனக்கூறி இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், அவர் பூச்சி மருந்து குடிக்கும் முன் கண்ணீர் மல்க பேசி வெளியிட்ட வீடியோவின் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கோடனூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். தனது சொந்த செலவிற்காக சேட்டு மற்றும் துரை ஆகியோரிடம் அவர் 40 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. கடனுக்கான வட்டியாக 4 லட்சத்து … Read more

சென்னையில் பூங்காவை முறையாக பராமரிக்காத 69 ஒப்பந்த நிறுவனங்களுக்கு ரூ.1.07 லட்சம் அபராதம்

சென்னை: சென்னையில் பூங்காவை முறையாக பராமரிக்காத 69 ஒப்பந்த நிறுவனங்களுக்கு ரூ.1.07 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி, பூங்காத் துறையின் சார்பில் 738 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 571 பூங்காக்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் பராமரிப்பிலுள்ள பூங்காக்களில் ஒப்பந்ததாரர்கள் புல்வெளிகளை வெட்டி பராமரித்தல், தேவையான நேரத்தில் புல்வெளிகளுக்கு இடையேயான களைகளை அகற்றுதல், நடைபாதை மற்றும் செடி, … Read more

காதல் கணவருடன் ஹோட்டலில் பாஸ்தா சாப்பிட்ட இளம்பெண் திடீர் மரணம்- உறவினர்களின் ஷாக் புகார்!

விழுப்புரம் அருகேயுள்ள அன்னியூரில் காதல் திருமண செய்த இதய பிரச்னை உள்ள இளம்பெண் தனியார் உணவகத்தில் பாஸ்தா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் அன்னியூரை சேர்ந்த பிரதிபா – விஜயகுமார் என்ற காதல் தம்பதியினர் கடந்த மாதம் 13 ஆம் தேதி பெற்றோர்களின் எதிர்ப்பினை மீறி காதல் திருமணம் செய்துகொண்டு அன்னியூரில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் நண்பர்களுடன் சுற்றுலா சென்று மாலை வீட்டிற்கு வந்தபோது திருவாமாத்தூர் விழுப்புரம் தேசிய … Read more

திரெளபதி முர்முவை ஆதரிக்கும் சிவசேனா; சரியானதை செய்வதாக தெரிவிப்பு

Shiv Sena to support NDA presidential nominee Droupadi Murmu, says will do ‘what is right’: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவளிக்குமாறு சிவசேனா கட்சியின் எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தலைவர் உத்தவ் தாக்கரேவை வலியுறுத்திய ஒரு நாள் கழித்து, சிவசேனா கட்சி செவ்வாயன்று அவரை ஆதரிப்பதாகக் குறிப்பிட்டது, ஆனால் அது பா.ஜ.க.,வை ஆதரிப்பதாக அர்த்தமல்ல என்றும் தெரிவித்துள்ளது. “சிவசேனா எது சரி என்று நினைக்கிறதோ … Read more