பில்கிஸ் பானு, பெகாசஸ் வழக்குகள் – உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 குற்றவாளிகள் ஆயுள் தண்டனை பெற்று வந்தநிலையில் ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு 11 பேரையும் விடுவித்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது. 11 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஎம் தலைவர் சுபாஷினி அலி மற்றும் இருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் வியாழக்கிழமை ஓய்வு பெற உள்ள தலைமை நீதிபதி என்.வி … Read more

சிகிச்சைக்காக ராஜாத்தி அம்மாள் நாளை ஜெர்மனி பயணம்

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள், சென்னை சிஐடி காலனியில் மகள் கனிமொழியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு செரிமானக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஜெர்மனியில் உள்ள போர்ன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ராஜாத்தி அம்மாள் நாளை இரவு ஜெர்மனி புறப்பட்டுச் செல்கிறார். அவருடன், மகள் கனிமொழி உள்ளிட்டோர் செல்கின்றனர். Source link

திமுக எம்பி கனிமொழி ஜெர்மனிக்கு திடீர் பயணம்… இதுதான் காரணம்!

மறைந்த தமிழக முன்னாள் முதஸ்வர் மு. கருணாநிதியின் துணைவியாரான ராசாத்தி அம்மாள், சென்னை சிஐடி காலனியில் தமது மகள் கனிமொழியுடன் வசித்து வருகிறார். சில ஆண்டுகளாகவே ராசாத்தி அம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருவதாக தெரிகிறது. அதுவும் கருணாநிதி மறைவுக்கு பிறகு ராசாத்தி அம்மாளுக்கு அவ்வபோது உடல்நிலை கோளாறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு வயிற்றுவலி, அஜீரண கோளாறு உள்ளிட்ட பிர்ச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவரின் … Read more

புதுச்சேரி சட்டசபையில் பரபரப்பு முதல்வர் ரங்கசாமி மீது பாஜ எம்எல்ஏ சரமாரி புகார்

புதுச்சேரி: பாஜ ஆதரவு சுயேட்சைகள் மற்றும் பாஜ எம்எல்ஏக்களின் தொகுதிகளை முதல்வர் ரங்கசாமி பழிவாங்குகிறார் என புதுச்சேரி சட்டசபையில் கல்யாணசுந்தரம் எம்எல்ஏ சரமாரி புகார் கூறியுள்ளார். புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது சுயேட்சை எம்எல்ஏ அங்காளன்,‘‘எனது தொகுதியில் என்னை கேட்காமல் 2, 3 கமிட்டிகள் போடப்பட்டுள்ளது. இது எந்த விதத்தில் நியாயம். என்னை புறக்கணிப்பதற்கு காரணம் என்ன? பாஜவை நான் ஆதரிப்பதற்காக என்னை கேட்காமல் போடுகிறார்களா? அல்லது தனித்தொகுதி என்பதால் யார் கேட்க போகிறார்கள் … Read more

'ஸ்டாலின்தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர்' – சிறுமி தான்யாவின் பெற்றோர் உருக்கம்!

குழந்தை தான்யாவை காப்பாற்றிய தமிழக முதலமைச்சர் தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சராக இருக்க வேண்டும்; அவர்தான் எங்கள் குலசாமி என சிறுமி தான்யாவின் பெற்றோர் உருக்கமாக பேசியுள்ளனர். திருப்பெரும்புதூர் அருகே உள்ள சவீதா மருத்துவமனையில் முகச்சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்த சிறுமி தான்யாவுக்கு தமிழக முதல்வரின் உத்தரவின் படி முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நிலையில் மருத்துவர்களின் அறிவுரைப்படி சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார், சிறுமியை பார்க்க யாருக்கும் … Read more

முருங்கைக் கீரை சப்பாத்தி: இப்படிச் செய்தா சுகர் பேஷன்ட்ஸ் தைரியமா சாப்பிடலாம்!

தினமும் ஒரேமாதிரியான உணவு சாப்பிடுவது சற்று சலிப்பாக இருக்கும். அவ்வப்போது ஆரோக்கியம் நிறைந்த புதுபுது ரெசிபிகளை செய்து சாப்பிடுவது ஒருவித மகிழ்ச்சியை கொடுக்கும். உணவு அனைவருக்கும் பிடித்தமானதாக உள்ளது. அந்தவகையில் சத்தான உணவு சாப்பிடுவது அவசியமாகும். இன்றைய கால சூழலில் துரித உணவு எனப் பல உடல் ஆரோக்கியமற்ற உணவாக இருக்கிறது. வீட்டிலேயே சத்தான மற்றும் சுவையான உணவு செய்து சாப்பிடுவது உகந்தது. அந்தவகையில், முருங்கைக் கீரை சப்பாத்தி எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்க்கலாம். … Read more

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்குகளை ஒன்றாக பட்டியலிட நீதிபதி உத்தரவு

சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதை எதிர்த்து, திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ராம்குமார் ஆதித்தன், அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன் பழனிசாமி ஆகியோர் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரம் தொடர்பாகவும் இவர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதேபோல, இன்னும் சிலரும் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், இந்த வழக்குகள் மீதான விசாரணை நேற்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி … Read more

கே.பி. ராமலிங்கத்திற்கு ஜாமின்: கோர்ட் போட்ட நிபந்தனை!

பாரத மாதா நினைவாலயத்தில் அத்துமீறி நுழைந்த புகாரில் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கத்திற்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள பாரதமாதா நினைவாலயத்தில் அத்துமீறி நுழைந்த புகாரில் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி பாப்பாரப்பட்டி போலிசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் தமக்கு ஜாமின் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் … Read more

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு ஜிப்மர் மருத்துவக்குழு அறிக்கையை வழங்க விழுப்புரம் நீதிமன்றம் மறுப்பு

விழுப்புரம்: மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் ஜிப்மர் மருத்துவ குழு தாக்கல் செய்த ஆய்வு அறிக்கையை பெற்றோரிடம் வழங்க விழுப்புரம் கோர்ட் மறுத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதியியின் உடல், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 முறை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஆய்வு செய்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழுவினர் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் … Read more

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு விவகாரம் – மேலும் 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் ஈடுபட்டதாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். இதனால் கைது எண்ணிக்கை 346ஆக உயர்ந்துள்ளது. வீடியோ புகைப்படத்தின் ஆதாரத்தின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக போராட்டம் நடத்துவதற்காக பல தரப்பினரை வாட்ஸ் அப் மூலமாக அழைத்ததாக ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தை தூண்டும் விதமாக அழைப்புகள் விடுத்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வகையில் நேற்று கடலூர் மாவட்டத்தைச் … Read more