பொய் மூட்டைகளை கட்டவிழ்த்துவிடாதீர்கள் எடப்பாடி – ஆர்.எஸ்.பாரதி காட்டம்

திமுக அமைப்பு செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர் எஸ் பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழக முதலமைச்சர் மூன்று நாள் பயணமாக கொங்கு மண்டலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நிலையில், அவர் செல்லக்கூடிய இடங்களில் பொதுமக்கள் திரண்டு வரவேற்பு கொடுப்பதை பார்த்த எடப்பாடி பழனிசாமி வயிற்றெரிசச்சலுடன், பொய் மூட்டையாக நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளதாக குற்றம் சாட்டினார் . திமுக ஆட்சியில் நிர்வாகம் உட்பட அனைத்திலும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருவதாகவும்  அவர் … Read more

பள்ளியில் 3 மாணவிகள் விஷம் குடிப்பு: தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஒரே பள்ளியை சேர்ந்த 3 மாணவிகள் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி பகுதியில் இயங்கும் தனியார் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மூவர் நெருங்கிய தோழிகள். நேற்று இவர்கள், பள்ளியில் இருந்தபோது எறும்பு பொடியை தண்ணீரில் கலக்கி குடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக 2 மாணவிகள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், ஒரு மாணவி தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி, சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். மற்ற … Read more

மதுரை: சிறுவன் இறந்த நிலையில் மீன்களும் இறந்து மிதக்கும் மர்மமான குளம்…போலீஸ் விசாரணை

பள்ளி சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஊரணியில், தற்போது மீன்களும் இறந்து மிதப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நண்பர்களுடன் ஊரணி ஒன்றில் குளிக்கச் சென்ற பள்ளி சிறுவன் சையது மைதீன், ஊரணி கரையிலேயே செத்து மிதந்ததுள்ளார். இந்நிலையில் அதே குளத்தில் இரண்டு நாட்களுக்கு பின்னர் குளத்திலிருந்த அனைத்து மீன்களும் செத்து மிதந்து இருக்கின்றன. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகர் உத்தங்குடி அருகே … Read more

படங்களை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயன்ட்: உதயநிதிக்கு ஆதரவாக சீமான் கருத்து

மதிமுக – நாம் தமிழர் கட்சியினர் கடந்த 2018 ஆம் ஆண்டு மோதிக்கொண்ட வழக்கில், இன்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜரான சீமான் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது:“எல்லாத் துறைகளிலும் சிக்கல் உள்ளது, பள்ளிகல்வி துறைக்கு ஒரு இளைஞர் வந்துள்ளார். அவர் ஆர்வமாக செயல்பட வேண்டும். முதலமைச்சர் காசு கொடுக்காமல் 5000 பேர்களை முதலில் திரட்டட்டும், அதன் பிறகு கோவையில் 50 ஆயிரம் பேர் கூடினார்கள் என்று கூறட்டும். இந்த ஆட்சியை சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கும் மக்கள் ஏன் மீண்டும் … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு.. இருதரப்பு வாதத்தின் முடிவில் நீதிபதி அதிரடி உத்தரவு.!

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயா்நீதிமன்றத்தின் தனிநீதிபதி தீர்ப்பு வழங்கியிருந்தார். இந்த உத்தரவை எதிா்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் இரு நீதிபதிகள் அமா்வில் கடந்த வாரம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான இறுதி விசாரணை இன்று நடந்தது. அப்போது, “இந்த வழக்கில் உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்று, எடப்பாடி கே பழனிசாமி தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.மேலும், “பொதுக்குழுவில் எடுக்கும் … Read more

கனல் கண்ணன் ஜாமீன் கிடைக்குமா? – தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைப்பு

சென்னை: ‘பெரியார் சிலையை உடைக்க வேண்டும்’ என்று பேசியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் ஜாமீன் கோரிய வழக்கை தீர்ப்புக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், திரைப்பட சண்டைப் பயிற்சி நிபுணர் கனல் கண்ணன், … Read more

பாழாகும் மாணவர்களின் எதிர்காலம்: அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு ரவிக்குமார் எம்.பி. கடிதம்!

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடாததால் எண்ணற்ற மாணவர்களின் எதிர்காலம் பாழாவதாக சுட்டிக்காட்டியுள்ள விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் இது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் முதுநிலைப் பட்டயபடிப்புக்கு மாணவர்களைச் சேர்த்துவருகிறது. இந்த ஆண்டு (2022) விண்ணப்பம் கோரப்பட்டு மாணவர்கள் நுழைவு தேர்வு எழுதி நேர்முக தேர்வுக்கும் சென்று வந்துள்ளனர். எனது விழுப்புரம் நாடாளுமன்ற … Read more

தக்காளி விலை கடும் வீழ்ச்சி தென்காசி விவசாயிகள் வேதனை

தென்காசி சுந்தரபாண்டியபுரம் பகுதியில் தக்காளி அதிக அளவில் விளைவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சந்தையில் வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கு தக்காளியை விவசாயிகளிடம் கேட்கிறார்கள். வியாபாரிகள், 1 கிலோ தக்காளி ரூ.2-க்கு கேட்கிறார்கள். அவ்வாறு சில வியாபாரிகள், விவசாயிகளிடம் வாங்கி சந்தையில் ரூ.7-க்கு விற்கிறார்கள்.  இதனால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள் சாலை ஓரங்களில் கடை அமைத்து  தக்காளிகளை பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்கிறார்கள். கேரள மாநிலத்தில் இருந்து தென்காசி பகுதிக்கு வரும் பொதுமக்கள் விவசாயிகளிடம் 30 கிலோ தக்காளியை … Read more

திருவாரூரில் மின்சாரம் திருடிய தனியார் பேக்கரிக்கு ரூ.3 லட்சம் அபராதம்

திருவாரூர்: திருவாரூரில் மின்சாரம் திருடியதாக கூத்தாநல்லூரில் செயல்படும் தனியார் பேக்கரிக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடையின் மேல்புறம் செல்லும் மின் ஒயரின் வழியாக கொக்கியை மாட்டி மின்சாரத்தை பேக்கரி உரிமையாளர் திருடியுள்ளார். 

'மாணவர்கள் மத்தியில் ஆயுதக் கலாச்சாரத்தை அனுமதிக்க மாட்டோம்' – ரயில்வே கூடுதல் இயக்குனர்

கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஆயுதக் கலாச்சாரத்தை அனுமதிக்க மாட்டோம், தயவு தாட்சியமின்றி நடவடிக்கை பாயும் என்று ரயில்வே கூடுதல் இயக்குனர் வனிதா IPS பேட்டியளித்துள்ளார். மதுரை இருப்புப்பாதை காவல் உட்கோட்டத்தில், பணியாற்றும் காவலர்களுக்கு வேலை பளு காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தை குறைக்கும் பொருட்டும், பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கும் பொருட்டு காவலர்களின் மன மகிழ்ச்சிக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இருப்புப்பாதை காவல்துறை கூடுதல் … Read more