அடுத்த மாதம் திருமணம்..பொள்ளாச்சி அருகே காவலர் தூக்கிட்டு தற்கொலை! காரணம் குறித்து விசாரணை

பொள்ளாச்சி அருகே கோமங்கலம் பகுதியில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டில் விருப்பமில்லா திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் இந்த முடிவினை அவர் எடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  பொள்ளாச்சி அருகே உள்ள பருத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவரது மகன் மணியரசு (30). இவர் கோமங்கலம் காவல்நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் அருகிலுள்ள காவலர் குடியிருப்பில் தங்கி உள்ளார். இன்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்திலுள்ள காவலர்கள் … Read more

என்னை மிரட்டியே மேயரானாங்க… திருச்சி கல்லூரி விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

திருச்சிக்கு மேயரானவங்க என்னை மிரட்டியே மேயரானாங்க; என்று ஹோலிகிரஸ் கல்லூரி விழாவில் அமைச்சர் நேரு பேசியது தற்போது வைரலாகி வருகிறது.  திருச்சியில் பெண்களுக்கென இயங்கி வரும் மிகவும் புகழ்பெற்ற தென்னிந்தியாவில் முதன்மையான, பழமை வாய்ந்த புனித சிலுவை(ஹோலி கிராஸ்) தன்னாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நூற்றாண்டு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற இந்தக்கல்லூரி 1923-ம் ஆண்டில் திருச்சிலுவை கன்னியர் சபை சகோதரிகளால் 5 மாணவிகளைக் கொண்டு … Read more

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு; தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

Chennai High Court reserved ADMK general council meeting case judgement: அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்றும் இன்றும் விசாரணைக்கு வந்தது. அப்போது இ.பி.எஸ் தரப்பில் வழக்கறிஞர் விஜய் நாராயணனும், … Read more

போதையில் தள்ளாடிய 11- ஆம் வகுப்பு மாணவிகள்.. விசாரணையில் கூறிய அதிர்ச்சி காரணம்.!

இன்று தமிழகம் முழுவதும் இருக்கும் பள்ளி வளாகங்கள், விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்டவற்றில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிலையில், கரூரில் பள்ளி சீருடை அணிந்த சில மாணவிகள் போதை மயக்கத்தில் தடுமாறி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கரூர் சர்ச் கார்னர் பகுதியில் மூன்று பள்ளி மாணவிகள் சீருடை அணிந்த நிலையில் நல்ல மதுபோதையில் நிலைதடுமாறி கொண்டு இருந்தனர்.  இதனை அப்பகுதியில் கடை வைத்திருந்த சிலர் கண்டு கொண்டனர். அவர்களுக்கு உடல் … Read more

‘ஜெய்பீம்’ பட விவகாரம்: நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் மீதான வழக்கு ரத்து

சென்னை: ‘ஜெய்பீம்’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் ஆகியோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சூர்யா நடித்து, ஞானவேல் இயக்கிய ‘ஜெய்பீம்’ படத்தில், இந்து வன்னியர் சமூக மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வழிபடும் அக்கினி குண்டம், மகாலட்சுமி, மற்றும் வன்னியர்களின் தலைவர்களில் ஒருவரான குருவின் பெயரை இழிவுபடுத்தியும் வகையில் காட்சிகள் உள்ளதாக கூறி, தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் … Read more

' பெட்ரோல், டீசல் விலை டபுளானதுக்கு காரணம் என்ன ஜி?'

பிரதமர் மோடி: பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் கடந்த 7-8 ஆண்டுகளில் சுமார் 50 ஆயிரம் கோடி வெளிநாடுகளுக்கு அந்நிய செலாவணியாக செல்வதில் இருந்து சேமிக்கப்பட்டுள்ளது. அந்த தொகை விவசாயிகளுக்கு சென்றுள்ளது. பப்ளிக் மைண்ட்வாய்ஸ்: சந்தோஷம் ஜி… ஆனா நீங்க சொல்ற 7-8 வருஷத்துல பெட்ரோல், டீசல் விலை டபுளாகி இருக்கே… அதுக்கான காரணத்த ‘மான் கி பாத்’தல நீங்க பேசும்போதாவது சொல்லுவீங்களா ஜி? சசிகலா: அதிமுகவில் நிலவும் குழப்பத்துக்கு திமுக தான் காரணம்! மைண்ட்வாய்ஸ்:: என்னதான் இருந்தாலும் … Read more

'ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசியதில் தவறில்லை – ஏன் தெரியுமா?' – சீமான் விளாசல்

தமிழக ஆளுநரை சந்தித்து  நடிகர் ரஜினி அரசியல் பேசியதில் தவறில்லை, யார் வேண்டுமானாலும் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மாலை முரசு நிறுவனர் பா. ராமச்சந்திர ஆதித்தனாரின் 88வது பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள  மாலை முரசு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது திருவுருவப் படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், ”ஆளுநர் ஆர்.என்.ரவியை … Read more

மண் அள்ளும் போது எதிர்பாராத விதமாக 30 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 2 பெண்கள் பலி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மண் அள்ளும் போது, எதிர்பாராத விதமாக 30 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், பெண் கூலித்தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். தச்சங்காடு பகுதியை சேர்ந்த விஜயராகவன் என்பவரது தோட்டத்தில் இருந்து மண் அள்ளிய பின், பள்ளத்தில் இருந்து மேலே சென்ற டிராக்டர் அதிக பாரம் காரணமாக பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் அஜாக்கிரதையால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.   Source link

வைகை ஆற்று வெள்ளப்பெருக்கில் சிக்கிய சிஐஎஸ்எஃப் வீரர் 3-ம் நாளில் சடலமாக மீட்பு

மதுரை: வைகை ஆற்றில் நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கச் சென்று வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான பாதுகாப்பு படை வீரர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தேனி பகுதியில் பெய்யும் தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டம் அதிகரித்து வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மதுரை திருமங்கலம் அருகிலுள்ள கரடிக்கல் அனுப்பப்பட்டியைச் சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரான வினோத்குமார் (25) அவரது நண்பர் அன்பரசன் (25) உள்ளிட்ட மேலும், 4 பேர் சோழவந்தான் திருவேடகம் பகுதியிலுள்ள வைகையாற்று … Read more

ஓபிஎஸ் மீது புகார் – சிபிஐ விசாரணை கேட்ட சி.வி.சண்முகம்: விசாரணை தள்ளிவைப்பு!

அதிமுக அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள், பொருள்களை எடுத்த சென்றதாக ஓ.பன்னீர்செல்வம் மீதான புகாரை விசாரிக்க சிபிஐ விசாரணை கேட்ட வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11ஆம் தேதி வானகரத்தில் நடந்தது. அப்போது கட்சிக்கு ஒற்றை தலைமை கொண்டுவர தீர்மானம் இயற்றப்பட்டது. அதே நேரம் ஓ. பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். இதை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தடுத்ததால் … Read more