“பிரேதப் பரிசோதனை அறிக்கைகளில் உண்மை மறைப்பு” – முதல்வரை சந்தித்த கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார்

சென்னை: தனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக கூறிய கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் செல்வி, “என் மகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளில் உண்மை மறைக்கப்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டினார். முன்னதாக இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் செல்வி, தந்தை நேரில் சந்தித்தனர். அந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் செல்வி, “என் மகள் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்று … Read more

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில்; தெற்கு ரயில்வே குட் நியூஸ்!

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நீட்டித்து, தெற்கு ரயில்வே உத்தரவிட்டு உள்ளது. திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு, தென்காசி, மதுரை, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி வழியாக வாரந்தோறும் வியாழக் கிழமைகளிலும், மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வெள்ளிக் கிழமைகளிலும் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் இயக்கம் கடந்த 18 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் பொது … Read more

கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும்; எஸ்எப்ஐ மாநாட்டில் தீர்மானம்

திருவாரூர்: தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய மாணவர் சங்கத்தின் 26வது மாநில மாநாடு திருவாரூரில் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். 2வது நாள் நிகழ்ச்சியாக நேற்று மாநாடு துவக்க நிகழ்ச்சி மற்றும் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இதில் மாநில தலைவர் கண்ணன், செயலாளர் மாரியப்பன், வரவேற்பு குழு தலைவர் … Read more

இல்லாத டோல்கேட்-க்கு கூடுதல் கட்டணம்! கும்பகோணம் போக்குவரத்து கழகம் மீது பயணிகள் புகார்

தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை இடையே மொத்த பயண தூரம் 50 கிலோமீட்டர் ஆகும். இந்த வழிதடத்தில் ஒரத்தநாடு, பாப்பாநாடு, மேலஉளூர் என சுமார் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் பள்ளி, கல்லூரி, அலுவலகம் என அனைத்திற்கும் பட்டுக்கோட்டை செல்ல வேண்டும், இல்லை என்றால் தஞ்சைக்கு வர வேண்டும். இந்நிலையில் தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை செல்வதற்கு பேருந்து கட்டணம் 36 ரூபாய். ஆனால் 90% அரசு பேருந்துகளில் 45 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதாவது காப்பீடு … Read more

28 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்வு: எந்தெந்த வாகனங்களுக்கு எவ்வளவு?

Tamil Nadu News: அடுத்த மாதம் (செப்டம்பர் 1-ஆம் தேதி) முதல், தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 50 சுங்கச்சாவடிகள் உள்ளன, அதில் 22 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதல் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதனால், மீதமுள்ள 28 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கார், வேன், ஜீப் ஆகிய வாகனங்களின் கட்டணத்திற்கு ஐந்து ரூபாய் உயர்வும், டிரக், பஸ், மற்றும் … Read more

எல்.கே.ஜி. மாணவிக்கு, நடந்த கொடூரம்! கொந்தளிக்கும் அன்புமணி! கூட்டம் கூடி வருவதால் திருவண்ணாமலையில் பதற்றம்! 

எல்.கே.ஜி. மாணவிக்கு பாலியல் கொடுமை கொடுத்த ஆசிரியர், அவருடைய மனைவியும் பள்ளியின் தாளாளருமான பிரபாவதியையும்குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  இது தொடர்பாக அவர் தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “திருவண்ணாமலை மாவட்டம் கெங்கை சூடாமணி கிராமத்தில் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்த 4 வயது குழந்தை பள்ளி தாளாளரின் கணவர் காமராஜ் என்பவரால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. … Read more

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்தார் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி சமர்பித்தார். இந்த அறிக்கை, சட்டப்பேரவையில் முன்வைக்கப்படும் முன், வரும் அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இது குறித்து தெரிவித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, ஜெயலலிதாவை போயஸ் கார்டன் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் தங்களுக்கு சந்தேகம் இல்லையென்பதால், அங்கு சென்று விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றார்.   Source link

மு.க.ஸ்டாலின் எதிர்த்த ‘அவுட்சோர்சிங்’ முறையில் ஓட்டுநர்களை நியமிப்பது நியாயமா? – ராமதாஸ்

சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு ஒப்பந்த ஓட்டுநர்கள் கூடாது என்றும், நேரடியாக அரசே நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்த அவுட்சோர்சிங் முறையை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்ததையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு, தனியார் நிறுவனம் மூலம், அவுட்சோர்சிங் முறையில் 400 ஓட்டுநர்களை நியமிக்க அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. … Read more

பெரியார் சிலை விவகாரம்: கனல் கண்ணன் ஜாமீன் கோரி மனு!

பெரியார் சிலை தொடர்பாக சர்ச்சை பேச்சு குறித்த வழக்கில் கைதான கனல் கண்ணன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் … Read more

வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டு பெரு விழா: 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்பு

நாகப்பட்டினம்: கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் பக்தர்கள் பங்களிப்பு இல்லாமல் நடைபெற்ற வேளாங்கண்ணி திருவிழா இந்தாண்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருக்க கூடிய ஆரோக்கிய மாதா அன்னை ஆலயத்தினுடைய ஆண்டு திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டாண்டு காலமாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதி இல்லாமல் நடைபெற்ற இந்த திருவிழா, இந்த வருடம் பக்தர்கள் அனைவரும் பங்கேற்கலாம் என பேராலயம் … Read more