கொதித்தெழுந்த பிடிஆர் – யூடர்ன் போட்டு ஓடிய நபர்! மத வன்முறை திட்டம் தவிடுபொடி!

சமூக விரோத கருத்துக்களை பகிரும் இடமாக சமூக வலைதளங்களை சிலர் பயன்படுத்தி வருகின்றனர். போலியான விஷமத்தனமான கருத்துக்கள் அதிகமாக பகிரப்பட்டு சாமானிய மக்களை சென்றடைகின்றன. அவசரத்தில் பலர் இந்த கருத்துக்களை உண்மை என நம்பக்கூடும் . அப்படியான ட்வீட் பதிவு ஒன்று தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கண்ணில் பட கொதித்தெழுந்துவிட்டார். ட்விட்டைல் ‘ராதா இல்லா படம் சாதா’ என்ற ஐடியில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை குறிப்பிடும் விதமாக, ‘அவர் 2022-23 பட்ஜெட்டில் இந்து கோவில்களை … Read more

படியில் நிற்காதே என கண்டித்த ஓட்டுநர் மீது தாக்குதல்! பள்ளி மாணவர்கள் அட்டூலியம்!

காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து நேற்று மாலை 5.30மணியளவில் காஞ்சிபுரத்திலிருந்து புரிசைக்கு செல்லும் அரசு பேருந்து புறப்பட்டு செல்லும் போது அந்த அரசு பேருந்தின் முன் படியில் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் தொங்கியவாறு பயணித்துள்ளனர்.  இதனையெடுத்து பேருந்து ஓட்டுநர் ரமேஷ் மேலே எறி வரும் படி கூறியுள்ளார். இதனால் ஓட்டுநருடன் பள்ளி மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பேருந்து நிலைய பின்புறம் பகுதியில் பேருந்தினை நிறுத்தி அம்மாணவர்களிடம் படியில் பயணித்ததால் பேருந்தைவிட்டு இறங்க சொல்லியிருக்கிறார் … Read more

பள்ளிக்கு செல்லும்போது ஆபத்தான பயணம்; விதிமீறி பைக்குகளில் மின்னல் வேகத்தில் பறக்கும் சிறுவர்களால் விபத்து அபாயம்

வேலூர்: 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் லைசென்ஸ் இல்லாமல், பள்ளிக்கு செல்லும்போது, பைக்குகளில் மின்னல் வேகத்தில் சாகச பயணம் மேற்கொள்வது தொடர்கிறது. இது சாலை விதிகளை கடைபிடித்து செல்லும் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் கண்காணிக்க கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் உள்ளன. மோட்டார் வாகன சட்டத்தின்படி 18 வயதுக்கு மேல் உள்ளவர்களே வாகனம் ஓட்ட தகுதியுள்ளவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு … Read more

விஜயகாந்துக்கு முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து..!

இன்று பிறந்தநாள் காணும் தேமுதிக நிறுவனர் விஜயகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். டுவிட்டரில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உடல் நலம் பெற்று துடிப்பான மனிதராக வலம் வர வேண்டும் என்பதே தனது ஆசை என்றும், நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் உடல் ஆரோக்கியத்துடன், எல்லா வளமும் பெற்று இறைவன் அருளுடன் நீடூழி வாழ வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.  Source link

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம்; அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்: ராமதாஸ்

சென்னை: “கடந்த 15 ஆண்டுகளாக போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்த காலத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், தந்தையின் ஆட்சியில் குறைக்கப்பட்ட ஒப்பந்த காலம் தனயனின் ஆட்சியில் மீண்டும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவு முதல்வருக்கு தெரிந்து எடுக்கப்பட்டதா? தெரியாமல் எடுக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம், அவர்களின் நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்தும் என்று … Read more

விஜயகாந்தை பாத்து கத்துக்கோங்க… இனியாவது மாறுவாரா பிரேமலதா?

தமிழ் திரையுலகில் மட்டுமல்ல. தமிழக அரசியலிலும் சிறப்பான நிலையை எட்டியவர் . இவை அனைத்தும் ஒரே நாளிலோ அல்லது ஒருசில முயற்சிகளிலோ வந்து விடவில்லை. சாமானியராக இருந்து இந்தளவிற்கு பெயர், பணம், புகழ் உள்ளிட்டவற்றை பெற்றிருக்கிறார். திரையுலகில் தொடக்க காலத்தில் இருந்தே அனைவரையும் அரவணைத்து செல்லும் மனப்பாங்கு கொண்டவர். உதவிகள் கேட்டு வருவோருக்கு இல்லை என்று சொன்னதில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் உரிய மரியாதை கொடுத்து பேசுவார். குறிப்பாக சாப்பாடு விஷயத்தில் குறை … Read more

சென்னை உயர் நிதிமன்றத்தில் இபிஎஸ் மேல்முறையீட்டு மனு விசாரணை தொடங்கியது

சென்னை: எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்த எடப்பாடி பழனிச்சாமி மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்னும் நிலையில் யூகங்களின் அடிப்படையில் நீதிபதி … Read more

திருச்சி விமான நிலையத்தில் மதிமுக – நாம் தமிழர் கட்சியினர் மோதிக்கொண்ட வழக்கில் இருந்து சீமான் விடுதலை

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் மதிமுக – நாம் தமிழர் கட்சியினர் மோதிக்கொண்ட வழக்கில் இருந்து சீமான் விடுதலை செய்யப்பட்டார். 2018-ம் ஆண்டு நடந்த மோதல் தொடர்பான வழக்கில் ஆஜரான நிலையில் சீமான் விடுவிக்கப்பட்டார். இரு தரப்பும் சமரசம் செய்துகொண்டதால் வழக்கை திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவகுமார் முடித்து வைத்தார்.

தருமபுரி: இனம்புரியா நோயால் பிறந்தது முதல் இன்னல்களை மட்டுமே அனுபவித்துவரும் இரு சகோதரிகள்

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பிறந்ததிலிருந்து இனம் காணாத நோயால், வலிகளை மட்டுமே அனுபவித்து வரும் மலைக்கிராம சிறுமிகள் தங்களது நோய்க்கு நிரந்தர தீர்வு காண உயர் சிகிச்சை வழங்க முதலமைச்சர் உதவ வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வள்ளிமதுரை கிராமத்தைச் சார்ந்த மலைவாழ் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த முனியன் – கமலா தம்பதியினர் சித்தேரி மலை அடிவாரத்தில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 11 வயதான திருமலர் (கேட்கும் சவால் … Read more

அம்பானி, அதானி என்.டி.டிவியின் பங்குகளை எப்படி தன்வசமாக்கிக்கொண்டனர்?

கடந்த செவ்வாய் கிழமை கெளதம் அதானி, என்.டி.டிவியின் 29.18 % பங்குகளை வாங்கினார். மேலும் இந்நிறுவனத்தின் 26 % பங்களையும் வாங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது அதானி குழுமம். இந்த வருடம் மே மாதம், டிஜிட்டல் செய்தி நிறுவனமான  ப்ளூம்பர் க்யூண்ட் (BloombergQuint) 49 % பங்குகளை வாங்கப்போவதாக தெரிவித்தது. மேலும் தனியார் செய்தி தொலைக்காட்சியின் பங்குகளை வாங்கப்போவது மூலமாக தனது வியாபாரத்தை விரிவாக்க உள்ளதாக தெரிவித்தது. இந்நிலையில் என். டி. டிவியின் 29.18 % பங்குகளை அதானி … Read more