விவசாயத்தில் சாதனை படைத்த தமிழக விவசாயிகளுக்கு கிசான் பிரகதி விருதுகள்

செய்யூர்: இயற்கை விவசாயம் மற்றும் மறு உருவாக்க சாகுபடியில் சாதனைகள் கண்ட தமிழக விவசாயிகள் 9 பேருக்கு கிசான் பிரகதி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்திய வேளாண் துறையில் இயற்கை விவசாயம மற்றும் மறு உருவாக்க சாகுபடி செய்வது என்பது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை நடைமுறைபடுத்த அவுட்க்ரோ என்ற தொண்டு நிறுவனம் விவசாயிகளுக்கு ஊக்கமும் வழிமுறைகளையும் அளித்து வந்தது. இந்நிலையில், இயற்கை விவசாயம் மற்றும் மறு உருவாக்க சாகுபடி பணியில் புதுமையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்திய … Read more

புதுவித மொழியில் பார்வையாளர்களை மிரட்டும் விசித்திர நாடகம்! அசத்தும் 'மணல் மகுடி' குழு!

உங்கள் வாழ்க்கை சூழலில் ஒரு பொழுதேனும் மணல்மகுடி நாடகக் குழுவின் பெயரை கேட்டால், அதில் பங்கேற்காமல் விட்டு விடாதீர்கள். நீங்கள் தவறவிட கூடாத ஒரு நாடக நிகழ்ச்சி என்பதை கண்டு கேட்ட பின்பு உணர வைக்கின்றன இந்த விசித்திர புதுமொழி நாடகங்கள். கோவில்பட்டியை பூர்வீகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு நாடக குழு ‘மணல் மகுடி’. இதன் ஆசிரியர் முருக பூபதி. வாராவாரமோ, மாதமாதமோ அல்ல எப்போது பாமர மக்களின் குரல் ஒலிக்க முடியாமல் போகிறதோ, அவர்களின் … Read more

மதுரை | மாணவி வங்கி கணக்கில் ரூ.6 ஆயிரம் மாயம் – ரூ.26 ஆயிரமாக வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரை மாணவி வங்கி கணக்கில் பணம் எடுக்காமலேயே ரூ.6 ஆயிரம் மாயமான நிலையில் மாணவிக்கு ரூ.26 ஆயிரம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை ஹார்விப்பட்டியைச் சேர்ந்தவர் இந்துமதி. இவர் 2012-ல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். இவர் வைத்திருந்து ஏடிஎம் கார்டு சரியாக செயல்படாததால், பணம் எடுக்க 22.5.2012-ல் வங்கிக்கு சென்றார். பணம் எடுத்து விட்டு வங்கி கணக்கு புத்தகத்தில் பதிவு செய்தார். அப்போது 2.2.2012-ல் ஏடிஎம் மூலமாக ரூ.6000 பணம் எடுத்ததாக பதிவு செய்யப்பட்டது. … Read more

கஞ்சாவை ஒழிப்பது எப்படி? அன்புமணி ராமதாஸ் சொன்ன யோசனை!

காவல்துறையினரால் பிடிபடும் கஞ்சாவை விட 100 மடங்கு கஞ்சா புழக்கத்தில் விடப்படுவதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறேன் என்று பாமக தலைவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ”தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில், ஆந்திராவிலிருந்து சரக்குந்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள 750 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. ஆனால், கஞ்சா ஒழிப்புக்கு இது போதுமானது அல்ல. காவல்துறையினரால் பிடிபடும் கஞ்சாவை விட 100 மடங்கு கஞ்சா … Read more

ரெட்டமங்கலம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்; சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்

உத்திரமேரூர்:  உத்திரமேரூர் அருகே ரெட்டமங்கலம் அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை க.சுந்தர் எம்எல்ஏ  வழங்கினார். உத்திரமேரூர் அடுத்த ரெட்டமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசினர் ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில், ஒன்றியக்குழு துணை பெருந்தலைவர் வசந்திகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சிவராமன், சாலவாக்கம் ஒன்றிய துணை செயலாளர் அமுதா தமிழ்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். … Read more

”சிஸ்டமிக் ஸ்களிரோசிஸ் என்ற புது வகை நோயால் பாதிக்கப்பட்ட பெண்” – முதல்வருக்கு கோரிக்கை

சிஸ்டமிக் ஸ்களிரோசிஸ் என்ற புது வகை நோயால் நுரையீரல் பாதிக்கப்பட்டு படிப்பை பாதியில் நிறுத்தி உயிருக்கு போராடும் இளம்பெண் சிகிச்சைக்காக தமிழக முதல்வரிடம் உதவி கேட்டு உருக்கமாக வேண்டுகோள் விடுத்த வத்தலகுண்டு பெண். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவை சேர்ந்தவர் அன்னக்கொடி. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் இவரது மனைவி பாண்டீஸ்வரி. இவர்களுக்கு செந்தூர் என்ற மகனும், ஜமுனா என்ற மகளும் உள்ளனர். ஜமுனாவுக்கு தற்போது 17 வயது ஆகிறது. ஜமுனா ஒன்பதாம் வகுப்பு … Read more

ம.தி.மு.க- நாம் தமிழர் மோதல் வழக்கில் சீமான் விடுதலை

திருச்சி விமான நிலையத்தில் 2018-ம் ஆண்டு மதிமுக – நாம் தமிழர் கட்சியினர் மோதிக்கொண்ட வழக்கு தொடர்பாக திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலை செய்யப்பட்டார். இரு தரப்பும் சமரசம் செய்துகொண்டதால் வழக்கை நீதிபதி சிவகுமார் முடித்து வைத்தார். தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் செல்வதற்காக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதி சென்னையில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் … Read more

மக்கள் பிரச்சினைகளுக்காக நீதி கிடைக்கும் வரை தேமுதிக போராடும்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: “மின் கட்டண உயர்வு உள்ளிட்ட என அனைத்து பிரச்சினைகளிலும், தேமுதிகதான் முதல் ஆளாக களத்தில் இறங்கி அனைத்து போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். இனியும் மக்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் முதல் ஆளாக இருந்து மக்களுக்கு ஒரு நீதி கிடைக்கும்வரை போராடுவோம்” என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. கட்சி அலுவலகம் வந்த நிறுவனத் தலைவர் விஜயகாந்திற்கு கட்சி … Read more

கொளுத்தி போட்ட ஆளுநர் ரவி; கொந்தளிக்கும் கிறிஸ்தவர்கள்!

ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகி விடும் என்ற பேச்சு பரவலாக உள்ளது. அதை தான் தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து கொண்டு இருக்கிறாரோ? என, பலரும் சந்தேகப்படும் வகையில் இருக்கிறது அவரது சமீபத்திய நடவடிக்கைகள். அதாவது, கோயம்புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கடந்த ஜனவரி மாதம் நடந்த சர்வதேச திருக்குறள் மாநாட்டில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது,‘தமிழகம் புண்ணிய பூமி, ஆன்மிக பூமி. இங்கு … Read more

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்து வருவதால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் கடந்த இரண்டு நாட்களாக 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு கடந்த … Read more