கும்மிடிப்பூண்டி அருகே வேன்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம்

கும்மிடிப்பூண்டி அருகே வேன்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான காலணிகளை உற்பத்தி செய்திடும் தொழிற்சாலையிலிருந்து நேற்று மாலை, வேலை முடிந்தபின் 15 பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையம் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக வேணும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர. இதில் படுகாயமடைந்த 6 … Read more

“அரசு மருத்துவர்கள் இடமாற்றம், பதவி உயர்வில் முறைகேடு” – புகார்களை அடுக்கும் சட்டப் போராட்டக் குழு

சென்னை: “அரசு மருத்துவர்களுக்கான இடமாற்றம் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு நீதி கேட்டும், அரசாணை 354-ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்பட வலியுறுத்தியும், வரும் செப்.28-ம் தேதி குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்” என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவின் தலைவர் டாக்டர் பெருமாள் பிச்சை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: “தமிழகத்தில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்ற மருத்துவர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு … Read more

வைகோ 56: துரை வைகோ எடுக்கும் முக்கிய முன்னெடுப்பு!

வைகோ பொதுவாழ்வில் அடியெடுத்து 56 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அவர் குறித்த ஆவணப்படம் வெளியாக உள்ளது. தமிழ்நாட்டு அரசியலில் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் முக்கியமானவர் வைகோ. மாணவப் பருவத்திலேயே திராவிட இயக்க அரசியலில் ஈர்க்கப்பட்டு களத்துக்கு வந்தவர். திமுகவில் இருந்தபோதும் மதிமுகவை தொடங்கிய பின்னரும் தமிழ்நாட்டு நலனுக்காக, தமிழ் ஈழ மக்கள் நலனுக்காக தொடர்ந்து பேசி வருகிறார். மேடைகளில் கருப்பு துண்டை சரி செய்துகொண்டே அவர் பேசும் பேச்சுக்கு கட்சி தாண்டியும் ரசிகர்கள் இருக்கின்றனர். வயது முதிர்ச்சி காரணமாக … Read more

எப்புடிலாம் யோசிக்குறாய்ங்க… திருமண அழைப்பிதழில் தெறிக்கவிட்ட மதுரை மாப்பிள்ளை!

ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் திருமணம் என்பது முக்கியமான ஒரு நிகழ்வு, ஆண்-பெண் இருவரும் ஒரு உன்னதமான பந்தத்தில் இணைந்து அடுத்த சந்ததியை உருவாக்க நடத்தப்படும் இந்த திருமண நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.  ஒவ்வொருவருக்கும் திருமணம் பற்றிய கனவு இருக்கும், நமது திருமணம் எங்கே நடக்க வேண்டும், எப்படி நடக்க வேண்டும் என்று இளமை பருவத்திலிருந்தே ஒரு திட்டத்தை வைத்திருப்பார்கள்.  அதிலும் திருமணம் நிச்சயமாகிவிட்ட நாளிலிருந்தே மணமகனும் சரி, மணமகளும் சரி தங்களது திருமணத்தில் தங்களுக்கு பிடித்தமாதிரி என்னவெல்லாம் … Read more

லோடு ஆட்டோவில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ராணிப்பேட்டை:  ராணிப்பேட்டை ஆட்டோ நகரில், முக்கியம்மன்கோயில் அருகே நேற்று ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் வாலாஜா வட்ட வழங்கல் அலுவலர் ராஜ லட்சுமி, ராணிப்பேட்டை வருவாய் ஆய்வாளர் தியாகராஜன், தனி வருவாய் ஆய்வாளர் ஆர்.பாஸ்கரன் ஆகியோருடன் திடீர் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1,085 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து லோடு ஆட்டோவுடன் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி வாலாஜா … Read more

மின்சாரம் தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு… உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு

மின்சாரம் தாக்கி நெல்லை கல்லூரி மாணவரும், அவரது தந்தையும் இறந்த விவகாரத்தில் அவர்களது குடும்பத்திற்கு 26 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மின்சாரம் தாக்கி தனது தந்தையும் சகோதரரும் உயிரிழந்த நிலையில், இழப்பீடாக தலா 20 லட்சம் வழங்கக்கோரி முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் “திருநெல்வேலி மாவட்டம் களக்காடு கிராமத்தில் உள்ள எங்களது நிலத்தில் விவசாயம் செய்வதற்காக சென்றபோது, மின் கம்பி அறுந்து வேலியில் தொங்கியிருக்கிறது. இதை … Read more

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் நாளை 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. வரும் 27ம் தேதி டெல்டா மாவட்டங்கள் உட்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், … Read more

திமுகவில் இணைவதாக விஷமப் பிரச்சாரம்: அதிமுக எம்எல்ஏ ஆவேசம்

கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி, திமுகவில் இணைய உள்ளதாக நேற்று தகவல்கள் பரவின. இதையடுத்து, அமுல் கந்தசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “திமுகவினர் விஷமத்தனமான பிரச்சாரத்தை செய்துள்ளனர். இதுபோன்ற பிரச்சாரங்களை செய்வது திமுகவின் வாடிக்கை. நான் அன்னூரில் குடியிருக்கிறேன். 150 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை புறக்கணிக்கும் திமுகவுக்கு ஒருபோதும் நான் தலைவணங்க மாட்டேன். இறக்கும்வரை அதிமுகவில்தான் … Read more

கொதித்தெழுந்த பிடிஆர் – யூடர்ன் போட்டு ஓடிய நபர்! மத வன்முறை திட்டம் தவிடுபொடி!

சமூக விரோத கருத்துக்களை பகிரும் இடமாக சமூக வலைதளங்களை சிலர் பயன்படுத்தி வருகின்றனர். போலியான விஷமத்தனமான கருத்துக்கள் அதிகமாக பகிரப்பட்டு சாமானிய மக்களை சென்றடைகின்றன. அவசரத்தில் பலர் இந்த கருத்துக்களை உண்மை என நம்பக்கூடும் . அப்படியான ட்வீட் பதிவு ஒன்று தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கண்ணில் பட கொதித்தெழுந்துவிட்டார். ட்விட்டைல் ‘ராதா இல்லா படம் சாதா’ என்ற ஐடியில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை குறிப்பிடும் விதமாக, ‘அவர் 2022-23 பட்ஜெட்டில் இந்து கோவில்களை … Read more

படியில் நிற்காதே என கண்டித்த ஓட்டுநர் மீது தாக்குதல்! பள்ளி மாணவர்கள் அட்டூலியம்!

காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து நேற்று மாலை 5.30மணியளவில் காஞ்சிபுரத்திலிருந்து புரிசைக்கு செல்லும் அரசு பேருந்து புறப்பட்டு செல்லும் போது அந்த அரசு பேருந்தின் முன் படியில் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் தொங்கியவாறு பயணித்துள்ளனர்.  இதனையெடுத்து பேருந்து ஓட்டுநர் ரமேஷ் மேலே எறி வரும் படி கூறியுள்ளார். இதனால் ஓட்டுநருடன் பள்ளி மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பேருந்து நிலைய பின்புறம் பகுதியில் பேருந்தினை நிறுத்தி அம்மாணவர்களிடம் படியில் பயணித்ததால் பேருந்தைவிட்டு இறங்க சொல்லியிருக்கிறார் … Read more