பேருந்து ஓட்டுனரின் இருக்கை அருகில் உள்ள கதவில் அமர்ந்து ஆபத்தான நிலையில் பயணிக்கும் பெண் பயணி.!

கோவையில் தனியார் பேருந்து ஓட்டுனரின் இருக்கை அருகில் உள்ள கதவில் அமர்ந்து ஆபத்தான நிலையில் பயணிக்கும் பெண் பயணி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காந்திபுரம்- ஆனைகட்டிக்கு செல்லும் தனியார் பேருந்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.  ஆனைகட்டிக்கு செல்லும் வழி மலைப்பாதை என்பதால் பல்வேறு வளைவுகள் இருக்கின்ற சூழலில் இது போன்று பயணிப்பது மிகவும் ஆபத்தானது என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். எனவே அப்பகுதிக்கு கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை … Read more

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்க பட்டியல் தயாரிப்பு: கவனமுடன் இறுதிசெய்ய கல்வித் துறை உத்தரவு

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் வகையில் பட்டியலை கவனமுடன் இறுதிசெய்து அனுப்ப கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் வெ.ஜெயக் குமார் (தொழிற்கல்வி), அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பாண்டில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்குவதற்கான உத்தேச தேவைபட்டியலை பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு … Read more

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் உளவுத் துறை ஏடிஜிபியை பணி நீக்கம் செய்ய வேண்டும்: ஆளுநரிடம் பாஜக மாநிலத் தலைவர் முறையீடு

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்தார். மாநிலத் துணைத் தலைவர்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமிமற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். பின்னர், மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், செய்தி யாளர்களிடம் கூறியதாவது. தமிழகத்தில் நடைபெறும் தேசவிரோத செயல்கள் குறித்து ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம். அவை தமிழகத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளன. தமிழகத்தில் தீவிரவாதம் தலை விரித்தாடுகிறது. தீவிரவாதிகளுக்கு போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காவல் துறை அதிகாரிகள்உடந்தையாக இருந்திருக்கிறார் கள். … Read more

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சின்ன சேலம் பள்ளி மாணவி உடலை மறு உடற்கூறாய்வு செய்வது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நாளை (ஜூலை 22) தாக்கல் செய்ய அவரது தந்தை தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் மாணவி மரணமடைந்ததை அடுத்து, அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் 3 அரசு மருத்துவர்கள் மற்றும் ஒரு ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூராய்வு நடத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி … Read more

திருச்சியில் அமைச்சர்களின் ஆதரவாளர்களால் சூடுபிடிக்கும் திமுக உட்கட்சி தேர்தல்: நடப்பது என்ன?

திருச்சி: திருச்சி மாநகரச் செயலாளர் பதவியை குறிவைத்து திருச்சி மாநகர திமுகவின் பகுதிகள் சீரமைப்பில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யா மொழி ஆதரவாளர்களின் அடுத்தடுத்த காய்நகர்த்தலால், உட்கட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ளது. இதற்கு கட்டியம் கூறும் வகையில் கட்சித் தலைமையும் பகுதி கழகம் குறித்து திருத்தத்துக்கு மேல் திருத்தம் அறிவித்துள்ளது. திருச்சி மாவட்ட திமுக ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது மாநகர திமுக ஒரே அமைப்பாக இருந்தது. அதன்பின் வடக்கு, தெற்கு, மத்திய என 3 ஆக மாவட்டங்களாக … Read more

மயிலாப்பூர், தாம்பரம், பல்லாவரம்… சென்னையில் இன்று இந்த ஏரியாக்களில் மின் தடை! 

சென்னையில் இன்று (ஜூலை:21) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், திருவேற்காடு, தாம்பரம், பெரம்பூர் ஆகிய துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது. மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். மயிலாப்பூர்;  மந்தவெளி வி.கே.ஐயர் ரோடு, ஜேத் நகர் மெயின் ரோடு,  ஜேத் நகர் 1வது மற்றும் … Read more

திருப்பூர் | குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட வீட்டுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

திருப்பூர்: பல்லடம் அருகே பெண் ஊராட்சி தலைவரின் கணவர் தலையீடு காரணமாக, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்ட நிலையில், அதனை ஊராட்சி செயலர் மற்றும் வட்ட வளர்ச்சி அலுவலரின் மாத சம்பளத்தில் வசூலிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. பல்லடம் அருகே குப்புசாமிநாயுடுபுரம் சாமிகவுண்டன்பாளையம் உப்புத்தோட்டத்தைச் சேர்ந்தவர் புஷ்பலதா. இவர் செம்மிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டவர். இந்நிலையில் புஷ்பதால் தன் வீட்டு குடிநீர் இணைப்புகான குடிநீர் வரி ரூ.4,920 நிலுவை … Read more

அரசியல் அமைப்புச் சட்ட மீறல்; மருத்துவ சட்ட முரண்பாடு… நீட் விலக்கு பற்றி அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய மத்திய அரசு

Ma Subramanian says Centre asks these Clarifications to TN Govt on anti NEET bill: நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா, தேசிய கல்விக் கொள்கை மற்றும் பல்வேறு சட்டங்களுக்கு முரணானதா, தேசிய ஒற்றுமை மற்றும் இறையாண்மையை பாதிக்குமா என்பதை தெளிவுபடுத்துமாறு தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் (NEET) தேர்வு என்பது இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவக் … Read more

அன்புமணியை வேதனையில் ஆழ்த்திய உயிரிழப்புகள்! அரசு நிவாரணம் அளிக்க வலியுறுத்தல்!  

கொள்ளிடம் ஆற்றில், அணைக்கரை மதகு சாலைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆகாஷ், மனோஜ், அப்பு ஆகியோர் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது, வெள்ள நீரில் அடித்து  செல்லப்பட்டனர்.  இதில் மனோஜ், ஆகாஷின் உடல்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் அப்புவின் உடலை தேடி வருகின்றனர். இந்தநிலையில் உயிரிழந்த இளைஞர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அரசிடம் நிவாரணமும் கேட்டிருக்கிறார் பாமக தலைவர் அன்புமணி.  இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “கொள்ளிடத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது வெள்ளத்தில் … Read more