தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த தடை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

மதுரை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் பணியிடத்தை நிரப்பும் வரை மின் கட்டணத்தை உயர்த்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் கே.வெங்கடாச்சலம், அருணா அலாய்ஸ் ஸ்டீல் நிறுவன மேலாண்மை இயக்குனர் அருண் அருணாச்சலம், ஸ்ரீபதி பேப்பர் அன்ட் போர்ட்ஸ் நிறுவன பொது மேலாளர் ஜி.ஸ்ரீனிவாசன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் … Read more

திருச்செந்தூரில் ஆவணி திருவிழா; வெள்ளை சாத்தியில் இன்று சுவாமி சண்முகர் வீதியுலா

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி திருவிழாவில் 8ம் நாளான இன்று சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தியில் வீதியுலா வந்தார். அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா, கடந்த 17ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமியும் அம்மனும் பல்வேறு வானங்களில் வீதியுலா நடந்து வருகிறது. நேற்று 7ம் நாளான காலை 5.20 மணிக்கு சுவாமி சண்முகர் உருகு சட்ட சேவை நடைபெற்றது. காலை 8.45 மணிக்கு … Read more

“முக சிகிச்சைக்குப் பின் சிறுமி தான்யா நலமாக உள்ளார்”- தனியார் மருத்துவமனை

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி தான்யா அறுவை சிகிச்சை முடிந்து நலமாக உள்ளார் என தனியார் மருத்துவ நிர்வாகம் சார்பில் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆவடி அருகே வீராபுரத்தில் வசித்து வந்த ஸ்டீபன் – சௌபாக்யா தம்பதியின் மூத்த மகளான தானியா அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது குறித்து புதிய தலைமுறையில் செய்தி கடந்த 16ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இலவசமாக சிகிச்சை … Read more

துண்டாடப்பட்ட திருச்சி மாநகர தி.மு.க: நேருவுக்கு ஒண்ணு; மகேஷுக்கு ஒண்ணு!

திருச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 15-வது பொதுத்தேர்தலில் மாநகர பகுதி செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கான வார்டு வரையறை வெளியிடப்பட்டு, அதன்படி தேர்தல் நடந்து முடிந்து நிர்வாகிகளின் பெயரும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. திருச்சி மாநகரச் செயலாளர் பதவியை குறிவைத்து திருச்சி மாநகர திமுகவின் பகுதிகள் சீரமைப்பில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆதரவாளர்களின் அடுத்தடுத்த காய்நகர்த்தலால், உட்கட்சித் தேர்தல் சூடுபிடித்திருந்தது. திருச்சி திமுகவின் உட்கட்சி பிரச்சனைகளுக்கு ஏற்றாற்போல் கட்சித் தலைமையும் பகுதி கழகம் குறித்து திருத்தத்துக்கு மேல் திருத்தம் … Read more

#BREAKING : தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே நல்ல மழை பெய்து வந்த நிலையில், கடந்த வாரத்தில் சற்று மழை குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் தமிழகத்துக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.  அதன்படி, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று  முதல் நாளை மறுதினம் (ஆகஸ்ட் 26) வரையிலான … Read more

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படுவது எப்படி? – தமிழக அரசு விளக்கம்

சென்னை: “போக்குவரத்து தொழிலாளர்களுக்கான அடிப்படை ஊதியத்தை பேமேட்ரிக்ஸில் பொருத்தி 5 சதவீதம் உயர்வு அளித்து கணக்கீடு செய்து புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்” என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். சென்னை குரோம்பேட்டையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், 14-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்பின்னர், அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது அவர் கூறியது: “போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான 13-வது ஒப்பந்தம், 4.1.2018 அன்று … Read more

சாலையோரம் வீசப்படும் பச்சிளம் குழந்தைகள் – உண்மையில் இதன் உளவியல் பிரச்சனைகள்தான் என்ன ?

நல்லதாங்காள் கதையில் இருந்து தொடங்குவோம். கடும் வறுமை, பசி, பட்டினி காரணமாக தான் பெற்ற 7 குழந்தைகளையும் பாழங்கிணற்றில் தூக்கிப்போட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்கிறாள் நல்லதாங்காள். இன்றும் பல கிராமங்களில் நல்லதாங்காள் கதை பேசப்பட்டு வருகிறது. சில கிராமங்களில் அவர் நாட்டார் வழிபாட்டுத் தெய்வமாகவும் இருந்து வருகிறாள்.  இந்தக் கதையை நவீன யுவகத்தில் நின்றுகொண்டு கேட்பவர்கள், அத்தனைக் குழந்தைகளையும் கொல்ல நல்லதாங்காளுக்கு உரிமை உண்டா ? என்று கேட்கிறார்கள். இன்றும் கணவனைத் தாண்டிய காதலனுக்காக, பணத்திற்காக, … Read more

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான ஜிப்மர் மருத்துவக்குழு அறிக்கையை வழங்க இயலாது என விழுப்புரம் நீதிமன்றம் மறுப்பு.!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான ஜிப்மர் மருத்துவக்குழு அறிக்கையை வழங்க இயலாது என விழுப்புரம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விசாரணை நடைபெற்று வருவதால் தற்போது ஜிப்மர் மருத்துவக்குழு அறிக்கையை வழங்க இயலாது என விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் நடந்த 2வது உடற்கூறாய்வு அறிக்கை மட்டும் மாணவி தரப்பு வழக்கறிஞரிடம் வழங்கப்பட்டது. கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரண வழக்கில் மாணவியின் உடல் இரண்டு முறை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அந்த அறிக்கையை … Read more

‘குருவியை சுடுவதுபோல சுட்டுக்கொன்றவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள்’- ஸ்னோலினின் தாயார்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டின் அருணா ஜெகதீசன் அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்வது தொடர்பாக, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்னோலினின் தாயார் வனிதா மற்றும் தமிழ் மீனவர் கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் ரஜினி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது ஸ்னோலின் தாயார் வனிதா பேசுகையில், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை காக்கா குருவிவை சுடுவதுபோல 14 பேரை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கையில் 16 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற செயல்கள் … Read more

2023-ம் ஆண்டுக்கான H-1B விசா வரம்பை அடைந்து விட்டதாக அமெரிக்கா அறிவிப்பு… உலகச் செய்திகள்

USA reaches H1B visa cap today world news: இன்று உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம். வெள்ளத்தில் இந்திய அமெரிக்க பெண் மரணம் அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள சியோன் தேசிய பூங்காவில் கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 29 வயதான இந்திய-அமெரிக்க பெண் மலையேறுபவர் இறந்து கிடந்ததாக பூங்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அரிசோனாவில் உள்ள டக்ஸனைச் சேர்ந்த ஜெடல் அக்னிஹோத்ரி ஆகஸ்ட் 19 … Read more