கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்: இழப்பீடு வழங்கக் கோரிய மனு தள்ளுபடி!

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி ஆட்கொணர்வு மனுவாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவித்து, அது தொடர்பான மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து பள்ளியில் நடந்த கலவரம், தீ வைப்பு சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதில் அப்பாவிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அவர்களை அடையாளம் காணக் … Read more

நளினிக்கு 8வது முறையாக பரோல் நீட்டிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நளினி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் தனி சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது தாயார் பத்மாவதி உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கண்காணித்துக் கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார்.  இதனை ஏற்று நளினிக்கு கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் ஒரு மாத காலம் பரோல் வாங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. பரோலில் வெளியே … Read more

கிரஷர்களால் சாலைகளில் புழுதி பறப்பதால் விபத்துகள் அதிகரிப்பு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே கல்குவாரி மற்றும் கிரஷர்களின் தொடர் இயக்கத்தால், அங்கு சாலைகளில் மண் புழுதி பறந்து வருகிறது. இதனால் அங்கு விபத்துகள் அதிகரித்து வருகின்றன. உத்திரமேரூர் அருகே மதூர் மலைப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அரசு அனுமதியுடன் தனியார் கல்குவாரி மற்றும் கிரஷர்கள் இயங்கியது. இதை தொடர்ந்து, சுற்று வட்டார பகுதிகளான குண்ணவாக்கம், சித்தாலப்பாக்கம், சிறுமயிலுார், ஆனம்பாக்கம், சிறுதாமூர், அருங்குன்றம், பட்டா, பழவேரி, பினாயூர், பொற்பந்தல், பேரணக்காவூர் உள்பட பல்வேறு கிராமங்களில் கல்குவாரிகள் மற்றும் … Read more

"கொலைக்களமாக மாறிவரும் தமிழகம்; இதுதான் சட்டம் ஒழுங்கை கவனிக்கும் லட்சணமா?"- ஈபிஎஸ்

கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் விற்பனை போன்ற சமுதாய சீர்கேடுகளைத் தவிர்த்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என, தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் கொலைக்களமாக மாறி வருவதாகவும், இதனால் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கை தாமே நேரடியாக கவனித்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் கூறியதை எடப்பாடி பழனிசாமி … Read more

“மம்பட்டியை எடுத்து வாங்க கவுன்சிலர்னு போன் போட்டு திட்டுறாங்க” – மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில் அதிரவைத்த சொக்காயி

மதுரை; “வீட்டு வரி விதிப்பில் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு தில்லு முல்லு செய்துள்ளனர். அதை விசாரிக்க வேண்டும்” என்று அதிமுக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, கவுன்சிலர் சொக்காயின் யாதார்த்த பேச்சும், ஆதங்கமும் மாநகராட்சி மன்ற அரங்கை சில நிமிடங்கள் அதிர வைத்தது. மதுரை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய மேயர் இந்திராணி, “கவுன்சிலர்கள் … Read more

பாஜகவில் இணையும் திமுக எம்.பி?; தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு!

இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பச்சமுத்து. இவரது தலைமையின் கீழ் இயங்கும் ஐஜேகே, கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் ஐஜேகே கட்சிக்கு பெரம்பலூர் மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, பச்சமுத்து அமோக வெற்றி பெற்றார். இதன் பிறகு பச்சமுத்து பெரம்பலூர் தொகுதி பக்கமே தலைகாட்டவில்லை என்கிற குற்றச்சாட்டு தொகுதி மக்கள் மத்தியில் எழுந்தது. இதனை ஈடு செய்யும் வகையில், இந்த ஆண்டும் தொகுதியை சேர்ந்த … Read more

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் 2-வது நாளாக நடைபெற்றது. 14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக, 7-வது கட்டமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் கோபால் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  இந்த … Read more

சூனாம்பேடு பகுதியில் இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை கட்டிடம்; புதிதாக கட்டித் தர வலியுறுத்தல்

செய்யூர்: சூனாம்பேடு பகுதியில் ஒரு ரேஷன் கடை கட்டிடம் இடிந்து விழும் நிலையில் சேதமாகியுள்ளது. இக்கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, அங்கு புதிய கட்டிடத்தை கட்டித் தரும்படி அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சூனாம்பேடு ஊராட்சி காலனி பகுதியில் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் தமிழக அரசின் நியாயவிலை கடை இயங்கி வருகிறது. இக்கடையில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உணவு பொருட்களை வாங்கி சென்று வருகின்றனர். இக்கட்டிடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் … Read more

அரசு மருத்துவர்களின் கவனக்குறைவால் மணிக்கட்டை இழந்த குழந்தை! -நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோவில்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் கவனக்குறைவால் மணிக்கட்டு பகுதியை இழந்த குழந்தைக்கு இழப்பீடாக 15 லட்சம் ரூபாயை வழங்கக் கோரிய வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர் மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனை முதல்வர் ஆகியோர்a= பதிலளிக்க  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இதுகுறித்த மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ” கடந்த 2021 அக்டோபர் 27ல் காய்ச்சல் காரணமாக … Read more

தலைமுடியை பெற்றோர் வெட்டியதால், தற்கொலை செய்து கொண்ட +2 மாணவி.!

சமீபகாலமாகவே பள்ளி சிறுவர், சிறுமிகளின் தற்கொலை செய்திகள் அதிகமாக வந்த வண்ணம் இருக்கிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு அரசு தலையிட்டு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பிலிருந்தும் வரும் கோரிக்கையாக இருக்கிறது. இத்தகைய சூழலில், கரூரில் ஒரு பெண் பெற்றோர் முடிவெட்டி விட்டதற்காக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வெண்ணமலை பகுதியை சேர்ந்த ஸ்ரீனா என்ற இளம்பெண் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருடைய … Read more