அதிமுக அலுவலக வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் – தமிழக அரசு தகவல்!

சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ராயப்பேட்டையில் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அந்த சமயத்தில், ஓ.பன்னீா்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்கள் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையாக மாறியது. கட்சி அலுவலகத்தை உடைத்து உள்ளே சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள், கட்சி அலுவலகத்தை கைப்பற்றினர். இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினா் சீல் வைத்தனர். இதனை அகற்றக் கோரி ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனித்தனியே தாக்கல் … Read more

சி.வி சண்முகம் தாக்கல் செய்த மனு: வழக்குகள் சிபிசிஐடி-க்கு மாற்றம், விசாரணை தள்ளிவைப்பு

அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக பதிவான நான்கு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் தாக்கல் செய்திருந்த மனுவில், ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்குள் புகுந்த ஓ.பன்னீர்செல்வம்  மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக அளித்த புகாரில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் … Read more

பெத்தநாயக்கன்பேட்டையில் புதிய பள்ளி கட்டவேண்டும்: பெற்றோர்கள், மாணவர்கள் கோரிக்கை

பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே கிளாம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பெத்தநாயக்கன்பேட்டை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இங்கு 1 முதல் 5  வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது இந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையின் ஓடுகள் பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சுக்கள் உதிர்ந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. … Read more

ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைய இனி வாய்ப்பே இல்லை- நீதிமன்றத்தில் நடந்த காரசார வாதத்தின் முழு விவரம்

கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் அம்மன் வைரமுத்து ஆகியோர்  உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், ஜூலை 11ல் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என்று அறிவித்ததுடன், கட்சி தலைமையில் ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் துரைசாமி, … Read more

விஜயகாந்த் பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து.. தொண்டர்களை சந்தித்து உற்சாகம்!

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று(ஆகஸ்ட் 25) தனது 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்த விஜயகாந்த், அரசியலில் கால் பதித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் உயர்ந்தார். விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் சுமார் 40 ஆண்டு காலம் கோலோச்சிய விஜயகாந்த், பின் … Read more

#சென்னை || மகள் கணவனை பிரிந்து வாழ்வதால் 14 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலதிபர்.. !

மகள் கணவனை பிரிந்து வாழ்ந்ததால் மன உளைச்சலில் தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, விருகம்பாக்கம், நடேசன்நகர் பகுதியில் உள்ள ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான அடுக்குமாடி குடியிருப்பில் தூத்துக்குடியை சேர்ந்த மதுசூதனரெட்டி (வயது 69) என்பவர் தனது மனைவி பத்மாவதி மற்றும் மகள் பூர்ணிமாவுடன் வாடகைக்கு வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை அவர் 14 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை … Read more

ஆக. 28-ல் திருச்சியில் ஈஷா சார்பில் நெல் சாகுபடி கருத்தரங்கு, கண்காட்சி

சென்னை: ஈஷா விவசாய இயக்கம் சார்பில் நெல் சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (ஆக 25) நடைபெற்றது. இதில் ஈஷா விவசாய இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: “நமது வாழ்வில் அன்றாடம் நாம் … Read more

மெரினாவில் பேனா நினைவு சின்னம்…! – அனுமதி அளிக்குமா மத்திய வல்லுநர் குழு..?

மறைந்த முன்னாள் முதல்வர் பயன்படுத்திய பேனாவின் மாதிரி வடிவத்தை பிரமாண்ட சிலையாக சென்னை மெரினா கடலுக்கு நடுவே அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தது . இது மாநிலம் முழும் பேசு பொருள் ஆகி பல்வேறு தரப்பினர் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மத்திய வல்லுநர் குழு சென்னை மெரினாவில் பேனா வடிவ நினைவு சின்னம் அமைக்க ஆய்வு நடத்தி உள்ளது. சென்னை மெரினாவில் சுமார் 137 அடி உயரத்தில் பேனா நினைவு சின்னம் … Read more

தாயை தனிமையில் விட்டுவிட்டு வெளிநாடு செல்ல முயன்ற மகன் விமான நிலையத்தில் கைது

சென்னை மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் துர்காம்பாள். இவருக்கு வயது 74 ஆகும். இவர் கடந்த 15 ஆம் தேதி அன்று மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் எனது கணவர் குப்புசாமி கடந்த மாதம் 3 ஆம் தேதி மரணம் அடைந்தார். மூத்த மகன் கடந்த ஆண்டு உயிரிழந்துவிட்டார். இளைய மகன் ராமகிருஷ்ணன் திருமணமாகி அமெரிக்காவில் குடியேறி விட்டான். இவர் தனது தந்தை இறப்புக்கு கூட வரவில்லை. ஆனால் … Read more

மூன்று வாரங்களாக சுருளி அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணியருக்கு தடை நீடிப்பு

கம்பம்: சுருளி அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மூன்று வாரங்களாக நீடிப்பதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தேனி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலம் சுருளி அருவியாகும். சுருளி அருவிக்கு தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு ஊர்களிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகின்றனர். இந்நிலையில் கேரளா மற்றும் கேரளாவையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப்பகுதிகளான தேனி மாவட்டத்தின் கம்பம், கூடலூர், பாளையம் மற்றும் சின்னமனுரில் தென்மேற்கு பருவமழை … Read more