திருச்சிற்றம்பலம் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: தமிழகத்தில் ரூ.50 கோடியை நெருங்கும் தனுஷ் படம்

நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. யதார்த்தமான படங்களைவிட பெரிய படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறும் என்ற தொற்றுநோய்க்கு பிந்தைய கருத்தை இந்த படம் உடைத்துள்ளது. ரொமாண்டிக் நகைச்சுவை கலந்த குடும்ப படமான திருச்சிற்றம்பலம் திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றது. தமிழக பாக்ஸ் ஆபிஸில் இப்படம் சுமார் ரூ.39 கோடி வசூலித்துள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் ரூ.50 கோடியை தாண்டிவிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. … Read more

பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி.!

பேருந்து மோதிய விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாமண்டூர் கிராமத்திற்கு, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த குணசீலன் என்பவர் மோட்டார் சைக்கிளில் தனது மனைவி மோனிஷா , ஒன்றரை வயது மகள் மயூரி, சகோதரி நீலாவதி ஆகியோருடன் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் குணசீலனின் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியுள்ளது. இதில் நிலைத்தடுமாறி 4 பேரும் சாலையில் விழுந்துள்ளனர். இந்நிலையில் … Read more

கணியாமூர் பள்ளியை சீரமைப்பது, திறப்பது குறித்து 10 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

+2 மாணவி மரணத்தை அடுத்து சூறையாடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியை சீரமைக்கவும், பள்ளியை திறக்கவும் அனுமதிப்பது குறித்து 10 நாட்களுக்குள் முடிவெடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், தடயங்கள் சேகரிக்க வேண்டி இருப்பதால் பள்ளியை சீரமைக்கும் பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பள்ளியின் தாளாளர் ரவியின் மகன் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் … Read more

அத்திக்கடவு – அவினாசி திட்டப் பணிகள் தாமதம்: பாஜக விவசாய அணி ‘மவுன’ போராட்டம் அறிவிப்பு

கோவை: ஈரோடு வருகை தரும் முதல்வர் அத்திக்கடவு – அவினாசி திட்டப் பணிகளில் நிறைவேறாத பகுதிகளை பார்வையிடாத பட்சத்தில் பாஜக மவுனப் போராட்டத்தில் ஈடுபடும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிறைவு பெறாத நசியனூரில் கொங்கு மண்டலத்தின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டத்தின் நீராதாரமாக விளங்கும் மிக முக்கியத் திட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டம் விவசாயிகளின் 60 ஆண்டு கால போராட்டத்திற்குப் … Read more

கலைஞர் நகர்புற வளர்ச்சி திட்டத்தில் ரூ.1.36 கோடியில் நவீன எரியூட்டும் தகன மேடை சுந்தர் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில், கலைஞர் நகர்புற வளர்ச்சி திட்டம் மூலம், நவீன எரியூட்டும் தகன மேடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை சுந்தர் எம்எல்ஏ நடத்தினார். மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற வளர்ச்சி திட்டம் மூலம்,  சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள மயானத்தில் ரூ.1.36 கோடி மதிப்பிலான நவீன எரியூட்டும் தகன மேடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில்  நடந்தது. பேரூராட்சி மன்ற தலைவர் நந்தினி … Read more

பிற மருத்துவ முறைகளை ஏன் குற்றம் சாட்டுகிறீர்கள்? பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

“பாபா ராம்தேவ் தனது மருத்துவ முறையைப் பற்றிய மகத்துவத்தை சொல்லலா. ஆனால், அனைத்து மருத்துவர்களையும், அலோபதி மற்றும் அனைத்து மருத்துவ முறையையும் ஏன் குற்றம் சாட்ட வேண்டும்… இறுதியில், நாங்கள் அவரை மதிக்கிறோம். அவர் யோகாவை பிரபலப்படுத்தினார். நாங்கள் அனைவரும் அவருடைய திட்டங்களுக்குச் சென்று யோகாவைப் பார்ப்போம். ஆனால், அவர் மற்ற மருத்துவ முறைகளை விமர்சிக்கக்கூடாது.” என்று தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறினார். உச்ச நீதிமன்ற தலைமை அமர்வுக்கு தலைமை வகித்த தலைமை நீதிபதி என்.வி. … Read more

#BREAKING : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 30ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்.!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட்-30ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.  சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட்-30ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், புதிய தொழிற்கொள்கை, பரந்தூர் புதிய விமான நிலையம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Source link

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் 100 கிடா வெட்டி 8 ஆயிரம் பேருக்கு மொய் விருந்து!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி எம்எல்ஏ நடத்திய மொய் விருந்தில் 100 கிடா வெட்டி 8 ஆயிரம் பேருக்கு விருந்து வைக்கப்பட்டது. சைவ பிரியர்களுக்கு சாம்பார், பாயாசம், வடையுடன் உணவு பரிமாறப்பட்டது. மொய் விருந்தில் பங்கேற்றவர்கள், அவரவர் வசதிக்கேற்ப, மொய் செய்தனர். பணத்தை எந்திரம் மூலம் எண்ணி அண்டாவில் அடுக்கி வைத்தனர். பணம் வசூலிக்கப்பட்ட 15 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர்.   Source link

அம்ரூத் திட்டத்தில் தமிழகத்தில் 12 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க அனுமதி

சென்னை: அம்ரூத் திட்டத்தில் தமிழகத்தில் 12 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, நகர்புறங்களில் குடிநீர் மற்றும் கழிவு நீர் தொடர்பான உட்டகட்டமைப்பு வசதிகளை மேம்டுப்பத்த மத்திய அரசு புதுப்பிப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்கான அடல் திட்டத்தின் மூலம் (அம்ருத்) நிதி உதவி வழங்கி வருகிறது. குடிநீர் குழாய் அமைத்தல், பாதாள சாக்கடை அமைத்தல், கழிவு நீர் சுத்தகரிப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய திட்டங்களுக்கு இந்த அம்ரூத் திட்டத்தில் முக்கியத்துவம் அளித்து நிதி உதவி … Read more

வாலாஜாபாத் பேரூராட்சியில் மழைக்காலத்துக்கு முன்பே கால்வாய்களை தூர்வாரப்படும் கூட்டத்தில் தீர்மானம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத்தில் மழைக்காலத்துக்கு முன்பே கால்வாய்களை தூர்வாரப்படும் என பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வாலாஜாபாத் பேரூராட்சியின் மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் இல்லா மல்லி தலைமை தாங்கினார், துணை தலைவர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவது, பேரூராட்சியின் வரவு, செலவு குறித்த அறிக்கைகள் வாசிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் என்னென்ன பணிகள் செய்வது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பணிகள் … Read more