`கலப்பு திருமணம் செய்ததற்காக ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதா?’ – நீதிமன்றத்தில் கிடைத்த நீதி!

புதுக்கோட்டை, பொன்னமராவதி நல்லூர் கிராமத்தில் கலப்புத் திருமணம் செய்த 25 குடும்பங்களிடமிருந்து தலைக்கட்டு வரி வசூல் செய்யவும், திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்க கோரியும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த வேலு என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது கிராமத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் குறிப்பிட்ட சமூகத்தை (பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் ஒரு பிரிவு) சேர்ந்தவர்கள். நல்லூர் கிராமத்தின் தலைவர்களாக (அதே சமூகத்தை சேர்ந்த) பிச்சன், சொக்கலிங்கம், பெருமாள் ஆகியோர் உள்ளனர். நான் மாற்று (பிற்படுத்தப்பட்ட) … Read more

‘திருக்குறள் மொழிபெயர்ப்பில் பக்தி கண்ணோட்டம் நீக்கப்பட்டுள்ளது’ – ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

டெல்லித் தமிழ்க் கல்விக்கழக மேனிலைப்பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் திருவுருவச் சிலையை திறந்து வைத்துப் பேசிய, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ஜி.யு. போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பில் பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டுள்ளது என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள தமிழ் கல்விக்கழகம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தரை அடி உயரமும், ஆயிரத்து 500 கிலோ எடையும் கொண்ட இந்த திருவள்ளுவர் சிலையை, வி.ஜி.பி. உலக தமிழ் சங்கத்தின் தலைவர் … Read more

கத்தியால் குத்தப்பட்ட ஆர்.பி.எப் பெண் காவலர் ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடிய சிசிடிவி காட்சி.!

சென்னையில்,கத்தியால் குத்தப்பட்ட ஆர்.பி.எப் பெண் காவலர் ஓடும் மின்சார ரயிலில் இருந்து குதித்து தப்பி சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. செவ்வாய் இரவு கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு சென்ற மின்சார ரயிலில் ஆசிர்வா என்ற 29 வயது ஆர்.பி.எப் பெண் காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மகளிருக்கான பெட்டியில் ஏறிய 40 வயது மதிக்கத்தக்க போதை ஆசாமியிடம் இது மகளிருக்கான பெட்டி என ஆசிர்வா கூறியதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அந்த நபர் ஆசிர்வா-வை … Read more

கொடைக்கானல் ஏரி மேம்பாட்டு பணிகளுக்கு தடையில்லை: உயர் நீதிமன்றம்

மதுரை: கொடைக்கானல் ஏரிப் பகுதியில் கட்டிடங்கள் கட்டுவதற்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கொடைக்கானலைச் சேர்ந்த ஆறுமுகவேலன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ”தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமாக கொடைக்கானல் உள்ளது. கொடைக்கானல் ஏரிப் பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் ஏரியை சுற்றி 200 மீட்டருக்குள் எவ்வித கட்டிடங்களும் கட்டக் கூடாது. இப்பகுதியில் ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தக்கூடாது என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதிமுறையை மீறி கொடைக்கானல் ஏரியைச் … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு!

ஜூலை 11 அதிமுக பொதுக்குழு தொடர்பான தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுகவில் ஜூன் 23ம் தேதி இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். அதிமுக பொதுக்குழு … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடு; அமைச்சர்கள் பதிலளிக்க உத்தரவு

கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து 296 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தரமற்ற பொருட்கள் விநோயோகம் செய்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, திருவள்ளூரை சேர்ந்த ஜெயக்கோபி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  அந்த மனுவில், அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் இருந்த வெல்லம், … Read more

ஓணம் பண்டிகை கொண்டாட்டம் எதிரொலி: தோவாளையில் பூக்கள் ஆர்டர் குவிகிறது

ஆரல்வாய்மொழி: கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்பு பெற்றதாகும். கேரளாவை ஒட்டிய குமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கல்லூரிகள், அரசு, தனியார் அலுவலங்கள் என்று ஓணம் பண்டிகை களைகட்டும். இந்தாண்டு ஓணம் பண்டிகையானது வரும் 31ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை நடைபெறுகிறது. ஓணத்தில் மிகவும் சிறப்பு பெற்றது அத்தப்பூ கோலம். இதற்கு பூக்கள் தான் பிரதானம். இதற்கான மலர்கள் குமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை பூ மார்க்கெட்டில் இருந்து தான் கேரளாவுக்கு முழுவதுமாக … Read more

அதிமுக தலைமையகத்தில் கலவரம் செய்தது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பினர் மீது 7 பிரிவுகளில் வழக்கு

அதிமுக தலைமை அலுவலக கலவரச் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் அளித்த புகாரின் அடிப்படையில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பல அ.தி.மு.க-வினர் மீது ராயப்பேட்டை போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் கடந்த மாதம் 11 ஆம் தேதி வானகரத்திலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதே நேரத்தில் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதன் காரணமாக அங்கு … Read more

களத்தில் எதிரிகள்… வெளியில் நண்பர்கள்… வைரலாகும் கோலி – பாபர் அசாம் வீடியோ!

 Virat Kohli – Babar Azam Tamil News: ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் காண்கிறது. இதற்கான இந்திய அணி தூபாயில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்தியா அணி முதல் போட்டியில் … Read more

ஏமாற்றமே மிச்சம் : பாதுகாக்கத் தவறிவிட்ட ஒப்பந்தம் –  அதிர்ச்சியில் மருத்துவர் இராமதாஸ்.!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம், அவர்களின் நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சியிருக்கிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் குறைந்தபட்ச உரிமைகளைக் கூட பாதுகாக்கத் தவறிவிட்ட இந்த ஊதிய ஒப்பந்தம், தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுகள் … Read more