திருப்போரூர் ஓஎம்ஆர் சாலையில் அதிவேக மணல் லாரிகளால் பள்ளி மாணவர்கள் அச்சம்

திருப்போரூர்: திருப்போரூர் பகுதியில்  அதிவேகத்தில் செல்லும் மணல் லாரிகளால் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். திருப்போரூரில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் சிறுதாவூர் மற்றும் மானாம்பதி ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிகளில் இருந்து லாரிகள் மூலம் மண் எடுத்து செல்லப்படுகிறது. இவ்வாறு எடுத்துச்செல்லப்படும் மண் திருப்போரூர் புறவழிச்சாலை பணிகளுக்கும், அரசின் பல்வேறு திட்டப்பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. மண் எடுத்து செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து அதற்காக ஒவ்வொரு லாரிக்கும் எவ்வளவு கொள்ளளவு மண் எடுத்துச்செல்லவேண்டும், … Read more

தேனி: பயனாளிகளுக்கு வழங்கப்படும் முன்பே சேதமடையத் துவங்கிய அரசு கட்டிய புது வீடுகள்

சேதமடைந்த மழை நீர் வடிகால் வாய்க்கால் காரணமாக புதிதாக கட்டப்பட்ட வீடுகள் பழங்குடியின மக்களுக்கு வழங்குவதற்கு முன்பே சேதமடைய துவங்கிய அவலம் தேனி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணைக்கு மேல் உள்ள ராசிமலை பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளில் பழங்குடி இன மலைவாழ் மக்கள் வசித்து வந்தனர். பழங்குடியின மக்கள் வாழ்ந்து வரும் வீடுகளின் நிலை குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தொடர்ந்து செய்தி வெளியிட்டதன் அடிப்படையில் கடந்த … Read more

36 மணி நேரத்தில் 15 கொலைகள்; எங்கே போகிறது தமிழகம்? இ.பி.எஸ் ஆவேசம்

36 மணி நேரத்தில் 15 படுகொலைகள் எங்கே போகிறது தமிழகம்? என்று முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்த நிலையில், திமுக 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை கைப்பற்றியது. ஆட்சி அமைத்த தொடக்கத்தில் கொரோனா தொற்று பாதிப்பை திறம்பட கையண்டதாக திமுகவுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர். அதே சமயம் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு … Read more

3-ம் ஆண்டு மாணவரை அரிவாளால் வெட்டிய முதலாமாண்டு மாணவர்.!

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில் முன்விரோதம் காரணமாக மாணவிகள் முன்பு தன்னை தாக்கிய 3-ம் ஆண்டு மாணவரை அரிவாளால் வெட்டிய முதலாமாண்டு மாணவரை போலீசார் கைது செய்தனர். திருமங்கலம் குப்பலநத்தத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் அதே கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த 17 வயது மாணவர் ஒருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும், இரு தினங்களுக்கு முன்பு மாணவிகள் முன்பு முதலாமாண்டு மாணவரை … Read more

தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிக்கவும், மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 22 திங்கள்கிழமை நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். … Read more

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்: இழப்பீடு வழங்கக் கோரிய மனு தள்ளுபடி!

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி ஆட்கொணர்வு மனுவாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவித்து, அது தொடர்பான மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து பள்ளியில் நடந்த கலவரம், தீ வைப்பு சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதில் அப்பாவிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அவர்களை அடையாளம் காணக் … Read more

நளினிக்கு 8வது முறையாக பரோல் நீட்டிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நளினி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் தனி சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது தாயார் பத்மாவதி உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கண்காணித்துக் கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார்.  இதனை ஏற்று நளினிக்கு கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் ஒரு மாத காலம் பரோல் வாங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. பரோலில் வெளியே … Read more

கிரஷர்களால் சாலைகளில் புழுதி பறப்பதால் விபத்துகள் அதிகரிப்பு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே கல்குவாரி மற்றும் கிரஷர்களின் தொடர் இயக்கத்தால், அங்கு சாலைகளில் மண் புழுதி பறந்து வருகிறது. இதனால் அங்கு விபத்துகள் அதிகரித்து வருகின்றன. உத்திரமேரூர் அருகே மதூர் மலைப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அரசு அனுமதியுடன் தனியார் கல்குவாரி மற்றும் கிரஷர்கள் இயங்கியது. இதை தொடர்ந்து, சுற்று வட்டார பகுதிகளான குண்ணவாக்கம், சித்தாலப்பாக்கம், சிறுமயிலுார், ஆனம்பாக்கம், சிறுதாமூர், அருங்குன்றம், பட்டா, பழவேரி, பினாயூர், பொற்பந்தல், பேரணக்காவூர் உள்பட பல்வேறு கிராமங்களில் கல்குவாரிகள் மற்றும் … Read more

"கொலைக்களமாக மாறிவரும் தமிழகம்; இதுதான் சட்டம் ஒழுங்கை கவனிக்கும் லட்சணமா?"- ஈபிஎஸ்

கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் விற்பனை போன்ற சமுதாய சீர்கேடுகளைத் தவிர்த்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என, தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் கொலைக்களமாக மாறி வருவதாகவும், இதனால் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கை தாமே நேரடியாக கவனித்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் கூறியதை எடப்பாடி பழனிசாமி … Read more

“மம்பட்டியை எடுத்து வாங்க கவுன்சிலர்னு போன் போட்டு திட்டுறாங்க” – மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில் அதிரவைத்த சொக்காயி

மதுரை; “வீட்டு வரி விதிப்பில் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு தில்லு முல்லு செய்துள்ளனர். அதை விசாரிக்க வேண்டும்” என்று அதிமுக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, கவுன்சிலர் சொக்காயின் யாதார்த்த பேச்சும், ஆதங்கமும் மாநகராட்சி மன்ற அரங்கை சில நிமிடங்கள் அதிர வைத்தது. மதுரை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய மேயர் இந்திராணி, “கவுன்சிலர்கள் … Read more