தாய் கண்டித்ததால் 12ஆம் வகுப்பு மாணவர் விஷம் குடித்து தற்கொலை

அரியலூர் மாவட்டத்தில் தாய் கண்டித்ததால் 12ஆம் வகுப்பு மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி நடுத்தெருவை சேர்ந்தவர் சகுந்தலா. இவரது மகன் புதியரசன்(17) விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் புதியரசன் கடந்த சில நாட்களாக சரியாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனை தாயார் கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த புதியரசன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி … Read more

அமைச்சர் கார் மீது காலணி வீசிய பெண்ணுக்கு ஜாமீன் மறுப்பு; போலீஸ் காவல் மனுவும் தள்ளுபடி 

மதுரை: தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய பெண்ணின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசி தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில் பாஜக மகளிரணியைச் சேர்ந்த சரண்யா, தனலெட்சுமி, தெய்வானை ஆகியோரை அவனியாபுரம் போலீஸார் கைது … Read more

16 அடி பாய்ந்த அன்புமணி ராமதாஸ்; திமுக, பாஜக செம ஷாக்!

சென்னையின் 2வது சர்வதேச விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து விளை நிலங்களை கையகப்படுத்த கூடாது. பூர்வ குடிகளான தங்களது வீடுகள், வீட்டு மனைகள் பாதிப்பு அடையாத வகையில் விமான நிலையம் கொண்டு வரப்பட வேண்டும் என பரந்தூர் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதே சமயம், எப்படியும் தங்கள் வசிப்பிடங்கள் மற்றும் விளைநிலங்களுக்கு … Read more

பெரியார் சிலை சர்ச்சை பேச்சு வழக்கு; கனல் கண்ணனின் ஜாமின் மனு தள்ளுபடி

சென்னையை அடுத்த மதுரவாயலில் கடந்த 1ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் பங்கேற்றார். அதில், ‘ஸ்ரீரங்கம் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். மத மோதலை துாண்டும் விதமாக பேசிய கனல் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை மாநகர காவல் ஆணையர்  அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலர் குமரன் புகார் … Read more

விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை விரட்ட கோரிக்கை

திண்டுக்கல்: ஆயக்குடி பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை விரட்ட கோரி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மாவட்ட வன அலுவலரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம் கிழக்கு ஆயக்குடி கிராமப்பகுதியில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் கெய்யா, மா, தென்னை, வாழை. எலுமிச்சை மற்றும் மக்காச்சோளம் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறோம். சில தினங்களாக சுமார் 5க்கும் மேற்பட்ட காட்டு … Read more

தூத்துக்குடி – திருநெல்வேலி ரயில் நாரைக்கிணறில் நின்று செல்லும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

பயணிகளின் வசதிக்காக தூத்துக்குடி – திருநெல்வேலி ரயில் நாரைக்கிணறு ரயில் நிறுத்தத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பிறகு மதுரை கோட்டத்தில் பல்வேறு ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்லும் வசதி அளிக்கப்படாமல் இருந்துவந்த நிலையில், படிப்படியாக பயணிகளின் வசதிக்காக பல்வேறு ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி – திருநெல்வேலி – தூத்துக்குடி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களுக்கு வாஞ்சி, மணியாச்சி … Read more

சாத்தான்குளம் கொலை வழக்கு எப்போது முடியும்? – விசாரணை நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை முடிக்க எவ்வளவு காலம் ஆகும் என விசாரணை நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2 ஆண்டுக்கு முன்பு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் உயிரிழந்தனர். தந்தை, மகனை காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்து, அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு … Read more

ஆரியச் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்…! – சீமான் சொல்வது என்ன…?

ஆகமத்தின் பெயரால் அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராவதற்கு தடை. தமிழக அரசு தனிச்சட்டமியற்றி ஆரியச் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் எனநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சீமான் “அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராவதற்கெதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், தமிழக அரசின் விதிகள் செல்லுமெனக் கூறியுள்ள உயர் நீதிமன்றம், ஆகம விதிகளை அடிப்படையாகக் கொண்டே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டுமென்றும், ஆகம விதிகள் பின்பற்றப்படும் கோயில்களை கண்டறிய ஐவர் குழு அமைக்கப்பட வேண்டுமென உத்தரவிட்டிருப்பது தேவையற்ற குழப்பத்தை விளைவித்திருக்கிறது. … Read more

முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட விவகாரம்; ஏபிவிபி தொடர்ந்த வழக்கில் உத்தரவு

தஞ்சை மாவட்டத்தில் மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், மேலும் மரணங்கள் நிகழக் கூடாது என்பதை வலியுறுத்தியும், தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக ஜாமீனில் வெளிவந்ததை கண்டித்தும் ஏபிவிபி அமைப்பை சேர்ந்த இளைஞர்கள், கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தின் அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுக்க முயன்ற காவல்துறையினரை தாக்கியும், உடைகளை கிழித்தும், காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தியதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ்வரி … Read more

களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் அட்டகாசம்: வாழைகள் நாசம்

களக்காடு: களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் அட்டகாசம் செய்ததில் வாழைகள் நாசமானது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலவடகரை பம்பன்குளம் பத்துக்காட்டில் விவசாயிகள் வாழை, நெல் பயிர் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் இரவு நேரங்களில் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவில் வனப்பகுதியில் இருந்து வெளிவந்த காட்டு பன்றிகள் கூட்டம் … Read more