அமைச்சர்கள் டிரான்ஸ்ஃபர் லிஸ்ட்டில் பிடிஆர் பெயர்?- முதல்வரின் முடிவு என்ன!

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முதல் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய விவகாரம் வரை, தான் வெளிப்படுத்தும் தன்னிச்சையான கருத்துகளால் அவ்வபோது சர்ச்சையில் சிக்கி வருகிறார் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். டெல்லி ஃப்ரஷர் : அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு, பெட்ரோல், டீசல் மீதான வரி வருவாய் போன்ற முக்கிய விவகாரங்களில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, பிடிஆர் அவ்வபோது பதிலடி கொடுப்பதை அவர் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மத்திய நிதியமைச்சகமே ரசிக்கவில்லையாம். எனவே பிடிஆரை மாநில … Read more

'பெரியார் கருப்புச் சட்டை அணிந்து தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார்' – ப.சிதம்பரம்

சென்னை: பெரியார் கருப்புச் சட்டை அணிந்தே தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கருப்புச் சட்டை தொடர்பான பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதில் அளித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதரம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,” கருப்புச் சட்டை அணிந்தவர்கள் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையைப் பெற மாட்டார்கள் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார் தந்தை ஈ வெ ரா பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார். … Read more

ஓபிஎஸ் தொடர்ந்த அதிமுக பொதுக்குழு வழக்கு: தீர்ப்பை தள்ளி வைத்த நீதிமன்றம்!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், பொதுக்குழு உறுப்பினர்களுடைய கோரிக்கையை ஏற்று ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டப்படும் என ஜூன் 23 பொதுக்குழுவிலேயே அறிவிக்கப்பட்டதாகவும், அந்த அறிவிப்பு அப்போதே நேரலையாக அனைத்து தொலைக்காட்சிகளிலும், செய்தியாக மறுநாள் அனைத்து பத்திரிகைகளிலும் வெளியானதால், அதை நோட்டீசாக கருத வேண்டும் என்றும் விளக்கம் அளித்தார். … Read more

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தால் எண்ணெய் பொருட்கள் விலை கட்டுப்பாட்டுக்கு வரும்: கே.எஸ்.அழகிரி

தருமபுரி: குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்தால், எண்ணெய் பொருட்களின் விலை கட்டுப்பாட்டுக்கு வரும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இந்திய சுதந்திர பவள விழா ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி தருமபுரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் தருமபுரி மாவட்டம் முழுக்க பாதயாத்திரை நிகழ்ச்சி நடந்து வருகிறது. இன்று (வியாழன்) தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் நடந்த பாதயாத்திரை நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கலந்து கொண்டார். முன்னதாக, பாப்பாரப்பட்டியில் … Read more

நீலகிரி, கோவையை விடாத கனமழை: இன்றும் சுழன்றடிக்கும்!

சென்னையில் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று 11.08.2022: வடதமிழக மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 12.08.2022, 13.08.2022: … Read more

தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்களில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகளில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நடந்தது. அண்மையில், போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 11) தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து ஏறத்தாழ 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் போதை ஒழிப்பு உறுதிமொழி … Read more

தெற்கை புறக்கணிக்கிறாரா எடப்பாடி? கொதிக்கும் தென் மண்டல அதிமுக!

அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதி மாயத் தேவர் நேற்று முன் தினம் காலமானார் அவருக்கு வயது 88. எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய சமயம் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் வந்தது. அதில் மாயத்தேவர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்ஜிஆரின் சின்னம் என பாமர மக்கள் மனதில் பதிந்த இரட்டை இலை சின்னத்துக்காக இன்று அதிமுகவில் கடுமையான மல்லுகட்டு நடைபெறுகிறது. அந்த சின்னத்தில் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மாயத் தேவர். … Read more

பள்ளி மாணவி மரண விவகாரம்: டிசி பெற்று சொந்த ஊருக்குச் சென்ற 23 மாணவிகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி மரண விவகாரத்தில், விடுதியில் தங்கியிருந்த 23 மாணவிகள் மாற்றுச்சான்றிதழ் பெற்று சொந்த ஊர் திரும்பினர். கடந்த மாதம் 25-ஆம் தேதி கீழச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பாக, சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கான முதற்கட்ட விசாரணை நிறைவுற்ற நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளி நேற்று திறக்கப்பட்டது. இந்த நிலையில், விடுதியில் தங்கியிருந்த 23 மாணவிகள் தங்களது மாற்றுச்சான்றிதழ்களை பெற்று சொந்த ஊருக்கு சென்றனர். பெற்றோர் … Read more

#BIG NEWS:-பயனாளியின் வங்கிக் கணக்கில் மானியம்.. மின்வாரிய அதிகாரிகள் தகவல்..!

வீடுகளில் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க விரும்புவோருக்கு மத்திய அரசு வழங்கும் மானியம் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். சுற்றுச்சூழலை பாதிக்காத சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்காக, மத்திய அரசு மானியம் வழங்குகிறது. குறிப்பாக, வீடுகளில் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க மத்திய அரசு 40 சதவீதம் மானியம் வழங்குகிறது. சூரியசக்தி மின் … Read more

இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான அரசாணை: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் 

சென்னை: இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ”தமிழகத்தில் பொங்கல் திருநாளில் மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான வேட்டி, சேலைகளை விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்வதற்கான அரசாணை இன்னும் வழங்கப்படவில்லை. அதனால் விசைத்தறி நெசவாளர்கள் போதிய வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். பொங்கலுக்கு தலா 1.80 கோடி வேட்டி, சேலைகள் வழங்கப்பட வேண்டும். அவற்றில் தலா 30 லட்சம் … Read more