முறிவில் முடிந்த திருமணங்கள் – காதலியை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்

திருமணத்தை மீறிய உறவில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பெண்ணை கழுத்தறுத்து கொன்றுவிட்டு வாலிபர் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவெறும்பூரில் நடந்திருக்கிறது.  திருச்சி மாவட்டம், மேலகல்கண்டார் கோட்டை, பழைய அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரது மகன் வினோத்குமார் (36) தனியார் வங்கியில் கலெக்ஷன் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு முதல் திருமணம் ஆகி விவாகரத்தான நிலையில், இரண்டாவது திருமணம் செய்துகொண்டு அதுவும் தற்போது விவாகரத்து நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த … Read more

பிரபுதேவா வித்தியாசம் கைகொடுத்ததா? மைடியர் பூதம் விமர்சனம்

மஞ்சப்பை என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர் ராகவன் தற்போது குழந்தைகளை கவரும் வகையில் மை டியர் பூதம் என்ற படத்தை இயக்கியுள்ளார். பிரபுதேவா பூதமாக நடித்துள்ள இந்த படத்தில் நம்யா நபீசன், அஸ்வந்த், சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழில் சில வருடங்களுகளுக்கு பிறகு குழந்தைகளுக்காக தயாராகியுள்ள மைடியர் பூதம் குழந்தைகளை கவரும் அளவுக்கு உள்ளதா? பார்க்கலாம். ஒரு புற்றுக்குள் தியானம் செய்யும் முனிவரின் தவத்தை பிரபுதேவாவின் மகன் கலைத்துவிடுகிறான். இதனால் கோபப்படும் முனிவர் அந்த சிறுவனுக்கு … Read more

“சொற்களைக் கண்டு மக்கள் விரோத அரசுகள் அஞ்சுவது புதிதல்ல” – சு.வெங்கடேசன் 

சென்னை: “சொற்களைக் கண்டு மக்கள் விரோத அரசுகள் அஞ்சுவது புதிதல்ல” என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத சொற்கள் தொடர்பான பட்டியலை மக்களவைச் செயலாளர் வெளியிட்டுள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், “சொற்களைக் கண்டு மக்கள் விரோத அரசுகள் அஞ்சுவது ஒன்றும் புதிதல்ல” என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாடாளுமன்ற … Read more

44வது செஸ் ஒலிம்பியாட்: பிரதமரை நேரில் அழைக்க டெல்லி செல்லும் முதல்வர்?

செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடிக்கு நேரடியாக அழைப்பு விடுப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில்டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், வருகிற 28-ம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்க உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு நேரு உள்விளையாட்டு அரங்கில் 28-ம் தேதி துவக்கவிழா பிரம்மாண்டமாக … Read more

சுகர் பேஷன்ட்ஸ் ப்ளீஸ் நோட்… பப்பாளி இலை ஜூஸ் ட்ரை பண்றீங்களா?

பப்பாளி பழம் என்றாலே பல நன்மைகளை கொண்டது. பப்பாளி பழத்தில் வைட்டமின் சி, இ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை இருப்பதால் இது உடலுக்கு முகவும் நல்லது. இதுபோலவே பப்பாளி விதைகளில் ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. மேலும் பப்பாளி எண்ணெய் எடுக்க முடியும்.  இந்நிலையில் இதுபோலவே பப்பாளி இலையின் சாறு அதாவது பப்பாளி இலை ஜீஸ் உடலுக்கு மிகவும் நல்லது குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக நன்மை அளிக்கிறது. ஜீரணம் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்துவதோடு வயிறு உப்புவதை … Read more

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்க போகும் கனமழை- சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் … Read more

“பிளஸ் டூ தேர்வு முடிவுகளை இந்த மாதத்திற்குள் சிபிஎஸ்இ வெளியிட வேண்டும்”-அமைச்சர் வலியுறுத்தல்

மாணவர்கள் நலன் கருதி பிளஸ் டூ தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இந்த மாதத்திற்குள் வெளியிட வேண்டும் என தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிபிஎஸ்இ முடிவுகள் வெளியாகததால் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதிகளில் மாற்றம் கொண்டுவர வாய்ப்புள்ளது என்றார். Source link

நீட் மசோதா விவகாரம் | “மக்கள் மன்றத்துக்கே அவமானம்” – ஆளுநர் குறித்து அப்பாவு ஆவேசம்

சென்னை: “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை புறக்கணிப்பதால் ஏற்படுகிற அவமானம் சட்டமன்றத்திற்கு அல்ல, மக்கள் மன்றத்துக்குத்தான்” என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ஆவேசமாகக் கூறியுள்ளார். தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேரவையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளரா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், “ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிறைய மசோதாக்கள் ஒப்புதல் வழங்காமல் உள்ளது. இரண்டாவது முறையாக அனுப்பிவைக்கப்பட்ட நீட் … Read more

IND vs ENG 2nd ODI: கோலிக்கு ஓய்வு… தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!

IND VS ENG match at The Lord’s cricket stadium live news update in tamil: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், நேற்று முன்தினம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதனால், தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், … Read more

கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், ஜூலை 15ஆம் தேதியன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் … Read more