பெரியகுளம்: சக்கர நாற்காலி வழங்காததால் தவழ்ந்துசென்று வாக்களித்த மாற்றுத்திறனாளிப் பெண்

பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு சக்கர நாற்காலி வழங்காததால் தவழ்ந்து சென்று வாக்களித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்காக தனியாக சக்கர நாற்காலி ஏற்பாடு செய்து வைத்திருக்க வேண்டும் என்பது தேர்தல் விதிமுறை. ஆனால், பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட வடகரை பகுதியில் உள்ள 18வது வார்டு சுப்பிரமணிய சாவடியை தெருவில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வேல்மணி என்ற பெண் மாற்றுத்திறனாளி வந்தபோது சக்கர … Read more

இஸ்லாமியர்கள் பற்றி தவறாக பேசியதாக நிரூபித்தால் மன்னிப்பு கேட்க தயார்: துரைமுருகன்

Minister Duraimurugan Press Meet Update : தான் இஸ்லாமியர்கள் பற்றி தவறாக பேசவில்லை என்றும், அப்படி தவறாக பேசியது நிரூபிக்கப்பட்டால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயார் என்று திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது பகுதிகளில் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் வேலூர் மாநகராட்சி காட்பாடி காந்தி நகர் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் || நிறைவடைந்தது வாக்குபதிவு.. ஜனநாயக கடமையை நிறைவேற்றாத பிரபலங்கள்..!

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முக்கிய திரைபிரபலங்கள் வாக்களிக்கவில்லை. தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாமக, பாஜக, உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், சுயட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இன்று காலை முதலே வாக்காளர்கள் உற்சாகமாக வந்து தங்கள் ஜனநாயக கடைமையை ஆற்றினர். அரசியல் கட்சியினர், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர். இந்த தேர்தலில், கமலஹாசன், விஜய், ஜெயம் ரவி, விமல் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்த நிலையில், ரஜினி, … Read more

சிங்கம்புணரியில் கவச உடை அணிந்து வந்து கொரோனா நோயாளி வாக்குப்பதிவு.. <!– சிங்கம்புணரியில் கவச உடை அணிந்து வந்து கொரோனா நோயாளி வாக்… –>

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கொரோனா நோயாளி ஒருவர் கவச உடை அணிந்து வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார். நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலான கடைசி ஒரு மணி நேரம் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஒதுக்கப்பட்டது. சிங்கம்புணரி 2வது வார்டைச் சேர்ந்த 32 வயது இளைஞர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். உடல் முழுவதும் மூடிய கவச உடையுடன் வாக்குச்சாவடி சென்ற அவருக்கு முகக்கவசம், கையுறை … Read more

பிப்ரவரி 19: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,43,980 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 … Read more

திருமங்கலம் நகராட்சியின் 17வது வார்டில் மறு வாக்குப்பதிவு – தேர்தல் அலுவலர் பரிந்துரை

மதுரை திருமங்கலம் நகராட்சியின் 17-வது வார்டில் மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் அலுவலர் பரிந்துரைத்துள்ளார். 27 வார்டுகளை உள்ளடக்கிய திருமங்கலம் நகராட்சியில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது. 17 வது வார்டுக்குட்பட்ட பெரும்பாலான வாக்குச்சாவடி மையங்களில் கள்ள வாக்கு பதிவாகி உள்ளதாக வேட்பாளர்கள் புகார் எழுப்பப்பட்டது. புகாரை ஆய்வு செய்த தேர்தல் நடத்தும் அலுவலர் டெரன்ஸ் லியோன் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டுள்ளார். மறு வாக்குப்பதிவிற்கான தேதி குறிப்பிடப்படாத நிலையில் மாநில தேர்தல் ஆணையம் மறு … Read more

TN Urban Local Body Elections Live: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடக்கம்

Go to Live Updates Election Updates: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வமுடன் முன்வந்து வாக்களித்து வருகின்றனர். தமிழகம் முழுவதிலும் 31,150 வாக்குச் சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 12,607 பதவியிடங்களுக்கு நடைபெறும் இந்தத் தேர்தலில் சுமார் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று அமைதியான முறையில் வாக்களிப்பதை உறுதி … Read more

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி! தமிழக அணி ரன்குவிப்பு.!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் தமிழக அணி அபார ஆட்டத்தை வெளிபடுத்தி 494 ரன்கள் குவித்துள்ளது. 38 அணிகள் பங்கேற்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. தமிழக அணி தனது முதல் போட்டியில் டெல்லி அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. டெல்லி அணி முதல் இன்னிங்ஸில் 452 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் … Read more