திமுக அரசை கண்டித்து தர்ணா… கோவையில் அதிமுக எம்எல்ஏக்கள் கைது

Tamilnadu ADMK Protest In Covai District : தமிழகத்தில நகர்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோவையில் முன்னாள் அமைச்சர் என்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் நாளை (பிப்ரவரி 19) ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சி தேர்தக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுககான கடந்த ஒரு மாத காலமாக அரசியலட கட்சி தலைவர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என பலரும் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் … Read more

அதிமுக அடித்த அடியில்., சற்றுமுன் தேர்தல் ஆணையம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகராட்சிக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரி எஸ் நாகராஜனை நியமித்து, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை மவ்வட்டதை கலவர பூமியாக்க திமுக திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த தேர்தலை நேர்மையாக நடத்த துணை இராணுவத்தை கொண்டு வரவேண்டும் என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில், அதிமுக எம்எல்ஏக்கள், இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், கோவை … Read more

வார்டு வரையறை குழப்பத்தால் தங்களது பகுதி வேட்பாளர் யார் என்றே தெரியாமல் குழம்பிய மக்கள் <!– வார்டு வரையறை குழப்பத்தால் தங்களது பகுதி வேட்பாளர் யார் எ… –>

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வார்டு வரையறை குழப்பத்தால் தங்களது பகுதி வேட்பாளர் யார் என்றே தெரியாமல் போனதாகக் கூறி குறிப்பிட்ட பகுதி மக்கள் தேர்தல் அலுவலகத்தில் முறையிட்டனர். 15 வார்டுகளைக் கொண்ட பட்டணம் பேரூராட்சி 6வது வார்டில் திமுக, அதிமுக சார்பில் 2 பேர் மனுத்தாக்கல் செய்த நிலையில், அதிமுக வேட்பாளர் மணியரசி வாபஸ் பெற்றதால் திமுகவைச் சேர்ந்த பத்மா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த பேரூராட்சியில் 130 பேர் வசிக்கும் கே.வி.கே காலனி உள்ளது. … Read more

ரவுடிகள், குண்டர்களுக்கு ஆதரவாக கோவை போலீஸ்: இபிஎஸ் குற்றச்சாட்டு

சேலம்: “குண்டர்களையும, ரவுடிகளையும் வெளியேற்றுவதற்கு பதிலாக, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு ஆதரவாக கோவை மாநகர காவல்துறை ஈடுபட்டிருப்பது கண்டனத்துக்குரியது. கோவை மாநகராட்சியில் ஜனநாயக முறைப்படி மக்கள் வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும்“ என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியது: “எஸ்.பி.வேலுமணி தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள், குண்டர்களை வெளியேற்ற வேண்டும் என்று நேரடியாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது. … Read more

அதிகரிக்கும் ஆன்லைன் புத்தக வாசிப்பு – மாற்றம் கொண்டுவருமா சென்னை புத்தகக் காட்சி?

கடந்த ஐந்து வருடங்களாக ஆன்லைன் புத்தக விற்பனை அதிகரித்து வரும் நிலையில், குறைவான சலுகை விலையில், நிறைவான புத்தகங்கள் சென்னை புத்தக காட்சியில் இடம் பெற்றுள்ளது. தமிழ் புத்தகப் பதிப்பு மற்றும் விற்பனை துறையை இந்த புத்தக கண்காட்சி மீட்டுருவாக்கம் செய்யும் என ஆர்வலர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் 25 நகரங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்றாலும் புத்தகங்களின் தலைப்புகள், அரங்கங்களின் அமைப்புகள் போன்றவற்றில் சென்னை புத்தக கண்காட்சியே வாசகர்களுக்கு நல் விருந்தாக அமைகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா … Read more

பிளைட் பிடிக்கும் நேரத்தில் அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட நடிகை சமந்தா!

சமந்தா இப்போதெல்லாம் தவறாமல் செய்திகளில் இடம்பிடித்து விடுகிறார். முதலில், சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவிடமிருந்து’ பிரிந்த செய்தி, இணையத்தில் தீயாக பரவியது. பிறகு’ அல்லு அர்ஜுன் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘புஷ்பாவில்’ ஊ சொல்றியா மாமா பாடலுக்கு தனது அற்புதமான நடன அசைவுகளுக்காக சமந்தா வைரலானார். அந்த பாடலுக்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும்’ சமந்தாவின் நடன அசைவுகள் மற்றும் அவரது வசீகரம் அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டப்பட்டது. ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் ரீல்களை உருவாக்கி, தங்கள் சொந்த வெர்ஷனை … Read more

மகளைக் காணவில்லை.. பதைபதைத்து போலீஸிடம் சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்திச் சென்ற காரணத்தால் போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் வடமதுரை பகுதியில் பாண்டி என்பவர் கூலித் தொழில் செய்து வருகின்றார். அதே பகுதியில் வசித்து வரும் 11ஆம் வகுப்பு மாணவியை அந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார்.  அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார். அவருடன், குடும்பம் நடத்தி வந்த நிலையில் … Read more

பணிக்காலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை அடுத்து மூன்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீடுகளில் சோதனை <!– பணிக்காலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை அடு… –>

தருமபுரி அருகே ஓரிரு மாதங்களில் ஓய்வு பெறவுள்ள 3 வட்டார வளர்ச்சி அலுவலர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏமக்குட்டியூரில் மதலைமுத்து, அரூரில் ஆனந்தன், ஏ.பள்ளிப்பட்டியில் ஜெயராமன் என மூன்று வட்டார வளர்ச்சி அலுவலர்களின் வீடுகளில் காலை 8 மணி தொடங்கி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. பணிக்காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனைகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. 3 பேருமே வரும் மே மாதத்தில் ஓய்வு … Read more

கடலூர்: 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனை

விருத்தாசலம்: இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பிய தாய்க்கு இரண்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் முட்டம் பெரிய காலனியைச் சேர்ந்தவர் வினோத் – சசிகலா தம்பதியினர் கடந்த 2013-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வரோகா (4), விஜய ஸ்ரீ (3 மாதம்) ஆகிய குழந்தைகள் இருந்தனர். கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில், 2018-ம் ஆண்டு விஜய ஸ்ரீ பிறந்தது முதலே … Read more

பரிசுப்பொருளுக்கு அடகு வைத்துவிடாதீர்கள் – வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, பிப்ரவரி 17-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக, ‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்…  வாக்காளர்கள் எதன் அடிப்படையில் வாக்களிக்க வேண்டும்?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே. … Read more