ஊதாரிதனமாக ஊர்சுற்றிய கணவன்.. தட்டிகேட்ட மனைவியை கொலை செய்த கொடூரம்..!

ஊதாரி தனத்தை தட்டிகேட்ட மனைவி கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(50). இவருக்கு முத்துலட்சுமி(45) என்ற மனைவியும் மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்த அவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், அவர் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தில் முத்துலெட்சுமி சேமித்தும் சில இடங்களையும் வாங்கியுள்ளார். ஊருக்கு திரும்பி வந்த அவர் ஊதாரி தனமாக … Read more

டாக்டர் தம்பதியை கட்டிப்போட்டு கொள்ளை; நகை, பணத்தோடு காரையும் அபேஸ் செய்த கும்பல் <!– டாக்டர் தம்பதியை கட்டிப்போட்டு கொள்ளை; நகை, பணத்தோடு காரை… –>

ஒட்டன்சத்திரம் – தாராபுரம் சாலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் மருத்துவமனை வைத்து நடத்தி வருபவர் சக்திவேல். இவரது மனைவி ராணி. கணவன், மனைவி என இருவரும் மருத்துவர்கள் ஆவர். சக்திவேலுடன் அவரது தந்தை சென்னியப்பன், தாய் தேவநாயகம் ஆகியோரும் வசித்து வருகின்றனர். நேற்றிரவு மருத்துவமனையில் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சக்திவேல் – ராணி தம்பதி வழக்கம்போல், உறங்க சென்றனர். சக்திவேலின் தந்தை வாசலுக்கு முன் வளாகத்தில் கட்டிலில் படுத்துறங்கியுள்ளார். நள்ளிரவில், கையுறை, மாஸ்க் … Read more

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், ’உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில், … Read more

மணப்பாறை: பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதிய விபத்து – மூன்று பேர் பலி

மணப்பாறை அருகே சமயபுரத்திற்கு பாதையாத்திரை சென்ற பக்தர்கள் மீது தக்காளி லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பகுதியிலிருந்து சுமார் 3 ஆயிரம் பக்தர்கள் மாலையில் பாதையாத்திரையாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு, புறப்பட்டனர். இதில் பல்வேறு பகுதியிலிருந்து வந்த பக்தர்கள் ஒன்று சேர்ந்து நடைபயணம் மேற்கொண்டனர். அப்போது, திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை இடையப்பட்டியான்பட்டி அருகே சாலையோரம் நடந்து சென்ற பக்தர்களுக்கிடையே தக்காளி ஏற்றிச் சென்ற லாரி புகுந்தது. … Read more

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை.. ஜாமீனில் வெளியே வந்த சகாய மேரியை சால்வை போர்த்தி வரவேற்ற திமுக எம்.எல்.ஏ!

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஹாஸ்டல் வார்டன் சகாய மேரி ஜாமீனில் வெளியே வந்தபோது, அவரை தமிழகத்தில் ஆளும் திமுகவின் எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் நேரில் சென்று வரவேற்றார். தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில், கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 62 வயதான சகாய மேரிக்கு, தஞ்சை நீதிமன்றம் ஜாமீன் வழயங்கியதை அடுத்து, அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவருக்கு’ திருச்சி (கிழக்கு) திமுக எம்எல்ஏ இனிகோ … Read more

#சற்றுமுன் || வன்னியர் இடஒதுக்கீடு வழக்கு – அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தமிழக அரசு கோரிக்கை.!

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கிய தமிழகத்தின் பெருங்குடியான வன்னியர் இன மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் இன மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக, வன்னியர் இன மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கியது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 35க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இதன் காரணமாக வன்னியர் இட ஒதுக்கீடு … Read more

1 கி.மீ தூரத்திற்கு கேட்ட பலத்த சப்தம்.. பட்டாசு வெடித்ததில் தரைமட்டமான கட்டிடம் – ஒருவர் உயிரிழப்பு <!– 1 கி.மீ தூரத்திற்கு கேட்ட பலத்த சப்தம்.. பட்டாசு வெடித்தத… –>

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லிவீரன்பட்டியில் இரண்டு மாடிகள் கொண்ட வீட்டிலேயே பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், பட்டாசு திடீரென வெடித்து சிதறியதில், கட்டிடம் தரைமாட்டமாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா என தேடும் பணி நடைபெற்று வருகிறது. தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணி நடைபெறுகிறது.. அனுமதி பெற்று பட்டாசு தயாரிக்கும் பணி நடந்ததா? என விசாரணை நடைபெற்றுவருகிறது Source link

தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி 87%… எஞ்சியோர் கவனம்… – ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: ‘தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி 87 விழுக்காடாக உள்ளது. எஞ்சிய 13 விழுக்காடு மக்கள் தங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்பதை உணர வேண்டும்‘ என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ” கரோனா தொற்று கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனை முறைகளை படிப்படியாக மாற்றுவதற்காக , பொது சுகாதார இயக்குநர் மற்றும் வல்லுநர்களிடம் கலந்தாலோசித்து வருகிறோம். முதலில் நோய்த் … Read more

எஸ்பி.வேலுமணி மீதான வழக்கு: 2 நிறுவனங்களின் 110.80 கோடி வைப்பு நிதியை முடக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில் தொடர்புடைய இரண்டு நிறுவனங்களின் 110 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைப்பு நிதியை முடக்கி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களை வேண்டப்பட்டவர்களின் நிறுவனங்களுக்கு ஒதுக்கி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் எஸ்.பி. வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் மற்றும் நிறுவனங்கள் உள்பட 17 பேர் … Read more