நாஸ்ட்ராடாமஸின் பீதியூட்டும் கணிப்புகள்: மூன்றாம் உலகப்போர் மூளுமா..!!

உலகின் தலைசிறந்த தீர்க்கதரிசியாக கருதப்படும் நாஸ்ட்ராடாமஸ், ஜெர்மனியில் 1503, டிசம்பர் 14ம் தேதி பிறந்து, 1566 ஜூலை 6ம் தேதி இறந்தார். அவரது பல கணிப்புகள் உண்மையாகியுள்ளன. ஹிட்லரின் ஆட்சி, இரண்டாம் உலகப் போர், 9/11 தாக்குதல்கள் மற்றும் பிரெஞ்சுப் புரட்சி உட்பட அவரது கணிப்புகளில் 85 சதவீதம் உண்மையாகிவிட்டது. நாஸ்ட்ராடாமஸ் 500 ஆண்டுகளுக்கு முன்பே 2023ம் ஆண்டில் நடக்கப் போகும் நிகழ்வுகள் குறித்து என்ன கணித்திருக்கிறார் என்பதை அறிந்தால் பலரும் அதிர்ச்சியடைவார்கள்.  நாஸ்ட்ராடாமஸ் ஒவ்வொரு ஆண்டுற்கும் … Read more

செவ்வாய் கிரகத்தில் சூரிய ஒளிவட்ட புகைப்படம்! நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவரின் சாதனை

புதுடெல்லி: செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இதுவரை பார்த்திராத சூரிய ஒளிவட்டத்தை நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் படம் பிடித்துள்ளது. இந்த படத்தில், செவ்வாய் கிரகத்தின் புகைப்படத்தின் மேற்பரப்பில் சூரிய ஒளிவட்டத்தைக் காணலாம். மேல் நிலையில் இருக்கும் மேகங்களில் காணப்படும் பனி படிகங்கள் வழியாக வெள்ளை ஒளி செல்லும் போது, ஒளியின் சிதறல் காரணமாக தோன்றும் 22 டிகிரி வளையமான சூரிய ஒளிவட்டத்தை ​​சன் ஹாலோ என்று சொல்கிறோம். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர் செவ்வாய் … Read more

இங்கிலாந்து ராணியின் இதுவரை பார்த்திராத புகைப்படம் – அரச குடும்பம் வெளியிட்டது

லண்டன்: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குக்கு முன்னதாக, மக்கள் பார்வைக்கு இதுவரை வெளியிடப்படாத அவரது புகைப்படம் ஒன்றை அரச குடும்பம் வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் முதுமை காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் கடந்த 8-ம் தேதி காலமானார். பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு அவரது உடலுக்கு நேற்று இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. இதில் அரச குடும்பத்தினர், உலகத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் ராணியின் இறுதிச் சடங்குக்கு முன்னதாக, இதுவரை வெளியிடப்படாத அவரது புகைப்படம் … Read more

தமிழகம், காரைக்கால் மீனவர்கள் 12 பேர் விடுதலை| Dinamalar

கொழும்பு: எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழகம், காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை அரசு கைது செய்தது. இந்நிலையில் இன்று(செப்.,20) 12 மீனவர்களை விடுதலை செய்ய, இலங்கை திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டது. கொழும்பு: எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழகம், காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை அரசு கைது செய்தது. இந்நிலையில் இன்று(செப்.,20) 12 மீனவர்களை விடுதலை செய்ய, ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு … Read more

ஹிஜாபை எரித்தும், கூந்தலை துண்டித்தும் எதிர்ப்பு – ஈரானில் பெண்களின் போராட்டம் தீவிரமடைகிறது

தெஹ்ரான்: ஈரானில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த நாட்டில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்பு பிரிவு போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாடு முழுவதும் பொது இடங்களில் சோதனை நடத்தி ஹிஜாப் அணியாத பெண்கள், முஸ்லிம் முறைப்படி ஆடை அணியாத பெண்களை கைது செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு ஒழுக்க நெறி பாடங்கள் கற்பிக்கப்படும். இந்நிலையில், ஈரானின் மேற்கில் … Read more

அமெரிக்காவில் கரோனா நீங்கிவிட்டது: ஜோ பைடன் அறிவிப்பு

வாஷிங்டன்: கரோனாவினால் இன்னமும் அமெரிக்காவில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கரோனா தொற்று நீங்கிவிட்டதாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்திருக்கிறார். இதுகுறித்து சிபிஎஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ஜோ பைடன் கூறும்போது, “ நீங்கள் கவனித்தால் யாரும் முகக்கவசம் அணிவதில்லை என்பது தெரியும். மாற்றம் நிகழ்கிறது என்று நம்புகிறேன்.அமெரிக்காவை பொறுத்தவரை கரோனா தொற்று நீங்கிவிட்டது. எனினும் சில பிரச்சினைகள் உள்ளன. ஆனால் நிலைமை சீராகி வருகிறது” என்றார். ஜோ பைடன் இவ்வாறு அறிவித்திருந்தாலும், கரோனாவினால் … Read more

நடுவானில் விமானத்தில் ரகளை | Dinamalar

கராச்சி: விமானத்தில் ஜன்னலை உதைத்தும் விமானியுடன் மோதலிலும் ஈடுபட்டு ரகளை செய்த பயணியை பாகிஸ்தான் விமான நிறுவனம் கருப்பு பட்டியலில் வைத்து உள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பெஷாவரிலிருந்து துபாய்க்கு அந்நாட்டு சர்வதேச விமான நிறுவனத்தின் பி.கே.-283 ரக விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த விமானம் நடுவானில் சென்ற போது திடீரென்று பயணி ஒருவர் எழுந்து விமான ஊழியர்களிடம் மோதலில் ஈடுபட்டார்.பின்னர் இருக்கைகளை கைகளால் குத்தியும் விமான ஜன்னலை சேதப்படுத்தும் நோக்கில் கால்களால் கடுமையாக உதைத்தும் உள்ளார். இருக்கைகளின் … Read more

ரிக்டர் அளவில் 7.6ஆக பதிவு| Dinamalar

மெக்சிகோ: வட அமெரிக்கா நாடான மெக்சிகோவில் இன்று(செப்.,20) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6ஆக பதிவானது. மைக்கோகன் மாகாணத்தின் எல்லைக்கு அருகில் 9.4 மைல் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அலறிஅடித்த்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். மெக்சிகோ: வட அமெரிக்கா நாடான மெக்சிகோவில் இன்று(செப்.,20) சக்தி … Read more

நைஜீரியாவில் லாரியும், பேருந்துகளும் அடுத்தடுத்து மோதிய விபத்தில் சிக்கி 19 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் லாரியும், பேருந்துகளும் அடுத்தடுத்து மோதிய விபத்தில் சிக்கி 19 பேர் பலியாகினர். தலைநகர் அபுஜாவில் உள்ள நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்த முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர்திசையில் வந்த லாரியின் மீது பலமாக மோதியது. அடுத்த சில நொடிகளில் பின்னால் வந்த மற்றொரு பேருந்தும் லாரி மீது மோதி, 3 வாகனங்களும் தீயில் கருகி உருக்குலைந்து போயின. இந்த … Read more

கழிவறை கோப்பைக்குள் பதுங்கியிருந்த பாம்பு – அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

வாஷிங்டன், அமெரிக்காவின் அலபாமா மாகாணம் யூபாலா நகரில் உள்ள ஒரு வீட்டுக்குள் அழையா விருந்தாளியாக பாம்பு ஒன்று நுழைந்தது. இதை கண்டு பதறிப்போன குடும்பத்தினர் பாம்பை அடித்து விரட்ட முயன்றனர். ஆனால் அந்த பாம்பு அவர்களிடம் சிக்காமல் மாயமாய் மறைந்தது. இதையடுத்து அவர்கள் பாம்பு எங்கே போனது என வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடினர். அப்போது வீட்டின் கழிவறை கோப்பைக்குள் அந்த பாம்பு பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ந்து போயினர். கழிவறை கோப்பைக்குள் இருக்கும் பாம்பை … Read more