காங். மூத்த தலைவர் ஜெயந்தி பட்நாயக் காலமானார்| Dinamalar
புவனேஸ்வரம்: மூத்த காங். தலைவரும் முன்னாள் தேசிய மகளிர் ஆணையத்தின் முதல் தலைவருமான ஜெயந்தி பட்நாயக் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். ஒடிசா முன்னாள் முதல்வர் ஜெ..பி., பட்நாயக், இவரது மனைவி ஜெயந்தி பட்நாயக்,90 இவர் நான்குமுறை லோக்சபாவிற்கு எம்.பி.யாக தேர்வு பெற்றார். தேசிய மகளிர் ஆணையம் உருவாக்கப்பட்ட போது அதன் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். வயது முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையி்ல நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். … Read more