உக்ரைன் தலைநகரில் ரஷியா சரமாரி ஏவுகணை வீச்சு: 10 பேர் பலி

கீவ், உக்ரைன் நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. ராணுவ நிலைகளை மட்டுமே குறிவைப்பதாக கூறி போரை தொடங்கிய ரஷியா பின்னர் மின்உற்பத்தி நிலையங்கள், குடியிருப்பு கட்டிடங்கள், ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள் என தாக்குதல்களை விரிவுப்படுத்தியது. போர் தொடங்கிய சமயத்தில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷிய படைகள் முயற்சித்த நிலையில் உக்ரைன் ராணுவ வீரர்களின் கடுமையான எதிர்ப்பால் ரஷிய படைகள் அங்கிருந்து … Read more

கிரீமியா பாலத்தில் வெடிகுண்டு தாக்குதல் எதிரொலி – உக்ரைன் மீது 75 ஏவுகணை தாக்குதல்

கீவ்: கிரீமியா பாலத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்யா நேற்று 75 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். ஐரோப்பிய யூனியன், நேட்டோ படையில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதனால் தங்கள் நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதிய ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதலை தொடங்கியது. எனினும், ராணுவ நிலைகளை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்தது. இந்நிலையில், … Read more

வடகிழக்கு சிரியாவில் அமெரிக்கா மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல்.. ஐ.எஸ். தீவிரவாதி சுட்டுக்கொலை..!

வடகிழக்கு சிரியாவில் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் ஐ.எஸ்.பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். ஹமாம் அல்-துர்க்மேன் கிராமத்தில் மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பயங்கரவாதியை குறிவைத்து அமெரிக்க பாதுகாப்புப் படையினர் அதிரடி ட்ரோன் தாக்குதல் நடத்தினர். இதில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டதாக குர்திஷ்-சிரிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Source link

7,100 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள கண்கவரும் குமிழ் மூடிய நெபுலா – புகைப்படத்தை வெளியிட்டது நாசா

வாஷிங்டன்: பூமியில் இருந்து விண்ணில் 7,100 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள கண் கவரும் குமிழ் மூடிய நெபுலா புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா வெளியிட்டுள்ளது. விண்ணில் உள்ள பல மர்மங்களை கண்டறிய உலக நாடுகள் பல செயற்கைக்கோள்களையும், தொலைநோக்கிகளையும் அனுப்பி அரிய தகவல்களைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா, கடந்த 1990-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி ஹப்பிள் தொலைநோக்கியை விண்ணில் நிலைநிறுத்தியது. இந்த அதிநவீன … Read more

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை தங்களது 2-வது தலைநகராக மாற்றுவோம் – தலிபான்கள் எச்சரிக்கை!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை தங்களது இரண்டாவது தலைநகராக மாற்றப்போவதாக தலிபான்கள் எச்சரித்துள்ளனர். வீடியோ ஒன்றை வெளியிட்ட தலிபான் அதிகாரி அப்துல் பாசிர் ஷெர்சாடி, ஒவ்வொரு ஆப்கானிஸ்தானியரும் பாகிஸ்தானை வெறுப்பதாக தெரிவித்தார். ஆப்கானிஸ்தானுக்கு 5,000 ஆண்டுகால வரலாறு இருப்பதாகவும், அதை எவ்வாறு பாதுகாப்பது என்பது தங்களுக்குத் தெரியும் எனவும் தெரிவித்த அப்துல் பாசிர், பாகிஸ்தான் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ஆயிரக்கணக்கானோர் இருப்பதாகவும் எச்சரித்தார். Source link

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதல்..!

உக்ரைன் தலைநகர் கீவ் மீது, ரஷ்யா சரமாரியாக ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் 10 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் ஐராப்பாவின் மிக நீளமான பாலம் இரு தினங்களுக்கு முன்பு வெடிகுண்டு மூலம் தாக்கப்பட்டது. இதில் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்த நிலையில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டிய நிலையில், அதனை உக்ரைன் மறுத்தது. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா … Read more

மலேஷியாவில் முன்னதாக தேர்தல்பார்லிமென்டை கலைத்தார் பிரதமர்| Dinamalar

கோலாலம்பூர், கட்சியினர் கொடுத்த நெருக்கடியை அடுத்து, பார்லிமென்டை கலைத்து, மலேஷிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாகூப் நேற்று அறிவித்தார். ஆசிய நாடான மலேஷியா, 1957ல் ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்றது. இதைத் தொடர்ந்து அங்கு நடந்த வந்த தேர்தல்களில், யு.எம்.என்.ஓ., எனப்படும் ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு தலைமையிலான கூட்டணி அரசே அமைந்து வந்தது. கடந்த 2018ல் நடந்த தேர்தலில், பெர்சாட்டு என்ற எதிர்க்கட்சி கூட்டணி அரசு வென்றது. ஆனால், கூட்டணிக் கட்சிகள் வெளியேறியதால் அந்த ஆட்சி … Read more

இன்று சர்வதேசபெண் குழந்தைகள் தினம்| Dinamalar

பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுத்தல், அவர்களது கல்வி, சுகாதார உரிமைகளை பாதுகாப்பது, பல்துறைகளிலும் அவர்களது சாதனைகளை அங்கீகரித்தல் போன்றவற்றை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக்., 11ல் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. ‘நமது உரிமை, எதிர்காலத்துக்கான நமது இப்போதைய நேரம்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதால் அக்குடும்பம் மட்டுமல்லாமல் சமூகமே முன்னேறும். இன்றும் சில நாடுகளில் பெண் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. இந்நிலை மாற வேண்டும். பெண் குழந்தை பிறந்தவுடன் … Read more

பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டம் : நேற்று முதல் துவங்கியது| Dinamalar

புதுடில்லி :மத்திய நிதியமைச்சகத்தின் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டம் நேற்று துவங்கியது.நடப்பு நிதியாண்டுக்கான செலவினங்களின் திருத்தப்பட்ட மதிப்பீடுகள், மற்றும் 2023 _- 24ம் நிதியாண்டுக்கான நிதித் தேவைகள் ஆகியவை குறித்து முடிவு செய்வதற்காக, பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டம் நேற்று துவங்கியது.நிதி அமைச்சகத்தின் பட்ஜெட் பிரிவின் அறிவிப்பின்படி, கூட்டம் நவம்பர் 10ம் தேதி வரை தொடரும். ஜனவரி 11ம் தேதிக்குள் திருத்தப்பட்ட மதிப்பீடுகளை அமைச்சகம் இறுதி செய்யும். பிப்ரவரி முதல் தேதியன்று, 2023 _ 24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் … Read more

ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதல்| Dinamalar

கீவ், உக்ரைனின் தலைநகரான கீவ் உட்பட பல்வேறு நகரங்கள் மீது, ரஷ்ய படையினர் நேற்று காலை முதல் தொடர்ந்து ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தினர். கிழக்கு ஐரோப்பிய நாடுகளான உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் எட்டு மாதங்களை நெருங்குகிறது. குற்றச்சாட்டு உக்ரைனின் சில நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில், அவற்றை மீட்கும் முயற்சியில் உக்ரைன் தீவிரம் காட்டி வருகிறது. ரஷ்ய படைகள் சற்று பின்னடைவை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரஷ்யாவால் 2014ல் கைப்பற்றப்பட்ட கிரிமியா … Read more