லெபனானிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேற சென்றபோது சிரியாவில் படகு கவிழ்ந்து 73 பேர் உயிரிழப்பு

டமாஸ்கஸ்: சிரியாவில் படகு கவிழ்ந்ததில் 73 அகதிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. லெபனான் நாட்டில் பஞ்சம் அதிகரித்துள்ளதால் அங்கிருந்து ஏராளமான மக்கள் கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பிச் செல்ல முயன்று வருகின்றனர். லெபனான் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக அந்நாட்டின் பணமதிப்பு 90 சத வீதம் சரிவடைந்தது. இதனால் அந்த நாட்டில் லட்சக்கணக் கானோர் வேலையை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் தெருவுக்கு வந்துவிட்டனர். இந்நிலையில் லெபனான் நாட்டிலிருந்து படகு மூலம் நேற்று முன்தினம் … Read more

ஜப்பானில் ஷின்ஜோ அபேவுக்கு நினைவு நிகழ்ச்சி நடத்த கடும் எதிர்ப்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டம்

டோக்கியோ, ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்கிற பெருமைக்குரியவரான முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே, கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி தேர்தல் பிரசாரம் ஒன்றில் பங்கேற்றிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். இது ஜப்பான் மட்டும் இன்றி ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் ஷின்ஜோ அபேயின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜப்பானில் கொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு வருகிற 27-ந்தேதி அரசு சார்பில் நினைவு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதில் … Read more

‘சுட்டுக் கொல்லப்படலாம் என்ற பயத்தில் உள்ளோம்’ – மியான்மரில் பிணைக் கைதிகளாக இருக்கும் இந்தியர்கள் பதற்றம்

கொச்சி: டேட்டா என்ட்ரி வேலை, நல்ல சம்பளம் போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன் இந்தியாவி லிருந்து 300 பேர் வேலைக்காக தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களில், கேரளாவைச் சேர்ந்த 30 பேரும் அடங்குவர். இவர்களை ஒரு கும்பல் தாய்லாந்திலிருந்து மியான்மருக்கு கடத்திச் சென்று சைபர் குற்றங்களில் ஈடுபட வற்புறுத்துவதாக தகவல் வெளியானது. இந்தியர்கள் தங்களை காப்பாற்ற கோரி வெளியிட்ட வீடியோ மூலம் இந்த கடத்தல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, மத்திய அரசு அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. … Read more

உக்ரைன் போரில் பங்கேற்பதை தவிர்க்க அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடும் ரஷிய ஆண்கள்

மாஸ்கோ, உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போரை தொடங்கி இன்றுடன் (சனக்கிழமை) 7 மாதங்கள் ஆகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது. இதனால் உக்ரைனை தன்வசப்படுத்தும் ரஷியாவின் எண்ணம் ஈடேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. எனினும் இலக்கை அடையும் வரை போர் தொடரும் என ரஷிய அதிபர் புதின் திட்டவட்டமாக கூறி வருகிறார். அதை உறுதிப்படுத்தும் விதமாக உக்ரைன் மீதான போரை மேலும் தீவிரப்படுத்த 3 லட்சம் ரஷியர்களை … Read more

ஆயுதங்களாலும், விஷம் நிறைந்த பொய்களாலும் ரஷ்யா இரட்டைத் தாக்குதலை நடத்தி வருகிறது – ஐரோப்பிய கவுன்சில் தலைவர் கடும் விமர்சனம்!

ஆயுதங்களாலும், விஷம் நிறைந்த பொய்களாலும் ரஷ்யா இரட்டைத் தாக்குதலை நடத்தி வருவதாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மிக்கேல் விமர்சனம் செய்துள்ளார். ஐ.நா.பொதுசபையில் பேசிய அவர், கற்பனையான ஒரு எதிரிக்கு எதிராக உலகை ஒன்று திரட்ட ரஷ்யா முயற்சிப்பதாக சாடினார். உக்ரைன் உள்ளிட்ட எந்த ஒரு நாடும் ரஷ்யாவை மிரட்டவோ தாக்கவோ இல்லை என்றும், ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே ரஷ்யாவுடன் முரண்பட்டு இருப்பதை விரும்பவில்லை என்றும், நீண்ட காலமாக மேற்கத்திய நாடுகளால் அச்சுறுத்தல் இருப்பதாக ரஷ்யா கூறி … Read more

அர்ஜென்டினா: எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து – 3 பேர் உயிரிழப்பு

பியூனஸ் அயர்ஸ், அர்ஜென்டினாவின் தெற்கு பகுதியில் உள்ள நியூகன் மாகாணத்தின் பிளாசா ஹுயின்குல் நகரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இந்த ஆலை வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது ஆலையில் உள்ள முக்கிய கச்சா எண்ணெய் தொட்டிகளில் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அதை தொடர்ந்து மளமளவென பற்றி எரிந்த தீ அடுத்தடுத்து தொட்டிகளுக்கும் பரவியது. இப்படி மொத்தம் 6 எண்ணெய் தொட்டிகளில் தீப்பற்றி … Read more

இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் அமைதியை விரும்புகிறோம் – பாகிஸ்தான்

நியூயார்க், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், ஐக்கிய நாடுகளின் 77-வது பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது, “பாகிஸ்தானில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் 400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் இந்த உலகத்தை விட்டு சென்றுள்ளனர். இன்னும் பலர் நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஆபத்தில் உள்ளனர். ஆக்கபூர்வமான சூழலை உருவாக்குவதற்கு இந்தியா நம்பகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கடந்த 1947-ம் ஆண்டு முதல் 3 போர்களை சந்தித்து உள்ளோம். … Read more

இன ரீதியாக வன்முறை | கனடாவில் எச்சரிக்கையாக இருங்கள் – இந்தியர்களுக்கு வெளியுறவுத் துறை அறிவுறுத்தல்

புதுடெல்லி: இனரீதியிலான வன்முறை மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரிப்பதால், கனடாவில் உள்ள இந்தியர்கள் மிகுந்தஎச்சரிக்கையுடன் இருக்கும்படிவெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கனடாவில் உள்ள சில பிரிவினைவாத குழுக்கள் காலிஸ்தான் குறித்த பொதுவாக்கெடுப்பை பிராம்டன் நகரில் கடந்த 19-ம் தேதிநடத்தியுள்ளனர். இதில் கனடாவில்உள்ள சீக்கியர்கள் பலர் பங்கேற்றனர். நட்புநாடான கனடாவில்,தீவிரவாத குழுக்கள் அரசியல்உள்நோக்கத்துடன் பொது வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதை இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது. இது கேலிக்கூத்தான செயல் என இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியுள்ளார். … Read more

குண்டு வெடிப்பு: ஏழு பேர் பலி| Dinamalar

காபூல்:ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில், வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ஏராளமானோர் நேற்று குவிந்தனர். தொழுகை முடிந்து மக்கள் கூட்டமாக வெளி வருகையில், மசூதி அருகே நிறுத்திப்பட்டு இருந்த காரில், சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.இதில் ஏழு பேர் உயிரிழந்தனர். 41 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும்பொறுப்பேற்கவில்லை. காபூல்:ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில், வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ஏராளமானோர் நேற்று குவிந்தனர். தொழுகை முடிந்து மக்கள் கூட்டமாக வெளி வருகையில், மசூதி அருகே … Read more

மெக்சிகோவில் நிலநடுக்கம்| Dinamalar

மெக்சிகோ சிட்டி:மெக்சிகோவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில், நேற்று முன்தினம் இரண்டு பேர் உயிரிழந்தனர். பல கட்டடங்கள் சேதமடைந்தன.வட அமெரிக்க நாடானா மெக்சிகோவில், மூன்று நாட்களுக்கு முன்பு தான், மிச்சோகன் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இதேபோல், நேற்று அதிகாலை ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான நிலநடுக்கத்திலும் இரண்டு பேர் உயிரிழந்தனர். பல கட்டடங்கள் சேதமடைந்தன. இந்த நிலநடுக்கம், மாகாணம் முழுதும் … Read more