பாகிஸ்தானில் 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரிப்பு.!

பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில் ஜூன் மாதத்தில் அந்நாட்டின் பணவீக்கம் 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 21.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிக பணவீக்கம், சரிந்து வரும் அந்நிய செலாவணி கையிருப்பு, விரிவடைந்துவரும் நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் தேய்மானமான நாணய மதிப்பு போன்றவற்றால் பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.  Source link

Monkeypox Symptoms: இங்கிலாந்தில் பாலியல் கிளினிக்குகள் மூலமாக குரங்கு அம்மை நோய்

வைரஸ் நோயால் தற்போது உலகமே அஞ்சிக் கொண்டிருக்கும் நிலையில், பாதிக்கும் வைரஸ்கள் தொடர்பான ஆய்வுகளும், ஆராய்ச்சிகளும், நோயை எதிர்க்கும் முக்கிய கேடயங்களாக மாறுகின்றன.   சனிக்கிழமையன்று தி லான்செட் தொற்று நோய்கள் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இங்கிலாந்தில் குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் உலகின் பிற பகுதிகளில் பதிவாகிய முந்தைய வைரஸ் வெடிப்பைக் காட்டிலும் வேறுபட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள பாலியல் சுகாதார கிளினிக்குகளில் கலந்து கொண்ட 54 நோயாளிகளை ஆய்வு செய்த பின்னர், மே 2022 இல் … Read more

கைக்குழந்தையுடன் சென்ற இளம்பெண்ணை சுட்டுக் கொலை செய்த முன்னாள் காதலன்.!

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் கைக்குழந்தையுடன் சென்ற இளம்பெண்ணை சுட்டுக் கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம் 29ம் தேதி அஸியா ஜான்சன் என்ற பெண், தனது 3 மாத குழந்தையை மன்ஹாட்டன் பகுதியில் டிராலியில் வைத்து தள்ளிக் கொண்டுச் சென்ற போது தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் தொடர்புடைய ஆர்க்ரோ என்ற இளைஞரை கைது செய்து போலீசார் விசாரித்ததில், அவர் அந்த பெண்ணின் முன்னாள் காதலன் என்பது தெரியவந்தது.   Source … Read more

சுவிட்சர்லாந்தில் முதல் முறையாக நடந்த தன்பாலீர்ப்பு இணையர்களின் திருமணம்

ஜெனிவா: சுவிட்சர்லாந்தில் முதல் முறையாக தன்பாலீர்ப்பு இணையர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் 9 மாதங்களுக்கு முன்னர் அனைவருக்கும் திருமணம் (‘Marriage for All’ law) சட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கு பொதுமக்களில் 64% பேர் ஆதரவாக வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் தற்போது அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்ததை அடுத்து, முதல் முறையாக இன்று (ஜூலை 1) தன்பாலீர்ப்பு இணையர்கள் பலரும் திருமணம் செய்து கொண்டனர். அலின், லாரே ஆகியோர் … Read more

எவரெஸ்ட் சிகரத்தைவிட இரண்டு மடங்கு பெரிய வால் நட்சத்திரம்.. ஜூலை 14ம் தேதி பூமியை கடக்கும் என நாசா தகவல்..!

எவரெஸ்ட் சிகரத்தைவிட இரண்டு மடங்கு பெரிய வால் நட்சத்திரம் சூரிய குடும்பத்தின் உட்பகுதிக்குள் நுழைந்து ஜூலை 14ம் தேதி பூமியை கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. Comet K2 என அழைக்கப்படும் இந்த வால் நட்சத்திரம், பூமியிலிருந்து 270 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என்றும் தொலைநோக்கி இல்லாதவர்கள், மெய்நிகர் (Virtual) தொலைநோக்கியின் மூலம் வால் நட்சத்திரத்தின் பாதையை ஆன்லைனில் பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வால் நட்சத்திரம் முதன்முதலில் 2017ம் ஆண்டில் சூரிய குடும்பத்தின் வெளிப்புற பகுதிகளில் … Read more

வழிபாடு நடத்த வந்தவர்களிடையே மின்வெட்டு தொடர்பாக மோதல்.. 2 பேர் சுட்டுக்கொலை.!

பாகிஸ்தானில், வழிபாடு நடத்த வந்தவர்களிடையே அதீத மின்வெட்டு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், வன்முறையாக மாறியதில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், 11 பேர் காயமடைந்தனர். லக்கி மார்வாட் மாவட்டத்தில் உள்ள மசூதியில் வழிபாடு நடத்திய பிறகு ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதில், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 வயது சிறுவன் உள்பட 11 பேர் காயமடைந்தனர். Source link

ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் பலி; 19 பேர் காயம்

தெஹ்ரான்: ஈரானின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்; 19 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து ஈரான் அரசு ஊடகம் தரப்பில், “ஈரானி தென்மேற்கு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியது. ஈரானில் ஹர்மோஸ்கன் மாகாணத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். … Read more

நொடிபொழுதில் நிலநடுக்கத்தை உணர்ந்ததால் மகளை தூக்கி கொண்டு வீட்டை விட்டு ஓடிய தந்தை

நொடிபொழுதில் நிலநடுக்கத்தை உணர்ந்த தந்தை ஒருவர், தனது மகளை தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிசிடிவி காட்சியை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில், மேஜையில் அமர்ந்திருந்த மகளுடன் விளையாடி கொண்டிருந்த தந்தை, திடீரென நிலநடுக்கம் வருவதை உணர்ந்து தனது மகளை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வெளியே சென்றார். பின்னர், அவரது மனைவியும் வெளியே வந்த நிலையில், நிலநடுக்கத்தால் வீட்டில் இருந்த பொருட்கள் குலுங்கும் விழும் இந்த வீடியோவை 4 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.  … Read more

குரங்கு அம்மை நோயை ஒழிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம்: உலக சுகாதார அமைப்பு

ஐரோப்பாவிலிருந்து குரங்கு அம்மை நோயை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவுக்கான பிராந்திய இயக்குநர் ஹான்ஸ் ஹென்றி கூறும்போது, “ஐரோப்பா குரங்கு அம்மை நோய் பரவலின் மையமாக உள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் தொற்றும் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதுவரை 4,500 குரங்கு அம்மை நோய் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. உலக அளவில் 31 நாடுகளில் குரங்கு அம்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குரங்கு அம்மை சர்வதேச அளவில் … Read more

ஒடேஷா நகரில் ரஷ்ய படைகள் ஏவுகணைத் தாக்குதல்.. 21 பேர் கொல்லப்பட்டதாக மீட்பு படை தகவல்!

ஒடேஷா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பொழுதுபோக்கு மையத்தில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சிறுவன் உள்பட 21 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஒடேஷா அருகே உள்ள Sergiyvka டவுனில் அடுக்குமாடி குடியிருப்பு உள்பட இரு கட்டடம் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். ஈடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link