இலங்கை முழுதும்… எமர்ஜென்சி! நாளை அதிபர் தேர்தல்| Dinamalar

கொழும்பு :இலங்கை அதிபர் பதவிக்கு நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில், தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்கே, நாடு முழுதும் மீண்டும் அவசர நிலையை பிறப்பித்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து, மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முதலில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவருடைய சகோதரர் கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது ஆசிய நாடான சிங்கப்பூரில் உள்ள அவர், அதிபர் பதவியிலிருந்து … Read more

மார்க்பர்க் எனும் கொடிய வைரஸ் – எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

இந்த மாத தொடக்கத்தில் இரண்டு வழக்குகளில் நோய்களை ஆய்வகங்கள் சரிபார்த்த பிறகு, உலக சுகாதார அமைப்பு (WHO) கானாவில் எபோலாவைப் போன்ற மார்பர்க் வைரஸால் ஏற்படும் நோயின் முதல் வெடிப்பை அறிவித்தது. உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி , எபோலாவின் அதே குடும்பத்தைச் சேர்ந்த மிகவும் தொற்றுநோயான ரத்தக்கசிவு காய்ச்சலானது, பழம் வெளவால்கள் மூலம் மனிதர்களுக்கும், பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் மேற்பரப்புகளின் உடல் திரவங்களுடனான நேரடி தொடர்பு மூலமும் மனிதர்களுக்கு பரவுகிறது. new type of corona … Read more

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகமாகப் பணம் அனுப்பும் மாநிலங்களில் முதலிடத்தைப் பிடித்த மகாராஷ்டிரம்..!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகமாகப் பணம் அனுப்பும் மாநிலங்களில் கேரளத்தை முந்தி மகாராஷ்டிரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2020 – 2021 நிதியாண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பிய பணத்தில் 35 விழுக்காட்டை மகாராஷ்டிரமும், பத்து விழுக்காட்டைக் கேரளமும் பெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கொரோனா சூழலில் வெளிநாடுகளில் வேலையிழந்த கேரளத்தவர் நாடு திரும்பியதே அவர்களின் பங்களிப்பு குறைந்ததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதேபோல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அதிகப் பணம் அனுப்பும் நாடுகளில் ஐக்கிய அரபு … Read more

13 சிவசேனா எம்.பி.,க்கள் ஏக்நாத் ஷிண்டே அணியில் சேர முடிவு| Dinamalar

மும்பை :மஹாராஷ்டிராவின் சிவசேனா கட்சியைச் சேர்ந்த 13 எம்.பி.,க்கள், ஏக்நாத் ஷிண்டே அணியில் சேர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மஹாராஷ்டிராவில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து, அக்கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 எம்.எல்.ஏ.,க்கள் சமீபத்தில் வெளியேறினர். பின், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்துள்ளனர். இந்நிலையில், அக்கட்சியின் 19 லோக்சபா எம்.பி.,க்களில் 13 பேர் தனிக்குழுவாக செயல்பட … Read more

மலேசியாவிற்கு கடத்தப்பட்ட சுமார் 144 கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தங்களை கைப்பற்றிய சுங்கத்துறை அதிகாரிகள்.!

ஆப்ரிக்காவில் இருந்து மலேசியாவிற்கு கடத்தப்பட்ட சுமார் 144 கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தங்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். செலங்கூர் துறைமுகத்திற்கு வந்த கப்பலில், ஆபத்தான பொருட்கள் இருப்பதாக எழுதப்பட்டிருந்த 3 கண்டெய்னர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது 6,000 கிலோ யானை தந்தங்களை இருந்துள்ளன. இது தவிர, காண்டாமிருக கொம்புகள், புலியின் எலும்புகள், எறும்பு தின்னியின் செதில்கள் என 144 கோடி ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய கடத்தல் நடந்துள்ளது தெரியவந்தது. Source link

இணையத்தில் வைரலாகிய இம்மானுவேலை தெரியுமா?

“இம்மானுவேல்… இம்மானுவேல்…” இணையத்தில் கடந்த இரு தினங்களாக நெருப்புக் கோழி ஒன்றின் வீடியோ வைரலாகி வருகின்றது. அமெரிக்காவில் தெற்கு ஃபுளோரிடாவில் உள்ளது நக்கில் பம்ப் பண்ணை. இப்பண்ணையில் பணிபுரியும் டைய்லர் ப்ளேக் என்ற பெண் தனது டிக்டாக் பக்கத்தில் அப்பண்ணை குறித்தும், அப்பண்ணையில் உள்ள விலங்குகளின் தகவல்கள் குறித்தும் நகைச்சுவையான தொனியில் வீடியோ பகிர்ந்து வருகிறார். தனது வீடியோக்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவு செய்து வருகிறார். அவர் பதிவு செய்யும் வீடியோக்களில் நெருப்புக் கோழி … Read more

Naked Crepe: "இட்லி, தோசை"க்கு என்ன பெயர் பாருங்க.. இந்தியர்களை உலுக்கிய ஹோட்டல்!

அமெரிக்காவில் உள்ள ஒரு இந்திய உணவகத்தில் இட்லி, தோசை, மசால் தோசை, சாம்பார் வடைக்கு அதன் ஒரிஜினல் பெயர்களை வைக்காமல் ஆங்கிலமயப்படுத்தி பெயர் வைத்திருப்பதால் அந்த ஹோட்டலுக்கு வரும் தென்னிந்தியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களது அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றனர். பெயரில் என்ன இருக்கு என்று சொல்வார் ஷேக்ஸ்பியர். ஆனால் அதை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு இந்திய உணவகம் அப்படியே எடுத்துக் கொண்டு விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. காரணம், பரம்பரை பரம்பரையாக, பல காலமாக சொல்லப்பட்டு … Read more

கால நிலை மாற்றத்தின் விளைவால், இங்கிலாந்தில் கடும் வெப்ப அலை… கடற்கரையை நோக்கி படையெடுக்கும் பொதுமக்கள்

இங்கிலாந்தில் கடும் வெப்ப அலை வீசி வருவதன் எதிரொலியாக அங்குள்ள பிரைட்டன் பீச்சில் ஞாயிற்றுக்கிழமையன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. தெற்கு இங்கிலாந்தில் திங்கள் மற்றும் செவ்வாயன்று வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸை விட அதிகரிக்கக்கூடும் என கணித்துள்ள அந்நாட்டு வானிலை ஆய்வு மையம், சில பகுதிகளில் ரெட் அலெர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வானிலை மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து சில பள்ளிகளுக்கு விடுமுறையும் … Read more

சமையல் எண்ணெய் கொடுத்தால் பீர்… பண்டமாற்று முறைக்கு மாறிய ஜெர்மனி

பண்டமாற்று முறையை பற்றி நாம் வரலாற்றில் படித்திருக்கிறோம். நாணயங்கள் பெரிய அளவில் புழக்கத்தில் இல்லாத காலத்தில், அம்முறை முக்கிய பரிவர்த்தனை முறையாக இருந்தது. ஆனால் நாணயங்கள் பயன்பாடு அதிகரித்ததை அடுத்து பண்டமாற்று முறை மெதுமெதுவாக வழக்கத்தில் இருந்து மறைந்து போனது. இருப்பினும், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு முடிவுக்கு வராத நிலையில், அதன் காரணமாக ஐரோப்பா முழுவதும் சமையல் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இப்பொழுது நூதனமான பண்டமாற்று முறை மீண்டும் அங்கே நடைமுறைக்கும் வந்துள்ளது.  … Read more

மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை உருவாக்க அமெரிக்கா மீண்டும் முயற்சி: ஈரான்

தெஹ்ரான்: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை உருவாக்க அமெரிக்கா மீண்டும் முயற்சிப்பதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த வாரம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்தார். பாலஸ்தீனம், அமீரகம், சவுதி உள்ளிட்ட நாடுகளுக்கு அரசியல் ரீதியாக அவர் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தில் அமெரிக்கா – மத்திய கிழக்கு நாடுகள் இடையே உள்ள உறவுக் குறித்து பைடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், பைடனின் இந்தப் பயணத்தை ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து … Read more