பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் குறைக்க கோர்ட் பரிந்துரை| Dinamalar

புது டில்லி: பல் மருத்துவக் கல்லுாரிகளில், 9,000க்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருப்பதால், மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வின் ‘கட் ஆப்’ மதிப்பெண்ணை குறைப்பது குறித்து பரிசீலிக்குமாறு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நாட்டின் பல் மருத்துவக் கல்லுாரிகளில், ‘நீட்’ தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில், ‘கட் ஆப்’ மதிப்பெண் அதிகமாக இருப்பதால், 9,000க்கும் மேற்பட்ட காலி இடங்கள் உள்ளன.எனவே, கட் ஆப் மதிப்பெண்ணை குறைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, நீட் … Read more

சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது தான் தமிழ் : ஹிந்தி நடிகை போட்டார் குண்டு

ஹிந்தி மொழி பற்றிய சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் சமஸ்கிருத மொழியில் இருந்து தான் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகள் தோன்றின. ஆகவே சமஸ்கிருதத்தை ஏன் தேசிய மொழியாக ஆக்க கூடாது என தெரிவித்துள்ளார் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத். பாலிவுட்டின் பிரபல நடிகை கங்கனா ரணாவத். அவ்வப்போது சர்ச்சையான விஷயங்களை பேசி சமயங்களில் வம்பில் மாட்டிக் கொள்வார். மும்பையில் தனது பட விழாவில் பங்கேற்ற இவரிடம் சில தினங்களுக்கு முன்னர் ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன் … Read more

சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான வழக்கு; நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசின் சொத்துகள் முடக்கம்

புதுடெல்லி, கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவர், அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள், சினிமா பிரபலங்களுடன் நட்பு இருப்பதாக கூறி தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலரை ஏமாற்றி பணம் மோசடி செய்து இருப்பதாக புகார்கள் உள்ளன. கடந்த 2017ம் ஆண்டு அ.தி.மு.க. பிளவுப்பட்டிருந்தபோது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டி.டி.வி. தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறி டெல்லி குற்றவியல் போலீசார் … Read more

ஆசிய பேட்மிண்டன் போட்டி: வெண்கலம் வென்றார் பி.வி.சிந்து..!!

மணிலா,  ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள ஹீ பிங் ஜியோவை (சீனா) வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.  இந்நிலையில் இன்று நடைபெற்ற அரைஇறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலக சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான அகானா யமாகுச்சியை (ஜப்பான்) எதிர்கொண்டார்.  விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த … Read more

கொரோனா பாதிப்பு சரிவு: தென் கொரியாவில் கட்டாய முககவசம் ரத்தாகிறது..!!

சியோல்,  தென் கொரியாவில் ஒமைக்ரானால் தூண்டப்பட்ட கொரோனா அலை சரிந்து வருகிறது. இதனால் பொது இடங்களில் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவு அடுத்த வாரம் முதல் ரத்தாகும் என பிரதமர் கிம் பூ கியும் அறிவித்துள்ளார்.  அதே நேரத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிற பொது நிகழ்ச்சிகளில், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்போர் முககவசம் அணிய வேண்டும், இது கட்டாயம் ஆகும். அங்கு தனி மனித இடைவெளியை பின்பற்றுதல், பொது இடங்களில் கூடுவது தொடர்பான கட்டுப்பாடுகள் … Read more

சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு; 60 பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Chennai Corporation recruitment 2022 apply soon: சென்னை மாநகராட்சியின், சென்னை மாநகர சுகாதாரத் திட்டத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 60 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.05.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Obstetrician / Gynecologist காலியிடங்களின் எண்ணிக்கை : 9 கல்வித் தகுதி : MD, (DGO) or MBBS, DGO படித்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ. … Read more

அவற்றை அழிக்க நினைப்பது மனித குலத்தின் அழிவுக்கு வழி வகுக்கும் – சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை.!

வனப்பகுதிகளை அழிக்க நினைப்பது மனித அழிவுக்கு வழிவகுக்கும் என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. இயற்கையை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் நீதிபதி ஸ்ரீமதி தெரிவித்துள்ளார். இயற்கையான சூழல் என்பது மனிதனின் அடிப்படை உரிமை என்று தெரிவித்த நீதிபதி அவர்கள், ரியல் எஸ்டேட், சுரங்கங்கள், அணைகள் கட்டுவது ஆகியவற்றிற்காக காடுகள் அழிக்கப்படுவதாக சுட்டிக்காட்டினார். மேலும், “இந்தியாவில் 5 … Read more

சென்னை: பெருங்குடி குப்பைக் கிடங்கில் நான்காவது நாளாக எரியும் தீ – தற்போதைய நிலை என்ன?

சென்னை மாநகரத்தில் மட்டும் நாளொன்றுக்கு 5,000 டன்னுக்கும் அதிகமான திடக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றது. சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டுக் குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும். சென்னை பெருங்குடி பகுதியில் அரசுக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு செயல்பட்டு வருகின்றது. 225 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குப்பைக் கிடங்கில் கடந்த புதன்கிழமை (27.04.2022) எதிர்பாராத வகையில் தீ விபத்து ஏற்பட்டது. பெருங்குடி குப்பைக் கிடங்கு – தீ விபத்து முதலில் ஒரு இடத்தில் உருவான தீ காற்றின் வேகம் காரணமாக … Read more

வீடு புகுந்து ராணுவ வீரர் மனைவி தாலி பறிக்கப்பட்ட சம்பவம்-3 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை

திருச்சி மாவட்டம் முசிறியில் ராணுவ வீரரின் மனைவியின் தாலி பறிப்பு சம்பவத்தில், 3 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேரூர் குடித்துறை கிராமத்தை சேர்ந்த ராணுவவீரர் நீலமேகம், காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வரும் நிலையில் இவரது மனைவியின் தாலி சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச்சென்றுவிட்டதாக வீடியோ மூலம் முதலமைச்சர் மற்றும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிடம் புகார் அளித்திருந்தார். இதனை பார்த்த டிஜிபி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதையடுத்து 8 … Read more