"எனது வீட்டிலும் காலை 2 மணி நேரம் மின்வெட்டு" – எடப்பாடி பழனிசாமி

சேலம்: “நிலக்கரி பற்றாக்குறை காரணமாகத்தான மின் தடை ஏற்பட்டுக்கொண்டிரு்ககிறது. எனவே தமிழக அரசு தேவையான அளவு நிலக்கரியை கொள்முதல் செய்து தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும்“ என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலத்தில் இலவச தையல் பயிற்சி மையத்தை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்.30) திறந்துவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “மின்சாரம் என்பதில் பாகுபாடு இல்லை. எனது வீட்டிலும் … Read more

'நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகள்!' – பிரதமர் மோடி விருப்பம்!

நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும். இது நாட்டின் சாமானிய குடிமக்களுக்கு நீதித் துறை மீது நம்பிக்கையை அதிகரிக்கும் என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார். முதலமைச்சர்கள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது வழக்கம். கடைசியாக, 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி இம்மாநாடு நடந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதலமைச்சர்களின் ஒருங்கிணைந்த … Read more

Movie Rentals: படங்களை வாடகைக்கு விடும் அமேசான் பிரைம் வீடியோ!

முன்பெல்லாம் படம் பார்ப்பதற்கு நாம் கேசட் அல்லது சிடியை வாடகைக்கு எடுப்போம். ஒரு வித எதிர்பார்ப்புடன் கூடிய அனுபவத்தை அளித்த அந்த தருணங்களை நாம் என்றுமே மறக்க முடியாது. தற்போது அனைத்துமே டிஜிட்டல் மயம் ஆகி விட்டதால், அமேசான் நிறுவனம் இதே பழைய திட்டத்தினை டிஜிட்டல் முறையில் செயல்படுத்தி உள்ளது. அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் படம் அல்லது தொடர்களை பார்க்க வேண்டும் என்றால், நாம் மாத சந்தா செலுத்த வேண்டும். சில நபர்களுக்கு குறிப்பிட்ட … Read more

திருமணம் ஆகி செட்டிலான 41 வயது நடிகை லைலாவா இது? தற்போதைய நிலை என்ன தெரியுமா?

நடிகை லைலாவின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. சிரித்தால் கன்னத்தில் குழி விழும் நடிகை என கூறினால் நினைவுக்கு வரும் முதல் நடிகை லைலா. இந்த மண்டையில கூட முடி வளர வைக்கணுமா? இந்த ஒரே ஒரு பொருள் போதும்! 12 வயதில் லண்டன் ஸ்கூல் ஆப் டான்சிங்கில் லண்டன் சென்று டான்சில் பட்டம் பெற்றவர். இதன் காரணமாக பலரது கவனத்தையும் ஈர்த்தவர்.16 வயதிலேயே ஹீரோயினாக நடிக்க துவங்கிவிட்டார். 1996ஆம் ஆண்டு து ஸ்மன் … Read more

60 லட்சம் டன்னுக்கு மேல் நிலக்கரி கையிருப்பில் உள்ளது – மத்திய நிலக்கரி நிறுவனத் தலைவர்

60 லட்சம் டன்னுக்கு மேல் நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக அறிவித்துள்ள மத்திய நிலக்கரி நிறுவன தலைவர் பி.எம்.பிரசாத், தினசரி 1 லட்சத்து 85 ஆயிரம் டன் நிலக்கரி அனல் மின் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மின் தட்டுப்பாடு நிலவும் மாநிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு 2 லட்சம் டன்னுக்கு மேல் நிலக்கரி அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள பகுதிகளின் நிலவரத்தை மத்திய அமைச்சர்கள் கொண்ட குழு தினசரி … Read more

இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசின் ரூ.7.27 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

டெல்லி, பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசின் ரூ.7.27 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்க துறை முடக்கி உள்ளது. இவர் இரட்டை இலை பெற தேர்தல் ஆணையர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் புரோகக்கராக  சுகேஷ் சந்திரசேகருக்கு நெருக்கமானவர். பிரபல இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது பெயர் இரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட போதுதான் நாட்டு மக்களுக்கு தெரிய வந்தது. ஆனால், இவர் பல ஆண்டுகளாக இதுபோன்ற இடைத்தரர்கள் … Read more

இனி எங்களை பிளாக்மெயில் செய்ய முடியாது! ரஷ்யாவுக்கு செய்தி அனுப்பிய ஜேர்மனி

 ரஷ்ய எரிவாயு விநியோகத்திற்கு ஜேர்மனி இனி ரூபிள்களில் பணம் செலுத்தாது என்று ஜேர்மன் நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகள் விதித்தன. இதன் வினைவாக ரஷ்யாவின் பங்குச்சந்தை மற்றும் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்தது. பெருளாதார சரிவை சற்று சமாளிக்க, இனி ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் நாடுகள் அதற்கு ரூபிளில் பணம் செலுத்த வேண்டும் என ரஷ்யா அறிவித்தது. இதற்கு பல … Read more

இந்தி எதிர்ப்பு போராட்டம்- சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கைது

சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், சென்னை – எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தில் நாளை (ஏப்.30) ஈடுபடப்போவதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. தேசியக் கல்வி என்ற பெயரால் மத்திய அரசு திணிக்க இருக்கும் இந்தியை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், சென்னை பெரியார் திடலிலிருந்து புறப்பட்டு, பெரியார் ஈவெரா நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாகச் சென்று, சென்னை – எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிக்கப்படும் … Read more

மகாராஷ்டிராவில் சட்டவிரோத கருக்கலைப்பு மையம் நடத்திய 7 பேர் கைது

ஜல்னா: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் சட்டவிரோத கருக்கலைப்பு மையம் நடத்தி வந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  கடந்த ஏப்ரல் 25ம் தேதி மாநில குடும்ப நல அலுவலகத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதில் ஜல்னா மாவட்டத்தில் சிலர் சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தை நடத்தி வந்தது தெரிய வந்தது.  இந்த கருக்கலைப்பு மையத்தில் இருந்து பெண் குழந்தையின் சிசு, மருந்து மாத்திரைகள், கருக்கலைப்பு சாதனங்கள், பதிவேடுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. … Read more

திண்டுக்கல் மாவட்டத்துக்கான காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ரூ.95.5 கோடியில் மேம்படுத்தப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்துக்கான காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ரூ.95.5 கோடியில் மேம்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். திண்டுக்கல்லில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் கழிவறைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.