வரி ஏய்ப்பு: பிரபல செல்போன் நிறுவனமாக ஸியோமியின் ரூ.5,551.27 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி அதிரடி

பெங்களூரு: பிரபல மொபைல் நிறுவனமான “ஸியோமி”-யின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியது. சீனாவை சேர்ந்த பிரபல செல்போன் நிறுவனமான ஸியோமிக்கு சொந்தமான சுமார் ரூ.5,551.27 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸியோமி மட்டுமல்லாமல் oppo உள்ளிட்ட 3 செல்போன் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக கடந்த டிசம்பர் மாதம், அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும், நிறுவனங்களுக்கு தொடர்புடைய நபர்களின் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனையை  நடத்தியது. அதில் நிறுவனமானது பலகோடி ரூபாய் … Read more

ஓசூர்: சாலையில் சென்றபோது தீப்பிடித்து எரிந்த மின்சார ஸ்கூட்டர் – மீண்டும் ஒரு சம்பவம்

ஓசூரில் சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோதே மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த சதீஷ் என்பவர் கர்நாடக மாநிலம் பொம்மசந்திரா பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மின்சார ஸ்கூட்டரை அவர் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், வழக்கம்போல் இன்று அவர் அலுவலகத்துக்கு மின்சார ஸ்கூட்டரில் சென்றார். ஜூஜூவாடி அருகே சென்றபோது திடீரென வாகனத்தில் தீப்பற்றியது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட சதீஷ், வாகனத்தை நிறுத்துவிட்டு கீழே இறங்கி உயிர் … Read more

கயிறு அல்ல 'கொக்கைன்' – அதிர வைத்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள்!

போதைப்பொருட்களை கடத்துவதில் புதிய புதிய வழிமுறைகளை கையாண்டு வரும் கடத்தல்காரர்கள் தற்போது கயிறு மூலமாக புதிய முறை ஒன்றை பின்பற்றி வருவது தெரியவந்துள்ளது. ஈரானில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பிப்பாவாவ் துறைமுகத்துக்கு ஒரு சரக்கு கப்பல் கடந்த வாரம் வந்தது. உணவுப்பொருட்கள், வாகன உதிரிபாகங்கள் உட்பட ஏராளமான சரக்குகள் அதில் கொண்டு வரப்பட்டிருந்தன. 10 நாட்களில் அந்தக் கப்பல் அங்கிருந்து செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, அந்தக் கப்பலில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டிருப்பதாக குஜராத் … Read more

மலையாளத்தில் சாதிப்பாரா காயத்ரி?

18 வயசு என்ற படத்தின் மூலம் அறிமுகமான பெங்களூரு தமிழ் பொண்ணு காயத்ரி சங்கர். அதன்பிறகு அவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் கவனம் பெற்றார். அதன்பிறகு பொன்மாலை பொழுது, ரம்மி, மத்தாப்பூ, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், துக்ளக் தர்பார் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் மலையாளத்தில் ரீமேக் ஆவதாக இருந்தது. அதில் விஜய்சேதுபதி கேரக்டரில் நிவின்பாலி நடிக்க … Read more

நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸின் ரூ. 7 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

புதுடெல்லி, பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸின் ரூ.7 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை  முடக்கியது. இரட்டை இலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலினுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரிடம் மோசடி செய்த ரூ.200 கோடி ரூபாயில், 5.71 கோடி ரூபாயை சந்திரசேகர் ஜாக்குலினுக்கு  பரிசாக கொடுத்ததாக  குற்றம் சாட்டியுள்ள அமலாக்கத்துறை, ஜாக்குலின் வங்கிக்கணக்கில் வைத்திருந்த நிரந்தர வைப்புத்தொகை ரூ.7 கோடியை … Read more

சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர்; இறுதிப்போட்டியில் கேரளா – மேற்கு வங்கம் பலப்பரிட்சை!

திருவனந்தபுரம், 75-வது தேசிய அளவிலான சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள், கேரள மாநிலம் மலப்புரத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 2 ஆண்டுகளுக்கு பிறகு சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். அதன்படி, கேரளா, மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் மணிப்பூர் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி … Read more

தலீபான்களுக்கு எதிராக புதிய போர் தொடங்கப்படும்..!! – முன்னாள் ராணுவ தளபதி சூளுரை

லண்டன்,  ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக உள்நாட்டு போரில் ஈடுபட்டு வந்த தலீபான் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கடுமையான தாக்குதல்களை நடத்தி நாட்டை தங்கள் வசம் ஆக்கினர். அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறி பல நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். அந்த வகையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தஞ்சமடைந்துள்ள ஆப்கானிஸ்தானின் முன்னாள் ராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சாமி சதாத், தலீபான்களுக்கு எதிராக புதிய … Read more

குறைந்த விலையில் எரிவாயு : தாய்லாந்தின் புதிய வழங்குனர்

நுகர்வோருக்கு குறைந்த விலையில் எரிவாயு பெற்றுக் கொடுப்பதற்கான புதிய வழங்குனர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தாய்லாந்தின் சியம் கேஸ் நிறுவனம் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதுவரை கேஸ் இறக்குமதி செய்யப்பட்ட ஓமான் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. ஓமான் கேஸ் நிறுவனங்களின் ஊடாக நாட்டிற்கு வழங்கப்படும் இறுதி கேஸ் கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்தது. அந்த கப்பலில் மூவாயிரத்து 500 … Read more

ஃபிக்சட் டெப்பாசிட்டை விட சிறந்தது; முதலீட்டுக்கு அதிக வருமானம் தரும் 4 சூப்பர் திட்டங்கள்

Have Rs 5 to Rs 10 lakh to invest? Check 4 options beyond Fixed Deposit that will give good returns: புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், உங்களில் பலர் சமீபத்தில் உங்கள் நிறுவனத்திடமிருந்து போனஸைப் பெற்றிருக்கலாம். இந்த தொகையை மொத்தமாக முதலீடு செய்வது ஒரு சிறந்த யோசனை. உங்களுக்கு உடனடியாக பணம் தேவையில்லை என்றால், நீங்கள் ஃபிக்சட் டெப்பாசிட்டில் முதலீடு செய்யலாம். ஆனால், இதில் இன்றைய வட்டி விகிதங்களைப் பொறுத்தவரை, பணவீக்கத்தின் காரணமாக உங்கள் … Read more

உங்களுக்கு கார் பரிசு || சேலத்து பெண் 8 லட்ச ரூபாயை கோட்டைவிட்டது எப்படி.?! 

சேலம் அருகே கார் பரிசு விழுந்ததாக கூறி, ஒரு பெண்ணிடம் 8 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மோசடி நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், குப்பனூர் பகுதியை சேர்ந்த சித்ராவுக்கு, தனியார் ஆன்லைன் விற்பனை நிறுவனத்தின் பதிமூன்றாம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பரிசாக 16 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக விழுந்துள்ளதாக கடிதம் வந்துள்ளது. மேலும், இந்த காரினை பெறுவதற்கு … Read more