குஜராத் அணிக்கு எதிரான ஆட்டம்; டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங்!

IPL 2022 GT vs RCB Live Cricket Score in tamil: 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று மாலை 3:30 மணிக்கு தொடங்கிய 43-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். நடப்பு தொடரில் வெற்றிகரமான அணியாக வலம் வரும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் … Read more

பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு தூக்கு.. உடந்தையாக இருந்த தாய்க்கு சாகும் வரை ஆயுள்..!

பெற்றமகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு தூக்குதண்டனை  விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது. சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த தம்பதி ஒருவருக்கு மகள் ஒருவர் இருந்துள்ளார். ஏழு வயதில் இருந்த அந்த சிறுமியின்  தந்தை 7 வயதில் இருந்தே பாலியல் வன்கொடுமை செய்து வந்தார் என கூறப்படுகிறது. இதற்கு அந்த சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார். இது அவரை 16 வயது வரை இந்த கொடுமை தொடர்ந்துள்ளது.இந்நிலையில், 2020ம் ஆண்டு தனது பள்ளி தோழிகளிடம் கூறி கதறி அழுத்துள்ளார். இதனை … Read more

நாடோடிச் சித்திரங்கள்: ஒளரங்கசீப் ஆலம்கிர் வாழ்வும் வரலாற்றிப் புனைவுகளும் | பகுதி 32

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு சர்ச்சை வெடித்தது. சுமார் ஐம்பது ஆண்டு காலம் இந்திய மண்ணில் கொடுங்கோல் ஆட்சி புரிந்து இந்துக்களின் வழிபாட்டு அடையாளங்களை அழித்த முகலாய மன்னன் ஒளரங்கசீப்-இன் பெயர் தில்லியின் முக்கியமான சாலைக்கு பெயராக இருக்கக் கூடாதென்று சீக்கிய அமைப்பினரும், வலதுசாரி கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தின. அதனைத் தொடர்ந்து கொடுங்கோல் மன்னன் என்று வரலாற்றேடுகளில் தொடர்ந்து இடித்துரைக்கப்பட்ட ஒளரங்கசீப்பின் பெயர் கொண்ட சாலையை டாக்டர் அப்துல் கலாம் சாலை … Read more

கார் பரிசு விழுந்ததாக கூறி 26 தவணைகளாக ரூ.8.84 லட்சம் மோசடி செய்த தனியார் ஆன்லைன் விற்பனை நிறுவனம்

சேலம் மாவட்டம் குப்பனூரில், கார் பரிசு விழுந்ததாக கூறி பெண்ணிடம் சுமார் 8 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குப்பனூர் பகுதியை சேர்ந்த ஜெயசித்ராவிற்கு தனியார் ஆன்லைன் விற்பனை நிறுவனத்தின் 13ம் ஆண்டு விழாவையொட்டி சிறப்பு பரிசாக 16 லட்சம் மதிப்பிலான கார் பரிசு விழுந்துள்ளது என குறிப்பிட்டு ஒரு கடிதம் வந்ததாக கூறப்படும் நிலையில் அதனை பெறுவதற்கு சான்றிதழ்கள் தயாரிக்க 20 ஆயிரம் அனுப்பவேண்டும் என்று … Read more

'தொழிலாளர்களின் உரிமைக்குக் கேடயமாகவும், போர்வாளாகவும் திமுக எப்போதும் திகழும்' – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தொழிலாளர்களின் உரிமைகளுக்கும், நலனுக்கும் “கேடயமாகவும், போர்வாளாகவும்” திமுகவும், திமுக அரசும் எப்போதும் திகழும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சிகாகோ நகரில் தொழிலாளர்கள் வரலாற்றுப் புகழ்பெற்ற பிரம்மாண்டமான பேரணியை நடத்தி, தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து பெற்ற உன்னதமான உரிமைகளை நினைவுகூரும் மே 1-ஆம் நாளை முன்னிட்டு தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தொழிலாளர்களின் உற்ற … Read more

‘‘காசு கொடுத்தாலும் கிடையாது’’- உலகை உலுக்கும் சமையல் எண்ணெய் பற்றாக்குறை: ஐரோப்பிய நாடுகளில் ரேஷன்; இந்தியாவிலும் விலை கடும் உயர்வு

புதுடெல்லி: உலகம் முழுவதும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பல ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு சமையல் எண்ணெய் ரேஷன் முறையில் கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பாதிப்பும் இந்தியாவிலும் கடுமையாக எதிரொலிக்கிறது. தேவை அதிகரிப்பு, உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால் உலகம் முழுவதுமே சமையல் எண்ணெய் விலை கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடுமையாக உயர்ந்து வருகிறது. ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக … Read more

புதிய ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்பு

இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய ராணுவத்தின் 28வது தலைமை தளபதியாக பதவி வகித்து வந்த முகுந்த் நரவனேவின் பதவிக் காலம், நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் இன்று, இந்திய ராணுவத்தின் 29வது தலைமை தளபதியாக, மனோஜ் பாண்டே பொறுப்பேற்றுக் கொண்டார். ராணுவத்தின் துணை தளபதியாக பொறுப்பு வகித்து வந்த மனோஜ் பாண்டே, பொறியாளர்கள் பிரிவிலிருந்து ராணுவ தளபதியாக நியமனம் செய்யப்பட்ட முதல் நபர். பிப்ரவரி 1 ஆம் … Read more

Phantom X: இந்த விலையில் இதுபோன்ற டிஸ்ப்ளே கொண்ட ஒரு போனை நீங்க பார்த்திருக்க முடியாது!

சீனாவின் டெக்னோ நிறுவனம் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துவந்தது. இந்நிலையில், நிறுவனம் தனது மிட்ரேஞ் ஸ்மார்ட்போனை இந்திய பயனர் சந்தைக்குக் கொண்டுவந்துள்ளது. அதுவும் ரூ,25,000க்கும் கீழ் அதிரடி அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. புதிய Tecno Phantom X போனில் வளைந்த அமோலெட் டிஸ்ப்ளே, 50MP மெகாபிக்சல் சென்சார் கொண்ட முதன்மை கேமரா, இரண்டு செல்பி கேமரா, மீடியாடெக் புராசஸர், பெரிய ரேம், பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்ற பல்வேறு அம்சங்கள் நிறைந்துள்ளன. டெக்னோ … Read more

மதுபானம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள விசேட தீர்மானம்

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் திருத்தியமைக்கப்பட்ட விலைகளை விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மதுபானசாலை உரிமையாளர்களை கலால் திணைக்களம் கோரியுள்ளது. குறிப்பிட்ட சில நபர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக   திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம், வாடிக்கையாளர்கள் செய்த முறைப்பாடுகளை ஆராய்ந்ததன் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கபில குமாரசிங்க தெரிவித்தார். உற்பத்திச் செலவுகள் அதிகரித்து வருவதால் நிறுவனங்கள் முன்னதாகவே விலையை … Read more

டெஸ்லா பங்குகள் விற்பனை மூலம் எலான் மஸ்க் 8.5 பில்லியன் டாலர் நிதி திரட்டல்

ட்விட்டரை கைப்பற்றும் திட்டத்தில், மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் 8 புள்ளி 5 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்துள்ளார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டெஸ்லாவின் 96 லட்சம் பங்குகளை எலான் மஸ்க் விற்றுள்ளார். டெஸ்லாவின் 5 புள்ளி 6 சதவீத பங்குகள் விற்பனையான நிலையில் மேற்கொண்டு பங்குகளை விற்கும் திட்டமில்லை என எலான் மஸ்க் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ட்விட்டரை கையகப்படுத்தும் திட்டத்தில் தன் பங்கிற்கு 21 பில்லியன் டாலரை … Read more