`என் தலையை கொய்தாலும் பாஜகவுக்கு அடிபணிய மாட்டேன்’ – சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் ஆவேசம்
“எனது தலையை கொய்தாலும் பாஜகவுக்கு அடிபணிய மாட்டேன்” என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்தார். மும்பையில் அரசுக் குடியிருப்புகளை மறுநிர்மாணம் செய்வதில் கோடிக்கணக்கில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திடம் கடந்த 1-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து, அடுத்தக்கட்ட விசாரணைக்கு 20-ம் தேதி ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து 27-ம் தேதி ஆஜராக … Read more